Sunday, October 4, 2015

மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சிகள்: அமெரிக்க ராணுவத்தின் அங்கமாகும் இந்தியா




மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சிகள்: அமெரிக்க ராணுவத்தின் அங்கமாகும் இந்தியா
(மலபார் பயிற்சிகள் என்பது ஆசியாவில் அமெரிக்காமேற்கொண்டுவரும் ராணுவ போர்த்தந்திர நடவடிக்கைகளுடன் இந்தியா தன்னைமுழுமையாக இணைத்துக் கொண்டு விட்டது என்பதன் அடையாளமேயாகும். அமெரிக்காவுடன் இத்தகைய போர்த் தந்திர ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதென்பது, இந்தியாவின் சுதந்திரமான மற்றும் சுயேச்சையான போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குத் தீங்கு பயப்பதாகும். ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்தியா மாறி விடக்கூடாது.)
வரும் அக்டோபர் 14 மற்றும் 21 தேதிகளுக்கு இடையே, இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு கப்பல்படை பயிற்சி களில் ஈடுபடவுள்ளன. இதன் மூலம் இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு மேலும் கெட்டிப்படுத்தப்படுகிறது. மல பார் பயிற்சிகள் இந்திய - அமெரிக்க கப்பல்படைகளுக்கு இடையிலான கூட்டு கப்பல்படை பயிற்சிகளாக, 1992இல் தொடங்கியது. இக்கூட்டுப் பயிற்சிகள் பின்னர் இருநாடுகளின் விமானப் படைப்பிரிவுகளுக் கும், ராணுவப்படை (armies) பிரிவு களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. பின்னர் இந்தப் பயிற்சிகள்அனைத்தும் 2005ஜூன் மாதத்தில் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்புஒப்பந்தத்தின்படி (Indo-US defence framework agreement)விரிவுபடுத்தப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டன.
ஜப்பானும் கைகோர்க்கிறது
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மலபார் பயிற்சிகள் மிகவும் குறிப்பிடத் தக்கவைகளாகும். இந்தியப் பெருங் கடலில் இந்த ஆண்டு நடைபெறும் இப்பயிற்சிகளில் ஜப்பான் கப்பற்படையும் பங்கெடுத்துக் கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப் பட்டிருக்கின்றது என்பதையே இது பிரதிபலிக்கிறது.
உண்மையில், அமெரிக்காவுக்கும் இந்தியா வுக்கும் இடையிலிருந்து வந்த இரு தரப்பு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி களை மேம்படுத்தி, ஜப்பானையும், ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொள்ளு மாறு அமெரிக்கா வற்புறுத்திக்கொண்டு இருந்தது. இந்நான்கு நாடுகளையும் உள் ளடக்கிய கூட்டுப்பயிற்சியே தேவை என்றுஅமெரிக்கப் பாதுகாப்புத் துறை (US Defence Department) யின் ஆவணத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
சீனாவை அடக்கி வைக்க வேண்டும்என்பதற்காக, ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்குள் அமெரிக்கா தன் வேலை களைச் செய்துகொண்டிருக்கிறது.ஆசியாவைத் தன் போர்த்தந்திர நட வடிக்கைகளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிஅமைத்திட அமெரிக்கா மேற்கொண் டுள்ள அனைத்து வேலைகளுக்கும் நரேந்திர மோடி அரசாங்கம் முழுமை யாக ஒத்துழைப்பினை நல்கத் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி யில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகையின்போது ஆசியா - பசிபிக் பிராந்தி யம் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீதானகூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத் திட்டபோதே இது தெளிவாகிவிட்டது. வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஜப்பானும் இப்போது சேர்ந்து கொண்டி ருப்பதிலிருந்து, தெற்கு சீனக் கடலிலும் மற்றும் பிராந்தியத்திலும் சீனாவின் போக்குவரத்து குறித்து அச்சப்பட்டு, இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப் படுத்திக் கொள்ள ஜப்பான் விரும்பு வதையே காட்டுகிறது.
ஏமனில் தாக்குதல் நடத்தியஅணுசக்தி விமானங்கள்
அமெரிக்கா இப்பயிற்சிகளுக்காக பல இடங்களில் தன்னுடைய தியோடர் ரூஸ்வெல்ட் எனப்படும் நிமிட்ஸ் வகைஅணுசக்தி விமானங்களை(a Nimitz class nuclear powered aircraft carrier, Theodore Roosevelt) நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த விமானங்கள் செர்பியா, இராக் மற்றும் சவூதி ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஏமனில் நடைபெற்ற ஆகாயவழித் தாக்குதல்களில்பயன்படுத்தப்பட்டவைகளாகும். அமெரிக்காவின் குறிக்கோள், தன்னுடைய ராணுவ நடவடிக்கை கள் அனைத்திற்கும் இத்தகைய கூட் டுப் பயிற்சிகளின் மூலமாக இரு நாட் டின் படைகளையும் பயன்படுத்திக் கொள்வதேயாகும். இவ்வாறு,மலபார் பயிற்சிகள்என்பது ஆசியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ போர்த்தந் திர நடவடிக்கை களுடன் இந்தியா தன்னை முழுமையாகஇணைத்துக் கொண்டு விட்டது என்பதன் அடையாளமேயாகும். அமெரிக்காவுடன் இத்தகைய போர்த் தந்திர ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதென்பது, இந்தியாவின் சுதந்திரமான மற்றும் சுயேச்சையான போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குத் தீங்கு பயப்பதாகும். ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக் கைகளின் ஓர் அங்கமாக இந்தியா மாறி விடக் கூடாது. மலபார் பயிற்சிகளை அனைத்து தேசப்பற்று சக்திகளும் மற் றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுபட்டுநின்று எதிர்த்திட முன்வர வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி

No comments: