Monday, August 26, 2013

நாட்டுக்குத் தேவை மாற்றுக் கொள்கை

இரு ஆண்டுகளுக்கு முன்பு, தாராள மயக் கொள்கைகளுக்காக லாலி பாடும் தலைவர்கள் பொருளாதார சீர்திருத்தங்க ளைப் பின்பற்றத் தொடங்கி இருபதாண்டுகள் நிறைவான சமயத்தில், அதனை மிகவும் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, தற்போது இந்தியப் பொருளாதாரமும் மந்தமாக ஆரம் பித்துவிட்டது என்பதையும், இது 1991ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்ததைப்போன்ற மோசமான நிலைக்கே, மீளவும் இட்டுச்செல் லும் என்றும் அவர்களை நாம் எச்சரித்திருந் தோம். அவ்வாறு நாம் எச்சரித்ததற்காக, வழக் கம் போலவே, இந்திய கார்ப்பரேட்டுகளும் அவர்களுக்குத் தம்பட்டம் அடிப்பவர்களும் நம்மீது வசைமாரிபொழிந்தார்கள்.
இந்தியா வை உலக அளவில் மிகச்சிறந்த நாடாக உய் விக்க வரும் உலகமய மூலதனத்தின் ஒளி பொருந்திய கடவுள்களை நம்மால் பார்க்க முடியவில்லையாம்,’ ஜி.20 உச்சி மாநாட்டின் போது நம் பிரதமர் அவர்கள் இந்தியா மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடு என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பீற்றிக் கொண் டார். இந்தியாவில் உள்ள ஒரு சிறு பிரிவின ருக்கு மட்டுமே இது நல்லது செய்துள்ளது என்றும், மீதமுள்ள பெரும்பான்மை மக்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் அளித்திருப்ப தோடு அவர்கள் போதிய உணவு இன்றி ஊட் டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்வதையும் நாம் சுட்டிக்காட்டியபோது, அதனை அவர்கள் கண்டு கொள்ளாமல் புறந் தள்ளிவிட்டனர். விளைவு, ஒளிரும் இந்தியர் களுக்கும் அல்லல் உறும் இந்தியர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி மேலும் கொடூர மானமுறையில் விரிவடைந்து என்ன செய் யப் போகிறீர்கள்?’ என்று ஒவ்வொரு நொடி யும் நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக் கிறது.
இன்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, உண்மையில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி இருப்பது போலவே தோன்றுகிறது. அதிர்ச்சி தரத்தக்க விதத்தில் நிலைமைகள் இவ்வாறு மாறி யிருந்தபோதிலும் இத்தகைய தாராள மயக் கொள்கைகளை அன்றையதினம் அறி முகப்படுத்திய இன்றைய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் இது தொடர்பாகக் கூறுகை யில், ‘நாம் 1991க்கு முன் உள்ள நிலைமைக்கு மாறும் பிரச்சனையே கிடையாதுஎன்றும் அந்த சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி நிலையான விகிதத்தில் இருந் ததுஎன்றும், ‘இப்போது அது சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறதுஎன்றும், ‘நாம் நம் ரூபாயின் வேகமாக சரிந்துவருவதைத் தான் சரி செய்ய வேண்டும்என்றும் கூறி யிருக்கிறார்.
அவர் கூறாமல் விட்ட உண்மை என்ன வெனில், 1991 ஜூலையில் ரூபாயின் மதிப்பு இரு கட்டமாக 20 விழுக்காட்டிற்கும் மேலாக குறைக்கப்பட்டது என்பதாகும். 1988இல் ரூபாயின் மதிப்பு 13 விழுக்காடும் 1989இல் 10 விழுக்காடும், 1990இல் 8 விழுக்காடும் தேய்ந்த பின்னணியில் இது நிகழ்ந்தது. இன்று ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வரும் நிலைக்கும் அன்றைய நிலைக்கும் வித்தியாசம் ஏதேனும் இருக்கிறதாடாக்டர் மன்மோகன் சிங், 1991-92இல் தன்னுடைய பட்ஜெட் உரையின்போது சீர் திருத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, “இனியும் காலத்தை வீணாக்கிக் கொண்டி ருக்கக் கூடாதுஎன்று கூறி அன்றைக்கு அர சுக்கு இருந்த நிதி நெருக்கடி நிலைமை குறித்து மிகவும் அளந்து விட்டார். 1990-91இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 விழுக்காடு இருப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அப்போது கூறினார். இன்று என்ன நிலைமை? இன்றைய தினம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடு அள விற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருக் கிறது.
அப்போது அவர், ‘கடன் சேவை சுமை’ (debt service burden) நடப்புக் கணக்கு ரசீதுகளில் (current account receipts) சுமார் 21 விழுக் காடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது என்று கூறினார். 2013-14 பட்ஜெட் ஆவணங்களின்படி, ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய இலக்கம் (comparable figure) 35.09 விழுக்காடாக இருந்தது. அந்நியச் செலா வணி இருப்பு அந்த சமயத்தில் ஆறு வார கால அளவிற்கு இறக்குமதி செய்வதற்குப் போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருந்தது. இன்று, நம்முடைய இருப்பு சற்றே நல்ல நிலையில் இருந்தது. இதன் மூலம் ஆறு மாதங்களுக்கான இறக்குமதிக்கு நிதி அளித்திட முடியும். ஆனால் பிரிக்’ (BRIC - Brazil, Russia, India, China) நாடுகளில் இந்தியா தான் குறைவாக வைத்திருந்தது.
மற்ற நாடு களில் உள்ள இருப்பு இரு ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்தது. அதேபோன்று 1991 இல் இருந்த பணவீக்கம் குறித்து அவர் என்ன சொன்னார்? ‘‘1990-91இல் பணவீக்கத்தின் மிகவும் கவலை தரக்கூடிய அம்சம் அத்தியா வசியப் பொருள்களின் மீது அது தீவிரமாக இருப்பதுதான்’’ என்றார். சரி, இன்று மட்டும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இவற்றையெல்லாம் சரிப்படுத்துவதற் காக டாக்டர் மன்மோகன்சிங் அப்போது என்ன செய்தார்? சர்வதேச நிதியத்திடமிருந்து அவர் கள் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கடன்கள் பெற்றார். நாட்டின் பல்வேறு துறைகளையும் அந்நிய முதலீடு களுக்குத் திறந்துவிட்டார். நேரடிய அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் விதத்தில் கொள் கைகளைத் தாராளமயமாக்கினார். இவை அனைத்தையும் ஓர் அபாய அறிவிப்புடன் மேற்கொண்டார். அதாவது, ‘காசு எதுவும் கொடுக்காமல் பரிகாரம் எதையும் செய்ய முடி யாது’. (There can be  no adjustment without paying a price) மக்கள் நம்முடைய பொருளாதார சுதந் திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான தியாகம் செய்யவும் நம்முடைய பொருளா தாரத்தின் மோசமான நிலையை சரிப்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
இதுவும் இன்றைய நிலைக்கு அப்படியே ஒத்துப்போகிற மாதிரி இல்லையா?சர்வதேச நிதியத்திடமிருந்து அதேபோன்ற நிபந்தனைகளுடன் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு (bailout package) அரசாங்கம் தயா ரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருக் கிறதா? ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்த கைய நிவாரண உதவிகளைப் பெற்றபோது அதன் ஆழமான விளைவுகள் எப்படி இருந் தன என்பதையும், நிவாரண உதவிகளைப் பெற்ற நாடுகள் தங்கள் மக்கள் மீது தாங்க முடியாத அளவிற்கு சிக்கன நடவடிக்கை களைத் திணித்ததன் காரணமாக மக்களால் அவற்றைச் சமாளிக்க முடியாது, மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் அவர் கள் இறங்கியதையும் நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு வேறு மாற்றே இல்லையா? இருக் கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ஆட்சியா ளர்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர் களுக்கும் அளித்த வரிச் சலுகைகள், அவர் களது பட்ஜெட் ஆவணங்களின்படியே, ஒவ் வோராண்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் களுக்கும் மேலாகும். இவ்வாறு அவர்கள் ஊக் கத்தொகைகளை அவர்களுக்கு அள்ளித் தந்த போதிலும்,தொழில் உற்பத்தியின் ஒட்டு மொத்த வளர்ச்சி - 1.6 விழுக்காடாகத்தான் (minus 1.6 per cent) இருந்தது.
இதற்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு வரவேண்டிய நியாயமான வரிகளை வசூலித்து, நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கு வதற்கு பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தி இருந்தாலே, இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரித்திருக்க முடியும். அதனைத் தொடர்ந்து அவ்வாறு வேலை வாய்ப்பு அதிகரித்ததன் மூலம் மக்களின் வாங் கும் சக்தி அதிகரித்து, உள்நாட்டுத் தேவை யையும் மிகப்பெரிய அளவிற்கு விரிவாக்கி இருக்க முடியும். இது தொழில் உற்பத்தியை யும் பெருக்குவதற்கான அடிப்படையாக அமைந்து, நம் பொருளாதாரத்தை மேலும் வலுவான நிலைக்கு உயர்த்தி, மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந் திருக்கும். இதுவே உண்மையான மாற்றாகும். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்வற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய அளவில் எவ்வித வித்தியாசமும் கிடையாது.
ஆயினும், பொருளாதார மந்தம் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், உலகப் பொருளாதார மும் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில் இந்திய கார்ப்பரேட்டுக ளுக்கு தங்கள் லாப வேட்டையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தேவ தூதர் (messiah) தேவைப் படுகிறார். 1930களில் பொருளாதாரத்தில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, உலகப் பெரும் வர்த் தகப்புள்ளிகள், குறிப்பாக அமெரிக்க கார்ப்ப ரேட் ஜாம்பவான்கள், ஹிட்லரும் பாசிசமும் தலைதூக்குவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது வரலாறு. அதேபோன்று இப்போதும் அவர்களுக்கு ஒரு பாசிஸ்ட் சர்வாதிகாரி தேவைப்படுகிறார்.பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்கக்கூடிய நிலையிலும், இந்திய கார்ப் பரேட் உலகத்திற்கு, தன்னுடைய கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற அவா படிப் படியாய் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கு அவர்களுக்கு ஒரு வலுவான தலைவர் தேவைப்படுகிறார். ஜனநாயகம், மனித உரி மைகள் மற்றும் சிவில் உரிமைகள் அனைத் தையும் குழிதோண்டிப் புதைத்திட்டாலும் கவலையில்லை, தங்கள் நலன்கள் பாது காக்கப்பட வேண்டும், அதற்கு வழிசெய்து தந்திட வேண்டும், அதற்குத் தேவையான நட வடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒரு தலை வர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார். இவ் வாறு ஒரு தலைவரைத் தருவதற்கு, உலக மயம் மற்றும் அதன் நவீன தாராளமய பொரு ளாதார சீர்திருத்தங்களுக்குத் தலைமை தாங்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும், இந் திய கார்ப்பரேட்டுகளில் ஒரு பிரிவினருக்கும் பாஜக உறுதி தந்திருப்பதுபோல் தோன்றுகிறது. பாஜக தூக்கி நிறுத்தியிருக்கும் தற்போதைய போஸ்டர் பையனின் (poster boy) கீழ் தங்கள் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வெளிநாடு மற்றும் நம் நாட்டின் கார்ப்பரேட்டுகளும் நம் புவது போன்று தோன்றுகிறது.
இத்தகைய மாயைகளை இந்திய கார்ப்பரேட் ஊடகங்களும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான், நாட்டு மக்களில் பெரும்பான்மையோருக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் நாம் முன் வைத்துள்ள மாற்றுக் கொள்கையை காங்கிரசாலோ அல்லது பாஜக-வாலோ தர முடியாது என்று நாம் உரத்துக் கூறுகிறோம். நாட்டிற்குத் தேவை மாற்று அரசியல் தலைவர்கள்அல்ல, மாறாக மாற்று மக்கள் ஆதரவு கொள்கைகள்தான். வரவிருக்கும் காலங்களில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகையதோர் மாற்றை நாம் கொண்டுவர முடியும்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: