Friday, November 30, 2012

முற்றிலும் தவறான வாதம்


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட் டத்தொடர் முதல் நான்கு நாட்கள் முற்றிலுமாக சீர்குலைக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்க நிலைக்குச் சுருங்கிவிட்டது. எனவே அது, சில்லரை வர்த் தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் வாக் கெடுப்புக்கு விடப்படும் சமயத்தில் அரசு தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதற்காக கால அவகாசத் தைப் பெறும் பொருட்டு, இவ்வாறு சீர்குலைவு வேலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்ற திங்களன்று நடைபெற்ற அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட் சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தங்கள் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்திய பின்னர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்கள் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு குழுவாக(B-team) செயல்படுவோம் என்றும், வாக் கெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர், காங்கிரஸ் கட்சி செவ்வாயன்று ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் கூட் டத்தைக் கூட்டியது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக இடது சாரிகள் மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த தேசிய அளவிலான கடைய டைப்புப் போராட்ட அறைகூவலை ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகம், ‘‘ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்கு எதிராக வாக்க ளிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு செய்தால் அது வகுப்புவாத பாஜகவிற்கு பயனளிக் கலாம்’’ என்றும் கூறி தற்போது தலைகீழாய்க் கவிழ்ந்துவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான பாஜகவின் அமைச்சர வையில் முழுமையாக இருந்த ஒரு கட்சியிட மிருந்து இவ்வாறு விசித்திரமான முறையில் விளக்கம் வந்திருக்கிறது. திரைமறைவில் எது நடந்திருந்த போதிலும், திமுகவின் முடிவின் மூலம் சிறுபான்மை ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மீண்டும் ஒருமுறை ஒரு பெரும்பான் மையை எப்படியோ சமாளித்துப் பெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்திலிருந்து வெளியே வந்தபின், பிரதமர் தங்களுடைய அரசாங்கம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக எந்த வகையான தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அதனைத் தோற்கடிக்க பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது என்று மிகவும் பெருமையாகப் பீற்றிக்கொண்டிருக் கிறார். ஆயினும், நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் வரை, இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. (வெள்ளிக்கிழமையன்று உள்ள நிலவரப்படி மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.) அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் ‘‘அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்குக் கீழ் வரும் நிர்வாக முடிவுகளின் (executive decision) மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை’’ என்கிற வாதத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முன்னுதாரணம் 2001 மார்ச் 1 அன்று மக்களவையில் ஏற் கனவே இருந்திருக்கிறது, பால்கோ எனப் படும் பாரத் அலுமினியம் கம்பெனியின் பங்கு களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு மேற்கொண்ட நிர்வாக முடிவுகளுக்கு எதிராக விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பும் நடந்தது.
பல்துறை சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் முடிவு ஒரு நிர்வாக முடிவு என்று கூறப்படுவதானது முற்றிலும் தவறான ஒன்றாகும். இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண் மைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமின்றி தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடிய விதத்தில் எவ்விதமான முடிவினை மேற் கொள்வதாக இருந்தாலும், 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட் டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்தாக வேண்டும். அதனை இந்திய ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கை எதுவும் அளிக்காது. இவ் வாறு திருத்தம் செய்தமைக்கு எதிராக, இவ் வாறு திருத்தம் செய்தது தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட் டப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மீது, 2012 அக்டோபர் 15 அன்று உச்சநீதிமன்றம் ‘‘இதன்மீது உரிய சட்ட நடைமுறைகள் பின் பற்றப்படவில்லை’’ என்று அரசுக்குச் சுட்டிக் காட்டியபோது, அரசுத்தரப்பில் ஆஜரான அட் டார்னி ஜெனரல் ‘‘இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தேவையான திருத்தத்தை இரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விதிமுறை களில் செய்திடும்’’என்கிற உறுதிமொழியை உச்சநீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கிறார். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பதற்கு வகை செய்யக் கூடிய விதத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் செய்துள்ளது. இது, 2012 அக்டோபர் 30 அரசிதழிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கியால் இச்சட்டத்தின் விதிமுறைகளில் எவ்விதமான திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது ‘‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக’’ (“as early as possible”) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், அவ்வாறு தாக்கல் செய் யப்பட்டபின், இந்திய ரிசர்வ் வங்கியின் திருத் தத்தின் மீது இரு அவைகளில் எந்த அவையி லிருந்தாவது எந்த உறுப்பினராவது திருத்தம் கொண்டுவர முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி யின் திருத்தம், சட்டப்படி செல்லாது என்று கூட திருத்தம் கொண்டுவர முடியும். அத் தகைய திருத்தத்தை உறுப்பினர் 30 நாட் களுக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு உறுப்பினர் திருத்தம்கொண்டுவரம் பட்சத்தில் அது அவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவும் வாக்கெடுப்பின் மூலம் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்.எனவே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவு ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழான ஒரு நிர்வாக முடிவு (executive decision) அல்ல, மாறாக அவ்வாறு அரசு முடிவு எடுக்க வேண் டுமானால், அதற்கு ஏற்கனவே இருந்துவரும் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ், இவ்வாறு சட்டத்தின் கீழ் திருத்தங் களை நிர்வாகமோ (அதாவது அரசாங்கமோ) அல்லது நீதித்துறையோ செய்துவிட முடியாது. சட்டங்களை உருவாக்குவதற்கு, அல்லது ஏற் கனவே இருந்துவரும் சட்டங்களில் திருத் தங்களைக் கொண்டுவருவதற்கு, அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு நாடாளுமன்றம் மட் டும்தான். இவ்வாறு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற் கான முடிவை நாடாளுமன்றம் மட்டுமே எடுத் திட முடியும். எனவே இவ்வாறு நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இதில் அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது என்று ஆணித்தர மாக அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் உள்ள இத்தகைய நடை முறையை புறக்கணித்திட, அழித்திட, அல்லது பயனற்றதாக்கிட அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வெற்றிபெற அனு மதித்திட முடியாது. உச்சநீதிமன்றத்தின் நிர்ப் பந்தத்தின் காரணமாகத்தான் அரசாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர முன்வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரர், அரசாங்கம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் 48ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இவ்வாறு தான் செய் துள்ள திருத்தங்களை தாக்கல் செய்யாது இருந்துவிடலாம் என்கிற தன் ஐயுறவுகளை (apprehensions) உச்சநீதிமன்றத்தில் வெளிப் படுத்தியபோது, உச்சநீதிமன்றம் தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை பொறுத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஒருவேளை அர சாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் ஷரத்துக் களைப் பின்பற்றாது இருந்துவிடுமானால், பின்னர் மனுதாரர் அதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகமுடியும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரருக்குக் கூறியிருக் கிறது. நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனில், பின் உச்சநீதிமன்றமானது நிச்சயமாக இதில் தலையிடும் என்பது தெளிவாகி இருக்கிறது.இவ்வாறு, இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம், நாடாளுமன் றத்தில் வாக்கெடுப்பினைத் தவிர்த்திட எவ் வித வழியும் கிடையாது. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இப்போதும் எப்படியாவது பெரும் பான்மையைப் பெற்றிட அனைத்துவிதமான வழிகளிலும் இறங்கியிருக்கிறது.
1993இல் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அதனைத் தோற்கடிக்க இத் தகைய இழி வகைகளில் அது இறங்கியது. ஜார்கண்ட் கையூட்டு வழக்கில் அது வெட்ட வெளிச்சமாகியது. 2008இல் இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியி லிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, அவர்கள் மிகவும் வெட்கங் கெட்ட முறையில் குதிரை பேரம் நடத்தி வாக் குகளைப் பெற்று வென்றார்கள். வாக்கு களுக்குப் பணம்அளித்த ஊழல் மூலம் அது வெட்டவெளிச்சமாகியது. அதேபோன்று தற்போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையைப் பெறுவதற்காக இவர்கள் மேற் கொள்ளும் பேரங்கள் நாட்டின் முன் அம் பலமாவதற்கு அதிகக் காலம் பிடிக்காது.எப்படிப் பார்த்தாலும், நாட்டின் நலன், அதன் பொருளாதாரம் மற்றும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிட, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடை அனுமதிப்பது தொடர்பாக வாக் கெடுப்புடன் கோரிய விவாதத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரும், வாக்கெடுப்பு வரும்போது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக வாக்களித்திடும்.
தமிழில்: ச.வீரமணி


No comments: