Showing posts with label Alternative Policies needed. Show all posts
Showing posts with label Alternative Policies needed. Show all posts

Monday, June 24, 2013

மாற்றுக் கொள்கை தேர்ந்தெடுத்திடுக!



அரசியல்வானில் சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் நாட்டில் ஒரு மாற்று அரசியல் கூடாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஒருபக்கத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது சிறுபான்மை அரசாக சுருங்கிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகளில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி யைத் தவிர மற்ற அனைத்தும் தங்களைக் கழட்டிக் கொண்டுவிட்டன. அது ஆட்சியில் உயிர்பிழைத்து நீடித்திருப்பதற்குக் காரணமே, சமீபத்தில் கொஞ்ச காலமாக, அது சமாஜ் வாதிக் கட்சியிடமிருந்தும், பகுஜன் சமாஜ் கட்சியிடமிருந்தும் வெளியிலிருந்து ஆதரவு பெற்றுக் கொண்டிருப்பதை வைத்துத்தான். மற்றொரு பக்கத்தில், பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் இருந்த கட்சிகளில் தற்போது அதனுடன் ஒட்டிக்கொண்டிருப்பது சிவசேனையும் அகாலி தளமும் மட்டுமே.தே.ஜ.கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது என்பது, பாஜக தலைமையிலான தேஜகூட்டணிக்குள் தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் ஏற் பட்டுவிட்டதையே பிரதிபலிக்கிறது. ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகச் செயல்படும் பாஜக, தன்னுடைய வெறிபிடித்த அரக்கத்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றும் நரேந்திர மோடியை அதனால் ஏற்படும் அனைத்துவிதமான பலாபலன் களுடனும் பிரதமர் வேட்பாளராக சித்தரித்திட வும் அதன் மூலம் தன் சொந்த சமூகப் பின்ன ணியை தக்க வைத்துக்கொள்ளவும் முன் வந்திருக்கிறது. இந்தத் திசைவழியில் அது எந்த அளவிற்கு வெறியுடன் செயல்படு கிறதோ அந்த அளவிற்கு அது, அடுத்த பொதுத் தேர்தலுக்குப்பின் அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான வல்லமையை இழந்துவிடும்.

நாட்டின் அரசி யலில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் இத்தகைய தீர்க்கப்பட முடியாத முரண்பாட்டின் வெளிப்பாடேயாகும்.இதில் வேடிக்கை வினோதம் என்ன வெனில், நரேந்திர மோடியைவிட எல்.கே. அத்வானி மிகவும் மிதமானவர் போலவும், தாராள முகம் படைத்தவர் போலவும் பாஜக வினரால் சித்தரிக்கப்படுவதுதான். இன் றைக்கு இருக்கும் பாஜக வளர்ந்ததே இதே அத்வானி 1990 செப்டம்பரில் ‘‘பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டு வோம்’’ என்ற முழக்கத்துடன் சோம்நாத்தி லிருந்து அயோத்திக்கு தன்னுடைய இக ழார்ந்த (infamous) ரத யாத்திரையைத் தொடங் கியதன் மூலமாகத்தான். இந்த ரத யாத்திரை யானது நாடு முழுதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறியைக் கூர்மைப்படுத்தி பல இடங்களில் வகுப்புக் கலவரங்களை ஏற் படுத்தி நாட்டையே ரத்தக்களறியாக்கியதுடன் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத் தியது. இந்த ரத யாத்திரைதான் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது. 2014இல் நடைபெறவுள்ள பொதுத் தேர் தல்களிலும் இத்தகைய வளர்ச்சிப் போக்கு கள் தன் பங்களிப்பினைத் தொடர்ந்திடும் அதே சமயத்தில், நாட்டில் உள்ள பெரிய கட்சி களின் கவனத்தை அதிகமான அளவில் ஈர்க் காது இருக்கும் நிகழ்வுகள் என்னவெனில், தற்போது மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கும் பொருளாதார சுமைகளாகும். நாட்டில் பொரு ளாதார மந்த நிலைமை மோசமாகிக் கொண் டிருப்பது தொடர்கிறது. அதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டமும், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எகிறிக்கொண்டிருக்கும் பணவீக்கமும் சாமானிய மக்களின் வாழ்க்கை யை மிகவும் அவல நிலைக்குத் தள்ளியுள் ளன. எரிபொருட்களின் விலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உயர்த்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் கடுமையான வறட்சியின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீளமுடியாத நிலை தொடரும் அதே சமயத் தில், வட இந்தியாவில் மழைக்காலம் முன்ன தாகவே தொடங்கி பெரிய ஆறுகள் அனைத் தும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டு நாட்டின் பல பகுதிகளில் பேரழிவினை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு, நாட்டு மக்களில் பெரும்பான் மையோருக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத நிலை யிலேயே தற்போதைய அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் நடந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஏற்கனவே வாழ்க்கைத்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருக்கக்கூடிய நிலை யில் மேலும் தொடர்ந்து ஏற்றப்படும் சுமைகளி லிருந்து நிவாரணம் கிடைக்காதா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இந்தப் பகுதியில் முன்பு பலமுறை சுட்டிக் காட்டியிருப்பதைப்போல, மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கையால் மாற்றி யமைக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இத்தகைய மாற்றுக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கும், நவீன தாராளமய பொருளாதார சீர் திருத்தங்களுக்கு உண்மையாக இருந்திடும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களாலுமே தர முடியாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் இத்தகையக் கொள்கைகளை எதிர்த்து ஒரு மாற்றுக் கொள் கைத் திசைவழியை உருவாக்கவேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமீபத் தில் நாட்டின் நான்கு முனைகளிலிருந்தும் நடத்திய மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணத்தின்போது, மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்திலும், அதே சமயத்தில் நம் மக்களில் பெரும்பான் மையோரின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கக்கூடிய விதத்திலானப் பொருளா தார வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய விதத் திலும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத் தது. இவ்வாறு ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியில் பயணிப்பதற்கான ஓர் அரசியல் மாற்றுக்காகச் செயல்படும் நேரத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரையறுத்திருப்பதாவது:‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங் கிரசையும் பாஜகவையும் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டியிருக்கிறது. இவ்விரு கட்சிகளுமே பெரும் முதலாளிகள் - நிலப் பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் களின் வர்க்க சுரண்டல் என்றென்றும் தொடர்வதற்கு வழிவகுக்கும் கட்சிகளாகவும், பல்வேறு பிரிவு மக்களின் சமூக ஒடுக்கு முறைக்கும் காரணமாகவுள்ள கட்சிகளாகவும் இருக்கின்றன. அவை நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் நியாயப்படுத்துகின்றன. மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் - தொழிலாளர்களின் அவல நிலைக்குக் கார ணமானதும், பெரும் வர்த்தகப்புள்ளிகள் மற் றும் பணக்காரப் பிரிவினருக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளதும், அதற்காக நாணங் கெட்ட முறையில் ஊழலில் ஊறித் திளைக்க வும் கவலைப்படாத காங்கிரஸ் கட்சியும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமும் தோற்கடிக்கப் படுவது அவசியமாகும். அதேபோன்று இடது, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் முன் னேறுவதற்கு, பாஜக தனிமைப்படுத்தப்படு வதுடன் அதன் மதவெறி மற்றும் வலதுசாரி நிகழ்ச்சிநிரல் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டி யதும் அவசியமும் முக்கியமானதுமாகும்.

‘‘காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது மற்றும் ஜனநாயக மாற்றை முன்வைத்திருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு மாற்று ஓர் இடதுசாரி ஜனநாயக மேடையாகத் தான் இருக்க முடியும். இத்தகைய மாற்று என் பது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் அரசியல் கூட்டணியின் மூலமாக உருவாகி டும் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக மட்டுமே கட்டப்பட முடியும். இதற் கான முயற்சிகளில் ஈடுபடும்போது, ஜனநாய கம், தேசியப் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் பாது காப்பதற்கான பங்கினைச் செலுத்தக்கூடிய, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத சக்தி களுடன் அணிவகுக்க வேண்டிய அவசியம் எழலாம், இத்தகைய கூட்டு மேடைகள் உருவாவது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் கூட்டணியைக் கட்டுவதற்கான நடைமுறைக்கு உதவிட வேண்டும். ‘‘இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் பிரச்ச னைகளின் மீது கூட்டு நடவடிக்கைகளுக்கு முயற்சித்திட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு மேற்கொள்ளும் இயக்கங்களை விரி வாக்கிட முடியும். சில குறிப்பிட்ட கொள்கை விஷயங்களிலும் மக்கள் பிரச்சனைகளிலும் இக்கட்சிகளுடன் நாடாளுமன்றத்திலும் ஒத் துழைப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் மற்றும் தேவைப்படும் பொழுது, இக்கட்சிகளில் சிலவற்றுடன் தேர் தல் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.’’ (பத்திகள் 2.137 முதல் 2.139 முடிய)2013 ஜூலை 1 அன்று புதுதில்லியில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தேசிய அளவிலான அரசியல் சிறப்பு மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இச்சிறப்பு மாநாடு, நாட்டிற்கான மாற்றுக்கொள்கைத் திசைவழி குறித்து இடதுசாரிக் கட்சிகளின் அணுகு முறையை உள்ளடக்கி ஒரு பிரகடனத்தை விவாதித்து வெளியிட இருக்கிறது. இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில், இடதுசாரிக் கட்சிகள் நாட்டில் உள்ள அனைத்து காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சிகளுக்கு நாட்டிற்கான மாற்றுக் கொள்கைத் திசை வழியை ஆதரிக்குமாறும் அதற்காகச் செயல் பட முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப் படும். நாட்டின் நலன்களும் நாட்டு மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படவேண்டுமானால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் இந்தத் திசைவழியில்தான் முன்னேறவேண்டும்.
(தமிழில் : ச.வீரமணி)


Sunday, March 31, 2013

மாற்றுக்கொள்கைக்கான திசைவழியே இப்போது தேவை




பொதுத் தேர்தல்கள் நெருங்கிவருவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் புதிய கூட்டணிகளுக் கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி யிருப்பதும் கூட்டணிகள் தொடர்பான பர பரப்பும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. ஆயினும், 2014 பொதுத் தேர்தலுக்கு சுமார் ஓராண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவ்வாறு பரபரப்பான நிலைமை காணப்படு வதற்கு, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத் தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப் பதே பிரதான காரணமாகும். இந்த அர சாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போதே இது சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுகவும் கழட்டிக் கொண்டபின், மேலும் சிறுபான்மை அரசாக இது குறுகிவிட்டது. தற்போது இதன் ஆயுள் நீடிப்பது என்பது, அதனை வெளியிலிருந்து ஆதரித்துக் கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற் றிடமிருந்து அதற்குக் கிடைக்கும் ஆதர வினையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

இப்போது, அத்தகைய வெளியிலி ருந்து கிடைத்திடும் ஆதரவினைத் தொடர்ந்து பெறுவதற்காக, அந்தக் கட்சிகளை ஆசை காட்டியோ அல்லது அச்சுறுத்தல்களைச் செய்தோ பணிய வைப்பதற்கான வேலைகளில் அரசாங் கம் ஈடுபட்டிருப்பது, தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. நாட்டின் அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளும் உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான செலவும் அதிகரித்திருக்கிறது. அதேபோன்று, திமுக ஆதரவினை விலக்கிக் கொண்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, திமுக வின் வாரிசு எனத் தெளிவாகத் தெரியும் மு.க.ஸ்டாலின் வீடுகளை மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) சோதனை செய்ததிலிருந்து, இத்தகைய கதிதான் சமாஜ்வாதி கட்சிக்கோ அல்லது பகு ஜன் சமாஜ் கட்சிக்கோ, அவை வெளி யிலிருந்து தந்திடும் ஆதரவை விலக்கிக் கொண்டால், நடந்திடும் என்கிற தெளி வான சமிக்ஞையையும் (அச்சுறுத்தலை யும்) தந்திருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள மாநிலங்களாகக் கருதப்பட்ட வைகளிலேயே அது மிகவும் பரிதாபகர மான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் மத்தியில் அரசியல் நிலையற்றத் தன்மை அதிகரித்திருப்பதற்கு மற்றுமொரு கார ணமாகும். ஆந்திரப்பிரதேசத்தில், தனித் தெலுங்கானா மாநிலம் பிரச்சனையில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இரு மனப்போக்கும், மறைந்த முன்னாள் முதல்வரின் மகன் கட்சியை உடைத் திருப்பதும் அதன் தேர்தல் ஆதாயங் களை மிகவும் ஆழமான அளவிற்கு அடித்து நொறுக்கியிருக்கிறது.

தமிழ்நாட் டில் இதுவரை அதிமுக அல்லது திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கணிசமான அளவிற்குப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுவந்ததைப்போல இனியும் பெறமுடியாத நிலை தோன்றியிருப்ப தாகவே தெரிகிறது. இலங்கைத் தமிழர் களின் இன்னல்கள் தொடர்பான பிரச்ச னையில் திமுகவும் அதிமுகவும் காங்கி ரசை முற்றிலுமாக விலக்கி வைத்து விட் டன. இந்த ஆண்டு தேர்தல்கள் நடை பெறும் மாநிலங்களிலும் காங்கிரசின் வாய்ப்பு பிரகாசமானதாகத் தோன்ற வில்லை. அதேபோன்று, இந்த ஆண்டின் இறுதியில் எதிர்க்கட்சிகளால் ஆட்சி நடத்தப்பட்டு வரும் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் காங் கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்பது போல் தோன்றவில்லை. இத்தகைய சூழ்நிலைகளின் பின் னணியில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் அல்லாத - பாஜக அல்லாத மூன்றாவது அணிகுறித்து திடீரென்று கூறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மார்ச் 24 அன்று அவர் மராட்டிய மாநிலத்தில் ஓரிடத்தில் உரை யாற்றும்போது, சமூக மாற்றத்திற்காக பீகாரில் செயல்படும் கட்சியும் (ஐக்கிய ஜனதாதளம் என்று சேர்த்து வாசிக்க வும்), உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கட்சியும் (தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று சேர்த்து வாசிக்கவும்) ஒரே அணியின் கீழ் வர வேண்டும் என்று பரிந்துரைத்திருக் கிறார்.

இயற்கையாகவே, மகாராஷ்டி ராவில் வலுவாக இருக்கக்கூடிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது மத்திய கூட்டணி அரசாங்கத் தில் முக்கியமான அங்கமாக இருப்பதால், இவரது பேச்சு ஐ.மு.கூட்டணியில் ஆட் டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய சாத்தியக்கூறுகள் முட் டாள்தனமானவை என்று காங்கிரசும், பாஜகவும் அறிவித்திருப்பதும் இயற்கை யேயாகும். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சரும், முலாயம்சிங் யாதவின் அபிப்பிராயங் களை, ‘இந்திய அரசியலில் பொய்த் தோற்றத்தைப்பிடிப்பதற்கான முயற்சி என்று கிண்டலடித்திருக்கிறார். அதே போன்று, பாஜகவும் இத்தகைய முயற்சி கள் இயங்கிடாதுஎன்றும், ‘மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லைஎன்றும் கூறியிருக்கிறது. ஆயினும் இருவருமே கூட்டணி அரசாங்கங்கள்தான் இப்போது சாத்தியம் என்பதை ஏற்றுக்கொண்டுள் ளனர்.அத்தகைய கூட்டணி அரசாங் கத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன் றைய இந்திய எதார்த்த நிலையை அங்கீ கரிப்பதேயாகும். 1996இல் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்ப்போம். அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தல் களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது, நம் ஜனநாயகம் பின்னோக்கிச் செல்கிறது என்று பலரும் புலம்பினார்கள். ஆனால் நாம் மட்டும்தான், இது பின்னோக்கிச் செல்லுதல் அல்ல, மாறாக, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையே இது பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டிருந் தோம். நாட்டின் சமூகப் பன்முகத்தன்மை அரசியலிலும் பிரதிபலிக்கத்தான் வேண் டும். ஒற்றைக்கல்லால் ஆனது போன்ற ஒரு கட்சி அரசியல் கட்டமைப்பு இத் தகைய சமூகத்தின் வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகளை முறை யாகப் பிரதிபலித்திடாது.
வரவிருக்கும் காலங்களில் கூட்டணி அரசாங்கங் கள்தான் அமையவிருக்கின்றன என்று அப்போது நாம் கூறினோம். இத்தகைய நம் புரிந்துணர்வை ஏற்றுக்கொண்டு, சரி என்று கூறிய ஒருசில தலைவர்களில் மறைந்த வி.பி.சிங்கும் ஒருவராவார். இந்தியாவை ஒரு மகா கூட்டணிஎன்று அவர் அழைத்தார். கடந்த இருபதாண்டுகளில் இத்த கைய புரிந்துணர்வுதான் சரியானது என் பது எவரும் மறுக்கமுடியாத வகையில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2014 பொதுத் தேர்தல் முடிந்தபின்னர் உருவாகும் அரசாங்கமும் கூட்டணி அரசாங்கமாகத் தான் இருக்கும் என்பதும் நிச்சயம். ஆயினும் அத்தகைய கூட்டணி அரசாங் கத்திற்குத் தலைமை தாங்கப்போவது யார் என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வியாகும். கூட்டணிக்கு, காங்கிரஸ் அல்லது பாஜகதான் தலைமை தாங்கும் என்று இதற்குத் தீர்வாக எவரும் கூறினால், மிகவும் சவுகரியமான விதத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களே அதிகம். இக்கூற்றை ஏகாதிபத்தியமும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும். ஏனெ னில் இரு கட்சிகளுமே ஏகாதிபத்தியத் தினுடைய அடிவருடியாக இருப்பதில் வலுவான வகையில் விருப்பம் தெரிவித் திருக்கும் கட்சிகளேயாகும். நவீன தாரா ளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் மேதாவிகளும் மிகவும் மகிழ்ச்சி கொள் வார்கள். ஏனெனில் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகளை அமல்படுத்து வதைப் பொறுத்தவரை பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான தன்மைகள் இருந்த போதிலும், நம்முடைய நாட்டு மக்கள், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுடன் உளப் பூர்வமான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்த மாய் உறுதி செய்திருக்கிறார்கள். இத னைப் பொறுத்தமட்டில், பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வகுப்புவாதம் என்னும் அரசியல் நிகழ்ச்சிநிரல், நாட்டைப்பிடித்த பீடை என்பதை மக்கள் நன்கு கண்டுகொண் டுள்ளார்கள். பாஜக-வால் உருவாக்கப் படும் கூட்டணி எத்தகையதாக இருந்த போதிலும், தீர்க்க முடியாத முரண்பாடாக கொள்ளை நோய் போல் இது அதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக தான் அமைத்திடும் கூட்டணி பெரும்பான்மை பெற்று வலுவாக அமைந் திட வேண்டுமானால், இத்தகைய வெறி பிடித்த மதவெறி நிகழ்ச்சி நிரலை அது மூட்டைகட்டி வைத்துவிட வேண்டும். ஆனால், மறுபக்கத்தில், ஆர்எஸ்எஸ்-ஆல் கட்டளையிடப்படும் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரக்கத்தனமான முறையில் பாஜக பின்பற்றவில்லை என்றால், பாஜக தன்னுடைய சொந்த அரசியல்தளத்தை கெட்டிப்படுத்தவோ, விரிவுபடுத்தவோ முடியாது. பாஜக விற்குள் இந்த முரண்பாடு ஏற்கனவே பிர திபலிக்கத் தொடங்கிவிட்டது. இதனை அக்கட்சி வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாயையின் அடிப்படையில் யார் பிரதமர் என்பதற் கானத் தேர்வு குறித்து சண்டையிட்டுக் கொள்வதிலேயே பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளுக்கிடையே கூட் டணி தொடர்பான கூட்டல், கழித்தல்கள் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், மக்களின் உண்மையான அபிலாசைகள் மீது இவை போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தவில்லை. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை இன்னமும் தூக்கிச் சுமப்பது தொடர்கின்ற அதேசமயத்தில், மூன்றா வது அணி குறித்தும் பேசுவதற்கான காரணம் இதுதான். தன் சொந்தக் கட்சிக் குள்ளிருந்தும், சமூகத் தளத்திற்குள்ளி ருந்தும் மக்களின் தற்போதைய பரிதாபகர மான நிலைமைகளை மாற்றுவதற்காக ஏதேனும் நிவாரணம் கண்டாக வேண் டும் என்ற நிர்ப்பந்தம் வந்திருப்பதுதான் இதற்குக் காரணமாகும். பொருளாதார மந்தம், அனைத்துப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்திருப்பது, விவசாய நெருக்கடி ஆழமாகியிருப்பது - அனைத்தும் மக்களின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்குத் துன்ப துய ரங்களை அதிகரித்துள்ளன. நிவாரணத் திற்காகவும், சிறந்ததோர் வாழ்க்கைக் காகவும் மக்கள் ஏற்படுத்தும் அதிருப்தி குரல்கள்தான் மூன்றாவது அணிஅர சாங்கம் குறித்த இத்தகைய அரசியல் வெளிப்பாடுகளாகும்.

ஆயினும், இப்போது நம்முன் வாதத் திற்குரிய விஷயம் என்னவெனில், மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களை இவ் வாறு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத அரசாங்கங்கள் அமைவதாலேயே தந்துவிட முடியமா என்பதேயாகும். அவ்வாறு மக்களுக்கு நிவாரணம் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகும். எனவே, வெறும் மாற்று அரசாங்கம் மட்டுமல்ல, மாறாக மாற்று மக்கள் ஆதரவு கொள்கைத் திசை வழியை அமல்படுத்தக்கூடிய அரசாங் கமே மக்களுக்குத் தேவையாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத் தகைய மாற்றுக் கொள்கைகளை உயர்த் திப் பிடித்து போர் முழக்கப் பிரச்சாரப் பயணத்தை நாடு முழுவதும் நடத்தியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கொள்கைகளால் ஒவ் வொரு இந்தியருக்கும் பசி-பஞ்சம்-பட்டினியின்றி வாழவும், கல்வி, சுகா தாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி ஆகி யவற்றையும் அடிப்படை உரிமைகளாக அளிக்க முடியும். பிரச்சாரப் பயணத்தின் போது இவ்வாறு மக்களுக்கான உரிமை களை உத்தரவாதப்படுத்திடத் தேவை யான வளங்கள் நாட்டில் இருப்பதையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. ஆயி னும், இவ்வாறான வளங்கள் அனைத்தும் தற்சமயம் மெகா ஊழல்கள் மூலமாக கொள்ளை யடிக்கப்பட்டோ அல்லது அரசின் கொள்கைகள் வழியாகவோ பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்குவதற்கும், ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றன என்பதும் விளக்கிக் கூறப்பட்டது.
இத்தகைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டியதுதான் இன்றைய தேவை. நாட்டில் இவ்வாறு ஆளும் வர்க்கங் கள் தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கைகளின் திசைவழியை மாற்றி யமைத்திட வேண்டுமானால் அது மக்க ளின் போராட்டங்களை வலுப்படுத்து வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே மாதத்தின் பிற்பாதியில் நாடு தழுவிய அளவில் வெகுஜன முற்றுகைப் போராட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்திருக்கிறது. இப்போராட்டம் மாபெரும் ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவத்தைப் பெறும். இத்தகைய உக்கி ரமான போராட்டங்கள் ஆளும் வர்க்கங் கள் மீது தங்கள் கொள்கைத் திசை வழி யை மாற்றியமைத்துக் கொள்ள தேவை யான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திட வேண் டும். அதே சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காக மட்டும் தற்போது மேற்கொண்டுவரும் தங்களுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கைவிடு வதற்கும், மக்களின் நிலைமைகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்தக் கூடிய விதத்திலும், அனைத்து இந்தியர் களுக்கும் சிறந்ததோர் இந்தியாவை உரு வாக்குவதற்கான விதத்திலும் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் வலியுறுத்திட வேண்டும்.- 

தமிழில்: ச.வீரமணி