Wednesday, January 2, 2013

நிதித்துறை தாராளமயத்தின் ஆபத்து



பிரகாஷ் காரத்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட் டிருப்பது ஆட்சியாளர்கள் தாங்கள் மேற் கொண்டிருந்த கொள்கைகளிலிருந்து வில கிச் செல்வதையே குறிக்கிறது. இந்திரா காந்தி அரசாங்கம் செய்ததை மன்மோகன் சிங் அர சாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்திருக் கிறது. வங்கி தேசியமயமாக்கல் சட்டம் 1969இல் நாட்டில் தனியார் வசம் இருந்த பெரும் வங்கிகள் அனைத்தையும் தேசியமய மாக்கியது. இவ்வங்கிகளில் பெரும்பாலா னவை அன்றையதினம் பெரும் தொழில் அதி பர்களின் கைகளில் இருந்தவை. தற்போது 2012இல் வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றியிருப்பதன் மூலம் மீண்டும் வங்கித்துறையில் கார்ப்பரேட் முதலாளிகள் நுழைய வழிவகுத்துத்தரப் பட் டிருக்கிறது. இவ்வாறு சக்கரம் முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமானது 2005லிருந்தே பல முறை முயற்சிகள் மேற் கொண்டு, தற்போது இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கையை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. 

ஐ.மு.கூட்டணி அரசாங் கம் முதன்முறையாக இதனைக் கொண்டுவர முயற்சித்தபோது, அதனால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் அப்போது இடது சாரிக் கட்சிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தன. வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன் வடிவு இரு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, இந்தச் சட்டமுன்வடிவின் தொடக்கத்தில் வரை யறுத்திருந்த வரிகளைப் பார்த்தோமானால், இவற்றின் பங்குதாரர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இருந்த வாக்கு உரிமைகள் மீது இருந்து வந்த 10 விழுக்காடு உயர்மட்ட உச்சவரம்பை, ரத்து செய்திட முன்வந்திருந்தது. 2004 ஜன வரியில் ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முத லீட்டை 75 விழுக்காடு வரை அனுமதித்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதனை நிறைவேற்ற வேண்டுமானால், இவ்வாறு திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும். அவர்கள் அளித்திருந்த உறுதிமொழியை மன் மோகன் சிங் தற்போது மீளவும் உறுதி செய் திருக்கிறார். நடைமுறையில் உள்ள சட்ட மானது 10 விழுக்காடு மட்டுமே வாக்கு உரி மைகளை அளிப்பதால், 74 விழுக்காடு முத லீடு செய்திடும் அந்நிய வங்கிகளுக்கு வங்கி களைக் கபளீகரம் செய்திட அது தடையாக இருந்தது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கி களை அந்நிய வங்கிகள் விழுங்கிட வகை செய்திடும் விதத்தில் வாக்களிப்பதில் இருந்த உயர்மட்ட உச்சவரம்பை இச்சட்டத் திருத்தம் நீக்கி விட்டது. தனியார் வங்கிகள் பல மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அந் நிய மூலதனம் இவ்வங்கிகளில் முதலீடு செய் யப்படுமானால் இவை, தங்களைப் புதுப்பித் துக்கொள்ள உதவிடும் என்றும் அரசு வாதிட லாம். அந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் இதனை ஆட்சேபித்ததோடு, அவ்வாறு பல வீனமாகவுள்ள தனியார் வங்கிகளை அரசு அடையாளங்காட்ட வேண்டும் என்றும், அவற்றைப் பொதுத்துறை வங்கிகள் கையகப் படுத்திட ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தன. 2009இல் 14ஆவது மக்களவை கலைக் கப்பட்டு விட்டதால், 2005இல் கொண்டுவரப் பட்ட வங்கி முறைப்படுத்தல் (திருத்தச்) சட்ட முன்வடிவு காலாவதியாகிவிட்டது. அரசாங்கம் மீண்டும் 2011இல் 15ஆவது மக்களவையில் இச்சட்டமுன்வடிவை அறி முகப்படுத்தியது.
பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் யஷ்வந்த் சின்கா தலைமையில் உள்ள நிதித்துறை சார்பான நாடாளுமன்ற நிலைக் குழு பங்குதாரர்கள் வாக்களிக்கும் உரிமை யின் உச்சவரம்பை, முழுமையாக நீக்குவதற் குப் பதிலாக, தற்போதுள்ள 10 விழுக்காட்டி லிருந்து 26 விழுக்காடாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. அரசாங்கமும் அந் தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வெளி நாட்டு வங்கிகளும், வெளி நாட்டு நிதித்துறை நிறுவனங்களும் இவ்வா றான 26 விழுக்காடு வாக்கு உரிமையைப் பயன்படுத்தியும், மேலும் பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்தும் நம் நாட்டில் உள்ள வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களை யும் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திட முடியும். நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன் வடிவின் மற்றொரு அம்சம், தனியார் துறை யில் புதிதாக வங்கிகளை அமைத்துக்கொள்ள இது வழிவகை செய்கிறது. அத்தகைய வங்கி களுக்கு உரிமங்கள் அளித்திடவும் அவற்றை முறைப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கார்ப்ப ரேட் முதலாளிகள் இவ்வாறு வங்கிகள் தொடங்கிட எவ்விதத் தடையும் கிடையாது. 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்படு வதற்கு முன்பு, நாட்டிலிருந்து தனியார் வங்கி களில் பெரும்பாலானவை தொழில் நிறு வனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத் திருந்தன. யுனைடெட் கமர்சியல் வங்கி, பிர்லா நிறுவனங்களுடனும், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், தாபர் கம்பெனிகளு டனும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா டாடாக்களுடனும் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தன. 

இவ்வாறு தொழில் அதிபர்களின் கட்டுப் பாடுகளில் இருந்த வங்கிகள், இவ்வங்கி களில் பொது மக்களால் சேமிக்கப்பட்ட சேமிப்புத்தொகைகளை தொழில் அதிபர் களின் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத் திக் கொண்டன. வங்கிகளிலிருந்து கடன் உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் என்பவை விவசாயிகளுக்கும், சிறிய நிறுவனத் தொழில் முனைவோருக்கும் முற்றிலுமாக இல்லாமல் இருந்தன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் முக் கிய குறிக்கோள்களில் ஒன்று, பெரும் முத லாளிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே இருந்த கள்ளப்பிணைப்பை உடைத்தெறிவது என்பதாகும். ஏனெனில் இத்தகைய இவர் களின் கள்ளப்பிணைப்பானது நாட்டில் பெரும் துறைகளாக விளங்கிவந்த விவசாயத் துறை மற்றும் சிறிய/நடுத்தரத் தொழில்நிறு வனங்களுக்கு கடன் உதவிகள் செய்வது என்பதை முற்றிலுமாக விலக்கி வைத் திருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட பின்னர்தான், பொதுத் துறை வங்கிகள் தங்கள் வங்கி வலைப்பின்னலை விரிவானவை களாக வளர்த்தெடுத்தன.

விவசாயத்துறைக் கும் கடன் உதவி மேற்கொண்டன. முன் னுரிமை அடிப்படையில் பல துறைகளுக்கு நிதி உதவிகள் செய்தன. பொதுத்துறை வங்கி கள் தற்சமயம் 65 ஆயிரம் கிளைகளைக் கொண்டிருக்கின்றன. 1991இல் மொத்தம் இருந்த வங்கிக் கிளைகளில் கிராமப்புறங் களில் 58 விழுக்காடு அளவிற்கு இருந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள் கையைப் பின்பற்றத் தொடங்கியபின் இதில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டு, 2011 மார்ச் மாதத்தில் இவை 40.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் நவீன தாராளமய வாதங்கள் அனைத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்து வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளால் உருவாக்கப்படும் வங்கிகள் உட்பட தனியார் வங்கிகள் புதிதாக நுழை வதை அது ஏற்பதற்குத் தயங்கியது. வங்கித் துறையில் 74 விழுக்காடு அந்நிய நேரடி முத லீட்டை அனுமதித்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தபோதுகூட, இந்திய ரிசர்வ் வங்கி கீழ்வருமாறு கருத்து தெரிவித் திருந்தது:‘‘வங்கிகளில் கணிசமான அளவிற்குப் பொது மக்களின் சேமிப்பு உள்ள நிலையில், அவற்றை ஒருசிலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்வது என்பது உடைமையுரிமை குறித்துப் பல்வேறு பிரச்சனைகளை எழுப் பிடும்.’’ (2003-04இல் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கை).ப.சிதம்பரம் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தின் நிதி அமைச்சராக முன்பு இருந்த போதும் சரி, இரண்டாவது தடவையாகத் தற் போது இருக்கும்போதும் சரி, வங்கித் துறை யில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை உந் தித்தள்ள அனைத்துவிதமான நடவடிக் கைகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந் திய ரிசர்வ் வங்கி தயங்குவது அறிந்து, ப.சிதம் பரம் புதிய தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்பார்வை பார்த்திடும் என்றும், அவ் வாறு திறப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிதான் இறுதி முடிவு எடுத்திடும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி, புதிதாக வங்கிகள் திறப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 2011 ஆகஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஆதித்யா பிர்லா குரூப், மஹிந்திரா & மஹிந்திரா, டாடாஸ் மற்றும் லார்சன்& டூப்ரோ போன்ற எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங் கள் புதிதாக வங்கிகள் திறப்பதற்குத் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின. இப்போது இச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, புதிய தனியார் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வந்துவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்களால் அமைக்கப்பட விருக்கின்றன. 2008இல் உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிலை குலைந்து நொறுங்கிய அதே சமயத்தில், இந்திய வங்கிகள் மட்டும் எவ்விதப் பாதிப்பு களும் இன்றி நிலைத்து நின்றன. அப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் உந்தித்தள்ள முயற்சித்த நிதித்துறை தாராளமய சீர்திருத் தங்களை இடதுசாரிக் கட்சிகள் நிறைவேற்ற விடாது தடுத்துநிறுத்தி தோல்வியுறச் செய் ததும், இந்திய வங்கிகளைக் கபளீகரம் செய் திட வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க மன்மோகன்சிங் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்திவிட்டதும்தான் இவற்றிற்கு அடிப் படைக் காரணங்களாகும்.ஆயினும், 2009இல் மக்களவைத் தேர் தல் நடைபெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்தி யாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, இந்திய வங்கிகள் நிலைகுலையவில்லை என்று பீற் றிக்கொள்வதற்கு மட்டும் தயங்கிடவில்லை. இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்படாத தற்கு, வங்கிகள் அரசாங்கத்தின் உடைமை யாக இருந்தது, இந்திராகாந்தியின் பாரம்பரியம் தொடர்வதுதான் என்றும், அதுவே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் வெற்றி என்றும் காங் கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் பீற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இப் போது அதே பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைத்திட முன்வந்திருக்கிறது.இடதுசாரிக் கட்சிகள் சில திருத்தங் களை வலியுறுத்தி, சட்டமுன்வடிவுக்கு எதி ராக வாக்களித்துள்ளன. அஇஅதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமே இரு அவைகளிலும் இடது சாரிகளுடன் நின்று வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பாஜக-வின் ஆதரவுடன் சட்டமுன்வடிவை நிறைவேற்றிக்கொள்ள முடிந்துள்ளது. இந்தி யாவில் உள்ள பெரும் முதலாளிகளின் நலன் கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்குச் சேவை செய்திடுவதில் இவ் விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இரு கட்சி களுமே நவீன தாராளமய சீர்திருத்தங்களின் ஏஜண்டுகளே, அதற்கு வக்காலத்து வாங்கு பவையே என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக் கப்பட்டிருக்கிறது. பாஜக பெற்றுள்ள ஒரே யொரு சலுகை என்னவெனில், பண்டங் களின் முன்பேர வர்த்தகத்தில் (கடிசறயசன வசயனiபே டிக உடிஅஅடினவைநைள) பங்குகொள்ள வங்கிகளை அனுமதிப்பது என்கிற ஆபத்தான சட்டப் பிரிவை விலக்கிக் கொண்டிருப்பதுதான். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வங்கிச் சீர் திருத்தங்களை உந்தித் தள்ளிக்கொண்டிருக் கிறது. இதன் பொருள் என்னவெனில், வங் கித்துறையில் அதிக தனியார்மயம் என்ப தேயாகும். கடந்த இருபதாண்டுகளில், இந் திய ரிசர்வ் வங்கி 1993இல் 10 வங்கிகளுக்கும், அதன்பின்னர் 2 வங்கிகளுக்கும் ஆக மொத் தம் 12 தனியார் வங்கிகளுக்கு உரிமங்கள் வழங்கி இருக்கிறது. தனியார் வங்கிகளை அதிகரித்தல், பொதுத்துறை வங்கிகளில் தனி யார் பங்குகள் வாங்க அனுமதித்தல், வளர்ச் சிப் பணிகள் மற்றும் சமூகப் பொறுப்புகளி லிருந்து வங்கிகளின் நடைமுறைகளை விலக்கி வைத்தல் போன்றவை நவீன தாராள மய சீர்திருத்தங்களின் முத்திரைச்சின்ன மாகும். அமெரிக்க வங்கிகள் மேற்கொண்ட பல்வகை பாணிகள் இந்திய வங்கித் துறை யிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.சுருக்கமாகச் சொல்வதென்றால், 2008இல் மேற்கத்திய நாடுகள் நிதி நெருக் கடிக்கு ஆளாக எவை எவை காரணிகளாக அமைந்தனவோ அதே காரணிகள் நிதித் துறை தாராளமயம் என்ற பெயரில் இந்தியா விலும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கின்றன. நவீன தாராளமய சீர்திருத்தங் களின் இதயமாக இருப்பது நிதித்துறை தாராளமயம்தான். சர்வதேச நிதிமூலதனத் தின் தேவைகளுடன் நம் நாட்டின் நிதி நிறு வனங்களும் வங்கிகளும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்துவிட்டிருப் பதுடன், காப்பீட்டுத் துறையில் 49 விழுக் காடு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித் திடுவதற்கான நடவடிக்கை, ஓய்வூதிய நிதியங்களை தனியாரிடம் தாரை வார்த்தல் ஆகிய அனைத்தும் மன்மோகன் சிங் அர சாங்கமானது, சர்வதேச நிதி மூலதனம் மற் றும் பெரும் முதலாளிகளின் உண்மையான சேவகனாக செயல் பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தொழி லாளர் வர்க்க இயக்கமும் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை முறியடித் திட முன்னிலும் வலுவான முறையில் எழுந்திட வேண்டும். வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்ட அன்று அதற்கெதிராக வங்கி ஊழி யர்கள் நடத்திய வேலை நிறுத்தம் மேலும் விரிவான போராட்டங்களுடன் தொடரப்பட வேண்டும். பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடை பெறவுள்ள இரு நாள் பொது வேலைநிறுத்தம் மக்களின் நலன்களை மறுதலித்திடும், நாட் டின் வளங்களை அந்நிய நிதி மூலதனத் திற்குத் தாரைவார்த்திடும் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக வலுவான முறையில் எதிர்ப்பினைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி

1 comment:

Anonymous said...

பயன் மிக்க பதிவு .. ஆனால் உங்கள் எழுத்துக்கள் சிறியதாக, வாசிக்க கடினமாக உள்ளன, மாற்றினால் நன்றாக இருக்கும். நன்றிகள்

Word Verification -ஐ நீக்கினால் கருத்திட வசதியாக இருக்கும்.