Wednesday, August 3, 2016

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவருகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது:சீத்தாராம் யெச்சூரி பேச்சு




புதுதில்லி, ஆக. 4-

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,எம்.பி. கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில்  திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். எனவே இதனை ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்திட வேண்டும் என்று நினைக்கிறேன்.
மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது
இது தொடர்பாக ஐந்து அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன். முதலாவது அம்சம், நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பாகும்இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் பிரிவு என்ன கூறுகிறது? “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும்.’’ மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லைநம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பே அந்தக் கருத்தாக்கத்திலிருந்துதான் மலர்கிறது. எனவே, இவ்வாறு ஒட்டுமொத்த கட்டமைப்பும், கூட்டாட்சிக் கட்டமைப்பும், மாநிலங்களின் உரிமைகளும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களாகும்.
இவ்வாறு நம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதால்தான், நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம். இதனை விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, பொது சரக்கு வரி -- சேவைகள் வரி குறித்து நம் அரசமைப்புச் சட்டம் உருவான காலத்தில் விவாதிக்கப்படவில்லைஅப்போது விவாதிக்கப்பட்டது என்னவென்றால், சரக்குகள் மீதான வரி.   எனவே இது ஒன்றும்  இப்போது வந்துள்ள புதிய கருத்தாக்கம் அல்ல. அரசியல் நிர்ணயசபையில் விவாதங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது பிரச்சனை என்ன வென்றால், மாநிலங்களுக்கு விற்பனை வரிக்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டுமா என்பதாகும். இந்தப் பிரச்சனையில் டாக்டர் அம்பேர்கர் என்ன கூறினார்? அவர் அரசியல் நிர்ணயசபையில் பேசியதை மேற்கோள் காட்டுகிறேன்:
மாநிலங்கள் விற்பனை வரியை வசூலிப்பதற்கு நாம் அனுமதிப்போமானால், பின்னர் மாநிலங்கள் விற்பனை வரி விகிதத்தை சரி செய்துகொள்வதற்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்எனவே, மத்தியில் இருந்து ஓர் உச்சவரம்பு  விதித்தோமானால் அது விற்பனை வரி விதிப்பிற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.’’  அவர் மேலும் கூறுகிறார்: “மாநிலங்கள் தங்களைச் சார்ந்திருக்கக்கூடிய விதத்தில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன. அந்த வளங்கள் மத்தியப் பட்டியலில் குவிக்கப்பட்டிருக்கிறதுஅவற்றில் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான வருவாய் வாய்ப்பையாவது மாநிலங்களுக்கு அளித்திட வேண்டியது விரும்பத்தக்கதாகும்எனவே, விற்பனை வரியை மாநிலங்களின் கைகளில் ஒப்படைப்பதற்கான முன்மொழிவு, இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகையில், மிகவும் நியாயமான ஒன்றாகும்.’’
இந்தப் பிரச்சனை இவ்வாறு அப்போதிருந்தே விவாதப் பொருளாக இருந்திருக்கிறது.
நாம் வாட் (VAT) அறிமுகப்படுத்தினோம். மாநிலங்களின் உரிமைகளில் அதிக அளவுக்கு பறிக்கப்பட்டுவிட்டது. இப்போது சரக்கு மற்றும் சேவைகள் வரியானது சேவைகளையும் சரக்குகளுடன் சேர்த்து மாநிலங்களிடமிருந்து இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
இப்போது, மாநில அரசுகள் தங்கள் வளங்களை அதிகரித்தக் கொள்ள எந்த உரிமையும் கிடையாதுதங்கள் மாநில மக்களின் நலன்களுக்கு எது முக்கியம் என்று மாநில அரசு கருதினாலும்அவை இனி தடைசெய்யப்பட்டுவிடும்.
இந்தப்பிரச்சனையை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்? நான் இதுகுறித்து நிதி அமைச்சரிடம் சொன்னபோது, அவர், சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு வரும்போது, இது குறித்து ஆராயப்படும் என்று சொன்னார். மாநிலங்களுக்காக சில நீக்குப்போக்குகள் (flexibilities), காணப்படும் என்றார்.
ஏன், இன்றைக்கும்கூட கேரள அரசாங்கம், ஒரு வரி விதித்திருக்கிறது. சுகாதார வரி. ஃபாஸ்ட் ஃபுட் மீது வரி விதித்திருக்கிறது. அனைத்துவிதமான ஃபாஸ்ட் ஃபுட்டுகளும்  மிகவும் குண்டாகும் (obesity) நிலையை ஏற்படுத்துகின்றன. அது ஓர் உன்னதமான சிந்தனை. இது சர்வதேச அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறிவிட்டா7 அத்தகைய உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன.
மேற்கு வங்கத்தில் சிகரெட்டுகள் மீது சர்சார்ஜ் விதிக்கப்படுகிறது. எதற்காக என்றால் சாரதா ஊழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இவ்வாறு விதிக்கப்பட்டிருக்கிறதுஇது நிறைவேற்றப்பட்டுவிட்டால் அந்த உரிமை இருக்காது.
எந்தப் பேரிடராக இருந்தாலும் அதனை தேசியப் பேரிடம் என்று கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை மத்திய அரசிடம் கேயேந்தும் நிலைக்கு மாற்றப்போகிறோமா? மாநிலங்களின் சட்டப்படியான உரிமைகள் (டநபவைiஅயவந iபாவள) தான் என்ன?
இங்கே அமர்ந்திருக்கிற நாம் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகள்தான். இந்த உரிமையை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? இது ஒரு முக்கியமான அம்சமாகும். இது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு உண்மையிலேயே வரக்கூடிய சமயத்தில் மாநில அரசுகளுக்கான உரிமைகளைத் பாதுகாத்திட வழிகாணப்பட வேண்டும். மாநிலங்கள் மத்திய அரசிடம் கேயந்தும் நிலைக்குத் தாழ்த்திடக் கூடாது. அவ்வாறு செய்தீர்களானால் நம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கித்தந்துள்ள  மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சித் தத்துவம் அழிக்கப்பட்டுவிடும்இதனை ஏற்க முடியாது. எனவே இது தொடர்பாக உறுதிமொழியை இந்த அரசாங்கம் தந்திட வேண்டும்சரக்குகள் மற்றும் சேவை வரிகளுக்கான சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் அதற்கான ஷரத்துக்கள் அதில் காணப்பட வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ்: அது வருமானால்.!
சீத்தாராம் யெச்சூரி: அது வருமானால் மற்றும் அது வரும்போது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஒரு மறைமுக வரிதான்
இரண்டாவது அம்சம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது உண்மையிலேயே ஒரு மறைமுக வரி விதிப்புதான். மறைமுக வரியே ஒரு பிற்போக்குத்தனமான (regressive) வரிதான். இது ஏழைகளை மேலும் கடுமையாகத் தாக்குகிறது.
இந்தியாவில், இன்றையதினம் நேர்முக வரி (direct tax) 37.7 சதவீதமாகும். மீதம் உள்ள 62.3 சதவீதம் மறைமுக வரி (indirect tax) ஆகும். அதாவதுமக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்
சென்ற பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர், “மறைமுக வரிகள் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என்றும் அதே சமயத்தில் நேரடி வரிகள் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைக்கப்படும்,’’ என்றும் கூறினார்என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பணக்காரர்களை மேலும் வளமானவர்களாக மாற்றுகிறீர்கள். ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுகிறீர்கள்இந்தப் பின்னணியில் இந்த 37.7 சதவீத நேரடி வரி சேகரிப்பை, தெற்கு ஆசியாவில் உள்ள இதர நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இந்தோனேசியாவில் நேரடி வரி வருவாய் 55.8 சதவீதம். பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் ஓர் அங்கமாக உள்ள தென் ஆப்ரிக்காவில் நேரடி வரி வருவாய் 57.5 சதவீதம்.  ஆனால் நம் நாட்டில் அது 37.7 சதவீதம் மட்டுமே. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிஇதற்கு நீங்கள் உச்சவரம்பு விதிக்க வேண்டும். விதிக்கவில்லை எனில் அது சாமானிய மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.  
இன்று நாட்டின் எதார்த்த நிலை என்ன?
கடந்த ஓராண்டில், நம் நாட்டில் உள்ள அமெரிக்க டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 100இலிருந்து 150ஆக உயர்ந்திருக்கிறது. உங்கள் கூற்றின்படியேஇந்தியா ஒளிர்கிறது.’’ ஆனால் 2011 பொருளாதார தரவு அறிக்கை (Economic Data Report) என்ன கூறுகிறது?
இந்தியாவில் 90 சதவீதக் குடும்பங்களில், குடும்பத்தில் குடும்பத்திற்காக ஊதியம் ஈட்டி வருபவர், மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே6 ஈட்டி வருகிறார்,’’ என்று கூறியிருக்கிறது. இவ்வாறு இருவிதமான இந்தியர்கள் நாட்டில் இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் நீங்கள் கொண்டுவரும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்புச் சட்டம் இவ்விது இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியே மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும்.
எனவே இச்சட்டமுன்வடிவைக் கொண்டுவருகையில் அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மூன்றாவது அம்சம் துல்லியமான திருத்தங்கள் குறித்ததாகும்திருத்தங்கள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள பரிந்துரைகளில் குழப்பங்கள் நீடிக்கின்றன. அவை தெளிவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான்காவது அம்சம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக தாவா ஏற்பட்டால் அதனை எப்படிச் சரிசெய்துகொள்வது என்பதற்கான தாவா தீர்மானம் எந்திரம் (dispute resolution mechanism) குறித்ததாகும். இது தொடர்பாக துல்லியமான  முறையில் விவாதித்து,இச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுகையில் அதில் இணைக்கப்பட வேண்டும்.
இறுதியாக, நான் கூறவிரும்பும் அம்சம் என்னவெனில், இது ஓர் ஆழமான சட்டமுன்வடிவாகும். மாநிலங்களின் வரி வருவாயில் கடும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இச்சட்டமுன்வடிவைக் கொண்டுவர இருக்கிறோம்அதேபோன்று இதில் பெறக்கூடிய வருவாயை எதற்கு செலவழிக்கப்போகிறோம் என்பதிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. எனவே சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு (GST Bill) மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய மத்திய, மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவுகளும் நம் விவாதத்திற்காக இங்கே  கொண்டுவரப்பட்ட, உரிய விவாதங்களுக்குப்பின் நிறைவேற்றப்பட வேண்டும்.
அவை நிதி சட்டமுன்வடிவாக (Money Bill) கொண்டுவரப் படக்கூடாது. எதை எதை நிதி சட்ட முன்வடிவாகக் கொண்டுவரலாம் என்பது குறித்து நம் சகா ஒருவர் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார். நாம் அதன் தீர்ப்புக்காக காத்திருப்போம்.
காலனிய ஆட்சிக் காலத்திலிருந்த பல நடைமுறைகளை பாரம்பர்யமாக இப்போதும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று இந்த நிறம் தொடர்பானது. மக்களவைக்குப் பச்சை நிறம், மாநிலங்களவைக்கு சிவப்பு நிறம்மக்களவை ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அது மாநிலங்களவையின் அறிவுக்குப் பொருந்தி வரவில்லை என்றாலோ அல்லது நாட்டு மக்களின் நலன்களுக்குப் பாதகமானது என்று கருதினாலோ அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும், நம் சிவப்பு நிறத்தைக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது.
அரசமைப்புச் சட்டத்தின்படி இறையாண்மையின் உச்சபட்ச அதிகாரம் மக்கள்தான். நாம் நம் அரசமைப்புச் சட்டத்தை, “மக்களாகிய, நாம், என்றுதான்...’’  துவக்குகிறோம். இவ்வாறு நாட்டு மக்களின் நலன்கள்தான் உச்சபட்சம். சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தைக் கொண்டுவரும்போது நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்தப்போகிறோமா அல்லது கீழறுக்கப் போகிறோமா என்று பார்க்க வேண்டும்.
இந்தச் சட்டம் தொடர்பாக சில நாடுகளின் அனுபவங்கள் என்ன கூறுகின்றன.?
கனடாவில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது, முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் முல்ரோனி 1991இல் இதைக் கொண்டு வந்தார். அப்போது அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தது. நாட்டில் இதற்கெதிராக பெரும் அமளி ஏற்பட்டது. பின் அது 1993இல் நிறைவேறியது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்க பெரும்பான்மையைக் கொண்டிருந்த கட்சி, வெறும் இரு உறுப்பினர்களை மட்டுமே பெறக்கூடிய கட்சியாக மாறியது. இதனை மனதில் கொள்ள வேண்டும்.
மக்களின் நலன்கள் தலையாயது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிது. அந்த அடிப்படையில் இது தொடர்பான இதர சட்டமுன்வடிவுகளையும் கொண்டு வரலாம், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.’’
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினாரர்.
(ச,வீ)





Tuesday, August 2, 2016



ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம்
அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார்?
மாநிலங்களவையில் தபன்சென் ஆவேசம்
புதுதில்லி, ஆகஸ்ட் 3-
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம். அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் சிஐடியுவின் அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கேட்டார்.
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை அவர்களுக்குத் தராமல் பங்குச்சந்தையில் ஈடுபடுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் செவ்வாய் அன்று கொண்டு வரப்பட்டது. அதில் பங்கேற்று தபன்சென் பேசியதாவது:
இந்தப் பிரச்சனை மிகவும் ஆழமான பிரச்சனையாகும். ஊழியர்களின் வருமான வைப்பு நிதிக்கு ஒன்றுமாற்றி ஒன்று என பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.
முதலில் இதற்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். பின்னர் இதில் தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். இது தொழிலாளர்களின் சொந்தப் பணம். இதை அவர்கள் திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?
அவர்கள் திரும்பப் பெறுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைத் விதித்தீர்கள். இவ்வாறு செய்வதற்கு யார் நீங்கள்? தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்தபின் அதைத் திரும்பப் பெற்றீர்கள்.
இவ்வாறெல்லால் செய்யாதீர்கள் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. ஆனால் அதன்பின் உங்களுக்குக் கேட்கக்கூடியவாறு, நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக்  கேட்க வைத்தார்கள்.
தொழிலாளர்கள் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் கூறுவதற்கு அவர்கள் சொல்லத் தயங்குவதே இல்லை.
இப்போது அவர்களின் பணத்தை மிகவும் நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறீர்கள்அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு உங்கள் வாதம் என்ன? சிறந்த ஆதாயம் (நெவவநச சநவரசn) கிடைக்கும் என்பதாகும். இது விவாதத்திற்குரிய ஒன்றாகும். ஆனால் ஒரு விஷயம் விவாதத்திற்கு உரியது அல்ல.
மத்திய அறங்காவலர் குழு (கூh ஊநவேசயட க்ஷடியசன டிக கூசரளவநநள), தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒரே குரலில் உங்களிடம், “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று கூறியிருக்கிறார்கள். எவ்விதமான ஊசலாட்டமுமின்றி மிகவும் தெளிவான முறையில் அவர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின், ஏன் நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், தலையிடுகிறீர்கள்?
இது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன? ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லாமல் விட்டது என்னவெனில், முதல் பத்து மாதங்களில் உங்கள் நஷ்டம்  400 கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்பதாகும். நீங்கள் அதை இங்கே சொல்லாமல் இருக்கிறீர்கள். எப்படியோ நீங்கள் சமாளித்துக் கொள்கிறீர்கள்.
ஒரு விஷயத்திற்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். இதனை அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழிலாளர்களுக்குச் சொந்தமானதாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் கொடுபடா ஊதியமே (னநகநசசநன றயபந) ஆகும். கொடுபடா ஊதியமும் தொழிலாளர்களையே சாரும். அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ  கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம். தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்,’’ என்கிறார்கள்.
இதைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ ஊக சந்தையில்  முதலீடு செய்யுங்கள் என்கிற சிந்தனையை அவர்கள் மத்தியில் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது ஐந்து சதவீதமாக இருக்கிறது. ஆனால் இது பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும். ஆனாலும் ஐந்து சதவீதத்தைக்கூட  எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தயவுசெய்து இத்திட்டத்தை இப்போதே கைவிடுங்கள்.
உலக அனுபவம் என்ன சொல்கிறது?
தனி நபர் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்பது வேறு. அவர் லாபம் ஈட்டுவதையோ அல்லது நஷ்டம் அடைவதையோ புரிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் இதுபோன்று ஓய்வூதியம் மற்றும் பொதுப் பணத்தை இவ்வாறு ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான். இதுதான் உலக அனுபவமாமகும். நீங்கள் எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என்று எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்தப் பாருங்கள்
அந்த நாடுகளில் சமாளிக்கமுடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?
அவ்வாறு எவ்வித உத்தரவாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்?
தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் - அவர்கள் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்துள்ள தொகையுடன் - விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்.
சூதாட்டத்தின் மூலம் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. உங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது. அங்கே கவனம் செலுத்துங்கள். தொழிலாளர்களின் சொந்த சேமிப்புடன் விளையாடாதீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள்.
இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்நீங்கள் விரும்பும் மொழியில் அவர்கள் உங்களுக்கு இதனைப் புரிய வைப்பார்கள்.’’
இவ்வாறு தபன்சென் பேசினார்.
(.நி.)