Friday, December 27, 2013

ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர்





அன்பார்ந்த நண்பர்களே.
27/12/13 அன்று புதுதில்லியில் மனதை மிகவும் நெகிழ வைத்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் சார்பில் அச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

புகைப்படத்தில் உள்ளோர் இடமிருந்து வலமாக மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா (Activist for Autism children), ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பற்கான குழுவின் செயலாளர் (AADI (Action for Ability, Development and Inclusion) ஷ்யாமளா, ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி,ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் படத்தில் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார்.   அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.

(ச,வீரமணி)

No comments: