Showing posts with label The Hindu Editorial on Mamata. Show all posts
Showing posts with label The Hindu Editorial on Mamata. Show all posts

Tuesday, April 16, 2013

மம்தாவின் இரட்டை வேடம்


மக்களின் கோபம் எதிர்பாராத விதங்களில் எதிர்பாராத வடிவங்களை எடுக்கக்கூடும். மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிர சின் ஈராண்டு கால ஆட்சிக்கு எதிராக மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருப்பது, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த முன்னணி ஊழியர் சுதிப்தா குப்தா ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையின ரால் கைது செய்யப்பட்டபின் இறந்ததற்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சிகளில் நன்கு வெளிப்படுகிறது. இது ஒரு சாதா ரண விபத்து என்று காவல்துறையினரால் கூறப்படுவது போல இருந்தாலும் சரி, அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுவது போல் சிறையில் கொல்லப்பட்ட சம்பவ மாக இருந்தாலும் சரி, முதல்வர் மம்தா பானர்ஜி இத்துயர சம்பவம் குறித்துக் கூறு கையில், இது ‘‘ஒரு சிறிய, அற்ப’’ விஷயம் என்று கூறியிருப்பது மக்களின் கோபத் தைக் குறைத்து மதிப்பிட்டிருப்பது போலவே தோன்றுகிறது.

தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி எந்த அளவுக்கு சகிப்புத்தன்மையின்றி யும் பொறுமையிழந்தும் காணப்படுகி றாரோ அந்த அளவுக்கு அவர் அரக்கத் தனமாகவும் மக்களைப் பற்றிக் கவலைப் படாது சொரணையற்று இருப்பவராகவும் பார்க்கப்படுகிறார்.இந்திய மாணவர் சங்கத்தினால் நடத் தப்படும் கிளர்ச்சிகள் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டவை என்று கூறு வதற்கு மம்தா பானர்ஜிக்கு நிச்சயமாக முழு உரிமை உண்டு. ஆயினும் அவருக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையுமே பாசாங்குத்தனமானவை என்றும் இடது முன்னணி தனக்கு எதிராகச் செய்திடும் சதி என்று கூறுவதன் மூலமும் அவர் தன் சொந்த ஆதரவுத் தளங்களிலிருந்தே மிகப்பெரிய அளவில் தனிமைப்படுகிறார் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண் டும். எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களின் நாடி யைப் பிடித்துப் பார்ப்பதிலும், வெகுஜன இயக்கங்களுக்குத் தலைமை தாங்குவதி லும் மிகவும் திறமைபெற்றதாக இருந்தது. இப்போது அனைத்துக் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் தன்னை ஆட்சியி லிருந்து கீழிறக்குவதற்கான மற்றும் சட் டம்-ஒழுங்கைக் குலைப்பதற்கான முயற் சிகள் என்று கூறுவது ‘எதிர்க்கட்சி வரி சையில் இருக்கும்போது ஒருமாதிரியாக வும் ஆட்சியில் இருக்கும்போது வேறொரு மாதிரியாகவும்’ இருக்கிறார் என்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எண்ணம் வலுப்பெறுவதற்கே இட்டுச்செல்லும். பஞ்சாயத்துத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து அர சாங்கத்திற்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே சட்டரீதி யாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக் கக்கூடிய நிலையில், மம்தா பானர்ஜி முன்பு வீதியிலிறங்கிப் போராடிய சுவடே சுத்தமாக இல்லாமல் ஒரு எதேச்சதி காரியைப் போல நடந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார். இதனைப் பார்க்கும்போது, மம்தா போராட்டத்திலிருந்து ஓடி ஒளிவது போலவே தோன்றுகிறது.

(இந்து, தலையங்கத்தின்பகுதிகள் (ஏப். 9),தமிழில்: ச.வீரமணி