Friday, July 2, 2010

பொருளாதார எதேச்சதிகாரத்தினை முறியடிப்போம்!


தலையங்கம்

உண்மையில் இது ஒரு தீய அறிகுறி யாகும். இந்திரா காந்தி தலைமையிலிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப் பட்ட உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட 35ஆவது ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங்கால் தலைமை தாங்கப்படும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் மீது செங்குத்தான அளவில் விலை உயர்வினை அறிவித்திருக்கிறது. 1975 ஜூன் 25 அன்று பிரகடனம் செய்யப்பட்ட உள்நாட்டு அவசர நிலை என்பது ஓர் அரசியல் எதேச்சதிகார நடவடிக்கையாகும். இதனை இந்திய மக்கள் துணிவுடன் எதிர்த்து நின்று, 1977இல் முழு மையாக முறியடித்தார்கள். அதேபோன்று, இப்போது மக்கள் மீது ஏவப்பட்டுள்ள பொரு ளாதார எதேச்சதிகாரமும் மக்களால் துணிவு டன் எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டாக வேண்டும். நாட்டு மக்களின் பெரும்பான் மையினரின் வாழ்வாதாரத்தின் மீது மிகவும் கொடூரமாக அரசாங்கம் தொடுத்துள்ள தாக் குதலை முறியடித்திட, மக்களைத் திரட்டி, வெகுஜன இயக்கங்களை நடத்தி, விலை உயர்வுகளைத் திரும்பப்பெறச் செய்திடுமாறு அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளித்திட வேண்டும். ஜூலை 5 அன்று அறிவிக்கப் பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றியடையச் செய்திட வேண்டும்.

மத்திய அரசாங்கம் பெட்ரோலின் விலை யை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், மண் ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 35 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. இதைவிட மிக மோசமான அம்சம் என்னவெ னில், அரசாங்கம், இவற்றின் மீதிருந்த கட்டுப் பாடுகளை முற்றிலுமாக நீக்கியிருப்பதாகும். இதன் பொருள், எதிர்காலத்தில் இவற்றின் விலைகள் மேலும் மிக மோசமாக உயரும் என்பதேயாகும்.

தற்போது சுமார் 17 விழுக்காடு அளவிற்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. இவ்வாறு விலைவாசிகள் கட்டுப்பாடற்று உயர்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இத்தகைய கொடூரமான தாக்குதல் வந்திருக் கிறது. ஒருசில மாதங்களுக்கு முன் இவற்றின் விலைகள் சுமார் 20 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து கொண்டிருந்தன. இப்போது பெட்ரோ லியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி யிருப்பதன் மூலம், போக்குவரத்துக் கட்ட ணங்களும் கடுமையாக உயர்ந்து, அதன் தொடர் விளைவாக நாட்டின் பணவீக்கத்தின் அளவையும் கடுமையாக உயர்த்திடும். பண வீக்கத்தின் அளவு இந்த ஆண்டு 5.5 விழுக் காடு அளவிற்குத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதைவிட இரட்டிப்பு மடங்கு பணவீக்கத் தின் விகிதம் அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசாங்கம், இவ்விலைவாசி உயர் வினை நியாயப்படுத்திட ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன்களுக்காகவே பெட் ரோலியப் பொருட்களைப் பெரிதும் மானிய விலையில் கொடுத்து வருவதாக உரிமை கொண்டாடுகிறது. இப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திய பின்னும் (இதன் மூலம் மக்கள் மீது 22 ஆயிரம் கோடி ரூபாய் சுமையை ஏற்றியபின்னும்), மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்காக அரசாங்கம் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளித்து வருவதாகக் கூறுகிறது. எண்ணெய் நிறு வனங்கள் “திரும்பப் பெறுதலின் கீழ்” (“ரனேநச சநஉடிஎநசல”) என்பதன் அடிப்படையில் இவ் வாறு கூறிக்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வை அரசாங்கம் இவ்வாறுதான் புத்திசா லித்தனமாக நியாயப்படுத்துகிறது. “திரும்பப் பெறுதல்” என்பது நஷ்டம் அல்ல. உள்நாட்டு விலைகளை சர்வதேச விலைகளுக்குச் சமமாகக் கணக்கிட்டால் வரக்கூடிய வருவா யைத்தான் இது பிரதிநிதித்துவப் படுத்துகி றது. உண்மையில் நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அளவிடற்கரிய விதத்தில் கொள்ளை லாபத்தை ஈட்டியுள் ளன, ஈட்டிக்கொண்டும் இருக்கின்றன. உண் மை இவ்வாறிருக்கையில், அவை நஷ்டத் தை அடைந்திருப்பதாகக் கூறுவது வடிகட் டிய வஞ்சனையாகும்.

பெட்ரோலியப் பொருள்களின் மீதான மானியங்கள் குறித்து அரசாங்கம் பேசும்போது, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக அரசாங்கத்திற்கு அபரிமிதமான அளவில் வருவாய் வந்து கொண்டிருப்பதை, மிகவும் வசதியாக மறைத்து விடுகிறது. 2010-11இல் மட்டும் அரசாங்கத்திற்கு இவ்வரிகள் மூலமாக 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்திருக்கிறது. அதா வது பெட்ரோலியப் பொருட்களுக்கு இதுவரை அளித்து வந்ததாகக் கூறப்படும் மானியத் தொகையை விட கிட்டத்தட்ட இது நான்கு மடங்காகும்.

நம் நாட்டின் பொருளாதாரத்தினைத் தாங் கிப் பிடிக்கக்கூடிய அளவிற்கு போது மானஅளவிற்கு உள்நாட்டில் உற்பத்தி இல் லாததால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இத்தகைய இறக் குமதிகள் பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு மிகவும் அவசியம். அதாவது , இத்தகைய இறக்குமதிகள், பஞ்சம் ஏற்பட்டுள்ள சமயங் களில் மக்களுக்கு உணவு அளிப்பதற்காக உணவு தானியங்களை இறக்குமதி செய்வ தற்கு சமமாகும். இவ்வாறு நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும்போது, அவற்றின் மீது அரசாங்கம் வரிகள் விதிக்க முடியாது, விதிக் கக் கூடாது. அதேபோன்றுதான் நாட்டின் பொருளாதாரத்திற்கு உணவு அளித்திட எண்ணெய் இறக்குமதிகள் அவசியமாகின் றன. நிச்சயமாக, இத்தகைய இறக்குமதிக ளின் போது அரசாங்கம் அதிக அளவில் வரி கள் மற்றும் தீர்வைகளை இவற்றின் மீது சுமத்த முடியாது, சுமத்தக் கூடாது. ஆனால் மிக மோசமான விஷயம் என்னவெனில், அரசாங்கம் இவ்வாறு அதிக அளவில் வரிக ளைச் சுமத்திவிட்டு, பெட்ரோலியப் பொருட்க ளுக்கு மானியங்கள் அளித்துக்கொண்டிருப் பதாக இப்போது கூறுகிறது.

கனடாவில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, பிரதமர் இவ்விலை உயர்வினை நியாயப்படுத்திப் பேசியிருக் கிறார். “மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு மிக அதிக அளவில் மானியம் அளித்து வந்ததால், அவற்றின் விலைகளைச் சற்றே சரிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது” என்று பேசியி ருக்கிறார். “சாமானிய மக்களின் நலன்க ளைப் பாதுகாத்திட, பிரதமர் ‘வரிக் கட்ட மைப்பு’ முறையில் சரிப்படுத்தும் நடவடிக் கைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர, நாட்டின் பெரும் பகுதி மக்களைப் பாதிக் கக்கூடிய வகையில், அவர்கள் வாழ்வைச் சூறையாடக்கூடிய விதத்தில், அவற்றின் விலைகளை உயர்த்தி இருக்கக் கூடாது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘‘ 1996இல் இடது சாரிக் கட்சிகள் ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தை ஆதரித்த வந்த சமயத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப் பாடுகளை நீக்க வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தவர்களே இடதுசாரிகள்தான் என்று கூறி, விலை உயர்வுக்கு நியாயம் கற் பிக்க முனைந்திருக்கிறார். எண்ணெய் இறக் குமதி மீதான அனைத்துவிதமான வரிகளும் விலக்கிக் கொள்ளப்படும்பட்சத்தில் இவ் வாறு விலைகள் மீதான கட்டுப்பாடுகளையும் நீக்கிடலாம் என்று இடதுசாரிகள் சொன் னதை அவர் வேண்டுமென்றே மறைத்துவிட் டார். மக்கள் மீது, பெட்ரோலியப் பொருட்க ளின் விலைகளை உயர்த்தி, அவர்கள் வாழ்க் கையையே சூறையாடும் அதே சமயத்தில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, இவ் வாறு அதீத வரிகளையும் தொடர விரும்பு கிறது.

இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இந்த அரசு உயர்த்துவதற்கான உண்மையான காரணம் என்ன? உலகப் பொருளாதார நெருக்கடி பல நாடுகளை, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை, திவால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. இதி லிருந்து மீள வேண்டுமானால், அரசாங்கங் கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள், நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரங் கள் மீது தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்பதாகும். ஜி-20 உச்சி மாநாட்டில், ஜெர் மனியும் பிரிட்டனும் அரசாங்கப் பற்றாக்குறை களை மிகவும் கூர்மையாகவும், விரைவாக வும் வெட்டிக் குறைத்து அறிவித்திருக்கின் றன. பல முன்னேறிய நாடுகள், தங்கள் நாடு களில் சமூகத் துறை செலவினங்களைக் கடு மையாக வெட்டிக் குறைத்துள்ளன.

இந்தியாவிலும் இதே முறையில்தான் அரசாங்கம் தன் பற்றாக்குறையைச் சரிக் கட்டுவதற்காக நாட்டு மக்களின் மீது சுமை களை ஏற்றியிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தில் அரசு, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு வுக்கு மட்டும் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், வெறும் 3 ஆயி ரம் கோடி ரூபாய்தான் பெட்ரோலியப் பொருட் களுக்கான மானியத்திற்காக ஒதுக்கி இருந் தது. இதன் மூலம் அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்திடும் என்று அப்போதே தெளிவாகிவிட்டது.

மேலும், பெட்ரோலியப் பொருட்களின் மீதி ருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி யிருப்பதானது, அவற்றை பண்டங்கள் பரி வர்த்தனைக்குள் (உடிஅஅடினவைல நஒஉாயபேந) நுழையச் செய்வதற்கு வழிவகுத்து, அவற் றையும் ஊக வர்த்தகத்தின் பொருள்களாக மாற்றியிருக்கிறது. மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வினைப் போலவே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் வரும் காலங்களில் வர்த்தகச் சூதாடிகளால் இஷ்டம் போல் உயர்த்தப்படும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மூலம் முதலாளித்துவம் தன்னை நெருக்கடியிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக, சாமானிய மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியிருக்கிறது. ‘சாமானிய மக்க ளுக்கு’ சேவகம் செய்வதற்காகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறோம் என்று சொல் லிவரும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடிக் கொண்டி ருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. நடைபெறவிருக்கும் நாடு தழுவிய ஜூலை 5 வேலைநிறுத்தம் அரசுக் குத் தக்க பதிலடியைத் தந்திட வேண்டும். அதன் பின்னரும் ஆட்சியாளர்கள் பெட்ரோ லியப் பொருள்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற முன்வரவில்லை என்றால், விலையைக் குறைக்கும் வரை மக்கள் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்படுத் தப்படும்.

தமிழில்: ச. வீரமணி

No comments: