Showing posts with label Prakas Karat. Show all posts
Showing posts with label Prakas Karat. Show all posts

Wednesday, January 2, 2013

நிதித்துறை தாராளமயத்தின் ஆபத்து



பிரகாஷ் காரத்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட் டிருப்பது ஆட்சியாளர்கள் தாங்கள் மேற் கொண்டிருந்த கொள்கைகளிலிருந்து வில கிச் செல்வதையே குறிக்கிறது. இந்திரா காந்தி அரசாங்கம் செய்ததை மன்மோகன் சிங் அர சாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்திருக் கிறது. வங்கி தேசியமயமாக்கல் சட்டம் 1969இல் நாட்டில் தனியார் வசம் இருந்த பெரும் வங்கிகள் அனைத்தையும் தேசியமய மாக்கியது. இவ்வங்கிகளில் பெரும்பாலா னவை அன்றையதினம் பெரும் தொழில் அதி பர்களின் கைகளில் இருந்தவை. தற்போது 2012இல் வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றியிருப்பதன் மூலம் மீண்டும் வங்கித்துறையில் கார்ப்பரேட் முதலாளிகள் நுழைய வழிவகுத்துத்தரப் பட் டிருக்கிறது. இவ்வாறு சக்கரம் முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமானது 2005லிருந்தே பல முறை முயற்சிகள் மேற் கொண்டு, தற்போது இத்தகைய பிற்போக்குத் தனமான நடவடிக்கையை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. 

ஐ.மு.கூட்டணி அரசாங் கம் முதன்முறையாக இதனைக் கொண்டுவர முயற்சித்தபோது, அதனால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் அப்போது இடது சாரிக் கட்சிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தன. வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன் வடிவு இரு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, இந்தச் சட்டமுன்வடிவின் தொடக்கத்தில் வரை யறுத்திருந்த வரிகளைப் பார்த்தோமானால், இவற்றின் பங்குதாரர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இருந்த வாக்கு உரிமைகள் மீது இருந்து வந்த 10 விழுக்காடு உயர்மட்ட உச்சவரம்பை, ரத்து செய்திட முன்வந்திருந்தது. 2004 ஜன வரியில் ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முத லீட்டை 75 விழுக்காடு வரை அனுமதித்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதனை நிறைவேற்ற வேண்டுமானால், இவ்வாறு திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும். அவர்கள் அளித்திருந்த உறுதிமொழியை மன் மோகன் சிங் தற்போது மீளவும் உறுதி செய் திருக்கிறார். நடைமுறையில் உள்ள சட்ட மானது 10 விழுக்காடு மட்டுமே வாக்கு உரி மைகளை அளிப்பதால், 74 விழுக்காடு முத லீடு செய்திடும் அந்நிய வங்கிகளுக்கு வங்கி களைக் கபளீகரம் செய்திட அது தடையாக இருந்தது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கி களை அந்நிய வங்கிகள் விழுங்கிட வகை செய்திடும் விதத்தில் வாக்களிப்பதில் இருந்த உயர்மட்ட உச்சவரம்பை இச்சட்டத் திருத்தம் நீக்கி விட்டது. தனியார் வங்கிகள் பல மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அந் நிய மூலதனம் இவ்வங்கிகளில் முதலீடு செய் யப்படுமானால் இவை, தங்களைப் புதுப்பித் துக்கொள்ள உதவிடும் என்றும் அரசு வாதிட லாம். அந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் இதனை ஆட்சேபித்ததோடு, அவ்வாறு பல வீனமாகவுள்ள தனியார் வங்கிகளை அரசு அடையாளங்காட்ட வேண்டும் என்றும், அவற்றைப் பொதுத்துறை வங்கிகள் கையகப் படுத்திட ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தன. 2009இல் 14ஆவது மக்களவை கலைக் கப்பட்டு விட்டதால், 2005இல் கொண்டுவரப் பட்ட வங்கி முறைப்படுத்தல் (திருத்தச்) சட்ட முன்வடிவு காலாவதியாகிவிட்டது. அரசாங்கம் மீண்டும் 2011இல் 15ஆவது மக்களவையில் இச்சட்டமுன்வடிவை அறி முகப்படுத்தியது.
பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் யஷ்வந்த் சின்கா தலைமையில் உள்ள நிதித்துறை சார்பான நாடாளுமன்ற நிலைக் குழு பங்குதாரர்கள் வாக்களிக்கும் உரிமை யின் உச்சவரம்பை, முழுமையாக நீக்குவதற் குப் பதிலாக, தற்போதுள்ள 10 விழுக்காட்டி லிருந்து 26 விழுக்காடாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. அரசாங்கமும் அந் தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வெளி நாட்டு வங்கிகளும், வெளி நாட்டு நிதித்துறை நிறுவனங்களும் இவ்வா றான 26 விழுக்காடு வாக்கு உரிமையைப் பயன்படுத்தியும், மேலும் பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்தும் நம் நாட்டில் உள்ள வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களை யும் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திட முடியும். நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன் வடிவின் மற்றொரு அம்சம், தனியார் துறை யில் புதிதாக வங்கிகளை அமைத்துக்கொள்ள இது வழிவகை செய்கிறது. அத்தகைய வங்கி களுக்கு உரிமங்கள் அளித்திடவும் அவற்றை முறைப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கார்ப்ப ரேட் முதலாளிகள் இவ்வாறு வங்கிகள் தொடங்கிட எவ்விதத் தடையும் கிடையாது. 1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்படு வதற்கு முன்பு, நாட்டிலிருந்து தனியார் வங்கி களில் பெரும்பாலானவை தொழில் நிறு வனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத் திருந்தன. யுனைடெட் கமர்சியல் வங்கி, பிர்லா நிறுவனங்களுடனும், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், தாபர் கம்பெனிகளு டனும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா டாடாக்களுடனும் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தன. 

இவ்வாறு தொழில் அதிபர்களின் கட்டுப் பாடுகளில் இருந்த வங்கிகள், இவ்வங்கி களில் பொது மக்களால் சேமிக்கப்பட்ட சேமிப்புத்தொகைகளை தொழில் அதிபர் களின் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத் திக் கொண்டன. வங்கிகளிலிருந்து கடன் உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் என்பவை விவசாயிகளுக்கும், சிறிய நிறுவனத் தொழில் முனைவோருக்கும் முற்றிலுமாக இல்லாமல் இருந்தன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் முக் கிய குறிக்கோள்களில் ஒன்று, பெரும் முத லாளிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே இருந்த கள்ளப்பிணைப்பை உடைத்தெறிவது என்பதாகும். ஏனெனில் இத்தகைய இவர் களின் கள்ளப்பிணைப்பானது நாட்டில் பெரும் துறைகளாக விளங்கிவந்த விவசாயத் துறை மற்றும் சிறிய/நடுத்தரத் தொழில்நிறு வனங்களுக்கு கடன் உதவிகள் செய்வது என்பதை முற்றிலுமாக விலக்கி வைத் திருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட பின்னர்தான், பொதுத் துறை வங்கிகள் தங்கள் வங்கி வலைப்பின்னலை விரிவானவை களாக வளர்த்தெடுத்தன.

விவசாயத்துறைக் கும் கடன் உதவி மேற்கொண்டன. முன் னுரிமை அடிப்படையில் பல துறைகளுக்கு நிதி உதவிகள் செய்தன. பொதுத்துறை வங்கி கள் தற்சமயம் 65 ஆயிரம் கிளைகளைக் கொண்டிருக்கின்றன. 1991இல் மொத்தம் இருந்த வங்கிக் கிளைகளில் கிராமப்புறங் களில் 58 விழுக்காடு அளவிற்கு இருந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள் கையைப் பின்பற்றத் தொடங்கியபின் இதில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டு, 2011 மார்ச் மாதத்தில் இவை 40.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் நவீன தாராளமய வாதங்கள் அனைத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்து வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளால் உருவாக்கப்படும் வங்கிகள் உட்பட தனியார் வங்கிகள் புதிதாக நுழை வதை அது ஏற்பதற்குத் தயங்கியது. வங்கித் துறையில் 74 விழுக்காடு அந்நிய நேரடி முத லீட்டை அனுமதித்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தபோதுகூட, இந்திய ரிசர்வ் வங்கி கீழ்வருமாறு கருத்து தெரிவித் திருந்தது:‘‘வங்கிகளில் கணிசமான அளவிற்குப் பொது மக்களின் சேமிப்பு உள்ள நிலையில், அவற்றை ஒருசிலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்வது என்பது உடைமையுரிமை குறித்துப் பல்வேறு பிரச்சனைகளை எழுப் பிடும்.’’ (2003-04இல் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கை).ப.சிதம்பரம் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தின் நிதி அமைச்சராக முன்பு இருந்த போதும் சரி, இரண்டாவது தடவையாகத் தற் போது இருக்கும்போதும் சரி, வங்கித் துறை யில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை உந் தித்தள்ள அனைத்துவிதமான நடவடிக் கைகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந் திய ரிசர்வ் வங்கி தயங்குவது அறிந்து, ப.சிதம் பரம் புதிய தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்பார்வை பார்த்திடும் என்றும், அவ் வாறு திறப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிதான் இறுதி முடிவு எடுத்திடும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி, புதிதாக வங்கிகள் திறப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 2011 ஆகஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், ஆதித்யா பிர்லா குரூப், மஹிந்திரா & மஹிந்திரா, டாடாஸ் மற்றும் லார்சன்& டூப்ரோ போன்ற எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங் கள் புதிதாக வங்கிகள் திறப்பதற்குத் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின. இப்போது இச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதை அடுத்து, புதிய தனியார் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வந்துவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவற்றில் பல கார்ப்பரேட் நிறுவனங்களால் அமைக்கப்பட விருக்கின்றன. 2008இல் உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிலை குலைந்து நொறுங்கிய அதே சமயத்தில், இந்திய வங்கிகள் மட்டும் எவ்விதப் பாதிப்பு களும் இன்றி நிலைத்து நின்றன. அப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் உந்தித்தள்ள முயற்சித்த நிதித்துறை தாராளமய சீர்திருத் தங்களை இடதுசாரிக் கட்சிகள் நிறைவேற்ற விடாது தடுத்துநிறுத்தி தோல்வியுறச் செய் ததும், இந்திய வங்கிகளைக் கபளீகரம் செய் திட வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க மன்மோகன்சிங் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்திவிட்டதும்தான் இவற்றிற்கு அடிப் படைக் காரணங்களாகும்.ஆயினும், 2009இல் மக்களவைத் தேர் தல் நடைபெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்தி யாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, இந்திய வங்கிகள் நிலைகுலையவில்லை என்று பீற் றிக்கொள்வதற்கு மட்டும் தயங்கிடவில்லை. இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்படாத தற்கு, வங்கிகள் அரசாங்கத்தின் உடைமை யாக இருந்தது, இந்திராகாந்தியின் பாரம்பரியம் தொடர்வதுதான் என்றும், அதுவே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் வெற்றி என்றும் காங் கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் பீற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இப் போது அதே பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைத்திட முன்வந்திருக்கிறது.இடதுசாரிக் கட்சிகள் சில திருத்தங் களை வலியுறுத்தி, சட்டமுன்வடிவுக்கு எதி ராக வாக்களித்துள்ளன. அஇஅதிமுக, தெலுங்கு தேசம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமே இரு அவைகளிலும் இடது சாரிகளுடன் நின்று வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பாஜக-வின் ஆதரவுடன் சட்டமுன்வடிவை நிறைவேற்றிக்கொள்ள முடிந்துள்ளது. இந்தி யாவில் உள்ள பெரும் முதலாளிகளின் நலன் கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்குச் சேவை செய்திடுவதில் இவ் விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இரு கட்சி களுமே நவீன தாராளமய சீர்திருத்தங்களின் ஏஜண்டுகளே, அதற்கு வக்காலத்து வாங்கு பவையே என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக் கப்பட்டிருக்கிறது. பாஜக பெற்றுள்ள ஒரே யொரு சலுகை என்னவெனில், பண்டங் களின் முன்பேர வர்த்தகத்தில் (கடிசறயசன வசயனiபே டிக உடிஅஅடினவைநைள) பங்குகொள்ள வங்கிகளை அனுமதிப்பது என்கிற ஆபத்தான சட்டப் பிரிவை விலக்கிக் கொண்டிருப்பதுதான். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வங்கிச் சீர் திருத்தங்களை உந்தித் தள்ளிக்கொண்டிருக் கிறது. இதன் பொருள் என்னவெனில், வங் கித்துறையில் அதிக தனியார்மயம் என்ப தேயாகும். கடந்த இருபதாண்டுகளில், இந் திய ரிசர்வ் வங்கி 1993இல் 10 வங்கிகளுக்கும், அதன்பின்னர் 2 வங்கிகளுக்கும் ஆக மொத் தம் 12 தனியார் வங்கிகளுக்கு உரிமங்கள் வழங்கி இருக்கிறது. தனியார் வங்கிகளை அதிகரித்தல், பொதுத்துறை வங்கிகளில் தனி யார் பங்குகள் வாங்க அனுமதித்தல், வளர்ச் சிப் பணிகள் மற்றும் சமூகப் பொறுப்புகளி லிருந்து வங்கிகளின் நடைமுறைகளை விலக்கி வைத்தல் போன்றவை நவீன தாராள மய சீர்திருத்தங்களின் முத்திரைச்சின்ன மாகும். அமெரிக்க வங்கிகள் மேற்கொண்ட பல்வகை பாணிகள் இந்திய வங்கித் துறை யிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.சுருக்கமாகச் சொல்வதென்றால், 2008இல் மேற்கத்திய நாடுகள் நிதி நெருக் கடிக்கு ஆளாக எவை எவை காரணிகளாக அமைந்தனவோ அதே காரணிகள் நிதித் துறை தாராளமயம் என்ற பெயரில் இந்தியா விலும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கின்றன. நவீன தாராளமய சீர்திருத்தங் களின் இதயமாக இருப்பது நிதித்துறை தாராளமயம்தான். சர்வதேச நிதிமூலதனத் தின் தேவைகளுடன் நம் நாட்டின் நிதி நிறு வனங்களும் வங்கிகளும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்துவிட்டிருப் பதுடன், காப்பீட்டுத் துறையில் 49 விழுக் காடு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித் திடுவதற்கான நடவடிக்கை, ஓய்வூதிய நிதியங்களை தனியாரிடம் தாரை வார்த்தல் ஆகிய அனைத்தும் மன்மோகன் சிங் அர சாங்கமானது, சர்வதேச நிதி மூலதனம் மற் றும் பெரும் முதலாளிகளின் உண்மையான சேவகனாக செயல் பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தொழி லாளர் வர்க்க இயக்கமும் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை முறியடித் திட முன்னிலும் வலுவான முறையில் எழுந்திட வேண்டும். வங்கிச் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்ட அன்று அதற்கெதிராக வங்கி ஊழி யர்கள் நடத்திய வேலை நிறுத்தம் மேலும் விரிவான போராட்டங்களுடன் தொடரப்பட வேண்டும். பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடை பெறவுள்ள இரு நாள் பொது வேலைநிறுத்தம் மக்களின் நலன்களை மறுதலித்திடும், நாட் டின் வளங்களை அந்நிய நிதி மூலதனத் திற்குத் தாரைவார்த்திடும் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக வலுவான முறையில் எதிர்ப்பினைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி

Wednesday, April 20, 2011

இடதுமுன்னணிக்கு பெருகும் ஆதரவு -பிரகாஷ் காரத்

தற்சமயம் நாட்டில் நடைபெறும் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களைப் பொறுத்த வரை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெறும் தேர்தல்கள் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறேன். அவற்றின் வெற்றி நாடு முழுதும் உள்ள இடதுசாரிகள் தேசிய அளவில் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகப் பாதையில் முன்னேறுவதற்கு உதவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

கொல்கத்தாவில், தேர்தலையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள cpimwb.org/vote இணையதளத்திற்கு பிரகாஷ் காரத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

* தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்கள் குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?

கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் ஏற் கனவே முடிந்துவிட்டன. அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தி யில் கசப்புணர்வு வலுவாக இருப்பதை தெளி வாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது. அஸ்ஸாமில், காங்கிரஸ் கட்சியானது போடோ மக்கள் முன் னணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டி ருக்கிறது. கேரளாவில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. குறிப் பாக, கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான போக்கு (யவேi-inஉரஅநெnஉல வசநனே) எதுவும் இல்லை. எனவே மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே அமையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வாக் குப் பதிவு முடிந்தபின் உள்ள நிலைமைகள், அஇஅதிமுக தலைமையிலான முன்னணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்ஸாமில் சென்ற முறைகூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திடவில் லை. இந்தத் தடவையும்கூட அதேபோன்று எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் தேர்தல் முடிவுக்குப்பின் அமையும் கூட்டணியைச் சார்ந்தே ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன்.

* சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தட வை லஞ்சஊழலும் விலைவாசி உயர் வும் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறி யிருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் தாக்கம் கேரளாவில் எப்படி இருந்தது?

லஞ்சஊழலும் பணவீக்கமும் தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவற்றின் விளைவுகளை நன்றாகவே காண முடிந்தது. உண்மையில், இவ்விரண்டு பிரச்சனைகளும் மக்கள் மத்தி யில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் அனு கூலமான முறையில் நிலை கொண்டிருக் கிறது. லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை, காங் கிரசின் சித்திரம் (iஅயபந), அதிலும் குறிப் பாக மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக் கிருந்த மதிப்பு, பல்வேறு பெரும் லஞ்ச ஊழல் களினால் மிகவும் தாழ்ந்து போய் கிடக்கிறது.

* மேற்கு வங்கத்திலும் இப்பிரச்சனைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று கருதுகிறீர்களா?

விலைவாசி உயர்வும் லஞ்ச ஊழலும், மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கத்தை ஏற் படுத்திடும். ஏனெனில் நாடு முழுதும் மக்கள் ஊழலின் காரணமாக விளைந்துள்ள கேடு கெட்ட விளைவுகளை நன்கு உணர்ந்திருக் கிறார்கள். அதிலும் குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு சுதந்திரம் பெற்றபின் நடைபெற் றுள்ள ஊழல்களிலேயே பிரம்மாண்டமான ஊழலாகும். உதாரணமாக, தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஆண் - பெண் - குழந்தை கள் என அனைவரும் 2ஜி ஊழல் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். வங்கத்திலும் கூட, லஞ்ச ஊழல் சம்பந்தமாக நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் பதை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நிச் சயமாக நான் நம்புகிறேன். இங்குள்ள இடது முன்னணியும் லஞ்ச ஊழல் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் குறித்தும், அதில் ஓர் அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் வங்க மக்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருது கிறேன்.

* வங்கத்தில் ஆட்சியிலிருந்த ஏழாவது இடது முன்னணி அரசாங்கம் அதிக மாக ஒன்றும் சாதித்திடவில்லை என் றும், குறிப்பாக நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் அதன் ஆட்சிமீது களங்கத் தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குறைகூறப்படுகிறதே, அவ்வாறு குறைகூறுகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மேற்கு வங்க ஏழாவது இடது முன்னணி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சாதனைக ளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், இடது முன்னணி அரசாங்கமானது நிலமற்ற விவசா யிகளுக்கு 20 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களை மறுவிநியோகம் செய்திருக்கிறது. விவசாய வளர்ச்சியையும் தொடர்ந்து உறுதியாக மேற் கொண்டு வந்திருக்கிறது. அகில இந்திய மட் டத்தில் விவசாய வளர்ச்சி என்பது தேக்க நிலையை அடைந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் என்பது தேசிய சராசரியைவிட பன்மடங்கு அதிகமாகும்.

* மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான் மை இனத்தவரின் வளர்ச்சிக்கு இடது முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பங்கள் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கும் நிலத்தை விநி யோகம் செய்திருக்கின்றன. இவற்றில் முஸ் லிம் இனத்தவரும் அடங்குவர். வங்கத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங் களில் 18 விழுக்காடு முஸ்லிம் குடும்பங் களுக்குச் சென்றிருக்கிறது. முஸ்லிம் சிறு பான்மை இனத்தவருக்கு வேலைகளில் ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று ரங்க நாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந் துரைகளை அமல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் பெரிய அள வில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கி றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட் டில் உள்ள சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு களை எல்லாம் கணக்கில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கிறோம். முஸ்லிம் சிறு பான்மை இனத்தவரில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக் கீடு அளித்திருக்கிறோம். இதன் மூலம் மாநி லத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 1 கோடியே 72 லட்சம் மக்கள் பயன் அடைந் திருக்கிறார்கள். இவ்வாறு வேறெந்த அரசாங் கமும் - மத்திய அரசாங்கமும் சரி அல்லது வேறெந்த மாநில அரசாங்கமும் சரி - நடவடிக்கை எடுத்திட வில்லை.

* திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவர் வங்கத்தில் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்களில் சிலவும் மற்றும் அறிவு ஜீவிகளில் சிலரும் கருதுகிறார்களே, இதனை எவ்வாறு நீங்கள் விளக்கு கிறீர்கள்?

வங்கத்தில் இது தொடர்பாக ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கு முன்பும்கூட பலதடவை கள், அதிதீவிர இடதுசாரிகள் பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கைகோர்த் தது உண்டு. மேற்கு வங்கத்தில் இந்த நிலை மை வருவதற்குப் பிரதானமான காரணம், இங்கே இடதுசாரிகள் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதேயாகும். வலதுசாரி சக்தி கள், இடதுசாரிகளை முறியடிக்க சூழ்ச்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் இடது அதி தீவிரவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள் கிறார்கள். மீண்டும் அதேதான் இப்போதும் நடைபெற்றிருக்கிறது. திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்டுகளுடனும், மாவோ யிஸ்ட்டுகள் திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர் மத்தியில் பிரதிபலிக்கிறது.

* மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்த லில் நாட்டின் பிரதான தேசியக் கட்சி களான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் பங்களிப்பு என்ன வென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மிகவும் வலுவாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றாகக் குவிவதைப் பார்க்க முடியும். இதனை வெகு காலமாகவே கேரளாவில் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில், கேரளா வில், பாஜக-வினர் தங்கள் வாக்குகளை விற் கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றுவதில்லை, மாறாக உண்மையில் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயகக் முன்னணிக்கு விற் கிறார்கள். இங்கே, மேற்கு வங்கத்திலும் கூட, கிராமப்புறங்களில் விவசாயிகள் வர்க்க ரீதியாக அணிசேர்ந்திருப்பதன் காரணமாக பிற்போக்கு சக்திகளும் முன்னாள் நிலவுடை மையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார் கள். இவர்களில் சிலர் காங்கிரசில் இருக் கிறார்கள், சிலர் பாஜக-வில் இருக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் வருவதை விரும்ப வில்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத சக்திகள் இடதுசாரிகள் தலைமையில் அணிசேருவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இடது முன்னணியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கை கோர்ப்பது உசிதமானது என்பதே பாஜக-வினரின் அரசியலாகும். நரேந்திர மோடி இங்கே வந்திருந்தபோது அவர் மம்தா பானர்ஜியை வானளாவப் புகழ்ந் ததிலிருந்து இதனை நாம் பார்க்க முடிந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, இடது முன்னணிக்கு மாற்றாக பாஜக குறிப்பிடத் தக்க பங்கு எதனையும் ஆற்றப் போவதில் லை. எனவே அது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஆற்றிய உரைகளிலிருந்து பார்த்தோம்.

* கடந்த ஈராண்டுகளில் மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங் களின் பின்னணியில், இடது முன் னணி அமைதியைக் கொண்டுவர எவ் வாறு திட்டமிட்டிருக்கிறது?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சில இடங்களில் இடது முன்னணிக்குப் பின் னடைவு ஏற்பட்டதைக் கண்ட வலதுசாரி எதிர்க்கட்சிகள், இடதுசாரிகளைப் பின்னுக் குத் தள்ளிவிட வாய்ப்பு உண்டு என்று கருதி, வன்முறைகளில் ஈடுபட்டன. மிகவும் ஜன நாயக விரோதமாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட் டனர். இவ்வாறு நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வன் முறைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட வேண் டியவைகளாகும். இந்தத் தேர்தலின்போதும், இந்தக் கும்பல் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாம். இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், பின், மாநிலத்தில் அமைதியை மீள ஏற்படுத்துவ தும் இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை நடைபெற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை யை மீள ஏற்படுத்துவதும் எளிதாக இருந்திடும்.

* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் வாய்ப்பு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? 2009-இல் இருந்த நிலைமையைவிட மாற்றம் இருக்கிறதா?

2009-இல் இருந்த நிலைமையுடன் ஒப் பிடும்போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் 2009இல் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஆனால், இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் நிலைமைகள் மாறி இருக்கின்றன. நான் முன்பே கூறியதுபோல, மக்களை இன்றைய தினம் கடுமையாகப் பாதித்துள்ளவை விலைவாசி உயர்வு போன்ற பிரதான பிரச்சனைகளாகும். இவ்வாறான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரசும் - காங்கிரசும் நேரடியான காரணங்களாகும். இது ஓர் அம்சம். மற்றொன்று, 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் - ஸ்தாபன அம்சங்களி லும், அரசாங்கத்திலும் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு கடந்த ஈராண்டுகளில் அவை சரி செய்யப்பட்டிருக் கின்றன. எனவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது இருந்த நிலைமைகள் மாறும். இடது முன் னணி மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கை யைப் பெற்று வரவிருக்கும் தேர்தல் முடிவிலும் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.

* தேர்தலுக்குப்பின்னர் உள்ள நிலை மைகள் எப்படி இருக்கும்? தேசிய அளவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் தேர் தல்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டோமானால், இவற்றில் மேற்கு வங்கமும் கேரளமும் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமானவை களாகும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் வெற்றி என்பது தேசிய அளவில் இடது ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல் வதற்கான போராட்டப் பாதையில் இடதுசாரி களுக்கு உதவிடும். இவ்வாறு மேற்கு வங்கம் மற்றும் கேரள தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உத் வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந் திடும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் ஐமுகூட்டணி அரசாங்கம் இப்போது பிரதிநிதித்துவப்படுத் தும் நவீன தாராளமய - ஊழல் இடையே யான தொடர்பு மீது நேரடியான சம்மட்டி அடி யாக அது அமைந்திடும். ஊழல் தொடர்பு, தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமை யிலான மாநில அரசாங்கத்தில் நேரடியாகவே பிரதிபலித்தது. எனவே, தமிழ்நாட்டு முடிவும் தேசிய அளவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழில்: ச.வீரமணி

Friday, April 15, 2011

கேரளம் மற்றும் தமிழகத்தின் தேர்தல்கள் --பிரகாஷ்காரத்



கேரளம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 13 அன்று தங்கள் மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களில் வாக்களித்துள்ளார்கள். இவர்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இரு வாரங்களுக்கே நடைபெற்றதென்ற போதிலும் அவ்விரு வாரங்களும் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சரம் இரு மாநிலங்களிலும் நடைபெற்றதைப் பார்த்தோம். இரு மாநிலங்களிலும் நான் ஒருசில நாட்கள் இக்கால கட்டத்தில் செலவழித்தேன். தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பல்வேறுபட்ட தேர்தல் கூட்டணிகள் அவற்றின் வாய்ப்புகள் குறித்தும் ஒருசில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
பிரதானமான பிரச்சனைகள் நாட்டைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வும் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழலும் இரு மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போதும் பிரதான பிரச்சனைகளாக மக்களின் முன் வைக்கப்பட்டன. நகர்ப்புறமாக இருந்தாலும் சரி அல்லது கிராமப்பகுதிகளாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும், மக்கள் இவ்விரு பிரச்சனைகள் குறித்தும் இவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் கவலைப்பட்டார்கள். கேரளாவில், விலைவாசி உயர்வுப் பிரச்சனை, பொது விநியோக முறையோடு நேரடியாக இணைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வராத குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்திடக்கூடிய வகையில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அத்திட்டத்தை விரிவாக்கியது. மாநில அரசாங்கம் தம் வசம் உள்ள அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கக்கூடிய விலைகளில், நியாய விலைக் கடைகள், மாவேலி ஸ்டோர்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விநியோகிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றார்கள். இதற்கு நேர்மாறாக, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காதது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளித்தது.

உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள லஞ்ச ஊழல்கள் கேரள மக்கள் மத்தியில் கடுமையாக எதிரொலித்தன. சமீபத்தில், முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது கீழமை நீதிமன்றம் அளித்திருந்த தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண பிள்ளை மீது தொடுத்த மனு மீதான விசாரணையில்தான் இவ்வாறு அவருக்கு லஞ்சஊழலுக்கான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணியின் உறுதியான நிலைப்பாட்டை இது அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் சமீபகாலங்களில் அடுக்கடுக்காக வெளிவந்துள்ள பல்வேறு ஊழல் வழக்குகள் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான சித்திரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் மிகுந்தது என்று கூறிய குற்றச்சாட்டை, மக்கள் சட்டைசெய்யவே இல்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள்கூட இதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதன் பொருள், லஞ்சலாவண்யம் மிக்க ஓர் அரசாங்கத்தை, தற்போது மத்தியில் உள்ளது போன்று லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியலமர்த்துவதே என்கிற இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சாரம் மக்களிடம் வலுவாகச் சென்றடைந்தது.

உயர் மட்ட அளவில் ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுங்கோபம், ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவான பெருவிருப்பம், நிச்சயமாக இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வேலை செய்தது. முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டதானது இதனை அங்கீகரிப்பதாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம் மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சத்தையும் வெளிப் படுத்தியது. இதனை இடது முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஊடகங்களாலேயே கூட மறைக்க முடியவில்லை. ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பொதுவாக இருந்திடும் கசப்புணர்வு (யவேi-inஉரஅநெnஉல கநநடiபேள), இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இடது ஜனநாயக முன்னணியின் சாதனை

அடுத்து கேரளத்தில் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும்தான் கேரளாவில் வளரச்சித் திட்டங்களை உருவாக்கியதாகவும், அதனை இடதுஜனநாயக முன்னணி தொடர்ந்து மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் கூறினார்கள். மத்திய அரசு அளித்த நிதிகளையும், திட்டங்களையும் இடது ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கேரளம் முதலீடுகளைக் கவர்ந்திடவும், வளர்ச்சியை உத்தரவாதப் படுத்திடவும் தவறிவிட்டது என்று குறை கூறினார்கள். இதற்கு இடதுசாரிகளின் பத்தாம்பசலித்தனமான சித்தாந்தமே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன என்பதை இடதுசாரிகள் அங்கீகரிக்க மறுத்தார்கள்’’ என்றும், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை’’ என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இதன் பொருள் என்ன? காங்கிரஸ் கட்சியையும் ஐமுகூ அரசாங்கத்தையும் பொறுத்தவரை, ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன’’ என்பதன் பொருள், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதேயாகும். மத்திய அரசின் நாசகரமான விவசாயக் கொள்கைகள்தான் விவசாயிகளின் அவல நிலைக்கும், அவர்கள் கேரளாவில் தற்கொலைகளை மேற்கொள்ளத் தள்ளியதற்கும் காரணங்களாக இருந்தன. உலகச் சந்தையுடன் விவசாயத்தை இணைத்ததும், அவர்களுக்கு அளித்து வந்த மான்யங்களை இல்லாது ஒழித்ததும்தான் இவர்களின் வளர்ச்சிப் பாதையின் பகுதிகளாகும். இவர்களது நவீன தாராளமய அணுகுமுறைக் கண்ணோட்டத்தின்படி, கேரள அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரளித்ததும், அவற்றை லாபகரமானதாக மாற்றியதும் வெறுக்கப்பட வேண்டியவை களாகும். உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் விரிவாக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல சமூகப் பாதுகாப்பு உதவிகளை உத்தரவாதப் படுத்தியமை போன்றவை பிரதமரின் பார்வையில், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்கள்’’ இல்லை என்பதாகும். ஆனால் இவைதான் கேரள அரசு மீது மக்களுக்குக் கசப்புணர்வு ஏற்படாமல் இருந்ததற்குக் (anti-incumbency feelings) காரணங்களாகும்.
மத்தியில் ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய அணுகுமுறைக்குச் சவால் விடக்கூடிய வகையில் மாற்று வளர்ச்சிப் பாதையை இடது ஜனநாயக முன்னணியின் கொள்கை முன்வைத்தது. அதைத்தான் பல விமர்சகர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டித்தார்கள், கண்ணீர் விட்டார்கள். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதைப்போன்று, கேரள அரசும் சட்டவிரோத முதலாளித்துவ (உசடிலே உயயீவையடளைஅ)பாதையைப் பின்பற்ற வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதித்திட வேண்டும், பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் இடையேயான கள்ளத் தொடர்பை, கயமைத் தொடர்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே அவர்களது விருப்பங்களாகும்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் ஆழமான முறையில் அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாதீய மற்றும் வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற முடிவுசெய்தது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளாவில் பணமும், மதுவும் ஆறாக ஓடியதையும் பார்க்க முடிந்தது. பிரச்சாரம் முடிவுற்ற சமயத்தில், எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கிய துர்ப்பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பொடிப்பொடியாக்கி, இடது ஜனநாயக முன்னணி மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறியதைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் நிலைமைகள்

தமிழ்நாட்டிலும் கூட, லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனைகiளாக முன்னுக்கு வந்தன. ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச்சனை என்பது பிரம்மாண்டமான அளவில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுக-வினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சியில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்பதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - திரைப்படத் துறை, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளிலும் - ஆதிக்கம் செலுத்துவது ஜனநாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அஇஅதிமுக பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா, இப்பிரச்சனையைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடும் விலைவாசி உயர்வு, மிகவும் விரிவான அளவில் இருந்த மின்வெட்டு, திமுக-வினர் மஃபியா கும்பலுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு ஆகிய பிரச்சனைகளும் மக்களைத் திமுக அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியும் கூட அருவருப்பான ஒன்றாகவே அமைந்திருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டிச் சண்டைகளும், மக்கள் மத்தியில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதன் தலைவர்கள் பலர் வெளிப்படுத்திய கருத்துக்களும் நிலைமைகளை அவ்வாறு ஆக்கி இருந்தன.

தமிழ்நாடு, நவீன தாராளமயக் கொள்கைகளின் முழுமையான விளைவுகளை அனுபவித்த மாநிலமாகும். சமீப ஆண்டுகளில் வேறெந்தவொரு மாநிலமும் தேர்தலில் இந்த அளவிற்கு சட்டவிரோதமாகச் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரியிறைத்ததில்லை. திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அனுபவத்தை அடுத்து, சென்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பது மிகவும் விரிவான முறையில் நடைபெற்றிருந்தது. தேர்தல் ஆணையம் சட்டவிரோத பணப் புழக்கத்தைத் தடுத்திட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பல சோதனைகளில் சுமார் 50 கோடி ரூபாய் வரை ரொக்கமாகவும், பல்வேறு பொருள்களாகவும் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் ஒரு ஆம்னி பஸ்ஸின் மேல் உச்சியிலிருந்து மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆயினும் இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் வாரியிறைக்கப் பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் ஒரு சிறு துளிதான். நகர்ப் புறங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், பிரச்சாரத்தின்போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தடவை ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக கொட்டியிருந்த போதிலும் அதனால் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளில் முதல் அதிகாரபூர்வமான மாநிலக் கட்சியாக விளங்கியது. சமூக நீதி மேடையிலிருந்து உதித்த வெகுஜன தளத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மிகவும் வலுவாகக் கொண்டிருந்த ஒரு கட்சியாக திமுக இருந்தது. மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கிய ஒன்று. அத்தகைய பாரம்பர்யம் கொண்ட ஒரு கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறி, சட்டவிரோத மூலதனத்தால் (crony capitalism) கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

திமுக இத் தேர்தலில் தூக்கி எறியப்பட்டால், அவ்வாறு அதன் விதி முடிவது முழுமையும் சாலப் பொருத்தமானதேயாகும். ஊழலில் அதன் கூட்டாளியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இதேபோன்றதொரு மோசமான முடிவையை எதிர்கொள்ள விருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)