Showing posts with label Mightier struggles. Show all posts
Showing posts with label Mightier struggles. Show all posts

Sunday, February 24, 2013

வலுத்து வரும் மக்கள் போராட்டங்கள்


பல வழிகளில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறுத்தமாகும். சுதந்திர இந்தி யாவில் முதன்முறையாக இரு நாட்களுக்கு, அதாவது 48 மணி நேரத்திற்கு, அறைகூவல் விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் இது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து (மொத்தம்11) மத்தியத் தொழிற்சங்கங்களும் இணைந்து முதன்முறையாக, தங்கள் தலைமையின் அரசியல் வித்தியாசங்களை மறந்து கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தமும் இதுவாகும். இந்த அறை கூவலை நாட்டில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் அநேகமாக அனைத்துத் தேசிய சம்மேளனங்களும் ஆதரித்திருக் கின்றன. மேலும் இந்த அறைகூவலுக்கு மாநில அளவில் இயங்கிடும் பல்வேறு தொழிலாளர் மற்றும் ஊழியர் அமைப்புகளும், பல்வேறு தொழிற்சாலைகளில் சுயேச்சையாக இயங்கிடும் தொழிற்சங்கங்களும் கூட ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் இந்த அறைகூவலுக்கு வெளிப்படுத்தி இருந்தன. கூடுதலாக, விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள் மற்றும் மாதர் சங்கங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத முறையில் நடைபெறும் தொழி லாளி வர்க்கத்தின் நடவடிக்கைக்குத் தங் கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தன. இந்திய ஆளும் வர்க்கங்கள் கடந்த இரு பதாண்டுகளாகப் பின்பற்றிவரும் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங் களின் விளைவாக உழைக்கும் வர்க்கம் மற் றும் பல்வேறு விதங்களிலும் கடும் உழைப் பில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீது அடுத் தடுத்துத் தாக்குதல்களைத் தொடுத்துவரும் பின்னணியில்தான் இப்பொதுவேலைநிறுத் தம் நடைபெற்றது. உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும், பல்வேறு அமைப்பு களும் எழுப்பிய நியாயமான கோரிக்கைகள் குறித்தும், அவற்றிற்காக அவை கடந்த காலங்களில் நடத்திய வீரஞ்செறிந்த நட வடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் இது வரை ஆட்சியாளர்கள் காதில் விழவில்லை.

இம்முறை கூட, பல மாதங்களுக்கு முன்பே, தொழிற்சங்கங்களால் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தும், இந்தியாவில் உள்ள சட்டங்களின் கீழ் வேலைநிறுத்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும், ஆட்சியாளர்கள் மத் தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களை மிகவும் காலம் தாழ்த்தி, அதாவது பொது வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கு முதல் நாளான பிப்ரவரி 19 அன்று மாலைதான், பேச்சுவார்த்தைக்காக அழைத்தது. போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தலை வர்களிடம் அறைகூவலை விலக்கிக் கொள் ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம்என்று பதிவு செய்வதற்காக மட்டுமே அர சாங்கம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவு. இது மிகவும் நகைக்கத்தக்க ஒரு செயலாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் மீது முறையாக விவாதிக்க வேண்டும் என்கிற உணர்வுகூட மத்திய அமைச்சர்களிடம் காணப்பட வில்லை. மாறாக, வேலைநிறுத்தத்திற்கான அறைகூவல் விலக்கிக் கொள்ளப்பட்டால் மட்டுமே கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.நாளும் உயரும் விலைவாசியைக் கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்திடு, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை கிலோ ரூ.2 வீதம் கொடுப்பதன்மூலம் உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்து, கரத்தால் உழைக் கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதத் திற்கு பத்தாயிரம் ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்திடு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு, தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையையும், முறைசாராத் தொழிலாளர்களின் சமூக, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடு, ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சனைகளைக் களைந்திடு உட்பட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இப் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாளும் ஏற்றப்பட்டுவரும் பொருளாதாரச் சுமை களின் காரணமாக கடும் வேதனைக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பெரும் பான்மை மக்களுக்கு ஓரளவிற்காவது நிவா ரணம் கிடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டே இக்கோரிக்கைகள் அனைத் துமே உருவாக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்தின் இரண்டா வது நாள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இக்கூட்டத்தொடரின்போது நாடாளு மன்றம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் லோக்பால் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவுகள், நீதிபதி வர்மா குழு அறிக்கையை சட்டமாக மாற்றுதல் போன்ற பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆயினும், பட்ஜெட் சம்பந்தமாக முன்மொழிவு களை நிறைவேற்றுவது என்பதுதான் பிர தான நிகழ்ச்சி நிரலாகும். பொருளாதார மந்தம் மிகவும் மோசமாக உள்ள சூழ்நிலையின் பின்னணியில் இந்த ஆண்டு பட்ஜெட் முன்மொழிவுகள் வருகின் றன. சென்ற நிதியாண்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 5 விழுக்காடு என்கிற மத்திய புள்ளியியல் அமைப்பின் மதிப்பீட்டை நிதியமைச்சகம் மறுத்த போதிலும், மேற்படி புள்ளியியல் அமைப்பின் மதிப்பீடே உண்மைக்கு மிக நெருக்கமான ஒன்று என்பது எதார்த்தமாகும். தொழில் உற்பத்தி சென்ற டிசம்பரில் 0.6 விழுக்காடு அளவிற்குச் சுருங்கிவிட்டது. இதேபோன்றுதான் சென்ற நவம்பரிலும் இருந்தது. 2012 ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் தொழில் உற்பத்தி வெறும் 0.7 விழுக்காடு அளவிற்கே அதிகரித்திருக்கிறது. ஆனால் சென்ற ஆண்டு இது 3.7 விழுக்காடாக இருந் ததுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் வீழ்ச்சியின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், நம்முடைய அட்டவணையில் 75 விழுக்காடு அளவிற்கு இருக்கின்ற உற்பத்தித் துறை யானது, டிசம்பரில் 0.7 விழுக்காடு வீழ்ச் சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் விளை வாக வேலையில்லாத் திண்டாட்டமும் அதி கரித்துள்ளது. 2013 ஜனவரியில் உணவுப் பணவீக்கத்தின் அளவு 10.8 விழுக்காடு அள விற்கு இருந்ததுடன், நாளும் உயரும் விலை வாசியும் இத்துடன் இணைந்து கொள்கிறது. காய்கறிகளின் விலைகள் 26 விழுக்காடு விகிதத்தில் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இதேபோன்று சமையல் எண்ணெய் 15 விழுக்காடு, கறி/மீன்/முட்டைகள் 14 விழுக்காடு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் 15 விழுக்காடு, சர்க்கரை 13 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. வரவிருக்கும் பட் ஜெட் இவ்வாறு நாளும் அதிகரித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து ஓரளவிற்காவது நிவாரணம் அளித்திடக்கூடிய வகையில் அமையக்கூடும் என்று மக்கள் எதிர்பார்ப்பது இயற்கையே. நடைபெற்ற தொழிலாளர் வர்க் கத்தின் இரு நாட்கள் வேலைநிறுத்தம் அர சாங்கத்திடம் துல்லியமாகக் கோருவதும் இதுவேயாகும்.
ஆயினும், அரசாங்கத்தின் நடவடிக்கை களை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, மக் களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய விதத்தில்தான் அதன் நடவடிக்கை கள் இருக்கும்போன்றே தோன்றுகிறது. மக் களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் அது இருக்கும் போல் தெரியவில்லை. நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டப்போகிறோம் என்ற பெயரில், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மாதந் தோறும் உயர்த்திடவும், ஏழைகளுக்கு அளிக் கப்பட்டு வந்த மானியஙகளைப் பெரிய அள வில் குறைத்திடவும் நடவடிக்கை எடுக்க இருப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே குறிப்பாகக் கூறிவிட்டது. தன்னுடைய பணக் காரர் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக, பணக்காரர்களுக்கும் இந்திய கார்ப்ப ரேட்டுகளுக்கும் மிகப்பெரிய அளவில் அளித்து வரும் வரிச்சலுகைகள் தொடரும் என்பதைக் குறிப்பாகத் தெரிவித்துவிட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரசாங்கத் திற்குத் தற்போது இருந்து வரும் நிதிப்பற் றாக்குறைத் தொகையை விட அதிகமான அளவிற்கு, அதாவது 6000 கோடி ரூபாய் அள விற்கு, வரிச் சலுகைகளை அளித்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகள் இயல்பாகவே இந் திய மக்களின் வயிற்றில் அடித்து, சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஆதரவாகச் செயல் படுகின்றன. இதன் விளைவாகத்தான், அதிகாரவர்க்கச் சிந்தனை என்பது சர்வதேச நிதிமூலதனத்தைக் கவர்வதன் மூலம் வளர்ச் சியைப் பெருக்கிடலாம் என்று கருதி, அதற் கேற்ற வகையில் ஆலோசனைகளை வழங் குவதுபோல் தோன்றுகிறது. மேலும், பட்ஜெட்டானது,தொடர்ந்து இருந்துவரும் உலக நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதையும் பிரதி பலித்தாக வேண்டும். 2013ஆம் ஆண்டிற் கான உலக அளவிலான வேலைவாய்ப்புகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தனி அறிக்கை ஒன்று ‘‘உலக நிதி நெருக்கடி ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகி யுள்ள நிலையில், உலக வளர்ச்சி விகிதம் என்பது தொடர்ந்து மந்த நிலையில் இருப்ப தாகவும், வேலைவாய்ப்பின்மை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருப்ப தாகவும்’’ குறிப்பிட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டுவாக்கில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாது இருப்பார்கள் என்றும், கூடுதலாக 10 கோடி பேர் இருக்கும் வேலை களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மதிப்பிட்டிருக்கிறது. தற்சமயம் 35 விழுக் காட்டிற்கும் மேலான இளைஞர்கள் எவ்வித வேலையும் கிடைக்காது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது என்பது வருமான வளர்ச்சிவிகிதத்தின் மீது நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தி இருப்பதும் (இந்தியா வைப் பொறுத்தவரை பணவீக்கமும் சேர்ந்து) உண்மை ஊதியத்தைக் கடுமையாகக் கீழிறக்கிட நிர்ப்பந்தித்து வருவதாகவும்’’ அந்த அறிக்கையின் முடிவில் கூறப்பட் டிருக்கிறது. இவற்றின் காரணமாக, மக் களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளா தார நடவடிக்கைகளின் வேகமும் கணிச மான அளவிற்குக் குறைந்துகொண்டே செல் கிறது என்றும் அது கூறுகிறது.மக்களின் தேவைகளுக்கு முட்டுக் கொடுத்து அவர்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, உலக முத லாளித்துவமானது தன்னுடைய நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு மேற்கொண்டிடும் நட வடிக்கைகள் புதியதொரு நெருக்கடியை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாங் கும் சக்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்திருப் பதிலிருந்து மீள்வதற்காக அது அவர்களுக்கு மிகவும் எளிய தவணைகளில் கடன்கள் கொடுப்பதன் மூலம் சரி செய்துகொள்ளலாம் என்று கருதியது. இந்தக் கடன்களை இவர் களால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், உலகப் பொருளாதார மந் தத்துடன் நெருக்கடியின் இரண்டாவது கட் டம் தொடங்குகிறது. இந்நெருக்கடியி லிருந்தும் மீள்வதற்காக, நெருக்கடியை இவ் வாறு உருவாக்கிய உலக நிதி ஜாம்ப வான்களுக்கு, அவர்கள் இருக்கின்ற நாடு களில் உள்ள அரசுகள் அவர்களின் திவால் தன்மையைத் தங்கள் திவால் தன்மையாக மாற்றிக்கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளித்துக் காப்பாற்றியுள்ளன. இது நெருக் கடியின் மூன்றாவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. கார்ப்பரேட் திவால்தன்மைகள் அந்தந்த (வளர்ச்சியடைந்த முதலாளித்துவ) நாடுகளில் உள்ள அரசுகளின் திவால் தன் மைகளாக மாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அரசாங்கங்கள் தங்கள் செல வினங்களைக் குறைப்பதற்காக, இந்நாடு களில் பல ‘‘சிக்கன நடவடிக்கைகள்என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கிவந்த நிதிஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்தன. இது மக்களின் வாங்கும் சக் தியை மேலும் சுருக்கி, அதனை அடுத்து, வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் மந்த நிலைமையை உருவாக்கி நெருக்கடியின் நான்காவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. லண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டி யன்நாளேடு, பிரிட்டனில் கடந்த 70 ஆண்டு காலமாக இருந்து வந்த மக்கள் நலஅரசு இறந்துவிட்டது என்று கூறி ‘‘மரண அறிவிப்புஒன்றை சமீபத்தில் வெளியிட் டிருந்தது. அன்றைய இதழில், ‘‘இரங்கல் குறிப்புகளுக்குப் பதிலாக, தி கார்டியன் கடிதப்பக்கத்தில் சிறப்பு வெளியீடு’’ வெளி யிட்டிருந்தது.நெருக்கடியின் ஐந்தாவது கட்டம் தற் போது நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா தற்சமயம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதன் தற் போதைய கடன் என்பது அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். இவ் வாறு உலகப் பொருளாதாரம் தன்னுடைய நெருக்கடிக் கட்டங்களுக்குள் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது.இந்தப் பின்னணியில், இந்தியப் பொரு ளாதாரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பெரிய அளவில் விரிவாக்கு வதில் கவனம் செலுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கு பொது முதலீடுகளைக் குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்திட வேண்டும். அதன் மூலமாக பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
அதன் விளைவாக உள்நாட்டுத் தேவைகளும் பெரிய அள விற்குப் பெருகிடும். இன்றைய உலகப் பொரு ளாதார நெருக்கடி சூழ்நிலையில் இதிலி ருந்து உய்வதற்கு இது ஒன்றே வழியாகும்.இவ்வாறு பொது முதலீடுகளை அதிகப் படுத்துவதற்கான வளங்களுக்கு நமக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உயர் மட்ட ஊழல் களை ஒழித்துக்கட்டினோமானால், பணக் காரர்களுக்கு அளித்துவரும் வரிச்சலுகை களை நிறுத்தினோமானால் இது ஒன்றும் கடினமான வேலையே அல்ல. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நம் நாட்டின் வளங்களை பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தி, நம் பொருளாதாரத்தை ஒரு வலுவான நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும், நம் மக் களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்திட முடியும்.பெரும்பான்மையான நாட்டு மக்களின் நலன்களைக் காத்திட வேண்டுமானால் பட் ஜெட் இத்தகைய திசை வழியில் அமைந்திட வேண்டும். அவ்வாறில்லையெனில், எதிர் வருங்காலங்களில் மக்களின் மகத்தான போராட்டங்களை எதிர்கொள்ள ஆளும் வர்க் கங்கள் தயாராகட்டும் என்று எச்சரிக்கிறோம். 
(தமிழில்: ச.வீரமணி)

Saturday, December 31, 2011

மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிட வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்



‘‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’’ தன் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2011 முடிந்து 2012இல் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் நம் வாழ்வாதாரங்களைத் தீர்மானிக்கக்கூடிய மூன்று முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் 2011இல் நடைபெற்று அவை 2012ஆம் ஆண்டிற்கும் தொடரவிருக்கின்றன.

முதலாவதாக, உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, அகில இந்திய அளவில் லோக்பால் சட்டமும், மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா சட்டமும் கொண்டு வருவதற்கானதொரு சட்டமுன்வடிவு மக்களவையில் மட்டும் கடைசியில் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிப்பற்காக இதுபோன்ற அமைப்புகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சட்ட முன்வடிவு முதன்முறையாக 1968 மே 9ஆம் நாள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும், தேர்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நான்காவது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அச்சட்டமுன்வடிவும் காலாவதியாகிவிட்டது. அதேபோன்று, 1971 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் ஐந்தாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்துக் காலாவதியானது. மறுபடியும் நாட்டிலிருந்த அவசரநிலைக்காலம் முடிவடைந்தபின், ஜனதா கட்சி அரசாங்கத்தின் காலத்தில், 1977 ஜூலை 28 அன்று கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவும், மற்றொரு தேர்வுக்குழு அதனைப் பரிசீலனை செய்து முடிப்பதற்கு முன்னமேயே ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டதால், காலாவதியாகிப்போனது. மீண்டும் ஒருமுறை, 1985 ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கூட்டுத் தேர்வுக் குழுவினரின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போக முடியாததால் வெளிச்சத்திற்கே வர வில்லை. போஃபோர்ஸ் ஊழலை அடுத்து ராஜீவ்காந்தி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு லோக்பால் சட்டமுன்வடிவு 1989 டிசம்பர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும்கூட 1991 மார்ச்சில் ஒன்பதாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. 1996இலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது, மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின்பேரில் 1996 செப்டம்பர் 13 அன்று ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மீது விரிவான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு தன் அறிக்கையை 1997 மே மாதத்தில் சமர்ப்பித்தது. ஆயினும், மீண்டும் ஒருமுறை, இவற்றின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வடிவை இறுதிப்படுத்துவதற்கு முன்னமேயே பதினோராவது மக்களவை கலைக்கப்பட்டதால் இச்சட்டமுன்வடிவும் காலாவதியானது.

1996இல் 13 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு, ஆட்சியைவிட்டு அகன்றபின், பின்னர் மறுபடியும் இரண்டாவது தடவையாக 13 மாதங்கள் ஆட்சி செய்த வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் 1998 ஆகஸ்ட்டில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது. அதுவும் 1999இல் 12ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. பின்னர் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2001 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டமுன்வடிவை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த போதிலும் பாஜக அதனைச் சட்டமாக்கிட எந்தவிதமான முயற்சியும் எடுத்திடவில்லை. இப்போது ஒன்பதாவது முறையாக லோக்பால் சட்டமுன்வடிவும் லோகாயுக்தா சட்டமுன்வடிவும் நாடாளுமன்றத்தின் முன் வந்திருக்கிறது. மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒருவிதத்தில் இறுதியாக இதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வந்திருப்பதால், அங்கே பரிசீலனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் வலுவானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, நான்கு முக்கிய பிரச்சனைகள் மீது திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்புகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஊழலுக்கு இடங்கொடாது, குற்றமிழைத்தோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை வெளி சக்திகள் தலையிட்டு தடுக்க முடியாத வகையில், சுயேச்சையாக இயங்கக்கூடிய வகையில் வலுவானதொரு புலனாய்வு எந்திரம் அளிக்கப்பட வேண்டும், இச்சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கார்பரேட்டுகள் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளையும் கொண்டுவரவேண்டும், மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படாது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அளிக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநிலங்களவையில் இச்சட்டமுன்வடிவு நிறைவேறும் பட்சத்தில், இச்சட்டமுன்வடிவு மக்களவைக்கு அவற்றை ஏற்பதற்காக மீளவும் அனுப்பப்பட வேண்டும். அரசாங்கம், லோக்பால் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அமைப்புகள் மேலும் வலுவானதாக அமைந்திட ஏற்பட்டிருக்கக்கூடிய வித்தியாசங்களைச் சரிசெய்வதற்காகக் கூட்டு தேர்வுக் குழுவை (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந) அமைத்திடலாம், அல்லது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வரலாம்.
எது எப்படி இருந்தபோதிலும், உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரியான அமைப்புகளை உருவாக்குவதற்காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத்தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார். தன் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆயினும் அவர், நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. ஒரு ஜனநாயக நாட்டில்,அரசியல் இயக்கங்களின் உயிர்த்துடிப்புடன் மக்கள் எந்த அளவிற்கு அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்குபெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்துத்தான் அந்நாட்டின் ஜனநாயகத்தின் முதிர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தோமானால் அண்ணா ஹசாரேயும் அவர்தம் குழுவினரும் அரசியல் இயக்கங்களில் பங்களிக்க முன்வந்திருப்பதும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அவர்களின் நிலைப்பாடு சரியா, இல்லையா என்பதை இனி மக்கள் தீர்மானித்துக்கொள்ள விட்டிருப்பதும் வரவேற்கத் தக்கதேயாகும்.

ஆயினும், உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் முழுமையாக வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், இவர்களது பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் அநேகமாகக் காணப்பட வில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், இன்று காணப்படும் மிகப்பெரிய அளவிலான ஊழல்கள் அனைத்தும் கடந்த இருபதாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் கீழேதான் நடந்துள்ளன. ஊழல் என்பது சான்றோர் பழிக்கும் வினையாகத்தான் நம் சமூகத்தில் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றையதினம் நம்மைச் சுற்றியும் காணப்படும் ஊழல் என்பது மிகவும் வித்தியாசமானவைகளாகும். பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் அறநெறியற்ற குணங்களையும், இழிவழிகளிலும் திடீர்ப்
பணக்காரர்களாவதற்கான வாய்ப்பு வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கின்றன. இன்றைய தினம் நாட்டில் உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலின் முக்கிய காரணிகளாக விளங்கும் கார்பரேட்டுகளையும், தனியார்களையும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமேயாகும். இவ்வாறாக ஊழலை ஒழிப்பதென்பது அறநெறி சார்ந்த ஒன்று மட்டுமல்ல, நம் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிப்பதனை மறுத்திடக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய வள ஆதாரங்களை மிகப்பெரிய அளவில் திருப்பிவிடக்கூடிய நடவடிக்கை களுக்கும் எதிரானதாகும்.

உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியானமுறையில் இணைத்திடாமல் வலுவானமுறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் உயர்மட்ட அளவில் ஊழல் புரிந்திட ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவர்கள் புரிந்திடும் ஊழல்களை ஒழிக்க முடியாது. இதனை நன்கு கணக்கில் எடுத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீதான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளது.

ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோசமான முறையில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதன் பொருள், ஒரு பக்கத்தில் உலகப் பொருளாதார மந்தம் ஆழமாகியுள்ள பின்னணியில் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் வாழ்நிலைமை மேலும் மோசமாக வீழ்ச்சியுறும் அதே சமயத்தில், மறுபக்கத்தில் உயர்மட்ட அளவில் இயங்குபவர்களின் ஊழல் மூலமாகவும், அறநெறியற்ற நடவடிக்கைகளின் விளைவாகவும் நம் நாட்டின் செல்வாதாரங்கள் மேலும் கொள்ளையடிக்கப்படும். எனவேதான், புத்தாண்டில் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றிட, ஆட்சியாளர்களின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட்டங்களுக்குத் தயாராகிட வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய பின்னணியில் மக்களின் வாழ்க்கைச் சுமைகள் தொடர்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் அரித்திடுவதற்கு இட்டுச்செல்லுமாகையால், சிறந்ததோர் வாழ்க்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, வரவிருக்கும் ஆண்டில் சிறந்ததோர் வாழ்க்கைக்காக நம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காகவும், நாட்டு மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை அளிப்பதற்காகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.

நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிடவும், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)