Saturday, March 29, 2008

வரலாற்றின் திருப்புமுனையாக சிபிஎம் மாநாடு அமையும்

மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கோயம்பத்தூரில் துவங்கியுள்ளது.எந்த ஒரு கம்யூனி°ட் கட்சிக்கும், குறிப்பிட்ட கால இடைவெளியில் - மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியைப் பொறுத்தவரை மூன்றாண்டு கால இடைவெளியில் - கூடும் ‘கட்சி காங்கிர°’ என்னும் அகில இந்திய மாநாடு, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான முடிவுகளை மேற்கொள்வதற்கான உச்சபட்ச அமைப்பாகும். அகில இந்திய மாநாடுதான், அடுத்த மாநாடு நடைபெறும் வரை உச்சபட்ச முடிவுகளை மேற்கொள்வதற்கான மத்தியக் குழுவைத் தேர்ந்தெடுக்கும். இயல்பான சூழ்நிலைகளில், மூன்று மாதங்களுக்கொரு முறை கூடும் மத்தியக்குழுவானது கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்படுவதற்காக ஒரு பொதுச்செயலாளரையும், ஓர் அரசியல் தலைமைக்குழுவையும் தேர்வு செய்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு, ஒரு மத்திய கண்ட்ரோல் கமிஷனையும் தேர்வு செய்கிறது. இது கட்சியில் ஒழுங்கு நடவடிக்i எடுக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் அவற்றை விசாரித்து, முடிவுகளை வழங்கும்.கட்சி காங்கிரசின் பிரதிநிதிகள் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் உள்கட்சி ஜனநாயக வழிமுறைக்கு இணங்கத் தெரிவு செய்யப்படுகிறார்கள். கட்சி °தாபனத்தின் அடிப்படைப் பிரிவுகளாக இருக்கின்ற ஒவ்வொரு கிளையும் ஒரு பிரதிநிதியை தனக்கு அடுத்த வட்டக்குழு அல்லது வட்டாரக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கிறது. இந்த வட்டக்குழு அல்லது வட்டாரக்குழு மாநாடு நடத்தி மாவட்ட மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. மாவட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள் மாநில மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். நிறைவாக மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் அகில இந்திய மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையாது, கட்சி உறுப்பினர் எண்ணிக்கையின் வலுவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு கட்சி காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே, கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் அற்புதமான செயல் வீரர்களுமாவார்கள்.கட்சியின் அகில இந்திய மாநாடானது, சென்ற மாநாட்டுக்குப் பின் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளின் மீது கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலம் - பலவீனம் இரண்டையும் மதிப்பீடு செய்து, அடுத்த மூன்றாண்டு காலத்திற்கான உத்திகளையும் வரையறுத்திடும். முக்கியமாக, சென்ற மாநாட்டில் வடித்தெடுக்கப்பட்ட அரசியல் நிலை மற்றும் உத்திகள் குறித்து ஆய்வு செய்யும் அதே சமயத்தில், அடுத்த கட்சி காங்கிர° நடைபெறும் வரையிலான அரசியல் நிலை மற்றும் உத்திகளையும் தீர்மானித்திடும். இவை அனைத்தும் அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் - °தாபன அறிக்கை மீது பிரதிநிதிகளின் விவாதத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் முடிவுகளின் அடிப்படையில் அமைந்திடும்.கட்சியின் அமைப்புச் சட்டத்தின்படி அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வரைவு, மத்தியக்குழுவால் உருவாக்கப்பட்டு, மாநாடு நடைபெறுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே, கட்சி அணிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், வரைவு தீர்மானத்தின் மீது திருத்தங்களை மத்தியக்குழுவிற்கு நேரடியாக அனுப்புவதற்கு உரிமை படைத்தவர்களாவார்கள். இந்தத்தடவை, மத்தியக் குழுவானது இவ்வாறு கட்சி உறுப்பினர்களிடமிருந்து 4,061 திருத்தங்களையும், 713 ஆலோசனைகளையும் பெற்றிருக்கிறது. இதுவன்னியில், தனியாக கட்சி காங்கிர° பிரதிநிதிகளும் மாநாட்டில் தங்கள் திருத்தங்களைத் தர உரிமை உண்டு. மத்தியக்குழு, கட்சி காங்கிர° நடைபெறுவதற்கு முன்பு வந்துள்ள அனைத்து திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்புடையனவா, அல்லவா என்பது குறித்து ஓர் அறிக்கையை மாநாட்டில் முன்வைக்கும். இது ஒரு முக்கியமான அறிக்கையாகும். ஏனெனில் கட்சி அணிகளின் சிந்தனையோட்டத்தையும், கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் அரசியல் நிலை எந்த அளவிற்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது அல்லது இல்லை என்பதையும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்சியின் திசை வழி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் இது பிரதிபலிக்கிறது. உறுப்பினர்களால் அனுப்பப்படும் திருத்தங்களை, கட்சியின் நிலைபாட்டிற்கு எதிரான ஒன்றாகக் கருதிடாமல், உறுப்பினர்களின் கூட்டு முயற்சியின்மூலம் கட்சியின் நிலைபாட்டை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவே மார்க்சி°ட் கட்சி இதனைப் பார்க்கிறது. அடுத்து, கட்சி காங்கிர° மேற்கொள்ளும் நடைமுறை உத்திகளை, அதன் இறுதி இலட்சியத்துடன் சரியான முறையில் பொருத்துவதே மிகவும் முக்கியமானது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் இறுதி லட்சியம் என்பது, கட்சித் திட்டத்தில் இன்றைய கட்டம் குறித்து வரையறை என்பதன் கீழ் கூறப்பட்டுள்ளதுபடி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதென்பதாகும். இது, பின்னர் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வதை நோக்கிச் மாறிச் செல்வதற்கான இடைக்கட்டமாக அமைந்திடும். மக்கள் ஜனநாயகப் புரட்சி முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாதார உற்பத்தி முறைகளின் மிச்ச சொச்சங்களை, முக்கியமாக நிலப்பிரபுத்துவத்தை, அழித்தொழித்திடவும், சுதந்திர இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவித்திடவும் கோருகிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற போராட்டத்தின்போதே இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆயினும், பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள் - இந்தப் பணிகள் நிறைவுறும்போது உருவாகும் மக்கள் எழுச்சியானது, முதலாளித்துவத்திடமிருந்தே விடுதலையைப் பெற்றுத்தந்துவிடுமோ என்று பிரதானமாகப் பயந்து, ஒரு பக்கத்தில் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு, மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு விட்டது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதென்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகபோக மூலதன எதிர்ப்புப் பணிகளை முழுமையாக எய்துவதன் மூலமே சாத்தியமாகும். பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இன்றைய இந்திய அரசை, தொழிலாளா வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் அரசாக மாற்றியமைப்பதன் மூலமே இது சாத்தியமாகும். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் திட்டத்தின்படி, மக்கள் ஜனநாயக முன்னணியால் - ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெரு முதலாளிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து வர்க்கங்களின் முன்னணியால் - மட்டுமே இதனை எய்திட முடியும். தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகர ஒற்றுமையே இத்தகு வர்க்க முன்னணியின் கருவாக இருந்திடும். இதற்கான செயல்முறையை வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலமும் அதனைத் தொடர்ந்து முன்னுக்கு வருகின்ற அரசியல் போராட்டங்களின் அடிப்படையிலுமே முன்னெடுத்துச் செல்ல முடியும். மக்கள் ஜனநாயக முன்னணியை பலப்படுத்துவதற்கு, மக்கள் ஜனநாயக முன்னணி அமைவதை நோக்கி இட்டுச் செல்லக்கூடியவகையிலும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக எய்தக் கூடிய வகையிலும் கொண்டுசெல்லத்தக்க வகையில், இப்போது இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவேண்டும் என்று கட்சித் திட்டம் கூறுகிறது. ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள், தங்கள் வர்க்க ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, இத்தகு புரட்சிகர நடைமுறை வெற்றி பெறுவதைத் தடுத்திட அனைத்து முட்டுக்கட்டைகளையும் போட முயல்வது இயற்கையே. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாக இந்திய மக்களை விடுவிப்பதற்குப் பதிலாக, இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அந்த சக்திகள் வலுவடையக் கூடிய வகையிலேயே இந்திய ஆளும் வர்க்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணி என்பது, வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்தும் அதே வேளையில் இத்தகு ஆளும் வர்க்கத்தின் கொள்கைளையும் இடைவிடாது எதிர்த்திட வேண்டும் என்பதையும் முக்கியமான ஒன்றாகக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் வகுப்புவாதமும் புரட்சிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு கூடுதல் அச்சுறுத்தலாக முன்வந்துள்ளதைப் பார்க்க வேண்டும். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினைப் பாதுகாத்திட வேண்டுமானால், இந்தியாவின் வளமான வேற்றுமைப் பண்புகளின் ரத்தமும் சதையுமாக உள்ள மதச் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டுமானால், வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திட வேண்டுமானால், மிகவும் முக்கியமாகச் செய்யவேண்டியது மதவெறியை எதிர்த்து முறியடித்திட வேண்டும். கம்யூனி°ட்டுகளைப் பொறுத்தவரை, கூடுதலாக ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது, புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது, மதவெறி சக்திகள் அத்தகைய ஒற்றுமையை தங்களுடைய மதவெறி பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக, சீர்குலைத்திட முயற்சிக்கின்றன. எங்கெல்லாம் மதவெறி சக்திகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் சுரண்டப்படும் வர்க்கங்களை வர்க்க ரீதியாகத் திரட்டுவது என்பதும் கடினமான ஒன்று. எனவே, மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், மதவெறி சக்திகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதென்பது அவசியமாகிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டங்களையும், மக்கள்இயக்கங்களையும் இரக்கமற்ற முறையில் ஒடுக்கிட, வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்திட முனையும்போது, கம்யூனி°ட்டுகள் மற்றும் இடதுசாரி இயக்கத்திற்கு உரிய அரசியல் இடத்தை அளிப்பதற்கு மறுக்கின்றன அல்லது எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்குக் குறைத்திட முயற்சிக்கின்றன. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு தேசிய அரசியலிலும், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் உள்ள அந்த°தானது, ஆளும் வர்க்கங்கள் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக முன்னெடுத்துச் சென்ற வர்க்கப் போராட்டத்தின் மூலம் அடைந்திட்ட வெற்றிகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுவதை விரும்பாத அதே சமயத்தில், இந்திய சமூக வாழ்க்கையின் துல்லியமான நிலைமைகள் நாட்டில் பல்வேறு விதமான அரசியல் கட்சிகள் உருவாவதற்கும் செயல்படுவதற்கும் வழிவகுத்திருக்கின்றன. எண்ணற்ற முரண்பாடுகளின் விளைவாகவே, பல்வேறு விதமா ஆளும் வர்க்க கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டிருப்பதை அரசியல் வானில் பார்க்க முடிகிறது. 1978இல் நடைபெற்ற மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாடு, அவசரநிலைப் பிரகடனம் தோல்விகண்டதை அடுத்து, இத்தகைய ஆளும் வர்க்க கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையாக முன்வந்த போது, ஒரு பக்கத்தில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்திடுவதென்றும், மறு பக்கத்தில் ஆளும் வர்க்க கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதென்றும் தீர்மானித்தது. இத்தகைய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் அடிப்படையில்தான் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்கதொரு சக்தியாக இன்றையதினம் வளர்ந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், வர்க்கப் போராட்டங்களையும் இடதுசாரி சக்திகளையும் திறமையாக ஒன்றிணைத்து வலுப்படுத்துவதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மற்றும் இந்தியாவை ஏகாதிபத்தியம் தன்னுடைய ‘‘இளைய பங்காளியாக’’ மாற்ற முயலும் முயற்சிகளுக்கு எதிராகவும், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை மதவெறியர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்திடவும், நவீன தாராளமயக் கொள்கைகளினால் ஏவப்பட்டுள்ள பொருளாதாரத் தாக்குதல்களிலிருந்தும் மக்களைத் தற்காத்துக் கொள்ளச் செய்திடவும், மக்கள் நலஞ் சார்ந்த மாற்றுக்காகப் பாடுபடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சக்திகளின் ஒற்றுமையையும் வலுப்படுத்திட வேண்டியதும் அவசியமாகும். நாட்டின் நலன்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட வேண்டுமானால், மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஒரு மூன்றாவது அரசியல் மாற்று தேவைப்படுகிறது. வரவிருக்கும் மூன்று ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளவேண்டிய உத்திகள் குறித்து தீர்மானிக்க வேண்டியதே மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிநிரலின் முக்கிய கருப்பொருளாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணிகளை முழுமையாக எய்தும் திசைவழியில், நாட்டையும் நாட்டு மக்களையும் அழைத்துச் செல்வதென்பது, மாநாட்டில் வகுக்கக்கூடிய உத்திகளையே தவிர்க்கமுடியாத வகையில் சார்ந்திருக்கிறது.

தமிழில்:ச. வீரமணி

No comments: