Sunday, August 4, 2013

தெலுங்கானா தனி மாநிலம்



பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட மழுப்பல் பேச்சுகளுக்குப் பின், தற் போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தி லிருந்து தெலுங்கானா மாநிலம் தனியே அமைக்கப்படும் என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக நிறைவேற்றியிருப்பதனை அடுத்து வர விருக்கும் மாதங்களில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. ஆயினும், இம் முடிவினை எதார்த்தமாக்கிட மேலும் பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.மத்திய அமைச்சரவை தனித் தெலுங் கானா மாநிலம் அமைத்திட ஒப்புதலை அளித்தபின்னர், மத்திய அரசு புதிய மாநிலம் உருவாக்கப்படுவதற்கான தீர் மானங்களைத் தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை ஆகிய இரு அவைகளிலும் தனித்தனியே கொண்டுவந்து நிறைவேற்றிட நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மத்திய அமைச்சரவைக்கு மீண்டும் அனுப்பிவைப்பார். மத்திய அமைச்சரவையானது தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து இரு கூறுகளாகப் பிரிப்பதற்கான நடைமுறை யைப் ஆழமாகப் பரிசீலிப்பதற்காக மீண்டும் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திடும்.

அமைச்சரவைக்குழு அளித்திடும் திட்டங்களைக் குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மீண் டும் அவர் ஆந்திர மாநில சட்டமன்ற பேர வைக்கு அனுப்பி வைத்து ஒருகுறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதன் கருத் தைக் கேட்டறிவார். பின்னர் மத்திய அமைச்சரவையால் ஒரு வரைவு சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டு நிறை வேற்றப் படுவதற்காக நாடாளுமன்ற மக்க ளவைக்கும், மாநிலங்களவைக்கும் தனித் தனியே அனுப்பி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்றப் பட்டபின்பு, குடியரசுத் தலைவர் புதிய மாநிலம் எந்தத் தேதியிலிருந்து உதய மாகிறது என்பதை நிர்ணயிப்பார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் அரசி தழ்களில் குடியரசுத் தலைவரின் தேதி நிர்ணயிக்கப்பட்ட ஆணை பிரசுரிக்கப் பட்ட பின்னர், அத் தேதியிலிருந்து புதிய தெலுங்கானா மாநிலம் உதயமாகிடும். தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கும் பிரச்சனை மீது காங்கிரஸ் அரசின் மழுப்பல் என்பது ஒன்றும் புதிதல்ல. நாற்பதாண்டுகளுக்கு முன்பு (1968இ லிருந்தே) மிகப் பெரிய அளவில் வன் முறை கிளர்ச்சிகள் வெடித்து, அப்போது நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக் கிச் சூட்டில் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களையும் உடைமைகளை யும் இழந்தபின்னர், தெலுங்கானா பிராந் தியத்தின் வளர்ச்சியை உத்தரவாதப் படுத்துவதற்காகவும் அதன் பிற்பட்ட பொருளாதார நிலையை ஒழிப்பதற் காகவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. 1973ல் மத்தியில் ஆட்சிசெய்த அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் 32ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அது 1974இல் அமலுக்கு வந்தது.

அரசி யலமைப்புச் சட்டத்தில் 371ஆவது பிரிவில் 371-னு, ‘‘ஆந்திரப் பிரதேச மாநிலம் தொடர்பாக சிறப்பு ஷரத்துக்கள்’’ என்னும் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட் டது. அதன்படி குடியரசுத் தலைவர், ‘‘ஓர் ஆணையின்படி மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள மக்கள், அரசு மற்றும் பொது வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நேர்மை யான முறையிலும் நியாயமான முறை யிலும் பெறக்கூடிய விதத்தில் வாய்ப்பு களையும் வசதிகளையும் அளித்திடு வார்.’’ கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில், தெலுங்கானா மக்களுடைய பிற்பட்ட நிலைமைகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஆட்சியாளர்களால் கூறப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் நம்பிக்கை களும் அநேகமாக எதுவுமே நிறைவேற் றப்படாமல் அம்மக்கள் வஞ்சிக்கப்பட் டனர் என்பதே கசப்பான உண்மை யாகும். கடந்த நாற்பதாண்டுகளிலும் தெலுங்கானா மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளையும் நம்பிக்கைகளையும் நிறைவேற்றாததற்கு பிரதானமாகப் பொறுப்பேற்க வேண்டியது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில் நாற்பதாண்டுகளில் நீண்ட காலம் இம்மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சிப் பொறுப்பி லிருந்தது இக்கட்சிதான்.ஆயினும் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான நட வடிக்கை என்பது தற்போது இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் 371-னு பிரிவை நீக்குவதாகும். தெலுங்கானா மாநிலம் சட்டப்பூர்வமாக அமைவதற்கு முன்னர் இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அது நிறைவேற்றப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்ட சமயத்தில் தெலுங்கு பேசும் மக்கள்தான் முதல் முழக்கமிட்டார்கள் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியது அவசிய மாகும்.

தியாகி பொட்டி ஸ்ரீராமுலு விசாலாந்திராவுக்கான இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் எதிரொலியை ஐக்கிய கேரளம் மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரம் ஆகிய இயக்கங்களிலும் காண முடிந்தது. இவற்றிற்காக நடை பெற்ற பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களின் வலிமைதான், சுதந்திர இந்தியாவுடன் மன்னர் சமஸ்தானங்கள் இணைந்த பின்னர், நாட்டில் மறுசீர மைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு இட்டுச்சென்றன. மொழி வாரி மாநிலங்கள் என்னும் ஜனநாயகக் கொள்கை அடிப்படையில் இந்திய மாநி லங்களின் ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் நின்று போராடி வருகிறது. மத்தியிலும் பல்வேறு மாநிலங் களிலும் காங்கிரஸ் கட்சித் தலைமையில் உள்ள அரசாங்கங்கள் நிலைமைகளை முரட்டுத்தனமாய்க் கையாளுவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனி மாநில கோரிக்கைகள் தற்போது எழுந்தவண்ணம் உள்ளன. தெலுங்கானா குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிவிப்பு வந்தவுடனேயே தனி கூர்க்கா லாந்து மாநிலம் வேண்டுமென்று கோரி மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூன்று நாள் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. போடோலாந்து தனி மாநிலத்திற்கும் இதுபோன்று அழைப்பு விடுக்கப் பட்டிருக்கிறது. பல்வேறு அடையாளங் களின் அடிப்படையில் புதிய மாநிலங்கள் உருவாவதற்கான இத்தகைய அழைப்புகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் கட்ட மைப்புக்கு ஆபத்தான விளைவுகளை உருவாக்கிடும் என்பது மட்டுமல்ல மக்கள் மத்தியில் நாட்டில் பிரிவினை உணர்வுகளைக் கட்டவிழ்த்து விடுவதற் கும் இட்டுச் செல்லும்.

எனவே தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், மக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் மக்கள் ஆத்திர மூட்டலுக்கு இரையாவதற்கான தூண்டு தலிலிருந்து தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். அதே சமயத்தில் நாட்டில் அமைதியையும், இயல்பு வாழ்க்கை யையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசாங்கங் களின் கடமையுமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: