Friday, October 16, 2009

தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும்
தித்திக்கும்
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்நன்னாளில்
மங்கிய இருளகற்றி
மங்கள ஜோதியாக
வாழ்வு சுடர்விட
வீடு வளம்பெற
வாழ்த்துக்கள்.
அன்பின் அஸ்திவாரத்தில் -அனைவரும்
ஆனந்தமாக
இனிப்புகள் உண்டு
இல்லாதோர்க்கும்
ஈந்து
உள்ளம் உவகையும்
ஊக்கமும் பெற்று
என்றென்றும் புன்னகையும்
ஏற்றமிகு வாழ்வும் பெற
ஐப்பசி நன்னாளாம் இன்று
ஒளி விளக்கேற்றி கொண்டாடுவோம்.
ஓயாமல் நிகழ்ச்சி வழங்கும்
தொலைக்காட்சியதனை இன்று
தொலைவில் வைத்து,
சுற்றமும் நட்பும் சூழ
உண்டு மகிழ்ந்து
மத்தாப்புச் சிரிப்பொலியும்
பட்டாசுப் பேச்சுகளும்
நிறையட்டும் இல்லத்தில்
என்றே வாழ்த்தும்
உங்கள் ச. வீரமணி

No comments: