Monday, March 23, 2015

மதவெறி நஞ்சு பரப்பப்படுகிறது

ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் பரப்பப் படும் மதவெறி நஞ்சு காரணமாக நாட்டின் பலபகுதிகளிலும் மதச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய மதவெறி சகிப்பின்மை கிளப்பி விடப்படுவதென்பது நாட்டில் சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோருக்கு எதிராக மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப் படுவதற்கான ஒரு சூழலையும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
இது, மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசாகிய நம்நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியஅரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப் படை உரிமைகளுக்கு முரணானதும், நேரடி யாகவே எதிரானதுமாகும். இந்தியாவின் முதல் துணைப் பிரதம ராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் உடனடியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்துஅறிவித்த அதிகாரப்பூர்வமான அறிவிப் பை நினைவுகூர்க. அதில் அவர், “சங் (ஆர்எஸ் எஸ்) பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் ஊறு விளைவிக்கக்கூடிய நடவடிக்கை கள் முழுவீச்சுடன் தொடர்கின்றன.
சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைப் பலிகொண்டுவிட்டது. இதற்குப் பலி யான மிகவும் சமீபத்திய, மிகவும் விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’ மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் இதனைச் செய்தது என்பது பல்வேறு சூழ் நிலைச் சாட்சியங்களாலும், பின்னர் நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் மூலமாகவும் மெய்ப்பிக்கப் பட்ட போதிலும்கூட இவற்றை மறுதலிக்கும் விதத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததில் தங்களுக்கு “சம்பந்தம் இல்லை’’ என்று கடைசி வரை சொல்லி வந்தது.
1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் பட்டேல் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணப்படும் முக்கிய அம்சம் என்னவெனில், ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் நடவடிக்கைகளும் “வன்முறைக் கலாச்சாரத்தைத்’’ தொடங்கி வைத்திருப்பதன்மூலம் காந்திஜி உட்பட எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது என்பதாகும். நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை உளமாற நேசிக்கும், நாட்டுப்பற்று கொண்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக நின்று இவர்களின் இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்தாவிட்டால், நாட்டில் இன்றுள்ள நிலைமை மேலும் வேகமானமுறையில் சீர்கேடு அடைவதற்கே இட்டுச் செல்லும். சமீபத்தில் இத்தகைய மிகவும் வெறுக்கத்தக்க இழிவான நிகழ்வு,
மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் ராணாகாட் என்னுமிடத்தில் உள்ள ஜீசஸ் செயின்ட் மேரிஸ் கான்வென்டில் 72 வயது கன்னியாஸ்திரி வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவமாகும். வேறொரு இளம்பெண்ணும் இதேபோன்ற கொடுமைக்கு ஆளாகி, தன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இந்தப் பகுதியில் மக்களின்கோபாவேசமும், எதிர்ப்பும் மேற்கு வங்கமுதல்வரை இப்பள்ளிக்குள் விடாமல்தடுத்துள்ள போதிலும், இக்கொடுமைகளைப் புரிந்திட்ட கயவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இதுவரை எவரும் கைது செய்யப்படவும் இல்லை. மதச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்த நிகழ்வானது மக்களின் ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எந்த அளவிற்குப் பெரிய அளவில் ஆபத்துக்கள் வந்துள்ளன என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முடிவுகள் எடுக்கும் உயர் மட்ட அமைப்பாக விளங்கும் அகில பாரதிய பிரதிநிதி சபை சமீபத்தில் 2015 மார்ச் 14-16 தேதிகளில் நாக்பூரில் கூடியது. அதில் மதவெறி நிகழ்ச்சிநிரலை பல முனைகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய பிரச்சாரத்திற்காக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேலைகள் தற்சமயம் 54 ஆயிரம் கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதிலிருந்து நாட்டில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த வகையில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை விரிவாக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்களில் அமித் ஷாவும், விசுவ இந்து பரிசத்தலைவர் பிரவீண் தொகாடியாவும் அடங்குவர். இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மீண்டும் ஒருமுறை, நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்று வெளிப்படையாகவே எவ்வித கூச்சமுமின்றி அறிவித்திருக்கிறது. அதன் கூற்றின்படி, இந்தியாவில் உள்ள அனைவரும் “கலாச்சார ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், மரபு ரீதியாகவும் இந்துக்களாவர்.’’ தேசிய நாளேடுகள், ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைக்குத் தலையிட்டுள்ள பகுதி, “கர் வாப்சி’’ என்னும் “வீட்டிற்குத் திரும்பும்’’ இயக்கமாகும் என்று வெளியிட்டுள்ளன. ஊடகங்களில் வந்துள்ள தகவல்களின்படி, ஆர்எஸ்எஸ் தலைவர், நாட்டை ஆண்ட பிரிட்டிஷார் 14ஆம் நூற்றாண்டில் (?)இருந்தே நாட்டு மக்களை மதம் மாற்றும் வேலைகளில் இறங்கினார்கள், இப்போது மக்கள் மீண் டும் இந்து மதத்திற்கு திரும்ப விரும்புகிறார்கள், அதற்கு சுயம்சேவக்குகள் உதவ வேண் டியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினாராம்.
(தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மார்ச் 17, 2015,பக். 1).மற்றொரு தேசிய நாளேடு (தி இந்து, மார்ச் 16, 2015), “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனை தங்கள் நிகழ்ச்சிநிரலில் தொடர்கிறது,’’ என்று மீண்டும் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அது மேலும், “அந்தப் பிரச்சனையை நாங்கள் கைவிட்டுவிடவில்லை. அது எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருப்பது தொடர்கிறது.’’ என்று கூறி யிருக்கிறார். மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர், “கடந்த ஒன்பது மாத கால மோடியின் ஆட்சி ஒட்டுமொத்தத்தில் “திருப்திகரமாகவே’’ இருந்திருக்கிறது’’ என்றும் கூறியதாகவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மோடி அரசாங்கமானது, ஆர்எஸ்எஸ்-சிடமிருந்து இத்தகைய பாராட்டுக்களை வாங்குவதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருப்பது போலவே தோன்றுகிறது. இப்போது மோடி அரசாங்கம், அனைத்து மாநிலங்களும் பசுவதைத் தடைச்சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்த இருப்பதாகவும், குறிப்பாக தங்கள்கட்சி ஆளும் மாநில அரசாங்கங்கள் அனைத் தும் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (தி இந்து, மார்ச்16, 2015). ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங் களைத் தொடர்ந்து, இப்போது தேர்தல் நடை பெறவிருக்கும் பீகார் மாநிலத்தில் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இதனைச் சேர்த்திட முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கம் இத்தகைய தடையை முன்மொழிந்திருப்ப தோடு, மாட்டுக் கறியை சாப்பிடுவோருக்கு எதிராக தண்டைக்குள்ளாக்கும் சட்டப்பிரிவு களையும் பரிந்துரைத்திருக்கிறது.
இதே தொனி யில், இந்த அரசாங்கம் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீட்டை தொடர்கின்ற அதே சமயத்தில், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு இருந்து வந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் கூட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி அரசாங்கத்தில் பாஜகசேர்ந்திருக்கும் மிதமிஞ்சிய சந்தர்ப்பவாத நிலையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆயினும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவதுபிரிவு தொடர்வதை எதிர்ப்பதை தொடர்வதுடன், அது நடைபெறுவதற்கான காலத்திற்காகக் காத்துக் கொண்டிருப்ப தாகவும் கூறுகிறது. இக்கூட்டம் முடிந்தபின், ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர், “அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவுதொடர்பான ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடு மாறவில்லை. நாங்கள் அதனுடன் எக்காலத் திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
நிலைமைகள் மேம்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இல்லையென்றால் அதன்பின்னர் நாங்கள் என்ன செய்வதென்று தீர்மானிப்போம்,’’ என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிக்கையில் உள்ள ஆபத்து மிகவும் தெளிவானது.சமீபத்தில் மக்களவையில் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள மிகவும்மோசமான, நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவிற்கு ஆர்எஸ்எஸ் முழு ஆதரவினை அளித்துள்ளது. அதன்கீழ் இயங்கும் துணை அமைப்புகளான பிஎம்எஸ் (பாரதிய மஸ்தூர் சங்கம்), பிகேஎஸ் (பாரதிய கிசான் சங்கம்) ஆகிய அமைப்புகள் `பெயரளவில்’ எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், ஆர்எஸ்எஸ்-இன் இணைப் பொதுச் செயலாளர் இது தொடர்பாகக் கூறுகையில், “இந்தச் சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கு விரோதமானது என்று நான்நினைக்கவில்லை. ஏனெனில், விவசாயி களுக்கு ஆதரவான திருத்தங்களை அரசாங் கம் கொண்டு வந்திருக்கிறது,’’ என்று அறிவித்திருக்கிறார்.
தன்னுடைய முன்னணி அமைப்புகளுக்கு, பிரச்சனைகளை “சுமுகமாக பேசித்தீர்த்துக்கொள்ளுமாறும், மோதலைத் தவிர்க்குமாறும் அது அறிவுறுத்தி இருக்கிறது. நாட்டிலுள்ளவிவசாயிகளில் 70 சதவீதத்தினர் வேளாண்பணிகளைவிட்டு வெளியேற விரும்புவதாக வும், எனவே மோடி அரசாங்கத்தின் திருத்தங் கள் `வரவேற்கத்தக்கவை’ என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர், நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை, ஊடகங்கள் வாயிலாக, நியாயப்படுத்தி இருப்பதை இங்கே நினைவு கூர்க. இவ்வாறு, ஆர்எஸ்எஸ் இயக்கம், மோடி அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சிநிரலைத் தயார் செய்து தந்திருக்கிறது. மோடி அரசாங்கம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் “ஓர் அரசி யல் அங்கமே தவிர வேறல்ல’’ என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகும். ஒருபக்கத்தில் இவ்வாறு, நம் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை, தங் களது வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காக மதவெறித் தீயைவிசிறிவிட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத் தில், மறுபக்கத்தில் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டு வதற்காக, நாட்டில் பெரும்பான்மை மக்களுக் கான நலத் திட்டங்களைக் காவு கொடுக்கும் விதத்திலும், நாட்டின் வளங்களை கூச்ச நாச்சமின்றி சூறையாடுவதற்கு அனுமதிக்கும் விதத்திலும் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முன், நாட்டை நாசகரமானப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப் பட்டு, முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
(மார்ச் 18, 2015)
தமிழில்: ச.வீரமணி



No comments: