Friday, January 27, 2012

உரிமைகளுக்காகப் போராடுவோம்!



பாரதம் எனப்படும் இந்தியா தன்னு டைய 63வது குடியரசு தினத்தை நிறைவு செய்திருக்கிறது. இதேபோன்றதொரு தினத் தன்று ஈராண்டுகளுக்கு முன்பு, குடியரசு தன் னுடைய அறுபதாண்டுகளை நிறைவு செய்த சமயத்தில், இந்தியா உட்பட பல புராதன நாகரிக சமுதாயங்களில் கருதப்படுவதைப் போல, இது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிறந்த தோர் இந்தியாவிற்காக ஏங்கிக் கொண்டிருப் பதையும் தெரிவித்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்களுக்கு, கடந்த ஈராண்டு காலம் என்பது அதற்கு முன்பிருந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக மட்டுமல்ல, அதைவிட மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைமையே ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து ஏறிவருவது, மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரங்களைக் கடுமையாக அரித்துத் தின்று கொண்டிருக் கிறது. தொடர்ந்து விரிவாகி வரும் பொரு ளாதார சமத்துவமின்மை மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. நாட்டில் பணக்காரர்களின் வாழ்வில் ஏற் பட்டுள்ள வளத்திற்கும், ஏழைகளின் வாழ் வில் ஏற்பட்டுள்ள வளமின்மைக்கும் இடையேயான இடைவெளி என்பது மேலும் விரிவடைந்து ஆழமாகி இருக்கிறது.

நம் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை யில் வளர்ந்து வரும் அவலங்கள் குறித்து தொடர்ந்து விளக்கி வந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர் கூட, ஊட்டச்சத்துக் குறைவு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடும் சமயத்தில், இது ஒரு ‘‘தேசிய அவமானம்’’ என்று குறிப்பிட்டு, நாட்டு மக்க ளின் சுகாதாரமற்ற நிலையினை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும், இந்நிலை யினை மாற்றிட அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுத்திட வில்லை. அதுமட்டுமல்ல, இது தொடர்பாக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, இந் நிலை, தொடர அனுமதித்திருப்பது அனைத் தையும்விட மோசமான அம்சமாகும். சுகாதா ரம் மற்றும் கல்வி என்பது சாமானிய மக்க ளின் எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக் கிறது. அரசாங்கம் சுகாதாரத்திற்காக ஒதுக் கிடும் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறை வாக இருக்கும் நிலை தொடர்கிறது. புற்றீசல் போல் முளைத்துக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு மட்டும் சேவகம் செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கல்வியும் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டு வணிகமயமாகி விட்டது. அரசு ஆரம்பப் பள்ளிகள் பெருமள வில் மூடப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கல்விக் காக அரசு நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்குவதாக ஒப்புக் கொண்டிருந்தபோதிலும், நடைமுறையில் அதில் பாதியளவுகூட இதுவரை ஒதுக்கிட வில்லை. நாட்டில் ஆறு வயதுக்கும் பதி னான்கு வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என் கிற முறையில் நாடாளுமன்றத்தில் அரசிய லமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, கல்வி உரிமையை, நிறைவேற்றி இருந்த போதிலும், இதுதான் இன்றைய எதார்த்த நிலையாகும். அரசாங்கம் கல்விக்காக செலவு செய்வதை அதிகரிப்பதன் மூலம் கல்வி உரிமை அளிப்பதை உத்தரவாதம் செய் திருக்க வேண்டும். மாறாக, அரசாங்கம் நம் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளம் தலைமுறையினருக்கு தான் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் நழுவிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கல்விக்கு நிதி ஒதுக்குவதற்குப் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு தான் அளித்திட்ட உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் துரோகம் இழைத்துக் கொண்டி ருப்பதோடு, பழியை மாநில அரசுகளின் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் அறுகிப் போயுள்ள நிலையில், தேவையான நிதியை சேகரிக்க முடியாமல் இப்பொறுப்பினை நிறைவேற்ற முடியாமல் இயற்கையாகவே திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, அரசாங்கம் அளித்திட்ட மற்ற உரிமைகளைப் போலவே, இந்த உரிமையும் தாளில் மட்டுமே தொடர்ந்து நீடிக்கிறது.

நாட்டில் உள்ள குழந்தைகள் அனைத் தையும் பள்ளிகளில் சேர்க்க வேண்டு மானால் எவ்வளவு செலவாகும்? கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (சூஊநுசுகூ), இந்த இலக்கை எட்ட ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று மதிப்பிட்டிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகள் என்பது புதிய பள்ளிகளுக் கான கட்டிடங்கள் கட்டுவதற்கும், லட்சக் கணக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கும், மதிய உணவு மற்றும் பாடப் புத்தகங்கள் முதலானவை அளிப்பதற்கும் தேவைப்படும் கால அளவாகும். மொத்தத்தில் ஐந்தாண்டு களுக்கும் இத்தொகை என்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். அதாவது நம் நாட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையடிக்கப்பட்ட தொகையைவிட இத்தொகையானது ஆயிரம் கோடி ரூபாய் குறைவானதாகும்.

அதேபோன்று, நம் நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியும் ஏட்டளவிலேயே இருக் கிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதத்திற்கு 3 ரூபாய் விலையில் 35 கிலோ கிராம் உணவுதானியங்கள் அளிக்க இருப்ப தாக அரசின் திட்டம் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வறுமைக்கோட் டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடும் பார்க்காது, அனைத்துக் குடும்பத்தினருக்கும் 2 ரூபாய் விலையில் அளித்திட வேண்டும் என்று கோருகிறது. இதற்கு அரசாங்கத்திற்கு ஆண் டொன்றுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் கூடுத லாக செலவினமாகும். இதுவும்கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் அடிக் கப்பட்ட கொள்ளையுடன் ஒப்பிடுகையில் அதில் பாதிதான்.

மக்களுக்கு அரசு தன் உறுதிமொழியை நிறைவேற்றிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் நாட்டில் போதிய வளங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. மாறாக, நாட்டின் வளங்கள் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக மிகவும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக் கின்றன. நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மெகா ஊழல்களைத் தடுத்து நிறுத்தி யிருந்தாலேயே நாட்டு மக்களுக்குத் தேவை யான வசதிகளைச் செய்து தந்திருக்க முடி யும். அவர்களின் ஊட்டச்சத்துக் குறை வினைப் போக்கி இருக்க முடியும், தேவை யான கல்வியை அளித்திருக்க முடியும், இளைஞர்களை போதுமான அளவிற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும், சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றளவும் நாட்டின் சாபக்கேடாக இருந்து வருகிற பசி, பஞ்சம், பட்டினியை விரட்டி அடித்திருக்க முடியும்.

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் உயர்மட்ட அளவில் நடந்துவரும் ஊழலை ஒழித்துக்கட்டும் வகையில் வலுவான வகையில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டங்களைக் கொண்டுவர நாடாளுமன் றத்தை அனுமதித்திட மறுத்து வருவது தொடர்கிறது. இவ்வாறாக அரசாங்கம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும் உறுதிமொழி களை நிறைவேற்ற மறுப்பதோடு மட்டுமல் லாமல், நம் நாட்டின் செல்வங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலம் கார்ப்ப ரேட்டுகள் அதிகபட்ச லாபம் என்ற பெயரில் கொள்ளையடித்துச் செல்லவும் வசதி செய்து கொடுத்திருக்கிறது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாகக் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளில், மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விதத் தில் தீவிரமானமுறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி களை நிச்சயமாக நிறைவேற்றிட முடியாது. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தடவை நாம், ஆட்சியாளர்கள் பணக்காரர் களுக்கு அளித்து வரும் வரிச்சலுகை களைக் கைவிட்டு அத்தொகைகளை பொது முதலீடுகளில், குறிப்பாக விவசாயத் துறையில், ஈடுபடுத்தினால், தற்போது நாட்டு மக்கள் அனுபவித்து வரும் சொல்லொண் ணாத் துன்பதுயரங்களையும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்திட முடியும் என்று குறிப்பிட்டு வந் திருக்கிறோம். மேலும் நாட்டில் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்தி, நம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் இது இட்டுச் செல்லும்.

இவ்வாறு நாம் கூறுவதால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றோ அல்லது முன்னேறிடவில்லை என்றோ பொருளல்ல. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தால் ஏற்பட்ட பயன்கள் நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு மட்டுமே சென்றடைந்துள்ளன. மீதமுள்ள கோடிக் கணக்கான மக்களை துன்ப துயரங்களில் தள்ளியுள்ளன. இத்தகைய அரசின் ஒரு சார்புத் தன்மை சரிசெய்யப்பட்டாக வேண் டும். இதனை, ஆட்சியாளர்கள் தங்கள் பொரு ளாதாரக் கொள்கைகளை மக்கள் சார்பான தாக மாற்றக்கூடிய விதத்தில், வலுவான மக்கள் இயக்கங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே, செய்திட முடியும்.

எனவே, 63ஆவது குடியரசு தினம் நாட்டுப்பற்று மிக்க இந்தியர் அனைவரையும், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய வகையில் மக்களின் உரிமைகளைப் பாது காத்திடக்கூடிய வகையில் ஆட்சியாளர் களின் இத்தகைய மோசமான கொள்கை களுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட முன்வரவேண்டும் என்று அறை கூவி அழைக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

No comments: