Sunday, December 30, 2012

2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!



வாசகர்கள் அனைவருக்கும் புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆயினும் தலைநகரில் மிகவும் கொடூர மான முறையில் கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அக் கொடுமைக்கு எதிராகவுள்ள கோபத் துடனும் கனத்த இதயத்தோடும்தான் இவ் வாழ்த்துக்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம். (அப்பெண் டிசம்பர் 29 அன்று இறந்துவிட்டார்.)

பழையன கழியட்டும், புதியன பிறக் கட்டும் என்று பொருள்படும் டென்னிசன் அவர்களுடைய (Ringing out the old, ringing in the new) பாடல் வரிகள் இத் தருணத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப் படும். சிறந்ததோர் வாழ்க்கைக்கான மாற் றங்கள் வரவிருக்கும் ஆண்டில் வரும் என் பதற்கான நம்பிக்கை அவரது பாடல் வரி களில் உண்டு.

ஆயினும், கழிந்து சென் றுள்ள ஆண்டில் நமக்கு ஏற்பட்ட அனுப வங்கள் அவரது நம்பிக்கை வரிகளைப் பொய்த்துப்போகச் செய்யக்கூடிய விதத் தில் அமைந்திருக்கின்றன. நம்பிக்கை கள் எதுவுமே எதார்த்த உண்மைகளாகத் தானாய் மாறிவிடாது. சிறந்ததோர் வாழ்க் கை வேண்டுமானால் அதனை மக்கள் விடாப்பிடியான போராட்டங்கள் மூலமே சாதித்திட முடியும். சென்ற ஆண்டு, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது லோக்பால் சட்ட முன்வடிவை மாநிலங்களவையில் நிறை வேறவிடாமல் சவக்குழிக்கு அனுப்பிய துடன் 2012ஆம் ஆண்டு முடிவுக்கு வந் திருக்கிறது. ‘‘எது எப்படி இருந்தபோதி லும், உயர் மட்ட அளவில் நடை பெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரி யான அமைப்புகளை உருவாக்குவதற் காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற் கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத் தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்,’’ என்று நாம் கூறினோம். ஆயினும் மக்களின் நிர்ப் பந்தங்கள் கடுமையாக இருந்தபோதிலும் இது நடைபெறாமலே 2012 முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயத்தில், நாட்டையே குலுக் கிய எண்ணற்ற ஊழல்களை அடுக் கடுக்காக 2012 பார்த்திருக்கிறது. நம் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட் டிருக்கின்றன. நம் நாட்டின் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை உருவாக்கு வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பெரு மளவில் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி வேறு காரியங்களுக்காகத் திருப்பிவிட் டது மட்டுமின்றி, நம் நாட்டின் வளங்களும் இரக்க உணர்ச்சி எதுவுமின்றி கொள்ளை யடிக்கப்பட்டிருக்கின்றன. ‘‘உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத் தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியான முறையில் இணைத்திடாமல் வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது,’’என்று நாம் சொல்லி யிருந்தோம். ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோச மான முறையில் பொருளாதார சீர்திருத் தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது.

இது, நாம் எதிர் பார்த்ததைப்போல, மக்கள் மீது மேலும் சொல்லொண்ணா அளவில் பொருளா தாரச் சுமைகளை ஏற்படுத்திடும். ஆட்சி யாளர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யின் வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக இருந்திடும் என்று சொல் லியிருந்தார்கள். ஆனால் வெறும் 6 விழுக் காடு அல்லது அதற்கும் குறைவான விகி தத்தோடேயே இந்த ஆண்டு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அனைத்து அத் தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மக்களின் துன்ப துயரங்களும் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியும் மந்தமும் தொடர்ந்து மோசமாகிக் கொண் டிருக்கக்கூடிய பின்னணியில், ஆட்சி யாளர்கள் கடைப்பிடித்துவரும் நவீன தாராளமயக் கொள்கையானது நாட்டில் உடையோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்குவதற்கு இட்டுச் செல்கிறது. ஆட்சியாளர்களின் சீர்திருத்தக் கொள் கைகள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துத்தரும் அதே சம யத்தில், நாட்டு மக்களையும் வறியவர் களாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் பெருவாரியாக உள்ள உழைக்கும் மக்க ளின் மீது பொருளாதாரச் சுரண்டலைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களால் கொள்ளை லாபம் ஈட்ட முடியும். 2013ஆம் ஆண்டில் நம் மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கித் தர வேண்டுமானால், ஆட்சியாளர்களின் கொள்கைத் திசைவழியை மாற்றி அமைத் திட வேண்டியது அவசியமாகும். அத் தகைய மாற்று என்பது நமக்குத் தேவை யான சமூக மற்றும் பொருளாதாரக் கட்ட மைப்பு வசதிகளை உருவாக்கிட பொது முதலீடுகளை அதிகப்படுத்துவதில் அடங்கி இருக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு உருவாக்கி, அதன் மூலம் நாட்டில் மக்களின் குடும்பத் தேவைகளை விரிவாக்கிட முடியும். இது, உற்பத்தித் துறைக்கும் (Manufacturing Sector) ஊக்கத்தைக் கொடுத்து, ஒட்டு மொத்தத் தொழில் உற்பத்தியையும் அதி கரித்திட இட்டுச் செல்லும். இத்தகைய மாற்றுக் கொள்கைத் திசைவழி மூலம் மட் டுமே நிலையான மற்றும் உள்ளீடான வளர்ச்சியை அளித்திட முடியும். கடந்த ஐந்தாண்டுகளாக உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதிகள் கூர்மையாக வீழ்ச்சியடைந் துள்ள சூழ்நிலையில், இத்தகைய மாற்றுத் திசைவழியே பொருத்தமான ஒன்றாகும். இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக் கொள்கை செயல்பட முடி யாது. நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். ஆனால் ஆட்சியா ளர்கள் கடைப்பிடிக்கும் தற்போதைய நவீன தாராளமய சீர்திருத்தங்கள், நாட் டில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் வாங்கும் சக்தியைக் கூர்மையாக வீழ்ச்சி யடையச் செய்து, எதிரான விளைவு களையே ஏற்படுத்திடும். அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படு கிறது: பொது முதலீடுகளுக்குத் தேவை யான வளங்களுக்கு எங்கே போவது? சென்ற ஆண்டில் நாம் திரும்பத் திரும்ப இது குறித்து விளக்கியிருப்பதைப்போல, ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய வரிவருவாயைத் தள்ளுபடி செய்திருப்பது மட்டும் 5.28 லட்சம் கோடி ரூபாய்களாகும்.

இது நம் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறையான 5.22 லட்சம் கோடி ரூபாயைவிட அதிக மாகும். ஆனால் ஆட்சியாளர்கள் பற்றாக் குறையைச் சரி செய்கிறோம் என்ற பெய ரில் டீசல், சமையல் எரிவாயு, யூரியா முதலானவற்றின் விலைகளை உயர்த்தி, ஏழை மக்களுக்கு அளித்துவந்த அற்ப மானியங்களையும் கண்டபடி வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். இவ்வாறு பற் றாக்குறைக்கு, ஆட்சியாளர்கள் பணக் காரர்களுக்கு அளித்துவந்த வரிச்சலுகைகள் அல்லது மானியங்கள்தான் கார ணமாகும். ஆனால் அதனால் ஏற்பட்டுள்ள சுமைக ளையும் துன்பதுயரங்களையும் ஏழை மக்கள் தாங்க வேண்டிய கொடுமை.நாட்டு மக்களில் பெரும்பான்மையான வர்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், சிறந்ததோர் இந்தியா வைக் கட்ட வேண்டுமானால் ஆட்சியா ளர்களின் இத்தகைய கொள்கைத் திசை வழியை அனுமதித்திட முடியாது. எனவே, 2013ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள் தங் களது கேடு பயக்கும் கொள்கைகளை மாற்றியமைத்திட வற்புறுத்தும் வகையில் - அவர்களுக்குப் பெரிய அளவில் நிர்ப் பந்தங்கள் கொடுக்கும் விதத்தில் - வெகு ஜனப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும். சுதந்திர இந்தியாவின் வர லாற்றில் முதன்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும், தங்கள் அரசியல் பின்னணியைப் புறந்தள்ளிவிட்டு, முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்று பட்டு நின்று, ஆட்சியாளர்களின் கொள் கைகளுக்கு எதிராக, இரண்டு நாள் தொடர் வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்திருக்கின்றன. நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் அனைவ ராலும் இதன் வெற்றி உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் தாங் கள் கடைப்பிடித்துவரும் தற்போதைய கொள்கையைத் தொடர்வது என்பதன் பொருள், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமான விதத்தில் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது என்பதே யாகும்.

அதுமட்டுமல்ல, நம் நாட்டின் செல் வங்களை மேட்டுக் குடியினர் லஞ்ச ஊழல் மற்றும் ஆட்டபாட்டங்கள் மூலம் வற்றச் செய்வது என்பதுமாகும். மேலும் நாட்டின் சமூகப் பின்ன ணியை ஆராயுங்கால், 2012ஆம் ஆண்டு கட்டப் பஞ்சாயத்துக்கள், சாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்தல், மதச்சிறு பான்மையினருக்கு அடிப்படை உரிமை களைக் கூடத் தர மறுப்பது தொடர்தல், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அளவிற்கு மீறி அதிகரித்தல் போன்ற வற்றின் மூலம் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தோம். தில்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கூட்டு வன் புணர்ச்சிக்கு ஆளான சம்பவம் என்பது தனித்த ஒன்றல்ல. சிறுமிகள் உட்பட பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் வந்து குவிகின்றன. நம் நாட்டின் மாண்புகள், நவீன தாராளமயப் படுபிற் போக்கு கலாச்சாரத்தின் காரணமாக சிதைந்து சின்னாபின்னமாகி வருவதன் விளைவாகவே சமூகத்தின் மனிதாபி மானமற்ற இத்தகைய போக்குகள் அதி கரிப்பதற்குக் காரணமாகும். மேலும், இத் தகைய பொருளாதார சீர்திருத்தங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூல தனத்தின் லாபத்தைப் பெருக்கக்கூடிய அதே சமயத்தில், மக்களின் வாழ்க்கைத் தேவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, சுருங்கச் செய்யவும் இட்டுச் செல்கிறது. இதன் காரணமாக சமூ கத்தின் பல பிரிவினரும் தாங்கள் பெற்று வந்த கொஞ்சநஞ்ச சலுகைகளும் தங் களை விட்டுப் பறிபோகும்போது அவற் றைத் தக்க வைப்பதற்காகக் கடுமை யாகப் போராட வேண்டிய நிலைக்குத் தள் ளப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய நிலை, நாட்டில் இயங்கிவரும் அனைத்துவித மான பிரிவினைவாத மற்றும் சீர்குலைவு சக்திகள் மீண்டும் தழைத்தோங்குவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. இதன் கார ணமாகவே மீண்டும் பிற்போக்குத்தன மான போக்குகள் வலுப்பெற்றிருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டில் இவற்றிற்கு எதி ராகவும் கடுமையான முறையில் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.2013ஆம் ஆண்டில் கர்நாடகா, மத் தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, திரி புரா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய எட்டு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள் கின்றன.

இந்திய ஆளும் வர்க்கங்கள் நாட் டின் வளங்களைக் கொள்ளையடித்து நாட்டு மக்களை வறுமையில் தள்ளும் தாங்கள் கடைப்பிடித்துவரும் கொள்கை களுக்கு எதிராக மக்கள் மேற் கொண் டுள்ள போராட்டங்களிலிருந்து அவர் களைத் திசைதிருப்பிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றன. இத்துடன், 2014ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலும் வர இருக்கிற சூழலில், 2013இல் ஆட்சி யாளர்கள் மக்களை ஏமாற்றக்கூடிய விதத் தில் சில சில்லரைத்தனமான மேம்பூச்சு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அத் தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் பொது விநியோக முறை மூலமாக அத் தியாவசியப் பொருள்களைக் கொடுப்ப தற்குப் பதிலாக நேரடி ரொக்கப் பட்டு வாடா திட்டம் (Direct Cash Transfer scheme) குறித்த அறிவிப்பாகும். இது ஒரு மாபெரும் மோசடித்திட்டமாகும். ஏனெ னில், விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இவர்கள் அளித்திடும் ரொக்கத்தின் உண்மை மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கும். அதன் விளைவாக, மக்கள் தங்களின் குறைந்தபட்சத் தேவை களைப் பூர்த்தி செய்ய இயலா நிலைக்குத் தள்ளப்படுவது என்பதும் அதிகரித் துக்கொண்டே இருக்கும். பொது விநி யோக முறை மூலமாக, வறுமைக் கோட் டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை அதிகபட்சம் கிலோ 2 ரூபாய் விலைக்கு அளிப்பதன்மூலமே ஓர் பொருள்பொதிந்த உணவுப் பாதுகாப் பினை நம் மக்களுக்கு அளித் திடமுடியும்.வரவிருக்கும் ஆண்டில் நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளில் ஒருசிலவற்றை இவ்வாறு விவாதித் திருக்கிறோம்.
பெரும்பான்மையான மக் களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து, சிறந்ததோர் வாழ்க்கையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமானால், வெகுஜனப் போராட்டங்களை வலுவாக முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்பதிலிருந்து நம் கவனத்தை சிதறடித்துவிடக் கூடாது. நம்முடைய வல்லமை என்ன என் பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக 2013ஐப் பயன்படுத்திடாமல் நாம் இருந்துவிடக் கூடாது. 2013ஐ வர வேற்போம். நாட்டு மக்களின் உக்கிரமான போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக அதனை மாற்றி, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கினைப் பெறக் கூடிய விதத்தில் அதனை மாற்றி அமைத் திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: