Showing posts with label May Day. Show all posts
Showing posts with label May Day. Show all posts

Monday, April 30, 2018

தொழிலாளர் இயக்கம்




தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்,
எழும், வடுபடும், மறுபடியும் எழும்.
அதன் குரல்வளை இறுக்கப்படும்!
உணர்வற்றுப் போகும்வரை
தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம்
கேள்விக் கணைகளைத் தொடுக்கும்.
குண்டர்களால் தாக்கப்படும்!
ஊடகங்களால் வசைபாடப்படும்!
பொதுமக்களின் புருவ நெரிப்பும்கூட
போர் தொடுக்கம்!
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!
ஓடுகாலிகளால்
மறுப்புரைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்!
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
பீடிக்கப்படும்!
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்!
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட,
விற்றுவிடப்படும்!
ஓ. …………………
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்‘
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்.
கிழக்கில் சூரியோதயம்
எப்படி சர்வநிச்சயமோ
அதேபோன்று –
இதன் வெற்றி
சர்வ நிச்சயமே!
(1904-ஆம் ஆண்டு “தி மெட்டல் வொர்க்கர்” பத்திரிகையில் சுரங்கத்தொழிலாளி ஈகிள்ஸ் வீடெப்ஸ் என்பவரால் எழுதப்பட்ட கவிதை. தோழர் தே. இலட்சுமணன் தமிழாக்கம் செய்தது. இன்றைய காலத்திற்கும் இக்கவிதைத் தேவைப்படுவதாகத் தோன்றுவதால், இன்றைய மே நாளில் மீளவும் இதனைப் பதிவேற்றம் செய்கிறேன்

ஒன்றுபட்டுப் போராட,
ஒற்றுமையுடன் போராட,
மே நாளில் சபதம் ஏற்போம்
தோழர்களே!
தோழமையுடன்
ச.வீரமணி.



Tuesday, April 29, 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்!


ஏ.கே.பத்மநாபன்
மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16ஆவது மக் களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது.இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
தங்கள் வாழ்க்கைப்பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்று பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவைகளேயாகும்.
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும்உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள்.இவ்வாறு வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலை யிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள்என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத் துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத் தில்’’ நடந்ததைப்போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.
தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவை களேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிட வேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப் படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக் கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.
எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கை யிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாக வும் மறைமுகமாகவும் பலநாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகிஇருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர் பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப் பதாவது: மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் சபதம் ஏற்பதுடன் நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.
’’இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம். வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்து, முன்னேறுவோம்.
வாழ்க மேதினம்.
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக.
புரட்சி ஓங்குக.
தமிழில்: ச.வீரமணி


Saturday, May 1, 2010

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளை முறியடித்திட-மே தினத்தில் சபதமேற்போம்: புதுதில்லியில் பிரகாஷ்காரத் பேச்சு

புதுதில்லி, மே 1-

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைளை முறியடித்திட மே நாளில் சபதமேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மே தினமான சனிக்கிழமையன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், மத்தியக் குழு அலுவலகத்தின் முன் கட்சி ஊழியர்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் முழக்கங்களுக்கிடையே செங்கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

‘‘மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய உரிமைகளுக்காகவும், தன் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நடத்திய இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்திடவும், எதிர்கால இயக்கங்களுக்காக உறுதி ஏற்கவும் பயன்படுத்திக் கொள்ளும் நாளாகும்.

இன்றையதினம் இந்தியாவில் தொழிலாளர்களின், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராட, அனைத்துப் பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்திருப்பது நல்லதோர் அம்சமாகும். சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகில் பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக இந்திய ஆட்சியாளர்கள் துரதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகவுள்ள, மக்களின் வாழ்வாதாரங்களுக்குக் கேடுபயக்கக்கூடிய, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய அதே நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூடிய விதத்திலும், முதலாளிகள் தொழிலாளர்களை தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், hசைந யனே கசைந யீடிடiஉல-ஐப் பயன்படுத்தக் கூடிய வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தாங்கள்இதுகாறும் கடினமாகப் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட அணி திரண்டு வருகிறது. மே தினமான இன்று, ஐமுகூ அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடி அவற்றை முறியடித்திட தொழிலாளர் வர்க்கம் இன்று உறுதி எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

எம்.கே. பாந்தே

இந்தியத் தொழிற் சங்க மையத்தின் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே பேசியதாவது:
முதலாளித்துவத்தின் கடும் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் மேலும் மேலும் ஒன்றுபட்டு வருகிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொழிலாளர் வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்துவித சூழ்ச்சிகளையும் முறியடித்து முன்னேறி வருகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தொழிலாளர் வர்க்கமும், தங்கள் போராட்டங்களை அதிகரித்துள்ளன. நடைபெறும் போராட்டங்களில் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்பு என்பதும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆட்சி செய்யும் ஐமுகூ அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட துடித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளதார மந்தத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.
ஆட்சியாளர்களின் தொழிலாளர் வர்க்கக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு வருவது அதிகரித்துள்ளது. நாட்டின் உள்ள ஐந்து பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன. வரவிருக்கும் காலங்களில் இவ்வொற்றுமையை மேலும் வலுப்படுத்தி, தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஆட்சியாளர்களின் உலகமய, தாராளமயத் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடித்திட இம்மேநாளில் சபதமேற்போம்.
இவ்வாறு எம்.கே. பாந்தே கூறினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் செல்வா முதலானோர் உடன் இருந்தார்கள்.

(ச.வீரமணி)

Prakash karat on May Day

Friday, May 1, 2009

S. RAMACHANDRAN PILLAI ON MAY DAY

MAY DAY CELEBRATED AT AKG BHAVAN

New Delhi, May 1: On the occasion of May Day 2009, the red flag was hoisted by S Ramachandran Pillai, Politburo member of the CPI (M) at AKG Bhavan, this morning. Speaking to a gathering of comrades working at Party centre and mass organisations, SRP recounted the history of May Day struggle as follows:









Wednesday, April 29, 2009

மே தின சபதம் ஏற்போம்



மே முதல் தினம். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படக்கூடிய தினம், மே முதல் தினமாகும்.
இந்த மேதினம் கொண்டாடப்படுவது எவ்வாறு தொடங்கியது, அது இந்தியாவில் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது என்பதைச் சற்றே ஆராய்வோம்..
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. அப்போது தொழிலாளிகளின் சராசரி ஆயுட் காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமேயாகும்.
தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை படு பாதாளத்தில் இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாகக் கிடைத்தது. தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” உருவானது.. இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.
10 மணி நேர வேலை, அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் முயற்சியால், “கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப்பட்டது.
1856இல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் லீக்” என்று மாற்றினர்.
அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.
கம்யூனிஸ்ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்ஸ் - ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.” மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. 1865இல் ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்ஸ்,
“...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும்....”
என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று கூறி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு,’ தொழிலாளர்களிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது.
அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் 1886 மே 1 அன்று பேரெழுச்சியோடு துவங்கின.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. சிக்காகோவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆகஸ்ட் ஸ்பைஸ் எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீஸ் படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டனக் கூட்டம் நடத்தி மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர்.
1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். உடனே போலீஸ் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது.
போலீசார் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் போலீஸார் மீது வெடிகுண்டை வீசியது யார் என்று நிரூபிக்கப்பட வில்லை.
இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார்.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே மே முதல் நாள் மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்று அறைகூவினார். அதன் பின் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மே தினம் தொழிலாளர் வர்க்கத்தால் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மே தினமும், உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும்.
நாமும் மேதினி சிறக்க இம் மேதினத்தில் சபதமேற்போம்.
..
ச.வீரமணி