Monday, June 21, 2010

இந்நாள்; வரலாற்றில் ஒரு பொன்னாள்!



-பிரகாஷ் காரத்
மேற்கு வங்கத்தில் இடது முன் னணி அரசு ஆட்சிக்கு வந்து ஜூன் 21 ஆம் தேதியுடன் 33 ஆண்டு நிறைவ டைகிறது. இது வரலாற்றில் பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். வேறெந்தவொரு மாநில அரசும் இத்தகு வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற தில்லை.

நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததி லும் மக்கள் நலன் சார்ந்த கொள்கை களை அமல்படுத்தியதிலும் வேறெந்த அரசியல் கட்சியும் இத்தகைய வரலாறு படைத்ததில்லை. இத்தகைய ஈடிணை யற்ற சாதனையை, கடந்த ஓராண்டில் மக்களவைத் தேர்தலிலும் சமீபத்தில் நக ராட்சி/மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், இடது முன்னணிக் கும் ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு களை வைத்துக் குறைத்து மதிப்பிட சில சக்திகள் முனைந்துள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் இடது முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள் ளப்பட்ட அனைத்துச் சாதனைகளை யும் மறுதலித்திட இந்த சக்திகள், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள் கின்றன. “சிவப்பு ஆட்சி” யின் கீழ் “மூச் சுத்திணறிக் கொண்டிருக்கும்” ஒரு மாநி லமாக மேற்கு வங்கத்தைச் சித்தரிக்க வும், அங்கு உருப்படியாக எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது, அது பாலைவன மாக மாறிவிட்டது என்றும், மிகவும் மோசமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இத்த கையப் பிரச்சாரங்கள் ஆளும் வர்க்கங்க ளாலும், பெரு நிறுவன ஊடகங்களாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதில் ஆச்சரி யப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெ னில், இடது முன்னணி அரசாங்கத்தின் அனைத்துச் சாதனைகளுமே நாட்டை ஆளும் முதலாளித்துவ - நிலப்பிரபுத் துவ வர்க்கங்களின் நலன்களுக்கு உகந் தவை அல்ல என்பதும் அவற்றிற்கு எதி ராக கொண்டு வரப்பட்டவை என்பதும் ஆகும்.

மேற்குவங்க அரசு மேற்கொண்ட அளவிற்கு வேறெந்த மாநில அரசும் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தவில் லை. நாட்டில் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலத்தில் ஐந்தில் ஒரு பாகம் மேற்கு வங்கத்தில் மட்டும் கையகப்ப டுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துறை யில் வளர்ச்சியின் பயன்கள் அனைத் தும் நிலப்பிரபுக்களுக்கோ, பணக்கார விவசாயிகளுக்கோ சென்றடையாமல், முழுமையாக, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்கத் தைத் தவிர வேறெந்த மாநில அரசும் கிடையாது. பஞ்சாயத்து அமைப்புகள் முறைப்படுத்தப்பட்டதால் கிராமப்புற உழைக்கும் மக்கள், உள்ளூர் நலன் சார்ந்த விஷயங்களில் தாங்களே நேரடி யாகப் பங்கேற்க முடிந்தது. இடது முன் னணி தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக ஓர் உறுதியான பாதுகாப்புச் சூழ்நிலை அங்கே உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ராலும் மேற்கொள்ளப்படும் ஜனநாயக உரி மைகள், அங்குள்ள அரசியலமைப்பு முறையின் உள்ளார்ந்த அம்சம் (inாநசநவே கநயவரசந) ஆகும். இடதுமுன்னணியின் முப் பதாண்டு கால ஆட்சி என்பது மேற்கு வங்கத்தின் முகத்தோற்றத்தை மிகவும் வலிவுடனும் பொலிவுடனும் மாற்றி அமைத்திருக்கிறது என்பதில் ஐய மில்லை.

இவ்வாறு கூறுவதன் மூலம், இடது முன்னணி அரசாங்கம் அங்கே முன் னேறி வந்ததற்கான பாதை மிகவும் எளி தான ஒன்று என்று பொருள் அல்ல. அதி லும் குறிப்பாக 1990களில், அகில இந் திய அளவில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத் தப்பட்ட பின்னர், மக்கள் சார்புக் கொள் கைகளைப் பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாநில அரசு தன்னுடைய குறைந்தபட்ச அதிகா ரத்திற்குள் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமத்திற்குள் ளாயின. நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளையும், மத்திய ஆட்சி யாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்து டன் கூடிக் குலாவுவதையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் உறுதியாக எதிர்த்து வந்த தால், அவற்றின் மீதான தாக்குதல்களும் கடுமையாயின.

ஆளும் வர்க்கங்களுக்கும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஓர் இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்து வருவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் 2004 மக்களவைத் தேர்தலின் போது தேசிய அரசியலில் ஆற்றிய செல் வாக்கான பங்களிப்பு இதனை மெய்ப்பித் தன. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் பல வீனப்படுத்த, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கத்தைத் தனிமைப் படுத் துவது அவசியம் என்று அவை கருதத் தொடங்கியுள்ளன.

மேற்கு வங்கத்திற்குள்ளும், இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி யிலிருந்த போதும் வர்க்கப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வர்க்க உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இடது முன்னணி அரசாங்கம் பின்பற் றிய கொள்கைகளின் வரையறைக்குள் ளும் கூட புதிய முரண்பாடுகளும் பிரச் சனைகளும் முன்வந்துள்ளன. மாநிலத் தில் அரசியல் நிலைமைகளில் இவை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பினை ஆராயும்போது சில அரசியல் உண்மை களை அவை வெளிப்படுத்துகின்றன. வலதுசாரி சக்திகள் கூட, தங்களுடைய கடுமையான கம்யூனிச எதிர்ப்பை மூடி மறைத்துக்கொண்டு, இடதுசாரி முகமூடி யை அணிந்துகொண்டு வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. மக்கள், வலது சாரிகள் மற்றும் பிற்போக்குவாதிகள் பக்கம் அணிதிரளமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு, இவை இவ் வாறு முகமூடிகள் அணியத் தொடங்கி இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலை மையிலான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முன் னணி சில அதிதீவிர முழக்கங்களை முன் வைத்து மக்களைத் திரட்ட முயற் சித்ததை நாம் கண்டோம். இதேபோன்று இப்போது மேற்குவங்கத்திலும் மார்க் சிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கில் சில கீறல்கள் விழுந்திருப் பதைப் பயன்படுத்திக்கொண்டு, வலது சாரி எதிர்க்கட்சிகள் அனைத்துக் கம்யூ னிச எதிர்ப்பு சக்திகளையும், பிரிவினை சக்திகளையும் ஒன்றுதிரட்டி தாக்குதல் தொடுக்க முனைந்திருக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் கடந்த ஓராண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர்கள் 245 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள் ளனர். விவசாயிகளும் குத்தகை விவ சாயிகளும் வலுக்கட்டாயமாக அவர் களது வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். கட்சி மற்றும் வெகு ஜன அமைப்புகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இடது முன்னணிக்கு எதிராக உள்ள அரசியல் சக்திகளின் உண்மையான கோர முகத் தை இத்தாக்குதல்கள் வெளிப்படுத்து கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள் மீது மட்டுமல்ல, சாமா னிய மக்களுக்கு எதிராகவும் அவர்கள் இடதுமுன்னணி ஆட்சியில் அடைந்த ஆதாயங்களுக்கு எதிராகவும் அவர்கள் தொடுத்துள்ள தாக்குதல்களிலிருந்து அவர்களின் வர்க்கப் பின்னணியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. திரிணா முல் - காங்கிரஸ் கூட்டணியின் குறிக் கோள், இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றி, அதன் மூலம் “மோசமான சிவப்பு ஆட்சி”க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்.

மேற்கு வங்கத்தின் நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக கிராமப்புறங்களில் ஏழை விவசாயி களுக்கு ஆதரவாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நில உறவுகளை, மீண்டும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான ஒன்றாக மாற்ற அனுமதிக்கப் போகிறோமா?

முதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் மதவெறி, பிரிவினை வெறி சார்ந்த அரசியலை மேற்கு வங்கத்தில் மீண் டும் தலைதூக்க அனுமதிக்கப் போகிறோமா? என்பவையே இப்போது நம் முன் உள்ள முக்கிய கேள்விகளாகும்.

நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின் போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், தேர் தலுக்குப் பின் மாநிலத்தில் வகுப்புக் கல வரங்கள் வெடிக்கும் என்று அச்ச உணர்வை சிறுபான்மையினர் மத்தியில் கிளப்பியதை நாம் பார்த்தோம். கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கம் மூலம் நாம் ஏற்படுத்தியுள்ள அமைதிச் சூழலை, இவர்களின் குறுகிய அரசியல் லாபங்களுக் காக காவு கொடுத்திட அனுமதிக்கக்கூடாது.

கம்யூனிச எதிர்ப்புக் கூட்டணியானது, இனவெறி, மதவெறி, சாதிவெறி என்கிற அடையாள அரசியலை முன்னுக்குத் தள்ளி, அதன்மூலம் ஆதாயம் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அரசியலா னது உழைக்கும் மக்கள் மத்தியில் உருவாகி யுள்ள ஒற்றுமையினைக் குலைத்து, சமூகத் தின் முன்னேற்றப் பாதையினை சீர்குலைத்து, மீண்டும் பின்னுக்குத் தள்ளும்.

இடது முன்னணி தொடர்ந்து ஆட்சியிலி ருந்ததன் மூலம் எண்ணற்ற சாதனைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், சில எதிர்மறை அம்சங்களையும் தோற்றுவித்திருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர்கிறது. நாட்டில் உள்ள அதிகாரங்களற்ற ஒரு மாநில அரசைத்தான் நடத்திக்கொண்டி ருக்கிறது என்ற அடிப்படைப் புரிதலுடன் தான் இதுநாள்வரையிலும் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் அதிகாரவர்க்கம், காவல்துறை மற்றும் பல் வேறு நிறுவனங்கள் எவ்வித அடிப்படை மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு ஓர் அரசாங்கத்தில் செயல்பட்டதா னது, கட்சி மீதும் அதன் அமைப்பு மீதும் மோச மான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின் றன. இவ்வாறு ஓர் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் சமயத்தில், கட்சி ஊழியர்களின் கம்யூனிஸ்ட் குணங்கள் அரிக்கப்படுவதற் கான வாய்ப்புகள் ஏற்பட்டன. அவற்றைப் போக்கிட கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய தேர்தல் முடிவுகள், மக்களின் சில பிரிவினர் நம்மிடமிருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு இடது முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடு மட்டும் காரணம் என்று கூறுவதற்கில்லை. கட்சியில் உள்ள பலவீனங்களும், ஸ்தாபனக் குறைபாடுகளும் மற்றும் அங்குள்ள அரசியல் சூழ்நிலையும் அவற்றுக்கான காரணங்களா கும். பலவீனங்களைக் களைய, ஸ்தாபனக் குறைபாடுகளைப் போக்க மக்களுடன் மேலும் வலுவான பிணைப்பினை ஏற்படுத்த, கட்சி பல்வேறு முனைகளிலும் நடவடிக் கைகள் எடுத்திருக்கிறது.

இடது முன்னணி, சென்ற ஆண்டு பட் ஜெட்டில் அறிவித்த மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சியின் மோச மான கொள்கைகளால் கடுமையாக ஏறியுள்ள விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி மற் றும் பல்வேறு கொள்கைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

உண்மையில் பெரு நிறுவன ஊடகங்கள் சித்தரிப்பது போல் நிலைமை மேற்கு வங்கத் தில் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் வெகுஜனத் தளம் உறுதியாகவும் விரிவடைந்தும் இருப் பது தொடர்கிறது. இடது முன்னணிக்கு எதி ராகக் கைகோர்த்துள்ள சக்திகளால் நிரந்தர மாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது. சரியான உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், மக்களிடம் சென்று தீர்மானகரமாகப் பணியாற்றுவதன் மூலமும், நிலைமைகளை மீண்டும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத் திட முடியும்.

பிற்போக்கு சக்திகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்திடவும் மக்களுடன் இணைப் பை மீண்டும் ஏற்படுத்தவும் மேற்கு வங்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மேற்கொண்டுள்ள போராட்டத் திற்கு நாடு முழுவதும் உள்ள கட்சியும், இடது சாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் உடன் நிற் கின்றன. இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதன் பொருள், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் அவர்கள் இதுவரை பெற்ற ஆதாயங்களையும் பாதுகாப்பது என்பதாகும். இடது முன்னணி அரசாங்கம் என்பது மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் நீண்ட நெடுங்காலமாக நடத்தி வந்த போராட்டங்களின் விளைபொ ருள் என்பதை நாம் எந்தக் காலத்திலும் மறந் திட முடியாது.

தமிழில்: ச. வீரமணி

No comments: