-பிரகாஷ் காரத் |
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்கு மற்றும் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, எப்படியெல்லாம் நாட்டின் நிலக்கரி வளம் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு உதவி டும் வகையில் ஒப்படைக்கப்பட்டிருக் கின்றன என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. சிஏஜியின் அறிக்கையின் படி, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக் கப்பட்ட ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான’ நிலக்கரிப் படுகைகள் அந்நிறுவனங் களுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆதா யத்தை அளித்திருக்கின்றன.
நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு கள் என்பவை பெரும் முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழி செய்து தருகின்ற ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதி யேயாகும். இயற்கை எரிவாயு, நிலம் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஆகியவற்றிலும் அதுதான் நடந்தது. சிஏஜியின் அறிக்கையானது, நிலக் கரி போன்ற நாட்டின் இயற்கை வளங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக மத்தியில் 1991இலிருந்தே ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங் கங்களின் ஒட்டுமொத்த தலையீடு குறித்தும் ஆராயவில்லை என்பது உண் மைதான். அது 2006-07 இலிருந்து 2010-11ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்தும், 2004ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் நிலக்கரித் துறை அமைச்சகத்தால் நிலக்கரிப் படுகை கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் தான் தணிக்கை மேற்கொண்டிருக் கிறது. நிலக்கரியைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே ஓர் இடை யூறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டில் இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும் 1972-73ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டுவிட்டன. 1973இல் நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசியமயம்) சட்டம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் எவ் வளவோ முயன்றும் நிலக்கரிச் சுரங்கங் களுக்குள் தனியார் நுழைவதற்கு ஏற்றவகையில் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் அவற்றால் வெற்றி பெற முடியவில்லை. 2000இல் தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசாங்கத்தால் நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார் துறையை அனுமதிப்பதற்கு வகை செய் யக்கூடிய விதத்தில் நிலக்கரி தேசிய மயத் திருத்தச் சட்டமுன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டது. ஆயினும் அச் சட்டமுன்வடிவு இதுநாள்வரையில் நிறைவேற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சங்கங்களும் நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் நிலக்கரிச் சுரங்கங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப் பதை உறுதியுடன் எதிர்த்து வந்தன. நிலக்கரிச் சுரங்கங்களில் தனியார்மயத் திற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இந்தச் சங்கடத்திலிருந்து மீள்வதற் காக “குறிப்பிட்டநோக்கத்திற்கான சுரங்கங்கள்” (“captive coal blocks”) ஒதுக்கீடு மார்க்கம் என்ற ஒன்று புதிதாக உரு வாக்கப்பட்டது. 1993இலும் 1996இலும் பிரதான சட்டத்திற்கு இதன் மூலம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, மின் சார உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் “குறிப் பிட்ட நோக்கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்களைப் பெற்றிட அனுமதிக்கப் பட்டன. 1976இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் இந்தப் புதிய ஷரத்தும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட் டது. இதன்படி இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தியாளர்கள் “குறிப்பிட்ட நோக் கத்திற்கான” நிலக்கரிச் சுரங்கங்க ளைத் தங்கள் உபயோகத்திற்காக அனு மதித்துக் கொள்ளலாம். “குறிப்பிட்டநோக்கத்திற்கான” சுரங்கங் களின்’ ஒதுக்கீடுகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள், ‘‘ஒதுக்கீடுகள் இறுதிப் பய னாளருக்கு (end user) மட்டுமே - அதாவது, உருக்கு அல்லது மின் உற்பத்தி யாளர்களுக்கு மட்டுமே - அளிக்கப்படும்’’ என்றுதான் ஆரம்பத்தில் கூறியது. ஆனால் இதுவும் 2006இல் நீர்த்துப் போகும்படி செய் யப்பட்டது. இப்போது என்ன நிலைமை என் றால், ஒரு சுரங்க நிறுவனம் தனக்கு நிலக்கரி விநியோகம் செய்ய வேண்டும் என்று இறுதிப் பயனாளருடன் ஒப்பந்தம் செய்துகொண் டிருந்தால் அவை நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும். இவ்வாறுதான், அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கண்காணிக்கும் குழு (screening committee) நிலக்கரிப் படுகை களை பலருக்கு ஒதுக்கி இருக்கிறது. இப் போது அவர்களில் பலர் அந்தப் படுகைக ளிலிருந்து நிலக்கரி எடுக்கவில்லை. மாறாக வேறொருவருக்கு அதனை விற்றிருக்கிறார் கள். சில ஒதுக்கீடுகள் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) புலனாய்வு மேற்கொண்டிருக்கிறது. அவர்களின் மீது மோசடி மற்றும் பல்வேறு கிரிமினல் குற்றங் களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளை’ ஒப்படைக்கும் வேலைகள் என்பவை 2000க்குப் பின்னர் தான் சூடுபிடித்தது. இதற்குப் பிரதானமாக முன்வைக்கப்பட்ட வாதம் என்ன தெரியுமா? நாட்டில் அதிகரித்து வரும் மின் உற்பத்தி மற் றும் பல்வேறு காரணங்களுக்காக அதிகரித்து வரும் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கோல் இந்தியா லிமிடெட் (Coal Indian Limited) நிறுவனம் மற்றும் அதன் துணை உறுப்புக்கள் இருக்கின்றனவாம். போதிய அளவிற்கு நிலக்கரி உற்பத்தி இலக் குகள் நிறைவேற்றப்படாததால் உண்டான முட்டுக்கட்டையானது உருக்கு, சிமென்ட் மற் றும் அவற்றுடன் இணைந்த பல்வேறு தொழில்பிரிவுகளின் வளர்ச்சியைப் பாதித்துக் கொண்டிருந்தது. பொதுத்துறையின் கீழ் இயங்கிவந்த நிலக்கரித் துறை நிறுவனங் களின் செயல்பாடுகள் படிப்படியாக வலு விழக்கப்பட்டு, கீழ்நிலைக்கு இறக்கப்பட்டு இவ்வாறு சாக்குப் போக்காகச் சொல்லப் பட்டது. கோல் இந்தியா லிமிடெட் நிறுவ னத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, நிலக்கரித் துறையில் நிலவி வந்த ஊழல் மற்றும் ஆடம்பர செயல்பாடுகளையும், குறை பாடுகளையும் சரி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான ஐ.மு.கூட்டணி மற்றும் தே.ஜ.கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களுமே நிலக்கரித் துறையில் தனியார் நுழைவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சூழ்நிலையை உருவாக்கிச் செயல் பட்டன. மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கை, தனி யார்மயத்திற்குப் பாதை அமைத்துத்தரும் அரசாங்கத்தின் ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி’ என்னும் குதர்க்கமான வாதத்தை நன்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, (2010-11 முடியவுள்ள) பதினோராவது திட்டக் காலத்தில், 86 நிலக்கரிப் படுகைகள் 73 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 28 படுகைகளில் மட்டுமே (இவற் றில் 15 படுகைகள் மட்டுமே தனியாருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது) 2010-11ஆம் ஆண் டில் 34.64 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகளி லிருந்து’ நிலக்கரி உற்பத்தியில் 52.55 விழுக் காடு குறைவு ஏற்பட்டது. 68 படுகைகளில் உற்பத்தி முழுமையாகத் தொடங்கப்படவே இல்லை. அரசின் இந்தப் புதிய ‘குறிப்பிட்ட நோக் கத்திற்கான நிலக்கரிச்சுரங்கங்கள்’ என்னும் கொள்கையை நிலக்கரி அமைச்சகம் கோல் இந்தியா லிமிடெட்டை பலவீனப் படுத்துவதற்கும், பொதுத்துறை நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும் நன்கு பயன்படுத்திக்கொண்டது. கோல் இந் தியா லிமிடெட் நிறுவனம் தனியாருக்கு ஒதுக் குவதற்குக் கடும் ஆட்சேபணைகள் தெரி வித்து, தனக்கு ஒதுக்குமாறு எவ்வளவோ வற் புறுத்தியும் அமைச்சகம் தன் கீழ் இருந்த நிலக்கரிப் படுகைகளை அதற்கு ஒதுக்க மறுத்துவிட்டது. இவ்வாறு கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் 116 படுகைகளை 49,790 மில்லியன் டன்கள் இருப்புடன் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்ததற்கு ஒப்புதலே அளித்திடவில்லை. சிஏஜியின் அறிக்கை இவ்வாறு அமைச்சகம் நடந்து கொண்டதானது கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தைக் கடு மையாகப் பாதித்துவிட்டது என்று குறிப் பிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரதமரின் அறிக்கையானது, எவ்விதத்திலும் நியாயம் என்று கூறமுடியாத ஒரு கொள்கை யைப் பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்ட கேவலமான முயற்சியாகும். பிரதமரின் மேற் பார்வையுடன் நிலக்கரி அமைச்சகத்திற் கென்று இரு இணை அமைச்சர்களின் கீழ் நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய் வதற்கான ஒழுங்கீனமான முறை உந்தித் தள் ளப்பட்டது. ‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்’ தாங்கள் உற்பத்தி செய்த நிலக்கரியை கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. 2010இன் பிற் பகுதியில் அதனை பிரதமர் அலுவலகம் மாற்றிவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட உபரி நிலக்கரியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நிறுவனங்களைப் பிரதமர் அலு வலகம் தாங்கிப்பிடித்திருக்கிறது. (மற்றொரு சிஏஜியின் அறிக்கை சசன் பவர் பிராஜக்ட் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட படுகை களில் உற்பத்தியாகி மிகையாக இருந்த நிலக் கரியை உபயோகப்படுத்திக்கொள்ள ரிலை யன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தை அனு மதித்திருப்பதற்காக அரசாங்கத்தைக் குற் றஞ்சாட்டியிருக்கிறது.) ஐ.மு.கூட்டணி அரசாங்கமும், காங்கிரஸ் கட்சித் தலைமையும் உயர்மட்ட அளவில் நடைபெற் றுள்ள ஊழல் புகார்களிலிருந்து தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து தப்பித் துக்கொள்ள முடியாது. பிரதமர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை நடக்கவிடா மல் சீர்குலைத்து வரும் பாஜகவின் கபட நாடகம் மிகவும் அதிசயமான ஒன்று. ‘குறிப் பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகை’ என்னும் மார்க்கத்தைத் தோற்றுவித்ததே பாஜக தான். நாடாளுமன்றத்தில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயமாக்குவதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததும் அதுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம்தான் நிலக்கரி விலை மீதிருந்த அரசின் கட்டுப்பாட்டை நீக்கியது. அதனைத் தொடர்ந்து கோல் இந்தியா லிமிடெட் நிறு வனத்தைப் பலவீனப்படுத்தப் பல்வேறு நட வடிக்கைகளையும் அது எடுத்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கங்கள் மிகவும் மோசடியான நிறுவனங்களுக்கு நிலக்கரிப் படுகைகளை ஒப்படைப்பதில் இதே பாதையைத்தான் பின்பற்றிக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு நாட்டின் இயற்கை வளங் களைக் கொள்ளையடித்திட பெரும் வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பதில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. தனியார்மயத்திற்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரி படுகை’’ என்கிற மார்க்கமானது, அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விதி முறைகளை அமைச்சகமே மீறி நடந்து கொள்ளுதல், ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரி படுகைகளை’’ ஒருவர் பெற்றபின் விரைந்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, சில நிறுவனங் களுக்குக் கொள்ளை லாபத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றன என்பது தெளிவாகி இருக்கிறது. சிஏஜி அறிக்கை மீதான கூக்குரல் நிலக் கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வதில் போட்டியால் நிர்ணயிக்கப்படுகிற ஒரு நேர்மையான முறையின் தேவைக்கு அனை வரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தனி யாருக்கு நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்யும்போது பாரபட்சமாக நடந்துகொள் வதையும், ஊழலுக்கு இரையாவதையும் ஒழித்திட வேண்டுமானால் இப்போது இருக் கும் முறையைவிட ஏலம் விடும் முறை சிறந்த முறையாகும். (ஏலம் விடும் முறையையும் கூட தனியார் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும். இதுகுறித்து இக்கட்டுரையின் பிற்பகுதியில் ஆராய்வோம்.) ஆயினும், மிகவும் பிரதானமான பிரச்சனை என்னவெனில், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதா, கூடாதா என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத் தவரை, நிலக்கரித் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அது உறுதியுடன் எதிர்க் கிறது. அதனால்தான், நிலக்கரித்துறைக்குள் தனியார் நிறுவனங்களைப் புக வழிவகுத்துத் தந்துள்ள ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக் கரிப் படுகைகள் மார்க்கத்தைப்’’ பயன்படுத் துவதையும் அது எதிர்த்துக் கொண்டிருக் கிறது. நிலக்கரி என்பது பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் ஓர் எரிபொருள், புதுப் பிக்க முடியாத ஓர் இயற்கை வளமாகும். கோடிக்கணக்கான உள்நாட்டு நுகர்வோரும், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் மின்சாரத்திற்கும் எரிசக்திக்கும் தங்களின் பிரதான மூலக் கூறாக நிலக்கரியையே சார்ந்திருக்கின்றன. எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் திட்ட மிட்டு நாட்டின் வளர்ச்சியையும், சமத்துவத் தையும் மேம்படுத்தக்கூடிய அளவில் நிலக் கரி பயன்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களை அரசாங்கம் தன் சொந்த இருப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, தனியார் நிறுவனங்ள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவோ அல்லது தாங்களே அதிக வருவாயைப் பெறக்கூடிய விதத்திலோ இவற்றை மாற்றிடக் கருதக்கூடாது. அதனால்தான், நிலக்கரி எடுக்கும் பணி பொதுத்துறையால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிறோம். தனியார்துறையில் அமைந்துள்ள மின்சாரம் மற்றும் உருக்குத் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரித் தேவை எனில், அதற்கான ஒதுக்கீடு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் மூலமாகவே செய்யப்பட வேண்டும். கோல் இந்தியா லிமிடெட்டும் அதன் துணை அமைப் புகளும் நிலக்கரித் தோண்டி எடுக்கும் பணி களைச் செய்து அவைதான் படுகைகளை அவற்றிற்கு வழங்கிட வேண்டும். மாநிலங் களில், அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப் படும் சுரங்க நிறுவனங்கள் மூலமாக இப் பணியினைச் செய்து கொள்ள முடியும். தனி யார் துறை, உருக்கு உற்பத்தி போன்றவற்றிற் கான மின் உற்பத்தித் தேவைகளை இவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள முடியும். உலகில் நிலக்கரி வளம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. மின் உற்பத்திக் கொள்ளளவில் 55 விழுக்காடு அனல் மின் திட்டங்கள் மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளா தாரத்தில் நிலக்கரியின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு காரணங்களால், நிலக்கரி உற்பத்தியையும், மின் உற்பத்தியை யும் அதிகரிப்பதற்கான இலக்குகள் எட்டப் படமுடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிலக்கரித் தொழிலை தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களை வலுப்படுத் திட அரசாங்கம் முன்வர வேண்டும், அவற் றின் தொழில்நுட்பங்களை மேம்படுத்திட வேண்டும், போதுமான அளவிற்கு நிலக்கரிச் சுரங்கங்கள் அமைத்திட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலக்கரியைப் பெறுவதற்கு ஏலம் விடும் முறை மிகவும் ஆழமான முறையில் சிரமங் களை உருவாக்கக்கூடும். ஏலம் விடும் முறை, தனியார் பெருமுதலாளிகளுக்குச் சாத கமாக அமைந்திடும். அது தனியார் ஏகபோகத் திற்கும், அவர்களுக்குள் ஓர் ரகசிய உடன் பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும். அவர்களுடன் பொதுத்துறை நிறு வனங்கள் - அது மத்திய பொதுத்துறை நிறு வனமாக இருந்தாலும் சரி, அல்லது மாநிலப் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, - போட்டிபோடவே முடியாது. மேலும், இது வரை நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டில் நமக் குக் கிடைத்த அனுபவம் என்ன? ஒரு குறிப் பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் நிலக்கரிப் படுகைகளைப் பெற்றாலும், அந்த நோக் கத்தை அவர்கள் நிறைவேற்றினார்களா என் றால், இல்லை என்பதுதான். அதனை உத்தர வாதப்படுத்திடவும் முடியாது. ஏலம் விடு வதன் மூலம் ஏற்படும் மற்றொரு அம்சம், மின் உற்பத்திச் செலவினத்தை இது அதிகப் படுத்திடும். விளைவு, மின்துறையில் மின்கட் டணத்தை உயர்த்த இது நிர்ப்பந்தித்திடும். நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஒரு வலுவான வாதத்தை முன் வைத்துள்ளன. தங்கள் மாநிலங்களில் உள்ள நிலக்கரிப் படுகைகளை ஒதுக்கீடு செய்வ தில், தங்கள் அனுமதியைப் பெற்று ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, தாங்கள் தங்கள் மாநி லத்தில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் எரி சக்தித் தேவைகளைத் தங்களால் நிறை வேற்றிக்கொள்ள முடியும் என்று அவை கூறு கின்றன. ‘‘குறிப்பிட்ட நோக்கத்திற்கான நிலக்கரிப் படுகைகள்” தொடர்பாக கடந்த பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாக மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் எடுத்த நிலை கீழ்க்கண்ட மூலக்கூறுகளை அடிப்படை யாகக் கொண்டிருந்தது. முதலாவதாக, ஒதுக்கீட்டில் மாநில அரசாங்கமும் முற்றிலும் ஈடுபட வேண்டும். இரண்டாவதாக, மாநில அரசின் கருத்தைக் கேட்காமல், எந்தவொரு தனியார் நிறுவனத் திற்கும் நிலக்கரிப் படுகைகள் நேரடியாக ஒதுக்கீடு செய்யக்கூடாது. மூன்றாவதாக, மாநில அரசின் கவனத்திற்கு வராமல் எங் கெல்லாம் நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம், சம்பந் தப்பட்ட உருக்கு அல்லது மின் நிறுவனத் துடன் மாநில நிலக்கரி கார்ப்பரேஷனை ஒரு கூட்டு ஸ்தாபனமாக (joint venture) ஏற்படுத் திக் கொண்டு நிலக்கரி எடுக்கப்பட வேண் டும், பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நேரடியான ஏலம் விடும் முறை குறித்து இடது முன்னணி அரசாங்கத்திற்கு இருந்த ஐயங்கள் தொடர்பாக வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களில் சில, தங்கள் இஷ்டத்திற்கு திரித்து செய்திகளை வெளியிட்டன. ஊழ லுக்கு எதிராக இயக்கம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் வகையறாக் களும் அவ்வாறே உண்மையைத் திரித்துக் கூறினர். தெரிந்துதான் செய்கிறார்களா அல் லது தெரியாமல்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை, இவர்கள் நோக்கம் எல்லாம் நாட்டில் உள்ள நிலக்கரி சொத்துக்கள் ஏலம் விடும் முறை மூலம் முழுமையாகத் தனியாரி டம் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். மன்மோகன்சிங் அரசை முழுமையாக சூழ்ந்துகொண்டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல், ஆட்சியாளர்களின் கொள்கைகள் மூலம் ‘‘நாட்டின் வளங்களைக் கொள்ளை யடிக்கும்’’ கயவர்களை அடையாளம் காட்டு வதற்கு மட்டுமல்ல, இயற்கை மற்றும் கனிம வளங்களைத் தனியார்மயமாக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையை அடியோடு மாற்றி அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். நிலக்கரிப் படுகைக் கொள்கையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் உயர்மட்ட அளவிலான புலனாய்வு அவசியம். இதற்குப் பொறுப்பான வர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண் டும். முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். கொள்ளை லாபம் ஈட்டப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளிலும், அரசுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளை மீட்டிட உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டின் வளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுகிற நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நிலக்கரி ஒதுக்கீடுகளும் நிலக்கரிச் சுரங்கப்பணிகளும் எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மட் டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோர வேண்டும். (தமிழில்: ச.வீரமணி) |
Sunday, September 2, 2012
நிலக்கரி சுரங்க ஊழல் தனியார்மயத்திற்கு தரப்பட்ட விலை!
Friday, August 24, 2012
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்
சீத்தாராம் யெச்சூரி
(மேற்கு வங்கம், கொல்கத்தாவில், 2012 ஆகஸ்ட் 16 அன்று தேஷ்டைஷீ என்னும் கட்சியின் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.
அதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:)
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே
குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு
மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர்
லெனின், ’’எங்கிருந்து தொடங்குவது?’’ என்னும் தன்னுடைய நூலில் கூறியதாவது: ’’நம்முடைய
கருத்தோட்டத்தின்படி, நம்முடைய செயல்களின் தொடக்கப்புள்ளி, நமக்குத்
தேவையானதொரு ஸ்தாபனத்தை நாம் உருவாக்குவதற்கு முன்னோடியாக நாம் எடுத்து வைக்கும் முதல்
அடி என்பது, அல்லது,
நாம் உருவாக்கும் ஸ்தாபனத்தை வளர்த்தெடுத்து, ஆழமாக்கி, விரிவான
முறையில் உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கானப் பிரதான இழையாக இருப்பதென்பது, நமக்காக
ஓர் அகில ரஷ்ய அரசியல் பத்திரிகையைத் துவக்குவது என்பதேயாகும். நம் அனைவருக்கும் தேவையான
ஓர் அரசியல் பத்திரிகை. அத்தகைய பத்திரிகையின்றி, பொதுவாக சமூக ஜனநாயகத்தைக் கட்டுவதற்கும்,
அடிப்படையாக உள்ள கொள்கை உறுதியுடன் நம்முடைய
பிரச்சாரத்தை, கிளர்ச்சியை முறையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியாது. தனிநபர் நடவடிக்கை, வட்டார அளவிலான
துண்டுப்பிரசுரங்கள், சிறுவெளியீடுகள் போன்ற வடிவங்களுடன் நம் பொதுவான மற்றும் திட்டமிட்ட
முறையில் கிளர்ச்சிகளை நடத்திட நமக்கு என்று ஒரு பத்திரிகையின் அவசியமும் இப்போது உருவாகியிருப்பதுபோல
முன்னெப்போதும் உருவானதில்லை. அத்தகையதொரு பத்திரிகையின்றி, நாம் நம்முடைய
கடமையை - மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவும் அரசியல் அதிருப்தி
மற்றும் எதிர்ப்புணர்ச்சியை ஒன்றிணைத்து, ஒருமுகப் படுத்தி,
தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை
முன்னெடுத்துச் செல்லும் பணியை - முழுமையாக செய்துமுடிக்க முடியாது.’’
மேலும் அவர் கூறுகிறார்: ’’ஆயினும், பத்திரிகையின்
பங்களிப்பு என்பது, கட்சியின் சிந்தனைகளைப் பரவச் செய்தல், ஊழியர்களுக்கு
அரசியல் கல்வியை அளித்தல் மற்றும் அரசியல் நண்பர்களை அணிசேர்த்தல் ஆகியவற்றுடன் மட்டும்
சுருங்கிவிடவில்லை. ஒரு பத்திரிகை என்பது ஒரு கூட்டுப்பிரச்சாரகன், ஒரு கூட்டு
கிளர்ச்சியாளன் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு அமைப்பாளனும் ஆகும்.’’
பின்னர், ’’என்ன செய்ய வேண்டும்?’’ என்னும் நூலில் லெனின் கூறுகிறார்: ’’நம் பத்திரிகை
என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு தீப்பொறியையும் விசிறிவிடும் கொல்லனின் துருத்தி
போன்று இருப்பதுடன், மக்களின் நேர்மையான சீற்றங்களை ஊதி, ஊதி காட்டுத்
தீயாக கொழுந்துவிட்டெரியச் செய்யும் பணியையும் செய்வதாகும். இன்றையதினம் அது ஆற்றும்
பணி மிகவும் மந்தமானதாக, சிறிய அளவினதாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து முறையாக முயற்சி மேற்கொள்ளப்படுகையில், ஒரு பயிற்சி
பெற்ற போராளிகளின் சேனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவாகி, அதன் முறையான
பயிற்சியைப் பெற்றுவிடும்.’’
(2)
ஆயினும் பலர் இருபதாம் நூற்றாண்டின் மனிதகுல
முன்னேற்றங்கள், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்,
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போல்
அல்லாமல் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் செய்துவிடுகின்றன என்று கூறுகிறார்கள். வானொலி
மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணையம், கைபேசி போன்றவை இதுநாள்வரை தகவல் பரிமாற்றங்களைச்
செய்துகொண்டிருந்த பத்திரிகைகளின் பணியை வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற ஒன்றாக
மாற்றிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலர் வாதிடுகிறார்கள். எனவே, கட்சிப் பத்திரிகை தொடர்பாக லெனின் கூறிய
கருத்துக்களை மீளவும் நினைவுகூர்வதில் ஏதேனும் பொருளுண்டா என்றும் அவர்கள் நம்மைப்
பார்த்து கேட்கிறார்கள்.
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது
என்பது மட்டுமல்ல, மிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள்
ஏற்பட்டிருந்தபோதிலும், நம் முன் உள்ள சவால்களை
எதிர்கொண்டிட அதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆளும் வர்க்கங்கள் தங்கள் சமூகத்தின் மீது அவர்களுடைய தத்துவார்த்த மேலாதிக்கத்தை
செலுத்திக்கொண்டே எப்போதும் தங்கள் வர்க்க ஆட்சியை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கூறியிருப்பது
போல, ’’ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற
சிந்தனைகள்தான். அதாவது, பொருளாய சக்திகளை ஆளுகின்ற வர்க்கம், அதே சமயத்தில் தன் நாட்டில் உள்ள அறிவுஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது.
பொருளாய உற்பத்திச் சாதனைகளைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும்
வைத்துக் கொண்டிருக்கிறது.’’
ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம்தான், கிராம்சி
விளக்குவதைப்போன்று, அரசால் மட்டும் அமல்படுத்தப்படுவதில்லை, அதன் பின்னணியில்
இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார
நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் கீழ், கலாச்சாரம்
என்பது மூலதனத்தின் ஆட்சியைத் தாங்கி நிற்கிறது. கலாச்சாரத்தின் வடிவங்கள் அனைத்துமே
பண்டமயமாக்கல் மூலமாக சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது. இது தொடர்பாக
ஏராளமாக எழுதியிருக்கிறோம். எனவே இப்போது மீண்டும் அவற்றைத் திரும்பக் கூறவேண்டிய தேவை
இல்லை. முதலாளித்துவத்தின் கலாச்சார சாதனங்கள் அனைத்தும் சமூகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கக்கூடிய விதத்தில்தான் இருக்குமேயொழிய, சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமூகத்தின்
முன்னேற்றத்திற்கு ஏற்றவிதத்தில் இருக்காது. இப்பொருள்களின் பரிவர்த்தனை மதிப்பு எப்போதுமே
அதன் பயன் மதிப்பின் இடத்தைக் கைப்பற்றிவிடும்.
உலகமயத்தின் கலாச்சாரம், மக்களைத்
தங்கள் வாழ்வின் எதார்த்த நிலையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகிறது. இங்கே கலாச்சாரம்
என்பது அழகுணர்ச்சியை நோக்கியதாக இருக்காது, மாறாக தங்கள் வாழ்க்கையை அழுத்திக் கொண்டிருக்கிற
வறுமை மற்றும் ஏழ்மை நிலையிலிருந்து தங்களை மறக்கக்கடிக்கக்கூடிய விதத்தில் தங்களின் கவனத்தைத் திருப்பக்கூடியதாக அல்லது வேறுவழியில்
செலுத்தக்கூடியதாக இருந்திடும். அதன் விளைவாக, மக்கள் தங்கள் துன்பதுயரங்களுக்குக் காரணமான
காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கு அவர்களுக்கு சக்தியை அளிப்பதற்குப்
பதிலாக, அவர்களிடம் இருக்கின்ற கொஞ்சநஞ்ச சக்தியையும் வீணடிக்கக்கூடிய
விதத்தில் அமைந்திருக்கும். மைக்கேல் பாரன்டி கூறியதைப்போல, ’’ நம்முடைய கலாச்சாரத்தின் பெரும்பகுதி, தற்போது
மிகவும் பொருத்தமாகவே, ஊடக முதலாளிகளின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், அவர்களின்
பயன்பாட்டு மதிப்பை அதிகரிக்கக்கூடிய விதத்தில், ’’வெகுஜன கலாச்சாரம்’’("mass cullture")
என்றும்,, ’’பொது மக்கள் கலாச்சாரம்’’("popular cultu7re"), என்றும்
ஏன், ’’ஊடகக் கலாச்சாரம்’’ ("media culture")
என்றும் கூட வரையறுத்திடலாம். சமூகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது
அவர்கள் நோக்கமல்ல, மாறாக,
சமூகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே
அவர்கள் நோக்கமாகும். இவர்களால் திணிக்கப்படும்
’’வெகுஜனக் கலாச்சாரம்’’ என்பது நம்மை எதார்த்த நிலைமைகள் குறித்து
ஆழமாகச் சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும்
விதத்தில் உருவாக்கப்படுகின்றன. அற்பத்தனமானவைகள் குறித்த ஆடம்பரமான விளம்பரங்கள் உடனடியாக
நாம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியாதவாறு நம்மை
மறக்கடித்து விடுகின்றன. குப்பை கூளங்களை எல்லாம் ஏதோ வானத்திலிருந்து வந்த வைரங்கள்
போன்று நம்ப வைத்து மக்களின் கழுத்தை அறுக்கின்றன.
ஊடகங்கள் மூலம் இவர்கள் கட்டவிழ்த்து விடும்
பொழுதுபோக்குக் கலாச்சாரம், மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் அரசியலற்றது என்று கூறப்படினும், அதன் தாக்கம், அதன் பிரச்சாரம்
மற்றும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாகக் காட்டுதல், இனவெறி, நுகர்வுவெறி, எதேச்சாதிகாரவெறி, ராணுவ வெறி
மற்றும் ஏகாதிபத்தியவெறி ஆகியவற்றை மக்கள் மனதில் விதைக்கக்கூடிய விதத்தில் உள்ள இவர்களது
பிரச்சாரம் உண்மையில் அரசியல் சார்ந்ததேயாகும்.
உலகமயத்தின் கைகளில் உள்ள ஊடகக் கலாச்சாரம்
இதனை மிகவும் ஒளிவுமறைவின்றி அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறது. சமூகக் கொடுமைகளுக்கு
எதிராக மக்களின் எதிர்ப்புகள் மற்றும் அவர்களின் அவலநிலைமைகளை அது கண்டுகொள்வதில்லை.
உதாரணமாக, தலைநகர் தில்லியில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே குழுவினர் மிகச்சிறிய
அளவில் உண்ணாவிரதம் இருந்த அதே நாளன்றுதான் நாட்டிலுள்ள அகில இந்தியத் தொழிற்சங்கங்களின்
அறைகூவலுக் கிணங்க, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராக,
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான பேரணி/ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அண்ணா ஹசாரே
உண்ணாவிரதத்தைத் தூக்கிப் பிடித்த ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள், தொழிலாளி
வர்க்கத்தின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. இதைவிடக் கேவலமான வேலையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தது. ’’தலைநகர்
தில்லியில் தொழிலாளர்களின் பேரணி/ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து சீர்குலைந்ததாக’’ அது மிகவும் ’வருத்தப்பட்டு’ ஒரு சிறிய
பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது. இதே போன்று, ஜூலை மாதத்தில், மக்களின்
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி,
இடதுசாரிக் கட்சிகள் நடத்திய ஐந்து நாள் தர்ணா போராட்டத்தையும்
அவை கண்டு கொள்ளாது இருட்டடிப்புச் செய்தன. ஆனால் அதே சமயத்தில் அதற்குப் பக்கத்திலேயே
நடைபெற்ற பிசுபிசுத்துப்போன அண்ணா ஹசாரேயின் இயக்கத்தை மட்டும் அவை வானளாவப் புகழ்ந்து தள்ளின.
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, முதலாளித்துவம்
குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்ட மார்க்ஸ், அதன் குணம் குறித்து மிகவும் சிறப்பாக வரையறுத்தார்.
’’உற்பத்தி என்பது ஒரு
தேவையைத் திருப்திப்படுத்தும் ஒரு பொருளை மட்டும் அளிக்கவில்லை. அது, அப்பொருளுக்கான
தேவையையும் அளிக்கிறது. உற்பத்தி என்பது ஆரம்பத்தில் மக்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்து அளிக்கிறது.
பின்னர் அதே உற்பத்தி, உற்பத்தி செய்யபபட்ட பொருள்களை வாங்குவதற்கான மக்களையும் உற்பத்தி
செய்கிறது.’’ (Production not only provides the material to satisfy a need, but it also provides the need for the material. Production accordingly produces not only an object for the subject, but also a subject for the object.)
உற்பத்தியின் முதல் கட்டம் மக்களுக்கான பொருள்களை
உற்பத்தி செய்வது. அதன் அடுத்த கட்டம் அவ்வாறு உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய
அளவில் மக்களின் மனதை மாற்றுவது. இதற்காகத்தான் முதலாளித்துவம் விளம்பரங்களின் மூலமாக
கோடிக்கணக்கான டாலர்கள் ஒவ்வோராண்டும் செலவு செய்கிறது. அதேபோன்றுதான் கலாச்சாரத் துறையிலும்.
விளம்பரத்தைப் பார்ப்பவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, தாங்கள்
உற்பத்தி செய்த பொருள்களை வாங்கக்கூடிய அளவிற்கு மாற்றி விடுவார்கள். இவ்வாறாக மக்களின்
விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாக, முதலாளித்துவம்
விரும்பக்கூடிய விஷயங்களை மக்கள் விரும்பக்கூடிய விதத்தில் தங்கள் விளம்பரங்களின் மூலம்
மாற்றிவிடுவார்கள்.
இவ்வாறு இவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது
தொடுக்கும் தாக்குதலை நாம் சமாளித்து முறிய்டிப்பது எப்படி? முதல் கட்டமாக, உலகமயம்
மற்றும் வகுப்புவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்புகளினால் மதிமயங்கி
மழுங்கிக் கிடக்கும் மக்களிடம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கலாச்சார நிகழ்ச்சிநிரலை
மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். அவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை எதிர்கொண்டு
முறியடித்திட இது மிகவும் அவசியம்.
(3)
ஏகாதிபத்திய உலகமயத்தால் ஆதிக்கம் செலுத்தக்கூடிய
அரசியல் ந்டவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் நாம் இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது அகில இந்திய மாநாட்டின் தத்துவார்த்த
தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
``ஏகாதிபத்தியம் மற்றும் நவீனதாராளமயம் அறிவித்துறை மற்றும் கலாச்சாரத்துறையில்
மேலாதிக்கததை நிலைநாட்டுவதற்காக இக்காலத்தில் தத்துவார்த்த யுத்தத்தைக் கட்டவிழ்த்து
விட்டுள்ளது. உலகமயத்தின் இத்தகைய நடைமுறையும், தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதும் செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களை
மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒன்றிணைத்து மெகா கார்பரேட்டுகளாக வளர்த்துள்ளன. மனிதகுல
அறிவுத்துறையில் இவ்வாறு ஏகபோகமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், மெகா கார்பரேட்டுகள்
தங்களின் ஊடகங்களின் வாயிலாக செய்திகளைத் தங்களுக்குச் சாதகமான முறையில் வெளியிடக்கூடிய
விதத்தில் அவற்றின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் இக்காலகட்டத்தில் மிகவும் முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவத்திற்கு
எதிராக அல்லது முதலாளித்துவத்திற்கு மாற்றை முன்வைப்பவர் களுக்கு எதிராக, தத்துவார்த்தத்
தாக்குதலை இவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய உலகமய நடைமுறை விரும்பும் கலாச்சார
மேலாதிக்கம் என்பது பொதுமக்களின் ரசனையுணர்வை ஒரேமாதிரியானதாக மாற்ற விரும்புகிறது.
எந்த அளவிற்கு மக்களின் பொது ரசனையுணர்வு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு ’கலாச்சாரப் பொருள்களின்’ எந்திரரீதியான
மறுஉற்பத்திக்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது என்பதும் எளிதாகிறது. வர்க்க மேலாதிக்கத்தின்
கண்ணோட்டத்தில், உலகமயத்தின் கலாச்சாரம் மக்களை நாள்தோறும் எதிர்கொள்ளும் தங்கள்
எதார்த்த வாழ்விலிருந்து விலக்கி வைக்கவே விரும்புகிறது. இங்கே கலாச்சாரம் என்பது அழகுணர்ச்சியை
நோக்கியதாக இருக்காது. மாறாக,
தங்களை எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கும் வறுமை மற்றும் ஏழ்மை
நிலையிலிருந்து, தங்களை மறக்கடிக்கக்கூடிய விதத்தில், தங்களின்
கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய விதத்தில், இருந்திடும்.’’
செய்தி, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களின்
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஏகாதிபத்தியத்தை
அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்களையும் வளர்த்து, செயல்படுத்திடவும்
அனுமதிக்கிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு சவால்
விடக்கூடிய வகையில் வளர்ந்திடும் வெகுஜன இயக்கங்களைக் கட்டுப்படுத்திடவும், அவற்றின்மீது
செல்வாக்கு செலுத்திடவும், தேவைப்படின் அவற்றை நாசவேலை செய்த அழித்து ஒழித்திடவும் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, மெகா நிறுவனமான ’டைம்’, மாபெரும் மற்றொரு பொதுழுபோக்கு நிறுவனங்களில் ஜாம்பவனாகத் திகழ்ந்த
வார்னர் பிரதர்ஸுடன் இணைந்தது. அதனை, அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும்
ஏஓஎல் எனப்படும் அமெரிக்கன் ஆன்லைன் லிமிடெட் (AOL - American Online Limited) என்னும் நிறுவனத்தை 164 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி, உலகின் மிகப்பெரிய
செய்தி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு நிறுவனமாக மாற்றியுள்ளது. ரூபர்ட்
முர்டோக் தற்போது செய்தி,பொழுதுபோக்கு மற்றும் இணையதள நிறுவனங்களில் 68 பில்லியன்
டாலர் சொத்துக்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது
ஸ்பைடர்மேன் புகழ் மார்வெல் நிறுவனத்தை கபளீகரம் செய்துள்ளது. இந்நிறுவனங்கள் உற்பத்திச்
செய்திடும் கலாச்சாரப் பொருள்கள் உலகம் முழுதும் எறியப்பட்டு, அதிசயத்தக்க
அளவிற்கு லாபத்தை ஈட்டித்தருகின்றன. சமீபத்தில் 2011 ஜனவரியில், கம்காஸ்ட்
கார்பரேஷன் என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. கம்காஸ்ட் நிறுவனம்தான்
அமெரிக்காவில் வீடியோ மற்றும் இணையதள நிகழ்ச்சிகளை அளிப்பதில் நம்பர் 1 நிறுவனமாகத்திகழ்கிறது.
இதன்கீழ் 23 மில்லியன் வீடியோ சந்தாதாரர்களும், 17 மில்லியன் இணையதள சந்தாதாரர்களும் இருக்கின்றனர்.
இந்தியாவிலும்கூட இதேபோன்று எண்ணற்ற நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அனில் திருபாய்
அம்பானி குழுமத்தின் ரிலயன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (முன்பு ரிலயன்ஸ் பிக் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமாக இருந்தது) நிறுவனம் இந்தியாவில்
மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன்கீழ் இந்தியாவில் 35 மில்லியன்
நுகர்வோர் உள்ளனர். பிக் சினிமாஸ் (க்ஷஐழு ஊiநேஅயள) இந்தியாவில் திரைப்படங்ளைத் திரையிடுவதில் பிரதானபாத்திரத்தை
வகிக்கிறது. நாடு முழுதும் இதன்கீழ் 253 திரையரங்குகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான
ரூபாய் செலவு செய்து திரையிடப்படும் படங்களில் இதன் பங்களிப்பு மட்டும் 10 முதல் 15 விழுக்காடுகளாகும்.
இந்நிறுவனம் உலகின் பல நிறுவனங்களையும் வாங்கி டிஜிடல் பிலிம் துறைகளில் கால்பதித்துள்ளது.இந்தியாவில்
உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு ஊடகத்துறையில் மெகா கார்பரேட் நிறுவனங்கள்
உருவாகி, தங்கள் நலன்களுக்கேற்ற விதத்தில் செய்திகளைத் திரித்து ஒளிபரப்புவதுடன்
மட்டுமல்லாமல், பல சமயங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளையும் பிரச்சாரம்
செய்து, சமூகத்திற்குப் பேரழிவினை ஏற்படுத்தி வருகின்றன.
’காசு பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவது’ (`யீயனை நேறள’)
என்பது ஊடகத்துறையில்
வணிகமயம் எந்த அளவிற்கு விரிவடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கீழ்
உண்மை மற்றும் லட்சியம் முதலானவை விபத்துக்குள்ளாகிவிட்டன.
(4)
ஆளும் வர்க்கஙகள், ஊடகங்கள்
ஏகபோகம் என்கிற தத்துவார்த்த மேலாதிக்கக் கருவியால் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக
விதம் விதமான தத்துவங்களைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றன. பின் நவீனத்துவம்
போன்ற புதிய தத்துவங்கள் மிகவும் அரக்கத்தனமானமுறையில் பரப்பப்படுகின்றன. இதன் பிரதான நோக்கம் என்னவெனில், மற்ற கம்யூனிச
எதிர்ப்பு தத்துவங்களைப் போலவே இதுவும் வர்க்கங்களை மறுதலிப்பது என்பதும். அதன் கரணமாக
வர்க்கப் போராட்டமே தேவையில்லை என்பதுமேயாகும்.
இது சமூகத்தைப் பல்வேறு கூறுகளாக - இனரீதியாக, பிராந்தியரீதியாக, மற்றும்
சின்ன சின்ன அடையாளங்களாக - பிரித்து, இறுதியாக சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையைச்
சீர்குலைப்பதாகும். எனவேதான்,
இத்தகைய சிந்தனைகள், சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஒற்றுமையை
பலவீனப்படுத்துகின்றன, அதனைத் தொடர்ந்து சுரண்டும் கூட்டத்தின் வர்க்க ஆட்சியைத் தூக்கிப்
பிடிக்கின்றன.
கட்சிப் பத்திரிகை, ஊடகத்தின்
மற்ற வடிவங்களுடன், இவ்வாறு ஆளும் வர்க்கங்கள்
நம்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில்
வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, புரட்சிகர சக்திகள் தங்கள் சிந்தனைகளைப் பரப்பக்கூடிய
விதத்தில், சுரண்டப்படும் வர்க்கங்களை அணிதிரட்டக்கூடிய விதத்தில், அவற்றின்
மூலமாக அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் ஒரு சமூகத்தை
- சோசலிச சமூகத்தை உருவாக்கக்கூடிய போராட்டத்தை வலுப்படுத்தக் கூடிய வகையில் புரட்சிகர சக்திகளின் கைகளில் ஒரு வலுவான ஆயுதமாக, கட்சிப்
பத்திரிகை திகழ வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
Tuesday, August 14, 2012
பாஜகவின் கற்பனைக் கனவுகள்
“தன் மனதை மாற்ற முடியாத ஒருவன் தன் குடிமக்களையும் மாற்ற மாட் டான்’’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் இன வெறியன் ஒருவனைப் பற்றி ஒருமுறை சொன்னார். பாஜகவின் முதுபெரும் சண்டைக் குதிரையான எல்.கே. அத் வானி சமீபகாலத்தில் உதிர்க்கும் வார்த் தைகள் இவரது கூற்றை மறுவரையறை செய்வதுபோலவே தோன்றுகிறது. பாஜகவில் பிரதமர் பதவிக்காகப் பரிசீலிக் கப்படும் பெயர்ப் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதை அறிந்ததை அடுத்து, அவர் இவ்வாறு மாறிவிட்டார் என்றே தெரிகிறது. நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று அவர் நடந்துகொண்ட விதமே இதனைத் தெளிவுபடுத்தியது. அசாமில் கண்டிக்கத் தக்க வகையில் நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மதவெறி விஷத்தைத் துப்பியதிலிருந்து, அவர் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பது தெளி வானது.
2014 பொதுத் தேர்தலை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு பாஜ கவைச் சேர்ந்தவரோ அல்லது காங் கிரசைச் சேர்ந்தவரோ தலைமையேற்க மாட்டார் என்று அவர் பதிவு செய்திருக் கிறார். அரசாங்கம் அமைப்பதற்கான ஓட் டப்பந்தயத்தில் பாஜக வெற்றி பெறாது என்று அவர் ஒப்புக்கொண்டிருப்பதானது, இயற்கையாகவே எண்ணற்ற ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் கொடுக்குகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங் கம் வகித்திடும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தி இருக்கிறது. பிரதமர் பதவிக்குத் தான் வரமுடியாது என்றால், பாஜகவி லிருந்து வேறு யாரும் வரக்கூடாது என்கிற கூற்றும் இவரது பேச்சில் மறைந்தி ருக்கும் மற்றொரு செய்தியாகும் என்பதை அவரது பேச்சை சற்றே நுணுகி ஆராய்ந் தாலே தெரிந்துகொள்ள முடியும். பிரதமர் பதவிக்கு பாஜகவிற்குள் மிகக் கடுமையான முறையில் குடுமிப்பிடிச் சண்டை நடந்து கொண்டிருப்பது அனை வரும் அறிந்த உண்மை. குஜராத் முதல் வர், பாஜகவின் தலைவர், நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம் வகிக்கும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் அத்வானி உட்பட இப்பதவிக்குத் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாகவே தெரி வித்திருக்கின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கமாக இருப்பதாலும், ஆர்எஸ்எஸ் பாஜகவின் தலைவருக்கு இரண்டாவது முறையாகவும் பதவியை அளித்திருப்பதாலும், அத்வானிக்கு, பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் மீதான ஐயுறவுகள் பல்கிப் பெருகிவிட்டன. சில நாட்களுக்கு முன்னால், அத்வானி, “ஊழல் கறைபூசிக் கொண்டுள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கு நெருக்கடி யைக் கொடுக்கத் தவறிவிட்டார்’’ என்று பாஜகவின் தலைவர் மீது கடும் தாக்குதல் தொடுத்ததைப் பார்த்தோம். இதில் வேடிக்கை வினோதம் என்னவென்றால், மக்களவையில் முதல் பெஞ்சில் உட் கார்ந்திருப்பவரே இவர்தான். இவர்தான் அதனைச் செய்திருக்க வேண்டும். ஆனால் இவர், அவர் மீது பாய்ந்திருக் கிறார். பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் மோடியின் பெயர் அடிபடுவதை அடுத்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிப் படையாகவே தங்கள் அசௌகரியத்தைத் தெரிவித்துவிட்டன. பீகார் முதல்வர் தன் எதிர்ப்புணர்ச்சியை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்திவிட்டார். சிவசேனாவின் தலைவரான பால் தாக் கரே, அத்வானியின் பேச்சை ஒப்பிட்டு, தங்கள் கட்சி ஏட்டில் எழுதியுள்ள தலை யங்கத்தில், “சண்டைக்குச் செல்லும் போர்வீரர்களிடம் அதன் தலைவன், இச்சண்டையில் நாம் வெற்றி பெறுவோம் என்ற உத்தரவாதம் இல்லை என்று சொல்லி ஒட்டுமொத்த போர்வீரர்க ளையும் நம்பிக்கை குன்றச் செய்தது போல’’ இருக்கிறது என்று எழுதியிருக் கிறார். ‘மனவுறுதியையும் வலிமையையும் கொஞ்சம் பெற்றுக்கொள்ள’ அவர் தன் னைச் சந்திக்க வேண்டும் என்றும் பால் தாக்கரே, அத்வானிக்கு அழைப்பு விடுத் திருக்கிறார். அத்வானியின் நம்பிக்கை யற்ற மதிப்பீட்டிலிருந்து தேசிய ஜனநாய கக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அகாலி தளம் போன்ற கட்சிகளும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டுள்ளன. அத்வானி யின் மதிப்பீடு உண்மை நிலைமைக்கு மிக நெருக்கத்தில் உள்ளது என்பது உண் மையே என்ற போதிலும், அவர்கள் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள் ளத் தயாரில்லை. பாஜகவோ அல்லது காங்கிரசோ ஆட் சிக்கு வராது என்று கூறிய அத்வானி, அதே சமயத்தில் மூன்றாவது முன்னணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறு களும் இல்லை என்று மிகவும் விசித் திரமான முறையில் கூறியிருக்கிறார். அநே கமாக, அவர் ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடுத்த அரசாங்கத் திற்குத் தலைமை வகிப்பதற்கான சாத் தியக்கூறுகள் இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கக்கூடும். எப்படி அவர் கருதியிருந்தாலும் அவரது அனைத்து ஊகங்களும் பகற்கனவேயாகும். பட் டத்தை வானத்தில் பறக்க விடும் மனி தனின் இயல்பு அதனை மிக மிக உயரத் தில் பறக்கவிட வேண்டும் என்பதே யாகும். அத்வானியும் இதனை மறுக்க மாட்டார். ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரம் பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய வாய்ப்பு கள் குறித்து கற்பனைச் சிறகடித்து பறந்து கொண்டிருந்ததைக் குறிப்பிட்டிருக்கி றோம். பொதுத் தேர்தல் நடைபெற இன் னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், நடைபெறவிருக்கும் தேர்த லில் பாஜகவின் வாய்ப்புகள் இந்த நிமிடம் வரை வீழ்ந்து கொண்டிருக்கும் அதே சம யத்தில், அன்னா ஹசாரே போன்றோரின் இயக்கங்களால் ஆதாயம் அடையலாம் என்ற அவர்களது அபிலாசைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறி யுள்ள நிலையிலும், பிரதமர் பதவிக்கு தங் கள் கட்சியில் யார் போட்டியிடுவது என் பதற்கான குடுமிப்பிடிச் சண்டை மட்டும் தொடர்ந்து மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டிற்கு ஒரு மாற்றுக் கொள்கைத் திசை வழி தேவை என்பதை அத்வானி வேண்டாவெறுப்புடன் ஒப்புக்கொண் டிருப்பது போலவே தோன்றுகிறது. நாட் டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக் கக்கூடிய விதத்தில் கொள்கை மாற் றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைமை பாஜ கவிற்கோ அல்லது காங்கிரசுக்கோ இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். நாடு தன்னுடைய சமூகப் பொருளா தாரக் கொள்கையின் திசைவழியில் ஒரு புரட்சிகரமான மாற்றை ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகும். நாடு தன்னுடைய வெறிபிடித்த வகுப்பு வாதத்தை உறுதியுடன் நிராகரிப்பதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன் வளமான தன்மையை சமரசமற்ற முறையில் நிலைநிறுத்திப் பாதுகாத்திடும் அதே சமயத்தில், நாட்டின் பெரும் பான்மை மக்களை பசி-பஞ்சம்-பட்டினி யில் தள்ளிவிட்டு, சர்வதேச நிதிமூலதனத் திற்கும், இந்தியாவில் உள்ள பெரிய வர்த் தக நிறுவனங்களுக்கும் சேவகம் செய் திடக்கூடிய வகையில், ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற வேண்டியதும் அவசியமாகும். பொருளாதாரக் கொள்கை களைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடு எதுவும் இல்லை. அவை நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலையே அமல்படுத்திட உறுதி பூண்டவைகளாகும். எனவே, நாட்டில் மக்கள் நலன் காக்கப்பட வேண்டுமா னால், இவர்களுக்கு மாற்றாக உள்ள சக்திக்குத்தான் தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். வீரியத்துடன் ஒரு வளமையான இந் தியாவை உருவாக்கிடக்கூடிய வல்ல மைக்கும், வள ஆதாரங்களுக்கும் நமக்குப் பஞ்சமில்லை. ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியதே இன்றைய தேவையாகும். இதுவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் குறிக் கோளாகும். இக்குறிக்கோளை எய்த வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அவர்கள் மக்களைத் திரட்டி மாபெரும் இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவ்வியக்கங்கள் சிறந்ததோர் இந்தி யாவை உருவாக்கக்கூடிய விதத்தில் மேலும் வலுவாக மாற்றப்பட வேண்டியது அவசியமாகும். (தமிழில்: ச.வீரமணி) |
Subscribe to:
Posts (Atom)