Thursday, April 14, 2011

சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவோம்! முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக உலகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்! உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளன

ஏதென்ஸ், ஏப். 14-

முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிராகவும், சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவதற் காகவும், உலகத் தொழி லாளர்களை அணிதிரட்டு வோம் என கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற உலகத் தொழிற் சங்கங்கள் சம்மேளனத்தின் 16ஆவது மாநாடு அறை கூவல் விடுத்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16வது மாநாடு கிரீஸ் தலை நகர் ஏதென்ஸில் கடந்த ஏப் ரல் 6 புதனன்று எழுச்சி யுடன் துவங்கியது. மாநாடு 10ஆம் தேதி வரை நடை பெற்றது.

உலகம் முழுவதுமிருந்து 881 பிரதிநிதிகளும் பார்வை யாளர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். உல கில் நான்கு துணைக் கண் டங்களில் உள்ள 105 நாடு களில் இருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றார் கள். மாநாட்டுப் பிரதிநிதி களில் 32 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தலைமையில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அபி மன்யு, அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லாகான் உட்பட 20 பேரும், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனம் சார்பில் ஆர்.முத்துசுந்தரம், சுகுமால் சென், ஆர்.ஜி.கார்னிக் உட் பட 6 பேரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அசௌஸ் எம். சபான், பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் ஆகியோர் மாநாட்டைத் துவக்கி வைத் தனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஹேமலதா மற்றும் தென் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் உட்பட 35 பேர் கொண்ட மாநாட்டுத் தலைமைக்குழு தேர்வு செய் யப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்களை எதிர்த்து, எண்ணற்ற போராட் டங்களை நடத்திய, உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் பொதுச் செயலாளரும் கிரேக்கத் தொழிற்சங்கத் தின் வீரஞ்செறிந்த தலைவ ருமான பாமே, மாநாட் டைத் துவக்கி வைத்தார்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ், ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க் கம் ஒன்றுபட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத் தினார். இந்தத் திசைவழியில் தான் கடந்த ஐந்தாண்டு களாக சம்மேளனம் செயல் பட்டு வருவதாகத் தெரி வித்தார்.

கிரேக்க நாடாளுமன்றத் தின் முதல் உதவித் தலைவர், கிரேக்க நாடாளுமன்றத் தின் சபாநாயகர், ஏதென்ஸ் மற்றும் பெய்ரஸ் நகரின் மேயர்கள் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பிரதிநிதிகள் மாநாடு
மாநாட்டின் பிரதிநிதி கள் அமர்வு 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

மாநாட்டில் முதல் அமர் வுக்கு சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உள்ளிட்டோர் தலைமையேற்றனர்.

மாநாட்டுப் பிரதிநிதி களின் விவாதத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி யின் தாக்கம் பிரதானமாக இடம்பெற்றது. இதன் விளைவாக உலக அளவில் அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தில் இழப்பு ஏற் பட்டுள்ளமை, சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடும் தொகை வெட்டிக் குறைக் கப்படுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் பெரும் முதலாளிகள் மற்றும் பன் னாட்டு முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தொழிலாளர் வர்க் கம், ஏழை விவசாயிகளை யும், சுயதொழில் புரிபவர் கள் மற்றும் வர்த்தகர்களை யும் அணிதிரட்ட வேண்டி யதன் அவசியத்தையும் மாநாடு சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் உழைக்கும் பெண்களுக்கு உள்ள பிரச் சனைகள் குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

பெண் பிரதிநிதிகளைக் கொண்டு தனி அமர்வு ஒன் றும் 7ஆம் தேதியன்று நடை பெற்றது. இதில் உழைக்கும் பெண்களின் பிரச்சனை களை மையப்படுத்தி சர்வ தேச அளவில் தனி மாநாடு ஒன்று நடத்தவும் தீர்மா னிக்கப்பட்டது.

இளம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க விழிப்புணர்வு குறைவாக இருப்பதை மாநாடு சுட்டிக் காட்டியது.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் சிரியா வைச் சேர்ந்த அசௌஸ் எம்.சபான், தலைவராகவும், ஜார்ஜ் மாவ்ரிகோஸ், பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப் பட்டனர்.

சிஐடியு சார்பில் ஏ.கே. பத்மநாபன், ஸ்வதேஷ் தேவ் ராய் உட்பட 40 உறுப்பி னர்களைக் கொண்ட புதிய தலைமைக் கவுன்சில் உரு வாக்கப்பட்டது. இக்கவுன் சில் ஏ.கே. பத்மநாபனை, உலகத் தொழிற்சங்க சம்மே ளனத்தின் துணைத் தலைவ ராகவும், ஸ்வதேஷ் தேவ் ராயை செயற்குழு உறுப்பி னராகவும் தேர்வு செய்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அடுத்த மாநாடு நடைபெறும் சம யத்தில் சம்மேளனத்தின் 70ஆம் ஆண்டைக் கொண் டாடும் விதமாக, புதிய தொழிற்சங்க ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை வளர்த்தெடுத்திடவும், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்திடவும், வருங் கால சந்ததியினருக்கு சுரண் டலற்றதோர் உலகத்தை அளித்திடவும் உறுதி மேற் கொண்டுள்ளது.

No comments: