Monday, March 4, 2013

பொருளாதார ஆய்வு அறிக்கை :சீத்தாராம் யெச்சூரி

பொருளாதார ஆய்வு அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி

Sunday, March 3, 2013

கருணையற்ற, கொடூரமான தாக்குதலுக்கு முன்னோட்டம்



மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2012-13ஆம் ஆண்டுக்கான பொரு ளாதார ஆய்வறிக்கையையும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் சமர்ப்பித்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை சுமார் 300 பக்கங்களையும் அதனுடன் பொருளாதார விவரக்குறிப்புகள் 178 பக்கங்களையும் கொண்டுள்ளது. இவை நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2012-13ஆம் ஆண்டில் 5 விழுக்காடு என்று மத்தியப் புள்ளியியல் ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது மிகச்சரியானது என்ற மேற்குறிப்பையும் அளித்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியை இது குறைத்து மதிப்பிட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சரும் அவரது அமைச்சகமும் ஆட்சேபித்துள்ளன. ஆய்வறிக்கையில் 2009-10ஆம் ஆண்டில் 9.3 விழுக்காடாக இருந்த வளர்ச்சி விகிதம் 2011-12இல் 6.2 விழுக்காடாகவும். பின்னர் 2012-13இல் 5.0 விழுக்காடாகவும் வீழ்ந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு மந்தமானதற்கான காரணிகளையும் அது குறிப்பிட்டிருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியை அடுத்து கார்ப்பரேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு மந்தமாகிவிட்டது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.அதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் 2013-14ஆம் ஆண்டில் 6.1 விழுக்காட்டிலிருந்து 6.7 விழுக்காட்டளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய் வறிக்கை சித்தரித்திருக்கிறது. இதனை எய்திட, முதலீடுகளுக்கான முட்டுக்கட்டைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் நிதிக்கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது. இவ்வாறு மாற்றியமைத்தோமானால், அது உயர் வளர்ச்சி விகிதத்திற்கும் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கும் இட்டுச் செல்லும் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. கடந்த காலங்களில் பலமுறை சுட் டிக்காட்டியிருப்பதைப் போல, முதலீடுகளுக்கான வள ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வளர்ச்சி வந்து விடாது. அத்தகைய முதலீடுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டவை, சந்தையில் நுகர்வோரால் வாங்கப்பட வேண்டும்.
அப்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் மக்களின் நுகர்வு சக்தி (consumption power) கூர்மையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று ஆய் வறிக்கை குறிப்பிடுகிறது. பொருளாதாரத்தில் இறுதி நுகர்வு சராசரியாக ஆண்டுக்கு 8 விழுக்காடாக இருந்தது, மேலே குறிப்பிட்டதைப்போல, 2012-13ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4.4 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. இதனை உயர்த்தாவிட்டால், முதலீடுகளை அதிகப்படுத்தினாலும் வளர்ச்சி வந்து விடாது. ஆய்வறிக்கை, ‘நுகர்வுஅம்சத்தைக் கண்டுகொள்ளாமல், ‘முதலீடுஅம்சத்தை மட்டும் கவனம் செலுத்தி ஆய்வு செய்திருக்கிறது. இது பெரும்பான்மையான நாட்டு மக்களின் அவல வாழ்வை மேலும் அதிகமாக்கிடவே இட்டுச் செல்லும். இவ்வாறு அரசாங்கம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, தற்போது இருந்துவரும் ‘‘முட்டுக்கட்டைகளை’’ நீக்குகிறோம் என்ற பெயரிலும், நிதிக் கொள்கையை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரிலும் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்று முன் மொழிந்திருக்கிறது.
வளர்ச்சி விகிதம், முதலீட்டு விகிதம் ஆகிய இரண்டுக்கும் இடையே வலுவான வகையில் தொடர்புகள் இருப்பதால், இந்தியாவில் முதலீட் டுக்கான நிதியை அதிகரிப்பதன் மூலம், உயர் வளர்ச்சி விகிதத்தை இந்தியா மீண்டும் அடையும் என்று ஆய்வு அறிக்கை முடிவு செய்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது ஒரு தவறான கணிப்பு. உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான தேவை வளராத வரையில், வளர்ச்சி விகிதம் தானாகவே அதிகரித்திடாது. உள்நாட்டுத் தேவை வளராமல் அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதனால் மட்டும் பயன் இல்லை. இதனால் ஊக நடவடிக்கைகள்தான் அதிகரிக்குமே யொழிய, உற்பத்தி சார்ந்த முதலீடுகளாக இவை இருக்காது. சமீபத்தில் நம் நாட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்த அனுபவத்திலிருந்து இதனை நாம் பார்க்க முடியும். பணக்காரர் கள் தங்கள் பணத்தை இத்தகைய வழி களில் செலவிடுவார்கள். விலையுயர்ந்த சொத்துக்கள்” (`valuables’) என்று அழைக்கப்படும் இவற்றில் கலை சார்ந்த வேலைகள், விலையுயர்ந்த உலோகங்கள், கற்கள்ஆகியவை உள்ளடக்கம் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. தற்போதைய விலைகளின் மதிப்பீட்டில், “விலையுயர்ந்த சொத்துக்கள் வடிவத்தில் முதலீடுகள் சுமார் 4.5 மடங்கு உயர்வு 2007க்கும் 2012க்கும் இடையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது...
. “நாட்டில் 2007க்கும் 2012க்கும் இடையே, விலைவாசி மாறாத காலத்திலும் கூட, விலை உயர்ந்த சொத்துக்களின் பங்கு மொத்த முதலீட்டில் 2.9 விழுக்காட்டி லிருந்து 6.2 விழுக்காடு அளவிற்கு அதி கரித்திருக்கிறது.இவ்வாறாக உற்பத்தியோடு இணைக்கப்படாத முதலீடுகளுக்குள் நிதியங்கள் பெரிய அளவில் திருப்பிவிடப் பட்டிருக் கின்ற போதிலும், ஆய்வறிக்கையானது முதலீடுகளை ஊக்குவிக்க கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் நாட்டில் தங்கள் கொள்ளை லாப வேட்டையை அதிகரித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் அந்நிய மூலதனத்திற்கும் நம் நாட்டின் மூலதனத்திற்கும் பணக்காரர்களுக்கும் வாய்ப்புவாசல்களை மிக விரிவாகத் திறந்தவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு செய்வதானது இரு இந்தியர்களுக்கும் (ஒளிரும் இந்தியர்களுக்கும் அவலத்தால் அல்லல்பட்டுவேதனையால் வெந்து மடிந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும்) இடையிலான இடைவெளியே மேலும் மோசமான முறையில் விரிவடைய வைத்திடும்
. வளர்ச்சி விகிதங்கள் மட்டுமே ஒட்டு மொத்த பொருளாதாரம் அல்லது மக்களின் நலனுக்குப் போதுமானதல்ல என்பது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வாதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மனிதவள வளர்ச்சிக் குறியீடுகளில் கூறுவதானால், இந்தியா மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட இருக்கிறது. ஆய்வறிக்கையானது 2011ஆம் ஆண்டு ஐ.நா. மனிதவள வளர்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறது. அதில், இந்தியா, மனிதவள வளர்ச்சி அடைந்துள்ள 187 நாடுகளின் வரிசையில், மேலும் சரிவடைந்து 134ஆவது நாடாக இறங்கி விட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளின் நிலைமைகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பிரிக்ஸ்’ (BRICS-Brazil, Russia, India, China, South Africa) நாடுகளிலேயே இந்தியாதான் மிகவும் கீழ் நிலையில் உள்ள நாடாகும். சுகாதாரச் செலவினங்களிலும் இதுதான் நிலைமை. சுகாதாரத் துறையில் பொதுச் செலவினம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 விழுக்காடு அளவிற்கு தேக்கநிலையில் இருக்கிறது. சுகாதாரத் துறையில் தனியார் கொள்ளையடிக்க வசதிகளைச் செய்து தந்தபின், சுகாதாரத்துறையில் தனியார் செலவினம் என்பது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.9 விழுக்காடு அளவிற்கு பொது செலவினத்தைவிட இரு மடங்கு அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக, மருந்துகளின் விலைகளும், மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் செலவழிப்பது என்பதும் மட்டுமீறிய அள விற்கு அதிகரித்திருக்கின்றன. இவை, நம் மக்கள்தொகையில் மேலும் மூன்று கோடி மக்களை ஒவ்வோராண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் வரிசைக்குத் தள்ளும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.
உலகப் பொருளாதார மந்த நிலைமை காரணமாக நம் நாட்டின் நிதிநிலை மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆய்வறிக்கை சுட்டிக்காட் டியிருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், கார்ப்பரேட்டுகளின் வருமான வரி 4.9 விழுக்காடும், சுங்கவரி 18.9 விழுக்காடும், மத்திய கலால் வரி 16 விழுக்காடும் வீழ்ச்சியடையும் என்று மதிப்பிட்டிருக்கிறது. ஆயினும், மத்தியதர வர்க்கம் செலுத்தி வரும் வரு மான வரி (personal income-tax) 7.6 விழுக் காடும், சேவை வரிகள் கிட்டத்தட்ட 5.9 விழுக்காடும் அதிகரித்திடும். பணக்காரர்களும், இந்திய முதலாளிகளும் குறைவாக வரி செலுத்தக்கூடிய அதே சமயத்தில், ஊதியம் பெறும் ஊழியர்களும், மத்தியதர வர்க்கமும் மிகப்பெரிய அளவிற்கு அதனை ஈடுசெய்யக்கூடிய வகையில் வரிகளைச் செலுத்த வேண்டும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, நிதிநிலைமையை வலுப்படுத்திட ஏழை மக்களுக்கு உச்ச வரம்பு எதுவுமின்றி அளித்துவரும் மானியங்களை கடுமையாகக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. சுமார் 1 லட்சத்து 66 ஆயிரத்து 824 கோடி ரூபாய் அளவிற்கு மான்யங்களை வெட்டிக் குறைக்க வேண்டும் என்று அது மதிப்பிட்டிருக்கிறது. 2012-13ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 5 லட்சத்து 13 ஆயிரத்து 590 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் திரும்பத் திரும்பக் கூறி வந்திருப்பதைப்போல, அரசாங்கம் கார்ப்ப ரேட்டுகளிடமிருந்தும், பணக்காரர்களிடமிருந்தும் வசூலிக்காமல் விட்ட வரி மட்டும், 2012-13ஆம் ஆண்டு பட்ஜெட் ஆவணங்களின்படி, சுமார் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே நிதிப்பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது என்பதை ஒரு வர் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நிதிப்பற்றாக்குறைக்குக் காரணமான இந்த ஓட்டையை அடைக்காமல் ஆட்சியாளர்கள், மக்களுக்கு அற்ப அளவில் அளித்து வரும் மானியங்களை வெட்டிக் குறைத்திட முன்வந்திருக்கிறார்கள்.
இது சாமானிய மக்களை மேலும் வறுமைக் குழிக்குள் தள்ளும். மக்களின் தேவைகள் சுருங்குவதன் காரணமாக, நம் நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். அதனைத் தொடர்ந்து நம் பொருளாதாரமும் மந்த நிலைக்குச் செல்லும்.பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட்டிற்கும் அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைக்கும் முன்னோடி யானது. இதிலிருந்து நம் மக்கள் மீது ஆட்சியாளர்கள் கருணையற்ற முறையில் மிகவும் கொடூரமான முறையில் பொருளாதார ரீதியாகத் தாக்குதலைத் தொடுக்க இருக்கிறார்கள் என்பதும் அதன் விளைவாக, இரு இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் ஆழமான முறையில் அதிகரிக்கும் என்பதும் தெளிவாகிவிட்டது. ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கையை மக்களிடம் தோலுரித்துக் காட்டிடவும், அதற்கு மாற்றாக சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குச் சிறந்ததோர் வாழ்வாதாரத்தை வழங்கிடவும், ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியை மக்களுக்குக் காட்டிடவும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தற்போது நாடு தழுவிய அளவில் மாற்றுக் கொள்கைக்கான போர்முழக்கப் பயணம் நடைபெற்று வருகிறது.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, February 24, 2013

வலுத்து வரும் மக்கள் போராட்டங்கள்


பல வழிகளில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறுத்தமாகும். சுதந்திர இந்தி யாவில் முதன்முறையாக இரு நாட்களுக்கு, அதாவது 48 மணி நேரத்திற்கு, அறைகூவல் விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் இது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து (மொத்தம்11) மத்தியத் தொழிற்சங்கங்களும் இணைந்து முதன்முறையாக, தங்கள் தலைமையின் அரசியல் வித்தியாசங்களை மறந்து கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தமும் இதுவாகும். இந்த அறை கூவலை நாட்டில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் அநேகமாக அனைத்துத் தேசிய சம்மேளனங்களும் ஆதரித்திருக் கின்றன. மேலும் இந்த அறைகூவலுக்கு மாநில அளவில் இயங்கிடும் பல்வேறு தொழிலாளர் மற்றும் ஊழியர் அமைப்புகளும், பல்வேறு தொழிற்சாலைகளில் சுயேச்சையாக இயங்கிடும் தொழிற்சங்கங்களும் கூட ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் இந்த அறைகூவலுக்கு வெளிப்படுத்தி இருந்தன. கூடுதலாக, விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள் மற்றும் மாதர் சங்கங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத முறையில் நடைபெறும் தொழி லாளி வர்க்கத்தின் நடவடிக்கைக்குத் தங் கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தன. இந்திய ஆளும் வர்க்கங்கள் கடந்த இரு பதாண்டுகளாகப் பின்பற்றிவரும் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங் களின் விளைவாக உழைக்கும் வர்க்கம் மற் றும் பல்வேறு விதங்களிலும் கடும் உழைப் பில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீது அடுத் தடுத்துத் தாக்குதல்களைத் தொடுத்துவரும் பின்னணியில்தான் இப்பொதுவேலைநிறுத் தம் நடைபெற்றது. உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும், பல்வேறு அமைப்பு களும் எழுப்பிய நியாயமான கோரிக்கைகள் குறித்தும், அவற்றிற்காக அவை கடந்த காலங்களில் நடத்திய வீரஞ்செறிந்த நட வடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் இது வரை ஆட்சியாளர்கள் காதில் விழவில்லை.

இம்முறை கூட, பல மாதங்களுக்கு முன்பே, தொழிற்சங்கங்களால் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தும், இந்தியாவில் உள்ள சட்டங்களின் கீழ் வேலைநிறுத்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும், ஆட்சியாளர்கள் மத் தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களை மிகவும் காலம் தாழ்த்தி, அதாவது பொது வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கு முதல் நாளான பிப்ரவரி 19 அன்று மாலைதான், பேச்சுவார்த்தைக்காக அழைத்தது. போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தலை வர்களிடம் அறைகூவலை விலக்கிக் கொள் ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம்என்று பதிவு செய்வதற்காக மட்டுமே அர சாங்கம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவு. இது மிகவும் நகைக்கத்தக்க ஒரு செயலாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் மீது முறையாக விவாதிக்க வேண்டும் என்கிற உணர்வுகூட மத்திய அமைச்சர்களிடம் காணப்பட வில்லை. மாறாக, வேலைநிறுத்தத்திற்கான அறைகூவல் விலக்கிக் கொள்ளப்பட்டால் மட்டுமே கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.நாளும் உயரும் விலைவாசியைக் கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்திடு, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை கிலோ ரூ.2 வீதம் கொடுப்பதன்மூலம் உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்து, கரத்தால் உழைக் கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதத் திற்கு பத்தாயிரம் ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்திடு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு, தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையையும், முறைசாராத் தொழிலாளர்களின் சமூக, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடு, ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சனைகளைக் களைந்திடு உட்பட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இப் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாளும் ஏற்றப்பட்டுவரும் பொருளாதாரச் சுமை களின் காரணமாக கடும் வேதனைக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பெரும் பான்மை மக்களுக்கு ஓரளவிற்காவது நிவா ரணம் கிடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டே இக்கோரிக்கைகள் அனைத் துமே உருவாக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்தின் இரண்டா வது நாள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இக்கூட்டத்தொடரின்போது நாடாளு மன்றம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் லோக்பால் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவுகள், நீதிபதி வர்மா குழு அறிக்கையை சட்டமாக மாற்றுதல் போன்ற பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆயினும், பட்ஜெட் சம்பந்தமாக முன்மொழிவு களை நிறைவேற்றுவது என்பதுதான் பிர தான நிகழ்ச்சி நிரலாகும். பொருளாதார மந்தம் மிகவும் மோசமாக உள்ள சூழ்நிலையின் பின்னணியில் இந்த ஆண்டு பட்ஜெட் முன்மொழிவுகள் வருகின் றன. சென்ற நிதியாண்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 5 விழுக்காடு என்கிற மத்திய புள்ளியியல் அமைப்பின் மதிப்பீட்டை நிதியமைச்சகம் மறுத்த போதிலும், மேற்படி புள்ளியியல் அமைப்பின் மதிப்பீடே உண்மைக்கு மிக நெருக்கமான ஒன்று என்பது எதார்த்தமாகும். தொழில் உற்பத்தி சென்ற டிசம்பரில் 0.6 விழுக்காடு அளவிற்குச் சுருங்கிவிட்டது. இதேபோன்றுதான் சென்ற நவம்பரிலும் இருந்தது. 2012 ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் தொழில் உற்பத்தி வெறும் 0.7 விழுக்காடு அளவிற்கே அதிகரித்திருக்கிறது. ஆனால் சென்ற ஆண்டு இது 3.7 விழுக்காடாக இருந் ததுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் வீழ்ச்சியின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், நம்முடைய அட்டவணையில் 75 விழுக்காடு அளவிற்கு இருக்கின்ற உற்பத்தித் துறை யானது, டிசம்பரில் 0.7 விழுக்காடு வீழ்ச் சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் விளை வாக வேலையில்லாத் திண்டாட்டமும் அதி கரித்துள்ளது. 2013 ஜனவரியில் உணவுப் பணவீக்கத்தின் அளவு 10.8 விழுக்காடு அள விற்கு இருந்ததுடன், நாளும் உயரும் விலை வாசியும் இத்துடன் இணைந்து கொள்கிறது. காய்கறிகளின் விலைகள் 26 விழுக்காடு விகிதத்தில் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இதேபோன்று சமையல் எண்ணெய் 15 விழுக்காடு, கறி/மீன்/முட்டைகள் 14 விழுக்காடு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் 15 விழுக்காடு, சர்க்கரை 13 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. வரவிருக்கும் பட் ஜெட் இவ்வாறு நாளும் அதிகரித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து ஓரளவிற்காவது நிவாரணம் அளித்திடக்கூடிய வகையில் அமையக்கூடும் என்று மக்கள் எதிர்பார்ப்பது இயற்கையே. நடைபெற்ற தொழிலாளர் வர்க் கத்தின் இரு நாட்கள் வேலைநிறுத்தம் அர சாங்கத்திடம் துல்லியமாகக் கோருவதும் இதுவேயாகும்.
ஆயினும், அரசாங்கத்தின் நடவடிக்கை களை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, மக் களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய விதத்தில்தான் அதன் நடவடிக்கை கள் இருக்கும்போன்றே தோன்றுகிறது. மக் களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் அது இருக்கும் போல் தெரியவில்லை. நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டப்போகிறோம் என்ற பெயரில், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மாதந் தோறும் உயர்த்திடவும், ஏழைகளுக்கு அளிக் கப்பட்டு வந்த மானியஙகளைப் பெரிய அள வில் குறைத்திடவும் நடவடிக்கை எடுக்க இருப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே குறிப்பாகக் கூறிவிட்டது. தன்னுடைய பணக் காரர் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக, பணக்காரர்களுக்கும் இந்திய கார்ப்ப ரேட்டுகளுக்கும் மிகப்பெரிய அளவில் அளித்து வரும் வரிச்சலுகைகள் தொடரும் என்பதைக் குறிப்பாகத் தெரிவித்துவிட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரசாங்கத் திற்குத் தற்போது இருந்து வரும் நிதிப்பற் றாக்குறைத் தொகையை விட அதிகமான அளவிற்கு, அதாவது 6000 கோடி ரூபாய் அள விற்கு, வரிச் சலுகைகளை அளித்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகள் இயல்பாகவே இந் திய மக்களின் வயிற்றில் அடித்து, சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஆதரவாகச் செயல் படுகின்றன. இதன் விளைவாகத்தான், அதிகாரவர்க்கச் சிந்தனை என்பது சர்வதேச நிதிமூலதனத்தைக் கவர்வதன் மூலம் வளர்ச் சியைப் பெருக்கிடலாம் என்று கருதி, அதற் கேற்ற வகையில் ஆலோசனைகளை வழங் குவதுபோல் தோன்றுகிறது. மேலும், பட்ஜெட்டானது,தொடர்ந்து இருந்துவரும் உலக நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதையும் பிரதி பலித்தாக வேண்டும். 2013ஆம் ஆண்டிற் கான உலக அளவிலான வேலைவாய்ப்புகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தனி அறிக்கை ஒன்று ‘‘உலக நிதி நெருக்கடி ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகி யுள்ள நிலையில், உலக வளர்ச்சி விகிதம் என்பது தொடர்ந்து மந்த நிலையில் இருப்ப தாகவும், வேலைவாய்ப்பின்மை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருப்ப தாகவும்’’ குறிப்பிட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டுவாக்கில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாது இருப்பார்கள் என்றும், கூடுதலாக 10 கோடி பேர் இருக்கும் வேலை களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மதிப்பிட்டிருக்கிறது. தற்சமயம் 35 விழுக் காட்டிற்கும் மேலான இளைஞர்கள் எவ்வித வேலையும் கிடைக்காது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது என்பது வருமான வளர்ச்சிவிகிதத்தின் மீது நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தி இருப்பதும் (இந்தியா வைப் பொறுத்தவரை பணவீக்கமும் சேர்ந்து) உண்மை ஊதியத்தைக் கடுமையாகக் கீழிறக்கிட நிர்ப்பந்தித்து வருவதாகவும்’’ அந்த அறிக்கையின் முடிவில் கூறப்பட் டிருக்கிறது. இவற்றின் காரணமாக, மக் களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளா தார நடவடிக்கைகளின் வேகமும் கணிச மான அளவிற்குக் குறைந்துகொண்டே செல் கிறது என்றும் அது கூறுகிறது.மக்களின் தேவைகளுக்கு முட்டுக் கொடுத்து அவர்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, உலக முத லாளித்துவமானது தன்னுடைய நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு மேற்கொண்டிடும் நட வடிக்கைகள் புதியதொரு நெருக்கடியை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாங் கும் சக்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்திருப் பதிலிருந்து மீள்வதற்காக அது அவர்களுக்கு மிகவும் எளிய தவணைகளில் கடன்கள் கொடுப்பதன் மூலம் சரி செய்துகொள்ளலாம் என்று கருதியது. இந்தக் கடன்களை இவர் களால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், உலகப் பொருளாதார மந் தத்துடன் நெருக்கடியின் இரண்டாவது கட் டம் தொடங்குகிறது. இந்நெருக்கடியி லிருந்தும் மீள்வதற்காக, நெருக்கடியை இவ் வாறு உருவாக்கிய உலக நிதி ஜாம்ப வான்களுக்கு, அவர்கள் இருக்கின்ற நாடு களில் உள்ள அரசுகள் அவர்களின் திவால் தன்மையைத் தங்கள் திவால் தன்மையாக மாற்றிக்கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளித்துக் காப்பாற்றியுள்ளன. இது நெருக் கடியின் மூன்றாவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. கார்ப்பரேட் திவால்தன்மைகள் அந்தந்த (வளர்ச்சியடைந்த முதலாளித்துவ) நாடுகளில் உள்ள அரசுகளின் திவால் தன் மைகளாக மாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அரசாங்கங்கள் தங்கள் செல வினங்களைக் குறைப்பதற்காக, இந்நாடு களில் பல ‘‘சிக்கன நடவடிக்கைகள்என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கிவந்த நிதிஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்தன. இது மக்களின் வாங்கும் சக் தியை மேலும் சுருக்கி, அதனை அடுத்து, வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் மந்த நிலைமையை உருவாக்கி நெருக்கடியின் நான்காவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. லண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டி யன்நாளேடு, பிரிட்டனில் கடந்த 70 ஆண்டு காலமாக இருந்து வந்த மக்கள் நலஅரசு இறந்துவிட்டது என்று கூறி ‘‘மரண அறிவிப்புஒன்றை சமீபத்தில் வெளியிட் டிருந்தது. அன்றைய இதழில், ‘‘இரங்கல் குறிப்புகளுக்குப் பதிலாக, தி கார்டியன் கடிதப்பக்கத்தில் சிறப்பு வெளியீடு’’ வெளி யிட்டிருந்தது.நெருக்கடியின் ஐந்தாவது கட்டம் தற் போது நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா தற்சமயம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதன் தற் போதைய கடன் என்பது அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். இவ் வாறு உலகப் பொருளாதாரம் தன்னுடைய நெருக்கடிக் கட்டங்களுக்குள் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது.இந்தப் பின்னணியில், இந்தியப் பொரு ளாதாரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பெரிய அளவில் விரிவாக்கு வதில் கவனம் செலுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கு பொது முதலீடுகளைக் குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்திட வேண்டும். அதன் மூலமாக பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
அதன் விளைவாக உள்நாட்டுத் தேவைகளும் பெரிய அள விற்குப் பெருகிடும். இன்றைய உலகப் பொரு ளாதார நெருக்கடி சூழ்நிலையில் இதிலி ருந்து உய்வதற்கு இது ஒன்றே வழியாகும்.இவ்வாறு பொது முதலீடுகளை அதிகப் படுத்துவதற்கான வளங்களுக்கு நமக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உயர் மட்ட ஊழல் களை ஒழித்துக்கட்டினோமானால், பணக் காரர்களுக்கு அளித்துவரும் வரிச்சலுகை களை நிறுத்தினோமானால் இது ஒன்றும் கடினமான வேலையே அல்ல. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நம் நாட்டின் வளங்களை பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தி, நம் பொருளாதாரத்தை ஒரு வலுவான நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும், நம் மக் களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்திட முடியும்.பெரும்பான்மையான நாட்டு மக்களின் நலன்களைக் காத்திட வேண்டுமானால் பட் ஜெட் இத்தகைய திசை வழியில் அமைந்திட வேண்டும். அவ்வாறில்லையெனில், எதிர் வருங்காலங்களில் மக்களின் மகத்தான போராட்டங்களை எதிர்கொள்ள ஆளும் வர்க் கங்கள் தயாராகட்டும் என்று எச்சரிக்கிறோம். 
(தமிழில்: ச.வீரமணி)