Saturday, May 29, 2010

சிஐடியு அமைப்பு தினம் 40 ஆண்டுகளும் எதிர்நோக்கியுள்ள கடமைகளும் - ஏ.கே.பத்மநாபன்

வரும் மே 30 அன்று, இந்தியத் தொழிற் சங்க மையம் உருவாகி 40 ஆண்டுகள் நிறை வடைகிறது. கடந்த 40 ஆண்டுகளும் சிஐ டியு-வின் வரலாறு என்பது தொழிலாளர் வர்க் கத்தின் ஒற்றுமைக்கான போராட்டங்கள் நடைபெற்று, எண்ணற்ற சாதனைகளைப் படைத்த காலமாகும். இக்கால கட்டத்தில் சிஐடியு-வின் வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்ட எவர் ஒருவரும், நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, நாட் டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பாதுகாத்திடவும் சிஐடியு-வில் தானும் ஓர் உறுப்பினராக, முன்னணி ஊழியராக, தலை வராக இருந்து செயல்பட்டதை நினைத்து உள்ளபடியே பெருமை அடைவார்கள், பெரு மிதம் கொள்வார்கள். சிஐடியு உருவான சமயத் தில் அதன் ஸ்தாபன மாநாட்டின் மேடையிலி ருந்தே தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேசி யப் பதாகையை உயர்த்திப் பிடித்ததிலும் அது முன்னணியில் இருந்திருக்கிறது.

பின்னணி
அகில இந்திய தொழிற் சங்க மாநாடு 1970 மே 28 முதல் 31 வரை கொல்கத்தாவில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட எவருக்கும் அதன் நிகழ்வுகள், தீர்மானங்கள் மற்றும் பல் வேறு விதமான நடவடிக்கைகள் என்றென் றைக்கும் நினைவில் நிற்கும். இந்த மாநாட் டில்தான் மே 30 அன்று, புதிய மத்தியத் தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்குவது என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்த அகில இந்திய மாநாட்டை நடத்துவதற்கான முடிவு ஒருசில நபர்களால் திடீரென்று எடுக்கப்பட்டதல்ல. நாட்டில் 1960களின் ஆரம்பத்திலிருந்தே, தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்ட எண் ணற்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து, ஏஐடியுசி-க்குள்ளேயே மிகவும் ஆழமான முறையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன என்பது வரலாற்றின் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது.

1967இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்க ளில் காங்கிரஸ் கட்சி எட்டு மாநிலங்களில் தோல்வி அடையும் அளவிற்கு நிகழ்ச்சிப் போக்குகள் ஏற்பட்டன. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இரு இடதுசாரிகள் தலைமையி லான அரசாங்கங்கள் அமைந்ததும், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அர சாங்கங்கள் அமைந்ததும் (இவற்றில் ஜனசங் கம், சுதந்திரா போன்ற வலதுசாரிக் கட்சிக ளும், தமிழ்நாட்டில் திமுக போன்ற பிராந்திய கட்சிகளும் அடங்கும்) தொழிலாளர் வர்க்கம் உட்பட எண்ணற்ற மக்கள் பிரிவினரின் மத்தி யிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாயின. பல் வேறு மாநில அரசுகளின் அணுகுமுறையும் வேறுபட்டன. இந்நிலையில் 1968இல் மத் திய அரசு ஊழியர்களின் போராட்டம் வெடித் தது. மத்திய அரசாங்கம், தன் சொந்த ஊழியர் களுக்கு எதிராகவே போர்ப் பிரகடனம் செய் தது. நாட்டின் தலைநகரிலும் மற்றும் பல் வேறு மாநிலங்களிலும் போராடும் ஊழியர் களின் ரத்தம் ஆறாக ஓடிய சமயத்தில், இடது சாரிகளின் தலைமையிலிருந்த மாநில அர சாங்கங்கள் போராடிய மத்திய அரசு ஊழியர் களுக்கு எதிராக, மத்திய அரசு அளித்திட்ட நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்து, மிக வும் வலுவானமுறையில் ஊழியர் ஆதரவு நிலை எடுத்தன.

மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசாங்கங் கள் மக்கள் ஆதரவு கொள்கைகளை வெளிப் படையாகப் பிரகடனம் செய்ததை அடுத்து, இம்மாநிலங்களில் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி அலை அலையாய் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காலங்களில் போராட்டங்களை ஒடுக்கிட காவல்துறை யினர் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்று வெளிப்படையாக மேற்கு வங்க, கேரள இடதுசாரி அரசுகள் பிரகடனம் செய்தன. இம் மாநிலங்களில் முந்தைய நடைமுறைகளைப் போலவே, தொழிலாளர்களுக்கு அரசாங்கங் கள் பேருதவியாக இருந்தன. இதனால் முத லாளிகளும் தொழிலாளர் விரோத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் இம்மாநில அரசு களைக் குற்றஞ்சாட்டினர். மற்ற மாநிலங் களில் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலா ளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ்நாடு அரசும் இதற்கு விதி விலக்கல்ல. ‘ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம்’ என்று சொல்லி, உழைக் கும் மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சிக்கு வந்த திமுக-வினர் போராட்டங்களில் ஈடு பட்ட தொழிலாளர்களை ‘இரும்புக் கரம்’ கொண்டு ஒடுக்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.

இந்தக் காலகட்டத்தில், நாடு முழுதும் போராட்ட அலைகள் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஏஐடியுசி தலைமையானது போராட்டங்களுக்குத் தலைமையேற்கத் தயாராயில்லாமலிருந்தது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏஐடியுசி தலைமை, வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு, பகை வனோடு வர்க்க ஒத்துழைப்பு (class collaboration) என்னும் நிலையினை உயர்த்திப் பிடித்தது.

இந்தச் சூழ்நிலையில்தான், 1970 ஏப்ரல் 8, 9 தேதிகளில் ஏஐடியுசி-இன் காரியக் கமிட்டி, மத்திய கவுன்சில், மாநில செயற்குழு மற்றும் கவுன்சில்கள் என்று பல்வேறு மட் டங்களிலும் செயல்பட்ட 150 பேர் கலந்து கொண்ட கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீரஞ் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தி, இயக்கத்தை வலுவாகக் கட்டியவர்களா வார்கள். இவர்கள் இனியும் ‘ஏஐடியுசி’-இல் இணைந்து செயல்படுவது சாத்தியமல்ல என்ற முடிவுக்கு வந்தனர். எனவே அகில இந்திய தொழிற்சங்க மாநாட்டைக் கூட்டுவது என்றும், அதில் தேசிய அளவில் புதியதோர் தொழிற் சங்க மையத்தை அமைப்பது என்றும் பரிந்துரைத்தார்கள்.

லெனின் நகர் மாநாடு

அகில இந்திய மாநாடு, தோழர் லெனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் சமயத்தில் நடைபெற்றதால், மேற்கு வங்கத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு லெனின் நகர் என்று பெயரிடப்பட்டது. மாநாட்டுக் கொடியினை மேற்கு வங்க, தொழி லாளர் வர்க்க இயக்கத்தின் முதுபெரும் தோழர் கிருஷ்ணபாத கோஷ் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாநாடு துவங்கியது.

மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர், தோழர் ஜோதிபாசுவும், பொதுச் செயலாளர் தோழர் மனோரஞ்சன் ராயும் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்துத் தங்கள் வரவேற் புரைகளில் விளக்கினார்கள். தோழர் ஜோதி பாசு கூறுகையில், “இந்தியாவில் தொழிற் சங்க இயக்கங்கள் ஏற்கனவே அதிகம் உள் ளன. இப்போது மேலும் ஒரு தொழிற்சங்கம் உருவாவது தொழிலாளர் வர்க்கத்தை மேலும் பிரிப்பது போன்றதோர் தோற்றத்தை அளித் திடும். ஆனால், உண்மையில் அதற்கு நேர்மா றாக, இத்தகையதோர் தொழிற்சங்க மையம் அமைவது, இதன் பின்னே இந்தியாவில் உள்ள புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தை அணி வகுக்கச் செய்வதற்கு அவசியத் தேவையாக மாறியிருக்கிறது என்றார். மேலும் அவர், “ஓர் உண்மையான ஜனநாயக மற்றும் புரட்சிகரத் தொழிற்சங்க மையம் என்பது தொழிலாளர் வர்க்கத்திற்குத் தலைமை தாங்கி, புரட்சிகர பொருளாதாரப் போராட்டங்களை நடத்திடும் அதே சமயத் தில் அவர்களை அரசியல்படுத்திடவும் வேண்டும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான போராட்டத்திற்கும் அவர்களைத் தயார்ப்படுத்திட வேண்டும் மற்றும் உலகம் முழுதும் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் அவர்களை அணிவகுத்திட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.

ஒற்றுமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்

இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தவர்கள் ஏஐடியுசி முறையாகச் செயல்படுவதை உத் தரவாதப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி கள் அனைத்தையும் விவரமாக விளக்கி தோழர் பி.ராமமூர்த்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

அறிக்கையில் நாட்டின் பல பாகங்களி லும் நடைபெற்ற வீரஞ்செறிந்த வெற்றிகரமான போராட்டங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தில் உள்ள சங்கங்கள் மற்றும் கேரளம், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் உள்ள சங்கங்கள் அவற்றில் முன்னணிப் பாத்திரங்கள் வகித்த தையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தோழர் பி.ஆர். மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட இடது முன்னணி அரசாங் கங்கள் மேற்கொண்ட தொழிலாளர் ஆதரவு, மக்கள் ஆதரவு நடவடிக்கைகளையும் விளக் கினார். இவ்விரு மாநிலங்களிலும் அடக்கு முறை கடுமையாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழ்நிலையில் மாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்தது.

தொழிற்சங்கங்களுக்குத் தத்துவார்த்தத் தெளிவு இருக்க வேண்டியதன் அவசியத்தை யும் தோழர் பி.ஆர். கோடிட்டுக் காட்டினார். “தொழிற்சங்க இயக்கத்தின் பிரதான குறிக் கோள் சோசலிசமே என்று பிரகடனம் செய்கி றோம். நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் தலைமை தாங்குகிற இந்த சமூக அமைப் பிற்கு எதிராகவே நம்முடைய பிரதான போராட்டம் என்பதை தொழிற்சங்க இயக்கம் மறந்ததென்றால், நம்முடைய குறிக்கோளை நோக்கி நாம் முன்னேற முடியாது. ஏகாதிபத் தியத்திற்கு எதிராக, அதிலும் குறிப்பாக நம் மக் களை அடிமைப்படுத்தி, அவர்கள்மீது நவீன காலனியாதிக்கத்தை ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும், நம் நாட்டின் பிரதான உற் பத்திச் சாதனங்களைத் தங்கள் கட்டுப்பாட் டில் வைத்துக்கொண்டு, அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் ஏகபோக முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் அது தன்னுடைய இலக்கை எப்போதும் செலுத் திக் கொண்டிருக்க வேண்டும். நாள்தோறும் நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட் டங்கள் இத்தகைய பொதுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்,’’ என்று அறிக்கையில் தெளிவுபடுத்தி இருந்தார்.

புதியதொரு தொழிற்சங்க மையம்

மாநாட்டில் மிகவும் விரிவானமுறையில் விவாதங்கள் நடந்தபின், புதியதோர் அமைப் பை உருவாக்குவதற்கான தீர்மானம் மாநாட் டின் முன் வைக்கப்பட்டது.

புதிய அமைப்புக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதில்கூட மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் நடைபெற்றன, பல் வேறு பரிந்துரைகளும் வந்தன. இறுதியாக, சிஐடியு என்னும் இந்தியத் தொழிற்சங்க மையம் (ஊஐகூரு - ஊநவேசந டிக ஐனேயைn கூசயனந ருniடிளே) என்னும் புதியதோர் அமைப்பு உதயமானது. அமைப்பின் பெயர் அறிவிக்கப்பட்ட கணமே, “சிஐடியு ஜிந்தாபாத், தொழிலாளர் ஒற்றுமை ஜிந்தாபாத், உலகத்தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக” என்று இடிமுழக்கங்கள் விண்ணை யெட்டின. இத்தீர்மானத்தினை தோழர் மனோரஞ் சன் ராய் முன்மொழிய, தோழர் இ.பாலானந்தன் வழிமொழிந்தார்.

நம்முன் உள்ள கடமைகள்

மாநாட்டில் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர் பி.டி.ரணதிவே, நிறை வுரை யாற்றுகையில், சங்கத்தின் முன் உள்ள கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேலும் பல அறிவுரைகளை வழங்கினார். மாநாட்டில் பிரதிநிதிகள் காட்டிய ஆர்வம், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் கிரகித்த பிடி ஆர், வர்க்கப் போராட்டங்கள் மற்றும் அதன் ஒப்புயர்வற்ற நிலை ஆகியவற்றை மிகவும் தெளிவான புரிதலுடன் உயர்த்திப்பிடித்து, அதன் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத் தின் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நம் முடைய சங்கங்கள் ஜனநாயக நடைமுறை யை உத்தரவாதப் படுத்தக்கூடிய வகையில், செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலி யுறுத்தினார்.

“நாம் புதியதோர் அமைப்பை, புதிய வழி யில் தொடங்கியிருக்கின்றோம். தொழிற்சங்க இயக்கத்திற்கு புதியதொரு தத்துவக்கோட் பாட்டினை அளித்திட விரும்புகிறோம். ஆனால், தொழிற்சங்க இயக்கத்தில் பணிபுரி யும் நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த உணர்வு நிலையினை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பழைய உணர்வுநிலை மற்றும் பழைய பழக்கவழக்கங்களை முற்றிலுமாகக் கைவிட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம்மால் சீர்திருத் தப் பாதையில் செல்பவர்களுக்கு எதிராக ஒரு சரியான போராட்டத்தைத் துல்லியமான முறையில் எடுத்துச் செல்ல முடியும்,’’ என்று பிடிஆர் பிரகடனம் செய்தார்.

“தொழிலாளர் வர்க்கம் ஒற்றுமையைக் கோருவதற்கான தருணம் இதுவே. இவ்வாறு ஒற்றுமையைக் கட்டவில்லை என்றால், எதி ரிமீதான தாக்குதலை நம்மால் தொடுத்திட முடியாது” என்று கூறிய தோழர் பிடிஆர் ஒற் றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவ சியத்தையும் விளக்கினார். அவர் மேலும், ‘‘நம் அமைப்பு, போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒற்று மைக்கான, ஒன்றுபட்ட போராட்டத்திற்கான, கூட்டு நடவடிக்கைக்கான பதாகை இதோ என்று ஒவ்வொருவரிடமும் சொல்லுங்கள்’’ என்றார்.

கடந்த நாற்பது ஆண்டுகள்
வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம் மற்றும் ஒன்றுபட்ட இயக்கத்திற்கான பதாகை ஆகிய செய்திகளுடன் சிஐடியு கடந்த நாற்பது ஆண்டுகளாக முன்னேறி வந்திருக் கிறது. சிஐடியு-வின் உறுப்பினர் எண்ணிக் கை 8 லட்சத்து 04 ஆயிரத்து 657இலிருந்து இப்போது 51 லட்சத்து 45 ஆயிரத்து 387ஆக வளர்ந்திருக்கிறது.

இது போதுமானதல்ல என்பதும் இன்னும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்ப தும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆயினும், ஸ்தாபன மாநாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சனைகள் மீது, ஸ்தாபனத்தால் மிகவும் ஆழமாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பல ஸ்தாபன பலவீனங்கள் இருந்த போதிலும், (அவற்றை சிஐடியு அடையாளம் கண்டு, திருத்தும் பணியில் இறங்கியிருக் கிறது) சிஐடியு தன் உறுப்பினர் எண்ணிக்கை யில் மட்டுமல்ல, பல்வேறு முனைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பதில் ஐயமில் லை. முறைசாராத் தொழிலாளர்கள் பிரச்ச னைகள், பெண் தொழிலாளர்கள் பிரச்சனை கள், பொதுத்துறை, ஒன்றுபட்ட இயக்கங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடை பெறும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளித்தல் போன்ற எண்ணற்ற கடமைகளை சிஐடியு நிறைவேற்றி இருக்கிறது.

கடந்த நாற்பதாண்டுகளும் தியாகம், முன்னேற்றம் மற்றும் சாதனைகளின் ஆண் டுகளாகும். கடந்த சில மாதங்களில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மத்தியத் தொழிற் சங்கங்களின் ஒற்றுமையை நாம் கட்டியிருக்கிறோம். அதனை ஒருமுகப் படுத்தி, அடிமட்டக் கிளைகள் வரை கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை மேலும் விரிவானமுறையில் எடுத்துச்செல்ல முடியும்.

சண்டிகரில் நடைபெற்ற சிஐடியு-வின் 13ஆவது மாநாடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை வகுத்துத் தந்திருக்கிறது. வர விருக்கும் நாட்களில் அவற்றை நிறைவேற்ற நம்மாலான அனைத்தையும் செய்திடுவோம், நம் ஸ்தாபன மாநாடு வகுத்துத்தந்த கட்டளை களின் அடிப்படையில் நம் லட்சியங்களை எய்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: