Sunday, September 15, 2013

முசாபர் நகர் - ஓர் எச்சரிக்கை மணி


முசாபர்நகர் கலவரம் சமீப ஆண்டு களில் நடைபெற்ற மிக மோசமான வகுப்புக்கலவரமாகும். முப்பத்திரண்டு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறார்கள் உட்பட ஏராளமானோர் காயம் அடைந்திருக்கிறார்கள். மிகவும் சங் கடத்திற்குரிய அம்சம் என்னவெனில், வன்முறை கிராமங்களுக்கும் விரிவடைந்து ஏராளமானோர் தங்கள் வீடு களைத் துறந்து ஓடி ஒளிந்திருப்பதாகும். ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் கேலி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து, இதற்குப் பழிவாங்கும் முறையில் இரு இந்து இளைஞர்கள் கொல்லப் பட்டதுதானது, வகுப்புக் கலவரம் காட்டுத் தீ போல் பரவக் காரணமாகிவிட்டது.கடந்த ஓராண்டு காலமாகவே மாநி லத்தில் தொடர்ச்சியாக வகுப்புத் துவேஷ நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வந்ததை அடுத்து முசாபர்நகர் கலவரம் நடைபெற்றிருக்கிறது. 2012 பிப்ரவரியில் சமாஜ்வாதிக் கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர், கோசிகலான், பரேலி, பிரதாப்கார், பைசாபாத் மற்றும் பல இடங்களில் மத வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்நிகழ்வுகள் பலவற்றின்போதும். கோசி கலான் மற்றும் பைசாபாத் ஆகிய நிகழ்வுகளின்போது நடைபெற்றதுபோன்று, மதவெறித் தீயை சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல முயற்சிகள் நடைபெற்றன. முசாபர்நகரில் நிலைமையைச் சமாளிப்பதில் நிர்வாகம் நிச்சயமாக மிகவும் மந்தமாக இருந்துவிட்டது. ஆகஸ்ட் 27 அன்று முதல் நிகழ்வு நடை பெற்ற பின்னர், நிலைமையைப் பயன் படுத்திக் கொள்ள மதவெறி சக்திகளுக்கு முழுமையாக பத்து நாட்கள் கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது.

ஜாட் வகுப்பினரின் கட்டைப் பஞ்சாயத்துக்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற மகா கட்டைப் பஞ்சாயத்தும் மதவெறித் தீயை உசுப்பிவிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. கடந்த ஓராண்டாகவே மதவெறியைக் கிளப்பும் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவந்ததைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இவ்வாறு ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் நடைபெறக்கூடிய சமயத்தில், உத்தரப்பிரதேச அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
நிர்வாகம் காலத்தே செயல்படத் தவறியதைச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், ஆர் எஸ்எஸ் / பாஜக கூடாரம் இந்நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி மதவெறித் தீயை விசிறிவிட மேற்கொண்ட நடவடிக்கைகளையும் காணத் தவறிவிடக்கூடாது. நான்கு பாஜக எம்எல்ஏ-க்கள், மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறி விட்ட தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு எம்எல்ஏ, ஒரு போலி வீடியோ காட்சியை தொலைக்காட்சி அலைவரிசைகளில் பதிவேற்றம் செய்த தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அந்த போலி வீடியோ காட்சியில் முஸ் லீம்கள் இந்துக்களைக் கொல்வது போல் காட்டப்படுகிறது.
உண்மையில் இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த ஓராண்டு காலத்தில், ஆர் எஸ்எஸ் இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் மதவெறி அடிப்படையில் மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்பிடும் பிரச்சனைகளைத் திட்டமிட்டு உரு வாக்கி, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற் படுத்தி வந்தன. சென்ற ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப் பட்ட பசுவைக் கொல்லுவதற்கு எதிரான பிரச்சாரம் இத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. வன்முறை வெடிப்பதற்கு முன்பு, பைசாபாத்தில் யோகி ஆதித்யநாத் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆத்திர மூட்டும் வகையிலான பேச்சுக்கள் மற் றோர் எடுத்துக்காட்டாகும்.

2014இல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர் தலின் போது பாஜக பயனடைய வேண் டும் என்பதற்காக, மதவெறித் தீயை உரு வாக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் தன் அமைப்புகளைச் செயல்படுமாறு முழு மையாக இறக்கிவிட்டுள்ளது. முசாபர் நகரில் நடைபெற்றுள்ள கலவரங்களும் ஜாட் இனத்தினரை பாஜக முகாமிற்குள் இழுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் படும்.இரு மாதங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்காக, குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கிவந்த அமித் ஷாவை அனுப்பிவைத்திட, பாஜக தீர்மானித்தது. அமித் ஷாவும் அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்காகத் தற் காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தி லிருந்து தன் பயணத்தைத் துவக்கினார்.

அப்போதிருந்தே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேலை யைக் கடுமையாகத் துவக்கிவிட்டார். கடந்த சில மாதங்களாகவே மதவெறி வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவிற்கு அதிகரித்து வந்தன. ஜம்முவில் கிஷ்ட்வார், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா ஆகிய நகரங்களில் ஆர்எஸ் எஸ்/பாஜக கூடாரத்தின் வெறித்தனமான நடவடிக்கைகள் மூலம் இந்து - முஸ்லீம் மோதல்கள் உருவானதைப் பார்த்தோம்.
உண்மையில், பெட்டியா மற்றும் நவாடா நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் நரேந்திரமோடி வாழ்கஎன்று கோஷமிட்டதாகவும் அதற்குப் பிறகு அவர்கள் வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளும் தில்லியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை உருவாக்கு வதற்காக ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தி யிருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ், பாஜகவை 2014ல் நடைபெறவுள்ள தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்டளை யிட்டிருப்பது தெளிவாகிறது.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், எல்.கே.அத் வானி, நரேந்திர மோடி உட்பட பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஆர்எஸ் எஸ்சின் கட்டளையின்படி, பாஜக நரேந் திர மோடியை அதன் பிரதமர் வேட்பாள ராக அறிவித்திடப் பணிக்கப்பட்டிருக் கிறது. நாட்டில் மதவெறி வன்முறை நிகழ்வு கள் அதிகரித்து வருவது குறித்தும், இவற் றில் இந்துத்வா சக்திகளின் பங்கு குறித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபரில் தசரா, துர்கா பூஜா, பக்ரித் பண்டிகைகள் வரவிருக் கின்றன. அந்த சமயத்தில் மத ஊர்வலங் கள் மிகவும் பதற்றமான பகுதிகளில் செல்லும்போது மதவெறியர்களால் வகுப்புக் கலவரங்கள் உருவாக்கப்படக் கூடும்.
மத்திய அரசும், மாநில அரசு களும் மிகவும் விழிப்புடனிருந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத் திட வேண்டும். மதவெறியர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்களது சதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும். முசாபர்நகர் நிகழ்வுகள் ஓர் எச் சரிக்கை மணியாகும். மதவெறி சக்தி களை - அவை எந்த இனத்தைச் சேர்ந்த வையாக இருந்தாலும் சரி - தனிமைப் படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் தில்லுமுல்லு களைத் தோலுரித்துக்காட்டிட ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



Saturday, September 14, 2013

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்வியல்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 2013 செப்டம்பர்14 அன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சோழ. நாகராஜன் இசையுரை வழங்கினார். அவர் பாடிய பாடல்களில் சிலவற்றைக் கேட்போம்.


2.


3.

Sunday, September 8, 2013

பெரும் கார்ப்பரேட்டுகளே காரணம்!


பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில், ரூபாய் மதிப்பு சரிவு சம்பந்தமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பிரதமர் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையை 1991 நெருக்கடியுடன் ஒப்பிட முடியாது என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அப்போது ரூபாயின் மதிப்பு நிலையான விகிதத்தில் இருந்ததாகவும், ஆனால் தற் போது அது நெகிழ்வுத் தன்மையுடனும், சந்தையுடன் பிணைக்கப்பட்டிப்பதாகவும் இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் தெரி வித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்தை தாமாகவே இத்தகைய ஏற்றத்தாழ்வுகளைச் சரிப்படுத்திவிடும் என்பதே அவரது கூற்றின் அர்த்தமாகும். எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருப்பது என்பதே இத்தகைய சந்தை சரிப்படுத்தலின் விளைவுதான். ஆகவே, தாராளமயப் பொருளாதாரத்தின் ஒரு காரணியாக இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

அதன் காரணமாகவே அனைத்து இறக்குமதிப் பொருள்களும் விலை அதிகமாக இருக்கிறது, அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பது போன்றும், தொழில்மயம் எதிர்மறையில் இருப்பதையும், அதன் விளைவாக வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதையும் பற்றித் தங்களுக்குக் கவலை யில்லை என்பது போன்றும் அவரது கூற்றுகள் உள்ளன. மேலும், நாட்டின் பொருளாதார அடிப்படை வலுவாக இருப்பதால், இந்தியா இந் நெருக்கடியிலிருந்து மீண்டெழும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 1991இல் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (அதாவது மொத்த இறக்குமதியின் மதிப்புக்கும் ஏற்றுமதியின் மதிப்புக்கும் இடையேயுள்ள வித்தியாசம்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காடாக இருந்தது. அப்போது அதுவே ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கருதப்பட்டது.
ஆனால் இன்று நடப்புக் கணக்குப் பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடாகும். 1991இல் கடன் சேவை சுமைநடப்புக் கணக்கு ரசீதுகளில் சுமார் 21 விழுக்காடு இருந்தது. இன்று அந்த இலக்கம் 35.09 விழுக்காடாகும். இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 1991இல் ஒருசில வாரங்களுக்கே இறக்குமதியை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு மிகவும் குறைந்த அளவினதாகத்தான் இருந்தது. இன்று அதைவிடச் சற்று நல்ல நிலையில் இருக்கிறது என்ற போதிலும், இதனைக் கொண்டும் ஆறு மாதங்களுக்கு மேல் இறக்குமதிக்கு நிதி அளித்திட முடியாது. 1991இல் பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்வதற்கு இட்டுச் சென்றது. இன்று நிலைமை கிட்டத்தட்ட அதுவேதான். 1991 நிலைமை நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தைக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் தான் இன்றைய மோசமான நிலைமைகளுக்குக் காரணங்களாகும். நவீன தாராளமய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகையில், நாட்டில் முதலாளித்துவ அரசின் உண்மையான குணத்தின்படி, தன்னுடைய கட்டுப்பாடு எதுவுமில்லாத சலுகைசார்முத லாளித்துவத்தை மேம்படுத்திட அது மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளும் வெளிச்சத்திற்குவந்தன. இன்றைய தினம் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ள முடியும். தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைத் தூக்கிப் பிடிக்கும் அதிமேதாவிகள், அரசாங்கம் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்காக அதீதமாக இலவசத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுதான், நாட்டின் நிதிப்பற்றாக் குறைக்கும், அதிக அளவிலான சமநிலையின்மைக்கும் காரணம் என்று, நாடும் நாட்டு மக்களும் நம்பவேண்டும் என்பதற்காகக் கதை அளந்து கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுகையில் அவர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு தங்கள் கோபத்தை வெளிக்காட்டியதற்கு இதுதான் காரணமாகும்.

உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டால், அது நாட்டிலுள்ள நிதி சமநிலையின்மையை மேலும் மோசமாக்கிவிடும் என்று இவர்களால் கூறப்படு கிறது. நவீன தாராளமயவாதிகளைப் பொறுத்தவரை, மக்கள் பசி-பஞ்சம்-பட்டினியால் செத்தாலும் கவலையில்லை, அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது மூலதனத்தின் நலன்களுக்குச் சேவகம் செய்வது தொடர வேண்டும். இத்தகைய புரிதலின் காரணமாகத்தான், மன்மோகன் சிங் அரசாங்கம் உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய அடுத்தநாளே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கணிசமாக உயர்த்தியதும், அதன்மூலம் ஏழைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அற்பசொற்ப மானியங்களும் வெட்டப்படும் என்று சமிக்ஞை அளித்திருப்பதுமாகும்.

அதேசமயத்தில் பணக்காரர்களுக்கு ஊக்கத்தொகைகள்என்ற பெயரில் அளிக்கப்பட்டுவரும் மானியங்கள் தொடரும் என்பது மட்டுமல்ல, தற்போதைய தொழில் உற்பத்தி -1.6 விழுக் காடு வளர்ச்சியாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, அதனை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது.1991 நெருக்கடிக்கும் இப்போதைய நெருக்கடிக்கும் இடையே முக்கியமான வித்தியாசம் உண்டு. 1991ல் நிதி சமநிலையின்மைக்குப் பெரிய அளவில் காரணமாக இருந்தது அரசாங்கக் கணக்கு தான், உதாரணமாக, அப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் சுமார் 60 விழுக்காட்டிற்கு அரசாங்கக் கடன்தான் காரணமாகும். அப்போது நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இதற்கு முன் மொழிந்த தீர்வு, அரசின் செலவினங்களைக் குறைப்பது என்பதும், மக்கள் மீது அதிக அளவில் சுமைகளை ஏற்றுவது என்பதுமேயாகும். அதே சமயத்தில் நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடுவதையும் அவர் மேற்கொண்டார். ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் வித்தியாசமானது. இன்றைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நெருக்கடிக்குப் பிரதானமாகக் காரணம் அரசாங்கத்தின் அதீத செலவு அல்ல. (தற்போது அளித்துவரும் மிகக் குறைந்த மானியங்களை மேலும் குறைப்பதற் காக இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள்) மாறாக இப்போதைய நெருக்கடிக்கு இந்திய கார்ப்பரேட்டுகளே, குறிப்பாக பெரும் கார்ப்ப ரேட்டுகளேயாவார்கள். 2013 செப்டம்பர் 2 அன்று பிசினஸ் லைன்நாளேடு தன்னுடைய இணைய தளத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், நாட்டில் உள்ள மிகப் பெரிய பத்து கார்ப்பரேட் குழுக்கள்தான் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மடங்கு அளவிற்கு, வாங்கிய மொத்த கடன்களையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன என்று பதிவு செய்திருக்கின்றன. இவ்வாறு கடன் வலையில் மாட்டிக்கொண்டிருப்பவை இந்தியக் கார்ப்பரேட்டுகள்தான். தன்னுடைய குணத்திற்கேற்ப, இந்தியாவில் உள்ள முதலாளித்துவ அரசு அவர்களைக் காப்பாற்றுவதற்காக அதிக அளவில் அயல்நாடுகளிலிருந்து கடன்களை வாங்குவதற்கு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.ஆட்சியாளர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் மூலம் கார்ப்பரேட்டுகள் ஒவ்வொராண்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொண்டுவர அனுமதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் அது 750 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒரு பக்கத்தில் மக்களிடம், தங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், பாதுகாப்புத்துறை உற்பத்தி, இன்சூரன்ஸ், வங்கி, ஓய்வூதிய நிதியம் போன்று நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெரிய அளவிற்கு அந்நிய மூலதனம் பாய்வதற்கு அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நம் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நிதி மூலதனச் சந்தையின் நிச்சயமற்ற தன்மைக்கேற்ப மிகவும் மோசமான முறையில் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவை நாட்டு மக்களுக்கு மேலும் மிகப்பெரிய அளவில் சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்திவிடும்.

ஒளிரும் இந்தியா’, ‘எல்லாம் நன்றாகவே நடக்கிறதுபோன்ற முழக்கங்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி விழுங்க வைப்பதற்கான இனிப்பு தடவப்பட்ட கசப்பு மருந்துகளேயன்றி வேறல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது.ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பதற்குப் பதிலாக, பணக் காரர்களுக்கு அளித்திடும் மானியங்களை விட்டொழியுங்கள். அவர்களுக்கு அளித்து வந்த வளங்கள் அனைத்தையும் நாட்டிற்கு மிகவும் தேவையான சமூக பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கக்கூடிய வகையில் பொது முதலீடுகளில் கணிசமான அளவிற்கு செலுத்துங்கள். இது, புதிய வேலை வாய்ப்புகளை மிகப் பெரிய அளவில் உருவாக்கிடும். அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, உள் நாட்டுத் தேவையையும் மிகப் பெரிய அளவில் பெருக்கிடும். இது நம் நாட்டின் பொறியியல் மற்றும் எந்திரவியல் போன்ற உற்பத்தித் துறை மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கும் உந்துசக்தியாகவும் அமைந்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)