Tuesday, August 25, 2015

சுதந்திரதினத்தில் வெற்று உரை



சென்ற ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையில் மிகவும் படாடோபமாகவும் ஆரவார முழக்கங்களுடனும் ஆற் றிய உரையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி ஆற்றிய உரை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது. உண்மையில் மோடி மிகவும் தற்காப்பு அடிப்ப டையிலேயே பேசி இருக்கிறார். அவருடைய உரை அநேகமாக சென்ற ஆண்டு செங்கோட்டையில் ஆற்றிய உரையின் போது அறிவித்தவை சம்பந்தமாகவும் அதில் அரசாங்கம் என்னவெல்லாம் நிறைவேற்றி இருக்கிறது என்கிற ரீதியிலும்தான் இருந்தது. ஆனால் அவ்வாறு பூசி மெழுகுவதற்குக்கூட அவர் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. தூய்மையான பாரதம் என்னும் முழக்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்ததுஎன்றபோதிலும், எங்கேயும் அது அமல்படுத்தப்படாததையே காண்கிறோம். மாநகரங்களும், நகரங்களும் இது விஷயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காட்ட வில்லை. அது, குப்பைக்கூளங்களை அப்புறப்படுத்தும் பணியாக இருந்தாலும் சரி, துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை அப் புறப்படுத்தும் பணியாக இருந்தாலும் சரி அல்லது சுகாதாரம் பேணும் பணி யாக இருந்தாலும் சரி எவ்வித முன்னேற்றத் தையும் காட்டவில்லை. சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மிகவும் கேடுபயக்கக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது.
மாணவிகளுக்கு தனிக் கழிப்பிடங்கள்
பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக் குத் தனிக் கழிப்பிடங்கள் கட்டுவதைப் பொறுத்தவரை, நாட்டில் உள்ள 2.62 லட்சம் பள்ளிகளில் 4.25 லட்சம் கழிப் பிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் இதுதொடர்பான குறியீடு அநேகமாக நிறைவேறியுள்ளதாகவும் மோடிகூறியிருக்கிறார். இந்தப் புள்ளிவிவரங்கள் எதார்த்த நிலைமைகளுடன் ஒத்துப்போக வில்லை. மேலும், கழிப்பிடங்கள் கட்டப் பட்டிருக்கக்கூடிய இடங்களிலும் அவற் றில் பலவற்றிற்கு, தண்ணீர் வசதியோ மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளோ கிடையாது.ஜன்தன் யோஜனா திட்டத்தைப் பொ றுத்தவரை, இது முந்தைய அரசாங்கத்தின் திட்டம்தான், பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் 17 கோடி கணக்குகள் துவக்கப்பட்டிருப்பதாக மோடி ஜம் பமடித்திருக்கிறார். ஆனால், இவற்றில் கிட்டத்தட்ட பாதி கணக்குகளில் வங்கி இருப்பு என்பது பூஜ்யம் என்பதையோ, அவை செயலற்ற நிலையில் இருப் பதையோ அவர் கூற வில்லை. மோடி இந்தத்தடவை தன்னுடைய “இந்தியாவில் உற்பத்திசெய்’’ கோஷம் குறித்து அதிகம் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் அதுதொடர்பாக பதிவு செய்வதற்கு அவரிடம் அதிகமாக எதுவும்இல்லை. நாட்டின் பொருளாதார நிலை தம்பட்டம் அடிக்கக் கூடிய அளவிற்கு இல்லை. நாட்டின் ஏற்றுமதி ஏழாவது மாத மாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி 14.11 சதவீத அளவிற்கு சுருங்கிவிட்டது. கேந்திரமான துறைகளில் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் வளர்ச்சி வீதம்8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் அதுஇந்த ஆண்டு 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. முதலீட்டிலும் மேல்நோக்கிய போக்கு எதுவும் இல்லை. சென்ற சுதந்திரதினத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டில் வேளாண் நெருக்கடி மிகவும் கூர்மையடைந் திருக்கிறது.
ஊழல் கரையான்களும் ஊசிகளும்
மோடி தன்னுடைய தூய்மையான அரசு குறித்து இந்தத்தடவை அதிகமாகப் பேச வில்லை. தங்கள் ஆட்சியின் ஓராண்டு முடிவுற்ற சமயத்தில் அதனைக் கொண் டாடுகையில், தங்களின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் ஊழல் எதுவும் கிடையாது என்று சொல்லியதற்குப்பின்னர், பாஜக வின் அலமாரிக்குள்ளிருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்கள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. லலித்கேட் விவகாரத்தில் மத்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சம் பந்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப்பிர தேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள ஊழலுக்கு புதிய எல்லைகளையே அமைத்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல் களிலிருந்து, மோடியின் தூய்மை பாரதம்பிரச்சாரத்தை மோடி தன்னுடைய கட்சிக் குள்ளேயும், மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள தன் அரசாங்கங்களுக்குள்ளேயுமே அதிக அளவில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்தசமாச்சாரங்கள் குறித்து பிரதமர் மோடிவாயே திறக்கவில்லை. அவர் கூறியதெல்லாம், ஊழல் என்பது அனைத்து இடங்களி லும் கரையான்போல பரவி அமைப்பையே அரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஊழல் கரையானை ஒழித்துக்கட்ட அமைப்பின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ஊசிகள் குத்த வேண்டும் என்று ஒருமருத்துவரைப்போல அறிவுரை கூறினார்.ஆனால், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுக்கும், தன் கட்சி மாநில முதல்வர்களுக்கும் அந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்று கூறாமல் நழுவிவிட்டார். லோக்பால் தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னும் அதனை ஏன் அமைக்கவில்லை என்பதுகுறித்து பிரதமர் மிகவும் தெளிவானமுறை யில் மவுனம் சாதிக்கிறார்.மதவெறி சக்திகள் ஆட்டம்நம் சமூகத்தில் வகுப்புவாதத்திற்கும் சாதியத்திற்கும் இடமில்லை என்று மோடி அறிவித்திருக்கிறார். ஆனால் நடந்துள்ள நிகழ்வுகள் வேறு மாதிரியாகக்காட்டுகின்றன. மோடி அரசாங்கம் அமைந்தபிறகு மதவெறி சக்திகளின்ஆட்டம் முழுவீச்சுடன் அதிகரித்திருக் கின்றது. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரிக் கும் மே மாதத்திற்கும் இடையில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் 24 சதவீதம்அதிகரித்திருக்கின்றன. இந்துத்துவா கொள்கைகளை எதிர்ப்பவர்கள் எவராகஇருந்தாலும் அவர்கள் பாகிஸ்தானுக் குப் போய்விட வேண்டும் என்று பாஜகதலைவர்கள் மட்டுமல்ல, அமைச்சர்க ளும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். மதவெறி சித்தாந்தத்தைப் பரப்பும் குறிக் கோளுடன் கேந்திரமான கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை அமர்த்தும் வேலையில் மோடி அரசாங்கம் மிகவும் குறியாக இருக்கிறது. மோடியின் உரையில் அயல்துறைக் கொள்கை குறித்து எதுவுமே கூறாததைக் கவனிக்க வேண்டும். சென்ற சுதந்திர தினத்திற்குப் பின்னர் நரேந்திர மோடிஅதிகமான எண்ணிக்கையில் அயல்நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க முறையில் வங்கதேசத்துடன் எல்லைகளைத் திருத்தி அமைத்துக் கொண்டதைக்கூட அவர் கூறவில்லை. அயல் விவகாரங்கள் துறை என்பது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று கருதுவதுபோன்றே இதிலிருந்து தோன்றுகிறது. எனவேதான் இதுகுறித்து அவர் எவருட னும் பகிர்ந்துகொள்ளத் தயாரில்லை போல் தெரிகிறது.
மிகப்பெரிய ஏமாற்றம்
முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு எதுவும்மோடியின் உரையில் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாகும். மக்களவைத் தேர் தல் பிரச்சாரத்தின் துவக்கத்திலேயே இது தொடர்பாக ஓர் உறுதிமொழியை மோடி அளித்திருந்தார். பாஜக அரசாங்கம் அமைந்த பின்பு அதனைத் திரும்பவும் வலியுறுத்திக் கூறினார். ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது என்ப துடன் அவர் தன்னைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக உருப்படி யான திட்டம் எதையும் அவர் அறிவித்திட வில்லை. இவ்வாறு மோடியின் உரையில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை என்பது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் அன்று தில்லி, நாடாளுமன்ற வீதியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ராணுவத்தினரை மிகவும் அருவருப்பான முறையில் தில்லி காவல்துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் இதனை முன்கூட் டியே எச்சரித்துவிட்டது. இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதம் நாடு முழு வதும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் கடுஞ் சீற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இம்முறை மோடியின் உரையில், புதியமுழக்கங்களோ, புதிய உறுதிமொழிகளோ மிகவும் குறைவாகத்தான் இருந்தன. பிரதமர், “புறப்படு இந்தியா’’என்று அறிவித்த போது, அவர் கார்ப்பரேட்டுகளின் கைத்தடி யாகவே கண்ணுக்குத் தெரிந்தார். மேலும் அவர், தாராளமாக ஓர் உறுதி மொழியையும் அளித்துள்ளார். அதாவது அடுத்த ஆயிரம் நாட்களுக்குள் மின்சாரம் இல்லாத - நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 500கிராமங்களுக்கும் - (அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்) மின் இணைப்புவழங்கப்படுமாம்.மோடி, சொன்னதையும் செய்ததையும் வைத்துப்பார்க்கும்போது, அவர் செங் கோட்டையில் நின்றுகொண்டு ஆற்றிய இரண்டாவது சுதந்திரதின உரையில், அவர்கூறாத பல விஷயங்களின் காரணமாக இந்த அரசாங்கத்தின் தோல்விகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என்றே முனைப்பாய்த் தெரிகிறது. 
(ஆகஸ்ட் 19, 2015)
(தமிழில்: ச.வீரமணி)

No comments: