Showing posts with label bjp. Show all posts
Showing posts with label bjp. Show all posts

Sunday, May 4, 2014

மாக்கியவெல்லியின் தந்திரம்!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
16வது மக்களவைக்கான தேர்தல் களில் மொத்தம் உள்ள 9 கட்டங்களில் ஏழு கட்டங்களுக்கான தேர்தல்கள் முடிவடைந்துவிட்டது. ஏழாவது கட்டத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங் கிரஸ் மிகவும் விரிவான அளவில் வன்முறையில் இறங்கி, வாக்குச் சாவடி களைக் கைப்பற்றி மோசடிகளில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மோசடி நடந்தவாக்குச்சாவடிகளில் மத்திய பாது காப்பு படையினரின் முறையான மேற்பார்வையுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறோம். தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுகளுக்காகக் காத்திருப்போம். அடுத்து, இன்னும் இரு கட்டத் தேர்தல்கள் நடைபெறவேண்டிய சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ்/பாஜக திட்டமிட்டமுறையில் மதவெறித் தீயை கிளறிவிடத் தொடங்கி இருக்கிறது.

இதற்குக் காரணம், மீதம் உள்ள இரு கட்டத் தேர்தல்களில் மிகப்பெரும்பாலான தொகுதிகள் உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் நடைபெறவிருக் கின்றன. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பக்கூடிய மாநிலங்களாக இவ்விரு மாநிலங்களும் விளங்குவதோடு, மதவெறி சக்திகளுக்கும் மிக முக்கியமான மாநிலங்களாக, அவற்றின் வலுவான அடித்தள மாக இவை விளங்குவதுமேயாகும். பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் விதத்தில் மதவெறித் தீ விசிறிவிடப் படுகிறது. பாஜகவின் பிரதமர் வேட் பாளரே மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் வங்கதேசவாசிகள் மே 16க்குப்பின் இந்தியாவைவிட்டு வெளியேற தங்கள் மூட்டை முடிச்சு களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்திருப்பதன் மூலம் இத்தகைய வாக்குவங்கி அரசியலுக்கு நெருப்பை வைத்துத் துவக்கி வைத் திருக்கிறார்.

கடந்த காலங்களிலும், அவர்கள் வங்க மொழி பேசும் மெய்யான இந்தியப் பிரஜைகளை, அதிலும் குறிப்பாக மேற்குவங்கத்திலிருந்து தில்லி, மும்பை போன்ற மாநகரங்களில் வந்து வசிப் போரைக் குறிவைத்து, துன்புறுத்தி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் இவ்வாறு கூறியிருப்பதானது, இந்துத்துவா வெறியர்கள் தங்கள் மத வெறித் தீயை நாடு முழுவதும் பற்ற வைத்து தங்கள் தாக்குதலைத் தொடுப் பதற்கான சமிக்ஞையே தவிரவேறல்ல. இதனைத் தொடர்ந்து ஆர் எஸ்எஸ் ஆக்டோபஸின் கொடுக்குகள் இந்த வேலையில் இறங்கியுள்ளன. குஜராத் மாடல் என்பதன் உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் தொகாடியாவின் பேச்சு அமைந்திருக்கிறது. குஜராத்தில் சில முஸ்லிம்கள் இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலம் வாங்கியதை மிகவும் கேவலமான முறையில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் பேசியிருக்கும் பேச் சானது, இன்றைய தினம் குஜராத்தில் இந் துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியே வாழக்கூடிய காலனிகளை உருவாக்கி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தை பிரிட்டி ஷார் பிரித்ததில் உத்வேகம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது குஜராத் மதரீதியாக, நாட்டின் பிரதமராக வரத்துடிக்கும் இன்றைய குஜராத் முதலமைச்சரால், மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பாஜக கூடாரத்திற்கு ஏதோ கொஞ்சம் தேர்தலில் ஆதாயம் கிடைத்திடலாம். ஆனால் அதற்காக நாட்டு மக்கள் இத்தனை ஆண்டு காலம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் அனைத்தையும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாஜக இரண்டகமான முறையில் பேசத்துவங்கியிருப்பதிலிருந்து இது தெளி வாகிவிட்டது. நாட்டில் எங்கேயெல்லாம் மதவெறித் தீயை விசிறி அதன்மூலம் தாங்கள் ஆதாயம் அடைய முடியாது என்ற நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக கூடாரம் தன்னுடைய உண்மை யான மதவெறி நிகழ்ச்சிநிரலை மூடி மறைத்து வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

இப்போது முதல் ஏழு கட்டங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மீதம் உள்ள இரு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தன் மதவெறிப் பற்களைக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ள பொரு ளாதார சுமைகளிலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களோ மக்களின் கவனத்தை இதிலிருந்து திசைதிருப்பும் நோக் கத்துடன், உணர்ச்சிபூர்வமான (sensational) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. `இளவரசர் தன்ஆட்சியை ஒருமுகப் படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்என்று மாக்கியவெல்லி அறி வுறுத்தினாரோ அதையெல்லாம் பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரம் மிக அற்புதமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு மோசமாக மக்களை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துங்கள். பின்னர் கொஞ்ச காலம் கழித்து அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மக்கள் உங்களையும், உங்கள் ஆட்சியையும் புகழத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் இதன்பொருள்.அதேபோன்று பாஜக சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக் களை’’ தங்கள் தலைவர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடும். பின்னர் அதனை சமாதானப்படுத்தக்கூடிய விதத்தில் அதன் `வல்லுநர்கள்பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை 41 மற்றும் 42ஆம் பக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்றும் அதற்கு அது அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பூசி மெழுகுவார்கள்.அடுத்த இரு கட்டத் தேர்தல் களின்போதும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் ஒரு பக்கத்தில் ஹிட்லரின் பாசிச பாணி பிரச்சார முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடிய அதே சமயத் தில், மறுபக்கத்தில் இத்தகைய மாக்கிய வெல்லி தந்திரத்தையும் கையாளும் என்பது தெளிவாகி இருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியக் குடியரசை, வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட் ரமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் மிக ஆபத்தான நிகழ்ச்சிநிரல் இது. இத்தகையதொரு நிகழ்ச்சிநிரல் வெற்றி பெற அனுமதித்தோமானால், பின், நாடு இன்றுள்ளதுபோல் இருக்காது. எண்ணற்றோர் உயிரிழக்க வேண்டி யிருக்கும், இதுநாள் வரை ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடலுக்குள் மதவெறி விஷம் ஏற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் கடித்துக் குதறி உயிர் துறக்க வேண்டிய கொடூரம் நிகழும்.

இந்தியா இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த நாகரீக சமுதாயம் தடம்மாறி நிலை குலைந்து நின்றுவிடும். எனவே, நடைபெறும் தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை, மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய விதத்தில் அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். அதுதான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சிறந்ததோர் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டி எழுப்புவதற்கும் உதவிடும்.

தமிழில்: ச.வீரமணி


Monday, April 13, 2009

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத - மாற்று அணிக்கு -ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது-பிரகாஷ்காரத்


பதினைந்தாவது மக்களவைக்கான முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நடைபெறும் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதென்பது தெளிவாகியுள்ளது. காங்கிரசும், பாஜகவும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்லியதுபோல இது ஒன்றும் இரு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக இல்லை. மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து, காங்கிரசுக்கும், பாஜக-விற்கும் பல மாநிலங்களில் சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. காங்கிரசும் பாஜக தலைமையும் மூன்றாவது அணி மீது தாக்குதல்களைத் தொடுத்த பின்னணியில் இத்தகு நிலைமை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மூன்றாவது அணியைத் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் அமைப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய கூட்டணிகளுக்கு கொள்கையோ திட்டமோ கிடையாது என்றும் இது நாட்டிற்குப் பேரிடர் ஏற்படுத்திவிடும் என்றும், கூறியிருக்கிறார். எல்.கே. அத்வானி, பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில், மூன்றாவது அணியை ஒரு ‘‘கேலிக்குரிய மாயை’’ என்று அழைத்திருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றை மதிப்பிழக்கச்செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளும் ஆறு மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதானது, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாபெரும் சவாலாக எழுந்துள்ளதுதான், இவ்விரு கட்சிகளுமே மூன்றாவது அணியைத் தாக்குவதற்குக் காரணமாகும். அவர்கள் கூறுவதுபோல, மூன்றாவது அணி என்பது ஒரு மாயையாக இருந்தாலோ அல்லது கோட்பாடற்ற கதம்பக் கூட்டணியாக இருந்தாலோ, பின் ஏன் இவ்விரு கட்சிகளும் இந்த அளவிற்குத் தாவிக் குதிக்கின்றன?
இவர்களின் கோபத்திற்கான விடையை, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்வதன் மூலம் காண முடியும். 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசுக்கு 26.53 சதவீத வாக்குகளும், பாஜக-விற்கு 22.16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இவ்விரு கட்சிகளின் வாக்குகளையும் இணைத்தால்கூட அது 48.67 சதவீதம்தான், அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வருகிறது. இவ்விரு கட்சிகளும், கணிசமான அளவில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளைத் தங்கள் பக்கத்தில் இருத்திக்கொள்ளவில்லையெனில், அவற்றின் வெற்றிவாய்ப்பு என்பது கானல் நீர்தான்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் பல அதனைக் கழட்டிவிட்டுவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் திமுக-வுடனும், ஜார்கண்டில் ஜேஎம்எம்-உடன் ஒருவிதமான உடன்பாடும் கண்டிருக்கிறது. தேசியவாதக் காங்கிரசைப் பொறுத்தவரை, மகாராஷ்ட்ரா மற்றும் கோவாவில் மட்டும் உடன்பாடு கொண்டிருக்கிறது. மற்றமாநிலங்களில் அது காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகிறது. காங்கிரசின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்துக் கொண்டு, காங்கிரஸ் தற்போது தக்க வைத்துள்ள மூன்று இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. உத்தரப்பிரதேசத்திலும், அதன் மற்றொரு கூட்டாளிக்கட்சியான, சமஸ்வாதிக் கட்சி, சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் இரு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒரிசாவில் பிஜூஜனதா தளத்திடமிருந்து வந்த தாக்குதலிலிருந்து அது இன்னமும் மீளவில்லை. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள், இடதுசாரிகளுடன் இணைத்து, பல மாநிலங்களிலும் வீறுகொண்டு எழுந்துள்ளன. ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் பாமக, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரிசாவில் பிஜூஜனதா தளம் ஆகியவற்றுடன் சேர்ந்து வலுவான கூட்டணிகளாக மாறியுள்ளன.
ஐமுகூ போலல்லாத, தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான கூட்டணியாக இது மாறியிருக்கிறது. இது, தேர்தலுக்குப்பின்னர் மேலும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெறும். இவ்வாறாக, மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் கூட்டணியானது ஒரு யதார்த்தபூர்வமானதாக மாறியிருக்கிறது.
காங்கிரசும், பாஜகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இவை ஒன்றையொன்று, தத்தம் தேர்தல் அறிக்கையை மற்றது காப்பியடித்துவிட்டதாகக் குறைகூறிக் கொண்டிருக்கின்றன யாரை, யார் காப்பியடித்திருக்கிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரைக்கும் தேவையில்லாத ஒன்று. ஆனால், குறித்துக்கொள்ளவேண்டிது என்னவென்றால், இவை இரண்டுமே, ஒரே மாதிரியானவை - அதாவது ஒரே மாதிரியான உறுதிமொழிகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்பதாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அளித்து வந்த எதிர்ப்பினை பாஜக விலக்கிக் கொண்டிருப்பதிலிருந்து இதனைத் தெளிவாகக் காண முடியும். பாஜக-வானது, அணுசக்தி ஒப்பந்தம் மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. 2008 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது இத்தகு நிலைப்பாடு அவர்கள் மேற்கொண்ட ஒன்றாகும். ஆயினும், தேர்தல் அறிக்கையில், இந்தக் கோரிக்கையை பாஜக கைவிட்டுவிட்டது. பாஜக ஆட்சியிலிருந்த சமயத்தில், அயல்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ஒருபடி மேலேயே சென்று, அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை ரத்து செய்திட முடியாது என்றே கூறியிருக்கிறார். இவ்வாறாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதில் ஒத்த கருத்துடன்தான் இருக்கின்றன.
இத்தகைய பொதுவான அணுகுமுறை மற்ற பல அடிப்படைக் கொள்கைகளுக்கும் விரிவடைகின்றன. உதாரணமாக, காங்கிரசும் சரி அல்லது பாஜகவும் சரி, தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் குறித்து எதுவுமே கூறிடவில்லை. நாடாளுமன்றத்திற்கான தேர்தல்அறிக்கையில் காங்கிரஸ் கட்சியானது நிலச்சீர்திருத்தம் குறித்து எதுவுமே கூறாதது இதுதான் முதல்தடவை. நாட்டின் இரு முதலாளித்துவ கட்சிகளின் மத்தியில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்பதையும், நிலச்சீர்திருத்தம் குறித்து உதட்டளவில் கூறுவதற்குக்கூட அவை தயாராயில்லை என்பதையுமே இவை காட்டுகின்றன.
இரு கட்சிகளுமே மீண்டும் அனைவருக்குமான பொது விநியோகமுறையை அமல்படுத்தத் தயாரில்லை. இப்போது உள்ளதுபோன்ற மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற பொது விநியோக முறையையே அமல்படுத்துவதைத் தொடரவும், இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினைரை பொது விநியோக முறைக்கு வெளியில் நிறுத்திடவும் அவை முடிவு செய்திருக்கின்றன என்பதும் அவற்றின் தேர்தல் அறிக்கைகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.
இரு கட்சிகளுமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்கின்றன. அதனால்தான் அவை தங்கள் தேர்தல் அறிக்கைகளில், மத்திய மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.
இவ்வாறாக இரு கட்சிகளுமே மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவேதான், மூன்றாவது அணி மக்கள் மத்தியில் வலிவும் பொலிவும் பெற்று மிகவும் வீறுகொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)