Showing posts with label CPIM. Show all posts
Showing posts with label CPIM. Show all posts

Wednesday, July 18, 2018

“குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு” எதிராக நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை


 குண்டர்கள் கும்பல் கொலை செய்வதற்கு எதிராக
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
புதுதில்லி, ஜூலை 18-
குண்டர்கள் கும்பல் அப்பாவி தலித்துகள் மற்றும் முஸ்லீம்களைக் கொலை செய்து வருவதற்கு எதிராக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமியற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜார்கண்ட் மாநிலத்தில் பாகூர் என்னுமிடத்தில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இத்னைச் செய்தவர்கள் பாஜகவின் யுவ மோர்ச்சா என்னும் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் என்று  அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள். பாஜக அரசாங்கங்கள் தற்போது கடைப்பிடித்துவரும் நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தக் கயவர்களும், அங்குள்ள பாஜக மாநில அரசாங்கத்தால் மிகவும் மென்மையாகவே நடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஸ்வாமி  அக்னிவேஷ் அவர்களுக்கு முறையான மற்றும் போதுமான மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவரைத் தாக்கிய குண்டர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இத்தகைய கும்பல்களின் வன்முறையை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளபோதிலும், ஸ்வாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல் நடந்துள்ளது. குண்டர்களின் கும்பல்கள் கொலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கள், பிரதமர் மற்றும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கீழ்தான் இத்தகைய குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதையும், இத்தகைய வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட தனியார் ராணுவங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நன்கு பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன. இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடும் கயவர்கள், யார் என்று  நன்கு  அடையாளம் காட்டப்பட்ட பின்னரும், எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கப்படுவதானது, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் அளித்துவரும் ஊக்கத்தையும், உதவியையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை என்னும் நாட்டின் சிறப்புப்பண்பினைப் பாதுகாத்திட, கும்பல்கள் வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் கொலைகள் செய்வதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் சட்டம் – ஒழுங்கு பேணப்படுவதை உத்ததரவாதப்படுத்துவது அரசாங்கங்களின் கடமையாகும்என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருப்பதனை நிறைவேற்றக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டத்தொடரிலேயே ஓர் ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.
(ந.நி.)



Wednesday, September 25, 2013

மதவெறிக்கு இடம் தரக்கூடாது:தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் சிபிஎம் அறிக்கை




புதுதில்லியில்திங்களன்று (செப்.23)நடைபெற்றதேசியஒருமைப் பாட்டுக் கவுன்சில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பிர காஷ்காரத் விரிவான குறிப்பு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

அதிகரிக்கும் மதவெறி நிகழ்வுகள்

மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத் தில் சமீபத்தில் மதவெறி சம்பவங்கள் அதிகரித்துள்ள பின்னணியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில் கிஷ்ட்வார், பீகார் மாநிலத்தில் நவாடா மற்றும் பெட்டியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் மிகப்பெரிய அளவில் வன்முறையில் 48 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகிய மதவெறி வன்முறைகள் நடைபெற் றுள்ளன.

கடந்த ஓராண்டில் ராஜஸ்தானி லும், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சி யாக நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சி களை அடுத்து இவை நடந்திருக்கின்றன. சமீபகாலத்தில் வகுப்புவாத நிலை மை மிகவும் மோசமாக மாறிக்கொண்டி ருப்பதற்கு என்ன காரணம்? இவை தற்செயலாக வெடித்த சம்பவங்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஒருசில மதவெறி-அரசியல் சக்திகளால் திட்ட மிட்டு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப் பட்டவைகளேயாகும். மத வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் கடந்த காலங்களில் நடை பெற்றதைப்போலத்தான் இருந்திருக் கின்றன.

அதாவது, இரு மதத்தினரும் கலந்து வாழக்கூடிய பகுதிகளில் மத ஊர் வலங்கள் செல்லும்போது ஆத்திரமூட் டல் சம்பவங்களை உருவாக்குதல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த இளம்பெண்கள் மீது இதர சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல் களை மேற்கொள்ளுதல், மதவெறித் தீயை விசிறிவிடும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூகத்தின ரிடையே பரஸ்பரம் நம்பிக்கையின் மையை உருவாக்குதல், இவற்றின் மூலம் எந்தவொரு சிறு நிகழ்ச்சியையும் தீப் பொறியாகப் பயன்படுத்தி காட்டுத்தீ அள விற்கு மோதலை உருவாக்குதல் - என கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போலத்தான் இருந்திருக்கின்றன.

ஆயி னும், இதில் மிகவும் சங்கடத்தை ஏற் படுத்தும் அம்சம் என்னவெனில், முசாபர் நகரில் நடந்தைப்போல, இத்தகைய கல வரங்கள் கிராமப்புறங்களில் பரப்பப்படு வதுதான். இவ்வாறு நடைபெற்ற அனைத் துக் கலவரங்களின்போதும், வன்முறை யின் கூர்முனைத் தாக்குதல்களை சிறு பான்மை சமூகத்தினர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் கொன்று குவிக்கப்படுகின்றனர், அவர் களது சொத்துக்கள்தான் சூறையாடப் படுகின்றன.மதவெறி சித்தாந்தத்தை ஆரத்தழு விக் கொண்டுள்ள அமைப்புகளும், அரசி யல் கட்சிகளும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி, பதற்றத்தை உருவாக்கி வன் முறை வெறியாட்டத்தைத் தூண்டு வதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

உள்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை 497 மதவெறி நிகழ்வுகள் நாட்டில் நடைபெற் றுள்ளன, இவற்றில் 107 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள், 1,697 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இவ்வாறு மதவெறி நடவடிக்கைகள் விசிறிவிடப்படு வதாகத் தோன்றுகிறது. இவ்வாறு மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பயன் அடைபவர்கள் யார்? என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
அடையாளம் கண்டு தடுத்திடுக!

எனவே, மத வன்முறைச் சம்பவங் களைக் கட்டுப்படுத்திட வேண்டுமா னால், இதனை உருவாக்கும் அரசியல் - மதவெறி சக்திகள் மற்றும் அமைப்புகள் எவை என்பதை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் அவற்றின் நடவடிக்கை கள் மற்றும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத் திடக்கூடிய வகையில் தடுப்பு நடவடிக் கைகளை எடுத்திட வேண்டும். மத வெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்தல், இதர சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களைத் தடை செய்வது சம்பந்தமான சட்டங்களை பிரயோகிக்க வேண்டும்.இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிர்வாகமும், காவல்துறையும் காலத்தே செயல்படுவ தும், வன்முறை நிகழ்கையில் பாரபட்ச மின்றித் தலையிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்களைக் கைது செய்வதும் கூட மிகவும் அவசியமாகும்.வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்டமுன்வடிவு (The Prevention of Communal Violence Bill) மேலும் காலதாமதம் எதுவு மின்றி சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். இச்சட்டம் மதவெறி வன் முறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது வேறுவகை யிலான மோதல்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் தொடர்பாக விரிவுபடுத்தப் படக் கூடாது. மேலும், இச்சட்டம் நிறை வேற்றப்படுகையில், மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைப் பறிப்பதாக இருந்துவிடக் கூடாது, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டதாக இருந்திடல் வேண்டும். சில மாநிலங்களில் தற்போதுள்ள கல்விமுறை மற்றும் பாடப் புத்தகங்கள் மதவெறி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை அடிப்படை யாகக் கொண்டு செயல்பட்டு வருகின் றன. இவற்றையும் பரிசீலனை செய்து, இவற்றில் உள்ள தீமைகளைக் களைய வேண்டியதும் அவசியமாகும்.சமூக ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்கள் பல மதவெறித் தீயை உமிழ்வ தற்குப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கி றோம். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரத் தைத் தடை செய்திட வேண்டும், இத்த கைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப் போருக்கு எதிராக உரிய நடவடிக்கை களை எடுத்திட வேண்டும். இது தொடர் பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு, உரியமுறையில் திருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு மாற்றுக் கருத்துக் கூறுபவர்களை ஒடுக்குவதற்கு துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதவெறி வன்முறைப் பிரச்சனை என்பது நிர்வாக ரீதியான வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச் சனை மட்டுமல்ல என்று பார்க்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமான தாகும். இந்தியாவில், மதவெறி அரசியல் வரலாற்றை ஆராயுங்கால், இது அடிப்ப டையில் ஓர் அரசியல் பிரச்சனையே என்பதை உணரமுடியும். எனவே இது அரசியல் ரீதியாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச்சார் பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றுவது அவசியத்தேவை.

அப் போதுதான் மதவெறி சித்தாந்தத்தையும், அரசியலையும், அதன் ஊற்றுக்கண் மற்றும் மூலவேர் எதுவாக இருந்தபோதி லும், அதனை எதிர்த்து முறியடிப்பது என்பது சாத்தியமாகும். மதநல்லிணக்கம் சம்பந்தமாக மற் றொரு முக்கியமான அம்சமும் உண்டு. அது சிறுபான்மையினர் தொடர்பாக நேர்மையான மற்றும் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது சம்பந்தமானது. வகுப்புவாதம் பயங்கர வாத வன்முறை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

பயங்கரவாதத்தை, அதன் ஊற்றுக்கண் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்த்து முறியடிப்பது அவசியம் என்று சொல்கிற அதே சமயத்தில், தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் இதனுடன் பொருத்திப் பார்க்காது, மிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளை ஞர்கள் வேட்டையாடப்படுவதையே அனுபவம் நமக்குக் காட்டுகிறது. எண் ணற்ற வழக்குகளில் முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டு, பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வழக்குகள் பலவற்றில் இவ்வாறு சிறைப்படுத்தப் பட்ட இளைஞர்கள் கடைசியில் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் பல வழக்குகளில் இவ்வாறு பொய்யான மற்றும் அற்ப சாட்சியங்களை வைத்துக் கொண்டு இளைஞர்களைக் கைது செய்து வழக்கு தொடுத்ததை நீதித்துறை கண்டித்திருக்கிறது. காவல்துறையினர் மற்றும் பாது காப்புத்துறை ஏஜன்சிகள் மத்தியில் காணப்படும் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறை, அவர்களைத் தனிமைப் படுத்துவதாகவும் கோபத்தை ஏற்படுத்தி யும் இருக்கின்றன. பாகுபாடு காட்டப்படும் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவு வதும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங் குவதும் அரசின் பொறுப்பாகும்.
இவ்வாறு நீதித்துறையையே நகைப்பிற்காளாக்கிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசிய மாகும்.

பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் அளவுக்கு மீறி அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்புணர்ச்சி, கூட்டுவன் புணர்ச்சி, இளம் பெண்கள் மீது அமிலம் வீசப்படுதல், குழந்தைகள்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் அதிகரித் திருக்கின்றன. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்ட னைகள் என்பது மிகவும் வருத்தம் தோய்ந்த நிலைமையில் இருப்பது தொடர்கிறது. இத்தகைய குற்றம்புரிவோர் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண் டும் என்கிற உணர்வு ஆட்சியாளர்கள் மத்தியில் போதிய அளவிற்கு இல்லா திருப்பதே கயவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணமாகும். இத்தகைய கயவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட் டத்தை மதிக்காது அதனைத் துஷ்பிர யோகம் செய்கிற காவல்துறையினர் மற் றும் புலனாய்வு ஏஜன்சிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பு சொல்லக்கூடிய விதத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதும் உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். அவை அனைத்தும் அவசர அவசியமாகும்.

தில்லியில் நடைபெற்ற கொடூரமான கூட்டு வன்புணர்வு வழக்கினை அடுத்து, மக்கள் கடுங்கோபத்துடன் கிளர்ந்தெழுந் ததை அடுத்து, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆயினும் இது இன்ன மும் முழுமையாக முறையாக அமல் படுத்தப்படவில்லை. எப்படிப்பார்த் தாலும் இது போதுமானதும் அல்ல. ஏனெனில், இது வர்மா குழு அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் சட்டத் தின் ஷரத்துக்களில் இணைத்துக்கொள் ளவில்லை. உதாரணமாக, கவுரவம் என்ற பெயரில் இளம் தம்பதியர் கொல்லப்படும் கொடூரங்கள் தொடர்கின்றன. இத்தகைய கவுரவக் கொலைகள்புரிவோருக்கு எதி ராக தனிச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டியதும் அவசியத் தேவை யாகும். சில மாநில அரசுகள் இவ்வாறு கொண்டுவர வேண்டியது அவசியம் இல்லை என்று கருதுவதால், இத்தகைய சட்டம் கொண்டுவரப்படாதது துரதிர்ஷ்ட வசமாகும். தங்களுடைய குறுகிய அரசி யல் ஆதாயத்திற்காக படுபிற்போக்குத் தனமான பழைய சமூகப் பழக்க வழக் கங்களுக்கு எதிராக செல்ல அவை விரும்பவில்லை. அனைத்து சமூகத்திலும் உள்ள வகுப்புவாத மற்றும் அடிப்படை சக்திகள் தங்கள் ஆணாதிக்க சிந்தனையைத் (patriarchal values )திணிப்பதற்காக பெண் கள் மீதான கட்டுப்பாடுகளை கட்டாயப் படுத்துகின்றன, அவர்களது உரிமைக ளைத் தராது மீறுகின்றன. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களையும், பெண்கள் துன்புறுத்தப்படுதலையும் மதவெறி அமைப்புகள் தங்கள் மதத்திற்குஎதிரானவை என்பதுபோல் மதவெறிச் சாயம் பூசி, இதர சமூகத்தினருக்கு எதி ராக மதவெறி உணர்வையும், வெறுப்பை யும் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.அரசியலில் மிக உயர் இடத்தில் இருக் கக்கூடிய நபர்கள் மற்றும் தங்களைத் தாங்களே ‘‘கடவுளின் அவதாரங்கள்’’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய போலிச் சாமியார்கள் பெண்க ளைத் துன்புறுத்தத் தங்கள் அதிகாரத் தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு எண்ணற்ற பேர்வழிகள் நாடு முழுதும் காணப்படு கிறார்கள். இவர்கள் புரிந்திடும் குற்றங்கள் மிகவும் மோசமானவை களாகக் கருதப்பட்டு அவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதில் இரக்கம் காட்டக் கூடாது, இரட்டை நிலை பின்பற்றப்படக் கூடாது.
அதேசமயத்தில், வேலைவாய்ப்பு, சம ஊதியம், உத்தரவாதமளிக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு, நிலம் மற்றும் இதர சொத்துக்களில் உரிமைகள் ஆகிய வற்றிலும் சமத்துவமின்மை நீடித்தல் போன்றவை பெண்களை ஆண்களைச் சார்ந்தே வாழ வைத்திருக்கின்றன. எனவே வன் முறைக்கு மிக எளிதாகப் பலியாகி விடுகிறார்கள்.

பொருளாதாரச் சுதந்திரம், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படுதல், மிகவும் அவசியமாகும். இவர்கள்தான் பாலியல் வன்முறைக்கு மிகவும் பலியா கிறார்கள் என்பதால் இவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்படக் கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள் கைகள் வகுக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.பாலியல் வன்முறையில்லாத ஒரு சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்கக் கூடியவிதத்தில் பெண்களுக்கு உரிமை கள் உருவாக்கப்பட வேண்டியது அடிப் படை அவசியமாகும்.

பாலின சமத்துவத் தின் அடிப்படையில், பாலியல் வன் முறையற்ற ஒரு சமூகத்தில் வாழக்கூடிய விதத்தில் பெண்களுக்கு அரசியலமைப் புச் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண் டும். இதனை உத்தரவாதப்படுத்தக் கூடிய விதத்தில் நம் கல்வி முறையும் அனைத்து மட்டங்களிலும் மாற்றப்பட வேண்டும்.

தலித்துகள்/பழங்குடியினர் நலன்கள்

தலித்துகள் மற்றும் பழங்குடியின ருக்கு அவர்களது மக்கள்தொகை விகிதா சாரத்திற்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு இருந் திட வேண்டும். ஆயினும், இது தொடர் பான திட்டக் கமிஷன் வழிகாட்டுதல்கள் வெறும் தாள்களிலேயே இருக்கின்றன. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கிய நிதிகள் அவர்களுக்கு முழுமை யாக செலவு செய்யப்படாமல், காலாவதி யாவது அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவது அனுபவமாக இருக்கின்றன. இவ்வாறு நடைபெறாமல் தடுத்திட, இவ்வாறு துணைத் திட்டங்களின் ஒதுக் கப்படும் தொகைகள் முறையாக அமல் படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத் தக்கூடிய விதத்தில் உரிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய தொரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


Tuesday, September 24, 2013

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த குறிப்பு
புதுதில்லி, செப். 24-
புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிப்பு ஒன்று பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:
1. அதிகரித்துவரும் மதவெறி நிகழ்வுகள்:
மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத்தில் சமீபத்தில் மதவெறி நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ள பின்னணியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்ட்வார், பீகார் மாநிலத்தில் நவாடா மற்றும் பெட்டியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் மிகப்பெரிய அளவில் வன்முறையில் நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆகிய  மதவெறி வன்முறைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஓராண்டில் ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சிகளை அடுத்து இவை நடந்திருக்கின்றன.
சமீபகாலத்தில் வகுப்புவாத நிலைமை மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இவை தற்செயலாக வெடித்த சம்பவங்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஒருசில மதவெறி-அரசியல் சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப் பட்டவைகளேயாகும்.
மத வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதைப்போலத்தான் இருந்திருக்கின்றன. அதாவது, இரு மதத்தினரும் கலந்து வாழக்கூடிய பகுதிகளில் மத ஊர்வலங்கள் செல்லும்போது ஆத்திரமூட்டல் சம்பவங்களை உருவாக்குதல்ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த இளம்பெண்கள் மீது இதர சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளுதல், மதவெறித் தீயை விசிறிவிடும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன்மூலம் சமூகத்தினரிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையை உருவாக்குதல், இவற்றின் மூலம் எந்தவொரு சிறு நிகழ்ச்சியையும் தீப்பொறியாகப் பயன்படுத்தி காட்டுத்தீ அளவிற்கு மோதலை உருவாக்குதல் - என கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போலத்தான் இருந்திருக்கின்றன. ஆயினும், இதில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சம் என்னவெனில், முசாபர்நகரில் நடந்தைப்போல, இத்தகைய கலவரங்கள் கிராமப்புறங்களில் பரப்பப்படுவதுதான். இவ்வாறு நடைபெற்ற அனைத்துக் கலவரங்களின்போதும், வன்முறையின் கூர்முனைத் தாக்குதல்களை சிறுபான்மை சமூகத்தினர்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் கொன்று குவிக்கப்படுகின்றனர், அவர்களது சொத்துக்கள்தான் சூறையாடப்படுகின்றன.
மதவெறி சித்தாந்தத்தை  ஆரத்தழுவிக் கொண்டுள்ள அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திபதற்றத்தை உருவாக்கி வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்திக்  கொள்கின்றன.  
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங் களின்படி, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை   497 மதவெறி நிகழ்வுகள் நாட்டில் நடைபெற் றுள்ளன, இவற்றில் 107 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,697 பேர் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.
வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இவ்வாறு மதவெறி நடவடிக்கைகள் விசிறிவிடப்படுவதாகத் தோன்றுகிறது.   இவ்வாறு மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பயன் அடைபவர்கள் யார் என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
2. மதவெறி நடவடிக்கைகளைச் சமாளித்திட நடவடிக்கைகள் எடுத்திடுக:
எனவே, மத வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், இதனை உருவாக்கும் அரசியல் - மதவெறி சக்திகள்   மற்றும் அமைப்புகள் எவை என்பதை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்திடக்கூடிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்தல், இதர சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களைத் தடை செய்வது சம்பந்தமான சட்டங்களை பிரயோகிக்க வேண்டும்.
இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்  நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிர்வாகமும், காவல்துறையும் காலத்தே செயல்படுவதும், வன்முறை நிகழ்கையில் பாரபட்சமின்றித் தலையிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்களைக் கைது செய்வதும் கூட மிகவும் அவசியமாகும்.
வகுப்புவாத வன்முறைத் தடைச் சட்டமுன்வடிவு (கூhந ஞசநஎநவேiடிn டிக ஊடிஅஅரயேட ஏiடிடநnஉந க்ஷடைட) மேலும் காலதாமதம் எதுவுமின்றி சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். இச்சட்டம் மதவெறி வன்முறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது வேறுவகையிலான மோதல்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் தொடர்வாக விரிவுபடுத்தப்படக் கூடாது. மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்படுகையில், மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பொறுப்புகளைப் பறிப்பதாக இருந்துவிடாது, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திடல் வேண்டும். 
சில மாநிலங்களில் தற்போதுள்ள கல்விமுறை மற்றும் பாடப் புத்தகங்கள் மதவெறி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றையும் பரிசீலனை செய்து, இவற்றில் உள்ள தீமைகளைக் களைய வேண்டியதும் அவசியமாகும்.
சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் பல மதவெறித் தீயை உமிழ்வதற்குப் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறோம். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரத்தைத் தடை செய்திட வேண்டும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்திடு வேண்டும். இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு, உரியமுறையில் திருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு மாற்றுக்கருத்துக் கூறுபவர்களை ஒடுக்குவதற்கு துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதவெறி வன்முறைப் பிரச்சனை என்பது நிர்வாகரீதியான வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல என்று பார்க்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில், மதவெறி அரசியல் வரலாற்றை ஆராயுங்கால், இது அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்சனையே என்பதை உணரமுடியும். எனவே இது அரசியல் ரீதியாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியுடன் பின்பற்றுவது அவசியத்தேவை. அப்போதுதான் மதவெறி சித்தாந்தத்தையும், அரசியலையும், அதன் ஊற்றுக்கண் மற்றும் மூலவேர் எதுவாக இருந்தபோதிலும், அதனை எதிர்த்து முறியடிப்பது என்பது சாத்தியமாகும்.
மதநல்லிணக்கம் சம்பந்தமாக மற்றொரு முக்கியமான அம்சமும் உண்டு. அது சிறுபான்மையிர் தொடர்பாக நேர்மையான மற்றும் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது சம்பந்தமானது. வகுப்புவாதம் பயங்கரவாத வன்முறை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கிறது. பயங்கரவாதத்தை, அதன் ஊற்றுக்கண் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்த்து முறியடிப்பது அவசியம் என்று சொல்கிற அதே சமயத்தில், தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் இதனுடன் பொருத்திப்பார்க்காதுமிகவும் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் வேட்டையாடப்படுவதையே அனுபவம் நமக்குக் காட்டுகிறது. எண்ணற்ற வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுநீண்ட காலத்திற்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்குகள் பலவற்றில் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட இளைஞர்கள்  கடைசியில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  மேலும் பல வழக்குகளில் இவ்வாறு பொய்யான மற்றும் அற்ப சாட்சியங்களை வைத்துக்கொண்டு இளைஞர்களைக் கைது செய்து வழக்கு தொடுத்ததை நீதித்துறை கண்டித்திருக்கிறது.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் மத்தியில் காணப்படும் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறை சமூகத்தினர் மத்தியில் மனமுரிவையும் (யடநையேவiடிn), கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
பாகுபாடு காட்டப்படும் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும் அரசின் பொறுப்பாகும். இவ்வாறு நீதித்துறையையே நகைப்பிற்காளாக்கிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
3. பெண்கள் பாதுகாப்பு:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல்கள் அளவுக்கு மீறி அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்புணர்ச்சி, கூட்டுவன்புணர்ச்சி, இளம் பெண்கள் மீது அமிலம் (acid) வீசப்படுதல், குழந்தைகள்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல்  அதிகரித்திருக்கின்றன. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனைகள் என்பது மிகவும் வருத்தம் தோய்ந்த நிலைமையில் இருப்பது தொடர்கிறது. இத்தகைய குற்றம்புரிவோர் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற உணர்வு ஆட்சியாளர்கள் மத்தியில் போதிய அளவிற்கு இல்லாதிருப்பதே இத்தகைய கயவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதற்குக் காரணமாகும். இத்தகைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  சட்டத்தை மதிக்காது அதனைத் துஷ்பிரயோகம் செய்கிற காவல்துறையினர் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இத்தகைய வழக்குகளை விரைந்து தீர்ப்பு சொல்லக்கூடிய விதத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அவை அனைத்தும் அவசர அவசியமாகும்.
தில்லியில் நடைபெற்ற கொடூரமான கூட்டு வன்புணர்வு வழக்கினை அடுத்து, மக்கள் கடுங்கோபத்துடன் கிளர்ந்தெழுந்ததை அடுத்து, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆயினும் இது இன்னமும் முழுமையாக முறையாக அமல் படுத்தப்படவில்லை. எப்படிப்பார்த்தாலும் இது போதுமானதும் அல்ல. ஏனெனில்இது வர்மா குழு அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் சட்டத்தின் ஷரத்துக்களில் இணைத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, கவுரவம் என்ற பெயரில் இளைம் தம்பதியர் கொல்லப்படும் கொடூரங்கள் தொடர்கின்றன.  இத்தகைய கவுரவக் கொலைகள்புரிவோருக்கு எதிராக தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டியதும் அவசியத் தேவையாகும். சில மாநில அரசுகள் இவ்வாறு கொண்டுவர வேண்டியது அவசியம் இல்லை என்று கருதுவதால், இத்தகைய சட்டம் கொண்டுவரப்படாதது துரதிர்ஷ்டவசமாகும். தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக படுபிற்போக்குத்தனமான பழைய சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக செல்ல அவை விரும்பவில்லை.
அனைத்து சமூகத்திலும் உள்ள வகுப்புவாத மற்றும் அடிப்படை சக்திகள் தங்கள் ஆணாதிக்க சிந்தனையைத் (யீயவசயைசஉhயட எயடரநள ) திணிப்பதற்காக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்துகின்றன, அவர்களது உரிமைகளைத் தராது மீறுகின்றன. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களையும், பெண்கள் துன்புறுத்தப்படுதலையும் மதவெறி அமைப்புகள் தங்கள் தங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதுபோல் மதவெறிச் சாயம் பூசிஇதர சமூகத்தினருக்கு எதிராக மதவெறி உணர்வையும், வெறுப்பையும் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
அரசியலில் மிக உயர் இடத்தில் இருக்கக்கூடிய நபர்கள் மற்றும் தங்களைத்தாங்களே ‘‘கடவுளின் அவதாரங்கள்’’ ("படின அநn") என்று சொல்லிக்கொள்ளக்கூடிய சில பேர்வழிகள் பெண்களைத் துன்புறுத்தத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு எண்ணற்ற பேர்வழிகள் நாடு முழுதும் காணப்படுகிறார்கள். இவர்கள் புரிந்திடும் குற்றங்கள் மிகவும் மோசமானவைகளாகக் கருதப்பட்டு அவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதில் இரக்கம் காட்டக்கூடாது, இரட்டை நிலை பின்பற்றப்படக் கூடாது.
அதேசமயத்தில், வேலைவாய்ப்பு, சம ஊதியம், உத்தரவாதமளிக்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு, நிலம் மற்றும் இதர சொத்துக்களில் உரிமைகள் ஆகியவற்றிலும் சமத்துவமின்மை நீடித்தல் பெண்களை ஆண்களைச் சார்ந்தே வாழ வைத்திருக்கின்றன. எனவே வன்முறைக்கு மிக எளிதாகப் பலியாகிவிடுகிறார்கள்.  பொருளாதாரச் சுதந்திரம், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படுதல், மிகவும் அவசியமாகும். இவர்கள்தான் பாலியல் வன்முறைக்கு மிகவும் பலியாகிறார்கள் என்பதால் இவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கப்படக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
பாலியல் வன்முறையில்லாத ஒரு சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்கக்கூடியவிதத்தில் பெண்களுக்கு உரிமைகள் உருவாக்கப்பட வேண்டியது அடிப்படை அவசியமாகும். பாலின சமத்துவத்தின் அடிப்படையில்பாலியல் வன்முறையற்ற ஒரு சமூகத்தில் வாழக்கூடியவிதத்தில் பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் நம் கல்வி முறையும் அனைத்து மட்டங்களிலும் மாற்றப்பட வேண்டும்.
4. தலித்துகள்/பழங்குடியினர் நலன்கள்:
தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களது மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திட வேண்டும். ஆயினும், இது தொடர்பான திட்டக் கமிஷன் வழிகாட்டுதல்கள் வெறும் தாள்களிலேயே இருக்கின்றன. பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கிய நிதிகள் அவர்களுக்கு முழுமையாக செலவு செய்யப்படாது, காலாவாதியாவது அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவது அனுபவமாக இருக்கின்றன.
இவ்வாறு நடைபெறாமல் தடுத்திட, இவ்வாறு துணைத் திட்டங்களின் ஒதுக்கப்படும் தொகைகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் உரிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  இத்தகையதொரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுவந்து நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



     

Saturday, February 23, 2013

மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் பிப்ரவரி 24 முதல் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் நாட்டின் பல முனைகளிலிருந்தும் தொடங்கவிருக்கிறது. அன்றையதினம் கன்னியாகுமரியிலிருந்து தில்லி நோக்கி முதல் பயணக்குழு புறப்படுகிறது. மற்ற மூன்று பயணக் குழுக்கள் கொல்கத்தா, அமிர்தசரஸ் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து வரும் நாட்களில் புறப்பட இருக்கின்றன. குவாஹாத்தி, பரலேகமுண்டி, சிம்லா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும் பயணக் குழுக்கள் புறப்பட்டு, இப்பயணக் குழுக் களுடன் இணைந்து கொள்கின்றன. இவையன்றி பல மாநிலங்களில் துணைப் பயணக்குழுக்களும் தொடங்கப்பட்டு, பிரதானப் பயணக்குழுக்கள் தங்கள் மாநிலங்களுக்கு வரும்போது, அவற்றுடன் இணைந்து கொள்கின்றன. நான்கு பிரதானக் குழுக்களும் சங்கமிக்கும் நாளான மார்ச் 19 அன்று தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெற விருக்கிறது.
ஏன் இந்தப் பயணக் குழுக்கள்?
எதற்காக இந்தப் பயணக்குழுக்கள்?  நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஆழமாகியுள்ளது; விரிவடைந்துள்ளது. உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளவர்கள் இந்தியாவிலும் சிலர் உள்ளனர். சிலரைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர். உலகில் ஊட்டச் சத்தின்றி வாடும் குழந்தைகளை மிகப்பெரும் எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடாக மிகவும் வெட்கக் கேடான முறையில் இந்தியா மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கிய பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை யில்லாதோர் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. சமீப காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி (jobless growth) மட்டுமே காணப்படுகிறது. இவை அனைத்துமே திவாலாகிப் போன முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கையின், அதிலும் குறிப்பாக கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கையின், விளைவேயாகும். நாட்டில் பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பன் னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஊகவர்த்தகர்கள் மற்றும் மஃபியா கும்பல்கள் அபரிமிதமானமுறையில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாட்டில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய இத்தகு சக்திகள், நாட்டின் செல்வாதாரங்களை முழுமையாகச் சூறையாடுவதற்கு உதவக்கூடிய விதத்திலேயே ஆட்சியாளர்களின் கொள்கைகள் வடிவமைக் கப்பட்டுள்ளன.
இவர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தின் மீதான வரிகள் குறைக் கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரை இருந்த வரிவிதிப்புகளும்கூட இவர்கள் கட்டுவதைத் தவிர்க்கக் கூடிய விதத்திலேயே புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் இவர் களுக்கு உதவிவருகின்றன. அதேசமயத்தில் அரசாங்கம் விலைவாசியை உயர்த்தக்கூடிய விதத்திலும், பண வீக்கத்தை அதிகரிக்கக்கூடிய விதத் திலும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. பெட்ரோல், டீசல், இரசாயன உரங்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிச் சுருக்கியதன் மூலம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசிகளின் காரணமாக மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுமே நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கி, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தூக்கிப் பிடிப்பவைகளேயாகும். அது, மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமானாலும் சரி அல்லது பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களானாலும் சரி. தனியார்மயம், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நாட்டின் செல்வாதாரங்களை ஒப்படைத்தல், அந்நிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு விசுவாசமாக இருத்தல் என எந்த விஷயத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் கிடையாது. அரசின் மிக உயர்ந்த இடங்களிலும், பொது நிறுவனங்களிலும் காணப்படும் லஞ்ச ஊழல்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரிக்க முடியாத அங்கங்களேயாகும். இவைகள் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தின் இடையேயுள்ள நெருக்கமான கள்ளப்பிணைப்பின் வெளிப்பாடேயாகும். இத்தகைய லஞ்ச ஊழல் மூலதனக் குவியலின் ஒரு கருவியாகும். நவீன தாராளமயக் கொள்கைகளை மாற்றாமல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது முடியாது. காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளால் ஊழலைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாது.
ஏனெனில் அவையும் ஊழல் என்கிற நெருக்கமான பிணைப்புடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்தவைகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளால் மட்டுமே இத்தகைய ஊழல் என்னும் தொற்றுநோயினால் பாதிக்கப்படாமல் அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்க முடியும். இவ்வாறு மக்களைச் சூறையாடக் கூடிய முதலாளித்துவப் பாதையானது சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அதன் மூலமாக நாட்டில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்திருக் கிறது. பிராந்திய வெறி மற்றும் இன அடையாள அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாத சக்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரி சக்திகள் தங்களு டைய பிற்போக்குத்தன மான அரசியலுக்காக இத்தகைய சக்திகள் அனைத்தையும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சாரப் பயணமானது மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுத்துச் செல்லும். நாட்டிலுள்ள கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறை சாராத் தொழிலாளர்களின், பெண்களின், தலித்துகளின், பழங் குடியினர்களின், சிறுபான்மையினர்களின்- பிரச்சனைகளையும் கவலைகளையும் எடுத்துச் சொல்லும். பிரச்சாரப் பயணமானது, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும்.
பயணக்குழுவின் குறிக்கோள்கள்
பயணக்குழுவானது ஆறு முக்கிய அம்சங்களின் மீது மக்கள் கவனத்தை ஈர்க்கும்: (1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை: உபரியாக உள்ள நிலங்களை நில மற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
(2)விலைவாசியைக் கட்டுப்படுத்துக;  உணவு உரிமையை வழங்கிடுக: அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்துக; மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல்/வறு மைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்துசெய்; உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடுக.
(3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை: கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதை நிறுத்திடுக; கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப் படுத்திடுக; கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்திடுக; சுகாதாரத்துறையில் பொதுச் சேவைகளை வலுப்படுத்திடுக; தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடுக.
(4) வேலை உரிமை: வேலைவாய்ப்பு களை அதிகரிப்பதை உத்தரவாதப் படுத்தும் வகையில் பொது முத லீட்டை அதிகரித்திடுக; அரசு நிறுவ னங்களில் வேலைக்கு ஆள் எடுப்ப தற்காகத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள்க; ஒரு காலவரையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடுக; குறிப் பாக தலித்/பழங்குடியினர்/இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் காலி யிடங் களை நிரப்பிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட் களின் எண்ணிக் கையை அதிகரித் திடுக; அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப் பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடுக; நகர்ப்புறங்களில் உள் ளோருக்கும் வேலை நாட்களை உத்தர வாதப்படுத்தக் கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடுக.
5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்துக: பெண்களுக்கு எதிரான வன் முறைக்குக் கடிவாளமிடுக; நாடாளு மன்றம்/சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடுக; தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக; பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடுக; முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடுக.
(6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக: புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்க ளுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுக; வெளிநாட்டு வங்கி களில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுக; இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டிடுக; லஞ்ச ஊழல் பேர்வழிகளை சிறைக்கு அனுப்புக;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு கட்சி என்ற முறையில், நாடு தழு விய அளவில் இத்தகைய பயணத்தை நடத்துவது இதுவே முதல்முறை. 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்தபடி கட்சியின் சுயேச்சையான பங்கினையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்திட வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, இத்தகைய பிரம்மாண்டமான முயற்சியில் கட்சி இறங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் மாபெரும் நடவடிக்கையாக மத்தியத் தொழிற் சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாட்கள் வேலைநிறுத்தத்தினை அடுத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இடது சாரிக்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் மிகவும் விரிவானமுறையில் நடத்தப்பட்ட மக்கள் கையெழுத்து இயக்கத்தை அடுத்து இந்த பேரியக்கம் வருகிறது. இப் பிரச்சாரத்தின் போது ஐந்து கோடிக்கும் மேலான மக்களிடம் வாங்கிய கையெழுத் துக்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.
உண்மையான மாற்று
மாற்றுக் கொள்கைக்கான பயணம் என்பது வரவிருக்கும் காலங்களில் நாம் நடத்த விருக்கும் பிரம்மாண்டமான இயக்கங்களுக்கும், அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் முன்னோடியாகும். தற்போதைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஓர் உண்மையான மாற்றை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் தந்திட முடியும் என்கிற செய்தியை இப்பயணம் மக்களுக்குத் தெரிவித்திடும். அகில இந்திய பிரச்சாரப் பயணம், விவசாயிகளும் பழங்குடியினரும் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்திய நிலங்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும்,  நியாயமான ஊதியத்திற்காக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், ஒப்பந்த முறைக்கு எதிராக முறைசாராத் தொழிலாளர்களும் போராடிக் கொண்டிருக்கிற பகுதிகள் வழியாக இந்தப்பயணம் செல்லும். கல்வி வணிகமயமாவதற்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளுக்காகவும் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பகுதிகளையும் தொட்டுச்செல்லும். பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் சம உரிமைகள் கோரியும் பெண்கள் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழியாக,  சமூக நீதி கோரி தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழியாக, வேலையின்மைக்கு எதிராக வாலிபர்களின் இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழியாக இந்தப் பயணம் கம்பீரமாக செல்லும். போராட்டக்களத்தில் உள்ள அனைவருக்கும், மாற்றுக் கொள்கைக்கான இந்தப் பய ணம் ஓர் உந்துசக்தியாகத் திகழும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் பக்கம் நிற்கிறது என்கிற செய்தியை இப்பயணம் அவர்களுக்கு அளிக்கும்;  அத்துடன் மாற்றுக் கொள்கைக்காகப் போராட முன்வருக என்றும் அவர்களை அறைகூவி அழைத்திடும்.
தமிழில்: ச.வீரமணி