Monday, July 13, 2009

பட்ஜெட்: மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!



ஒவ்வொரு பட்ஜெட்டுமே ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் என்பதும், தங்கள் வர்க்க ஆட்சியை ஒரு முகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதே சமயத்தில், மிகுந்த அள வில் லாபத்தை அறுவடை செய்வதற்கும் முயற்சிக்கும் என்பதும் இயற்கையே. இப் போது வந்திருக்கிற ஐமுகூஅரசின் முதல் பட் ஜெட்டும் அதைத் துல்லியமாகச் செய்திருக் கிறது. ஆயினும், அது அரசின் முரண்பட்ட தன்மைகளை விளக்கும் விதத்திலும் அமைந் திருக்கிறது. ஒரு பக்கம் சாமானிய மக்களுக் காக (யாரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்களுக்காக) கவலைப்படுவதுபோல் காட்டிக்கொண்டு, அதே சமயத்தில் பெரு முதலாளிகளின் அடிப்படை அபிலாசை களை நிறைவேற்றக் கூடிய வகையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை முன்னெ டுத்துச் செல்லும் வேலையில் இறங்கியிருக் கிறது.

ஏற்கனவேயே, ஐமுகூ அரசாங்கத்தின் கடந்த முதல் நான்காண்டு கால ஆட்சியின் போது, இந்திய பில்லியனர்கள் (ஒரு பில்லி யனர் என்றால் 100 கோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர்) டாலர் மதிப்பீட்டில் 2004இல் ஒன்பது பேர்களாக இருந்தவர்கள், 2008இல் 53 பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். நாட்டின் பணக்கார பத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 3 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 10 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக - அதாவது மும்மடங்கு - அதிகரித் திருக்கிறது. இதனை மேலும் ஒருமுகப் படுத்தும் வகையிலேதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். சர்சார்ஜ் ஒழிப்பு, வரு மான வரி உயர்பட்ச வரம்பு அதிகரிப்பு ஆகி யவை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் ஆதா யத்தை பணக்காரர் களுக்குக் கொடுத்திருக் கிறது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நபர், இப்போது ஆண்டு ஒன் றுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வரி கட்டினால் போதும். ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வருமானம் ஈட்டிடும் ஒரு நபர், இப்போது அரசுக்கு 53 ஆயிரத் திற்கும் குறைவாக வரி கட்டினால் போதும். இவற்றின் காரணமாக அரசின் வருவாய் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் குறைகிறது. மேலும், அரசு அளித்திட்ட பல்வேறு சலுகைகளின் காரணமாக, சென்ற ஆண்டு மட்டும் 4.18 லட் சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்பட்டிருப்ப தாக, பட்ஜெட் ஆவணங்கள் வெளிப்படுத்து கின்றன. இந்தச் சலுகைகள் இந்த ஆண்டும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. சில்லரை ஆதாய வரி (குசiபேந க்ஷநநேகவை கூயஒ), பண்டங்கள் பரிவர்த்தனை வரி (ஊடிஅஅடினவைநைள கூயஒயவiடிn கூயஒ) போன்றவையும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. பண்டங்கள் பரிவர்த்தனை வரி ஒழிப்பின் விளைவாக அத்தியாவசியப் பொருள்கள் ஊக வணிகத்திற்குள்ளாகும் என்பதால், அவற் றின் விலைகள் மேலும் பல மடங்கு உயர்ந் திடும். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஊக வணி கத்தில் - அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த் தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்று - தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில்தான், இவர்கள் இவ் வாறு வரிகளை ஒழித்திருக்கிறார்கள்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திட, பொது - தனியார் - கூட்டுத் துறை - அதாவது பிபிபி (ஞஞஞ - யீரடெiஉ-யீசiஎயவந-யீயசவநேசளாiயீ) என்ற பெயரில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை மேலும் கொழுக்கவைக்கும் ஏற்பாடுகளும் ஆரம்பித்துவிட்டன. இந்திய உள்கட்டமைப்பு நிதி கம்பெனி லிட் (ஐஐகுஊடு - ஐனேயை ஐகேசயளவசரஉவரசந குiயேnஉந ஊடிஅயீயலே) என்கிற நிறுவனம் தற்சமயம் சுமார் 60 சதவீதம், வணிக வங்கிகளின் மூலமாக, பிபிபி திட்டங்க ளுக்கு அளித்திட இருக்கிறது. இவ்வாறு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இவர்களிடம் முதலீடு செய்திட அரசு திட்டமிட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அர சாங்கம், தன்னுடைய நிதி நிறுவனங்கள் மூல மாகவே, பிபிபி என்ற பெயரில் தனியாருக்கு கோடிக்கணக்கான ரூபாய் தொகையை எளிய தவணைகளில் அளித்திட இருக் கிறது. இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து பணத் தை பெற்றபின், அரசாங்கத்துடன் இவர்கள் கூட்டுசேர்ந்து மேலும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. முதலாளித் துவ வர்க்கத்தின் சூட்சும வழிகள் எப்படி எப்படி எல்லாம் இருக்கின்றன பாருங்கள்!

இந்தப் பட்ஜெட்டில் அடிப்படைப் பிரச் சனை, உலகப் பொருளாதார மந்தம், அதி கரித்துவரும் வேலை இழப்புகள், மக்களின் வாங்கும் சக்தி வேகமாக வீழ்ச்சியடைந்து வருதல் ஆகியவற்றின் பின்னணியில், நாட் டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புறத்தூண் டுதலை அளிக்கவேண்டிய அதே சமயத்தில், சாமானிய மக்களின் ‘‘உள்ளீடான வளர்ச் சித்’’ (“inஉடரளiஎந பசடிறவா”) தேவைகளையும் நிறைவேற்றுவதாகும். துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல, இதில் எதையுமே போதுமான அளவிற்கு மேற்கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. அதிகரிக்கப்பட இருக்கும் மொத்த செலவி னம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்தான். இதனால் எவ்வித உள் ளீடான வளர்ச்சியையும் உருவாக்கிட முடியாது. அதேபோன்று ‘உள்ளீடான வளர்ச்சி’க்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற படாடோபமான திட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை களும் மிகவும் அற்ப அளவானதாகும்.

கணிசமான அளவிற்கு ஆதாயம் அடைந் திருக்கிற ஆளும் வர்க்கங்கள் அவற்றுடன் திருப்தியடைந்திடவில்லை. குறிப்பாக, ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தயவு தேவை யில்லை என்ற சூழ்நிலையில், ஆளும் வர்க் கங்களின் ஆசை பல்கிப் பெருகியிருக்கிறது. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட அன்று பங்குச்சந் தையில் ஏற்பட்ட சரிவு இதைப் பிரதிபலித் தது. சர்வதேச பங்குச்சந்தையின் நடவடிக் கைகள், நம் நாட்டின் பங்குச் சந்தையையும் பாதிக்கும் என்றபோதிலும், பொருளாதார ஆய் வறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டது போல, நிதிச்சீர்திருத்தங்கள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் பட்ஜெட் டில் பிரதிபலிக்காததே, இத்தகைய சரிவிற் குக் காரணங்கள் என்று கார்ப்பரேட் ஊடகங் கள் மிகவும் விரிவான முறையில் வியாக்கியா னங்கள் செய்தன. இந்த ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று இவை எதிர்பார்த்தன வாம். பட்ஜெட்டில் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக சொல்லப்பட்டிருந்தபோ திலும், அதன் விவரங்கள் அல்லது அதற்கான வழிவகைகள் எதுவும் கூறப்படவில்லை.

அதேசமயத்தில், நிதி அமைச்சர் மிகப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை இருப்பது பற்றி எச்சரிக்கை செய்து, எனவே ‘நிதிக் கட்டுப்பாட்டு’க்குத் திரும்புவதே அரசின் நோக்கம் என்று கூறியிருக்கிறார். அரசு, இத்தகைய ‘நிதிக்கட்டுப்பாட்டுக்குத்’ திரும்புவது என்பதன் பொருள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதுதான் என்று புரிந்து கொள்ள அதிக அறிவு ஒன்றும் தேவையில் லை. அரசாங்கம் இவ்வாறு கூறியிருப்பதில் எவ்விதமான பொது அறிவும் இல்லை, பொரு ளாதார அறிவும் இல்லை. ஒரு விவசாயி, தான் பெற்ற கடனுக்காகத் தன் நிலத்தையே விற்று ஓட்டாண்டியாவதைப்போலத்தான் இது. இப்பாதை நிச்சயம் நாட்டை சீரழித்துவிடும்.

இவற்றையெல்லாம் இந்த அரசு செய் திடுமா அல்லது எப்படி இவற்றை இந்த அரசு செய்யப்போகிறது என்பதெல்லாம், ஆரம்பத் தில் நாம் குறிப்பிட்ட முரண்பாடு எவ்விதத் தில் மாறப்போகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இந்திய கார்ப் பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபம் மேலும் விரிவாகும் வகையில் சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றன. ‘உள்ளீடான வளர்ச்சி’ மற்றும் சாமானியர்களின் நலன்களைக் காவு கொடுத்து ‘ஒளிர்கின்ற இந்தியா’வை வலுப் படுத்த வேண்டும் என்று அவை விரும்பு கின்றன.

முரண்பாடுகள் எப்படி முட்டி மோதப் போகின்ற என்பதுதான் ‘உழல்கின்ற’ இந்தி யாவின் அங்கமாக உள்ள பெரும்பான்மை மக் களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கவிருக்கின்றன. கொள்ளை லாபம் அடிக்க விரும்பும் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெறப்போகிறார்களா? அல்லது இவர்களின் கொள்ளை லாபவெறிக்கு எதிராக அணிதிர ளும் கோடிக்கணக்கான மக்களின் வலுவான போராட்டங்கள் வெற்றிபெறப்போகின்றனவா? இவ்வாறு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வெகுஜனப் போராட்டங்களின் வலுதான், எதிர்கால இந்தியாவையும் கோடிக்கணக் கான மக்களின் வாழ்வையும் தீர்மானிக்க இருக்கின்றன.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, July 1, 2009

லால்கார் : இயல்புநிலையை மீட்பதற்கான முயற்சிகள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னா பூர் மாவட்டத்தில் லால்கார் மற்றும் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் முற் றுகையை, மத்திய -மாநில அரசுகளின் பாது காப்புப் படையினர் கூட்டாக சேர்ந்து அப் புறப்படுத்தி வருவதை அடுத்து, அங்கே நிலைமை மிகவும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. நந்திகிராமத்தில் ஒரு சிறுபகுதி வெற்றி பெற்ற அளவிற்குக் கூட, லால்காரில் அப்பாவிப் பழங் குடியினத்தவரை, அதிலும் குறிப் பாக, பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக நிறுத்தி, பாது காப்புப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட மாவோயிஸ்ட்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற வில்லை என்பது தெளிவு. ஜூன் 7 அன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏழு பேரை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றதை அடுத்து, உண்மையில் அப் பகுதியிலிருந்த பழங்குடியினர் அனைவ ருமே ஊரைக் காலி செய்துவிட்டுச் சென் றுவிட்டார்கள். இவ்வாறு ஊரைவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 30 ஆயி ரத்திற்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட் டிருக்கிறது.

அவ்வாறு மாவோயிஸ்ட்டுகளுக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியேறிக்கொண் டிருக்கும் பழங்குடியினரிடம் ஊடகவிய லாளர்கள் வினவும்போது அவர்கள், ‘‘போலீ சாரின் தாக்குதல்கள் நடைபெறும் சமயத் தில் அவர்கள் (மாவோயிஸ்ட்டுகள்) பெண் களையும், குழந்தைகளையும் முன்னே நிற்கும்படி கட்டாயப் படுத்துகிறார்கள்,’’ என்றும், ‘‘மாவோயிஸ்ட்டுகள் விரும்பு வதுபோல் போலீசாரின் துப்பாக்கிக் குண்டு களுக்கு இரையாக நாங்கள் விரும்ப வில்லை’’ என்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு மாவோ யிஸ்ட்டுகளால் மிரட் டப்பட்டு, ஊரை விட்டு வெளியேறி நிவா ரண முகாம் களில் அடைக்கலமாகியுள்ள பழங்குடி யினருக்கு மாநில அரசு இலவச அரிசி, காய்கறிகள் மற்றும் தயார் செய்யப் பட்ட உணவுப் பொட்டலங்களை அளித்து உதவி வருகிறது. லால்கார் அரசு மருத்துவ மனையில் சுகாதார வசதிகளை வலுப் படுத்துவதற்காகக் கூடுதலாக பணியா ளர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் பழங்குடியினர் பகுதி களில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளைப் புறக் கணித்ததால்தான் இந்நிலைமை என்று சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத் தின்போது, ராகுல் காந்தியும் கூட, மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் பகுதிகள் பல, ஒரிசாவில் பின்தங்கியுள்ள பிராந்தியங் களைவிட மோசமாக இருக்கின்றன என்று கூறியதைப் பார்த்தோம். அப்போதே நாம், உண்மையில் பங்குரா மற்றும் புரூலியா பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் சமூ கப் பொருளாதார நிலைமைகள், அமேதி மற்றும் ரே பரேலி நிலைமையைவிட மேம் பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.

ஒட்டுமொத்தத்தில் மாநிலத்தில் இடது முன்னணிக்குப் பின்னடைவு ஏற்பட்டி ருந்த போதிலும்கூட, பழங்குடியினருக் கான மக்களவைத் தொகுதிகள் அனைத் தையும் இடதுமுன்னணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை நிலையாகும். பழங்குடியினரின் வாழ்க் கைத்தரத்தை மேம்படுத்திட இன்னும் செய்யவேண்டியது ஏராளமாக இருக்கி றது என்பதில் எந்தக் கருத்து வேறு பாடும் கிடையாது. இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இடது முன்னணி பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆயினும், மேற்கு மிட்னாபூர் மாவட் டத்தில், வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடி யினரைப் போய்ச் சேரமுடியாத வகையில் ஒரு பிரத்யேகமான பிரச்சனை இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பெரும்பாலான வளர்ச் சித் திட்டப்பணிகள் தேர்ந்தெடுக்கப் பட்ட பஞ்சாயத்துக்கள் மூலமாகவே மேற் கொள்ளப்படுகின்றன. லால்கார் பகுதி யில் பல பஞ்சாயத்துக்கள் ஜார்கண்ட் கட்சியின்கீழ் இருந்து வருகின்றன. பல வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்து வதில் இக்கட்சி பிரதான தடையாக இருந்து, மாவோயிஸ்ட்டுகள் நுழைவ தற்கு வசதிசெய்து தந்திருக்கிறது. பின் பூர் (பழங்குடியினர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஜார்கண்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான். லால்கார் பகுதி இவரது தொகுதிக்கு உட்பட்டுத்தான் வருகிறது. கையறுநிலையிலுள்ள பழங்குடியினரை, அவர்களின் மிக மோசமான பின்தங்கிய நிலைமையிலேயே வைத்திருப்பதில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஓர் அரசியல் நோக்கம் உண்டு என்பது தெளிவு. தற் போது மாவோயிஸ்ட்டுகள் அவர்களது ‘விடுதலை செய்யப்பட்ட மண்டலத்’திலி ருந்து அப்புறப்படுத்தப் பட்டிருப்பதை யடுத்து, பழங்குடியினருக்கான வளர்ச் சித் திட்டப்பணிகளின் பயன்கள் அவர் களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐய மில்லை.

அடுத்ததாக, மாவோயிஸ்ட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணியின் அணுகுமுறை குறித்து பல வித வியாக்கியானங்கள் வந்துகொண்டி ருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளின் வன் முறை இரு விதமான உத்திகளின் மூல மாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான நிலைப்பாட்டினை மேற் கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, மக்களின், (அதாவது இப்பகுதியில் பழங் குடியினரின்) வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதில் உள்ள உண்மையான பிரச் சனைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மாவோயிஸ்ட்டுகளை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்திடும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வை அளித்திடும். அதே சமயத்தில், சட்டம் -ஒழுங்கு சீர் குலைக்கப்படுமானால் அல்லது மாவோ யிஸ்ட்டுகளால் தாக்குதல் தொடுக்கப் பட்டு நிர்வாக எந்திரம் முடமாக்கப்படு மானால் அவற்றை உறுதியுடன் எதிர்த்து முறியடித்து, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், அரசு நிர்வாகத்தை அப்பகுதிகளில் நிலைநிறுத்துவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும்.

இப்போது, மத்திய அரசு, மாவோயிஸ்ட் இயக் கத்தை சட்டவிரோத நடவடிக்கை கள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களில் ஒன்றாக சேர்த்திருக்கிறது. ஏற்கனவே தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களான மக்கள் யுத் தக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் ஒருங்கி ணைப்பு மையம் (ஆயசஒளைவ ஊடிடிசனiயேவiடிn ஊநவேசந) ஆகிய இரு குழுக்களும் இணைந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யாக மாறியிருக்கிறது என்று இது தொடர்பாக ஒரு விளக்கமும் அரசால் கூறப்பட்டிருக்கிறது. இம்முடி வானது நாடு முழுவதுக்கும் பொருந்தும். எனவே இது மேற்கு வங்கத்திற்கும் பொருந்தும். ஆயினும், மேற்கு வங்க முதல்வர் சொல்லியிருப்பது போல, ‘‘இது ஒரு மத்தியச் சட்டமாக இருப்பதால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதனை எங்கே, எவருக்கெ திராகப் பிரயோகிப்பது என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம்’’ என்று கூறி யிருக்கிறார்.

மாவோயிஸ்ட்டுகளுக்குத் திரிணா முல் காங்கிரசும், திரிணாமுல் காங்கிர சுக்கு மாவோயிஸ்ட்டுகளும் ஒருவருக் கொருவர் ஆதரவு அளித்து வந்ததற்கு ஏராளமான சான்றுகளை மாவோயிஸ்ட் டுகளின் பேட்டிகளை ஊடகங்கள் ஒளி பரப்பியதன் மூலம் அனைவரும் அறி வோம். இப்போது திரிணாமுல் காங்கிர சும் ஓர் அங்கமாக உள்ள ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோ யிஸ்ட் இயக்கத்திற்கு தடை விதித்தி ருப்பதன் மூலம், திரிணாமுல் காங்கிர சுக்கு ஓர் இக்கட்டான நிலையை ஏற் படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளு டன் தங்களுக்குள்ள உறவை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடி யாமல் திண்டாடும் திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்ட் கொலைபாதக நட வடிக்கைகளைத் தங்கள் தேர்தல் ஆதா யத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட திரி ணாமுல் காங்கிரஸ், இப்போது மாவோ யிஸ்ட் பிரச்சனையில் சிபிஎம் ‘இரட்டை வேடம்’ போடுவதாகக் காட்டுக்கூச்சல் போடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிற் போக்கு சக்திகளுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணிக்கு எதிராக ஒரு மகா கூட்டணி யை ஏற்படுத்திக் கொண்டது என்பதை இப்போது சாமானிய மக்களும் நன்கு புரிந்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தங்களுடைய சுய தேர்தல் ஆதாயத்திற்காக சாமானிய மக் களை மாவோயிஸ்ட்டுகளின் மிரட்ட லுக்கும் உருட்டலுக்கும் பணிந்து போகு மாறு வைத்துவிட்டது.

மாவோயிஸ்ட்டுகள் உட்பட திரிணா முல் காங்கிரசால் அமைக்கப்பட்ட மகா கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள சில ‘அறிவுஜீவிகள்‘, லால் கார் பகுதிக்கு ‘‘அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அனுப்பியிருப்பதையும், இயல்பு வாழ்க்கையை அப்பகுதியில் மீட்பதையும் நிறுத்துவதன் மூலம் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்றால், மாவோ யிஸ்ட்டுகளும் பேச்சுவார்த்தைக்குத் தயார்’’ என்று கூறியிருக்கின்றனர். மாவோ யிஸ்ட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப் படைக்கும்வரை, தங்கள் வன்முறை மற் றும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிடுவதாக உறுதிகூறும்வரை, பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில அரசு தெளிவுபடத் தெரி வித்துள்ளது. அதேசமயத்தில், பழங்குடி யினருக்கு, பாதுகாப்புப் படையினரால் தொல்லை ஏற்படக் கூடாது என்பதற் காக, பழங்குடியின மக்களை இம்சிக்கக் கூடாது என்று பத்திரிகைக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. இப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக, பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த சமுதாயத்தையே இடருக் குள்ளாக்கி, சாமானிய மக்களுக்கு சொல் லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிக் கொண் டிருக்கிறது.மாவோயிஸ்ட்டுகளால் மக் கள் மீது ஏவப்பட்டுள்ள சவால்களை எதிர்த்து முறியடிப்பதுடன், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இயல்பு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதற்கு, இத்தகைய அரசியல் சக்திகளையும் தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

Monday, June 29, 2009

மாவோயிஸ்டுகள்-மம்தாக்கள்-ஊடகங்கள் -- கி. வரதராசன்

மேற்கு வங்கத்தில் லால்கார் வன் முறையையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக, விஷமப் பிரச் சாரம் பல வகைகளிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மத்தியில் அமைச்ச ராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி, நடைபெறும் நிகழ்ச்சிகள் மார்க்சிஸ்ட்டு களும், மாவோயிஸ்ட்டுகளும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று கூறி, இந்த நூற்றாண்டின் பெரிய நகைச்சுவையை கூறியுள்ளார். ஒரு வன்முறை இயக்கம் ஆயுதங் களின் மூலமும், மிரட்டல்கள் மூலமும் சில பகுதிகளை கையில் வைத்துக் கொண்டு, இது ‘விடுதலை அடைந்த பகுதி’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் அமைச்சராக இருப்பவர், மக்களின் வாழ்வைப் பற்றி, ஒன்றுபட்ட இந்திய நாட்டைப் பற்றி, எந்தக் கவலையும் கொள்ளாமல் ‘இது வெறும் நாடகம்’ என்று தெரிவிப்பது, எந்த அளவிற்கு மோசமான, கீழ்த்தரமான அரசியல் நிலைக்கும் இவர்கள் தயார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

“மாவோயிஸ்ட்டுகள், இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு, மார்க்சிஸ்ட்டுகள் ஆட்சி யில் கடந்த முப்பதாண்டுகளில் செய்யப் பட்ட தவறுகளே காரணம், அவர்களின் ஆட்சியில் மக்கள் நலன்கள் பாதுகாக்கப் படவில்லை, நிர்வாகம் ஆட்சி செய்வ தற்குப் பதிலாக, மார்க்சிஸ்ட்டுகளே நேரடியாக ஆண்டார்கள், அந்தக் கட்சிக் காரர்கள் பெரும் பணக்காரர்களாகி விட் டார்கள், இதனால் மக்களிடமிருந்து தனி மைப்பட்டு, பிடிமானத்தை இழந்தார்கள், இதனைப் பயன்படுத்தி அந்தப் பகுதி யின் அதிகாரத்தை மாவோயிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள்” இவ்வாறு ‘தினமணி’ நாளேடு இரு நாட்களாக எழு தும் தலையங்கத்தில் தீர்ப்பளித்திருக் கிறது.

முதலாவதாக, அந்தப் பகுதி மக்க ளுக்கு கடந்த முப்பதாண்டுகளில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதைப் பார்ப்போம். 1977இல் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட் சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடனேயே, கிராமப்புறங்களில் அதுகாறும் ஜோட்கார் எனப்படும் நிலப்பிரபுக்களின் முழுமை யான கட்டுப்பாட்டிலிருந்த கிராம மக்க ளை, அவர்களின் பிடியிலிருந்து மார்க் சிஸ்ட்டுகள் விடுவித்தார்கள். மேற்கு வங்க மாநில அர சின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறை சார்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை களின்படி, 2002-03 ஆம் ஆண்டுவரை ஜார்க்ரம், பின்புல் மற்றும் சல்போனி ஆகிய ஒன் றியங்களில் (இப் பகுதிகள்தான் மாவோ யிஸ்ட்டுகளின் செல்வாக்கில் தற்போது இருந்தன) சுமார் 40 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் பழங்குடி யினருக்கு மறுவிநியோ கம் செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தப் பகுதியில் 75 சதவீத மக் கள் நில விநியோகத்தால் பலன் பெற்ற வர்கள். பழங்குடியினரைப் பொறுத்த வரையில் 70 சத வீதத்திற்கும் மேல் நிலம் பெற்றவர்கள். 90 சதவீதத்திற்கும் மேல் குடியிருக்க வீட்டு மனை பெற்றவர்கள்.

இவ்வாறு கூறுவதன்மூலம், உழுவ தற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்று விட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பதல்ல நமது வாதம். ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி இல்லாத எந்தப் பகுதியிலும் பழங்குடியினர் உழுவதற்கு நிலமும், குடியிருக்க மனையும் பெற்றதாக வரலாறில்லை என்பதைத் ‘தினமணி’ வகையறாக்கள் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் அரசு நிர்வாகத்தின் அதி காரத்தை மார்க்சிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டார்கள் என்பதும் உண்மையல்ல. மாறாக, நில விநியோகத்தின் தொடர்ச்சி யாக, பஞ்சாயத்துக்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுத்து, பஞ்சாயத்துக்களை நிலப் பிரபுக்களின் கைகளிலிருந்து ஏழை மக் களின் கைகளுக்கு மாற்றியது, மேற்கு வங்க மாநில அரசு. இந்தியாவில் இடது சாரிகள் சார்பில் ஆட்சி இல்லாத எந்த மாநிலத்திலும், பஞ்சாயத்துக்கள் என்பது வசதிபடைத்தவர்கள் கையிலே தான் இருக்கிறது என்பதும், ‘ஆட்சிகள் மாற லாம், காட்சிகள் மாறாது’ என்ற அடிப் படையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரையில், அது வசதி படைத்த வர்கள் கையிலேதான் இருக்கிறது என்பதும், நாடறிந்த உண்மை. இந்தப் பின்னணியில்தான், ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என் கிற கிராமத்துச் சொலவடை உருவாகி, இன்றளவும் இந்தியாவில் பெரும்பகுதி யில் அது இன்னமும் உயிரோடு உலவி வருவதை அறிய முடியும்.

மார்க்சிஸ்ட்டுகள் தனிமைப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மையல்ல. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ், மம்தா பானர் ஜியோடு சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, நந்திகிராமத்தைப் பயன்படுத்தி மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தியம் மற்றும் பெருமுதலாளிகள் உள்ளிட்டு அனை வரும் ஒன்றுபட்டு எடுத்த முயற்சிகளின் விளைவாகத்தான் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளிடமிருந்து பல தொகுதி களை அவர்கள் கைப்பற்றினார்கள். 1970 இலிருந்து இதுவரை எந்தத் தேர்தலிலும் சந்திக்காத பின்னடைவை இடது முன் னணி இத்தேர்தலில் அடைந்தபோதி லும்கூட, பழங்குடியினருக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து மக்களவைத் தொகுதி களிலும் மார்க்சிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக் கிறது. லால்கார் பகுதி இடம்பெறும் ஜார்க்ரம் மக் களவைத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1977 இலிருந்து இதுவரை இங்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் வெற்றிபெற்று வருகிறது. 2006இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலிலும் இப்பகுதியில் மொத் தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதி களில் மார்க்சிஸ்ட்டுகள் வென்றுள்ளனர். ஆகவே மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட்டு கள் தனிமைப்பட்டுவிட்டதாகக் கூறுவ தில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

மாநிலத்தில் மற்ற இடங்களில் இடது முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும், பழங்குடியினர் அதிகமாக உள்ள இடங்களில் இடது முன்னணியே தொடர்ந்து வலுவாக இருப்பதும், அங் குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இடது முன்னணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும் திரிணாமுல் காங் கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணிக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. மார்க் சிஸ்ட்டுகள் வெற்றி பெற்ற இடங்களில் கலவரத்தை துவக்குவது, அதன் மூலம் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஆதரவை அளித்துவரும் பழங்குடியினர் வாழும் பகுதிகளைக் கலவரப் பூமியாக மாற்று வது என்ற இழிநோக்கத்தோடுதான் மாவோயிஸ்ட்டுகள், இதனைத் துவக்கி யிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசும் இதற்கு உடந்தையாக இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் சித்ரவ தைகளுக்கு எதிரான மக்கள் குழு (பிஎஸ் பிஜேசி)வின் தலைவராக மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்தவர்தான் இருந்துவரு கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜார் கண்ட் கட்சி ஆதரவோடு மாவோயிஸ்ட் டுகள் நடத்தி வந்த பிஎஸ்பிஜேசி இயக் கத்திற்கு எதிராக, பத்தாயிரம் பழங்குடி யினரைத் திரட்டி, இந்தப் பகுதியில் மாபெ ரும் கண்டனப் பேரணியை பாரத் ஜகத் மாஜி மார்வா என்னும் பழங்குடியினர் அமைப்பு சென்ற ஆண்டு டிசம்பர் 9 அன்று நடத்தியது. இவ்வாறு பேரணி நடைபெற்ற அடுத்த இரு நாட்களுக்குள் இதன் தலைவரான சுதிர் மண்டல் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப் பட்டார்.தேர்தல் பிரச்சாரத்தின்போதும், தேர்தலுக்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 57 பேர் மாவோயிஸ்ட்டு களால் கொலை செய்யப் பட்டிருக்கிறார் கள். இவர்களில் பெரும் பகுதியினர் பழங் குடியினர் மற்றும் வெகுஜன அமைப்பு களின் முக்கிய தலைவர் களாவார்கள்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட் டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ் வொருவரும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாவோயிஸ்ட்டுகளுக்குக் கப்பம் கட்ட வேண்டுமாம். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இதைப்போல் இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டுமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பகுதிகளில் பணிபுரிந்து வந்த டாக்டர், நர்ஸ், ஆசிரியர் மற்றும் பல அரசு ஊழியர்கள் மாவோ யிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்டுள் ளதால் இப்பகுதிகளில் அரசு நிர்வாக எந் திரமே முடக்கப்பட்டது. அதன் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அமலாவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒருசில கிராமங்களில் மம்தா பானர்ஜி வகையறாக்களின் ஆதரவுடன் நடைபெற்று வந்த இந்த அக்கிரமங்கள், சாதாரண மக்களைப் பெரும் அச்சத்திற்கு உள் ளாக்கியுள்ளது என்றாலும், ஒட்டுமொத் தத்தில் இந்தப் பகுதியில் இவர்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியவில் லை என்பதுதான் நடந்து முடிந்த நாடாளு மன்ற மக்களவைத் தேர்தலில் இடது முன்னணி இங்கே மாபெரும் வெற்றி பெற்றிருப்பதும், தற்போது மத்திய-மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையையொட்டி, மாவோ யிஸ்ட்டுகள் ஓடி ஒளிந்துள்ள நிகழ்வு களும் காட்டும் உண்மைகளாகும்.

இவ்வாறு மாவோயிஸ்ட்டுகளின் பிடி யிலிருந்து மீட்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் இப்போது மிகுந்த மகிழ்ச் சியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும் பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டு மல்ல, இவர்களின் வாழ்க்கையை புனர மைக்கக் கூடிய வகையில் சிறப்பு சலு கைகளையும் மாநில அரசு அறிவித்து அமல்படுத்தத் துவங்கியுள்ளது.

சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பரி சீலித்த மேற்குவங்க இடது முன்னணி, நிலச் சீர்திருத்தம், பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் போன்றவற்றில் பெரும் முன் னேற்றத்தை செய்திருந்தாலும், ஏழை மக்களில் கணிசமான பகுதியினருக்கு இன்னமும் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட வேண்டியிருக்கிறது என்பதையும், ஒரு சில நல்ல திட்டங்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு இவற்றைச் சரிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் வேண்டும் என்று தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இன்னொரு தேவையற்ற பிரச்சனையையும் லால்கார் சம்பவங் களையொட்டி கிளப்புகிறார்கள். மாவோ யிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு மார்க் சிஸ்ட்டுகளுக்கு அக்கறையில்லை. ஆகவே, அவர்களுக்குத் தடை விதிப் பதை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை ‘தினமணி’, ‘முர சொலி’ போன்ற நாளேடுகள் கூறிவரு கின்றன. இவர்களுக்கு சில உண்மைகள் தெரியாது என்று நம்பலாம். மாவோயிஸ்ட் அமைப்பு, இதுவரை மேற்கு வங்கத்தில் மட் டும்தான் தடைசெய்யப்பட வில்லை. ஏற் கனவே ஒரிசா, சத்தீஸ்கார், ஜார் கண்ட், ஆந்திரா, தமிழ்நாடு போன்று பல மாநிலங் களில் தடை விதிக்கப்பட்டு பல ஆண்டு களாகி விட்டன.

நக்சலைட் இயக்கம் முதன்முத லாகத் தோன்றியதே மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத்தான் என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏராள மானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையையும் மறந்து, ‘தின மணி’ நாளேடு, இடதுசாரிகள் ஆரம்பத் தில் நக்சலைட் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர் என்று தன் தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. பொய் சொல்வதற்கு அளவே கிடையாதா?

மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் தடை இருந்தும், அங்கெல்லாம் மாவோ யிஸ்ட்டுகள் ஒடுக்கப்படவில்லை என் பது மட்டுமல்ல, ஜார்கண்ட் மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டுதான் லால் கார் பகுதியில் இவர்கள் தாக்குதல்களை நடத்தி வந்தார்கள், கலவரங்களைச் செய்தார்கள் என்பதும், மம்தா பானர்ஜி வகையறாக்கள் கொடுத்த ஆதரவால் தான் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையி லான அரசாங்கத்திற்கு எதிராக வன் முறைகளைத் தூண்டி வருகிறார்கள் என் பதும்தான் உண்மை.

இதனால்தான் சில நூறு ஊழியர் களை மார்க்சிஸ்ட்டுகள் இழக்க வேண்டி வந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட்டு கள் போராடி வருகிறார்கள். மாவோயிஸ்ட் டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதான் அதிகமான அள வில் ஊழியர்களை இழந்திருக்கிறது. ஆகவே மாவோயிஸ்ட் டுகளை எதிர்க் கின்ற நடவடிக்கையில் எவ்விதத் தயக்கத்திற்கும் இடமில்லை. மாறாக வெறும் தடை மட்டும் பிரச் சனையைத் தீர்த்துவிடாது, சாதாரண மக்களை வென்றெடுக்கக்கூடிய நட வடிக்கைகள், இவர்களுடைய தவறான நோக்கத்தை அம்பலப்படுத்தும் அர சியல் நடவடிக்கைகள் இணைக்கப் பட்டு இத்தகைய வன்முறையாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையா கும். இந்த நிலை சரியானது என்பதையே இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள அனுபவங்களும் காட்டுகின்றன.

1968ல் உருவான நக்சலைட் இயக்கத் திடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சி இன்று வரை பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, அவற்றை முறியடித்து, மேற்கு வங்க மாநி லத்தில் மாபெரும் மக்கள் இயக்கங் களைக் கட்டி, வளர்ந்திருக்கிறது. மக்கள் இயக்கங்களினால் புடம்போட்டு வளர்ந் துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது மம்தா உள்ளிட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மாவோயிஸ்ட்டுகளு டன் இணைந்துள்ள நயவஞ்சகத்தையும் சந்தித்து, இப்போது நடைபெற்று வரும் போராட்டத்திலும் வெல்லும் என்பது திண்ணம்.