Monday, November 28, 2011

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன்."--நீதியரசர் மார்கண்டே கட்ஜு

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன். ஊடகங்கள் மீதான என் விமர்சனம் அவை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.’’

நான் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அளித்துள்ள பேட்டிகளிலும், பல்வேறு செய்தித்தாள்களில் எழுதியுள்ள கட்டுரைகளிலும் ஊடகங்கள் குறித்த என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆயினும், ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட நான் கூறியவற்றில் சில பிரச்சனைகள் குறித்து மேலும் தெளிவுபடுத்துமாறும் சில பிரச்சனைகள் குறித்து மேலும் விளக்கமாகக்கூறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் கூறியவை குறித்து சிலர் கருத்துமாறுபாடு கொண்டிப்பதால், அவை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இன்றைய இந்தியா நம்முடைய வரலாற்றில் ஓர் இடைமாற்றக் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இடைமாற்றம் என்பது நிலப்பிரபுத்துவ வேளாண் சமூகத்திலிருந்து நவீன தொழில்மய சமூகத்தை நோக்கிய திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிகவும் வலிதரக்கூடிய வேதனைமிகுந்த கால கட்டமாகும். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் அடியோடழிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆயினும் புதிய நவீன தொழில்மய சமூகம் இன்னமும் முழுமையாகவும் உறுதியாகவும் நிறுவப்பட வில்லை. பழைய நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் புதிய நவீன சிந்தனைகள் அதன் இடத்தில் இன்னமும் சரியாக அமர்த்தப்படவில்லை. அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் மேக்பெத்தில் கூறியதைப்போல், ‘‘அழகு அசிங்கமாகிறது, அசிங்கம் அழகாகிறது.’’ (‘‘Fair is foul and foul is fair’’).
ஐரோப்பிய வரலாற்றைப் படிக்கும் எவரொருவரும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை, நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன சமூகமாக மாறிய இடைமாற்றக் காலத்தில், மிகுந்த கொந்தளிப்பு, குழப்பம், யுத்தங்கள், புரட்சிகள், தாறுமாறான ஒழுங்கற்ற நிலை, சமூகத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், அறிவுஜீவிகள் மத்தியில் மிகுந்த கிளர்ச்சிநிலை முதலானவைகள் இருந்ததை உணர முடியும். இவ்வாறு ஏராளமான மாற்றங்கள் நடைபெற்ற பின்னர்தான் ஐரோப்பாவில் நவீன சமூகம் உருவானது. அதுபோன்றதொரு கொந்தளிப்பு நிலை தற்போது இந்தியாவில் இருக்கிறது. நம்முடைய நாட்டின் வரலாற்றில் அத்தகைய மிகவும் வலியும் வேதனையும் அளிக்கக்கூடிய காலகட்டத்தினூடே நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக இதுபோன்றதொரு நிலை அடுத்து 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். இந்த இடைமாற்றமானது மக்களுக்கு எவ்விதமான வலியையோ வேதனையையோ அளிக்காது உடனடியாக நடைபெற வேண்டும் என்று நாம் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக கடந்தகால வரலாறு அப்படி இருந்ததில்லை என்பதே எதார்த்த உண்மை.
இப்படிப்பட்ட இடைமாற்றக் காலத்தில் மனிதர்களின் சிந்தனைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. எனவே இவ்வாறு மனிதர்களின் சிந்தனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகங்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சிந்தனைகள் பௌதீக சக்தியாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்னும் சிந்தனைகளும் மதச் சுதந்திரம் (மதச்சார்பின்மை) என்னும் சிந்தனையும் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் வலுவான பௌதீக சக்திகளாக மாறின. இவ்வாறான இடைமாற்றக் காலத்தின்போது, ஐரோப்பாவில் ஊடகங்கள் (அப்போது ஊடகங்கள் என்றால் பத்திரிகைகள் மட்டுமே) நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவை நவீன ஐரோப்பாவாக மாற்றியதில் மாபெரும் அளவில் வரலாற்றுப் பங்களிப்பினை ஆற்றின.
என்னுடைய அபிப்பிராயமானது, இதேபோன்று முற்போக்கானதொரு பங்களிப்பினை இந்திய ஊடகங்களும் ஆற்றிட வேண்டும் என்பதேயாகும். சாதீயம், வகுப்புவாதம், மூடநம்பிக்கைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற பிற்போக்கான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமும், நவீன, பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதன் மூலமுமே இவற்றைச் செய்திட முடியும். ஒரு காலத்தில் நம் ஊடகங்கள் நம் வரலாற்றில் மாபெரும் பங்களிப்பினைப் புரிந்துள்ளன.
இந்திய ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஒலி-ஒளி ஊடகங்கள் இத்தகைய முற்போக்கான மற்றும் சமூகத்தின் பொறுப்பான பங்களிப்பினைச் செய்யவில்லை என்று நான் விமர்சித்ததை அடுத்து, அவ்வூடகங்களில் ஒரு பிரிவினரால் மிகவும் ஆவேசமாக நான் தாக்கப்பட்டேன். நான் அரசாங்கத்தின் ஏஜண்டாகச் செயல்படுவதாக தனிப்பட்ட முறையில் கூட ஒருசில ஊடகங்கள் என்னைத் தாக்கின. ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து அக்கறையுடன் சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோது, அவை அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஊடகங்களை விமர்சித்ததன் மூலம் அவை தங்கள் செயல்பாட்டின் தன்மைகளை மாற்றிக்கொள்ள அவை தூண்டலாம் என்றுதான் நான் கருதினேனேயொழிய, மாறாக அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் அதைச் செய்யவில்லை. இடைமாற்றக்காலத்தில் இந்திய ஊடகங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியான பங்களிப்பு இருக்கிறது. இத்தகைய வரலாற்றுக் கடமையை ஊடக நண்பர்களுக்கு நான் நினைவு படுத்த விரும்பினேன். என்னுடைய விமர்சனத்தைச் சரியான உணர்வுடன் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருசில ஊடகங்கள் எனக்கெதிராக வசைமாரி பொழியத் தொடங்கியுள்ளன. என்னை சர்வாதிகார அரக்கன் என்பதுபோலக்கூட சில குறிப்பிட்டுள்ளன.
ஊடகங்கள் என்னை அவற்றின் மீது அக்கறை கொண்ட நண்பனாகவே கருத வேண்டும். நான் அவர்களை விமர்சித்தேன். ஏனெனில், அவை தங்களுடைய பலவிதமான குறைபாடுகளைக் கைவிட்டு, இன்றைக்கும் இந்திய மக்களின் மதிப்பினைப் பெற்றுள்ள ஐரோப்பிய பத்திரிகைகள் போன்று, செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நம் நாட்டின் மக்கள் தொதகையில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் இருக்கிறதென்றும், விலைவாசிகள் விண்ணைநோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்றும், மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைத்திட வில்லை என்றும் நான் குறிப்பிட்டேன். அதேபோன்று கவுரவக் கொலைகள், வரதட்சணைச் சாவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வெறித்தனமான மூட மத நம்பிக்கைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற ஆழமான பிரச்சனைகள் குறித்து எதுவும் கூறாது, இந்திய ஊடகங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்கு வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, சினிமா நடிகர்களின் வாழ்க்கை, ஃபேஷன் அணிவகுப்புகள், பாப் மியூசிக், டிஸ்கோ நடனங்கள், கிரிக்கெட் அல்லது ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் நிகழ்ச்சிகளைக் காட்டுகின்றன என்று விமர்சித்திருந்தேன்.
ஊடகங்கள் மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டவேண்டும்தான். ஆனால் அவை தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்குப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஒதுக்கிவிட்டு, வெறும் 10 விழுக்காடு அளவு மட்டும் சமூகப் பொருளதார அம்சங்களுக்கு ஒதுக்குகின்றன. மக்களின் உண்மையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறாது மேலே கூறியவாறு மக்களுக்குச் சம்பந்தம் இல்லாத சினிமா நடிகர்களின் வாழ்க்கை, டிஸ்கோ நடனங்கள் போன்ற விஷயங்கள் மீது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. இவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தராததற்காகவும், மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காகவும் தான் நான் ஊடகங்களை விமர்சித்தேன்.
எவரொருவரும் விமர்சனத்தைக்கண்டு அஞ்சக் கூடாது. அதேபோன்று அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சினங்கொள்ளவும் கூடாது. மக்கள் என்னை அவர்கள் விரும்பும் அளவிற்கு விமர்சிக்கலாம். நான் அதற்காகக் கிஞ்சிற்றும் சினங்கொள்ள மாட்டேன். உண்மையில் அதன் மூலம் நான் பயனடைவேன்.
உண்மையில் எப்போதும் நான் ஒரு சுதந்திரப் பற்றாளனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் வேண்டுமென்று விரும்புவோர் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நான் நீதிபதியாக இருந்த காலத்தில் அளித்திட்ட தீர்ப்புகளைக் கண்ணுற்றால் தெரிந்து கொள்ளலாம். நீதிபதிகள் என்போர் மக்களின் சுதந்திரத்தைக் காப்பவர்கள் என்றும், இதனை உயர்த்திப்பிடிக்க நீதிபதிகள் தவறுவார்களானால் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து நழுவியவராவார்கள் என்றும் பல முறை நான் என் தீர்ப்புகளில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயினும் சுதந்திரம் என்பது எவரொருவரும் தாங்கள் விரும்பிய எதனையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து சுதந்திரங்களும் பொது நலன் மற்றும் பொறுப்புக்களுக்குக் குந்தகம் விளைவிக்காதவாறு தேவையான சில கட்டுப்பாடுகளையும் கொண்டவைகளாகும்.
இதன் அடிப்படையில் சுய முறைப்படுத்தல் (self regulation) குறித்து இப்போது நாம் விவாதிக்கலாம்.
தற்சமயம தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் நிகழ்ச்சிக்ளை முறைப்படுத்தக்கூடிய விதத்தில் எவ்விதமான அதிகாரக் குழுமமும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்திய பிர° கவுன்சில் பத்திரிகைகள் மீது மட்டுமே ஆளுகை செலுத்த முடியும். இதிலும் பத்திரிகையாளர் எவரும் தங்கள் பத்திரிகை தர்மத்தை மீறி செயல்பட்டார் என்று மெய்ப்பிக்கப்படுவாரானால் இந்திய பிர ஸ்
கவுன்சில் அவருக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை என்பது என்ன தெரியுமா? மன்னித்தல் (admonition)அல்லது கண்டனம் (censure) என்பது மட்டுமே. இந்திய பிரஸ்
கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களையயும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
பிரஸ் கவுன்சிலின் கீழ் கொண்டுவரப்படுவதை தொலைக்காட்சி - வானொலி ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. எங்களை நாங்களே சுயமாக முறைப்படுத்திக் கொள்வோம் என்று அவை கூறுகின்றன. நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட அத்தகைய உரிமைகள் கிடையாது. அவர்கள் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு. வழக்குரைஞர்களைக் கட்டுப்படுத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் இருக்கிறது. மருத்துவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் கீழ் வருகிறார்கள். இதேபோன்று நாட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு அமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார்கள். எலக்ட்ரானிக் ஊடகவியலாளர்கள் மட்டும் இவ்வாறு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்கள்.
உண்மையில் சுய முறைப்படுத்தல் என்று எதுவும் கிடையாது. அது ஒரு முரண்தொடையாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். இதற்கு ஊடகங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
(நன்றி: தி இந்து நாளிதழ், 16.11.11.)
(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 25, 2011

மக்களின் அவலவாழ்வைக் காண மறுத்து கண்ணை மூடிக்கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:

அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையான முறையில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையானது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே அதனை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. இது புரிந்துகொள்ளக்கூடியதேயாகும். உணவுப் பணவீக்கம் தற்போது 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. காய்கறிகள் 26 விழுக்காடும், தானியங்கள் 14 விழுக்காடும், பழங்கள் 12 விழுக்காடும், முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகள் 13 விழுக்காடும், பால் 12 விழுக்காடும் உயர்ந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சென்ற இரு கூட்டத் தொடர்களின்போதும், சாமானிய மக்களை வாட்டி வதைத்திடும் இவ்விலைவாசிப் பிரச்சனையே பிரதானமான ஒன்றாக முன்னுக்கு வந்தது. இப்போதும் அது தொடர்கிறது. இக்கூட்டத் தொடர்களின்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சீர்குலைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், விலைவாசி உயர்வுக்கு எதிராக அவைத் தலைவரே தீர்மானம் கொண்டுவருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒப்புக் கொண்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் நடைபெற்று, ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து சாமானிய மக்களைக் காப்பாற்றிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்’’ என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும், சாமானியர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்திட வில்லை. மாறாக, நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போதும்கூட இப்பிரச்சனையே பிரதானமாக முன்னுக்கு வந்ததும் இயற்கையே. அப்போது அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஒரு வரைவு தீர்மானத்தை உருவாக்கி, பாஜக சார்பில் அதனை அவையில் முன்மொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கை எது குறித்தும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்ற சமயத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கைகளைத் தெரிவித்து அவற்றை தீர்மானத்தில் திருத்தங்களாக கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி, இரு அவைகளிலும் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு குறித்து ஆழமான முறையில் விவாதங்கள் நடத்திட அரசாங்கம் தயாராக இல்லாமல் மிகவும் தடித்தனமான அணுகுமுறையையே அப்போது கடைப்பிடித்தது.
இப்போதும் இக்குளிர்காலக் கூட்டத் தொடரின்போதும் விலைவாசி உயர்வு தொடர்பாக அதே மாதிரியே சொரணையற்றமுறையில் நடந்து கொள்ள அரசாங்கம் முன் வந்திருக்கிறது. இதற்காக அரசாங்கம் ஒரு பதினொரு பக்க அறிக்கையை இரு அவைகளிலும் நிதியமைச்சர் மூலமாகத் தாக்கல் செய்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனெனில் எகிறும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ளப்படவேண்டிய துல்லியமான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்திடக் கூடிய வகையில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை. எனவேதான், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தக்கூடிய விதத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்திருக்கிறது. இவ்வாறு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடவும், மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்திடவும் சில துல்லியமான நடவடிக்கைகளை அறிவித்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு, நாட்டின் பெரும்பான்மை மக்களின் அவலநிலையைப் போக்கக்கூடிய விதத்தில் அரசாங்கத்தை உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வைத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இது, நாடாளுமன்றக்கூட்டத்தொடரை ஒரு நாள் முடக்கிட இட்டுச் சென்றது. அரசாங்கத்தின் பிடிவாதத்தைத் தகர்த்திட வேறு வழியில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதிபட இருக்கிறார்கள். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டத்தொடரின்போது, ஓராண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதைக் கட்டாயமாக்கி, அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஒரு திருத்தமே முன்மொழிந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் நன்கு செயல்பட்டு மக்களின் இறையாண்மை நிலைநிறுத்தப்பட, அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பையும் அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும் நிறைவேற்றிட இது அவசியம் என்று நாம் கருதுகிறோம். இதனால், அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிகமாகிறது. இவை அனைத்துமே நாடாளுமன்றம் போதுமான கால அளவிற்கு முறையாகச் செயல்பட்டால்தான் உத்தரவாதம் செய்திட முடியும்.
ஆயினும், இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, சாமானியர்களின் ஆழமான பிரச்சனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்திலும், நாள்தோறும் எகிறும் விலைவாசி உயர்வால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அவர்களின் துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்குளிர்காலக் கூட்டத்தொடருக்கு தன் உத்திகளை வகுத்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றால் அதன் மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திட்ட பரிந்துரைகளில் குறைந்தபட்சம் மூன்றை ஏற்றுக்கொள்வதற்குப் பரிசீலனை செய்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும்.
முதலாவதாக, விவசாயப் பண்டங்கள் மீதான ஊக வர்த்தகத்தை உடனடியாகத் தடை செய்தல். ஊக வர்த்தகம்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை பன்மடங்கு அதிகரித்திடக் காரணம் என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் விளக்கி இருக்கிறோம். விவசாயப் பண்டங்கள் மீது ஊக வர்த்தகம் அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இப்பண்டங்களின் கடும் விலை உயர்வுக்குக் காரணமாகும். எனவே இதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் நிறுத்தியாவது வைத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய மறுத்து அதன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் ஈட்டிட ஊக வர்த்தக சூதாடிகளுக்கு வசதி செய்து தருகிறது.
இரண்டாவதாக, சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீளவும் பழைய நிலைக்கே குறைப்பது அவசியம். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்து, அது பணவீக்கத்திற்கும் இட்டுச் செல்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் ‘‘நட்டங்கள்’’ அடைந்திருப்பதால் இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அவசியம் என்கிற வாதம் முற்றிலும் குதர்க்கமான ஒன்றாகும். எதார்த்தத்தில், நம் பெரிய எண்ணெய் நிறுவனம் எதுவும் நட்டம் எதுவும் அடைந்திடவில்லை. 2010 மார்ச் 31ஆம் நாளன்று நிறைவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாய்களாகும். மேலும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOC) தன்னுடைய இருப்பு வருவாய் உபரியாக 49 ஆயிரத்து 472 கோடி ரூபாய்கள் வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் பொதுத்துறையின் கீழ் இயங்கும் மற்ற இரு எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனும்கூட முறையே 544 கோடி, 834 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டியிருக்கின்றன.
மேலும், இந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக அரசாங்கம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக ஈட்டியிருக்கிறது. பட்ஜெட்டில் அரசாங்கம் மான்யத்திற்கு என்று ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும். இவ்வாறு அரசாங்கமானது 90 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மக்களின் வயிற்றிலடித்து லாபம் ஈட்டியிருக்கிறது.
மூன்றாவதாக, பொது விநியோக முறை மூலமாக வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு அரசின் மத்திய உணவுக் கிடங்குகளில் அழுகி வீணாகிக் கொண்டிருக்கும் உணவு தான்யங்களை விநியோகித்திட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இது உணவுப் பொருள்களின் விலை உயர்வை மட்டுப்படுத்திட உதவும். தற்சமயம், அரசாங்கக் கிடங்குகளில் சுமார் 600 லட்சம் டன்கள் உணவு தான்யங்கள் இருப்பில் இருக்கின்றன. இது, இருக்க வேண்டிய இருப்பின் கொள்ளளவைப்போல சுமார் இரண்டரை மடங்காகும்.ஆயினும், ஐமுகூ-2 அரசாங்கம் இதனை மக்களுக்கு விநியோகித்திட நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.
குறைந்தபட்சம் இம்மூன்று நடவடிக்கைகளையும் எடுப்பதற்குப் பதிலாக, நிதியமைச்சரின் அறிக்கையானது ‘‘பணவீக்க நிலைமை இந்தியாவில் சரியாகிக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டதால்தான் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்கிற ரீதியிலும் நிதியமைச்சர் விசித்திரமான விதத்தில் பேசியிருக்கிறார். இவ்வாறு இவர் பேசும் அதே சமயத்தில்தான் திட்டக் கமிஷன், கிராமப்புறங்களில் 8 விழுக்காடு அளவிற்கும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடு அளவிற்கும் மக்கள் உணவு தான்யங்கள் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவது வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசாங்கமே அமைத்திட்ட ஆணையங்கள் நாட்டு மக்களில் சுமார் 80 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அதே சமயத்தில்தான் நிதியமைச்சர் இவ்வாறு சரடு விட்டுக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக, ஒன்று அரசாங்கம் மக்களின் வாழ்நிலையைப் பார்க்காது கண்ணை மூடிக்கொண்டு குருடாக இருக்க வேண்டும் அல்லது விலைவாசியை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதை நியாயப்படுத்துவதற்காக நாட்டைத் திசை திருப்ப வேண்டும்.
எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கத்தை மேலே கூறிய மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்திட அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளிக்கக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்திற்குள்ளே போராட்டம் நடத்தக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட முடிவெடுத்துள்ளது.
(தமிழில்: ச.வீரமணி)

Sunday, May 29, 2011

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மக்கள் மீது சுமைகள் ஏறும்! -சீத்தாராம் யெச்சூரிஎம்.பி.,

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அர சாங்கம் ஈராண்டு நிறைவுபெற்றதை அடுத்து, அதை அனுசரிக்கும் விதத்தில் பிரதமரால் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சியும், அப்போது பிரதமர் உரை நிகழ்த்தி ‘மக்களுக்கு அறிக்கை’ ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற சமயங்களில் சம்பிரதாயரீதி யாகப் புகைப்படங்கள் எடுக்கப்படும். இப் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன், சென்ற ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட் டுப் பார்த்தோமானால், சில வித்தியாசங்கள் பளிச்செனத் தெரியும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தில் இல்லை. அதேபோன்று ஐ.மு.கூட்டணி யில் அங்கம் வகிக்கக்கூடிய லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சியினரும் காணப்படவில்லை. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுகவின் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப் பினருமான கனிமொழி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திமுகவின் அனைத்து அமைச்சர்க ளும் காணப்படவில்லை. டி.ஆர். பாலு மட்டும் திமுகவைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் பெயரளவில் விருந்தில் கலந்து கொண்டார். அதேபோன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் - ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கத்தின்போது அங்கம் வகித்தவர்கள் - இப் போது காணப்படவில்லை. ஐ.மு.கூட்டணி1 அரசாங்கத்தில் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இப் போதும் ஆஜராகி இருந்தார்கள்.

ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் தன்னிச் சையாக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அந்த ஆட் சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நம்பிக் கைக் கோரும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எப்படி அது நடந்து கொண்டதோ அதேபோன்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இப்போதும் மிகவும் இழி வான முறையில் நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேரம் பேசி எப்படியோ தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆறாண்டு காலம் ஆட்சியிலி ருந்த காலத்தில் அரிக்கப்பட்டுக் கொண்டும் சிதைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், நாட்டின் பொது அமைப்புகளின் மதச் சார்பற்ற ஜனநா யக உள்ளடக்கத்தையும் பாதுகாத்திட வேண் டும் என்பதன் தேவையை உணர்ந்துதான் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் அமைக்கப்பட் டது. அப்போது ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத் தின் சார்பில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது. “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யானது ஓர் ஊழலற்ற, வெளிப்படையான மற் றும் மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய தொரு அரசாங்கத்தை அளிப்பதற்கும், மக்க ளுக்கு மிகவும் பொறுப்புடனும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகை யிலும் நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் உறுதி எடுத்துக் கொள்கிறது,” என்பதே அந்த உறுதி மொழியாகும். மேலும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு அடிப் படையாக அமைந்த ஒரு குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தையும் அது ஏற்றுக் கொண்டது.

ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் நிறைவேற்று வதாகக் கூறி எடுத்துக்கொண்ட உறுதிமொழி யையும், உள்ளடக்கத்தையும் ஐ.மு.கூட் டணி-2 அர சாங்கமானது இவ்வாறு திட்ட மிட்டமுறையில் இடித்துத் தள்ளிக்கொண்டி ருக்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எவ்விதத் தங்குதடையு மின்றி அமல்படுத்த வேண்டும் என்பதற்காக வும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாக மாற்ற வேண் டும் என்பதற்காகவும், ‘‘ஆம் ஆத்மி’’ (சாமா னியர்களு)க்காகவே தாங்கள் இருக்கிறோம் என்ற பாசாங்கினைக் கூட அது கைவிடத் தொடங்கிவிட்டது.

ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்திலே யேகூட, ஆம் ஆத்மியின் நலன்களை முன் னேற்றுவதற்காக, அரசாங்கம் தான் அளித் திட்ட உறுதிமொழியையும், குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டத்தையும் படிப்படியாகக் கைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல் லாமல், ஒருதலைப்பட்சமாக இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறப்படாதவற்றையும் மேற்கொண்டது. இதன் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய கேந் திரக் கூட்டாளியாக சேர்ந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை இவ்வாறு நம்பிக் கைத் துரோகம் செய்ததன் மூலம், இடதுசாரிக் கட்சிகள் எதன் அடிப்படையில் அதற்கு ஆத ரவு அளித்து வந்ததோ, அதை அவர்கள் மறு தலித்ததன் காரணமாக, வேறு வழியின்றி தங் கள் ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அதேபோன்று, அரசாங்கம் தான் அளித்திட்ட உறுதிமொழிகள் அனைத்தை யும் கைவிட்டதை அனைவரும் பார்க்கத்தான் செய்தனர்.

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் கடந்த ஈராண்டு கால ஆட்சியில், நாட்டையும் நாட்டு மக்க ளையும் பீடித்திருக்கிற இரு முக்கிய கொள் ளைநோய்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வும், மாபெ ரும் ஊழல்களுமாகும். இவ்விரண்டு நோய்க ளும் நாட்டின் ரத்த நாளங்களையே கடுமை யாக அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமையில், பிரதமரின் உரை யில், விலைவாசி உயர்வின் காரணமாக மக் கள் படும் துன்பங்களைக் களைவது குறித்து சம்பிரதாயமான முறையில் கூட எதுவும் இல் லை. மாறாக, விலைவாசி உயர்வை நியாயப் படுத்தக்கூடிய விதத்தில், எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று விளக்கமளித்திருக்கிறார். விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திற னை அதிகரிக்க வேண்டியதன் அவசியத் தை அவர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவற் றை எவ்வாறு அரசு நிறைவேற்றப்போகிறது என்பது குறித்து எவ்வித உருப்படியான திட்ட மும் முன்வைக்கப்படவில்லை. இதுவரை யில், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு முக்கியமான காரண மாகவுள்ள, ஊக வர்த்தகத்தை தடை செய் திட அரசாங்கம் மறுத்து வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் காமன் வெல்த் விளையாட்டுக்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மேம்போக்காகப் போகிற போக்கில் பிரதமர் குறிப்பிட்டிருந்தாலும், அவ ரது பேச்சின் தொனி மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு திருப்தி மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். எது தேவை என நினைத் தார்களோ அதனைச் செய்துவிட்டார்களாம். “சட்டம் தன் கடமையைச் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெறா வண்ணம் தடுத்திடவும், அதிகாரிகள் தங்கள்இஷ்டத் திற்குச் செயல்படுவதைக் குறைத்திடவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன,” என்று கூறியிருக்கிறார். ஆயினும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெ னில், ஆட்சியாளர்கள், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்திட்ட பல லட்சம் கோடி ரூபாய்களையும் அவர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பயன்படுத்துவது தொடர்பானதாகும். இது குறித்து எதுவுமே கூறாது பிரதமர் அமைதி காத்திருக்கிறார்.

பிரதமர், எதிர்பார்த்ததுபோலவே, கடந்த ஈராண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதை, ‘‘வரலாற்றுச் சாதனை’’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். ‘‘நாம் தேசிய அளவில் ‘உள்ளார்ந்த வளர்ச்சி’, சர்வதேச அளவில் ‘உள் ளார்ந்த உலகமயம்’ என் னும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகி றோம். அதன் மூலம், இல்லாதவர்கள் பயன டைவார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாத வர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்திடும்,” என்று கூறியிருக்கிறார்.

இதைவிடக் கொடூரமான ஜோக் வேறெது வும் இருக்க முடியாது. கடந்த ஈராண்டுகளில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52ஆக உயர்ந்தது. தற்சமயம் மேலும் உயர்ந்து 69 ஆக மாறியிருக்கிறது. அவர்களின் ஒருங் கிணைந்த சொத்தின் மதிப்பு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) மூன் றில் ஒரு பங்காகும். அதே சமயத்தில் மறுபக் கத்தில், நம் நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர் அல்லது 80 கோடிக்கும் மேலான மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாது வாடிக்கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மிகவும் உள்ள ஏற்றத்தாழ்வு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டிருக்கிறதே யொழிய, பிரதமர் நம்மை நம்பச் சொல்வது போல் குறைந்திடவில்லை.

பிரதமர் நாட்டின் எதிர்காலத்திற்காகக் காட்டிடும் வரைபடம் மிகவும் கவலை அளிக் கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. “நமக்கு உடனடிச் சவாலாக இருப்பதென்பது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடும் அதே சமயத்தில் வளர்ச் சிக்கான செயல்முறைகளையும் தக்க வைத் துக்கொள்ள வேண்டியநிலையில் நாம் இருப் பதுதான்,’’ என்று பிரதமர் கூறுகிறார். இவ் வாறு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைப் பதற்கு, பிரதமர் பல்வேறு விதமான யோசனை களைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுவது, நாட்டின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருமானம் குறித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண் டும் என்பதாகும். கடந்த ஈராண்டுகளில் அர சுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்கிட, அரசு மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் நம் பொருளாதார வளர்ச்சியைத் தேவையான அளவு நிலைநிறுத்திட உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ‘‘நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறையை’’க் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நட வடிக்கைகள் குறித்துத் தற்போது பேசுகிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? அரசாங்கம் வருவாயைப் பெருக்குவதற்கான வேலைக ளில் இறங்கும் அதே சமயத்தில், செலவினங் களைக் குறைப்பதற்கான வேலைகளிலும் இறங்கிட வேண்டும் என்பதேயாகும். அதா வது மக்கள் நலத்திட்டங்களுக்காக சமூக நலத் துறைகளுக்குத் தற்போது ஒதுக்கப் பட்டுவரும் அற்பத் தொகைகள்கூட மேலும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட இருக்கிறது என்பதேயாகும். இன்னும் சரி யாகச் சொல்வதென்றால், நாட்டின் பெருவாரி யான மக்கள் மீது மேலும் அதிகமான சுமை களைச் அரசு சுமத்த இருக்கிறது என்பதே இதன் பொருளாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து உலக முதலாளித்துவம் எப்படித் தன்னைச் சரிப்படுத்திக்கொண்டதோ அதன் எதிரொலி தான் இது என்பது தெளிவு. பெருமுதலாளித் துவ நிதி நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வதற் காக தங்கள் நாடுகளில் உள்ள அரசுகளிடமி ருந்து பொருளாதார ஊக்குவிப்புத் தொகை களைப் பெற்று, நெருக்கடியிலிருந்து வெளி வந்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் அர சாங்கங்களும் மிகப்பெரிய அளவில் நிதி களைக் கடனாகப் பெற்றன. இவ்வாறு பெற்ற கடன்களைச் சரிசெய்வதற்காக, தங்கள் செல வினங்களைக் குறைத்து, தங்கள் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி யிருக்கின்றன. முதலாளித்துவத்தின் குணம் என்னவெனில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்களைச் சரிப்படுத் திக் கொண்டு வெளியேற, தங்கள் திவால்தன் மையை அரசின் திவால்தன்மையாக மாற்றி டுவது என்பதுதான். ஒட்டுமொத்த விளைவு, மக்களின் மீது தாங்கொணா சுமைகள் விழும். இவ்வாறு தங்கள் மீது விழுந்த தாக்குதல் களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் முழுவதி லும் மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யிருக்கின்றன.

இத்தகைய நடைமுறைகளைத்தான் இந்தியாவிலும் கொண்டுவரப் போவதாக பிரதமர் நினைவுபடுத்தி இருக்கிறார். ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தின் ஈராண்டு கால நிறைவு விழா, இவ்வாறு, மக்கள் கொண்டா டப்படக்கூடிய ஒன்றாக அமைந்திடவில் லை, மாறாக தங்கள் மீது மேலும் சுமைகள் விரைவில் விழப்போகின்றன என்று எச்சரிக் கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.

அரசாங்கம் இவ்வாறு முன்கூட்டி எச் சரிக்கை செய்திருப்பது, மக்கள் இதற்கு எதி ராகப் போராடுவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. தங்கள் மீது அரசு ஏற்றப்போகிற சுமைகளுக்கு எதிராக மக்கள் திரள் நடத்த இருக்கும் மகத்தான போராட்டங் களின் வலிமைதான், மக்கள் இதுவரைப் பெற் றிருக்கின்ற உரிமைகளைப் பாதுகாத்திடு வதையும், சிறந்ததோர் வாழ்க்கைக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் பெரிய அளவில் தீர்மானித்திடும்.

தமிழில்: ச.வீரமணி