Wednesday, December 24, 2014

மோடி அரசாங்கத்தின் பிடிவாதம்

நாடாளுமன்றத்தின் தற்போதைய முட்டுக்கட்டைக்கு, மாநிலங்களவைத் தொடர்ந்து நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு, மிகவும் சச்சரவுக்குரிய பிரச்சனைகள் மீது நாடாளுமன்றத்திற்கு மிகச்சிறிய அளவிற்கு உறுதி அளிக்கக்கூட பிடிவாதமான முறையில் மோடி அரசாங்கம் முன்வராததுதான் அடிப் படையான காரணமாகும்.இரு மிக முக்கியமான பிரச்சனைகள் அவையின் முன் விவாதத்திற்கு வந்துள்ளன. இரண்டு பிரச்சனைகளுமே ஒன்றுடன் மற்றொன்று பின்னிப்பிணைந்தவையாகும்.
முத லாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் நாட்டில் இயங்கும் அவற்றின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ் லிம்கள் மற்றும் கிறித்துவர்களை மிகப்பெரிய அளவில் மத மாற்றம் செய்துள்ள பிரச்சனை. இரண்டாவது, உலகம் முழுதும் கொண்டாடக் கூடிய கிறிஸ்துமஸ் நாளன்று, ஏ.பி. வாஜ்பாயின் பிறந்த நாளை, நல்லாட்சி நாளாக’’க் கொண்டாட வேண்டும் என்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பள்ளி களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் பிரச்சனையாகும். மோடி அரசாங்கத்தின் இம்முயற்சி ஆர்எஸ்எஸ்/பாஜகவகையறாக்கள் இந்தியாவை பாகிஸ்தான் போன்றே பார்க்கும் மதவெறிக் கண்ணோட்டத் தின் வெளிப்பாடேயாகும். பாகிஸ்தானில் டிசம்பர் 25 அன்று முகமது அலி ஜின்னா பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே விடுமுறைவிடப்படுகிறது. அங்கே கிறிஸ்துமஸ் என்பது இரண்டாம்பட்சம்தான். முன்பு, வாஜ்பாய் அரசாங்கம் போக்ரான்-2 மூலம் பாகிஸ்தானையும் அணுசக்தி நாடாக உயர்த்துவதற்கான அந்தஸ்தை அளித்தது. அதேபோன்று இந்தத் தடவை மோடி அரசாங்கம் டிசம்பர் 25 தேதியையும் அதேபோன்று மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில், வாஜ்பாயி நடவடிக்கை ஒரு சோகக்கதை யாக முடிந்தது என்றால்,.மோடியின் நடவடிக்கையோ எல்லோராலும் எள்ளி நகையாடக் கூடிய விதத்தில் நகைச்சுவை நாடகமாக மாறிப்போனது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அரசாங்கம் 56 அங்குலம்’’ அகலமாக இருக்கும் என்று பீற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் அது தன்னை பாகிஸ்தானுடன் இணைத்துப்பார்க் கும் விதத்தில் சுருங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நாம் இரண்டாவது பிரச்சனை யையும் எடுத்துக் கொள்வோம். டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையாக அல்ல,அதற்கு மாறாக நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகத்தின் சார்பில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட் டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி களை மாநிலங்களவையில் எழுப்பியபோது, மத்திய நிதி அமைச்சர் முதலில் அதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்கு உட் படுத்தினார்.
ஆனால் ஆதாரங்களைக் காட்டியபோது, இது நவோதயா பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும், அந்தப் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பவர் கள் (residential schools) என்பதால் மாண வர்களுக்கு விடுமுறையை மறுக்கும் பிரச் சனையே எழவில்லை என்றும் கூறி அரசாங்கம் பின்வாங்கியது. அப்போது,அனைத்துஅகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலுக்கும் (All India Institute of Technical Education) அரசாங்கத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த நாளன்று மாணவர்கள் பங்கேற்கக்கூடிய விதத்தில் பல் வேறு போட்டிகளை நடத்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை காட்டியபோது, அரசாங்கத் திடமிருந்து பதிலேதும் இல்லை.
மோடி அரசாங்கம் மதச் சிறுபான்மையினருக்கு எதி ரான நிகழ்ச்சிநிரலை மிகவும் வஞ்சகமாக முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டிருப்பதை நாடாளுமன்றத்தில் இன்னமும் முழுமையாகத் தோலுரித்துக் காட்டப்பட வேண்டி இருக்கிறது.மீண்டும் தங்கள் பழைய மதத் திற்கே திரும்புகிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர்வபாசி (பாயச எயயீயளi) என்றுபெயரிட்டு,முஸ்லிம்களையும், கிறிஸ்துவர் களையும் மீளவும் இந்துக்களாக மாற்ற மேற் கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில், மீண்டும் ஒருமுறை, தங்களுக்கு இரண்டகமான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத் தையோ நாட்டையோ நம்ப வைக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோருவது என்ன? அவைக்கு வாருங்கள், நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை வெளிப்படையாகவே மீறக்கூடிய விதத்தில் மிகவும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்று மெய்ப்பிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியைத் தாருங்கள்,’’என்பதுதான்.
ஆனால் அதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சரோ, எதிர்க்கட்சியினரைப் பார்த்து, அனைத்து மத மாற்றங்களையும் அல்லது வலுக்கட்டாயமாக மீளவும் மதமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தடை செய்திட புதியதொரு சட்டத்தை ஏற்கத் தயாரா?’’என்று கேட்டு சவாலுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு புதிய சட்டம் எதுவும் தேவையில்லை, இந்தியஅரசமைப்புச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் இவை குறித்து ஏற் கனவே மிகவும் தெளிவாக உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத்திடமிருந்து மீளவும் பதிலேதுமில்லை.
புதியதொரு சட்டத்தின் பெயரால் மோடி அரசாங்கம் கோருவது என்ன? நாட்டில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான கேடுகெட்ட கீழ்த்தரமான முயற்சிகளேயன்றி அது வேறு எதுவுமல்ல. புதிய சட்டத்தின்மூலம் இவர்கள் கொண்டு வரும் பாதுகாப்பு ஷரத்துக்கள் நம்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் (25 மற்றும் 26ஆவது பிரிவுகள்) ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கின்றன. மேற்படி இரு பிரிவுகளும், ஒருவர் தன் மனச்சான்றின்படி எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளவோ, நடைமுறைப் படுத்தவோ மற்றும் பிரச்சாரம் செய்யவோ சுதந்திரம் அளிக்கிறது’’ மற்றும் மத விவகாரங் களை மேலாண்மை செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவானது, பல் வேறு மதத்தினருக்கு இடையே மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்தால் கிரிமினல் குற்ற மாகும் என்று வரையறுத்திருக்கிறது. எனவே,இன்றையதினம் மோடி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும் மத மாற்றங்கள் தொடர்பாகப் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை.
ஒவ் வொரு இந்தியனும் தன்னுடைய சாதி, மதம்,பாலினம் எதுவாக இருந்தாலும் தனக்குப் பிடித்தமான மத நம்பிக்கையைத் தேர்ந்தெடுத் துப் பின்பற்றிட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக் கிறது. இந்த உரிமையை வலுக்கட் டாயமாகப் பறிக்கக்கூடிய விதத்தில் எவரேனும் சட்டத் திற்கு மாறாக நடந்துகொண்டால் அது,இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக் கப்பட வேண்டிய குற்றம்’’ ஆகும். அரசாங்கம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளின் வேலை, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அளித் துள்ள உத்தரவாதங்களை அமல்படுத்துவதும் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறுவோர்எவராக இருந்தாலும் அவர்களை தண்டிப் பதுமேயாகும்.
மாறாக, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன்பரிவாரங்கள் அனைத்தும் இன்றைய தினம்மேற்கொண்டுவரும் முயற்சிகள் என்ன?மீண்டும் தங்கள் பழைய மதத்திற்கே திரும்பு கிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர் வபாசி (ghar wapasi)என்று பெயரிட்டு, மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய் வதற்கான பிரச்சார வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தரம் ஜக்ரன் சமிதி என்னும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு 57 முஸ்லிம் குடும்பங்களை இவ்வாறு மீளவும் மதமாற்றம்செய்திருப்பது தொடர்பாக செய்திகள் ஊடகங் களில் வெளியாகி இவர்களது இத்தகைய முயற்சிகளை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
மேற்படி 57 முஸ்லீம் குடும்பங்களும், இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கமொழி பேசுபவர்கள், ஆக்ரா அருகில் மதுநகர் சேரியில் வசிப்பவர்கள். நாட்டில் உள்ள சேரிகளில் வாழும் பலரைப் போன்றே இவர்களுக்கும் அதிகாரப்பூர்வமான அடையாளத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, தரம் ஜக்ரன் சமிதியின் ஊழியர்கள் இவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்த தாகவும்,அங்கே அவர்கள் அனைவருக்கும் ரேசன் கார்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும்வாக்காளர் அடையாளக் கார்டுகள் அனைத்தும்வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக் கிறார்கள். அவ்வாறு வருகையில் முஸ்லிம்கள்அணிவதுபோல் தொப்பிகளை அணிந்து வருமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட் டிருக்கிறார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் கூறுவதுபோல் இது உண்மையாக இருக்கும்பட்சத் தில்,இது ஏமாற்று வழிகளில் மதமாற்றம் செய்யமேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என் பதும், இது ஒரு குற்றச்செயல் என்பதும் நன்கு விளங்கும். (இணைய தளம்,டெய்லியோ, டிசம்பர் 10, 2014.) மேலும் இவ்வாறான `மறு மதமாற்றம்பிரச்சாரங்களுக்காக `அபரிமிதமான அளவில் வசூல் வேட்டையில் பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இறங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிமை மதமாற்றம் செய்திட ஐந்து லட்ச ரூபாயும்,கிறிஸ்தவர்களுக்கு 2 லட்சம்ரூபாயும் தருவதற்காக இந்த வசூல்வேட்டையாம். முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்துவர்கள் மிகவும் சிறிய அளவி லான சிறுபான்மையினர் என்றும், எனவேதான்அவர்கள் இஸ்லாமுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவுக்கே பிரச்சனை உள்ளவர்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக நாடு தழுவிய அளவில் உறுப்பி னர் சேர்க்கைக்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு, விரைவில் இவர்கள் தற்போது உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக விளங்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை முந்திவிடுவோம் என்றுகூறியுள்ள அதேசமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமோ ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துயிசத் திற்கு மாற்ற குறியீடு நிர்ணயித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக மதம் மாற்றுவதுஇருக்கட்டும், ஒருவர் தனிப்பட்ட முறையில் கூட, தான் விரும்பினாலும்கூட, இந்து மத நம்பிக்கையான வாழு-வாழவிடு என்னும் மாண்புக்கு ஏற்ப இந்துவாக மாறமுடியாது என்பதை வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவிப்படையினர் கண்டு கொள்ளவில்லை.
அவர்கள் இஸ்லாம் மற்றும்கிறிஸ்துவமதத்தில் இருப்பதைப் போல இந்துமதமும் ஒரு புத்தகம், ஒரே கும்பல், ஒரே மக்கள்திரள்’’ ( என இந்து மதத்தையும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். (எகனாமிக் டைம்ஸ், இடுகைகள், டிசம்பர் 13, 2014)இத்தகைய ஊடகசெய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நம் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் முக்கியமான அம்சம் சமூக நல்லிணக்கமாகும். இதற்கு மிகவும் முக்கியமான முன்நிபந்தனையாக இருப்பது மதச்சிறுபான்மையினர் இடையே அதிகரித்து வரும் அச்சத்தைப் போக்குவதாகும். நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய தண்டனைச் சட்டத்தையும் மீறுவோர் தாங்கள் புரியும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான உறுதிமொழி யை பிரதமர் அளித்திட வேண்டும் என்பதுதான்பிரதமரிடம் நாம் கேட்க இருக்கும் கேள்வி களாகும். ஆளும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இடதுசாரிக் கட்சிகளைக்குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் தான் இத்தகைய உறுதிமொழியைத் தர வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். இது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய் வதற்காக இடதுசாரிகள் கூறும் சாக்குப்போக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால்இதற்கு முற்றிலும் மாறாக முன்பொரு தடவை இதுபோல் இவர்கள்தான் நடந்துகொண் டார்கள்.
மத்திய அமைச்சரவை யிலிருந்த இணை அமைச்சர் ஒருவர் பாஜகவினருக்கு எதிரானவர்களுக்கு எதிராக முற்றிலும் ஏற்கத்தகாதமுறையில், வெறுக்கத்தக்க வார்த்தைகளை உதிர்த்திட்ட சமயத்தில், பிரதமர் இதுபோன்று எதிர்காலத் தில் நடைபெறாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும்,அதன்பிறகும் என்ன நடந்தது?நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தண்டிக்கக் கூடிய குற்றச் செயல்களில் பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால்தான் பிரதமர் இப்போது அவ்வாறு உறுதி மொழிகள் அளித்தால் மட்டும் போதாது அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழியும் தர வேண்டும் என்று கேட்கிறோம்.இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னே, மோடி அரசாங்கத் தின் `நச்சுக் கலவை - அதாவதுவளர்ச்சி’’ என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, மறுபக்கத்தில் மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான வேலைகளைக் கட்டவிழ்த்து விடுவது - என்பது ஒளிந்துகொண்டி ருக்கிறது. இவர்கள் கூறிவந்த வளர்ச்சி’’ என்கிற மாபெரும் பலூன்கள் எல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் வீழ்ச்சி என்கிறஎதார்த்த உண்மையின் காரணமாக ஓட்டைவிழுந்து புஷ்’’ என்று காணாமல் போய்விட் டது.
தொழில்வளர்ச்சி முற்றிலுமாக எதிர்மறை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடி காரணமாக விளைநிலங்களின் பரப் பளவும் பெரிதும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடாமல் எவ்விதமான பொருளாதார முன்னேற்றமும் சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநரே அறிகுறிகளைப் பார்த்து வரப்போவதை உரைத் திருக்கிறார். (இவை குறித்து நாம் இப்பகுதியில் முன்பு பலதடவை விளக்கி இருக்கிறோம்.)நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கத்துடன் பல்வேறு வடிவங்களில் மதவெறி சக்திகள்,மதவெறித் தீயை உசுப்பிவிட்டுக் கொண்டிருக் கின்றன. மதமாற்றங்கள் குறித்த தற்போதைய பிரச்சாரங்களும், கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும்என்ற பிரகடனமும் இவற்றின் அடையாளங் களாகும். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல்கள்நடைபெறுவதையொட்டி கிறிஸ்தவ சிறுபான் மையினருக்கு எதிராக இதரர்களைக் குறி வைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட் டிருக்கிறது. வாக்குவங்கி அரசியலின் மிக மட்டரகமான வடிவத்தை உத்தரப்பிரதேசத் தில் முஸ்லிம்களுக்கு எதிராக காதல் ஜிகாத்’’ என்று கூறி எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்களோ அதேபோன்று இப்போது இந்தப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சிறந்ததொரு வாழ்க்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி, அதன் அடிப்படையில் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட, அரக்கத்தனமான இவர்களது நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.
(டிசம்பர் 17, 2014)
தமிழில்: ச.வீரமணி


No comments: