Monday, June 19, 2017

முஸ்லீம்களுக்கு எதிராக மோடியின் அவதூறுப் பிரச்சாரம்



“நாம் ஐந்து, நமக்கு இருபத்தைந்து” என்று முஸ்லீம் சமூகத்தினரை பிரதமர் மோடியே கிண்டலடித்திருக்கிறார்.  குடும்பக்கட்டுப்பாடு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள “நாம் இருவர்”, “நமக்கு இருவர்” என்கிற முழக்கமானது, கணவன் – மனைவி இருவர் என்பதையும், அவர்களுக்கு இரு குழந்தைகள் என்பதையும் குறிக்கிறது. இதனைத்தான் மோடி சற்றே மாற்றி முஸ்லீம் என்றால் அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும், இது மொத்தத்தில் ஐந்தாகும் என்றும் அவர்கள் ஐவருக்கும் மொத்தத்தில் இருபத்தைந்து குழந்தைகள் என்றும், கிண்டலடித்துள்ளார். இவ்வாறு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, 2002இல் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதே ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் கோத்ரா நிகழ்வுக்குப்பின்னர் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலைகளை நாம் பார்த்தோம். இதன்பின்னர் ஒருசில மாதங்கள் கழித்து தேர்தல் நடந்தது. பல இடங்களில் அவர் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் இவ்வாறே பேசினார். பாதிப்புக்கு உள்ளான முஸ்லீம்களுக்கு நிவாரண முகாம்களை அளிக்காதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் எவ்வாறு பதிலளித்தார் தெரியுமா?
“நான் என்ன செய்யணும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நிவாரண முகாம்கள் நடத்தணுமா? குழந்தை உற்பத்தி மையங்களை உருவாக்குவதுதான் எங்கள் வேலையா?” என்றார். இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு முதலமைச்சர், தங்கள் மாநிலத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தினர் குறித்து (இவர்கள் அம்மாநிலத்தில் சுமார் 9 சதவீதத்தினராவார்கள்)  கிண்டலடித்து அவர்களை சமூகத்திலிருந்து முழுமையாக ஒதுக்கியே வைத்திருந்தார்.
நாம் ஐந்தா?”
முஸ்லீம்கள் என்றால் ஒவ்வொரு கணவனுக்கும் நான்கு மனைவிகள் என்றும் அவர்கள் குழந்தைகளை வரிசையாகப் பெற்றுத்தள்ளுவார்கள் என்றும், இதன் காரணமாக முஸ்லீம்கள் எண்ணிக்கை மிகவேமாக அதிகரித்திடும் என்றும் இப்போதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.   முஸ்லீம்கள் தங்கள் மதத்தின்படியும், தங்கள் உரிமையியல் சட்டத்தின்படியும் ஒரு கணவர், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ள முடியும்தான். முஸ்லீம்கள் அவ்வாறுதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  மணமான ஆண் முஸ்லீம்கள் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு மனைவிகள் என்றால், பின்னர் மணமான பெண் முஸ்லீம்கள் எண்ணிக்கையானது சுமார் 14 கோடியே 44 லட்சங்களாக இருந்திட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லீம் பெண்களின் மக்கள்தொகையே சுமார் 8 லட்சத்து 40 லட்சங்கள்தான். ஒரு நாளைக்கு முன் பிறந்த சிறுமியும் இந்த மொத்த மக்கள்தொகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும். இவ்வாறு, நேற்று பிறந்த முஸ்லீம் சிறுமியையும் சேர்த்தால்கூட, ஒவ்வொரு முஸ்லீம் ஆணுக்கும் நான்கு மனைவிகளை ‘சப்ளை’ செய்ய முடியாது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் நமக்கு ஒவ்வொரு மதத்திலும் எத்தனை ஆண்கள் – பெண்கள் மணமானவர்கள் என்கிற கணக்கை நமக்கு அளிக்கின்றன. ஒவ்வொரு மணமான பெண்ணும் நிச்சயமாக ஒரு மணமானவருக்கு மனைவியாகத்தான் இருக்க முடியும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து நாம் சராசரியைக் கணக்கிட்டோமானால்,  1000 மணமான முஸ்லீம் ஆண்களுக்கு 1043 மணமான முஸ்லீம் பெண்கள் என்றிருப்பதைப் பார்க்க முடியும். இதன்மூலம் 1000 ஆண்களில் வெறும் 43 பேர் மட்டுமே ஒரு மனைவிக்குக் கூடுதலாக பெற்றிருப்பது தெரியவரும். அதாவது 99 சதவீத முஸ்லீம் ஆண்கள் ஒரு மனைவிக்கு மேல் பெற்றிருக்கவில்லை என்பதைக் காணமுடியும். எனவே இவ்வாறு இந்து மதவெறியர்கள் கூறும் “நாம் ஐந்து” என்னும் விமர்சனம் வடிகட்டிய பொய்யாகும்.
சரி, மதத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மனைவிக்கு மேல் அனுமதிக்காத,  மதத்தில் உள்ள ஆண்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஒன்றுக்கும் மேல் மனைவி உண்டா? ஆம் எனில், எத்தனை? கீழே உள்ள அட்டவணை -1ஐப் பார்த்தோமானால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பல மதத்தினர், ஒரு மனைவிக்கு மேல்  பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். இந்துக்களைப் பார்த்தோமானால், 1000 மணமான ஆண்களுக்கு, 1019 மணமான பெண்கள் என்றிருக்கிறது. எவரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் பெற்றிராமல் இது சாத்தியமில்லை. இது இந்து சட்டம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான செயலாகும். முஸ்லீம்களைத் திருமணம் செய்த இந்து பெண்களை மீளவும் கொண்டுவர வேண்டும் என்று கூறி, ‘வீட்டிற்குத் திரும்புவோம்’, ‘ஜிகாத் காதல்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்திடும் ஆர்எஸ்எஸ் கூடாரம்,   இவ்வாறு இந்து சட்டத்திற்குப் புறம்பாகவும், இந்து மதத்திற்குப் புறம்பாகவும் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்துகொண்டுள்ள இந்துக் கணவர்கள் குறித்து வாயே திறப்பதில்லையே, ஏன்? இவ்வாறு இரண்டாவது மனைவியாகிப்போன பெண்களுக்கு சட்டரீதியாக எவ்வித உரிமைகளும் கிடையாதே, இத்தகைய பெண்கள் குறித்து ஆர்எஸ்எஸ் ஏன் கவலைப் படவில்லை?
அட்டவணை 1: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
மணமான ஆண்கள் (எதிர்) மணமான பெண்கள்
மதம்1000 ஆண்களுக்கு மணமான பெண்களின் எண்ணிக்கை
இந்து1019
முஸ்லீம்1043
கிறித்துவம்1047
சீக்கிய சமயம்1016
புத்த மதம்1023
சமண மதம்1014
இதர மதங்கள்1041
சராசரி1023

நமக்கு இருபத்தைந்தா?
“நமக்கு இருபத்தைந்து” குழந்தைகள் என்று கூறி மோடி, முஸ்லீம்களைக் கிண்டல் அடித்திருக்கிறார். அதாவது ஒவ்வொரு முஸ்லீம் கணவனுக்கும் நான்கு மனைவிகள் என்றும், அந்த நான்கு மனைவிகளும் 25 குழந்தைகள் பெற்றுத்தள்ளுவதுபோலவும் கூறியிருக்கிறார். அதாவது சராசரியாக ஒரு மனைவி 7 குழந்தைகளும், மற்ற 3 மனைவிகளும் தலா 6 குழந்தைகளும் பெறுவதாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு இவர்கள் 6, 7 குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. 2015 ஜனவரி 7 அன்று பாஜக எம்பி-யான சாக்ஷி மகாராஜ் என்பவர் மீரட்டில் முஸ்லீம்களைக் குறித்து ஒரு கூட்டத்தில், “நான்கு மனைவிகள், நாற்பது குழந்தைகள் என்கிற கருத்தாக்கம் இந்தியாவில் வேலை செய்யாது,” என்று பேசி, ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் பத்து குழந்தைகள் பெற்றுத்தள்ளுவதாகக் கூறியிருக்கிறார். அவர் அந்தக்கூட்டத்தில் மேலும், ”ஒவ்வொரு  இந்துப் பெண்ணும் இந்து மதத்தைப் பாதுகாத்திட குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுத்தருவதற்கு இதுவே சரியான தருணம்” என்றும் பேசியிருக்கிறார். அதாவது இந்துப் பெண்களின் வேலை என்பது பிள்ளைகளைப் பெற்றுத்தருவது மட்டுமே. இதே தொனியில்தான் இதர பாஜக தலைவர்களும் பேசி வருகிறார்கள். இதுபோல்தான் நாஜிக்கள் ஆட்சி செய்த காலத்தில் ஹிட்லரும் பேசி வந்தார். 1943இல், நாஜித் தலைவர்கள் மத்தியில் ஒரு சட்டம் இயற்றுவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதாவது அனைத்துப் பெண்களும், அவர்களுக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் சரி, அல்லது தனியாக இருந்தாலும் சரி, நான்கு பிள்ளைகள் பெற்றுத்தர வேண்டும் என்று சட்டம் இயற்றலாமா என்று விவாதித்து வந்தார்கள். எனினும் இந்தச் சட்டம் அமலுக்கு வரவில்லை.
இந்துமதவெறியர்கள் பிரச்சாரம் செய்வதுபோல, இன்றைய தினம் முஸ்லீம் பெண்கள் 6 – 7 அல்லது 10 குழந்தைகள் பெறுகிறார்களா? நிச்சயமாக இல்லை என்றுதான் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையானது, ஒவ்வொரு மதத்திலும் உள்ள மணமான பெண்கள் பெற்று, உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைத் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு மதத்திலும் உள்ள பெண்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனைக் குழந்தைகள் இருக்கின்றன என்பதை அறிய முடியும். இந்த அறிக்கையை ஆய்வு செய்வதிலிருந்து முஸ்லீம் பெண்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சராசரியாக 2 – 3 குழந்தைகள்தான். மோடியோ அல்லது சாக்ஷி மகாராஜ் போன்றவர்கள் கூறுகிறபடி எந்த முஸ்லீம் பெண்ணுக்கும் 6 – 7 அல்லது 10 குழந்தைகள் கிடையாது. இவ்வாறு இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.
அட்டவணை 2: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மதத்திலும் உள்ள
பெண்கள் பெற்றெடுத்து உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

மதம்ஒவ்வொரு பெண்ணுக்கும் உயிருடன் உள்ள குழந்தைகள்
இந்து2.36
முஸ்லீம்2.82
கிறித்துவம்2.29
சீக்கிய சமயம்2.32
புத்த  மதம்2.31
சமண மதம்2.05
இதர மதத்தினர்2.46
சராசரி2.41

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு, அவர்களுக்குக் குழந்தை பிறப்பது, அதனைப் பேணி வளர்ப்பது – இவை அனைத்துமே ஒருவிதமான இன்ப உணர்வுடனும், சமூக பொறுப்புணர்வோடும் நடைபெற வேண்டியவைகளாகும். இதர மிருகங்கள் வாழ்வதைப்போல இதனைப் பார்க்கக் கூடாது. குறிப்பாக, நம் நாட்டில், குழந்தைகளைப் பேணிப்பாதுகாத்து வளர்ப்பதில், பெற்றோர் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். இத்தகு நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எத்தனை குழந்தைகள் என்று கணக்கெடுப்பது, மிகவும் இழிவான ரசனையாகும். அவ்வாறே கணக்கெடுத்தாலும் கூட ஒரு பசு எத்தனைப் பசுங் கன்றுகளை ஈன்றது என்றுதான் பார்ப்பார்களேயொழிய, எத்தனை காளைக் கன்றுகளை ஈன்றது என்று பார்க்க மாட்டார்கள். ஆனால் மோடியோ, சாக்ஷி மகாராஜாவோ  அல்லது இதர பாஜக தலைவர்களோ ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். விஷயம் இத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. 2002 செப்டம்பர் 22 அன்று மோடி, “நாம் ஐந்து, நமக்கு இருபத்தைந்து” என்பதிலிருந்து, “ஐந்துக்கு இருபத்தைந்து, இருபத்தைந்துக்கு அருநூற்று இருபத்தைந்து” என்று பேசியுள்ளார்.  என்னே கணிதப் புலி! இவ்வாறு மோடியின் கணக்கு உண்மை என்றால், இந்த 25 குழந்தைகளும் ஆண் குழந்தைகளாக இருக்க வேண்டும், பெண்குழந்தைகள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் இவ்வாறு மோடி பேசிய பேச்சை எல்லாம் மக்கள் மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டுள்ளார்கள், பெரும்பாலானோர் அதனை ஏற்றுக்கொண்டும் உள்ளார்கள். இது,   ஒரு தந்தைவழி நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஆண் மக்களின் உச்சபட்ச வெளிப்பாடாகும்.
வெளிநாடுகளிலிருந்து ஊடுருவிவந்ததாகக் கூறும் கூற்றுகள்
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மக்கள்தொகை முறையே 80.45 சதவீதம் மற்றும் 13.43 சதவீதமாகும். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இது 79.8 சதவீதம் மற்றும் 14.2 சதவீதமாக மாறி இருந்தது. மோடி உட்பட பாஜக தலைவர்களால் வெளிநாடுகளிலிருந்து நிறைய முஸ்லீம்கள், குறிப்பாக வங்கதேசத்திலிருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இதுதான் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையிலானதற்குக் காரணம் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக ஊடுருவி வந்தவர்கள் குறித்து அதிகாரபூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.   2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் வங்க தேசத்திலிருந்து 30 லட்சத்து 84 ஆயிரத்து 826 பேர் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் இவர்கள் அனைவருமே முஸ்லீம்கள் அல்ல. அப்படியே இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான் என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும்கூட, மொத்த முஸ்லீம் மக்கள்தொகையில் அது வெறும் 2.2 சதவீதம்தான். இந்த எண்ணிக்கையை மொத்த முஸ்லீம் மக்கள்தொகையிலிருந்து கழித்தால்கூட அது 13.43 சதவீதத்திலிருந்து 13.06 சதவீமாகக் குறையலாம், அவ்வளவுதான். இவ்வாறு முஸ்லீம் மக்கள்தொகை வெளிநாடுகளிலிருந்து ஊடுருவி வந்தவர்களால் அதிகரித்துவிட்டது என்று கூறுவதெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தவறாகும். இப்போதும்கூட பாஜகவினர் இவ்வாறுதான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் மோடி இதனை மிகவும் வேகமாகக் கூறிக்கொண்டிருந்தார். குறிப்பாக மேற்கு வங்கத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் இவ்வாறு அவர் மிகவும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
இவ்வாறு நாம் மேலே கூறியிருப்பதிலிருந்து, 2001க்கும் 2011க்கும் இடையே  முஸ்லீம்கள் எண்ணிக்கை சதவீதம் சற்றே கூடியிருக்கிறது. முஸ்லீம் மக்கள்தொகை உயர் விகிதத்தில் அதிகரித்திருப்பது உண்மைதான். 2001 மற்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் எண்ணிக்கை   முறையே 17 சதவீதமாகவும் 25 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. முஸ்லீம்களின் எண்ணிக்கை விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன?  இதற்கான காரணத்தை அட்டவணை 2-ஐ சற்றே நுணுகி ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். முஸ்லீம் பெண்களின் மத்தியில் குழந்தைப்பேறு சற்றே அதிகமாக இருக்கிறது. (2011இல் 2.82 சதவீதம்). குடும்பக் கட்டுப்பாடு குறித்த அறிவு முஸ்லீம் பெண்கள் மத்தியில் குறைவாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாகவே பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான புரிந்துணர்வும் குறைவாகவே இருந்திடும்.  நாட்டில் உள்ள புள்ளிவிவரங்களிலிருந்தும், சச்சார் குழு அறிக்கையிலிருந்தும் முஸ்லீம்கள் சமூக ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கல்வியில் முன்னேறியுள்ள தென்னிந்தியாவில் உள்ள சில மாநிலங்களில், எடுத்துக்காட்டாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் முஸ்லீம் தாய்மார்களின் குழந்தைகள் எண்ணிக்கை முறையே 2.20 மற்றும் 1.98 ஆகும். இவை தேசிய சராசரியைவிட மிகவும் குறைவானதாகும்.  இம்மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு குறித்த புரிதல் முஸ்லீம்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது இதற்குக் காரணமாகும்.  ஏனெனில், 2001இல், முஸ்லீம் பெண்களின் மத்தியில் குழந்தைப்பேறு 3.15 ஆக இருந்தது, 2011இல் 2.82ஆகக் குறைந்துவிட்டது. வெளிநாடுகளிலும் குழந்தைப்பேறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுவாக உழைக்கும் பெண்கள் மத்தியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அதிகமாக இருக்கிறது. முஸ்லீம் சமூகத்தில் உழைக்கும் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். முஸ்லீம் பெண்களின் மத்தியில் அதிகக் குழந்தைகள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால், இங்கே நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பிரச்சாரம் செய்துவருவதுபோல, எதிர்காலத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரித்திடுமா என்பதேயாகும்.  இப்போதுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரித்துவருமானால் இன்னும் 272 ஆண்டுகள் கழித்துத்தான்,  2283இல்தான் முஸ்லீம்கள் எண்ணிக்கை பெரும்பான்மையானதாக மாறும்.
இதேபோன்று 272 ஆண்டுகள் பின்னோக்கித் திரும்பிப் பார்ப்போம். அதாவது 1739ஆம் ஆண்டில் நாட்டின் நிலை எப்படி இருந்தது. அப்போது பிரிட்டிஷார் நம்மை ஆளவில்லை. இந்த 272 ஆண்டுகளில் நம் நாடு மட்டுமல்ல, உலகம் முழுதும் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் ரயில் இல்லை. மைக்கேல் பாரடே 1821இல்தான் எலக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்தார். அதாவது 1739க்கு 82 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடித்தார். சென்ற நூற்றாண்டில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நாம் பார்த்தோம். ஆகாய விமானங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள், மொபைல்கள், விண்வெளிக்குப் பயணம் என எண்ணற்ற சாதனைகள். நம் நாட்டிலேயே சென்ற நூற்றாண்டில் பல மாற்றங்களை நாம் பார்த்துள்ளோம். சுதந்திரம், நாடு பிரிவினை போன்று எண்ணற்றவை. அடுத்த 200 ஆண்டுகளிலும், சென்ற 200 ஆண்டுகளில் நடந்ததைவிட,  உலகம் பன்மடங்கு மாற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை.    2283இல் பாஜக என்ற ஒரு கட்சி இருக்குமா? மேலும், இந்த விகிதத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படுமானால், 2283இல் நம் நாட்டின் மக்கள் தொகை என்ன தெரியுமா? 10 ஆயிரத்து 230 கோடியாகும். அதாவது தற்போதைய உலக மக்கள்தொகையை விட 14 மடங்கு அதிகம். இதனை நாம் கற்பனை செய்திட முடியுமா?
இவ்வாறு முஸ்லீம்களைப் பின்பற்றி ஓடுவதோ அல்லது இந்துப் பெண்களை நான்குக்கு மேல் பெற்றுத்தள்ளுங்கள் என்று சொல்வதோ ஏற்கமுடியாததாகும். இவ்வாறு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரின் அறிவியலற்ற, பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் மடத்தனமான  பேச்சுக்களுக்குப்பின்னே ஒளிந்து இருக்கக்கூடிய இழிவான அரசியல் நோக்கங்களை முறியடித்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

Sunday, June 18, 2017

விவசாயிகளுக்குத் தேவை நிலையான வருமானம் : எம்.எஸ். சாமினாதன்


மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, விவசாயிகள் வாழ்வில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திடவில்லை என்கிற மோடி அரசாங்கத்தின் கூற்றுக்கு நேரெதிராக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் அவர்கள், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசாங்கத்தின் அறிவிப்புதான், வட இந்தியாவில் பணப் புழக்கத்தை இழந்த விவசாயிகள் வாழ்வை மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளியது,” என்று, வேளாண் விஞ்ஞானியும், பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ். சாமினாதன் கூறியுள்ளார்.
“ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகள் குறித்து எவ்விதமான ஆய்வும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படவில்லை.  ஒரு முழுமையாக ரொக்கத்தையே சார்ந்துள்ள ஒரு பொருளாதார அமைப்பில், குறிப்பாக ரொக்கப் பணப் புழக்கம் உள்ள விவசாயிகள் மத்தியில், நிச்சயமாக இது பாதிப்பினை ஏற்படுத்தியது,”  என்று லண்டனில் உள்ள அவர் தி குவிண்ட் என்னும் இணைய இதழுக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார். வட இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலும், மகாராஷ்ட்ராவிலும் மிகவும் ஆழமான முறையில் நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்த எம்.எஸ். சாமினாதன், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பொருள்களின் உற்பத்திச் செலவினத்துடன் கூடுதலாக 50  சதவீதம் இணைத்து, குறைந்தபட்ச  ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து அவற்றை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இதுவே, விவசாயிகள், விவசாயத்தை மேற்கொள்வதற்கு சாத்தியமான வழியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தசமயத்தில், தி குவிண்ட் இதழ் சார்பில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுஜல்பூர் சந்தைக்குச் சென்று விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே நடைபெற்ற போராட்டங்களைப் பார்த்தபோது, எந்த அளவிற்கு விவசாயிகளும், வர்த்தகர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று நன்கு காண முடிந்தது. ஏனெனில் அந்தச் சந்தையானது மிகப் பெரிய அளவில் ரொக்கப் பரிவர்த்தனையையே சார்ந்திருந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் மாற்றல் மேலும் குழப்பத்தையே கொண்டுவந்தது.
கடன் தள்ளுபடி சரியான மாற்று அல்ல
விவசாயிகள் வாழ்வுபெற கடன் தள்ளுபடி சரியான மாற்று அல்ல என்று எம்.எஸ். சாமினாதன் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடன் தள்ளுபடி என்பது வங்கிகள் கடன் கொடுத்துப் பெறும் அமைப்புமுறையையே நாளடைவில் நசித்துப் போகச் செய்துவிடும் என்று அவர் கருதினார்.
“கடன் தள்ளுபடி என்பது விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முறையாக மாறாது. மாறாக, விவசாயிகளின் வருமானத்தை ஸ்திரப்படுத்துவதற்கான வழிவகைகளை நீங்கள் காண வேண்டும்,” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரலில் சுமார் 36 ஆயிரத்து 359 கோடி ரூபாய் அளவிற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்த பின்னர், இதேபோன்ற கோரிக்கைகள் இதர மாநிலங்களிலும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து  மகாராஷ்ட்ர அரசாங்கம் 31 லட்சம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
“இன்றைய விவசாய நெருக்கடி கால கட்டத்தில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்வது அவசியம்தான். எனினும் விவசாயத்தை திட்டமிடல் என்பது கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமாகும்,” என்று எம்.எஸ். சாமினாதன் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு கடன் தள்ளுபடி செய்ததில் ஏழை விவசாயிகளைவிட அதிக அளவில் பயன்  அடைந்தது பணக்கார விவசாயிகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணத்தை சாலைகள், தகவல் தொடர்பு, வேளாண் தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு செலவு செய்திருக்க முடியும். இது நீண்டகால நோக்கில் பயன் அளித்திருக்கும்.
1960களில் நாடு உணவு தான்யப் பற்றாக்குறையால் பரிதவித்த சமயத்தில், இன்று 92 வயதாகும் எம்.எஸ். சாமினாதன், அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போல்லாக் என்பவருடன் இணைந்து நாட்டில் அதிக விளைச்சல் தரும் கோதுமை இனங்களைக் கண்டுபிடித்து உணவுப்பற்றாக்குறையை ஒழித்துக் கட்டினார். இன்றையதினம் விவசாயிகளின் வாழ்வைப் பாதுகாத்திட எவ்விதமான சமூகநலத்திட்டங்களோ நடவடிக்கைகளோ இல்லாதிருப்பதனை அவர் மிகவும் சாடினார்.
“விவசாயம் என்பது விவசாயிகளுக்கு வாழ்வை அளித்திட வேண்டும், மாறாக அவர்களின் வாழ்வைப் பறித்திடக்கூடாது,” என்று கூறிய சாமினாதன், “இன்றையதினம் விவசாயிகள் மரணங்களும் அவர்கள் தற்கொலைப்பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்,” என்று மிகவும் வருந்துகிறார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆறு விவசாயிகள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் மேலும் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2015-16ஆம் ஆண்டில் பாஜக ஆளும் மாநிலங்களில், இதர மாநிலங்களைவிட  சுமார் 11 சதவீத வளர்ச்சி விகிதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கும் அதேசமயத்தில், இவ்வாறு அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளபோதிலும், விவசாயிகளின் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன? இவர்கள் விளைவித்த விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இவர்கள் விளைவித்த காய்கறிகளின் விலைவீழ்ச்சி இவர்கள் வாழ்வைப் பறித்துக் கொண்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாந்தகுமார் குழு அறிக்கையானது, நாட்டில் வெறும் 6 சதவீத விவசாயிகள்தான், தங்கள் விளைபொருள்களை அரசாங்கங்கங்களின் ஏஜன்சிகளிடம் அளித்து,  அரசாங்கங்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையின் பயனை அடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. “விவசாய விளைபொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்தல், பொது விநியோகமுறை, விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கு பகுதிகளுக்கும், அரசாங்கங்கள் உயர் முன்னுரிமை அளித்திடவேண்டும். விவசாயிகளின் அவலநிலையைப் போக்கிட ஏதேனும் திட்டம் கொண்டுவரப்பட்டால் அது விவசாய விளைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிலும்  கவனம் செலுத்த வேண்டும்,” என்று சாமினாதன் கூறினார்.
மத்தியப்பிரதேசத்திலும் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து  போராட்டங்கள் நடத்தி வருவது மத்திய மோடி அரசாங்கமும், பாஜக மாநில அரசாங்கங்களும் எந்த அளவிற்கு விவசாயிகள் விரோத அரசாங்கங்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்குவோம் என்று மோடி வாய்கிழிய பேசினாலும்,  விவசாய விளைபொருள்கள் அமோகமாக விளைந்துள்ள நிலையிலும் அதன் பயன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கமுடியாதபடி மிக மோசமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றன.
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கிட வேண்டும் என்று பிரதமர் மோடி உண்மையிலேயே விரும்புகிறார் என்றால், அதற்கு சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் ஒரு நாகரிகமான வாழ்வை விவசாயிகளுக்கு உத்தரவாதப்படுத்திடமுடியும். அதற்கு நான் மேலே கூறியவாறு விவசாய விளைபொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்திட வேண்டும், பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தலையும் அரசே மேற்கொண்டிட வேண்டும்,” என்று எம்.எஸ். சாமினாதன் அறிவுறுத்துகிறார்.

(நன்றி: தி குவிண்ட் இணைய இதழ்)
(தமிழில்: ச. வீரமணி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா



ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா

கஜக்ஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆஸ்தானா உச்சிமாநாட்டில் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கின்றன. இம்முக்கியமான நிகழ்வில் பிரதமர்கள் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரிப்பும் தங்கள் தங்கள் நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்கள்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001இல் அமைக்கப்பட்டது. அப்போது இதில் சீனா, ரஷ்யா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிக்ஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ந்தன.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதுஅடிப்படையில் ஒரு பாதுகாப்புக் கூட்டணியேயாகும்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் (terrorism, separatism and extremism) ஆகியவற்றை எதிர்த்து முறியடித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட கூட்டணியாகும். 2002இல், இது ஓர் சாசனத்தை உருவாக்கி நிறைவேற்றியது. இதில் அங்கம் வகிக்கக்கூடிய நாடு களுக்கிடையே பரஸ்பரம் அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்திட வும், நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திடவும் முயற்சிகளைக் கூட்டாக மேற்கொள்வது எனவும் அந்த சாசனம் கூறியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் பெய்ஜிங் கில் செயல்பட்டது. அதன் மண்டல பயங்கர வாத எதிர்ப்பு கட்டமைப்பு (RATS-- Regional Anti-Terrorist Structure) தாஷ்கண்டில் அமைந்தது.
இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைவது என்பதன் பொருள், மத்திய ஆசிய குடியரசுகளின் வளமான எரிசக்தி மற்றும் கனிம வளங்களுடன் அதிகஅளவில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதேயாகும். இது, இந்தியா வின் பொருளாதார, வர்த்தக உறவுகளுக்கு வசதி ஏற்படுத்திக்கொள்ளவும், மத்திய ஆசியநாடுகளுடன் தொடர்பினை வலுப்படுத்திக் கொள்ளவும், அவற்றின்மூலம் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் பொருளாதார மட்டத்தில் இணைப்பினை உயர்த்திக்கொள்ளவும் உதவிடும்.இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2005ஆம் ஆண்டில் ஒரு பார்வையாளராகத் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது. ஆயினும், மன்மோகன்சிங் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியா அமெரிக்காவுடன் போர்த்தந்திர மற்றும் ராணுவ உறவுகளை அதிகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்றிட தயக்கம் காட்டியே வந்தது மிகவும் அரை மனதுடனேயே இருந்து வந்தது.
எனினும், ஐரோப்பிய ஆசிய நாடுகளிடையே போர்த்தந்திர ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்என்பதால், அது நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டுமிருந்ததால், இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக மாறுவதற்காக 2014இல் விண்ணப்பித்தது.இது நல்லதுதான். இப்போது இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு உறுப்பினராக மாறியிருக்கிறது. எனவே,இனிவருங்காலங்களில் இதுவரை பாகிஸ்தா னையும், சீனாவையும் பார்த்துவந்ததுபோல் குறுகிய பார்வையுடன் பார்ப்பதை இந்தியாவிட்டுவிட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் என்றால்என்ன என்பது குறித்து இந்திய ஆட்சி யாளர்கள் புரிந்துகொண்டிருப்பதில் ஒருகுழப்பம் இன்னமும் நீடிப்பதாகவே தெரி கிறது. இதற்கு கடந்த பதினைந்து ஆண்டு காலமாக அது மேற்கொண்டுவந்த அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கை மற்றும்அதன்காரணமாக எழுந்துள்ள முரண்பாடு கள் காரணங்களாகும். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தற்போது அமெரிக்கா, இந்தியாவை தன்னுடைய ‘‘பெரியஅளவிலான ராணுவப் பங்காளி’’யாகக் கருதியிருக்கிறது. ஆனால், ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்போ ஒரு பாதுகாப்புக் கூட்டணி யாகும். இக்கூட்டணி அமெரிக்காவை ஒதுக்கி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஆசிய நாடுகள் மீதான போர்த்தந்திர நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.மோடி அரசாங்கம், ஜனாதிபதி ஒபாமா வின் கீழான அமெரிக்க அரசாங்கத்தின் ஆசியாவின் போர்த்தந்திர நடவடிக்கைகளில் தன்னையும் ஒரு கூட்டாளியாக மிகுந்த ஆர்வத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது. இப்போது டிரம்ப் நிர்வாகத்தின் போர்த்தந்திரக் கண்ணோட்டமானது ஒரு நிரந்தரமற்ற தன்மையில் இருப்பதன் காரணமாக, இந்தியா தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம், அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் குறைத்துக்கொள்ளத் துவங்குவதற்கு இது மிகவும் சரியான தருணமாகும்.சீனாவின் சமீபத்திய மண்டலம் மற்றும் சுற்றுத் திட்ட (BRI-Belt and Round Initiative )த்திலிருந்து இந்தியா வெளியே வந்துவிட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் இதர ஏழு நாடுகளும் மண்டலம் மற்றும் சுற்றுத் திட்டத்தில் கூட்டாளி நாடுகளாகும். அத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளாகும். இந்தியா மட்டும்தான் அதிலிருந்து வெளியே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டியது சிறப்பானதாக இருந்திடும். மத்திய ஆசியாவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதைத் திட்டத்துடன் ஒத்துழைத்திட வழிவகைகள் காண்பதும் அவசியமாகும்.இப்போது இந்தியா, பாகிஸ்தானுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்திருக்கும் இந்த உடன்பாட்டின் காரணமாக, மோடி அரசாங்கம் இதுவரை பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் மேற்கொண்டுவந்த மோதல் போக்கையும் எதிர்மறை நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்வதற்குத் தூண்ட வேண்டும்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஒருசில தினங்களுக்குமுன்பு, பிரதமர் மோடிருஷ்யாவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பில் உரையாற்று கையில், மிகவும் எதார்த்தமானமுறையில் பேசியதைப் பார்க்க முடிந்தது. அங்கே அவர், ‘‘நாங்கள் சீனாவுடன் கடந்த நாற்பதாண்டு காலமாக எல்லைத் தகராறு கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான்.
எனினும் கூட, கடந்த நாற்பதாண்டுகளில் எங்கள் இருநாடுகளுக்குமிடையே ஒரு துப்பாக்கி குண்டுகூட பயன்படுத்தப்பட்டதில்லை’’, என்றார். மேலும் அவர் பேசுகையில், ‘பிரிக்ஸ்’ அமைப்பின்கீழ் சீனாவும் இந்தியாவும் இரு நிதி நிறுவனங்களை நிறுவுவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறினார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இதில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே பரஸ்பரம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பினை அளிப்பதுடன் மிகவும் விரிவான அளவில் சம்பந்தப்பட்டதாகும். இந்த அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மிகவும் சிக்கலான மோதலைத் தீர்ப்பதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பினை ஆற்றிட முடியும்.
இந்தியா, இந்த அமைப்பினை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திட முடியும். இதன் ஒரு முக்கியமான அங்கமாக, இந்தியா, பாகிஸ்தானுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்கிட வழிவகைகள் கண்டிட முடியும்.‘சார்க்’ நாடுகளிடையே இயல்பான உறவுமுறை நீடிக்கமுடியாமல் போனதற்கு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கே காரணமாகும். இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இவ்விருநாடுகளும் இணைந்திருப்பதன் காரணமாக, இவ்விருநாடுகளுக்கும் இடையே இதுவரைஇருந்துவந்த கசப்புணர்வுகள் மறைந்து, மோதல்போக்குகளுக்கு மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஒருபுதிய தொடக்கம் உருவாகட்டும் என்று நம்புவோமாக.
ஜூன் 13, 2017
தமிழில்: ச.வீரமணி