Friday, May 8, 2009

காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற புதியதோர் அணியை உருவாக்கிடுவோம்




பல்வேறு சமூகக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாடானது, அதற்கேற்ற வகையிலேயே அதன் அரசியல் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்திடும் என்று நாம் இப்பகுதியில் பலமுறை உறுதிபடத் தெரிவித்து வந்த போதிலும், பாஜகவும் காங்கிரசும் மட்டும், இந்திய அரசியல் என்பது அடிப்படையில் தங்கள் இரு கட்சிகளைச் சார்ந்துதான் இயங்க முடியும் என்றும், மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களைத்தான் சுற்றிச்சுற்றி வர வேண்டும் என்றும் மிகவும் ஆரவாரத் தன்மையுடன் தங்கள் தேர்தல் பிரச்சாரங்ளைத் தொடங்கின.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த அதன் கூட்டணிக் கட்சிகளில் பல அதனைக் கைவிட்டுவிட்டதை அடுத்து அவை அனைத்தும் வீண் வெற்றுப்பிரச்சாரம்தான் என்பதை வெளிப்படுத்திவிட்டன. இதில் அவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அம்சம், ஒரிசாவில் பிஜூ ஜனதா தளம், அவர்களை விட்டு வெளியேறியதுதான். அதேபோன்று ஐமுகூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் தற்போதும் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தபோதிலும், தேர்தலுக்குப்பின் காங்கிரசை விட்டு விலகி புதிய அணிசேர்க்கையில் தங்களை இணைத்துக்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள், சிலர் கூறுவதுபோல், சந்தர்ப்பவாதம் என்றோ, பிராந்தியக் கட்சிகள் இவ்வாறு சமயத்திற்கேற்ற முறையில் ‘நிலை எடுக்கும்’ என்றோ கூறுவது சரியல்ல. மாறாக, தாங்கவொண்ணாத பொருளாதாரச் சுமைகளிலிருந்து நிவாரணம் கோருவதற்காக அதனைச் சார்ந்துள்ள வெகுஜனத் திரள், அவற்றின் மீது செலுத்திடும் நிர்ப்பந்தத்தின் பிரதிபலிப்பாகவே இவற்றைக் கொள்ள வேண்டும். அதாவது, மக்கள் சரியானதொரு மாற்றை விரும்புகிறார்கள் என்பதன் பிரதிபலிப்பே இது. அந்த மாற்று என்ன அல்லது அது எவ்வாறு வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளால் வரையறுக்கப்பட வேண்டியிருக்கிறது.
மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான மாற்றுக் கொள்கையின் அவசியத்தை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இத்தகைய மாற்றுக் கொள்கையை நிறைவேற்றும் தகுதி, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஓர் அரசியல் மாற்றால்தான் முடியும் என்பதே கடந்த கால அனுபவமாக இருக்கிறது. எனவே, இன்றைய காலத்தின் தேவை என்னவெனில், மத்தியில் ஒரு காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை நிறுவுவதேயாகும். இடதுசாரிக் கட்சிகள் இந்தக் குறிக்கோளையே குவிமையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
தேர்தல்களின் மூன்றாம் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரசானது திடீரென்று தேர்தலுக்குப்பின் இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்திட சாத்தியக்கூறுகள் உள்ளதாகப் பேச ஆரம்பித்திருக்கிறது. தேர்தலுக்குப்பின் தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைத்திட சாத்தியமில்லை என்பதைக் காங்கிரஸ் புரிந்துகொண்டிருப்பதன் அறிகுறியே இது.
இன்றைய இந்திய அரசியல்வானில் இடதுசாரிகளை எவரும் தவிர்த்திட முடியாது என்கிற நிலை உருவாகியிருப்பதைn ய இது காட்டுகிறது. அதனால்தான், பாஜக-வின் கூட்டணியில் தற்போது இருந்திடும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களும், காங்கிரசின் கூட்டணியில் இருந்திடும் தேசியவாதக் காங்கிரசின் தலைவர்களும் இடதுசாரிகளுடன் இணைந்திட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, தேர்தலுக்குப்பின்னர் அமையவிருக்கும் அரசாங்கமானது புதிய மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் சேர்மானமாக இருந்திடும் என்பது தெளிவாகி வருகிறது. சமீபகாலத்திய இந்திய அரசியலில், இது ஒன்றும் புதிதல்ல. நாம் ஏற்கனவே இப்பகுதியில் பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, 1996 தேர்தலுக்குப்பின்னர்தான் ஐக்கிய முன்னணி உருவானது, 1998 தேர்தலுக்குப்பின்னர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது, 2004 தேர்தலுக்குப்பின்னர்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் உருவானது. அதைப்போலவே 2009 தேர்தலுக்குப்பின்பும் புதியதோர் கூட்டணி உருவாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது நாட்டின் உச்சபட்ச நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதே என்று அதனை நியாயப்படுத்திக் கூறிக்கொண்டே, இடதுசாரிகளுடனும் நேசத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது. இடதுசாரிகள், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக நிறைவேற்ற ஐமுகூ அரசாங்கம் முடிவெடுத்தபின்னர், இடதுசாரிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது சரியான நடவடிக்கைதான் என்பதை இப்போது அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள சமீபத்திய அறிவிப்புகள் மெய்ப்பித்து நிலை நாட்டியிருக்கின்றன. நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அமெரிக்க அரசின் உதவி செயலாளர், ரோஸ் கோட்டிமோலர் (சுடிளந ழுடிவவநஅடிநடடநச), ஐ.நா. தலைமையிடத்தில் அமைந்துள்ள 2010 அணுசக்தி அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாட்டிற்கான தயாரிப்புக் குழு (ஞசநயீயசயவடிசல ஊடிஅஅவைவநந கடிச வாந 2010 சூரஉடநயச சூடிn-ஞசடிடகைநசயவiடிn கூசநயவல சுநஎநைற ஊடிகேநசநnஉந)விடம், ‘‘இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வடகொரியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தினை பின்பற்றிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் அடிப்படைக் குறிக்கோள்’’ என்று கூறியிருக்கிறார். அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவைக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒருங்கிணைந்த ஆய்வுத் தடை ஒப்பந்தம் (ஊகூக்ஷகூ - ஊடிஅயீசநாநளேiஎந கூநளவ க்ஷயn கூசநயவல) மற்றும் அணுஆயுதம் தொடர்பான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளிலும் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக இந்தியா இசைந்திருப்பதற்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இதுநாள்வரை என்பிடி என்னும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையும் (சூஞகூ-சூடிn-ஞசடிடகைநசயவiடிn கூசநயவல)மற்றும் சிடிபிடி என்னும் ஒருங்கிணைந்த ஆய்வுத் தடை ஒப்பந்தத்தையும் (ஊகூக்ஷகூ-ஊடிஅயீசநாநளேiஎந கூநளவ க்ஷயn கூசநயவல) ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது. ஏனெனில் இந்த ஒப்பந்தங்களானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ருஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் மேலாதிக்கம் செலுத்திட அனுமதித்திடும் அதே சமயத்தில் உலகில் உள்ள மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கோ, அவற்றில் சோதனைகள் செய்வதற்கோ தடை விதிக்கின்றன என்பதே காரணங்களாகும்.
வாஜ்பாய் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, அமெரிக்க அரசாங்கத்துடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி சிடிபிடி என்னும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள சமரசம் செய்துவந்திருக்கிறது. ஆனால் அப்போது அமெரிக்க காங்கிரஸ், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததால், அதிர்ஷ்டவசமாக அது தப்பித்தது.
இப்போது, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பதன் வாயிலாக, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு ஏறத்தாழ சரணடைந்துவிட்ட நிலையில், என்பிடி என்னும் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த கொள்கையை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டது. உண்மையில், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இந்தப் பூமண்டலத்திலிருந்தே அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துக்கட்ட ஒரு கால அட்டவணையை ஐ.நா.ஸ்தாபனத்திடம் இந்தியா முன்வைத்தது. அந்த சமயத்தில் இந்தியா, இவ்வாறு பூமண்டலத்திலிருந்து அணுஆயுதங்கள் முழுமையாக ஒழித்துக்கட்டப்படும் வரை, என்பிடி மற்றும் சிடிபிடி ஆகிய இரு ஒப்பந்தங்களையும் ஏற்க முடியாது என்றும் அறிவித்தது. ஆனால், மன்மோகன்சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமோ, இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த்தந்திரக் கூட்டணியின் ஒரு தொங்கு சதையாக அடியோடு மாற்றி அமைத்துவிட்டதன் மூலம், மேற்படி நிலையை முற்றிலுமாக மறுதலித்திருக்கிறது.
எனவேதான், சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்தியா பெற்றிருந்த மதிப்பையும் மரியாதையையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தியா இதுநாள்வரைக்கடைப்பிடித்து வந்த சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கக்கூடிய விதத்தில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் அமர்த்துவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மேலும் பொருளாதாரத் துறையிலும் ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ள அதே சமயத்தில் மத்தியில் ஆட்சியில் அமரக்கூடிய அரசானது, வலுவான வகையில் சமூக நீதியை உத்தரவாதப்படுத்தவும், வகுப்புவாதம் மற்றும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவும் உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ளக்கூடிய விதத்திலும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சேர்மானம் உருவாக்கக்கூடிய விதத்தில் அமைவதும் அத்தியாவசியமானதாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: