Saturday, April 24, 2010

ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் முழு வெற்றியாக்கிடுவோம்!-பிரகாஷ் காரத்




இடதுசாரிக் கட்சிகள் உட்பட 13 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் - அதா வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அஇஅதிமுக, பிஜூஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகியன - நாளும் ஏறும் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஏப்ரல் 27 அன்று நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. கடந்த ஆறு மாத காலமாக விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்து வரும் இயக்கத் தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக் கையாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட் டுக்கான தொகைகளை ஒதுக்குவதற் காகக் கொண்டுவரப்படும் நிதிச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டிய தருணத்தில் இவ்வாறான அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கையும் வருகிறது. இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் சமயத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் உர விலைகளை வரிகள் மூலம் உயர்த்தி இருப்பது தொடர் பாக அவற்றைத் திரும்பப் பெறக்கோரி வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வருவ தன் மூலம், இப் பதின்மூன்று எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கி ணைந்து செயல்படவும் தீர்மானித் திருக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே இவ் வாறு எதிர்க்கட்சிகளால் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மற்றும் யூரியா மற்றும் பல்வேறு உரங் களின் விலை உயர்வுகளையும் ரத்து செய் திட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தம் நடைபெறவிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 12 அன்று நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகர்களிலும் தலைநகர் தில்லியி லும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங் களை நடத்தின. தில்லியில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஏப்ரல் 8 அன்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறையேக வேண்டும். இதில் 25 லட்சத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இடதுசாரிகளின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் நடைபெற்ற இவ்வியக் கத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக் கள் மிகவும் ஆவேசத்துடன் கலந்து கொண்டு நாளும் ஏறிவரும் விலைவா சிக்கு எதிராகத் தங்கள் ஆவேசத்தை வன்மையுடன் காட்டிக் கைதானார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் விலைவாசி உயர் வுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்பு நடவ டிக்கைகளை பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நடத்தி வரு கின்றன.

ஆனால், விலைவாசி உயர்வால் மக் கள் மீது கடுமையாகச் சுமைகளை ஏற் றியுள்ள மத்திய ஐ.மு.கூட்டணி அரசாங் கம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மத்திய பட்ஜெட்டின் காரணமாக பெட் ரோல் - டீசல் விலைகளை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருப்பதிலிருந்தே, காங் கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இரக்கமற்ற கொடூரத் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசாங்கம் செய்ததெல்லாம், விலைவாசி உயர்வுக்கு எதிராக விவா திப்பதற்காக முதலமைச்சர்கள் கூட்டத் தைக் கூட்டியதுதான். அந்தக் கூட்ட மானது, விலைவாசியைக் கட்டுப்படுத்து வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள பத்து முதலமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவது என்று முடிவு செய்தது. இரண்டு மாதங்கள் கழித்து, ஏப்ரல் 8 அன்று, முதலமைச்சர்களின் குழு, பிரதமர் மற்றும் பல மத்திய அமைச் சர்களின் பங்கேற்புடன் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் உரைகள், விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எந்த அளவிற்கு சொரணையற்று இருக்கிறார்கள் என்ப தைக் காட்டின. இக்கூட்டத்திற்குப்பின் இது தொடர்பாக மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், உணவுப் பொருள்களின் விலைகள் சரிந்துள்ளன என்று அறிவித் தார். ஆயினும், இடதுசாரிக் கட்சிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய தினம்கூட, உணவுப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பான பணவீக்கத்தின் விவரங்கள் (டயவநளவ கபைரசநள கடிச கடிடின iகேடயவiடிn) அறிவிக் கப்பட்டன. அதன்படி, மார்ச் 27 அன்று முடிவடையும் வாரத்திற்கான உணவுப் பொருள்களின் பணவீக்கத்தின் அளவு 17.7 விழுக்காடாக - அதாவது அதன் முதல்வாரத்தின் அளவைக் காட்டிலும் 1 விழுக்காடு கூடுதலாக உயர்ந்திருந்தது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர் வைக் குறைத்திட நடவடிக்கைகள் மேற் கொள்ள பிடிவாதமாக மறுத்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது. உணவுப் பொருள்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய அது மறுக்கிறது. இந்திய உணவுக் கார்ப்பரே ஷன் கிடங்குகளில் இந்த ஆண்டு அமோக விளைச்சலின் காரணமாக எப்போதும் கொள்முதல் செய்யப்படும் 200 லட்சம் டன்களுக்குப் பதிலாக, 474.65 லட்சம் டன்கள் கொள்முதல் செய்திருந்தும், அதனை மக்களுக்கு விநியோகிக்க அரசு தயாராக இல்லை. அதுமட்டுமல்லாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறி, மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூடு தல் ஒதுக்கீடுகளை அரிசிக்கு கிலோ 15 ரூபாய் என்ற விலையில் அளிக்க முன்வந்திருக்கிறது. பொது விநியோக முறை மூலமாக இதனை விநியோகிக்க முடியாது என்று நன்கு தெரிந்தே மத்திய அரசு இவ்வாறு செய்திருக்கிறது.

மதச்சார்பற்ற கட்சிகள், நாடாளுமன் றத்தில் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வரவிருக்கும் முடிவைக் கேள்விப் பட்டபின், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த முறையிலேயே செயல் பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள், மதவெறி பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்ட தாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கள் மீது பாய்ந்திருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளு வார்கள் என்பது நிச்சயம். மக்களைப் பாதித்திருக்கக்கூடிய மிகவும் மோசமான ஒரு பிரச்சனை, விலைவாசி உயர்வாகும். பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக் கும் காரணமாகத் திகழும் அரசின் தவ றான கொள்கைகளை எதிர்க்கத் தவறி னால், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையிலி ருந்து தவறியவர்களாகிவிடுவார்கள். நாடாளுமன்றத்திற்குள், யார் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்து அதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. அரசாங்கம் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தியுள்ள வரிகளைத் திரும்பப் பெறப் போகிறதா, இல்லையா என்பது தான் பிரச்சனையாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்குள்ளே நடத்திடும் போராட்டம் என்பது அரசாங் கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக் கத்துடன் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறிக் கொள்கி றோம். ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத் துவதற்கும், அதன் படுபிற்போக்கான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வ தற்கும் நடத்தப்படும் அரசியல் போராட் டத்தின் ஒரு பகுதியே இது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள் கிறோம்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத் திடவும், பொது விநியோக முறையை வலுப்படுத்திடவும் அரசாங்கத்தை உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வலி யுறுத்திடவும், விலைவாசி உயர்வுக்கு எதி ரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவ தைத் தவிர வேறு வழியில்லை. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்து வதற்காகவும், உணவுப் பாதுகாப்பிற்காக வும் 2009 ஆகஸ்டில் இப்பிரச்சனை களுக்காக தேசிய அளவில் நடத்திய சிறப்பு மாநாட்டிலிருந்தே மிகவும் சுறு சுறுப்பாக இயக்கங்களை முன்னெடுத் துச் சென்றன. இதன் பின்னணியில்தான் மார்ச் 12 பேரணியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏப்ரல் 8 சிறைநிரப்பும் போராட்டமும் மகத்தான வகையில் வெற்றி பெற்றன.

இதேபோன்று வரும் ஏப்ரல் 27 அகில இந்திய பொது வேலைநிறுத்தமும் மகத் தான வெற்றி பெற்றிட, கட்சி அணியினர் முழுமையாகக் களத்தில் இறங்கிட வேண்டும். ஏப்ரல் 8 அன்று உருவாகி யுள்ள வேகம் கொஞ்சமும் குறையாது, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால், கட்சி மக் கள் மத்தியில் சென்று, பொது வேலை நிறுத்தத்திற்கான செய்தியை விளக்கிட வேண்டும். மற்ற இடதுசாரிக் கட்சிகளுட னும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு ஏப்ரல் 27 எதிர்ப் பியக்கத்தினை காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக ஓங்கி ஒலித்திடச் செய்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, April 22, 2010

தோழர் லெனின் வழிகாட்டும் துருவநட்சத்திரம் - பிரகாஷ்காரத்



2010 ஏப்ரல் 22 தோழர் லெனின் 140ஆவது பிறந்த தினமாகும். காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய தத்துவத்தை புரட்சித் தோழர் லெனின் மேலும் செழுமைப்படுத்தினார். தோழர் லெனின், உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனின் சிருஷ்டிகர்த்தா ஆவார்.

லெனின் வாழ்வையும் பணியையும் நாம் போற்றிப் பாராட்டிக் கொண்டாடும்போது, உலகின் முதல் சோசலிசப் புரட்சியை வழிநடத்திய மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் நாம் அதனைக் கொண்டாடவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்சுக்குப் பின், லெனின் அளவிற்கு வேறெவரும் மார்க்சிய சித்தாந்தத்திற்குப் பங்களிப்பினைச் செய்ததில்லை. தொழிலாளி வர்க்கஇயக்கம், தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி அறிவியல்பூர்வமாக சோசலிசத் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் லெனினது அனைத்துத் தத்துவார்த்தப்பணிகளும் அமைந்திருந்தன.
லெனின், 20ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் குணங்களைப் பகுப்பாய்ந்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித்தவத்தின் உச்சகட்டம் என்பதை லெனின் பறைசாற்றினார். முதலாளித்துவ முறை தொடர்பான மார்க்சின் ஆய்வுகளை லெனின் ஆக்கபூர்வமான முறையில் வளர்த்திட்டார். இன்றையதினம் இன்றைய ஏகாதிபத்தியம் குறித்தும் உலக முதலாளித்துவம் குறித்தும் ஆய்வு செய்திடும் எவரும், லெனினால் ஏகாதிபத்தியம் குறித்துப் பகுப்பாய்வு செய்து அளிக்கப்பட்டுள்ள ஆய்வினைத் தொடாது எதுவும் செய்திட முடியாது. லெனினிஸ்ட் ஆராய்ச்சிமுறையிலன்றி வேறெந்த விதத்திலும் இன்றைய தினம் முற்றியுள்ள உலக நிதி மூலதனம் மற்றும் அதன் உலகமயக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஏகாதிபத்தியம் தொடர்பான லெனினிஸ்ட் புரிந்துணர்வுதான், உலக முதலாளித்துவத்தை அதன் பலவீனமான கண்ணியில் உடைத்து நொறுக்கப்பட வேண்டும் என்பதையும் அதிலிருந்து ரஷ்யாவில் சோசலிஸ்ட் புரட்சிக்கான போர்த்தந்திரத்தையும் அதற்கான உத்திளையும் உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை கேந்திரமான பங்கினை வகித்திடும் என்றும் முடிவு கண்டார். இதற்கிணையான மற்றொரு லெனினிஸ்ட் புரிந்துணர்வு என்பது, தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகளை, உலகப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் அதற்கான உத்திகளோடு இணைப்பது தொடர்பானதாகும். இது, இதற்கு முன் பிரபல்யமாயிருந்த ஐரோப்பிய மார்க்சிஸ்ட்டுகளின் புரிந்துணர்வுகளிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றாகும். காலனியாதிக்க நாடுகளில் நடைபெறும் தேச விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதையும், இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சக்திகள் சோசலிசத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளிகள்தான் என்றும் லெனின் தெளிவுபடுத்திக் காட்டினார். 20ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகள் காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைப் போராட்டங்களின் வெற்றிக்கு இட்டுச் சென்றதும், சீன, வியட்நாமிய, கொரிய மற்றும் கியூபா புரட்சிகளும் லெனினிஸ்ட் போர்த்தந்திரத்தை வெற்றிகரமாக ஏவியதன் மூலமாகக் கிடைத்திட்ட சாதனைகளேயாகும்.

லெனினது மற்றுமொரு முக்கிய பங்களிப்பு என்பது அரசு மற்றும் அதன் வர்க்கக் குணம் குறித்து லெனினது புரிந்துணர்வாகும். இதுதான் உலகிலிருந்த அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் தாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அடிப்படையாக மாறியிருந்தன. வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதாரப் பிரச்சனைகள் மீதான போராட்டம் மட்டுமல்ல, மாறாக சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் அரசு அதிகாரத்திற்கு சவால் விடுத்து அதனை வெற்றிகொள்வது என்பதுமாகும்.

