Monday, June 2, 2014

புதிய அரசாங்கத்தின் தாக்குதல்கள்

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இரட்டை நாக்குடன் பேசக்கூடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றுதான். தங்களுடைய இருவேறு நிகழ்ச்சி நிரல்களையும் ஒரே சமயத்தில் பின்பற்றுவதற்கு அவ்வாறு இதனை அது பயன்படுத்திக் கொள்கிறது. ஒன்று, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆணிவேராக விளங்கும் நிகழ்ச்சிநிரலை - அதாவது மக்கள் மத்தியில் மதவெறியைக் கூர்மைப் படுத்துவதை - பின்பற்றுவது. அதே சமயத்தில் மற்றொரு நிகழ்ச்சிநிரல் பொது நுகர்வோரியத்தை முன்னெடுத்துச் செல் வது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் இவ்வாறு இருவித நிகழ்ச்சிநிரலையும் தன் னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைமுறைப்படுத்தியதை முன்னரே பார்த்தோம்.
2002ஆம் ஆண்டில் குஜராத்மாநிலத்தில் முஸ்லிம் சிறுபான்மையின ருக்கு எதிரான படுகொலைகளை அரங்கேற்றியதன் மூலம் புகழ்பெற்ற,  நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னி றுத்தியதிலிருந்தே மதவெறித் தீயை எந்த அளவிற்கு விசிறிவிட அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது நன்கு விளங்கும். அதேசமயத்தில், மறுபக்கத்தில், தாங்கள் மதவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக `குஜராத் மாடல்வளர்ச்சி மற்றும் `நல்லதோர் ஆட்சிஎன்றும் கூறி, வாக்காளர்களின் ஆதர வினைக் கோரினார்கள்.
இவ்வாறான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இரட்டை வேடத்தை மிகவும் திறமையாக இவர்கள் அணிந்து கொண்டதன்மூலம் தேர்தல் ஆதாயங்களை நன்கு அறுவடை செய்து விட்டார்கள். ஆயினும், நரேந்திர மோடி அரசாங்கம் பதவிப் பிரமாணம் எடுத்த சமயத்திலும் மற்றும் அதற்கு அடுத்த நாளும், அவர்களது உண்மையான நிகழ்ச்சிநிரலின் சொரூபம் வெளிவரத் தொடங்கிவிட்டது. இந்துத்துவா அமைப்புகளால் கட்ட விழ்த்துவிடப்பட்ட பயங்காரவாதத் தாக்கு தல்கள் பலவற்றில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களில் ஒருவரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்த்ரேஷ் குமார், மத்தி யப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தேசியப் புலனாய்வு ஏஜன்சி மற்றும் பயங்கர வாத எதிர்ப்புக் குழு(ATS-Anti-Terror Squad) ஆகியவற்றால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வழக்கு களையும் விலக்கிக் கொள்ளுமாறு கோரிஇருக்கிறார். தேர்தல் முடிவுகள் எங்க ளுக்கு இரண்டாவது விடுதலையாக வந்திருக்கிறது,’’ என்று அவர் ஒரு தேசிய நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். (தி இந்தியன் எக்ஸ் பிரஸ், மே 24, 2014)பதவியேற்றவுடனேயே பிரதமர் அலுவலகத்திற்குப் பொறுப்பான புதிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், தங்களுடைய அரசாங்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவைத் தொடர்வது சம்பந்தமாக மறு ஆய்வு செய்திடத் தயாராக இருக்கிறது என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ்தான், நம்முடைய நாடு சுதந் திரம் அடைந்த சமயத்திலும் மற்றும் பிரிவினை அடைந்த சமயத்திலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இந்திய யூனியனுடன் இணைய உடன்பட்டது என்பதை வாசகர்கள் நினைவுகூர்ந்திட வேண் டும். இவ்வாறு அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை நீக்கிட உரியநடவடிக்கைகள்/விவாதங்கள் மேற் கொள்ள வேண்டும் என்று இவர்கள் மிக வும் தெளிவான முறையில் அறிக்கை விடுத்திருப்பதானது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகிய இரு தரப்பினர் மத்தியி லிருந்தும் கூர்மையான முறையில் இயற்கையாகவே கண்டனக் குரலை வர வழைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பது இவர்களது உண்மையான நிகழ்ச்சிநிரலின்’’ ஒரு பகுதியே யாகும்.
வாஜ்பாயி அரசாங்கம் இருந்த காலத்தில் தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் இதனைச் செய்ய முடியவில்லை என்று அவர்கள்கூறிக்கொண்டிருந்தார்கள். இந்த சட்டப்பிரிவை ரத்து செய்திட உறுதி பூண்டிருக் கிறோம்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கை யில் கூறியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தின் ஆணிவேராக அமைந்திருக்கக்கூடிய இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் என்பவை அயோத்தியில் தாவாவுக் குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பதும், நாடு முழுவதும் ஒரே சீரான சிவில் சட்டம் அமல்படுத்துவது என்பதும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது என் பதுமாகும்.
இவையன்றி மதச் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடுகள் அளிப்பது தொடர்பாகவும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கருத்துக்களைக் கூறத் தொடங்கி இருக் கிறார்கள். சமூக நீதிக்கான அமைச்சர் தவர்சந்த் ஜெஹ்லாத் ஊடகங்களி டையே, உரையாற்றுகையில், “சிறுபான் மையினருக்கு 4.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செய்வதை பாஜக அரசாங்கம் எதிர்க்கிறது’’ என்றும், “ஏனெனில் மதஅடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது’’ (“unconstitutional”) என்றும் கூறியிருக்கிறார்.
சிறுபான்மையினர் விவகாரங் களுக்கான அமைச்சர் நஜ்மா ஹெப்துல் லாவும்கூட, சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீட்டைத் தான் எதிர்ப்பதாகவும், ஏனெனில் இடஒதுக்கீடு என்பது போட்டி உணர்வையே கொன்றுவிடுகிறது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)அவர் மேலும், முஸ்லிம்கள் சிறு பான்மையினர் இல்லை என்றும், ஏனெனில் அவர்கள்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றும் கூறியிருப்பதுடன், அவர் ஒருபடி மேலும் சென்று, பார்சிக்களை அவர்களின் மக்கள்தொகை சுருங்கி வருவதால் இத்தகைய வரையறைக்குள் கொண்டுவரலாம் என்றும் வாதிட் டுள்ளார். முஸ்லிம்கள் நலன் தொடர் பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் மேற் கொண்ட கொள்கைகளைக் கைவிட அவர் முடிவு செய்துவிட்டதுபோலவே தோன்றுகிறது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை. பார்சிக்கள் தான் சிறுபான்மையினர். அவர்கள் எண்ணிக்கை மேலும் குறையா வண்ணம் இருப்பதற்கு அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்கவேண்டியிருக்கிறது,’’ என்று ஊடகங் களிடையே அவர் கூறியிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 28, 2014)
முஸ்லிம் சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும் சமூக நிலைகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட நீதியரசர் சச்சார் குழு, அவர்களின் வாழ்நிலை தலித்துகள்/பழங்குடியினர் நிலைமைகளைவிட கீழானதாக இருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்ததையும், அதன் அடிப்படை யில் ஐமுகூ அரசாங்கம் நீதியரசர் ரங்க னாத் மிஷ்ரா ஆணையம் அமைத்து, அவர் களின் நிலைமையை மேம்படுத்திட ஆலோசனைகள் கோரியதையும் வாச கர்கள் நினைவுகூர்ந்திட வேண்டும். அது அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 2011 டிசம்பரில் ஐமுகூ அரசாங்கம், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில், முஸ்லிம் சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வெட்டி உருவாக்கியது.
நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படை யில்தான் மேற்கு வங்கத்தில் முந்தைய இடது முன்னணி அரசாங்கமும் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் இருந்த பல்வேறு முஸ்லீம் குழுவினருக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, இதரபிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டிற் குள்ளேயே ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் முடிவுகள் மேற்கொள்வதற்கு முன்பே மேற்கு வங்க முந்தைய இடது முன்னணி அரசு இவ்வாறு முடிவெடுத்திருந்தது. முஸ்லிம்களை சிறுபான்மையின ராகக் கருதுவது என்பதை அவர் களின் மக்கள் தொகை எண்ணிக்கையை  வைத்துப் பரிசீலிக்கக்கூடாது, மாறாக அவர்களின் பொருளா தார மற்றும் சமூக நிலையின் அடிப் படையில்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இப்போது சிறுபான்மையினர் நலன்களுக்காகப் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சருக்கு, சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் சிறுபான்மையினரை, பார்சிக்கள் போன்ற சிறுபான்மையின ரோடு ஒப்பிடுவது மிகவும் குரூரமான ஒன்று.
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின் பல முக்கிய அம்சங்கள் அரசாங்கத்தின் கொள்கை விவகாரங்களில் இவ்வாறு பலவிதங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ள அதே சமயத்தில், நாட்டின் பலபகுதிகளிலும் மதவெறியைக் கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தன் கோர முகத்தை, உயர்த்தி இருப்பதும் ஆழ்ந்து பரிசீலிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் தில்லியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு ஒருநாள் முன்பு, ஞாயிறு அன்று, கர் நாடகா மாநிலம் மங்களூரில் இந்துத் துவா அமைப்புகள் சில கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
என்ன கோரிக்கை தெரியுமா? முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவ தைத் தடை செய்ய வேண்டுமாம். தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மதப் பதற்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. (டூ சர்க்கிள்ஸ்.நெட், மே 27, 2014).
மோடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அதே நாளன்று அதனைக் கொண்டாடும் விதத்தில் கர்நாடகா மாநிலம் பிஜப்பூரில் பாஜக ஊர்வலம் ஒன்று நகரின் மையப்பகுதியான காய்கறி சந்தை அருகில் செல்லும்போது வகுப்புக்கலவரமாக வெடித்து 15பேர் காயமடைந்திருக்கின்றனர், சந்தை யையே நிர்மூலமாக்கி சூறையாடி இருக் கின்றனர். உள்ளூர் தொலைக்காட்சி சானல்கள் இவ்வன்முறையை ஒளிபரப்பி யுள்ளன. தில்லியில் பதவிப் பிரமாணம் நடை பெறும் சமயத்தில், குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் கோம்டிபூர் பகுதியிலும், வகுப்புக்கலவரங்கள் வெடித்துள்ளன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடை யிலான மோதலைத் தகர்ப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இரு வகுப்பின ருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு வாய்த்தகராறுதான் இம்மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இம்மோதலில் அங்கிருந்த சில கடைகள், ஒரு மினிபேருந்து, ஒருசில இரு சக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. (ஏஎப்பி சர்வதேச ஏஜன்சி நிறுவனத்தின் செய்தியை மேற்கோள் காட்டி, மும்பையி லிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி, மே 27, 2014)
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், நவீன தாராள மயச் சீர்திருத்தங்கள் தொடர அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவது தொடர்பாக அந்நிய நேரடிமுதலீட்டுக்கான உச்சவரம்பு தற் போதுள்ள 26 சதவீதத்திலிருந்து மேலும் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முதன்முறையாக அமல் படுத்தியது பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசாங்கம்தான் என்பதை இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு இது ஊறு விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அப்போது அது பொருட்படுத்தவில்லை.இப்போதைய அரசாங்கத்தின் ஆரம்ப அறிகுறிகள், ஒருபக்கத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில் மறுபக்கத்தில் தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வேலையிலும் அது ஈடுபடும் என்று நாம் வெளிவிட்டு வந்த சந்தேகங்கள் அனைத்தும் மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் அமைந்துள்ளதாகவே கருதுகிறோம். உண்மையில், பாஜக அரசாங்கத்தின் இவ்வாறு இரு பக்கங்களிலிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களைச் சந்திக்கத் தயாராயிருக்கக்கூடிய அதே சமயத் தில், எதிர்காலத்தில் நம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடக் கூடிய விதத்திலும் வலுவான போராட் டங்களுக்கும் தயாராவோம்.
- தமிழில்: ச.வீரமணி



Sunday, May 25, 2014

தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் தேவை


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்தல் என்பது எப்போதுமே அமைய விருக்கும் அரசாங்கமானது மக்களுக்குச் சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக்கூடிய விதத்தில் கொள்கைகளையும், திட்டங் களையும் அறிவித்திடும் என்ற எதிர்பார்ப்பு களுடனேயே அமைந்திடும்.
இது தொடர் பாக, நாம் மேலும் சிறிது காலத்திற்குக் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டபின்புதான், அரசாங்கம் அமைந்து, அதுதான் பின்பற்றவிருக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமாக தன்னுடைய முன்னுரிமைகளை அறிவித்திட முடியும். அதன்பின்னர்தான் நாம் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையில் செயல் பட முடியும்.இப்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் திற்காக நிதி உதவி அளித்தவர்கள், புதிய அரசாங்கம் அமையும்போது அதனைத் திரும்பப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கு வார்கள். அதற்காக, அவர்கள் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்கும் அரசாங்கத்திடம் சிலகொள்கைகளை `டிக்டேட்செய்வார்கள். அவ் வாறு அவர்கள் தாங்கள் பிரச்சாரத்தின்போது முதலீடு செய்த பணத்தை மீண்டும் எடுத் திடுவதற்காக, அரசாங்கத்திற்கு `டிக்டேட்செய்யும் கொள்கைகள் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்திடும் என்பதில் ஐயமில்லை. எனவே இவர்களின் தலையீடு மக்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பொய்யாக்கிடும்.
மேலும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆபத்து ஏற்படலாம் என்று ஆழமான முறையில் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. மக்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும் அதேசமயத்தில் அதன் நாடாளுமன்ற உறுப் பினர்களில் ஒருவர் கூட முஸ்லிம் சிறு பான்மை மதத்தை சேர்ந்தவர் இல்லை என்றஉண்மையும் தெளிவானமுறையில் அமைந் திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஏற்கனவே நாம் பெற்றிட்ட நம்முடைய நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அதன்சாதனைகளை, என்னதான் அவை மிகக்குறைவாகவும், வரையறுக்கப்பட்ட நிலையிலும் இருந்தபோதிலும்கூட, அவற்றைப்பாதுகாத்திடவும் அவற்றை மேலும் வலுப்படுத்திடவும் நம்முடைய உறுதியை இரட்டிப் பாக்கிக் கொள்ள சபதமேற்றிடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகையதொரு உறுதியை நாம் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத் தின்போது மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைத்தோம். நாட்டு மக்கள்மீது தற்போது ஏற்றப்பட்டுள்ள சுமைகளிலிருந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைத் திசை வழியை முன்வைத்து நாம் பிரச்சாரம்மேற்கொண்டோம்.
அவ்வாறு நாம் முன்வைத்த மாற்றுக் கொள்கைத் திசைவழி யானது, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகவும் கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் இப்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தொடரும். நம் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை மேலும் முன்னேற்றிடவும், மெருகேற்றிடவும் தேவைப்படும் சில முக்கிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என்பதை இத்தேர்தல்களின் அனுபவம் ஏற்படுத்தி இருக்கிறது.
முதலாவதாக, சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றிலேயே இப்போதுதான், முதன் முறையாக, ஒரு கட்சி நாடாளுமன்ற மக்கள வையில் மிகவும் குறைவான அளவில் வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தபோதிலும், அதிக அளவிலான இடங்களைப் பெற்று ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இத்தேர்தல்களில் வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அதே சமயத்தில் 282 இடங்களை அது வென்றிருக்கிறது. இதற்கு முன் 1967இல் காங் கிரஸ் கட்சி 40.8 சதவீத வாக்குகளைப் பெற்று,283 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத் திருந்தது. ஜனநாயகம் என்பது `பெரும்பான்மையின் ஆட்சிஎன்றுதான் பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில், வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்களிக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவர்களாகிறார்கள். ஆனால், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இந்தியாவில் தனிப்பட்டமுறையில் எந்தவொரு கட்சி யும் இதுவரை 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது இல்லை.
தங்களுக்கு எதிராக 69 சதவீதத்தினர் வாக்களித்திருந்தும்கூட பாஜக மிகவும் வசதியான முறையில் பெரும்பான்மையைப் பெற்று வென்றிருக்கிறது. என்னே விந்தை!இத்தகைய குறைபாடுகள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் அதிகம் வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர் களே வென்றதாகக் கருதப்படுவார் என்கிற தற்போதைய தேர்தல் அமைப்புமுறையின் விளைவாக ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள பல முதிர்ச்சிபெற்ற ஜனநாயக நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கட்சிக்கும் தீர்மானிக்கப்படுகின்றன. அங் கெல்லாம் மக்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆராய்ந்துதாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தான் வாக்களிக்கிறார்களே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சியின் சார்பில் முன்னுரிமை வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் நடத்திடும் அதிகாரக் குழுமத்திடம் தேர்தலுக்கு முன்பே தந்திட வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் சதவீத அடிப் படையில் அக்கட்சிகள் அளித்திருக்கும் பட்டியல்களிலிருந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அர சாங்கம் அமைக்கவுள்ள கட்சி, தேர்தலில் வாக்களித்தவர்களில் 50 சதவீதத்திற்கும்அதிகமான அளவில் வாக்கு களைப் பெற் றிருக்க வேண்டும். இதுதான் அந்நாடுகளில் உள்ள தேர்தல் அமைப்புமுறையாகும். நாட்டின் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று தற்போது நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை சதவீத அடிப்படையில் கணித்து, விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெறும்நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. அவ் வாறு அது கணக்கிட்டுள்ள விகிதத்தில் பார்த்தோமானல், பாஜகவிற்கு 282 இடங்கள் கிடைக்காது, மாறாக 169 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரசுக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களுக்குப் பதில் 18 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0 இடத்திற்குப் பதில் 23 இடங்களும், அஇஅதிமுக வுக்கு 37 இடங்களுக்குப் பதில் 13 இடங் களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 34இடங்களுக்குப் பதில் 21 இடங்களும் மட்டுமே கிடைத்திருக்கும். (தி இந்து, மே 20, 2014).இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கு, ஒட்டுமொத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்புமுறை என்பது சிறந்ததொரு தீர்வாக அமையும் என்று சொல்வதற்கில்லை,
மாறாக,உலகில் வேறெந்த நாட்டுடனும் பொருத்திப் பார்க்க முடியாத அளவில், மிகப்பெரிய அளவில் சமூக-கலாச்சார-மத-மொழி வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் மிகவும்சிறுபான்மையாகவுள்ள தங்கள் பிராந்தியத் தைச் சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று விரும் புவது இயற்கையேயாகும். எனவே, இத்தகைய நிலைமைகளின்கீழ், பாதி அளவிற்குக் கட்சியின் வேட்பாளர் முன்னுரிமைப் பட்டியலுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவமும், மீதிபாதி தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களும் நிற்கக்கூடிய தேர்தல் அமைப்புமுறை மிகச்சிறந்ததொரு அமைப்பாக இருந்திடும். உதாரண மாக, தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இரு தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குரிமைகளை அளித்து, ஒரு வாக்கை அவர் தனிப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கும், மற்றொரு வாக்கை, தான் விரும்பும் கட்சிக்கும் (அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில்) அளித்திட வகை செய்திட வேண் டும்.
தனிப்பட்ட நபர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குகளைப் பெற்றிருப்பின், அவர்களில் எவர் அதிகமான வாக்கு களைப் பெற்றிருக்கிறாரோ அவர் வென்றதாக அறிவிக்கப்படும் அதே சமயத்தில், அரசியல் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்தவரை தேசிய அளவில் அக்கட்சி பெறும் வாக்குகளின் சதவீத அடிப்படையில் தேர்ந்தெடுத்திட வேண்டும். இந்த எண்ணிக்கை, அக்கட்சியால் முன்னரே அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைப் பட்டியலில் உள்ள வேட்பாளர்களிலிருந்து நிரப்பப்பட வேண்டும்.கூடுதலாக, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஒரு கட்சி பெறும் குறைந்தபட்ச வாக்குசதவீதமும் நிர்ணயிக்கப்படலாம். உதாரணமாக 2 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். இதற்குக் குறைவான சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெறும் கட் சிக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளு மன்றத்தில் இடமிருக்காது. ஆனால் அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக் கப்பட்ட வேட்பாளர் இடம் பெறலாம். இத்தகைய முறையானது கூட்டணி அமைத்துத்தான் ஆகவேண்டும் என்கிற பிரச்சனைக்கும், இதன்காரணமாக நாடாளு மன்றத்தில் மிகச்சிறிய அளவில் விகிதாச்சாரம் உள்ள கட்சிகள்கூட மிரட்டும் (பிளாக்மெயில்) ஆபத்துக்களுக்கும் தீர்வு கண்டிட முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட் டில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளு டனும் கலந்து பேசி ஒரு கருத்தொற்றுமை ஏற்படுவதன் அடிப்படையில் இத்தகைய பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் அமைப்புமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றே கூறி வருகிறது.இப்போது நடைபெற்ற தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டதைப் பார்த் தோம். அதேபோன்று இந்தத் தடவை மோடிக் கான பிரச்சாரத்திற்காக குறைந்தபட்ச மதிப் பீட்டின்படியே 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவானது. கூடுத லாக, வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக பல் வேறு தவறான வகைகளில் பணம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு வாக்கிற்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாக்காளர்களுக்கு நேரடி யாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. தேர்தல் ஆணையமும் நாட்டின் பலபகுதிகளில் பணம், மது பாட்டில்கள் மற் றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறுவிதமான நன்கொடைப் பொருள்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பறிமுதல் செய்திருக்கிறது.
இவ்வாறு பணபலம் பயன்படுத்தப் பட்டிருப்பது தேர்தல் முடிவுகளிலும் பிரதி பலித்திருக்கிறது.ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 16ஆவது மக்களவைக்கு வெற்றி பெற் றுள்ள 541 வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்களா வார்கள். 15ஆவது மக்களவையில் 300 பேர் கோடீஸ்வரர்கள். இப்போது அதைவிட அதிகம். இந்த 442 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்தின் மதிப்பு (அவர்கள் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தின் அடிப்படையிலேயே) 6500 கோடி ரூபாய்களாகும். இத்தகைய கோடீஸ்வரர்களில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் 237 பேர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர்களாவர்.பண பலத்தை இவ்வாறு பயன்படுத்துவது மக்களின் ஜனநாயகத் தேர்வை சிதைத்திடும். போட்டியிடும் வேட்பாளர் சிறந்த கொள்கை மற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் ஆராய்வது இல்லாமல் போய்,பணம் அதிகமாகக் கொடுத்தது யார் என்றஅடிப்படையில் வாக்களிக்க மக்கள் ஈர்க் கப்படுகிறார்கள்.
நாட்டின் ஜனநாயகத்தை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்திட இவ்வாறு பணம் தரும் முறை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். இதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் செய்திடும் செலவினங்களுக்கு தற்போது எவ்வித முறைப்படுத்தலும் அல்லது வரம்பும் இல்லாத நிலை கடுமையான முறையில் மாற்றப்பட வேண்டும். இன்றையதினம், வேட் பாளர்கள் செலவு செய்யும் தொகைக்குத்தான் வரம்பு இருக்கிறதேயொழிய, கட்சியின் செலவினங்களுக்கு எவ்வித வரம்பும் கிடையாது. அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கும் வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கோரி வந்திருக்கிறது. இவ்வாறு தேர்தல் விதிகளில் குறைபாடுகள் இருப்பதன் காரணமாகத்தான், தங்கள் தலைவர்கள் நாடு முழுதும் குறுக்கும் நெடுக்குமாக தனியார் ஜெட் விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்ய பல அரசியல் கட்சிகளால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடிந்தது. பண பலம் உள்ள கட்சிகளுடன் சிறிய கட்சிகள் குறிப்பாக குறைந்த வசதிகளுடன் கூடிய சுயேச்சைகள் போட்டிபோட முடியாது ஓரங்கட்டப்படும் நிலை உருவாகி உள்ளது.
இத்தகு நிலை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பினைக் குறைக்கக்கூடிய விதத்தில் மக்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகளை சிதைக்கிறது.சில அரசியல் கட்சிகளுக்கு கார்ப் பரேட்டுகள் எவ்வித வரம்புமின்றி நிதி யினை வாரி வழங்கி இருக்கின்றனர். இதனைசரிசெய்ய வேண்டும் எனில், கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். மாறாக, கார்ப்பரேட்டுகள் நம் ஜனநாயகத்தை வலுப் படுத்துவதற்கு நிதி அளித்திட வேண்டும். இத்தகைய நிதி தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளிடம்தான் தரப்பட வேண்டும். அவை, தேர்தலை சிறப்பாக நடத்திட பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் இதுதான் தற்போதைய நடைமுறையாகும்.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசீலனைகளில் நாம் மேலே கூறிய அனைத்து அம்சங்களும் அலசி ஆராயப்பட வேண்டும். நம்முடைய ஜனநாயக நடைமுறைகளை மிகப்பெரிய அளவில் சிதைத்துள்ள நிலைமைகளைச் சரிசெய்திட இவை முற்றிலும் அவசியமாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் ஆழமான வகையில் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். தேர்தல்களுக்குப்பின் உள்ள நிலை மைகள், நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் புதிய சவால்களை உரு வாக்கியுள்ளன. எதிர்காலத்தில், மதவெறியைக் கூர்மைப்படுத்தக்கூடிய அனைத்துவிதமான முயற்சிகளிலிருந்தும் நம் நாட்டின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாது காத்து, வலுப்படுத்தக்கூடிய விதத்தில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் வாழ்க் கைத்தரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய விதத்தில் அவர்கள் மீது ஏவப்படக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி யிருக்கும். நாம் நடத்தவிருக்கும் இத்தகைய போராட்டங்களின் வலுதான் நம் நாட்டின், நாட்டு மக்களின் எதிர்கால வடிவத்தைத் தீர்மானித்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, May 17, 2014

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து



-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்தபின்னர் மற்றும் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்தபின்பும் ஓர் ஆழமான ஆய்வினை வழங்குவதற்காக நாமும் காத்திருப்போம்.  தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது.  அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக்குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். ஆயினும், இப்போதுள்ள நிலையில்  இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல்களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்வாலும், பொருளாதார மந்தத்தாலும் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங்களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தங்கள் தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்வா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி மற்றும் `நல்லதோர் அரசாங்கம் ஆகியவற்றிற்கான உறுதிமொழிகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லீம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன்னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜகவின் பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.
இரண்டாவதாக, பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும்  போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர்களை எச்சரித்தது.  எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.   குஜராத், பாலும் தேனும் ஆறாக ஊடும் எல் டோராடோ (El dorado) போன்ற மாநிலமாக சித்தரிக்கப்பட்டது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ராம லக்ஷ்மிமோடி புராணத்தை உருவாக்குதல் என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள்அயோத்தியையும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்திசாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தியர்களைத் திரட்டியிருக்கிறார்கள்.    நாட்டு மக்களின் மனதில் குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகைள உடைத்தெறியக்கூடிய விதத்தில் வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப்படைந்திருந்த  மக்கள் அது கூறுவதை நம்பத் தயாராக இல்லை.  ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையையும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட)  மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூட தவறிவிட்டது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப் பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றை அமல் படுத்தியதன் மூலம் இடதுசாரிகளுக்கு ஒரு கவுரவத்தை கொடுத்த காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக்கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு அக்கட்சி கூற முன்வராததிலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீளவும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மை யின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது.
ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக  சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.  தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது.  மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர்களுக்குக் கவர்ச்சியூட்டக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணம் பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான கவர்ச்சிப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது. கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால்  உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் (rigging) மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடதுசாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை  உண்மையாக பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.  தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். 
கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகள் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடியவில்லை.  இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலைநிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப்படுத்துவதற்கான தேவையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறது. முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும். எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதி தேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர்  அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோதான் செல்ல வேண்டும் என்றும்அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம்.
மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜகவிற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம் என்பதேயாகும். போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடைமுறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது. பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒரு பகுதி விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்புமுறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும்.  இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றுத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும். தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும்  ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.   மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.   பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சியால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் சரடுகள்தான் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏகப்பட்ட சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜகவிற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள். இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்துத்வா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின் நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைத் திசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும்  இவ்வாறு இவ்விரண்டு திசைகளிலும் வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.
இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடதுசாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதே சமயத்தில்இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச்செல்லவும்  நாமனைவரும் சபதம் ஏற்போம்.

(தமிழில்: ச.வீரமணி)