Tuesday, October 13, 2009

மக்கள் சீனத்தின் மணி விழா -பிரகாஷ் காரத்

அறுபதாண்டுகளுக்கு முன், 1949 அக்டோபர் 1 அன்று சீன மக்கள் குடியரசு பிரகட னம் செய்யப்பட்டது. தோழர் மாசே துங் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அறி விப்பைத் தெரிவிக்கையில், ‘‘சீனமக்கள் எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றார். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது கடந்த அறுபதாண்டு காலத் தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் எண் ணிலடங்காதவையாகும்.

சீனப் புரட்சி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்த நிகழ்வாகும். அந்த சம யத்தில் சீனம், 47.5 கோடி மக்கள் தொகை யுடன் உலகிலேயே மாபெரும் நாடாக விளங்கியது. ஆசியக் கண்டத்தின் ஜாம்ப வனான சீனம், 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகின் மிகப்பெரிய பொரு ளாதார நாடாக விளங்கிய சீனம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற் கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானின் கொத் தடிமை நாடாக மாறியது. முதல் உலகப் போர் முடிந்த பின்னர், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அங்கிருந்த நிலப்பிரபுத்துவ யுத்த பிரபுக் களுடன் கைகோர்த்துக்கொண்டு, சீனா வைப் பங்குபோட்டு ஆட்சி செய்தன. சீன மக்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் அரைக் காலனியாதிக்கத்தின் சங்கிலி களால் பிணைக்கப்பட்டு அவற்றை உடைத்தெறிய வழிதெரியாது விழிபிதுங்கி, புலம்பிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் 1921ஆம் ஆண்டு உருவான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுத்துவத்தையும், காலனி யாதிக்கத்தையும் வெறுத்து எதிர்த்து வந்த சக்திகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ யுத்த பிர புக்கள் மற்றும் காலனியாதிக்கத் திற்கு எதிராக, சீன மக்கள் தங்கள் விடுதலைக் காக முப்பதாண்டு காலம் மிகக்கடின மான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜப் பான் ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் ஊழலில் திளைத்த வலது சாரி கோமிங்டாங்கைப் புறந்தள்ளி விட்டு, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி தேசிய எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவனாக உயர்ந்தது. ஜப்பான் சரணடைந்தபின், இறுதிப் போர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கோமிங்டாங் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றது. இந்த உள்நாட்டுப் போரில், மக்கள் விடுதலை ராணுவம் மகத்தான வெற்றிபெற்றதையடுத்து சீனப்புரட்சி அங்கே வெற்றி வாகை சூடியது.

ரஷ்யப் புரட்சி உலகத்தின் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியி ருந்தது. அதன்பின் முப்பதாண்டு காலம் கழித்து, சீனப்புரட்சி வெற்றி பெற்றது.

இன்றைய சீனம், மக்களின் ‘வாங்கும் சக்தி சமநிலை’ (யீரசஉாயளiபே யீடிறநச யீயசவைல) அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளா தார நாடாக விளங்குகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பரிவர்த்தனை விகிதத்தில் அளந்தோமானால் பொருளா தார ரீதியாக உலகின் மூன்றாவது பொரு ளாதார நாடாக சீனம் விளங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்கா வையும் முந்திக்கொண்டு சீனம் விஞ்சி முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில் புரட்சி ஏற்பட்ட சம யத்தில் அது இந்தியாவைவிட தொழில் துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளி லும் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் ஏற் பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும்.

இத்தகைய மகத்தான வளர்ச்சிக் கான அடித்தளங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டவையாகும். சீனப்புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, அங்கு புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங் கள் மூலமாக நிலப்பிரபுத்துவம் முற்றிலு மாக ஒழித்துக்கட்டப்பட்டது. கனரகத் தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. மக்களுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதா ரம், சமூக நலத்திட்டங்களை அளிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. விவசாயிகளை நிலப்பிரபுத்துவத் தின் நுகத்தடியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, சுயசார்பு முறைகளில் பொரு ளாதாரத்தைக் கட்டி வளர்த்திட்ட ஜன நாயகப் புரட்சியின் சீனப் பாதையானது, காலனியாதிக்கத்திடமிருந்து சமகாலத் தில் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்தது.

சீனாவின் இன்றைய முன்னேற்றத் திற்கு முதலாளித்துவம்தான் உந்து சக்தி யாக இருந் தது என்று பேசக்கூடிய பேர் வழிகள், மக்கள் சீனத்தில் எத்தகைய அடித்தளங்களின்கீழ் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி மேற் கொள்ளப்பட் டது என்பதைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். மக்கள் சீனம், நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக நிலப்பிர புத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட் டியது. பின்னர் அரசுத்துறைகள் மூலமாக தொழில்மயத்தை ஏற்படுத்தியது. கல்வி மற்றும் சமூக நலத்துறைகளில் சீர்திருத் தங்களைக் கொண்டு வந்தது. அரசுத் துறைகள் மற்றும் தனி யார் துறையுடன் இணைந்து கூட்டுத் துறைகளின் மூல மாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் சீனத்தில் வியத்தகு வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

புதிய சீனத்தின் கடந்த அறுபதாண்டு கால வரலாறு என்பது முன்னேற்றத்தை நோக்கி நடைபெற்ற மலர்ப்பாதை அல்ல; ‘கலாச்சாரப் புரட்சி’ என்றும், அதற்கும் முன்னதான ‘பாய்ச்சல் வேக முன்னேற் றம்’ என்றும் தவ றான நடைமுறைகளும் கருத்தோட்டங் களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தான் செய்த தவறு களையும், தவறான கண்ணோட்டங் களையும் சரியான முறையில் அங்கீக ரித்து, அவற்றைச் சரிசெய்திட நடவடிக் கைகள் மேற்கொண்டது. கடந்த இருப தாண்டுகளில் அங்கு ஏற்பட்ட அபரி மித மான முன்னேற்றம் நாட்டில் புதிய பிரச் சனைகளையும் கொண்டுவந்திருக் கிறது. வருமான ரீதியாகவும், பிராந்திய ரீதி யாகவும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் இடையில் அதிகரித்து வந்துள்ள சமத்துவமின்மையால் ஏற்பட் டுள்ள பிரச்சனைகளை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் 17வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை யும் அது பரிந்துரைத்துள்ளது.

ஒரு பிற்பட்ட நாட்டில் சோசலிசத் தைக் கட்டும் பணி என்பது ஒரு நீண்ட நெடிய பாதை என்பதை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும், 1980களின் பிந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், சோசலிச அமைப்பு முறைக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்ட சூழ்நிலையில், சர்வதேச நிலைமைகளிலேயே மிக வேக மாக மாற்றங்கள் ஏற்பட்ட பின்னணியில் சீனாவின் வளர்ச்சித்திட்டங்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. சோசலிசத் தின் உயர்ந்த கட்டத்தை எய்துவதற்கு முன்னதாக அரசியல் ரீதியாகவும், தத்து வார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

சென்ற ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றிருந்த வளர்ச்சியை, உலகமே கண்டு வியந்தது. சீனம், தன்னுடைய பொருளாதாரத்திற் காக அரசின் கருவூலத்திற்கு 585 பில்லி யன் டாலர்கள் ஊக்குவிப்புத் தொகை யாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத் துச் செல்ல இது பெரிதும் உதவியது. 2009இல் உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர் மறையில் -3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சீனாவின் வளர்ச்சியோ 7.7 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு ஆசிய ஜாம்பவான்களாகத் திக ழும் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வல்லமையில் உயர்ந்து வருவது இதுநாள் வரை உலகப் பொருளாதாரத்தை இயக்கி வந்தவர்களால் விரும்பப்படாமல் போவ தில் வியப்பதற்கேதுமில்லை. எனவே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிண்டுமுடிந்து விட அவை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட் ஊடகங்கள் வாயிலாக ஏகாதிபத்திய ஆதரவு வல்லுநர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து என்கிற பூச்சாண்டியைக் கிளப்பி விட்டி ருக்கிறார்கள். சீனா இந்தியாவுக்கு எதி ராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பட்டியலிடுகிறார் கள். எல்லைப் பகுதியில் சீனத் துருப்புக் கள் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்கள் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற் கொண்டன. எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடை பெற்றதாகவும், இதில் இருவர் காயமடைந் ததாகவும் கூட அறிக்கை வெளியிடப்பட் டது. இவை அனைத்திற்கும் எந்த அடிப் படையும் இல்லை அல்லது கடுகு போன்ற விஷயங்கள் மலைபோல் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. இந்திய அரசும், இந்திய ராணுவத்தின் தலை வரும் இந்த அறிக்கைகளை தவறென மறுத்திருக்கிறார்கள், துப்பாக்கிச் சண் டை எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளுமே எல்லைப் பகுதியில் எவ்விதப் பதட்ட நிலைமையும் கிடையாது என்று கூறி யிருக்கின்றன.

நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகள் சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கியிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர், விஜயதசமி நாளன்று ஆற்றிய உரையின்போது, ‘சீனாவிடமிருந்து அச் சுறுத்தல்’ என்று பேசியிருக்கிறார். இவ் வாறு இந்த சக்திகள் டமாரமடிப்பதற்குக் காரணம், சீனாவிற்கு எதிராக இந்தியா ராணுவரீதியாக மிகவும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்பதும், அதற் காக அமெரிக்காவிடம் மேலும் ஆழமான முறையில் ராணுவ உறவுகளை ஏற்படுத் திக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும்.

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங் களை வாங்கிட வேண்டும் என்று பிரச் சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அதற் கான முயற்சிகளையும் அமெரிக்க ராணு வத்திலிருந்து ஓய்வுபெற்ற ராணுவ அதி காரிகள் புதுடில்லியில் தங்கி செய்து வரு கிறார்கள்.‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு சமீ பத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “அநேகமாக ஒவ்வொரு வார இறுதி நாட் களிலும், புதுடில்லியில் உள்ள ஐந்து நட் சத்திர ஓட்டல்களில் காக்டெயில் பார்ட் டிகளும், திரை மறைவு கலந்துரையாடல் களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அட் மிரல்களும், ஜெனரல்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நபர்கள் அமெரிக்காவின் ராய்தியான் (சுயலவாநடிn), நார்த்ராப் கிரம்மான் (சூடிசவாசடியீ ழுசரஅஅயn) போன்ற இராணுவ யுத்தத் தளவாடங் களை உற்பத்தி செய்திடும் நிறு வனங்க ளுக்காக இவ்வேலைகளில் ஈடுபட்டுள் ளனர்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதி காரிகள் இந்தியாவிற்குத் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இந்தியாவுக்கு சீனாவால் இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, இவர்கள் சொல்லத் தவறுவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் சமீபத் தில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே மோதலை உருவாக்குவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்த் திட வேண்டும். நம் நாட்டிற்குள்ளும் இந் திய-சீன ஒத்துழைப்பைக் குலைத்திட விரும்பும் சக்திகள் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.

ராஜீவ் காந்தி 1988இல் சீனத்திற்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகள் உறுதி யாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் சீனாவுடனான உறவு களை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கின்றன. வெகு ஆண்டு களாக இரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் எல்லை தாவாவை பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையி லான ஒத்துழைப்பு என்பது இரு நாட்டின் நலன்களுக்கும் தேவை. அந்த அடிப் படையில் அது இயற்கையாகவே அமைந் திருக்கிறது. இதனை இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவுகள் மிகவும் வேகமாக வளர்ந்திருப்பதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். 2008இல் வர்த் தகத்தின் அளவு (எடிடரஅந டிக வசயனந) 52 பில்லியன் டாலர்களை எய்தியிருக்கிறது. உண்மையில் 2010ஆம் ஆண்டிற்குள் 40 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் புரிந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கு 2008ஆம் ஆண்டிலேயே பூர்த்தி செய்யப் பட்டு, அதனையும் விஞ்சி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு வித மான உராய்வுகள் இருந்தபோதிலும், இந்த வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சீன மக்கள் குடியரசு புதிய முன்னேற் றப்பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், 21ஆம் நூற்றாண்டில் உலக விவகாரங்களில் கேந்திரமான பங் களிப்பினைச் செலுத்தக்கூடிய சூழலில், சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டுக்கொண் டிருக்கிறது. சீன மக்கள் கடந்த அறுப தாண்டு காலத்தில் தாங்கள் நடந்து வந்த பாதை குறித்து பெருமிதம் கொள்ளலாம், அதேபோன்று எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: