Saturday, February 12, 2022

 


முகத்திரை விலக்கப்பட்ட

சாவர்க்கர்

-ச.வீரமணி

 “வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27  அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.  வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட,   “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிர1 கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது,  பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு  ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார்.   இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின்  தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ,  இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார்.1 மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.2 இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.   இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம்  மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு  ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும்  இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.    

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதத்தில் வெளிவர விருக்கிறது.

இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.

..

 

 

Friday, January 14, 2022

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி

 

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி

(தமிழில்: ச.வீரமணி)

ஜனவரி 11 அன்று, பி.ஐ.பி. என்னும் பத்திரிகைத் தகவல் மையம் (PIB-Press Information Bureau), ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் அறிவிப்பை  வெளியிட்டிருக்கிறது. இது இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை அனுசரிப்பது சம்பந்தமானதாகும். ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (Azadi ka Amrit Mahotsav) என அதற்குப் பெயரும் இட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடி வீர காவியம் படைத்திட்ட இந்திய மக்களின் வரலாற்றைத் திரித்து எழுதுவதற்காகவே மோடி அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருக்கிறது என்பது தெளிவாகும்.   

இந்த அறிவிப்பில், இந்திய விடுதலை இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் மட்டும் வரையறுக்கப்பட்டுவிடவில்லை, மாறாக அது அதற்கும் முன்பாகவே  நாட்டின் அடிமைத்தனத்தின் காலகட்டத்தையும் கடந்திருக்கிறது, (“the freedom movement is not limited only to British rule, even before that India has gone through a period of servitude”) என்று கூறுகிறது. இன்றைய தினம் நிறுவப்பட்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் பூகோள வரைபடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அழைத்ததுபோன்று பல்வேறு மன்னர் சமஸ்தானங்களாக (princely states) இருந்தது. பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் வெற்றிபெற்ற விடுதலை இயக்கம், பின்னர், இந்தியாவில் இருந்துவந்த 650க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களை இந்திய ஒன்றியம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. அந்த அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபையால் இந்திய அரசமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்புச்சட்டம் 1950இல் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக, இந்தியா என்னும் ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15க்குப்பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை வெற்றிகரமாகத் தோற்கடித்தபின்னர் ஒரு சுதந்திரமான நாடாக மாறியது.

இத்தகைய வீரகாவியம் படைத்திட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளுக்கோ எவ்விதப் பங்கும் கிடையாது. இப்போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த இந்திய மக்கள் தங்கள் மத பேதங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, சுதந்திரம் பெற்றிடவும், ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசை நிறுவியிருப்பது குறித்தும் அவர்களுக்கும் எவ்விதச்சம்பந்தமும் கிடையாது.

இப்போது ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முதல் யுத்தம், 1857 எழுச்சிக்கு, ஸ்வாமி விவேகானந்தரும், ரமண மகரிஷியும் உத்வேகம் ஊட்டினார்கள் என்று கூறுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டிலும், ரமண மகிரிஷி 1879ஆம் ஆண்டிலும் பிறந்தவர்களாவார்கள். இவர்கள் எப்படி இவர்கள் பிறப்பதற்கு முன்பே நடைபெற்ற 1857 கலகத்திற்கு உத்வேகம் ஊட்டினார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

1857 கலகம், இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் நடைபெற்றது. இதில் இந்துக்களும் முஸ்லீம்களும் பிரதானமான பங்களிப்பினைச் செய்தார்கள். ஜான்சி ராணி, லட்சுமிபாய் அவர்கள், தாண்டியா டோப் (Tantia Tope) மற்றும் இதர தலைவர்களுடன் இணைந்து, 1857இல் தில்லி செங்கோட்டையில் நின்றுகொண்டு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், இனி சுதந்திரமான இறையாண்மையுடன் கூடிய இந்தியாவை மொகலாய அரசர், பகதூர் ஷா ஜஃபார் (Bahadur Shah Zafar) ஆட்சி புரிவார் என்றும் பிரகடனம் செய்தார்கள். பகதூர் ஷா ஜஃபார் அவர்களை ஆர்எஸ்எஸ் அகராதியானது, பாபரின் சந்ததியைச் சேர்ந்தவர்” (“Babur ki Aulad”) எனக் கேலி செய்துள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற சாமியார்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தீயிட்டுக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது, சமூக ஊடகங்களில் முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து எண்ணற்ற அசிங்கமான ஆப்புகள் (nasty and obscene apps) வலம் வந்துகொண்டிருப்பது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 80 சதவீதத்தினரான இந்துக்களுக்கும், 20 சதவீதத்தினரான முஸ்லீம்களுக்கும் இடையேயான போராட்டம் என்று பிரகடனம் செய்திருப்பது (உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை சுமார் 19 சதவீதமாகும்) ஆகியவற்றை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

ஒன்றிய மோடி அரசாங்கம் மேலே கண்டவாறு ஆபத்தான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இப்போதுள்ள இந்தியக்குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை மாற்றியமைத்திட விரும்புகிறார்கள் என்னும் நோக்கத்தைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. 

இவர்களின் சூழ்ச்சித்திட்டம் மிகவும் தெளிவானவையே. இவர்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள இப்போதைய மதச்சார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சூழ்ச்சித்திட்டமாகும். இது, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய மக்களின் போராட்டத்திற்கு நேரெதிரான ஒன்றாகும்.

பிஐபி பத்திரிகைச் செய்தி மேலும், இந்த அநாமதேய சுதந்திரப் போராளிகள் மீதான கவனத்தை மாற்றும் நோக்கத்துடன், அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கின்றன” (“With the purpose to shift the spotlight on these anonymous freedom fighters, Amrit Mahotsav celebrations have been started”) என்று கூறுகிறது. இதற்குப்பின் ஒளிந்துள்ள நிகழ்ச்சிநிரல் என்னவெனில், விடுதலைப் போராட்டக் காலத்தில் உண்மையில் பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவிய ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா பேர்வழிகளை, வீராதிவீரர்கள் எனக் காட்டுவதற்கான முயற்சிகளேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு மிகவும் அனுதாபம் காட்டக்கூடிய விதத்தில் புத்தகங்கள் எழுதியுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி. டாம்லே போன்றவர்கள்கூட (The Brotherhood in Saffron by Walter K Andersen and Shridhar D Damle, 1987, amongst others) விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் முற்றிலுமாக இல்லாமலிருந்த விவரங்களையும், அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பல்வேறு ஆதாயங்களைப் பெற்ற விவரங்களையும் அளித்திருக்கின்றனர்.  அவர்கள் தங்கள் புத்தகத்தில் மேலும் கூறியிருப்பதாவது: உண்மையில், பம்பாய் உள்துறை, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, சங் பரிவாரங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எவ்விதமான போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தன்னைப் பார்த்துக்கொண்டது. குறிப்பாக, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கலவரங்களின்போது எவ்விதப் பங்கும் மேற்கொள்ளாது தன்னைத் தவிர்த்துக்கொண்டது…. (ஆண்டர்சன் – டாம்லே எழுதிய புத்தகம், 1987, ப.44). இந்துத்துவா ராஷ்ட்ரத்தை நிறுவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு இருந்துவந்த அரிப்புதான், அதனை பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீச இட்டுச்சென்றது.

இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமானது பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவியது நன்கு நிறுவப்பட்டுள்ளபோதிலும், அது விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகளுக்கு எதிராக அவதூறுச் சேற்றை வாரி இறைத்திட எப்போதும் தயங்கியது இல்லை.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டினாலே போதுமானதாகும். அப்போது அவர், கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்த ஆலைகளில் பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் நடந்தபின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டன் அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் உள்ளவர்களில் பலர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்று நிரூபணமாகியிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகப், பேசினார்.

இதைவிட வேறெதுவும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா, என்ன? சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒருவரே, இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாகப் பேசும்போது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்களாகவே இருந்தார்கள் என்று நேரடியாகவேப் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிய நம் பயணத்திற்குத் தடையாக இருந்திடும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் இத்தகைய ஆபத்தான நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

இந்தியா, அதாவது பாரதத்திற்காக, சுதந்திர இந்தியாவின் குணாம்சத்தை மாற்ற முயலும் இந்த மதவெறி சக்திகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

(ஜனவரி 12, 2022)

நன்றி:

பீப்பிள்ஸ் டெமாக்ரசி

 

 

 

 

Wednesday, December 22, 2021

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

 


ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் சங்கநாதம்

புதுதில்லி-

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை என்பது மிகவும் முக்கியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாநிலங்களவையில் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊதியங்கள் திருத்தச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜான் பிரிட்டாஸ் தன் முதல் பேச்சில் (maiden speech) பேசியதாவது:

தலைவர் அவர்களே, முதலில் ஓராண்டு காலமாக நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த விவசாயிகளுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அதேபோன்று, நாகாலாந்து மாநிலத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தளபதி பிபின் ராவத் மற்றும் இதரர்களுக்கும் என் அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக, இந்த அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 சக உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒருமைப்பாடு தெரிவிப்பதற்கும் அருள்கூர்ந்து என்னை அனுமதிக்கும்படித் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் அவைக்குக் கொண்டுவருவதற்கு, அவைத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  

நான் இந்த அவைக்கு புதிய உறுப்பினராக இருந்தபோதிலும், இது என்னுடைய முதல் பேச்சாக (maiden speech) இருந்தபோதிலும், இதனை நான் ஏன் கூறுகிறேன்? ஏனெனில் நான் 1988இலிருந்தே நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன். (ஊடகவியலாளர்கள் அமரும் இருக்கையைச் சுட்டிக்காட்டி) நான் அங்கே அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன். அவையில் பல அமளிகளைப் பார்த்திருக்கிறேன். நம் மாநிலங்களவைத் தலைவர்களின் உணர்ச்சிமிகு உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். சங்கர் தயாள் சர்மா ஜி ஒருமுறை கண்ணீர் விட்டுக் கதறியதைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு அவர் கண்ணீர்விட்டுக் கதறக் காரணமாக இருந்த உறுப்பினர்களில் ஒருவர் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பெயர் கூட குறிப்பிடப்பட்டது. எனினும், எவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது பெயர் குறிப்பிடப்படாமலேயே எங்கள் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  

அடுத்ததாக, இந்தச் சட்டமுன்வடிவிற்கு வருகிறேன். நாம் மிகவும் குறிப்பிட்டுக்கூற விரும்புவது நீதித்துறையின் சுதந்திரமாகும். இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம், நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கானது என்று சட்ட அமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆனாலும், இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்போது ஓர் ஆழமான இடைவெளி (serious lacuna) இருப்பதை மாண்புமிகு சட்ட அமைச்சர் புரிந்துகொண்டிருக்கிறாரா? நீதிபதிகளின் நியமனத்தைப் பொறுத்தவரை நமக்கு எவ்விதமான பங்கும் கிடையாது. இதுபோன்ற நிலைமை உலகில் வேறெங்கும் இருக்கிறதா? கிடையாது. நீதிபதிகளே, நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த ‘விசித்திரமான’ நிலை குறித்து சட்ட அமைச்சர் ஓர் உறுதியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை.  ‘விசித்திரமான’ நிலை என்பதை நான் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

மக்களவையில் இந்தச் சட்டமுன்வடிவு விவாதத்திற்கு வந்தபோது அவர் அளித்திட்ட பதிலைப் பார்த்தேன். அங்கே, நீதித்துறை, அரசாங்கம், நாடாளுமன்றம்/சட்டமன்றம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்திருந்தது. மக்களும் தங்களுக்கு நீதி வழங்குபவரின் தகுதி, திறமை, நேர்மை குறித்து தெரிந்து கொள்ளட்டுமே. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள்சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா, என்ன? இதுபோன்ற நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலாவது உண்டா? இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற நிலை. இது தொடர்பாக சட்ட அமைச்சர் எதுவுமே கூறவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை சிதைத்திடும் இந்த முறை குறித்து அவர் எதுவுமே தன் பதிலில் கூறவில்லை. இந்த முறை ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நாம் ஓர் அனுசரணையான போக்கை, கொடுக்கல் வாங்கல் போக்கைக் கடைப்பிடிக்கிறோமா? ஒரு சிறுகுழு (oligarchy) நீதிபரிபாலனம் செய்யும் முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா? வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏராளமான அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இது குறித்து எதுவும் கூறுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து நம்மைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து வந்து நேர்மையான நீதி வழங்கிய எண்ணற்ற நீதிபதிகளும் உண்டு. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள். உயர்நீதிமன்ற இணைய தளத்தில் ஒரு நீதிபதியின் தன் விவரம் குறித்துப் படிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. அவருடைய தாய்வழித் தாத்தா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருடைய மாமா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, இவ்வாறு அது நீண்டு போய்க்கொண்டிருக்கிறது.

இங்கே நாம் வம்சாவழியினரின் ஆட்சி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் உள்ள வம்சாவழியினர் குறித்து பாஜக உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்கள். ஆனால் நீதிபதிகள் நியமனம் என்பது மிகவும் தெளிவான முறையில் வம்சாவழியாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் ஏன் மவுனம் கடைப்பிடிக்கிறோம்?

இவ்வாறு அரசிடம் இருந்து வந்த முன்மொழிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு பண்டமாற்று முறையைக் (barter) கடைப்பிடிக்கிறது என நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பொருந்தாத நபர்களின் நியமனங்களை வெற்றிகரமானமுறையில் நீக்கிவிட்டது. மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களே, நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் எவர் பெயரையாவது பரிந்துரைத்தால், அவர் தங்களுக்குப் பொருத்தமானவர் அல்ல என அரசாங்கம் நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளாது. சில நீதிபதிகள் எவ்விதக் காரணங்களுமே கூறாது தண்டிக்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சில தலைமை நீதிபதிகள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஒருவரை நீதிபதியாக்குவதற்கு எவ்விதமான வயது உச்சவரம்பும் கிடையாது. சிலர் வயதைக் கூறி நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், இரவோடிரவாக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். நான் பெயர்களைக் கூற விரும்பவில்லை.   

நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, உயர்நீதிமன்றங்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் எவருக்கும் கீழானவர்கள் (subordinate) அல்ல. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் அரசமைப்புச் சட்டத்தின்கீழான மன்றங்கள். ஆனால், உச்சநீதிமன்ற கொலிஜியம், உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழான நிறுவனங்களாக மாற்றியிருக்கின்றன.

சில புள்ளிவிவரங்களை உங்கள்முன் அளிக்க விரும்புகிறேன். டிசம்பர் 2 அன்று, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் என் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம்களிலிருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் பல மட்டங்களில் நிலுவையில் இருக்கின்றன என்று கூறியிருந்தார். அதாவது, நீதித்துறை சம்பந்தப்பட்ட துறையில் 75 பெயர்கள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 35 முன்மொழிவுகள் துறையின்கீழ் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முன்மொழிவுகள் பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கின்றன. 13 முன்மொழிவுகள் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அது நீளுகிறது. இவ்வாறாக உயர்நீதிமன்றங்களாலும், உச்சநீதிமன்றத்தாலும் அனுப்பப்பட்ட நீளமான பட்டியல்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.  இதுதொடர்பாக மேலும் எதுவும் கூற நான் விரும்பவில்லை.

இவ்வாறு நிலுவையில் இருப்பதால் மக்கள் ஏராளமாகச் சந்தேகப்படுகிறார்கள். நீங்கள் வெளிப்படையான முறையைக் கொண்டிருக்க வேண்டும்.

உயர்நீதிமன்றங்கள் தற்போது தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கையில் வெறும் 59 சதவீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதிபதிகள் ஓய்வு பெற்றபின்பு மீண்டும் நியமனம் செய்யப்படலாமா என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் பலர் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எதிராகப் பலர் தங்கள் நிலைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேராசிரியர் கே.டி. ஷா, ஓய்வுபெற்றபின்பு நீதிபதிகளுக்கு மறு நியமனம் அளிக்கக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார்.

பேராசிரியர் சிப்பன் லால் சக்சேனா, கூறியதை மேற்கோள் காட்டுகிறேன். “ஓய்வுபெற்றபின்பு வேறு உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படலாம் என்கிற தூண்டுதல் இருக்குமாயின் இதனை ஆட்சியிலுள்ளவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பளித்துவிடும். இந்த நிபந்தனையை நீக்காவிட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் அல்லது ஆட்சியில் உள்ள எந்தவொரு கட்சியாவது இதனைப் பயன்படுத்திக்கொள்ளும். இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

நம்முடைய முன்னாள் சட்ட அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி இது தொடர்பாக என்ன கூறியிருக்கிறார்? “சில சமயங்களில், ஓய்வு பெறுவதற்கு முன்பு சில நீதிபதிகள் நடந்துகொள்ளும் விதம், அவர்கள் ஓய்வு பெற்றபின் சில பதவிகளில் அமர்த்துவதற்கான ஆவலால் செல்வாக்கு செலுத்துகிறது,” என்று அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். அருண் ஜெட்லி இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் மேலும், “இருவிதமான நீதிபதிகள் இருக்கின்றனர். ஒன்று, சட்டத்தைத் தெரிந்துள்ள நீதிபதிகள். மற்றொன்று, சட்ட அமைச்சரைத் தெரிந்துள்ள நீதிபதிகள். நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கொண்டிருப்பது உலகிலேயே நம் நம் நாட்டில் மட்டும்தான். ஓய்வு பெறும்வயது வந்தபின்னரும்கூட, நீதிபதிகள் ஓய்வு பெற விரும்புவதில்லை,” என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் ஒரு சில தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் உள்ள வேதனையை வெளிப்படுத்த நான் தயங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ரபேல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக இயக்குநர் அலோக் வர்மா அதிகாரங்கள் இரவோடிரவாக அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது. இதுதான் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகும்.

ஒருநாள், இந்திய மாநிலம் ஒன்று, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, இந்த அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீதே மரண அடி கொடுக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றம் இதுவரை எதுவுமே கூறாதிருப்பது, ஏன்?

நான் அயோத்தி தீர்ப்பு குறித்து எதுவும் கூறப்போவதில்லை. அநாமதேய தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தங்களுக்கு ஆழமான கருத்துக்கள் இருப்பதாக ஓர் உறுதிவாக்குமூலத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரையில் இது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று தேர்தல் பத்திரங்களைக் குறிப்பிட்டிருந்தது. நீதிபதிகள்  அதனை மறந்துவிட்டார்கள். இது தொடர்பான வழக்கைக் கையாண்ட நீதிபதியின் நேர்காணலை நான் பார்த்திருக்கிறேன். அவர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு குறித்து ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார். அந்த நீதிபதி யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் இந்த அவையின் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை.

மாண்புமிகு உறுப்பினர் நிதின் கட்காரி கூட, ஒரு நீதிபதி ஓய்வு பெற்றபின் இரண்டு ஆண்டுகள் ஓய்வு கொடுத்துவிட்டுப் பிறகுதான் அவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சர்கள் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி கூறியதைக்கூட கேட்க ஏன் மறந்துவிட்டது?

இப்போதுள்ள நீதிபதிகள் நியமன முறையானது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிறது. ஒரு புதிய வர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். நான் புரிந்துகொள்கிறேன். நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து புத்திசாலித்தனமான நீதிபதிகள் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்துவந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 47 பேர்களில் 14 பேர் பிராமணர்கள். 1950இலிருந்து 1970 வரை உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகள் எண்ணிக்கை 14இல் 11 பேர் பிராமணர்கள். 1971-89இல்…(குறுக்கீடு)

1980 வரை உச்சநீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை.

நீதித்துறை செயல்பாடு என்பதும் ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நீதித்துறையின் சுதந்திரம் மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.

(ச.வீ