Showing posts with label K.Varadarajan. Show all posts
Showing posts with label K.Varadarajan. Show all posts
Friday, May 21, 2010
ஐமுகூ-2 அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும்-கே.வரதராசன் பேட்டி
புதுதில்லி, மே 22-
ஐமுகூ-2 அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, போராட்டங்கள் தீவிரமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.
ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கே. வரதராசனிடம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கடந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியதாகச் சொல்வதற்கில்லை. உண்மையைச் சொல்வது என்றால், ஐ.மு.கூ.1 காலத்தில் அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்ததால், மக்கள் மீதான சில தாக்குதல்களைத் தடுக்க முடிந்தது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் போன்று சில காரியங்களைச் செய்ய முடிந்தது. ஆனால் இப்போதைய ஐமுகூ-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற காங்கிரசின் கொள்கைகளும், திமுக-வின் கொள்கைகளும் ஒன்றாக இருக்கிற காரணத்தால், இந்த அரசு நேரடியாகவே வசதிபடைத்தவர்களின் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் வசதி படைத்தோருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் அளித்திருக்கிறது. இதை வேண்டுமால் அரசு செய்துள்ள ‘‘நன்மை’’ என்று சொல்லலாம். 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானிய மக்களைத் தாக்கி இருக்கிறது.
உண்மையாகச் சொல்லப்போனல் தாராளமய, தனியார்மய, உலகமய, மக்கள் விரோதக் கொள்கைகளை கடந்த கால அரசாங்கங்களும் செயல்படுத்தின. ஆனால் இந்த அரசு பகிரங்கமாகவே அதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்து, ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்றவர்கள், நேரடியாகவே அவற்றை அமலாக்குகிற காரணத்தால் இன்றையதினம் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பட்டினிச் சாவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அகில இந்திய வேலை நிறுத்தம், நாடு முழுதும் சிறையேகும் போராட்டம் ஆகியவற்றை வெற்றியுடன் நடத்தியிருக்கிறோம்.
வரவிருக்கும் ஜூலை முதல் வாரத்தில் புதுதில்லியில்ல பாஜக கூட்டணியில்ல இல்லாத, ஐமுகூ-2 கூட்டணியில் இல்லாத மதச்சார்பற்ற கட்சிகள்மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லியில் சிறப்பு மாநாடு ஜூலையில் நடைபெறவிருக்கிறது. அதில் எதிர்கால போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இந்த அரசின் கொள்கைகள் மாற்றப்படும்வரை தீவிரமான போராட்டங்கள் நடைபெறும். செப்டம்பரிலிருந்து இந்தப் போராட்டங்கள் தீவிரமாகும்.’’
இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.
(ச.வீரமணி)
Thursday, May 28, 2009
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு : -கி. வரதராசன்

இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇ-யினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடை பெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணு வத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது. பல லட்சக் கணக்கான அப்பா வித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண் ணிலேயே அகதிகளாக மாறி, சொல் லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிங்களப் பேரினவாதம்
இலங்கையின் கடந்த கால வர லாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற் றாண்டுகளுக்கு முன்பேயே விதைக் கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளை யர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந் தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங் கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர் . மேற்கத் தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்க ளும் அங்கு சிங்களவர்கள்- தமிழர்களி டையே எழுந்ததைக் காண முடியும். அதே போல ‘‘இன ஆராய்ச்சி’’ என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் - முன்னேறி யவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கி யவர்கள் - திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும் காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லு நர்களால் சிங்கள மக்களின் பெருமை யைப் பேசுவது என்ற பெயரில் அழுத்த மாகச் செய்யப்பட்டது.
விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற் படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்க ளையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக் கைகள், சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் வேற்றுமையை வளர்த்தன.
இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத் தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற் றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென் றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில், தமிழ் மக்கள் வாழும் பகுதிக ளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித் தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட் டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலை யில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும்.
இந்த இனப்படுகொலையில், ஈடுபட் டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப் பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந் தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972-ம் ஆண் டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்க ளத்தை இலங்கையின் ஆட்சிமொழியாக வும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிர கடனம் செய்தது.
தமிழ் மக்கள் எதிர்ப்பு
ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித் தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி (கூருடுகு-கூயஅடைள ருnவைநன டுiநெசயவiடிn குசடிவே) உருவானது. கம்யூனிச இயக்கங் களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக் கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந் தனர். ‘‘சோசலிசத் தமிழ் ஈழம்’’ அமைப் பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்க ளாகச் சிதறுண்டனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப் பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெ டுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத் திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கை யைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகு திக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.
எல்டிடிஇ-ஐப் பொறுத்தவரை இவர் கள் அனைவரும் துரோகிகள் என்றும், அர சின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட் டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்ற ழிக்க முற்பட்டது.
பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்டவர் களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென் றால், சிங்கள இன வெறியர்களால் கொல் லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர் களே அதிகம். இவர்களின் சர்வசாதார ணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.
எல்டிடிஇ : துயர முடிவு
இலங்கையை ஆண்ட ஜெயவர்த் தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரி மைகளையும் தமிழ் மொழியையும் புறக் கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தி யமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவ டிக்கைகளே அடிப்படைக் காரணங்க ளாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇ-யினரும் தயாராக இல்லை. எல்டிடிஇ-யினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என் பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள் ளது.
எல்டிடிஇ தலைவர் பிரபாகரன், ஆயு தப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தை அமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇ-யினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடை பெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக் கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடி வுக்கு வந்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வி யாகும்.
இலங்கை வரலாற்றில், 1960-ல் ஏற் பட்ட சாஸ்திரி - சிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங் கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமை கள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகு திகளில் தமிழர்களுக்கு அரசியல் அதி காரம் வழங்குவது தொடர்பாகவும் எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம் பெற்றன.
ஆனால், அவை பெருமளவுக்கு அமல் படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த - இருக்கும், முதலாளித் துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் - சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந் திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்ச னைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவ னிக்கத்தக்கவை.
‘‘இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசி யப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித் துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டு களாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண் டும் என்று கோருகிறோம்.’’
இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவி மடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடு வது மாபெரும் முட்டாள்தனமாகும்.
சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைக ளும் நீட்டிப்பதை உத்தரவாதப்படுத்த இலங்கைஅரசு உடனடியாக நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.
(1)இலங்கைப் பிரச்சனைக்கு அர சியல் தீர்வு காணப்படுவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
(2)யுத்தத்தில் துயருற்று வேதனைக் குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங் கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
(3)சொந்த மண்ணிலேயே வீடற்ற வர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரி லேயே வீடுகள் கட்டித் தந்து, புனர மைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
(4) தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத் தில் அங்கே சிங்களவர்களைக் குடிய மர்த்திடவும் அரசு முடிவு செய்தி ருப்ப தாக தகவல்கள் வந்து கொண் டிருக் கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்க ளில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
(5) தமிழ் மக்களிடமிருந்து அந்நியப் பட் டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயல வேண்டும்.
(6) தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண் டும். விசாரணையின்றி சிறையி ல டைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர் கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
(7) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.
(8) இலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட் டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயி னும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாக வும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைக ளில் போதிய அளவில் தமிழர் கள் அமர்த்தப்பட வேண்டும்.
(9)இனியும் காலத்தை வீணடிக் காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறை யில் அதிகாரப் பரவலாக்கும் திட் டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
(10) இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)