புதுதில்லி, மார்ச் 16-
இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைப் புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
‘‘தமிழ்நாட்டில் ஊட்டியில் இருக்கின்ற இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை எக்ஸ்ரே பிலிம்கள் உட்பட பல மிகவும் கேந்திரமான போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். 1991களில் இதன் ஊழியர் எண்ணிக்கை 4500 ஆகும். இப்போது 800ஆக சுருங்கி விட்டது. இவர்களில் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள் மற்றும் பழங்குடியினராவார்கள். மேலும் இந்நிறுவனம் பல்வேறு வழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்நிறுவனம் நலிவடையும் நிலைக்கத் தள்ளப்பட்டுவிட்டது. இதனை இயற்கையாக சவக்குழிக்கு அனுப்பிட அரசு உத்திகளை மேற்கொண்டு வருவதா நான் கருதுகிறேன்.
பட்ஜெட் மீது நிதியமைச்சர் உரையாற்றுகையில் எச்பிஎப் நிறுவனத்தை தமிழக அரசுடன் கலந்து பேசி புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளபோதிலும், அதற்காக கடந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ள போதிலும், 2011-12ஆம் ஆண்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாதிருக்கிறார். நிதி ஒதுக்கீடு சுத்தமாக இல்லாமல் புனரமைப்பு எப்படிச் சாத்தியம் என்று புரியவில்லை. எனவே போதிய நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு எச்பிஎப் நிறுவனத்தை புனரமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
20 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு இல்லாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிக்கும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசுமுன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
--
(ச.வீரமணி)
Wednesday, March 16, 2011
மக்களைப்பற்றிக் கவலைப்படாத மிகவும் கொடூரமான பட்ஜெட்: ப்ரண்ட்லைன் தலையங்கம்
தொடர்ந்து மெகா ஊழல்களில் சிக்கிக் கறைபடித்துள்ளதோர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் முன் பெரும் சவாலாக உருவாகியுள்ள பண வீக்கத்தைக் கட்டுப்படுத்திடுவதிலோ, பெரும்பகுதி மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்திடவோ முற்றிலுமாகத் தவறிவிட்டது. வருவாய் தொடர்பான முன்மொழிவுகளில் அரசு, வசதி படைத்தோருக்கு, குறிப்பாக கார்பரேட் துறையினருக்கு, குறிப்பிடத்தக்க அளவில் வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்வதற்காக, பணவீக்கம் என்னும் தீயை மேலும் கொழுந்துவிட்டெரியச் செய்திடும் வகையில், மறைமுக வரிகளை அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள்கள் மீது அளித்து வந்த மான்யங்களை வெட்டிக் குறைத் திருக்கிறது. மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் வகைசெய்துள்ளது. இத்துடன் 2009 ஏப்ரலுக்கும் 2011 மார்ச்சுக்கும் இடையே தனியாருக்குத் தாரை வார்த்த பங்குகளையும் சேர்த்தால் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரும். மேலும் 2010-11 ஆம் ஆண்டுடன் 2011-12 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்காக இருக்கக்கூடிய நாட்டுப்புற ஏழை மக்களின் வளர்ச்சிக்காக விவசாயம், பாசனவசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து வந்த மத்தியத் திட்டச் செலவினங்கள் உண்மையான ரூபாயின் மதிப்பில் குறைந்திருப்பதையும் காண முடியும்.
பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2011-12ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய்களாகும். சென்ற 2010-11ஆம் ஆண்டில் இது 12 லட்சத்து 16 ஆயிரத்து 576 கோடி ரூபாய்கள். இவ்வாறு வெறும் 3.3 விழுக்காடு அளவிற்கே உயர்வு. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டமில்லா செலவினங்களுக்கான பட்ஜெட் தொகை 8 லட்சத்து 16 ஆயிரத்து 182 கோடி ரூபாய்கள். இது 2010-11ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் செலவினத் தொகையை விட 5 ஆயிரத்து 370 கோடி ரூபாய்கள் குறைவு. முக்கியமான மான்யங்கள் பலவற்றைப் பெருமளவில் வெட்டிக் குறைத்ததன் காரணமாகவே இந்தக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்து வந்த மான்யம் 14 ஆயிரத்து 746 கோடி ரூபாய் அளவிற்கும், உரங்களுக்கான மான்யத் தொகை 4 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கும், உணவு மான்யங்கள் 27 கோடி ரூபாய் அளவிற்கும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கியது தவிர திட்டமில்லா மூலதனச் செலவினம் 14 ஆயிரத்து 484 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக்கிறது. இது 2010-11 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினத்தைவிட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையாகும்.
அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையும் 50 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டிலிருந்த வருவாய் செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2011-12இல் அது 6 ஆயிரம் கோடி ரூபாய்களாக வெட்டப்பட்டிருக்கிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டச் செலவினத்தில், 2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 12.36 விழுக்காடு உயர்வு காணப்பட்டபோதிலும்கூட, இன்றைய பணவீக்கத்தின் காரணமாக ரூபாயின் உண்மை மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு என்பதும் உண்மையில் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில், அரசின் ஒட்டுமொத்த செலவினம் என்பது 2010-11ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படியான 15.4 விழுக்காட்டிலிருந்து, 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதீப்பீட்டில் 13.7 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.
விவசாயத் துறைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் தனிக் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது மிகவும் விந்தையாக இருக்கிறது. உண்மையில் மத்தியத் திட்டச் செலவினங்களில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் மற்றும் பாசனவசதிக்கும் மிகச் சிறிய அளவிலேயே தொகை அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் வருவாய் செலவினத்தில் 70 ஆயிரத்து 213 கோடி ரூபாய்களாக இருந்தது, இப்போது 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 70 ஆயிரத்து 597 கோடி ரூபாய்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரூபாயின் உண்மை மதிப்பில் இது கணிசமான அளவிற்கு குறைவானதாகும். எனவே விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுவதில் பொருளேதுமில்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையை, அவர் சமர்ப்பித்துள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை (எகனாமிக் சர்வே)யுடன் சேர்த்துப் பார்த்தோமானால், கிடைத்திடும் முடிவு வேறாக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதற்கு உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் சந்தை அமைப்பிலும் உள்ள குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்த்துள்ள நிதி அமைச்சர், இதற்குப் பிரதான காரணம் சில்லரை வர்த்தக வலைப் பின்னல்தான் என்றும்கூறி, இதற்குத் தீர்வு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதே வழி என்கிற வரைக்கும் சென்றிருக்கிறார். கார்பரேட் நிறுவனங்களுக்குப் பிரியமான நிகழ்ச்சிநிரலை இவ்வாறு நிதி அமைச்சர் கூறியிருப்பதால்தான் கார்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஊடகங்களும் பட்ஜெட்டை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளன.
மேலும் நிதி அமைச்சர் அவர்கள், ‘‘...மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதன் காரணமாக அவர்கள் வாங்கும் உணவுப் பொருள்களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருப்பதால்’’ என்றும் குறிப் பிட்டிருக்கிறார். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அரசின் திட்டங்களால் கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் உணவுப் பணவீக்கத்தின் விகிதமும் உயர்ந்துவிட்டதாகவும் எந்தவிதக் கூச்சநாச்சமுமின்றிக்கூறி வரும் அரசின் குரலையே நிதி அமைச்சர் அவர்களும் இவ்வாறு பிரதிபலிக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால்தான் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு அனுபவரீதியாக அர்த்தமேதுமில்லை. இவர்கள் பொருள்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையே பார்க்க மறுக்கிறார்கள். அரசாங்கமானது விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கும், உற்பத்தியாகும் பொருள்களை சேமித்து வைத்திட, பதப்படுத்திட, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து வசதிகளைச் செய்துதருதல் உட்பட கிராமப்புறத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வேலைகளை எல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்பரேட் துறையிடம் அளித்திட முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இதற்காக அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தொகைகளை அளித்திட உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பட்ஜெட் உரையில், உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமான ஊக வர்த்தகம் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித்திருக்கிறது.
தற்போதைய மக்களவை 2009இல் அமைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, தற்போதையக் குடியரசுத் தலைவர் அவர்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து ஓர் உறுதிமொழியினை அளித்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த உறுதிமொழி இன்னமும் உறுதிமொழியாகவே நீடிக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குளிர்பதன அறையில் வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. 2010-11 வருவாய் செலவினத்துடன் 2011-12 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் உணவு மான்யத்தில் கடுமையான அளவிற்கு குறைவு காணப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கு 2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசாங்கத்தில் சில குரல்கள் இதற்கெதிராக எழுந்துள்ள போதிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ்வாறு வசதிபடைத்தோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகள் 2009-10ஆம் ஆண்டில் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டிற்கு 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்களாக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது மிகச் சிறிய அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு நாயைக் கொன்று தொங்கவிடுவதற்கு முன் அது குறித்து மோசமாகக் கூறிடவேண்டும் என்பது ஒரு தந்திரம். அதேபோன்று வசதிபடைத்தோருக்கு அளித்தால் அது ஊக்குவிப்பு நடவடிக்கைகள். ஆனால் உணவுக்காகவும், எரிபொருள் களுக்காகவும் ஏழைகளுக்கு அளித்தால் அதன்பெயர் மான்யங்கள்.
நிறைவாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வரி வருவாயில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என்றும், 2010-11ஆம் ஆண்டைவிட 2011-12ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். நிதி அமைச்சரின் மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் கூர்மையாக உயர இருக்கின்றன. இதனால் முன்னெப்போதையும்விட கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாமர மக்கள்தான். இவ்வாறு மத்திய பட்ஜெட்டானது நாட்டில் வறிய நிலையில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரப் போவதில்லை.
(தமிழில்: ச.வீரமணி)
பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2011-12ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய்களாகும். சென்ற 2010-11ஆம் ஆண்டில் இது 12 லட்சத்து 16 ஆயிரத்து 576 கோடி ரூபாய்கள். இவ்வாறு வெறும் 3.3 விழுக்காடு அளவிற்கே உயர்வு. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டமில்லா செலவினங்களுக்கான பட்ஜெட் தொகை 8 லட்சத்து 16 ஆயிரத்து 182 கோடி ரூபாய்கள். இது 2010-11ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் செலவினத் தொகையை விட 5 ஆயிரத்து 370 கோடி ரூபாய்கள் குறைவு. முக்கியமான மான்யங்கள் பலவற்றைப் பெருமளவில் வெட்டிக் குறைத்ததன் காரணமாகவே இந்தக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்து வந்த மான்யம் 14 ஆயிரத்து 746 கோடி ரூபாய் அளவிற்கும், உரங்களுக்கான மான்யத் தொகை 4 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கும், உணவு மான்யங்கள் 27 கோடி ரூபாய் அளவிற்கும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கியது தவிர திட்டமில்லா மூலதனச் செலவினம் 14 ஆயிரத்து 484 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக்கிறது. இது 2010-11 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினத்தைவிட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையாகும்.
அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையும் 50 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டிலிருந்த வருவாய் செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2011-12இல் அது 6 ஆயிரம் கோடி ரூபாய்களாக வெட்டப்பட்டிருக்கிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டச் செலவினத்தில், 2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 12.36 விழுக்காடு உயர்வு காணப்பட்டபோதிலும்கூட, இன்றைய பணவீக்கத்தின் காரணமாக ரூபாயின் உண்மை மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு என்பதும் உண்மையில் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில், அரசின் ஒட்டுமொத்த செலவினம் என்பது 2010-11ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படியான 15.4 விழுக்காட்டிலிருந்து, 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதீப்பீட்டில் 13.7 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.
விவசாயத் துறைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் தனிக் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது மிகவும் விந்தையாக இருக்கிறது. உண்மையில் மத்தியத் திட்டச் செலவினங்களில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் மற்றும் பாசனவசதிக்கும் மிகச் சிறிய அளவிலேயே தொகை அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் வருவாய் செலவினத்தில் 70 ஆயிரத்து 213 கோடி ரூபாய்களாக இருந்தது, இப்போது 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 70 ஆயிரத்து 597 கோடி ரூபாய்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரூபாயின் உண்மை மதிப்பில் இது கணிசமான அளவிற்கு குறைவானதாகும். எனவே விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுவதில் பொருளேதுமில்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையை, அவர் சமர்ப்பித்துள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை (எகனாமிக் சர்வே)யுடன் சேர்த்துப் பார்த்தோமானால், கிடைத்திடும் முடிவு வேறாக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதற்கு உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் சந்தை அமைப்பிலும் உள்ள குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்த்துள்ள நிதி அமைச்சர், இதற்குப் பிரதான காரணம் சில்லரை வர்த்தக வலைப் பின்னல்தான் என்றும்கூறி, இதற்குத் தீர்வு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதே வழி என்கிற வரைக்கும் சென்றிருக்கிறார். கார்பரேட் நிறுவனங்களுக்குப் பிரியமான நிகழ்ச்சிநிரலை இவ்வாறு நிதி அமைச்சர் கூறியிருப்பதால்தான் கார்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஊடகங்களும் பட்ஜெட்டை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளன.
மேலும் நிதி அமைச்சர் அவர்கள், ‘‘...மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதன் காரணமாக அவர்கள் வாங்கும் உணவுப் பொருள்களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருப்பதால்’’ என்றும் குறிப் பிட்டிருக்கிறார். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அரசின் திட்டங்களால் கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் உணவுப் பணவீக்கத்தின் விகிதமும் உயர்ந்துவிட்டதாகவும் எந்தவிதக் கூச்சநாச்சமுமின்றிக்கூறி வரும் அரசின் குரலையே நிதி அமைச்சர் அவர்களும் இவ்வாறு பிரதிபலிக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால்தான் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு அனுபவரீதியாக அர்த்தமேதுமில்லை. இவர்கள் பொருள்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையே பார்க்க மறுக்கிறார்கள். அரசாங்கமானது விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கும், உற்பத்தியாகும் பொருள்களை சேமித்து வைத்திட, பதப்படுத்திட, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து வசதிகளைச் செய்துதருதல் உட்பட கிராமப்புறத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வேலைகளை எல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்பரேட் துறையிடம் அளித்திட முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இதற்காக அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தொகைகளை அளித்திட உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பட்ஜெட் உரையில், உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமான ஊக வர்த்தகம் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித்திருக்கிறது.
தற்போதைய மக்களவை 2009இல் அமைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, தற்போதையக் குடியரசுத் தலைவர் அவர்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து ஓர் உறுதிமொழியினை அளித்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த உறுதிமொழி இன்னமும் உறுதிமொழியாகவே நீடிக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குளிர்பதன அறையில் வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. 2010-11 வருவாய் செலவினத்துடன் 2011-12 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் உணவு மான்யத்தில் கடுமையான அளவிற்கு குறைவு காணப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கு 2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசாங்கத்தில் சில குரல்கள் இதற்கெதிராக எழுந்துள்ள போதிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ்வாறு வசதிபடைத்தோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகள் 2009-10ஆம் ஆண்டில் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டிற்கு 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்களாக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது மிகச் சிறிய அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு நாயைக் கொன்று தொங்கவிடுவதற்கு முன் அது குறித்து மோசமாகக் கூறிடவேண்டும் என்பது ஒரு தந்திரம். அதேபோன்று வசதிபடைத்தோருக்கு அளித்தால் அது ஊக்குவிப்பு நடவடிக்கைகள். ஆனால் உணவுக்காகவும், எரிபொருள் களுக்காகவும் ஏழைகளுக்கு அளித்தால் அதன்பெயர் மான்யங்கள்.
நிறைவாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வரி வருவாயில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என்றும், 2010-11ஆம் ஆண்டைவிட 2011-12ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். நிதி அமைச்சரின் மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் கூர்மையாக உயர இருக்கின்றன. இதனால் முன்னெப்போதையும்விட கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாமர மக்கள்தான். இவ்வாறு மத்திய பட்ஜெட்டானது நாட்டில் வறிய நிலையில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரப் போவதில்லை.
(தமிழில்: ச.வீரமணி)
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல-இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் வெற்றிபெறச் செய்திடுவோம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் மேற்கு வங்கத்தில் அமைந்த இடது முன்னணியும் கேரளாவில் அமைந்த இடது ஜனநாயக முன்னணியும் தற்போதுள்ள முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசாங்கத்தின் கீழேயே, அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டே சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கின்றன. ஆயினும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை வேண்டுமென்றே மறைத்து வைத்திருக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள் உயர்த்திப் பிடித்துள்ள அரசியல் அறநெறி மற்றும் உயர்ந்த அளவிலான அவற்றின் தரம் இதர பகுதிகளில் ஆளும் வர்க்கங்கள் நம் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு முற்றிலும் எதிரான முறையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவ்விரு அரசாங்கங்களும் நாட்டில் ஜனநாயக இயக்கத்தின் வழிகாட்டிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், வேறெங்கும் நடைபெறாததொரு மகத்தான வரலாற்றைக் கேரள மக்கள் உருவாக்கி இருந்தார்கள். 1957இல் கேரள மாநிலம் உருவானபின், நடைபெற்ற முதல் தேர்தலில் மக்கள் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, ஆளும் வர்க்கங்கள், மக்களின் பேராதரவுடன் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் தலைமை தாங்கப்படும் ஒருஅரசாங்கத்தை சகித்துக் கொள்ளமுடியாது, ஜனநாயக விரோதமாக டிஸ்மிஸ்செய்தபோதிலும், இடதுசாரி அரசாங்கம் கடைப்பிடித்த மக்கள்நலஞ் சார்ந்த மாற்றுக் கொள்கையானது கேரளத்தின் அரசியலிலும் வளர்ச்சியிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு, உண்மையில் இந்தியா பூராவிற்குமே, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரள மாநிலமானது, மனித வள வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள மாநிலமாகும், சில அம்சங்களில், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளைவிட முன்னேறியுள்ள பகுதியாகும். கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமானது மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. முறைசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு மாத மகப்பேறு விடுப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், நீண்டுகாலம் நீடித்துள்ள நோய்களுக்குக்கூட இலவச சுகாதாரக் காப்பீடு போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பொது விநியோக முறையில் மட்டுமல்லாது, ஒரு மிக விரிந்த அளவிலான வகையில் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் 13 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித விலை உயர்வும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அமல்படுத்தப்பட்டு வரும் இஎம்எஸ்வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 50 லட்சம் வீடுகள் கட்டப்படுவது முழுமை யடைந்துவிட்டால், கேரளாவில் எந்தவொரு குடும்பமும் வீடில்லாமல் இருக்காது. கேரளாவில் 1957இல் அமைந்த இஎம்எஸ்அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவல் திட்டம் அங்கே ஜனநாயகத்தை நன்கு வலுப்படுத்தி இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் நடவடிக்கைகள் கேரள மக்களுக்கு விரிவான முறையில் பயனளித்திருக்கிறது.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கடைப்பிடித்த மாற்றுக் கொள்கைத் திசைவழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசாங்கம் லாபம் ஈட்டும் பொதுத்துறைகளைக் கூடத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வெற்றி நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைக் கூட புனரமைத்து வலுவடைய வைத்திருக்கின்றன. 2005-06ஆம் ஆண்டில் 90 கோடி ரூபாய்கள் நட்டத்தில் இயங்கிய தொழில் பிரிவுகள் 2009-10ஆம் ஆண்டில் 240 கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கக் கூடியவைகளாக மாறி யிருக்கின்றன. இந்த உபரித் தொகை நடப்பில் உள்ள பொதுத் துறை தொழில் பிரிவுகள் விரிவாக்கத்திற்காக மீண்டும் முதலீடு செய்யப்பட்டு, புதிதாக எட்டு தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அநேகமாக நாட்டில், கேரளாவில் மட்டுமே இக்காலத்தில் புதிதாக பொதுத்துறை தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சி அளித்துள்ள குறைந்தபட்ச அதிகார வரம்புக்குள்ளேயே கூட, மக்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை, மக்கள் நலஞ்சார்ந்த திட்டங்களை, மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை கேரள இடது ஜனநாயக முன்னணி மெய்ப்பித் திருக்கிறது. இதனால்தான் சமீபத்தில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் பல, கேரளாவில் ஆட்சிக்கு எதிரான உணர்வு (யவேi-inஉரஅநெnஉல) மக்கள் மத்தியில் இல்லை என்று தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தில் ஒருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், மறுமுறை காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த போதிலும், இந்த முறை நாம் மேலே விவரித்த காரணங்களால் அதனை மாற்றி அமைத்திட வேண்டும். கேரள மக்கள் இதுநாள்வரைப் பெற்று வந்த முக்கியமான ஆதாயங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும், அவை மேலும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு சொல்லும் அதே சமயத்தில், நம்மக்களுக்குச் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மாற்றுக் கொள்கைத் திசைவழியில் அகிலஇந்திய அளவிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறத் தேவையில்லை.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Posts (Atom)