Wednesday, December 24, 2014

மோடி அரசாங்கத்தின் பிடிவாதம்

நாடாளுமன்றத்தின் தற்போதைய முட்டுக்கட்டைக்கு, மாநிலங்களவைத் தொடர்ந்து நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு, மிகவும் சச்சரவுக்குரிய பிரச்சனைகள் மீது நாடாளுமன்றத்திற்கு மிகச்சிறிய அளவிற்கு உறுதி அளிக்கக்கூட பிடிவாதமான முறையில் மோடி அரசாங்கம் முன்வராததுதான் அடிப் படையான காரணமாகும்.இரு மிக முக்கியமான பிரச்சனைகள் அவையின் முன் விவாதத்திற்கு வந்துள்ளன. இரண்டு பிரச்சனைகளுமே ஒன்றுடன் மற்றொன்று பின்னிப்பிணைந்தவையாகும்.
முத லாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் நாட்டில் இயங்கும் அவற்றின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ் லிம்கள் மற்றும் கிறித்துவர்களை மிகப்பெரிய அளவில் மத மாற்றம் செய்துள்ள பிரச்சனை. இரண்டாவது, உலகம் முழுதும் கொண்டாடக் கூடிய கிறிஸ்துமஸ் நாளன்று, ஏ.பி. வாஜ்பாயின் பிறந்த நாளை, நல்லாட்சி நாளாக’’க் கொண்டாட வேண்டும் என்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பள்ளி களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் பிரச்சனையாகும். மோடி அரசாங்கத்தின் இம்முயற்சி ஆர்எஸ்எஸ்/பாஜகவகையறாக்கள் இந்தியாவை பாகிஸ்தான் போன்றே பார்க்கும் மதவெறிக் கண்ணோட்டத் தின் வெளிப்பாடேயாகும். பாகிஸ்தானில் டிசம்பர் 25 அன்று முகமது அலி ஜின்னா பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே விடுமுறைவிடப்படுகிறது. அங்கே கிறிஸ்துமஸ் என்பது இரண்டாம்பட்சம்தான். முன்பு, வாஜ்பாய் அரசாங்கம் போக்ரான்-2 மூலம் பாகிஸ்தானையும் அணுசக்தி நாடாக உயர்த்துவதற்கான அந்தஸ்தை அளித்தது. அதேபோன்று இந்தத் தடவை மோடி அரசாங்கம் டிசம்பர் 25 தேதியையும் அதேபோன்று மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில், வாஜ்பாயி நடவடிக்கை ஒரு சோகக்கதை யாக முடிந்தது என்றால்,.மோடியின் நடவடிக்கையோ எல்லோராலும் எள்ளி நகையாடக் கூடிய விதத்தில் நகைச்சுவை நாடகமாக மாறிப்போனது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அரசாங்கம் 56 அங்குலம்’’ அகலமாக இருக்கும் என்று பீற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் அது தன்னை பாகிஸ்தானுடன் இணைத்துப்பார்க் கும் விதத்தில் சுருங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நாம் இரண்டாவது பிரச்சனை யையும் எடுத்துக் கொள்வோம். டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையாக அல்ல,அதற்கு மாறாக நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகத்தின் சார்பில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட் டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி களை மாநிலங்களவையில் எழுப்பியபோது, மத்திய நிதி அமைச்சர் முதலில் அதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்கு உட் படுத்தினார்.
ஆனால் ஆதாரங்களைக் காட்டியபோது, இது நவோதயா பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும், அந்தப் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பவர் கள் (residential schools) என்பதால் மாண வர்களுக்கு விடுமுறையை மறுக்கும் பிரச் சனையே எழவில்லை என்றும் கூறி அரசாங்கம் பின்வாங்கியது. அப்போது,அனைத்துஅகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலுக்கும் (All India Institute of Technical Education) அரசாங்கத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த நாளன்று மாணவர்கள் பங்கேற்கக்கூடிய விதத்தில் பல் வேறு போட்டிகளை நடத்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை காட்டியபோது, அரசாங்கத் திடமிருந்து பதிலேதும் இல்லை.
மோடி அரசாங்கம் மதச் சிறுபான்மையினருக்கு எதி ரான நிகழ்ச்சிநிரலை மிகவும் வஞ்சகமாக முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டிருப்பதை நாடாளுமன்றத்தில் இன்னமும் முழுமையாகத் தோலுரித்துக் காட்டப்பட வேண்டி இருக்கிறது.மீண்டும் தங்கள் பழைய மதத் திற்கே திரும்புகிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர்வபாசி (பாயச எயயீயளi) என்றுபெயரிட்டு,முஸ்லிம்களையும், கிறிஸ்துவர் களையும் மீளவும் இந்துக்களாக மாற்ற மேற் கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில், மீண்டும் ஒருமுறை, தங்களுக்கு இரண்டகமான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத் தையோ நாட்டையோ நம்ப வைக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோருவது என்ன? அவைக்கு வாருங்கள், நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை வெளிப்படையாகவே மீறக்கூடிய விதத்தில் மிகவும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்று மெய்ப்பிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியைத் தாருங்கள்,’’என்பதுதான்.
ஆனால் அதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சரோ, எதிர்க்கட்சியினரைப் பார்த்து, அனைத்து மத மாற்றங்களையும் அல்லது வலுக்கட்டாயமாக மீளவும் மதமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தடை செய்திட புதியதொரு சட்டத்தை ஏற்கத் தயாரா?’’என்று கேட்டு சவாலுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு புதிய சட்டம் எதுவும் தேவையில்லை, இந்தியஅரசமைப்புச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் இவை குறித்து ஏற் கனவே மிகவும் தெளிவாக உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத்திடமிருந்து மீளவும் பதிலேதுமில்லை.
புதியதொரு சட்டத்தின் பெயரால் மோடி அரசாங்கம் கோருவது என்ன? நாட்டில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான கேடுகெட்ட கீழ்த்தரமான முயற்சிகளேயன்றி அது வேறு எதுவுமல்ல. புதிய சட்டத்தின்மூலம் இவர்கள் கொண்டு வரும் பாதுகாப்பு ஷரத்துக்கள் நம்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் (25 மற்றும் 26ஆவது பிரிவுகள்) ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கின்றன. மேற்படி இரு பிரிவுகளும், ஒருவர் தன் மனச்சான்றின்படி எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளவோ, நடைமுறைப் படுத்தவோ மற்றும் பிரச்சாரம் செய்யவோ சுதந்திரம் அளிக்கிறது’’ மற்றும் மத விவகாரங் களை மேலாண்மை செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவானது, பல் வேறு மதத்தினருக்கு இடையே மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்தால் கிரிமினல் குற்ற மாகும் என்று வரையறுத்திருக்கிறது. எனவே,இன்றையதினம் மோடி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும் மத மாற்றங்கள் தொடர்பாகப் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை.
ஒவ் வொரு இந்தியனும் தன்னுடைய சாதி, மதம்,பாலினம் எதுவாக இருந்தாலும் தனக்குப் பிடித்தமான மத நம்பிக்கையைத் தேர்ந்தெடுத் துப் பின்பற்றிட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக் கிறது. இந்த உரிமையை வலுக்கட் டாயமாகப் பறிக்கக்கூடிய விதத்தில் எவரேனும் சட்டத் திற்கு மாறாக நடந்துகொண்டால் அது,இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக் கப்பட வேண்டிய குற்றம்’’ ஆகும். அரசாங்கம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளின் வேலை, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அளித் துள்ள உத்தரவாதங்களை அமல்படுத்துவதும் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறுவோர்எவராக இருந்தாலும் அவர்களை தண்டிப் பதுமேயாகும்.
மாறாக, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன்பரிவாரங்கள் அனைத்தும் இன்றைய தினம்மேற்கொண்டுவரும் முயற்சிகள் என்ன?மீண்டும் தங்கள் பழைய மதத்திற்கே திரும்பு கிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர் வபாசி (ghar wapasi)என்று பெயரிட்டு, மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய் வதற்கான பிரச்சார வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தரம் ஜக்ரன் சமிதி என்னும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு 57 முஸ்லிம் குடும்பங்களை இவ்வாறு மீளவும் மதமாற்றம்செய்திருப்பது தொடர்பாக செய்திகள் ஊடகங் களில் வெளியாகி இவர்களது இத்தகைய முயற்சிகளை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
மேற்படி 57 முஸ்லீம் குடும்பங்களும், இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கமொழி பேசுபவர்கள், ஆக்ரா அருகில் மதுநகர் சேரியில் வசிப்பவர்கள். நாட்டில் உள்ள சேரிகளில் வாழும் பலரைப் போன்றே இவர்களுக்கும் அதிகாரப்பூர்வமான அடையாளத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, தரம் ஜக்ரன் சமிதியின் ஊழியர்கள் இவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்த தாகவும்,அங்கே அவர்கள் அனைவருக்கும் ரேசன் கார்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும்வாக்காளர் அடையாளக் கார்டுகள் அனைத்தும்வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக் கிறார்கள். அவ்வாறு வருகையில் முஸ்லிம்கள்அணிவதுபோல் தொப்பிகளை அணிந்து வருமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட் டிருக்கிறார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் கூறுவதுபோல் இது உண்மையாக இருக்கும்பட்சத் தில்,இது ஏமாற்று வழிகளில் மதமாற்றம் செய்யமேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என் பதும், இது ஒரு குற்றச்செயல் என்பதும் நன்கு விளங்கும். (இணைய தளம்,டெய்லியோ, டிசம்பர் 10, 2014.) மேலும் இவ்வாறான `மறு மதமாற்றம்பிரச்சாரங்களுக்காக `அபரிமிதமான அளவில் வசூல் வேட்டையில் பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இறங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிமை மதமாற்றம் செய்திட ஐந்து லட்ச ரூபாயும்,கிறிஸ்தவர்களுக்கு 2 லட்சம்ரூபாயும் தருவதற்காக இந்த வசூல்வேட்டையாம். முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்துவர்கள் மிகவும் சிறிய அளவி லான சிறுபான்மையினர் என்றும், எனவேதான்அவர்கள் இஸ்லாமுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவுக்கே பிரச்சனை உள்ளவர்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக நாடு தழுவிய அளவில் உறுப்பி னர் சேர்க்கைக்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு, விரைவில் இவர்கள் தற்போது உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக விளங்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை முந்திவிடுவோம் என்றுகூறியுள்ள அதேசமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமோ ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துயிசத் திற்கு மாற்ற குறியீடு நிர்ணயித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக மதம் மாற்றுவதுஇருக்கட்டும், ஒருவர் தனிப்பட்ட முறையில் கூட, தான் விரும்பினாலும்கூட, இந்து மத நம்பிக்கையான வாழு-வாழவிடு என்னும் மாண்புக்கு ஏற்ப இந்துவாக மாறமுடியாது என்பதை வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவிப்படையினர் கண்டு கொள்ளவில்லை.
அவர்கள் இஸ்லாம் மற்றும்கிறிஸ்துவமதத்தில் இருப்பதைப் போல இந்துமதமும் ஒரு புத்தகம், ஒரே கும்பல், ஒரே மக்கள்திரள்’’ ( என இந்து மதத்தையும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். (எகனாமிக் டைம்ஸ், இடுகைகள், டிசம்பர் 13, 2014)இத்தகைய ஊடகசெய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நம் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் முக்கியமான அம்சம் சமூக நல்லிணக்கமாகும். இதற்கு மிகவும் முக்கியமான முன்நிபந்தனையாக இருப்பது மதச்சிறுபான்மையினர் இடையே அதிகரித்து வரும் அச்சத்தைப் போக்குவதாகும். நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய தண்டனைச் சட்டத்தையும் மீறுவோர் தாங்கள் புரியும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான உறுதிமொழி யை பிரதமர் அளித்திட வேண்டும் என்பதுதான்பிரதமரிடம் நாம் கேட்க இருக்கும் கேள்வி களாகும். ஆளும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இடதுசாரிக் கட்சிகளைக்குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் தான் இத்தகைய உறுதிமொழியைத் தர வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். இது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய் வதற்காக இடதுசாரிகள் கூறும் சாக்குப்போக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால்இதற்கு முற்றிலும் மாறாக முன்பொரு தடவை இதுபோல் இவர்கள்தான் நடந்துகொண் டார்கள்.
மத்திய அமைச்சரவை யிலிருந்த இணை அமைச்சர் ஒருவர் பாஜகவினருக்கு எதிரானவர்களுக்கு எதிராக முற்றிலும் ஏற்கத்தகாதமுறையில், வெறுக்கத்தக்க வார்த்தைகளை உதிர்த்திட்ட சமயத்தில், பிரதமர் இதுபோன்று எதிர்காலத் தில் நடைபெறாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும்,அதன்பிறகும் என்ன நடந்தது?நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தண்டிக்கக் கூடிய குற்றச் செயல்களில் பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால்தான் பிரதமர் இப்போது அவ்வாறு உறுதி மொழிகள் அளித்தால் மட்டும் போதாது அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழியும் தர வேண்டும் என்று கேட்கிறோம்.இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னே, மோடி அரசாங்கத் தின் `நச்சுக் கலவை - அதாவதுவளர்ச்சி’’ என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, மறுபக்கத்தில் மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான வேலைகளைக் கட்டவிழ்த்து விடுவது - என்பது ஒளிந்துகொண்டி ருக்கிறது. இவர்கள் கூறிவந்த வளர்ச்சி’’ என்கிற மாபெரும் பலூன்கள் எல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் வீழ்ச்சி என்கிறஎதார்த்த உண்மையின் காரணமாக ஓட்டைவிழுந்து புஷ்’’ என்று காணாமல் போய்விட் டது.
தொழில்வளர்ச்சி முற்றிலுமாக எதிர்மறை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடி காரணமாக விளைநிலங்களின் பரப் பளவும் பெரிதும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடாமல் எவ்விதமான பொருளாதார முன்னேற்றமும் சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநரே அறிகுறிகளைப் பார்த்து வரப்போவதை உரைத் திருக்கிறார். (இவை குறித்து நாம் இப்பகுதியில் முன்பு பலதடவை விளக்கி இருக்கிறோம்.)நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கத்துடன் பல்வேறு வடிவங்களில் மதவெறி சக்திகள்,மதவெறித் தீயை உசுப்பிவிட்டுக் கொண்டிருக் கின்றன. மதமாற்றங்கள் குறித்த தற்போதைய பிரச்சாரங்களும், கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும்என்ற பிரகடனமும் இவற்றின் அடையாளங் களாகும். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல்கள்நடைபெறுவதையொட்டி கிறிஸ்தவ சிறுபான் மையினருக்கு எதிராக இதரர்களைக் குறி வைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட் டிருக்கிறது. வாக்குவங்கி அரசியலின் மிக மட்டரகமான வடிவத்தை உத்தரப்பிரதேசத் தில் முஸ்லிம்களுக்கு எதிராக காதல் ஜிகாத்’’ என்று கூறி எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்களோ அதேபோன்று இப்போது இந்தப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சிறந்ததொரு வாழ்க்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி, அதன் அடிப்படையில் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட, அரக்கத்தனமான இவர்களது நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.
(டிசம்பர் 17, 2014)
தமிழில்: ச.வீரமணி


Sunday, December 7, 2014

மோடி அரசாங்கத்தின் ஆறு மாதங்கள்:பிரகாஷ் காரத்



பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின்ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும் இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்கு ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத் தின் ஆறு மாதங்கள் குறித்து, “முடக்குவளைவில் திரும்பிவிட்ட அரசாங் கம்’’என்னும் பெயரில் ஒரு சிறுபிர சுரத்தை வெளியிட்டிருக்கிறது. சாராம்சத்தில் பல்வேறு கொள்கைப் பிரச்ச னைகளில் பாஜக அரசாங்கத்தின் நிலை பாடு தலைகீழாக மாறிவிட்டது என்று அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, பாஜகவானது ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகள் பலவற்றை எதிர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது, அரசாங்கத்திற்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் தன்னை முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொண்டு, முந்தையஅரசாங்கம் பின்பற்றிய அதே கொள்கை களைப் பின்பற்றத் தீர்மானித்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டில் ஏராளமான உண்மைகள் இருக்கின்றன. அடிப்படையாக, பாஜகவும் எங்களைப் போன்ற ஒரு கட்சிதான் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத ஆட்சிக் காலத்தில் மோடி அரசாங்கமும் ஐமுகூ அரசாங்கம் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றியது என்பதைக் காட்டி இருக்கிறது. இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. முந்தைய ஐமுகூ அரசாங்கம் செய்ததுபோலவே, பாஜக அரசாங்கமும் இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட் டுக்கு உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் செய்தது போலவே பொதுத் துறை நிறுவனங்களை மிகப்பெரிய அள வில் தனியாருக்குத் தாரை வார்க்க பாஜக தீர்மானித்திருக்கிறது.
டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக இருந்துவந்த கட்டுப்பாட்டை முந்தைய அரசாங்கம் ஒரு பகுதி நீக்கி இருந்தது. இப்போதைய பாஜக அரசாங்கமும் டீசல் விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கி இருக்கிறது. ரயில் கட்டணத்தை உயர்த்தஐமுகூ அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பாஜக அரசாங் கம் உயர்த்திவிட்டது. ஐமுகூ அரசாங்கம் கொண்டுவந்த ஆதார் திட்டத்தையும், நேரடி ரொக்கத் திட்டத்தையும் பாஜக அர சாங்கம் பின்பற்றத் தொடங்கிவிட்டது.பட்டியலுக்கு முடிவே இல்லை. இவற்றில் சில சமாச்சாரங்களில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது பாஜக எதிர்த் தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதே கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே வர்க்க நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்கிற அடிப்படை உண்மையை இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. பெரு முதலாளிகளைத் துதிபாடி அண்டிப் பிழைக்கும் குணத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகவும் பிரியமான முதலாளியாக முகேஷ்அம்பானி இருந்தார்.
இவரைக் குஷிப் படுத்த வேண்டும் என்பதற்காகவும், இவரது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே பெட் ரோலியத் துறை அமைச்சர் இருமுறை மாற்றப்பட்டார். நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு மிகவும் பிரியமானவர் கவுதம் அதானி. அவரது சொத்துக்கள் கடந்த ஆறு மாதங்களில் பல்கிப்பெருகிவிட்டன. அதானியின் கம்பெனிகளில் ஒன்று, பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு பில்லியன் டாலர் (சுமார் 6,200 கோடி ரூபாய்) கடன் பெற அரசின்ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றி லிருந்து அதிகத் தொகைக்குக் கடன் பெறும் கம்பெனி இதுதான். எனவே, சலுகைசார் முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊட்டி வளர்ப்பதைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காவது சில கட்டுப்பாடுகள் இருந்தன.
ஏனெனில் அதன்தலைமையிலான ஐமுகூ அரசாங்கத் திற்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாமலிருந்தது. வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரிக்க வேண்டிய நிலை யிலேயே அது இருந்தது. எனவே, அது உந்தித்தள்ள முயன்ற சில கொள்கைகளை அதனால் தான் விரும்பியவண்ணம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், பாஜக மக்களவையில் வலுவான நிலையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. எனவே அதே கொள்கைகளை மிகுந்தஉற்சாகத்துடன் இதனால் எடுத்துக் கொள்ள முடியும். எனவே மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் வலது சாரித் தாக்குதலை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரயில்வே யில் முதன்முறையாக அந்நிய நேரடிமுதலீடு, தனியார் வர்த்தக நலன் களுக்காக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறந்து விடுவதற்காக நிலக்கரி ஒதுக்கீடு அவசரச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல் முதலானவை அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில், தொழிலாளர்களுக்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்புகளையும் பறிக்கும் விதத்திலும், கார்ப்பரேட் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் விதத்திலும் தொழிலாளர்நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.நல்லகாலம் பிறக்குது’’ என்பதனை கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும் உத்தரவாதப் படுத்தும் வண்ணம் மோடி அரசாங்கம் ஏழைகளைக் கசக்கிப் பிழியும் வேலை களில் இறங்கி இருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் பயனாளர்களை வெட்டிச் சுருக்குதல், அச்சட்டத்தின் கீழ் இருந்த வேலை உரிமையையே நீக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதிலிருந்து இவற்றை நன்கு பார்க்க முடியும்.அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோடி எண்ணற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
இவற்றில், அவருடைய பார்வையில், ஜப்பான் மற்றும் ஆஸ் திரேலியா பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். வலதுசாரி மனோபாவம் கொண்ட இவ்விருநாட்டு பிரதமர்களும் மோடியுடன் அரசியல் உறவினைப் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஜப்பான் சென்றிருந்த சமயத்தில் மோடியும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபெயும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ராணுவ உறவு களைப் புதிதாக ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானித்திருக்கிறார்கள்.
இதில், `மலபார்பயிற்சிகள் போன்று இந்திய - அமெரிக்கக் கடற்படை பயிற்சிகளில் ஜப்பான் பங்கேற்பும் இருந்திடும். இந்தியாவும் ஜப்பானும் “2+2’’ முறையில் இருநாடுகளின் அயல்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வோராண்டும் சந்திப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில், மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்கீழ், இரு நாடுகளும் ஒவ்வோராண்டும் உச்சி மாநாடுகளை நடத்திடும், ராணுவ அமைச்சர்களின் முறையான கூட்டங்கள் அமைந்திடும் மற்றும் இரு நாடுகளும் கடற்படைப் பயிற்சிகளையும் முறையாக மேற்கொள்ளும்.
ஆஸ்திரேலிய செய்தித் தாள், தி ஏஜ் இதுதொடர்பாக எழுதியிருப்பதில், “இந்த பாதுகாப்பு ஒத்துழைப் புக் கட்டமைப்பு ஒப்பந்தம், கிட்டத் தட்ட இந்தியா, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள ராணுவக் கூட்டணிக்கு இணையானது மற்றும் ஆழமானது, இம்மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வரக்கூடிய சமயத்தில், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படக்கூடிய சூழ லில், முன்பு உருவாகி இருந்ததைப்போல அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடு களுக்கான கூட்டணி அமைய இருக்கிறது.
இதிலும்கூட பாஜக அரசாங்க மானது ஐமுகூ அரசாங்கம் நடைமுறைப் படுத்திய அயல்துறைக் கொள்கையின் சில அம்சங்களைத்தான் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறாக மோடி அரசாங்கம் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை களில் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், ஒரு விஷயத்தில் தன்னுடைய சொந்த வித்தியாசமான அணுகு முறையைக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதே அது. கடந்த ஆறு மாதங்களில், மோடி அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-உடன் அர சாங்கத்தின் அணுகுமுறையை இரண்டற இணைப்பதில் தீர்மானகரமானமுறையில் செயல்பட்டதைக் காண முடிந்தது. பொருளாதாரம், கல்வி, சித்தாந்தம், பாதுகாப்பு, சேவை மற்றும் மக்கள் என்னும் ஆறு குழுக்களை ஆர்எஸ்எஸ் அமைத்திருக் கிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்தஆறு குழுக்களும் பாஜக அரசாங்கத் தின் தங்கள் குழுக்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்து செயல்படத் துவங்கிவிட்டன, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அரசாங்கத்தின் கொள்கைகளை வடிவமைக்கும் செயல்களில் இறங்கி விட்டன.
கல்வி அமைப்புகளைப் பொறுத்தவரையில், கல்விக் கொள்கைகள், ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான நிறுவனங்களில் இந்துத்துவவாதிகளை அல்லது குறைந்தபட்சம் அதற்கு ஆதர வாக இருப்பவர்களை நியமிக்கும் வேலைகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதர இந்திய மொழிகளைக் காவு கொடுத்து சமஸ் கிருதத்தை உந்தித்தள்ளுவதற்கான முயற்சி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் இந்துப் பழமைவாத உலகக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிராஜ் கிஷோர் மற்றும் நிரஞ்சன் ஜோதி போன்ற மிகவும் வெறிபிடித்த மதவெறி சிந்தனைகளை உள்ளடக்கி யவர்களைக் கொண்டு அமைச்சரவை நிரப்பப் பட்டிருக்கிறது.
பிரதமரே ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருப்பதனால், ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்திட ஆதிக்க நிலைபாட்டை எடுத்திருக்கிறது.கீழ்மட்டத்திலும், இந்துத்துவா அமைப்புகள் பசுவதை, “லவ் ஜிகாத்’’ மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆகிய பிரச்சனைகளை சிறுபான்மை யினருக்கு எதிராக பகைமையை உரு வாக்கும் விதத்திலும், மதவெறிப் பதற்ற நிலைமையை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் தில்லி யிலேயே பவானா, திரிலோக்புரி மற்றும் கிழக்கு தில்லியில் ஒரு தேவாலயத்தை எரித்தல் போன்ற மதப் பதற்ற நிலைமை கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாஜக மற்றும் மோடி அரசாங்கத் தின் ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும்இந்துத்துவா சக்திகளின் தாக்குதல் கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்குஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப் படுகிறது.மோடி அரசாங்கத்தின் நவீனதாராளமயக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டம், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தங்கள்மீது ஏவப்பட்டுள்ள சுமைகளைத் தடுத்து நிறுத்திட, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ரின் ஒன்றுபட்ட போராட்டங்களும் வெகுஜன இயக்கங்களும் வர்க்க மற்றும்வெகுஜன அமைப்புகளால் வளர்த்தெடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகள் வலதுசாரிகளின் தாக்குதலை ஒன்று பட்டுநின்று முறியடித்திட வேண்டும்.
இது மதச்சார்பற்ற ஜ னநாயக சக்திகள் மிகவும் விரிவானமுறையில் அணிதிரள்வதற்கு வழிவகுக்கும். - தமிழில்: ச. வீரமணி