லெனின், எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் தொடர்பான புரட்சி விதிகளையும் வகுத்தளித்திருந்தார். தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் உருக்கு போன்று உருவாக்கி வழிநடத்திக் செல்லக்கூடிய வகையில் புதியதொரு பாணியில் ஒரு கட்சியைக் கட்டுவதற்கு லெனினிஸ்ட் பங்களிப்பு மகத்தானது. உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்த ஜனநாயக மத்தியத்துவக் கொள்கை, கடுமையான கட்டுப்பாடு, விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவை தொழிலாளர் வர்க்கத்திற்கு புது வகையான ஸ்தாபனத்தைக் கொடுத்தது. இது முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஸ்தாபன முறைகளுக்கு முற்றிலும் எதிரானது. பின்னர் புரட்சியை நடத்திய ஒவ்வொரு கட்சியும், புரட்சி இயக்கத்தை மேலும் வளர்த்து முன்னெடுத்துச் செல்ல, லெனினிய வடிவமும் கட்சி ஸ்தாபன அமைப்பு முறையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை என்பதை உணர்ந்தன. லெனினிய ஸ்தாபனக் கோட்பாடுகளை கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும், இடதுசாரி அமைப்புக்குள்ளேயே இருக்கின்ற மற்ற பகுதியினரும் கடுமையான முறையில் தாக்கினர். ஆனால், லெனின் ‘‘முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் உள்ள ஒரே ஆயுதம், அதன் ஸ்தாபனம்தான் என்பதை மிகவும் உறுதியாக உயர்த்திப்பிடித்தார். இந்தியாவிலும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளின்கீழ் கட்சியைக் கட்டிய நமது அனுபவமும் ஸ்தாபனம் தொடர்பான லெனினது கொள்கையை உறுதி செய்தது.

லெனின், 1917 புரட்சிக்குப்பின்னர் ஆறு ஆண்டுகள் மட்டுமே சோவியத் யூனியனின் தலைவராக வாழ்ந்தார். இக்காலத்தில், மிகவும் சுக்குநூறாக நொறுங்கிப்போயிருந்த பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்தை உருவாக்கும் பிரம்மாண்டமான பணியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். புரட்சிக்குப்பின் அவர் உயிருடன் இருந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள், நடைபெற்றுக்கொண்டிருந்த கசப்பான உள்நாட்டு யுத்தத்திலிருந்து நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. யுத்த காலத்திலிருந்து புதிய பொருளாதாரக் கொள்கை காலம் வரை, லெனின் சோசலிசத்தைக் கட்டுவதற்கான ஒரே குறிக்கோளுடன் கொள்கைகளைத் தொடர்ந்து மாற்றி, சரி செய்து கொண்டிருந்தார். லெனின், சோசலிசத்திற்கான பாதை மிகவும்நீண்ட நெடிய ஒன்று என்பதையும் மிகவும் கடினமான ஒன்று என்பதையும் நன்கு அறிந்திருந்தார்.

‘‘மிகவும் நெளிவுசுழிவுகளுடன் கூடிய வரலாற்றைக் கொண்டுள்ள மிகவும் பிற்பட்ட ஒரு நாட்டில், பழைய முதலாளித்துவ உறவுகளிலிருந்து, சோசலிச உறவுகளுக்கு மாறிச் செல்வதென்பது, மிகவும் கடினமான ஒன்று என்பதை நிரூபித்தது,’’
என்று லெனின் கூறினார்.

லெனின் மேலும் சில காலம் வாழ்ந்திருந்தாரானால், சோவியத் யூனியன் சோசலிசத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கும் என்று இப்போது ஊகம் செய்து பார்ப்பது வீண் என்ற போதிலும், ஒரு வளர்ச்சியடையாத பின் தங்கிய நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கான பாதையை லெனின் எப்படி ஏற்படுத்தித் தந்தார் என்பது குறித்த படிப்பினைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

லெனின் மறைந்தபின் சுமார் எழுபதாண்டுகள் கழித்து, சோவியத் யூனியன் சிதறுண்டது. அதன்பிறகு, கடந்த இருபதாண்டுகளில், வரலாறு திருப்பி எழுதப்பட வேண்டியிருந்தது. லெனினிசத்தின் புரட்சிகர உள்ளடக்கம் முழுமையாக மறுதலிக்கப்பட்டது. லெனினின் தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்று அதுநாள்வரை கூறி வந்த முதலாளித்துவ விமர்சகர்களில் ஒரு பிரிவினர், இப்போது மேலும் ஒருபடி சென்று, அது ரஷ்யாவிலும் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அனைத்து விதமான முதலாளித்துவ தத்துவவாதிகள் மற்றும் சிந்தனாவாதிகள் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பதையே மறுக்கிறார்கள். இவர்களில் சிலர் தாராளமயமான முதலாளித்துவம் என்பது அழியாதது என்று கூட வாதிடுகிறார்கள். மார்க்சிசம் என்பதும் லெனினிசம் என்பதும் அவர்கள் காலத்திய உற்பத்திப் பொருள்கள் என்றும், பின்நவீனத்துவ உலகில் அவை அர்த்தமற்றதாகிப் போய்விட்டன என்றும் கூறுகின்றனர்.

வரலாறு முடிந்துவிட்டது என்கிற இவ்வாறான இவர்களின் பசப்புரையும், முதலாளித்துவமே சாசுவதமானது என்ற இவர்களது களியாட்டமும் திடீரென்று முடிவுற்று விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் ஒருமுறை முதலாளித்துவத்தின் குணத்தையும் அதன் கொள்ளையடிக்கும் குணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இப் பூமண்டலத்தில் உள்ள எழுநூறு கோடி மக்களில் பாதி ஏழைகள், 102 கோடி மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பவர்கள். ஏகாதிபத்தியம் தன்னுடைய யுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் இப்பூமண்டலத்தில் உள்ள வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமானால், பூமியின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விடும்.

மார்க்சிசம் ஒன்றுதான் விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருப்பதும், இன்றைய தினம் உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைமைகளைப் போக்கி, முரண்பாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான செயலுக்கான வழிகாட்டியுமாகும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்துத் தந்த தத்துவம் மற்றும் நடைமுறையை லெனின் மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தியதைப்போல, இன்றையதினம் லெனின் வகுத்துத் தந்த அடிப்படையில் மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மேலும் வளப்படுத்தி விரிவாக்கிட வேண்டும். மார்க்சியம் ஒரு செயலற்ற வறட்டுத் தத்துவமல்ல என்று லெனினே சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனை மேலும் செழுமைப்படுத்தி, வளப்படுத்துவது இன்றைய தேவையாகும்.

‘‘மார்க்சியத் தத்துவமானது நிரந்தரமானது மற்றும் எந்தக்காலத்தும் மாறாத ஒன்று என்று நிச்சயமாக நாம் கருதவில்லை. மாறாக, அது அறிவியலுக்கான அடித்தளத்தைப் போட்டுத் தந்திருக்கிறது என்பதிலும், அதன் மீது நின்று சோசலிஸ்ட்டுகள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதிலும் நாம் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.’’

மார்க்சியத்தை மேலும் வளப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் நம் முயற்சிகள் அனைத்திற்கும், லெனின் துருவநட்சத்திரமாக இருந்து நமக்கு என்றென்றும் வழிகாட்டுவார்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, April 19, 2010

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும்பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்-நாடாளுமன்றத்தில் பி.ஆர். நடராஜ

புதுதில்லி, ஏப். 19-
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 2010 ஏப்ரல் 20இலிருந்து நாடு தழுவிய அளவில் கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே. ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று. அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து. மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு. பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் நிறுவனமானது, மத்திய அரசிங்ன டெலிகாம் சர்வீசஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டின் ‘நம்பர் ஒன் டெலிகாம் கம்பெனி’யாக அதனை விரிவுபடுத்தினர். இது 2006 வரையிலும் தொடர்ந்தது. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4.5 கோடி மொபைல் லைன்களைத் தரப்படாததால், மொபைல் லைன்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மொபைல் லைன்களை அதனால் தர இயலவில்லை. இதனால் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் விரிவாக்கமும், வருமானமும் கணிசமாகக் குறைந்தது. 2008-09இல் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதுநாள் வரையிலும் தக்கவைத்திருந்த முதல் நிலையை இழந்துவிட்டது. மொபைல் லைன்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டித் தந்த பிஎஸ்என்எல் நிறுவனம், 2008-09இல் வெறும் 574 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

அரசுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தந்த பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு அதன் பழைய நிலையை மீட்டுத்தர, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசு, பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. மத்திய அரசின் விருப்பத்தற்கேற்ப இக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 30 விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை சுய ஓய்வு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிடவேண்டும் என்றும் கேபிள்கள் அமைக்கும் பணியை அவுட்சோர்சிஸ் முறையில் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரானவைகளாகும். மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட இழிவான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 ஏப்ரல் 20இலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. கோரிக்கைகளை ஆராயும் எவரும் ஊழியர்கள் தங்களை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாதுகாத்திடவும், அதனை விரிவுபடுத்திடவுமே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், பிஎஸ்என்எல் ஊழியர்களையும் பாதுகாத்திட மத்திய அரசாங்கம் போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.