Monday, July 30, 2012

உணவு உரிமை - ஓர் அடிப்படை உரிமை




நான்கு இடதுசாரிக் கட்சிகளால் நடத் தப்பட்ட உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அது தொடர்பாக நாடு முழுதும் ஒரு மாத கால மாக நடத்தப்பட்ட கூட்டுப் பிரச்சார இயக்கம் 2012 ஜூலை 30 திங்கள் கிழமையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு முன் தொடங்கும் ஐந்து நாள் தர்ணா போராட்டத்துடன் நிறைவடை கிறது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் பொது விநியோக முறையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களும் அனைத்து ஏழை மக்கள் பிரி வினருக்கும் கிடைத்திட வேண்டும் எனவும், ரேசன் கடைகளுக்கு வரவேண்டிய உணவு தானியங்கள் கறுப்புச் சந்தை மற்றும் கள்ளச் சந்தைக்கும், கொள்ளை லாபமீட்டுபவர்களுக் கும் செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி, நாடு முழு தும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் விலையில் வறுமைக்கோட்டுக்கு மேல்/வறு மைக்கோட்டுக்குக் கீழ் என்று எவ்விதப் பாகு பாடுமின்றி அனைத்துப் பிரிவு குடும்பங்க ளுக்கும் உத்தரவாதம் செய்யக்கூடிய வகை யில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தை வலியுறுத்துவதே இப்பிரச்சார இயக்கத்தின் பிரதானக் கோரிக்கையாக இருந்தது. நாட்டில் மக்கள் மத்தியில் நிலவும் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைக்கு முடிவு கட்டிடவும் உணவுப் பாதுகாப்பின்மையை ஒழித்திடவும் இது ஒன்றே வழியாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக அள விலான பசி-பட்டினி அட்டவணையின்படி (ழுழஐ-ழுடடியெட ழரபேநச ஐனேநஒ), உலகில் மிகவும் மோசமானவிதத்தில் பசி-பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் கொண்ட

80 நாடுகளின் பட்டியலில் இந்தியா 67ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகில் பட்டினிக்கொடுமைக்கு ஆளாகி யுள்ள மக்களில் 25 விழுக்காட்டினர் இந்தியர் களாக இருப்பதை மிகவும் வெட்கங்கெட்ட முறையில் ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்த அட்டவணையின்படி வட கொரியா மற் றும் உள்நாட்டுச் சண்டையால் உருக்குலைந்து போயுள்ள சூடான் போன்ற நாடுகளின் நிலை மைகளைவிட மிகவும் மோசமாக இந்தியா இருந்து வருவது தெரிகிறது.

உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் உழலும் ஐந்து வயதுக்குக் குறைவான குழந் தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந் தியாவில்தான் இருக்கிறார்கள். நம் குழந்தை களில் 44 விழுக்காட்டினர் குறைந்த எடை உடையவர்கள். 72 விழுக்காட்டினர் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும்விட மிகவும் மோச மான விஷயம், நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் 52 விழுக்காட்டினர் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டிருப்பதாகும். இவர் கள்தான் இந்தியாவின் எதிர்கால சந்ததியி னரைப் பெற்றெடுக்கப் போகிறவர்கள். முழு மையாக தடுத்து நிறுத்தக்கூடிய வியாதிக ளால் பாதிக்கப்பட்டு அவற்றிற்கு எதிராக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வழியில் லாது நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான குழந்தைகள் மடிந்து கொண் டிருக்கின்றன.

இவ்வாறு இருக்க வேண்டிய அளவிற்கு எடை உள்ளவர்கள், இல்லாதவர்கள் விஷயத் திலும் நாம் இருவேறு இந்தியர்களை உரு வாக்கி இருக்கிறோம். நம் நாட்டில் 11 விழுக் காட்டினர் அதிக அளவில் உணவுப் பொருள் களை உட்கொள்வதாலோ அல்லது தவறான வகையில் உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பதாலோ அதிக எடையால் அவ திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறு வகையில் சொல்வதென்றால் உலகில் தடியர் கள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். இவ் வாறு நாட்டில் உள்ள ’’ஒளிரும் இந்தியர் கள்’’ அதிகமான அளவில் உணவுப்பொருட் களை உட்கொள்வதால் பாதிக்கப்பட்டு அவ திப்பட்டுக்கொண்டிருப்பதும் இங்கேதான்.

உணவுப்பாதுகாப்பின்மை காரணமாக போதிய அளவிற்கு மக்களுக்கு ஊட்டச்சத் துக் கிடைக்காததுதான் இவ்வாறு ஊட்டச் சத்தின்மைக்குப் பிரதான அம்சமாகும். நாட்டில் பெரும்பான்மை மக்கள் பசி-பஞ் சம்-பட்டினியால் மடிவது தொடர்வதற்கும் இதுவே பிரதான காரணமாகும். பல்வேறு தோராயமான மதிப்பீடுகளின்படி, நாட்டில் உள்ள மக்களில் கிராமப்புறத்தில் 75 விழுக் காட்டினரும், நகர்ப்புறத்தில் 73 விழுக் காட்டினரும் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு உணவு உட்கொள் ளாமல் இருக்கிறார்கள் என்று கண்டறியப் பட்டிருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) வளர்ச்சி விகிதம் மீளவும் வலுவானவகை யில் மாறிக்கொண்டிருப்பதால், இந்நிலைமை சரிப்பட்டுவிடும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆயினும் இது உண்மை யல்ல. 1980களில் - அதாவது பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காடாக இருந்த உணவு தானியங்கள் உற்பத்தி, தற்போது இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டு காலத்தில் ஒவ்வோராண்டும் 1.3 விழுக்காடு அளவிற்குக் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இதன் காரணமாக 1990 களில் ஒவ்வொரு நபரும் உட்கொள்ளும் உணவு தானியங்களின் அளவு நாளொன் றுக்கு 494 கிராம்களாக இருந்தது, தற்போது 2009இல் 438 கிராம்களாக வீழ்ச்சி அடைந் திருக்கிறது.

நவீன தாராளமய பொருளாதாரச் சீர் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 1997இல் ரேசன் அட்டைகள் மூல மாக அனைவருக்குமான பொது விநியோக முறை என்பது கைவிடப்பட்டது. பொது விநி யோக முறை பல்வேறு விதமான ஊழல் களால் பீடிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட 1991இல் இம்முறை மூலமாக சுமார் 21 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள், அதாவது மொத்தமிருந்த உணவு தானியங் களில் 45 விழுக்காடு அளவிற்கு, ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. ஆனால், 2001ஆம் ஆண்டில் இது வெறும் 13 மில்லியன் டன்களாக சுருங்கிவிட்டது.

ஆயினும்கூட, ஐ.மு.கூட்டணி அரசாங்க மானது நாட்டில் பெரும்பகுதி மக்கள் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமையால் மடிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலை தொடர்கிறது. மத்திய அரசின் கிடங்குகளில் இருப்பில் உள்ள மிகை தானியங்களை ஏழைகளுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்க மறுக் கிறது. 2012 ஜூன் 1 அன்றைய தேதியில் அர சாங்கம் 82.3 மில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருக்கிறது. அமோக விளைச்சலின் காரணமாக கொள் முதல் செய்ய வேண்டிய 50 மில்லியன் டன் களுக்கும் மேலாகவே அரசு கொள்முதல் செய்து இவ்வாறு இருப்பு வைத்திருக்கிறது. இவ்வாறு கிடங்குகளின் கொள்ளளவுக்கும் மேலாக, பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் இருப்பு வைத்திருப்பதன் காரண மாக சுமார் 6.6 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிக் கொண்டி ருக்கின்றன. ஆயினும், இவற்றை ஏழை மக்களுக்கு வழங்கிட ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மறுத்து வருகிறது. முன்னாள் நிதி யமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவரு மான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, தற் போது கொள்முதல் செய்துள்ள உணவு தானி யங்களை சேமித்து வைப்பதற்கான இடத்தை ஒதுக்குவதற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். ஆயினும் இவற்றை ஏழை மக்க ளுக்கு அளித்திட அரசாங்கம் மறுத்து வரு கிறது. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு நம் மக் களைப் பட்டினியால் மடியச் செய்திடும் சமயத்தில் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற் றுமதி செய்வதன் மூலம் லாபம் ஈட்டவும் அர சாங்கம் முன்வந்திருக்கிறது. பட்டினியால் மடிந்துகொண்டிருக்கும் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இவர்களை மரண வியாபாரிகள் என்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

நமது குடியரசின் 13ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் உறுதிமொழி எடுத்தபின் அளித்திட்ட தன்னுடைய ஏற்பு ரையில், அனைத்து சமத்துவங்களிலும் பொருளாதார சமத்துவமே மிகவும் முக்கிய மான ஒன்று என்று வரையறுத்திருக்கிறார்.

நம் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையானால் நாட்டில் மிகவும் அடித்தட்டில் உள்ள மக்களும் தாம் இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் நாட்டின் ஓர் அங்கம் என்கிற உணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் நம் போராட்ட வடிவங் களுக்குப் புதியதொரு பார்வையை அளித் திருக்கிறார்.

“நாட்டில் பட்டினி என்னும் கொடு மையை ஒழித்துக்கட்டும் போராட்டங்களை நாட்டின் இளம் சந்ததியினர் பன்முகப் பாய்ச்சலில் முன்னெடுத்துச் செல்வார்கள். பசி, பஞ்சம், பட்டினி என்பதைவிட அவமான கரமான சொற்கள் வேறெதுவுமில்லை. நம் ஏழை மக்களின் நியாயமான அபிலாசை களை நிறைவேற்றக்கூடிய விதத்தில் நம் நடைமுறைகள் இல்லை. நவீன இந்தியா வின் அகராதியிலிருந்து வறுமை என்னும் சொல்லை அழித்தொழித்து, அடித்தட்டில் உள்ள மக்களை மேலே கொண்டு வரவேண் டும்,’’ என்று பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

இவர் தன் கூற்றில் உண்மையாக இருக் கிறார் எனில், பின் அவர் தன் அரசாங்கத்தை உணவு உரிமையை அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ் ஓர் அடிப்படை உரிமையாக மாற்றிட, கட்டளையிட வேண்டும். மாண்புமிகு குடி யரசுத் தலைவர் அவர்களே, நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நாளொன்றுக்கு ஒரு கிலோ கிராம் உணவு தானியங்கள் 2 ரூபாய்க்குக் கிடைப்பதை உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் ஒரு சட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, இத்தகையதிசை வழியில் நாம் பயணத்தைத் தொடங்கிட முடியும்.

இக்குறிக்கோளை எய்த வேண்டும், நம் நாட்டில் பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறு கின்ற மனிதர்களைப் பாரினில் உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், இடதுசாரிக் கட்சிகள், நாடாளுமன்றத்தின் முன் ஐந்து நாட்கள் தர்ணா போராட்டம் மூலமாக ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திட முன்வந்திருக்கின்றன. பசி - பஞ்சம் - பட்டினி மற்றும் வறுமை இல்லாத சிறந்த தோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத் தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கும் போராட்டங்கள் இந்தத் திசைவழியில் எதிர் காலத்தில் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, July 15, 2012

வரலாற்றுச் சக்கரத்தைத் திருப்ப முயலும் ப.சிதம்பரம்




மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் “மினரல் வாட்டர் வாங்குவதற்கு 15 ரூபா யும், ஐஸ்கிரீம் வாங்குவதற்கு 20 ரூபாயும் செல வளிக்கும் மக்கள், அரிசி விலையோ கோது மையின் விலையோ ஒரு ரூபாய் உயரும் போது அதனை பெரிய பிரச்சனையாக ஆக்கு வது ஏன்?’’ என்று பேசியிருப்பதாக பத்திரி கைகளில் வந்திருப்பதைப் பார்க்கும்போது அவர் வரலாற்றுச் சக்கரத்தின் திரும்பிச் செல்லும் பொத்தானை அழுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது.

பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண் டிருந்த சமயத்தில், ராணி மேரி அண்டாய் னெட், “மக்களுக்கு ரொட்டி கிடைக்கவில் லை என்றால் என்ன? கேக் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கிண்டலடித் தாராம். நேர்மையாகச் சொல்வதென்றால், அவர் இவ்வாறு கூறினாரா என்பதற்கு எவ் விதமான பதிவும் இல்லை. உண்மையில் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி ஜீன் ஜேக் கஸ் ரூசோ, 1765இல் எழுதிய தன்னுடைய சுயசரிதையில், இதுபோன்றதொரு வாசகத் தை எழுதியுள்ள சமயத்தில் மேரி அண் டாய்னெட்டுக்கு வயது ஒன்பது மட்டுமே. இதேபோன்ற கூற்றுகள் மற்ற நாடுகளிலும் உண்டு. ரொட்டி, கேக்கிற்குப் பதிலாக அரிசி மற்றும் இறைச்சியை சம்பந்தப்படுத்தி சீன மாமன்னர் ஹூயி கூறியதாக ஒரு கூற்று உண்டு. இவ்வாறு இவர்கள் கூறியதாகக் கூறப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின், இப்போது ப.சிதம்பரம் இவ்வாறு திருவாய் மலர்ந்திருக்கிறார்.

மினரல் வாட்டர் வாங்குவதற்கும் ஐஸ் கிரீம் வாங்குவதற்கும் செலவழிக்கும் மக்க ளும், தங்கள் ஜீவனத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக் கும் மக்களும் ஒன்றல்ல, வெவ்வேறானவர் கள். தேசிய மாதிரி சர்வே அமைப்பு சமீபத் தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். சில மாநிலங்களில் இது மேலும் அதிகமாகும். வறுமை வரையறையை எதார்த்தமான முறையில் எடுத்துக் கொண்டோமானால், நாட்டில் 80 கோடி மக்களுக்கும் அதிக மானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களாவர். பிரதமரால் அமைக்கப்பட்ட மறைந்த அர்ஜூன் சென்குப்தா தலைமை யிலான ஆணையமானது, நாட்டிலுள்ள மக்க ளில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க இயலாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அறிக் கையுடன் மேலே கூறிய அறிக்கை ஒத்துப் போகிறது. இதுதான் உண்மையான இந்தியா. உள்துறை அமைச்சரின் கூற்று, நாட்டில் இரு விதமான இந்தியர்கள் (ஒளிர்கின்ற இந்தியர்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் அவதிப்படும் இந்தியர்களும்) இருப்பதையே வெளிப்படுத்துகிறது.

எதார்த்தநிலை இவ்வாறிருக்கும் நிலை யில்தான் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் நாளும் அதி கரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். பருவமழையைக் கணித்துக் கூறும் துறையினர், இந்த ஆண்டு நாட்டில் பெய்யும் மழைநீரின் அளவு 25 விழுக்காடு குறையும் என்று கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நிலைமைகள் மேலும் மோசமாகலாம் . குறிப்பாக புரதச்சத்துக்கு அடிப்படையாக உள்ள பருப்பு மற்றும் தானியங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கின்றது. இதன் காரணமாக அனைத்து வித மான பருப்புகளின் விலைகளும் அதிகரித் துக் கொண்டிருக்கின்றன. ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு குறைந்திருக்கக் கூடிய நிலையில், இவற்றை இறக்குமதி செய்வதன் மூலம்கூட நிலைமையைச் சமாளிக்க முடியாது என்றே தெரிகிறது. இதன்மூலம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் தங்கள் வாழ்நிலையைத்தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தினசரி வாழ்வின் அனைத்து அம்சங்களி லுமே நிலைமைகள் மிகவும் மோசமான முறையில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான செல வினங்கள் கடுமையாக அதிகரித்திருப்பதால், ஒவ்வோராண்டும் நான்கு கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்று திட்டக் கமிஷனின் உயர்மட்ட வல்லு நர் குழு மதிப்பிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காட்டிற் கும் குறைவாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒட்டுமொத்தமாகச் செலவிடு கின்றன என்கிற உண்மையைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்தோமானால், பொதுச் சுகா தாரச் செலவினங்களுக்கு மிகவும் குறை வாகச் செலவிடும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருவது தெரியவரும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாகக் கொடுப்பதால்தான் உணவு தானியங்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கிற உள்துறை அமைச்சரின் வாதமும் ஏற்கத் தக்கதல்ல. விவசாயிகளின் நலனைக் கருத் தில் கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை யை அதிகரிக்க வேண்டியது அவசியம்தான். குறிப்பாக விவசாய நெருக்கடியும் விவசாயி களின் தற்கொலையும் அதிகரிக்கக்கூடிய சூழலில் இது அத்தியாவசியமானதுதான். ஆயினும் இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை சாமானிய மக்களின் மீது ஏற்றிடக் கூடாது. மக்களுக்கு அளித்திடும் உணவுப் பொருள்களின் விற்பனை விலைகளுக்கு அரசாங்கம் மானியங்கள் அளித்திடுவது அவ சியத் தேவைகளாகும். இவ்வாறு மானியங் கள் அளிப்பதற்கு அரசிடம் போதுமான வள ஆதாரங்கள் இல்லை என்பதே அரசுத்தரப் பில் வைக்கப்படும் பொதுவான வாதமாக எப்போதும் இருந்து வருகிறது.

மக்கள் மீது திணிக்கப்படும் மாபெரும் மோசடி இதுவாகும். சென்ற ஆண்டு, சுமார் 5.26 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக பன் னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளுக்கு அரசாங்கம் வரிச் சலுகைகளை வாரி வழங்கி யிருக்கிறது. தற்சமயம் நிதிப்பற்றாக்குறை 6.9 விழுக்காடு - அதாவது 5.21 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அரசாங்கம் மட்டும் மேலே குறிப்பிட்டவாறு முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை அளிக்காது இருந்திருந் தால், அரசுக்கு இவ்வாறு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது, மாறாக நிதி உபரிதான் ஏற் பட்டிருக்கும். ஆயினும், நிதிப் பற்றாக்குறை யைக் குறைக்கிறோம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை மட்டும் கருணையற்ற முறையில் வெட்டிக் குறைத்திட அரசு முன்வந்திருக்கிறது. அர சாங்கம் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை வளர்ச்சிக்கான “ஊக்கத்தொகை’’ என்று கூறுகிறது. இவ் வாறு அரசாங்கம், ஏழைகளுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டி அவர்களின் வயிற்றில் அடித்து, பணக்காரர்களுக்கு மானி யம் அளித்து அவர்களை ஊட்டி வளர்க்கிறது. இத்தகைய அரசின் கொள்கைகள்தான் நாட்டின் இருவிதமான இந்தியர்களை உரு வாக்க இட்டுச் செல்கின்றன. இருவிதமான இந்தியர்களுக்கும் இடையிலான இடை வெளி மேலும் அதிகமாகிட வழிவகுக்கின்றன.

பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய சலுகைகள் ஒழிக்கப்பட்டு, அரசுக்கு வரவேண்டிய வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டு, அவை பொது முதலீடு களில் செலுத்தப்பட்டால், நாட்டில் கணிச மான அளவிற்கு வேலைவாய்ப்புகள் அதி கரித்திடும் என்பதோடு அதன் தொடர்ச்சி யாக உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிப்ப தோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச் சியும் அதிகரித்திடும்.

மாறாக, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மானது தொடர்ந்து தாராளமய நிதி சீர்திருத் தங்களை அமல்படுத்துவதன் மூலம் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக்க உத வும் நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. இவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலாளிகளைக் கொழுக்க வைத்திட உதவுமேயன்றி, சாமானிய மக்கள் மீது மேலும் கடுமையான முறையில் சுமை களையே ஏற்றிடும்.

நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங் களுக்கும் (வறுமைக்கோட்டிற்கு மேல்/வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி) ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் உணவு தானியங்கள் கிலோ கிராம் 2 ரூபாய் என்ற வீதத்தில் அளிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். இவ்வாறு வழங்குவதற்கு அரசிடம் வள ஆதாரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. உண்மை என்னவெனில், ஐ.மு. கூட்டணி-2 அரசிடம் இதற்கான அரசியல் உறுதிதான் இல்லை. நாட்டில் உள்ள அவ திப்படும் இந்தியர்களை மேலும் அவதிக் குள்ளாக்கி, ஒளிரும் இந்தியர்களை மேலும் ஒளிரச்செய்வதற்கான கொள்கைகளையே ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க விரும்பு கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் அர சின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு நாடு முழுவதும் வலுவ ான முறையில் மக்கள் இயக்கங்கள் வலுப் படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, May 20, 2012

சிறப்புக் குறிக்கோள் திட்டம் யாருக்காக?


பிரதமரும், அவரது அலுவலகமும் கட்டமைப்பு வசதிகள், கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வெளிக்கொணர்தல் முதலிய துறை களில் முதலீடுகளை அதிகப்படுத்துவ தற்காக எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக் கோள் வாகனம் (SPV - Special Purpose Vehicle) ஒன்றை அமைத்திடத் திட்டம் தீட்டியிருப்பதாக, தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிவிகிதம் வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதானது, நாட்டிலுள்ள அறிவுஜீவிகள் மற்றும் தொழிற்துறையினர் மத்தியில் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தியிருப்பதால் இத்தகைய முடிவிற்குப் பிரதமர் வந்திருக் கிறார் என்று தெரிகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் மத்தியில் எதிர்மறை உணர்வு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். பிரதமரின் உண்மை யான கவலை இதுதான். ஏனெனில், அந் நிய நிறுவன முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இது இட்டுச் செல்லும், அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் ரூபாய் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைவதற்கும் அது நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தும். ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, தன்னுடைய நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்வதற்காக, இதன் முதலீட் டாளர்கள் மேலும் மேலும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் புதிய புதிய வாய்ப்புவசதிகளை உருவாக்கித் தரு வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதன்மூலம் அந்நிய முதலீடுகள் மேலும் அதிக அளவில் ஈர்க்கப்படலாம் என்றும் அதன் மூலம் வளர்ச்சி விகிதம் முன் னோக்கிச் செல்லும் என்றும் அரசு நம்பு கிறது. பொது(அரசு) -தனியார் கூட்டுச் செயல்பாடு மூலம் இவ்வாறு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு வசதி களை உருவாக்கித்தரும் வேலைகளில் திட்டக் கமிஷனும் அரசாங்கமும் இறங் கியிருக்கின்றன. பிபிபி (பொது(அரசு)-தனியார் கூட்டுச் செயல்பாடு) என்பது பிரதிபலிப்பது என்ன? இதன் மூலம், மக்கள் நலத் திட் டங்களை நிறைவேற்றுவதற்கும், மக்க ளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற் கும் தனக்கு எவ்வித அக்கறையும் கிடை யாது என்பதை அரசு சொல்லாமல் சொல்கிறது. பொதுத்துறைத் திட்டங் களில் தனியார் முதலீடு செய்யலாம். ஆனால் பொதுத்துறைச் சொத்துக்க ளைத் தனியார் கொள்ளைகொண்டு போக அனுமதித்திட முடியாது. திட்டக் கமி ஷன், நாட்டின் திட்டமிடுதலுக்கு சவக் குழி தோண்டும் திட்டத்தினை அனுமதித் திட முடியாது. தனியார் கொள்ளைலாபம் ஈட்டுவதற் கான மற்றுமொரு வாய்ப்புவாசலே இந்த எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைக்கப்படும் திட்டமாகும். சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைப்பது தொடர்பாக, அத்திட்டத்தினை நியாயப் படுத்தி, துறைகளுக்கிடையே சுற்றுக்கு விடும் குறிப்பில் (internal note) அரசு கூறி யிருப்பதாக, ஊடகங்கள் வெளியிட்டிருப்ப தாவது: ‘‘இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதம் 2011-12ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டிற்கும் கீழே வீழ்ச்சியடைந் திருக்கும் பின்னணியில், முதலீட்டு விகி தத்தைப் பெருக்கிட வேண்டியது அவ சியத் தேவையாகும். பொருளாதார வல்லு நர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஊட கங்கள் இதனை வலியுறுத்திக் கொண் டிருக்கின்றன. கையில் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு சமாளிக்கக்கூடிய அதே சமயத்தில், புதிய முதலீடுகளுக் கான வழிகளையும் ஆராய வேண்டி யிருக்கிறது.’’ மின் திட்டங்கள் (குறைந்தபட்சம் 58 மின்திட்டங்கள்) அமைப்பதற்கான தனி யார் முதலீடுகளை, பல்வேறு மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகளின் துறை களும், அமைச்சகங்களும் விரும்பி ஏற் காத அதே சமயத்தில், பிரதமர் அலுவ லகம் அதனை இத்தகைய எஸ்பிவி என் னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் மூலம் மேற்கொள்ளத் திட்டம் தீட்டியிருக்கிறது. இவ்வாறு இந்தச் சிறப்புக் குறிக்கோள் வாகனம் ஒரு மின்திட்டம் உருவாவதில் உள்ள பல்வேறு நிபந்தனைகளையும் சரி செய்திடப் பொறுப்பேற்றுக்கொண்டு, அதனை ஏலத்திற்கு விட (bidding) முன் வந்திருக்கிறது. எஸ்பிவி திட்டங்களை அடையாளங் காணவும், அவற்றிற்கான நிலங்களைக் கையகப்படுத்தவும், அதன் அனைத்துப் பணிகளையும் மேற் கொண்டு இறுதிப்படுத்திடவும், அரசின் பல்வேறு துறைகளிடமிருந்தும் தடை நீக்கச் சான்றுகள் பெற்றிடவும் பின்னர் அவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஏலத்திற்கு விடவும் பொறுப் பேற்றுக்கொள்ளும். அதுமட்டுமல்ல, குறைந்தவட்டியில் நிதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இந்த எஸ்பிவி அமைப்பே மேற்கொள்ளும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், எஸ்பிவி, தனியார் கார்ப்பரேட் நிறு வனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரும். பிரதமர் அலுவலகக் குறிப்பு இது தொடர்பாக எழுதியுள்ள துறைக ளுக்கிடையிலான குறிப்பில் குறிப்பிட்டி ருப்பதாவது: ‘‘எஸ்பிவி அணுகுமுறை இதுவரை அரசு ஊழியர்கள் மத்தியி லிருந்த மனோபாவத்தையே பெரிய அள வில் மாற்றி அமைக்கிறது. தடைநீக்கச் சான்றுகள் போன்ற பலவற்றைத் தனியார் கள் அரசிடம் பெறுவதற்கு அலையும் பொறுப்பு இனி இல்லை. எனவே இது முதலீட்டாளரின் உணர்வினை ஆக்க பூர்வமான முறையில் மாற்றிடும்.’’ இவ்வாறு இந்த எஸ்பிவி என்ற சிறப் புக் குறிக்கோள் வாகனம் என்னும் முறை யானது, பிபிபி என்னும் பொது-தனியார் கூட்டுச் செயல்பாடு என்பதைவிட, தனி யார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அதிக அளவில் துணை புரியும். சர்வதேச நிதி மூலதனம், பிபிபி என் னும் முறையை அரசு மேற்கொள்ள வேண் டும் என்று வலியுறுத்திய சமயத்தில், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்களை (அவை லாபம் ஈட்டிக்கொடுத்த நிலையிலும்) தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், அரசாங்கம் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்றும் அறிவுறுத்தியது. பின்னர் படிப்படி யாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக ளையும் தனியாரிடம் தந்துவிட வேண்டும் என்று கூறியது. அரசாங்கம், துப்புரவுப் பணிகள் மற்றும் தண்ணீர் விநியோகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றது. இப்போது அதிலும் கூட, பிபிபி முறையைக் கொண்டுவந்து, பயன்படுத்துவோர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டி ருக்கிறது. இவ்வாறு சமூகத்திற்கான திட் டங்கள் எதையும் இனி அரசாங்கம் செய் வதற்கு இல்லை என்கிற நிலைக்கு அர சாங்கம் தள்ளப்பட்டு விட்டது. ஆயினும், இந்தியாவில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக் கிறது என்கிற பிரதமர் அலுவலகத்தின் வரையறையில் அடிப்படைப் பிழை ஒன்று இருக்கிறது. வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு முதலீடும் மிகவும் மந்தமான அளவில் இருந்ததே காரணம் என்பதே இந்தப் பிழையாகும். எனவே, அரசு இவ்வாறு எஸ்பிவி வழியாகவும், பிபிபி வழியாகவும் அரசாங்கத்தின் உதவி யுடனேயே தனியார் தங்களது மூலதனங் களைப் பெரிய அளவில் முதலீடு செய்திட அரசு வழிவகுத்துக் கொடுக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி விகிதத்துடன் அமைந்திட வேண்டுமானால், உள்நாட்டுத் தேவை யில் உள்ள மந்தநிலை போக்கப்பட வேண்டும். இதைச் செய்திடாமல், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திட மூல தனத்தை அதிகரிப்பதில் அர்த்தமேதும் இல்லை. ஏனெனில் இவர்கள் உற்பத்தி செய்வது எதுவாக இருந்தாலும் அதனை வாங்க, சந்தை இருக்க வேண்டும். இதற்கு மக்களின் வாங்கும் சக்தி போதுமான அள விற்கு இருந்திட வேண்டும். இத்தகைய வாங்கும் சக்திதான் நாளும் உயரும் விலைவாசி உயர்வால் கணிசமான அள விற்கு அரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேசிய மாதிரி சர்வே குடும்பச் செலவி னங்கள் தொடர்பாக மேற்கொண்ட சமீ பத்திய ஆய்வுகள், நாட்டில் 60 விழுக் காட்டுக் குடும்பங்கள் திட்டக் கமிஷன் நிர்ணயித்துள்ள வறுமை வரையறைக்கும் கீழே இருப்பதை உறுதிப்படுத்தி இருக் கின்றன. அதாவது காலஞ்சென்ற அர் ஜூன் சென்குப்தா அறிக்கை மதிப்பிட் டுள்ளபடி, நாட்டில் உள்ள மக்களில் 80 கோடிக்கும் மேற்பட்டோரில் சுமார் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க முடியாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என் பதுடன் இந்த ஆய்வு மிக நெருக்கமாக இருக்கிறது. இத்தகைய பின்னணியில், நமக் குத்தேவை நாட்டின் உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது என்பதுதான். அதற்கு நாட்டு மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்திட வேண் டும். அதற்கு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் நாட்டில் பெரிதும் தேவையான கட் டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படு வதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு கள் கணிசமான அளவிற்கு அதிகரிக் கப்பட்டு, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்திடும். இதைச் செய்வதற்கு முன்வராமல், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் தன்னு டைய நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளையே பின்பற்றவும், தனியார் தங்கள் லாப வேட்கையை மேலும் மேலும் அதிகரிக்கும் வண்ணம் தனியார் முதலீடு களை உருவாக்கவுமே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட்டு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடு உட் செலுத்தப்படாவிட்டால், நாட்டில் ஆட் சியாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்காது, நாட்டு மக்க ளில் பெரும்பான்மையோரின் வாழ் நிலையும் மேம்படாது. பொது முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய அளவிற்கு வளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. தற்சமயம், இவ் வளங்கள் பல்வேறு ஊழல்கள் மூலமாகக் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன அல்லது தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள பணக்கார ஒளிரும் இந்தியர்களுக்கு அபரிமிதமான முறையில் வரிச் சலுகை கள் அளிப்பதன் மூலம் அபகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அரசின் இழிநடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமானால், நம் நாட்டில் வளங்களுக்குப் பஞ்சமே கிடையாது. நாட்டில் வளர்ச்சிவிகிதம் குறைவது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் உள்ளபடியே கவலை கொண்டிருக்கு மானால், தன்னுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். நம் பொருளா தாரம் வளர்வதற்கும், நம் மக்களின் வாழ் நிலை உயர்வதற்கும் இது ஒன்றே வழி. ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தைத் இத்தகைய திசைவழியில் திருப்பக் கூடிய வகையில் மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தமிழில்: ச.வீரமணி