Saturday, May 17, 2008

பேய்த்தனமான பயங்கரவாதத்தை வேரறுப்போம்

காட்டுமிராண்டித்தனமான பயங் கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் ஒரு முறை நடைபெற்றுள்ளன. பதி னைந்தே நிமிடங்களில் ஏழு இடங் களில் நடைபெற்றுள்ள வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜெய்ப்பூர் நகரையே ரத்தத்தில் தோய்த்தெடுத்து அப்பாவி மக்கள் பலரின் உயிரைப் பலிகொண் டுள்ளன. இந்தத் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 60 பேர் உயிர்ப்பலியாகியுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பயங்கரவாதத் தின் இத்தகைய இழிவான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மேலும் உயரும்.இத்தகைய பயங்கரவாதத் தாக்கு தல்களை எவ்வித தயவுதாட்சண்யமு மின்றி கண்டிக்க வேண்டிய அதே சமயத்தில், இத்தகு சவாலை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எதிர்த்திட வேண்டும். நம் நாட் டை சீர்குலைக்க மேற்கொள்ளப் படும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்திட வேண்டும். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான விளையாட் டுகள் மூலமாக இந்தியாவின் வளர்ச் சியைத் தடுத்து நிறுத்த எவரையும் அனுமதிக்கக் கூடாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ‘‘பயங்கரவாதிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள் கிறது’’ என்றும் அதன் விளைவா கவே இத்தகைய தாக்குதல்கள் என்றும், ‘பொடா’ சட் டம் மட்டும் ரத்து செய்யப்படாமல் இருந்திருந் தால், இத்தகு தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது என்றும் உடனடியாக அத்வானி தெரிவித்து விட்டார். இவ்வாறு கூறி, மதவெறித் தீயை மூட்டிவிட முனைந்துள்ளார். நாட்டின் சட்டப்புத்தகங்களின் அடுக் கில் ‘பொடா’ சட்டமும் அலங்கரித்த சமயத்திலும்கூட, இத்தகைய கொடிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சாங்கத்தில் அத்வானி துணைப்பிர தமராகவும் உள்துறை அமைச்சராக வும் இருந்த சமயத்திலும் கூட இவ் வாறு தாக்குதல்கள் நடைபெற்றுள் ளன. அப்போதும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வித்தியாசங்களை மறந்து தேசிய ஜனநாயக கூட்டணி அர சாங்கத்தின் பக்கத்தில் நின்று இப் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்து நின்றன. நாடாளுமன்றம் மீதான தாக்குதல், செங்கோட்டை மீதான தாக்குதல்கள், இரு முறை ரகுநாத் கோவில் தாக்கப்பட்டது, அக மதாபாத்தில் அக்சர்தம் கோவில் தாக் குதல் - இவை அனைத்துமே வாஜ் பாய் தலைமையில் தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியி லிருந்தபோதுதான் நடந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, ‘‘பயங்கரவா திகளிடம் மிகவும் மென்மையாக நடந்துகொண்டதால்’’ நிச்சயமாக இத்தாக்குதல்கள் எல்லாம் நடை பெற்றுவிடவில்லை. பயங்கரவாதக் குழுக்கள் பல செயல்படக்கூடிய அளவிற்கு இந்தி யாவில் நிலைமைகள் இருக்கின்றன என்பதே யதார்த்தமான உண்மையா கும். 2004 மார்ச்சுக்கும் 2007க்கும் இடையில், இராக் மற்றும் ஆப்கா னிஸ்தான் போன்று யுத்தம் நேரடி யாக நடக்கும் மண்டலங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போதுகூட, இந்தியா அன்னியில் உலகம் முழு வதும் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக 3280 பேர் பலியாகி யிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்தக் காலகட்டத்தில் 3674 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே மதவெறித் தீ கொழுந்துவிட்டெறி வதற்கான காரணங்கள்தான் ஆரா யப்பட வேண்டும். நம் நாடு மற்றும் நாட்டுமக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கருதும் நம் நாட்டின் எதிரிகள்தான் இத்தகைய இழிவான குற்றச்செயல் களில் ஈடுபடுகிறார்கள். இத்தகு கய வர்களின் எண்ணத்திற்கு உரமிடக் கூடிய வகையில் நாட்டிற்குள் உள்ள மதவெறி சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரத்தவாடை யை வைத்துத்தான் கழுகு கூட தன் இரையை எளிதாகப் பார்த்து, பாய்ந்து பறந்து வந்து கொத்திச் செல் கிறது என்பதை நினைவுகூருங்கள். இவ்வாறு நாட்டிற்குள் ரத்தம் வாடை வீசுவது தடுக்கப்பட வேண்டியது அவசியம். உள்நாட்டுப் பாதுகாப்பை உறு திப்படுத்திட, போர்க்கால அடிப் படையில் கூடுதலான நடவடிக்கை களை ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறத் தேவையில்லை. சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய மாநில அரசு களும் (இப்போது தாக்குதல்களுக்கு உள்ளான ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக அரசாங்கம் ஆட்சியிலிருக் கிறது) தங்கள் பொறுப்புகளை நிறை வேற்றுவதற்கான முயற்சிகளை இரட் டிப்பாக்கிட வேண்டும். சம்பவம் நடைபெற்றது தொடர்பான அனைத்து குறைபாடுகளும் புலனாய்வுக்கு உட் படுத்தப்பட்டு, சரி செய்திடப்பட வேண்டும். இவ்வாறு கூறும் அதே வேளை யில், நம் நாட்டிற்குள் நம்மைப் பிரித் தாள நினைத்திடும், பிரிவினை விதை களை விதைத்திடும் அனைத்து வகையான கிருமிகளையும் பூண் டோடு அழித்து ஒழித்திட வேண்டிய தும் அவசியமாகும். இத்தகு பின் னணியில்தான் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் தீய கருத்துக்கள் தீய பயக்கும் என்பதால் அவை குறித்து அஞ்ச வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின் றன. பயங்கரவாதிகளின் இத்தகைய தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் மதவெறித் தீயைக் கொழுந்து விட்டெறிய முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு பயப் பதுமாகும். பாஜக, நாட்டில் தன்னு டைய தளம் வேகமாகக் கரைந்து கொண்டிருப்பதால் அதனை மீண் டும் அடைவதற்காக இவ்வாறு மத வெறித் தீயை மூட்ட முயற்சிக்கிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை யும் கணக்கில் கொண்டு, பாஜக இவ்வாறு முயற்சிக்கிறது.பயங்கரவாதத்தை முற்றிலுமாக முறியடிப்பதற்கு நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதேசமயத்தில் நாட்டில் மதவெறித் தீயை மூட்டுவதற்கு பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனு மதிக்கக் கூடாது. இது, நாட்டின் ஒற் றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், சமூக நல்லிணக்கத்தையுமே அழித்து விடும். இப்போது நடைபெற்றுள்ள காட் டுமிராண்டித்தனமான தாக்குதல்க ளுக்கு இதுவரை எந்த அமைப்பும் ‘‘உரிமை’’ கொண்டாடவில்லை என்றபோதிலும், சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் இருக்கிறது. அத் தகைய அமைப்புகள் இனம் காணப் பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, முறி யடிக்கப்பட்டு, நாட்டின் சமூக மற்றும் அரசியல் வாழ்விலிருந்தே தூக்கி எறியப்பட வேண்டும். சமீபத்தில், டியோபாண்ட்டால் பயங்கரவாதத் திற்கு எதிராக வெளியிடப்பட்ட ‘ஃபட்வா’ இத்தகு நடவடிக்கைகளை ‘‘இஸ்லாமுக்கு எதிரானது’’ என்று கூறியிருக்கிறது. இதனை உடனடி யாகச் செய்ய வேண்டிய அதே சமயத்தில், அனைத்து வகையான அடிப்படைவாதங்களும் ஒன்றை மற் றொன்று ஊட்டி வளர்க்கின்றன என்ப தை மனதில் கொள்ள வேண்டும். சிறுபான்மை அடிப்படைவாதமும் பெரும்பான்மை அடிப்படைவாத மும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க் காமல், வலுப்பெறாமல் உயிருடன் நீடித்திருக்க முடியாது.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடை பெற்ற தாக்குதல்கள் உட்பட அனைத் துத் தாக்குதல்களும் மதத் தளங்க ளைச் சுற்றியே நடைபெற்றுள்ளதை, நாட்டின் ஊடகங்கள் சுட்டிக்காட்டியி ருப்பதுபோல, ‘‘மக்கள் பெரும் திர ளாகக் கூடும் இடங்களில் தாக்கு தல்கள் புரிவது மட்டுமல்ல, மக்களி டையே மதவெறித் தீயை மூட்டி, பல் வேறு மதத்தினரிடையே ரத்த ஆறு ஓட வேண்டும்’’ என்ற நப்பாசை யுடன் இத்தகு தாக்குதல்களைப் புரிந்திருக்கின்றார்கள் என்பதும் உறுதிப்படுகிறது. 2006 மார்ச் 7 அன்று வாரணாசியில் சங்கட் மொச்சான் கோவிலில் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது - ஒரு செவ்வாய்க் கிழமை. 2006 ஏப்ரல் 14 அன்று டில்லி ஜூம்மா மசூதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது - ஒரு வெள்ளிக் கிழமை. அதேபோன்று, 2006 செப்டம்பர் 8 அன்று மலே கானில் நூரணி மசூதியில் நடை பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் - ஒரு வெள்ளிக்கிழமை. 2007 மே 18 அன்று ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடைபெற்ற தாக்குதலும் ஒரு வெள்ளிக்கிழமையில்தான் நடைபெற்றுள்ளது. 2007 அக்டோபர் 11 அன்று ஆஜ்மீர் ஷெரீப் தர்கா தாக்கப்பட்டதும் ஒரு வெள்ளிக்கிழ மையாகும். ரம்ஜான் விரதத்தை முடித்துவிட்டு வெளிவரக்கூடிய நேரத்தில் வெள்ளிக்கிழமையன்று இத்தாக்குதல் நடைபெற்றது. இப் போது ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ள தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை அன்று இரு அனுமார் கோவில் களுக்கு அருகில் நடைபெற்றுள்ளன. கோவில்கள் என்றால் செவ்வாய்க் கிழமை, மசூதிகள் என்றால் வெள் ளிக்கிழமை. மதவெறித் தீயை மூட்டி விட மதவெறியர்கள் பின்பற்றும் உத்தியைக் கவனித்தீர்களா? இந்தப் பின்னணியில், ஒருசம யம், லஸ்கர் - இ - தொய்பா என்னும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் செயலாளர், 1999 தேர் தல்கள் நடைபெறும் சமயத்தில் கூறிய வாசகங்களை நினைத்துப் பார்ப்பது அவசியம். ‘‘எங்களுடன் சரியாகப் பொருந்தக் கூடியவர்கள், பாஜகவினர்தான். ஒரே ஆண்டில் அவர்கள் எங்களை அணுசக்தி மற்றும் ஏவுகணைகளை உபயோகிக் கக்கூடிய அளவிற்கு வல்லவர் களாக்கிவிட்டார்கள். பாஜக-வினரின் அறிக்கைகளால் லஸ்கர் - இ - தொய்பாவிற்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முன்பை விட இது அதிகம். எனவே, மீண்டும் பாஜகவினரே ஆட்சிக்கு வர வேண் டும் என்று நாங்கள் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். அவர்கள் ஆட் சிக்கு வந்துவிட்டார்களென்றால் நாங்களும் வலுவடைந்து விடு வோம்.’’ (தி இந்துஸ்தான் டைம்ஸ், 1999 ஜூலை 19.) இத்தகைய முக்கியமான தருணத் தில், நடைபெற்றுள்ள சோகச் சம்பவங் களுக்கு ஆழ்ந்த துயரத்தையும், கவ லையையும் கோபத்தையும் தெரி விக்கும் அதே சமயத்தில், நாம் இத்த கைய மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட உறுதி ஏற்போம். ஒரு மதவெறி மற்றொரு மதவெறிக்குத் தீனிபோட்டு ஊட்டி வளர்ப்பதை மக் கள் மத்தியில் விளக்கி, அனைத்து மதவெறியர்களிடமிருந்தும் மக்களைக் காத்திடுவோம்.

தமிழில்: ச. வீரமணி

No comments: