Saturday, June 13, 2015

ஆர்எஸ்எஸ் - அம்பேத்கரின் எதிரி



சென்னை ஐஐடி-இல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையும் பின்னர் அத்தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள விதமும் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் சகிப்புத்தன்மையின்மையையும் கபடவேடத்தையும் நன்கு அம்பலப்படுத்திவிட்டன. மதிப்புமிக்க பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் ஆண்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.


இதனைச் செய்வதற்காக இக்கூட்டம் டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவாவின் ஆதரவாளர் என்றும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விசுவாசி என்றும் காட்டக்கூடிய விதத்தில் வரலாற்றையே திரித்துக் கூறிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுதும் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கும் நால்வர்ண சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடியவர். சமூக ஒடுக்குமுறைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது மனுஸ்மிருதி என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 1936ஆம் ஆண்டில் வெளியான சாதியை ஒழித்துக்கட்டுவோம் என்கிற அவரது நூல், சாதிய அமைப்புமுறையையும், பிராமணிய மேலாதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. இறுதியில் அவர், இந்துமதத்திற்குள்ளேயே இருந்து கொண்டு சாதிய அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை என்று தீர்மானித்து,
இந்து மதத்திலிருந்தே அவரும் அவரைப் பின்பற்றுவோரும் விலகி புத்தமதத்தைத் தழுவினார்கள்.ஆனால் இப்போது ஆர்எஸ்எஸ் அவரது தத்துவார்த்த மற்றும் சமூகப் போராட்டங்களைத் திரித்துக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஓர் உண்மையான இந்துவாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்துயிசத்தை சீர்திருத்தம் செய்து, தீண்டாமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றுதான் விரும்பினாராம். அவர் புத்திஸ்ட்டாக மாறியதுகூட இந்து தர்மத்தைப் பின்பற்றும் மற்றொரு வழியாம். மேலும், ஆர்எஸ்எஸ், “அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டுகளின் எதிரியாக இருந்தார்’’ என்றும், “கம்யூனிசத்தை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காது எதிர்த்து வந்தார்,’’ என்றும் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இங்கேயும்கூட, ஆர்எஸ்எஸ் அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் ஒருசிலவற்றைத் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் எழுத்துக்களை ஒருங்கிணைந்து படிக்கும் எவரும், மார்க்சிஸ்ட் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத அதே சமயத்தில், காரல் மார்க்சின் சிந்தனைகளில் சிலவற்றை அவர் ஒத்துக்கொண்டார் என்பதை அறிவார்கள். அம்பேத்கர் கருத்தோட்டமும் கண்ணோட்டமும் அவர் தாராள சமூகக் கருத்துக்களுடனான ஒரு சமூக ஜனநாயகவாதி என்பதை நன்கு காட்டும். இந்துத்துவாவை டாக்டர் அம்பேத்கர் வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்த்தார். அவர் இஸ்லாமிய பழமைவாதத்தை வெறுத்த அதே அளவுக்கு இந்து ராஷ்ட்டிரம் என்கிற சித்தாந்தத்தையும் எதிர்த்தார். அவர் கூறியிருப்பதாவது: “இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையாகும்பட்சத்தில், சந்தேகமே இல்லை,
நாட்டிற்கு அது மிகப்பெரிய கேடாகும். ஓர் இந்து என்ன சொல்கிறார் என்பது அல்ல பிரச்சனை, இந்துயிசம் என்பது சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் கேடு பயக்கக்கூடியதாகும். அதனால் ஜனநாயகத்துடன் ஒத்திசைந்து வாழ முடியாது. என்னவிலைகொடுத்தேனும் இந்து ராஜ்ஜியம் தடுக்கப்பட வேண்டும்.’’மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சென்னை ஐஐடி-இல் செயல்பட்டுவந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மொட்டைக் கடிதம் ஒன்றைத் தாங்கள் பெற்றிருப்பதாகக்கூறி அதன் நகலை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பி, அதுதொடர்பாக என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் என்று கேட்டதைத் தொடர்ந்து, ஐஐடி அதிகாரிகள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்தார்கள்.
மொட்டைக்கடிதத்தின் சாராம்சம் என்னவெனில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம், மோடி அரசாங்கம் குறித்தும் அதன் பொருளாதார மற்றும் காவிமயக் கொள்கைகள் குறித்தும் விமர்சித்திருந்ததேயாகும். இந்தத் தடைக்கு எதிராக நாடு முழுதும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் விரிவான அளவில் கிளர்ந்தெழுந்தனர். ஆர்எஸ்எஸ் சார்பான வலதுசாரி அமைப்புகள் உட்பட பல மாணவர் அமைப்புகள் செயல்படக்கூடிய அதே சமயத்தில் இதற்கு மட்டும் தடை ஏன் என்பதற்கு ஐஐடி நிர்வாகத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. இறுதியாக, ஐஐடி நிர்வாகம் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரத்தை மீண்டும் வழங்கியது.
ஆர்எஸ்எஸ்-சும் அதன் இந்துத்துவா சக்திகளும் தங்கள் காவிமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உயர்கல்வி அமைப்புகளைக் குறிவைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னதாக, தில்லி ஐஐடி நிர்வாகம் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பரிமாற வேண்டும் என்று தீர்மானித்தது. பல்கலைக்கழக அளவில் உள்ள பாடத்திட்டங்களில் புராதன இந்தியாவில் விஞ்ஞானம் என்னும் தலைப்பின் கீழ் வேத கால விஞ்ஞானத்தை சொல்லிக் கொடுக்கப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக் கின்றன. இந்து சாஸ்திரங்கள் வானளாவப் புகழப்படுகின்றன. குருமார்கள் ஆட்சி மற்றும் படுபிற்போக்கு நால்வர்ண சாதிய அமைப்புமுறை, இந்துத்துவா சித்தாந்தத்தின் ஒரு பகுதி என்று உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், அம்பேத்கரின் சமூகநீதிப் பார்வையை சூழ்ச்சியுடன் அழித்துவிட்டு அவரது கொள்கைகளும் தங்களது கொள்கைகளே என்று பாசாங்குடன் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களது இத்தகு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட முடியும் என்பதற்கு சென்னை ஐஐடி-இல் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தகர்த்தெறிந்து சிறிய அளவிலானவெற்றியை ஈட்டியிருப்பது, குறிப்பாய்த் தெரிவிக்கிறது.
தமிழில்: ச. வீரமணி


4 comments:

tamilan said...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

தலித் பகுஜன் மக்களை உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.

இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.

சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.

பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.

சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம் நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும்.
நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.

கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.
முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.

இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள பேக்லாக் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள், அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.

இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும். - யோகீந்தர் சிக்கந்த்.

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

tamilan said...

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
.
“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,“மஹோ பாத்யாய”,“மகா மஹோ பாத்யாய”,Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் பார்ப்பனர் . வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது.
.
கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது.

மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்.
.

.
சொடுக்கி படிக்கவும் :>>>> தாத்தாச்சாரியர் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? <<<<<
.

tamilan said...

நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

.
பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
.
சூத்திரன் என்றால் யார்?

நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் கூற்றுப்படிநீங்கள் சூத்திரன்.
.
சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.
.
அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
.
சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.
.
சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.
.
இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
.
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
.
இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.
.
நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------
.
நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
.
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,
.
கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?
.
கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!
.
கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11.
.
*************
நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

.
கீழுள்ள சுட்டிகளை சொடுக்கி கேட்டு
சிந்திப்போமா?
.

.
>>>
.சூத்திரன் என்பவன் யார்?



>>> சூத்திரன் - விழித்தெழு தமிழினமே

.

.
>>> திருமண மந்திரம் - விழித்தெழு தமிழினமே.
|
.

மின் வாசகம் said...

பார்ப்பனத்துவத்தின் இருப்பே இப்படி தான். திமிங்கலம் போல தமது எதிரியையே விழுங்கிச் செறித்துவிடும். இந்தோ-ஆர்யர்கள் இந்தியாவுக்கு வந்த போது எந்த மக்களையும், எந்த மக்களின் கடவுள்களையும் எரித்து அழித்தார்களோ. பின்னர் அந்த மக்களையும், அந்த மக்களின் கடவுள்களையும் தமதாக்கிக் கொண்டார்கள். இதற்காக அவர்கள் தத்துவங்களையும் திரிபு செய்யவும் தயங்க மாட்டார்கள். மகாவீரரும், புத்தரும் நாடு முழுவதும் மக்களினால் கொண்டாடப்பட்ட போது விகாரைகளை கொளுத்தியோடு மட்டுமின்றி, அவர்களை கொன்றொழித்தனர் சுங்கர்களின் ஆட்சியின் போது. அதன் பின் மகாவீரர், புத்தர் சொன்னவைகளை அப்படியே காப்பியடித்து வேதாந்தங்களைப் படைக்கவில்லையா. இன்றும் கூட அம்பேத்காரை இந்துத்வாவாதியாக்குகின்ற முயற்சியும் இவ்வாறான ஒன்றே. நூறாண்டுகளுக்கு பின் சவர்கருக்கு சித்தப்பா அம்பேத்கார் என்றாலும் என்பார்கள்.. ! காலக் கொடுமைகள்.