Tuesday, June 1, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம்: மறு ஏலம் நடத்துக! ஊழல் அமைச்சர் ஆ.ராசாவை நீக்கவேண்டும்: சீத்தாராம் யெச்சூரி





புதுதில்லி, ஜூன் 1-

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் முந்தைய விற்பனை ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3-ஜி ஏலம் விட்டதுபோல் ஏலம் விட வேண்டும் என்றும், 2ஜி ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவ தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அமைச்சர் ஆ.ராசா அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், 2ஜி ஊழலில் ஈடுபட்ட அதிகாரி கள் மீது போதிய அளவிற்கு குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார்.

தலைநகர் புது தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் செவ்வாய் அன்று பத்திரிகையாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதம ருக்கு எழுதிய கடிதம் மற்றும் அஞ்சல் மற்றும் தொலைத்தகவல் தணிக்கை அலு வலகத்தின் தணிக்கைக் குறிப்புகளின் நகல்களை வெளியிட்டு, சீத்தாராம் யெச் சூரி கூறியதாவது:

சமீபத்தில் பிரதமர் அவர்கள் பத்திரி கையாளர்களைச் சந்தித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவும், அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் சில கருத்துக் களைத் தெரிவித்திருக்கிறார். 2ஜி விற்ற போது கிடைத்த வருவாய்க்கும் 3ஜி ஸ்பெக்ட் ரம் விற்றபோது கிடைத்த வருவாய்க்கும் இடையில் உள்ள பெரிய அளவிலான வித் தியாசத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நான் மீண்டும் இப்போது பிரத மருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கு முன்பும் இரு தடவைகள் இது தொடர்பாக அவருக்குக் கடிதங்கள் எழுதி யிருக்கிறேன்.

அமைச்சர் ஆ. ராசாவின் நடவடிக்கை களின் காரணமாக, அரசு கஜானாவிற்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் சட்டத்திற்குப் புறம்பாகவும், அரசு விதி முறைகளுக்குப் புறம்பாகவும் எப்படி எல் லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதையும், ஒருசிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர் இவ்வா றெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் பிர தமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக் கிறேன்.

சமீபத்தில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட் டதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அள வில் வருவாய் வந்திருக்கிறது. இதே நடை முறைப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டி ருந்தால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அப்போது கூடுத லாக வருவாய் வந்திருக்கும். அமைச்சர் சட்டவிரோதமாக அரசு விதிகளைத் திருத்தி இருக்கிறார். அதன் காரணமாகத் தான் அரசிடமிருந்து 2ஜி உரிமங்களை வாங்கிய நிறுவனங்கள் ஒரு குறுகிய காலத் திற்குள்ளேயே தாங்கள் வாங்கியதின் ஒரு பகுதியை ஐந்தாறு மடங்கு விலைக்கு அந்நிய நிறுவனங்களிடம் விற்க முடிந்தி ருக்கிறது. எனவே அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் இன்றைய சந்தை மதிப்பின் கீழான தொகையை முன்பு 2ஜி உரிமங்களை வாங்கிய கம்பெனிகளிட மிருந்து பெறத் தயங்கக் கூடாது. இவ்வாறு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களிடமிருந்து வாங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் தர மறுத்தால், அவர் களுக்கு அளித்துள்ள உரிமங்களை ரத்து செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியிருக்கிறேன்.

தவறான தகவல்

பிரதமர், பத்திரிகையாளர்களிடம் விவா திக்கையில் அமைச்சர் ஆ.ராசா ‘ட்ராய்‘ விதிமுறைகளின்படிதான் நடந்துகொண்டி ருப்பதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் தவறான தகவல் என்பதையும், எப்படியெல்லாம் அவர் ‘ட்ராய்’ விதிகளை மீறிச் செயல்பட் டிருக்கிறார் என்பதையும் பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.

எனவே, பிரதமர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்ற பழைய உரிமங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்றதுபோல் மீண்டும் 2ஜி உரிமங்களை விற்று, அரசுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரி செய்திட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்றது தொடர்பாக, மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண் டிருப்பதால், அவ்விசாரணைக்குக் குந்த கம் ஏற்படாத வகையில், அமைச்சர் ஆ. ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குத் துணை போன அதிகாரிகள் பலர் தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண் டும் என்று கடிதத்தில் பிரதமரைக் கோரி யிருக்கிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த பிரபிர் புர்காயஸ்தா உடன் இருந்தார்.

(ந.நி.)

No comments: