Sunday, May 20, 2012

சிறப்புக் குறிக்கோள் திட்டம் யாருக்காக?


பிரதமரும், அவரது அலுவலகமும் கட்டமைப்பு வசதிகள், கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வெளிக்கொணர்தல் முதலிய துறை களில் முதலீடுகளை அதிகப்படுத்துவ தற்காக எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக் கோள் வாகனம் (SPV - Special Purpose Vehicle) ஒன்றை அமைத்திடத் திட்டம் தீட்டியிருப்பதாக, தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிவிகிதம் வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதானது, நாட்டிலுள்ள அறிவுஜீவிகள் மற்றும் தொழிற்துறையினர் மத்தியில் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தியிருப்பதால் இத்தகைய முடிவிற்குப் பிரதமர் வந்திருக் கிறார் என்று தெரிகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் மத்தியில் எதிர்மறை உணர்வு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். பிரதமரின் உண்மை யான கவலை இதுதான். ஏனெனில், அந் நிய நிறுவன முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இது இட்டுச் செல்லும், அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் ரூபாய் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைவதற்கும் அது நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தும். ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, தன்னுடைய நவீன தாராளமயப் பொரு ளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்வதற்காக, இதன் முதலீட் டாளர்கள் மேலும் மேலும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் புதிய புதிய வாய்ப்புவசதிகளை உருவாக்கித் தரு வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதன்மூலம் அந்நிய முதலீடுகள் மேலும் அதிக அளவில் ஈர்க்கப்படலாம் என்றும் அதன் மூலம் வளர்ச்சி விகிதம் முன் னோக்கிச் செல்லும் என்றும் அரசு நம்பு கிறது. பொது(அரசு) -தனியார் கூட்டுச் செயல்பாடு மூலம் இவ்வாறு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு வசதி களை உருவாக்கித்தரும் வேலைகளில் திட்டக் கமிஷனும் அரசாங்கமும் இறங் கியிருக்கின்றன. பிபிபி (பொது(அரசு)-தனியார் கூட்டுச் செயல்பாடு) என்பது பிரதிபலிப்பது என்ன? இதன் மூலம், மக்கள் நலத் திட் டங்களை நிறைவேற்றுவதற்கும், மக்க ளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற் கும் தனக்கு எவ்வித அக்கறையும் கிடை யாது என்பதை அரசு சொல்லாமல் சொல்கிறது. பொதுத்துறைத் திட்டங் களில் தனியார் முதலீடு செய்யலாம். ஆனால் பொதுத்துறைச் சொத்துக்க ளைத் தனியார் கொள்ளைகொண்டு போக அனுமதித்திட முடியாது. திட்டக் கமி ஷன், நாட்டின் திட்டமிடுதலுக்கு சவக் குழி தோண்டும் திட்டத்தினை அனுமதித் திட முடியாது. தனியார் கொள்ளைலாபம் ஈட்டுவதற் கான மற்றுமொரு வாய்ப்புவாசலே இந்த எஸ்பிவி என்னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைக்கப்படும் திட்டமாகும். சிறப்புக் குறிக்கோள் வாகனம் அமைப்பது தொடர்பாக, அத்திட்டத்தினை நியாயப் படுத்தி, துறைகளுக்கிடையே சுற்றுக்கு விடும் குறிப்பில் (internal note) அரசு கூறி யிருப்பதாக, ஊடகங்கள் வெளியிட்டிருப்ப தாவது: ‘‘இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதம் 2011-12ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டிற்கும் கீழே வீழ்ச்சியடைந் திருக்கும் பின்னணியில், முதலீட்டு விகி தத்தைப் பெருக்கிட வேண்டியது அவ சியத் தேவையாகும். பொருளாதார வல்லு நர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஊட கங்கள் இதனை வலியுறுத்திக் கொண் டிருக்கின்றன. கையில் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு சமாளிக்கக்கூடிய அதே சமயத்தில், புதிய முதலீடுகளுக் கான வழிகளையும் ஆராய வேண்டி யிருக்கிறது.’’ மின் திட்டங்கள் (குறைந்தபட்சம் 58 மின்திட்டங்கள்) அமைப்பதற்கான தனி யார் முதலீடுகளை, பல்வேறு மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகளின் துறை களும், அமைச்சகங்களும் விரும்பி ஏற் காத அதே சமயத்தில், பிரதமர் அலுவ லகம் அதனை இத்தகைய எஸ்பிவி என் னும் சிறப்புக் குறிக்கோள் வாகனம் மூலம் மேற்கொள்ளத் திட்டம் தீட்டியிருக்கிறது. இவ்வாறு இந்தச் சிறப்புக் குறிக்கோள் வாகனம் ஒரு மின்திட்டம் உருவாவதில் உள்ள பல்வேறு நிபந்தனைகளையும் சரி செய்திடப் பொறுப்பேற்றுக்கொண்டு, அதனை ஏலத்திற்கு விட (bidding) முன் வந்திருக்கிறது. எஸ்பிவி திட்டங்களை அடையாளங் காணவும், அவற்றிற்கான நிலங்களைக் கையகப்படுத்தவும், அதன் அனைத்துப் பணிகளையும் மேற் கொண்டு இறுதிப்படுத்திடவும், அரசின் பல்வேறு துறைகளிடமிருந்தும் தடை நீக்கச் சான்றுகள் பெற்றிடவும் பின்னர் அவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஏலத்திற்கு விடவும் பொறுப் பேற்றுக்கொள்ளும். அதுமட்டுமல்ல, குறைந்தவட்டியில் நிதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இந்த எஸ்பிவி அமைப்பே மேற்கொள்ளும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், எஸ்பிவி, தனியார் கார்ப்பரேட் நிறு வனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரும். பிரதமர் அலுவலகக் குறிப்பு இது தொடர்பாக எழுதியுள்ள துறைக ளுக்கிடையிலான குறிப்பில் குறிப்பிட்டி ருப்பதாவது: ‘‘எஸ்பிவி அணுகுமுறை இதுவரை அரசு ஊழியர்கள் மத்தியி லிருந்த மனோபாவத்தையே பெரிய அள வில் மாற்றி அமைக்கிறது. தடைநீக்கச் சான்றுகள் போன்ற பலவற்றைத் தனியார் கள் அரசிடம் பெறுவதற்கு அலையும் பொறுப்பு இனி இல்லை. எனவே இது முதலீட்டாளரின் உணர்வினை ஆக்க பூர்வமான முறையில் மாற்றிடும்.’’ இவ்வாறு இந்த எஸ்பிவி என்ற சிறப் புக் குறிக்கோள் வாகனம் என்னும் முறை யானது, பிபிபி என்னும் பொது-தனியார் கூட்டுச் செயல்பாடு என்பதைவிட, தனி யார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அதிக அளவில் துணை புரியும். சர்வதேச நிதி மூலதனம், பிபிபி என் னும் முறையை அரசு மேற்கொள்ள வேண் டும் என்று வலியுறுத்திய சமயத்தில், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்களை (அவை லாபம் ஈட்டிக்கொடுத்த நிலையிலும்) தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், அரசாங்கம் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்றும் அறிவுறுத்தியது. பின்னர் படிப்படி யாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக ளையும் தனியாரிடம் தந்துவிட வேண்டும் என்று கூறியது. அரசாங்கம், துப்புரவுப் பணிகள் மற்றும் தண்ணீர் விநியோகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றது. இப்போது அதிலும் கூட, பிபிபி முறையைக் கொண்டுவந்து, பயன்படுத்துவோர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டி ருக்கிறது. இவ்வாறு சமூகத்திற்கான திட் டங்கள் எதையும் இனி அரசாங்கம் செய் வதற்கு இல்லை என்கிற நிலைக்கு அர சாங்கம் தள்ளப்பட்டு விட்டது. ஆயினும், இந்தியாவில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக் கிறது என்கிற பிரதமர் அலுவலகத்தின் வரையறையில் அடிப்படைப் பிழை ஒன்று இருக்கிறது. வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு முதலீடும் மிகவும் மந்தமான அளவில் இருந்ததே காரணம் என்பதே இந்தப் பிழையாகும். எனவே, அரசு இவ்வாறு எஸ்பிவி வழியாகவும், பிபிபி வழியாகவும் அரசாங்கத்தின் உதவி யுடனேயே தனியார் தங்களது மூலதனங் களைப் பெரிய அளவில் முதலீடு செய்திட அரசு வழிவகுத்துக் கொடுக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி விகிதத்துடன் அமைந்திட வேண்டுமானால், உள்நாட்டுத் தேவை யில் உள்ள மந்தநிலை போக்கப்பட வேண்டும். இதைச் செய்திடாமல், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திட மூல தனத்தை அதிகரிப்பதில் அர்த்தமேதும் இல்லை. ஏனெனில் இவர்கள் உற்பத்தி செய்வது எதுவாக இருந்தாலும் அதனை வாங்க, சந்தை இருக்க வேண்டும். இதற்கு மக்களின் வாங்கும் சக்தி போதுமான அள விற்கு இருந்திட வேண்டும். இத்தகைய வாங்கும் சக்திதான் நாளும் உயரும் விலைவாசி உயர்வால் கணிசமான அள விற்கு அரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேசிய மாதிரி சர்வே குடும்பச் செலவி னங்கள் தொடர்பாக மேற்கொண்ட சமீ பத்திய ஆய்வுகள், நாட்டில் 60 விழுக் காட்டுக் குடும்பங்கள் திட்டக் கமிஷன் நிர்ணயித்துள்ள வறுமை வரையறைக்கும் கீழே இருப்பதை உறுதிப்படுத்தி இருக் கின்றன. அதாவது காலஞ்சென்ற அர் ஜூன் சென்குப்தா அறிக்கை மதிப்பிட் டுள்ளபடி, நாட்டில் உள்ள மக்களில் 80 கோடிக்கும் மேற்பட்டோரில் சுமார் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க முடியாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என் பதுடன் இந்த ஆய்வு மிக நெருக்கமாக இருக்கிறது. இத்தகைய பின்னணியில், நமக் குத்தேவை நாட்டின் உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது என்பதுதான். அதற்கு நாட்டு மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்திட வேண் டும். அதற்கு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் நாட்டில் பெரிதும் தேவையான கட் டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படு வதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு கள் கணிசமான அளவிற்கு அதிகரிக் கப்பட்டு, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்திடும். இதைச் செய்வதற்கு முன்வராமல், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் தன்னு டைய நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளையே பின்பற்றவும், தனியார் தங்கள் லாப வேட்கையை மேலும் மேலும் அதிகரிக்கும் வண்ணம் தனியார் முதலீடு களை உருவாக்கவுமே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட்டு, மிகப் பெரிய அளவில் பொது முதலீடு உட் செலுத்தப்படாவிட்டால், நாட்டில் ஆட் சியாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்காது, நாட்டு மக்க ளில் பெரும்பான்மையோரின் வாழ் நிலையும் மேம்படாது. பொது முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய அளவிற்கு வளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. தற்சமயம், இவ் வளங்கள் பல்வேறு ஊழல்கள் மூலமாகக் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன அல்லது தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள பணக்கார ஒளிரும் இந்தியர்களுக்கு அபரிமிதமான முறையில் வரிச் சலுகை கள் அளிப்பதன் மூலம் அபகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அரசின் இழிநடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமானால், நம் நாட்டில் வளங்களுக்குப் பஞ்சமே கிடையாது. நாட்டில் வளர்ச்சிவிகிதம் குறைவது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் உள்ளபடியே கவலை கொண்டிருக்கு மானால், தன்னுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். நம் பொருளா தாரம் வளர்வதற்கும், நம் மக்களின் வாழ் நிலை உயர்வதற்கும் இது ஒன்றே வழி. ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தைத் இத்தகைய திசைவழியில் திருப்பக் கூடிய வகையில் மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். தமிழில்: ச.வீரமணி

Sunday, April 29, 2012

பி.சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு - நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர்: -பிரகாஷ் காரத்


2012 மே 1 அன்று முதல் பி. சுந்தரய்யா பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகிறது. நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி.சுந் தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட இது ஒரு சந்தர்ப்பமாகும். பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட பி.சுந் தரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கங்களின் ஊடே உருவான ஒப்பற்ற தலைவராவார். தன்னு டைய 17 வயதிலேயே விடுதலைப் போராட் டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சுந்தரய்யா, தன்னுடைய அரசியல் பய ணத்தை ஒரு காங்கிரஸ் செயல்வீரராக ஆரம் பித்து, உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக நிறைவு செய்தார். கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய வீரஞ் செறிந்த விடுதலைப்போராளிகள் பலரைப் போன்று சுந்தரய்யாவும் சாதியமைப்புக்கு எதி ராகக் கிளர்ச்சி செய்தார். சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நட வடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்கு முறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணா விரதம் மேற்கொண்டதாகும். தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் கம்யூனிஸ்ட்டான அமீர் ஹைதர் கான் மூலம், தோழர் சுந்தரய்யா, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் மாணவனான சுந்தரய்யாவிடம் புரட்சியாள னுக்கான ஆற்றல் அளப்பரிய அளவில் இருந் ததை அவர் பார்த்தார். அப்போதிருந்து பி.எஸ்-ஸின் அனைவரும் வியக்கத்தக்க புரட்சிகரப் பாதை தொடங்கியது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், பி.எஸ். கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர் களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருப் பதை அறிய முடியும். 24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அது இருந்தது. தென்னிந்தியாவில் கட்சி யைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந் தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். அவ ருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிர தேசத்தில், கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார். அதன் மூலம் தேசிய இயக்கத்திற்குள் ளிருந்த இளம் புரட்சிகர சக்திகளைக் கவர்ந் தார். அவருடைய முன்னோடியான மற்றும் கடின உழைப்பின் காரணமாகத்தான் ஆந் திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற் கான அடித்தளம் அமைக்கப்பட்டது. பி.எஸ். தமிழ்நாட்டிலும் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டு களின் முதல் குழுவினருடன் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகள் சிலவற்றை யும் உள்ளடக்கியிருந்தது. பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை அமைப்பதில் பி.எஸ். முக்கியமான பங் கினை ஆற்றினார். 1964இல் கட்சி உருவான ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சி யின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய் யப்பட்டார். பன்னிரண்டு ஆண்டு காலம் பி.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். அந்த சமயத்தில் அவர் கட்சியை ஒரு மார்க்சிச - லெனினிச அமைப் பாக உருவாக்குவதற்காகத் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டார். 1967இல் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ (‘கூயளம டிn ஞயசவல டீசபயnளையவiடிn’) என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. பி. சுந்தரய்யா, விவசாயப் புரட்சிக்கான போர்த்தந்திரங்களை வளர்த்தெடுப்பதில் பெருமளவில் பங்களிப்பினைச் செய்திருக் கிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறு வனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப் போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயத் தொழி லாளர்களை அணிதிரட்டுவதன் முக்கியத்து வத்தையும், நாட்டுப்புறத் தொழிலாளர் வர்க்க மாக அவர்களது பங்கினையும் அங்கீகரித்த முன்னவர்களில் அவரும் ஒருவர். வீரஞ் செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத் திற்கு அவரது தலைமை காலத்தால் அழி யாதது. ‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். பின்னர் அவர் விவசாய நிலைமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், நாட்டுப்புறத்தில் வளர்ந் துள்ள வர்க்கங்கள் குறித்தும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். எழுபதுகளின் மத்தியவாக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத் தில் உள்ள கிராமங்கள் குறித்தும் அங்குள்ள நிலங்கள், நிலவுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் குறித்தும் ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வினை அவர் மேற் கொண்டார். ஏழை விவசாயிகளையும், விவ சாயத் தொழிலாளர்களையும் விடுதலை செய் யக்கூடிய விவசாயப் புரட்சி இல்லாமல், நம் நாட்டில் ஜனநாயகப் புரட்சி முழுமை அடையாது என்பதில் அவர் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தார். தோழர் பி.எஸ். மார்க்சிச - லெனினிச சித் தாந்தம் மற்றும் கொள்கைகளில் தீவிரமான ஆர்வமுடையவராக இருந்தார். கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்த திருத்தல்வாதத் திற்கு எதிராகப் போராடினார். அதேபோன்று அதற்கு இணையாக ‘அதிதீவிர இடதுசாரி’ திரிபுகளுக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார். வீரத் தெலுங்கானா விவசாயிகள் கொரில்லா யுத்தத்தை முன்னின்று நடத்திய போராளி என்பதால் அவரால் நக்சலிச இயக் கத்தின் இடது - அதிதீவிரவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ வாதத்தை மிக எளி தாக உய்த்துணர முடிந்தது. தோழர் பி. சுந்தரய்யாவின் மற்றுமொரு மாபெரும் குணம், கட்சி மற்றும் இயக்கத்தின் முன்னணி ஊழியர்களை நன்கு பேணி வளர்த்தெடுக்கும் பண்பாகும். அவர் கட்சியின் பல்வேறு நிலைகளில் தலைமைப் பொறுப் பில் இருந்திருக்கிறார். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அறிவாற்றல் மிக்க ஊழியர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை சரியாக மதிப் பிட்டு, அவர்களைத் தெரிவுசெய்தபின், நன்கு பேணி வளர்த்திடுவார். தோழர் பி.எஸ். - ஸின் இத்தகைய உன்னதமான திறமையின் விளை வாகத்தான் எண்ணற்ற கம்யூனிஸ்ட் ஊழியர் கள் வழிவழியாக வார்த்தெடுக்கப்பட்டு செயல் பட்டு வருகிறார்கள். தோழர் பி.எஸ். தலைமுறையில் எண் ணற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைத்து வகையான தியாகம் புரிந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டிருக்கிறார்கள். ஆயி னும், தோழர் சுந்தரய்யாவின் எளிமை, தியாகம் மற்றும் முழு ஈடுபாடு அவர்களின் மத்தி யிலும் அவரைத் தனித்து, கம்பீரமாக நிறுத்தி யது. தோழர் சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத் தின் கிராமப் பகுதிகளுக்குள் பல மைல்கள் சைக்கிளிலேயே சென்றிருக்கிறார், தெலுங் கானாவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல நாட்கள் பல்வேறு சிரமங்களுடன் நடந்து சென்றிருக்கிறார், சிறைக்குள் பல ஆண்டு கள் மிகவும் கட்டுப்பாட்டுடனான வாழ்க்கை யைக் கழித்திருக்கிறார். உடல் உறுதியிலும் கடுஞ்சிரமங்களையும் புன்னகையுடன் ஏற்கும் மனோதிடத்துடனும் அவருக்கு இணையாக வெகு சிலர்தான் இருந்திருக் கிறார்கள். எல்லோரும் அவரை ஒரு முன் மாதிரியாகக் கொள்ளக்கூடிய விதத்தில் கட்சி யில் எவ்வித சுயநலமுமின்றி செயல்பட்டார். இத்தகைய அவரது எளிமை மற்றும் தியாக வாழ்வுதான் ஆந்திராவில் கட்சிக்கு அப்பால் உள்ள பலர் மத்தியிலும் அவரை ஒரு ‘‘கம்யூ னிஸ்ட் ரிஷி’’ என்று அழைக்க வைத்தது. கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, தோழர் பி.சுந்தரய்யாவின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டிற்கு அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக் கிறது. இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங் களை, கட்சியைக் கட்டுவதற்கும் வலுப் படுத்துவதற்குமான ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்து அரசியல் தலைமைக் குழு விரைவில் அறிவித்திடும். - தமிழில்: ச.வீரமணி

Monday, April 23, 2012

கார்ப்பரேட் ஊடகங்களின் கட்டுக்கதைகள் - a commentator


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு தொடர்பாக செய்திகள் வெளியிட்ட சில கார்ப்பரேட் ஊடகங்கள், மாநாடு குறித்து கட்டுக்கதைக ளையும், உண்மைகளைத் திரித்தும், பொய் மூட்டைகளையும் தங்கள் இஷ்டம் போல் கட்டவிழ்த்துவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, 2008இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதிலிருந்தே பெரும் வர்த் தக நிறுவனங்களின் சில ஊடகங்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ் வாறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இருந்து பாரம்பரியமாக வெளி வரும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு செய்தித்தாள்கள் இதில் முன்னணியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் ‘ஆனந்த பசார் ’‘பத்தி ரிகா குழுவிலிருந்து வெளிவரும் சில ஊட கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே, மாநாடு குறித்து, புத்ததேவ் பட்டாச்சார்யா கட்சியின் மத்தியத் தலைமையுடன் மகிழ்ச் சியுடன் இல்லை என்றும், எனவே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மறுத்துக் கொண்டிருந்தார் என்றும் எழுதின. மாநாடு தொடங்கிய நாளன்று, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் தொலைக்காட்சி மற்றும் செய் தித்தாள் ஊடகங்கள் ‘‘புத்ததேவ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அதில் அவர் தன்னை அர சியல் தலைமைக்குழுவிலிருந்தும், மத்தியக் குழுவிலிருந்தும் விடுவித்திடுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும்’’ வெளியிட்டன. தன் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனக்கு மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு அவர் எழுதியிருந்த கடிதம் குறித்து கட்சி யின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவித் திருந்த நிலையிலும், மத்தியக்குழுவிலும் அர சியல் தலைமைக் குழுவிலும் அவர் இருக்க மாட்டார் என்கிற ஊகங்களை அவை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தன. கட்சித் தலைமையில் ஆழமான பிரிவுகள் இருப்பதாகச் சித்தரிக்க வேண்டும் என்பதே அத்தகைய பிரச்சாரத்தின் நோக்கமாகும்.கட்சியின் அகில இந்திய மாநாடு என்பது கட்சியின் பிரதானமான கொள்கை மற்றும் நடைமுறை உத்திகள் குறித்து விவாதிக்கப் படும் கட்சியின் ஓர் உயர்மட்ட அமைப்பாகும். கட்சியின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் எழுப்பப்படும் விமர்சனரீதியான கருத்துக்களை இத்தகைய ஊடகங்கள் வெளிப்படுத்தலாம் என்றுதான் ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் இவை அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல், மாநாட் டில் அளிக்கப்படும் தகவல்களைத் திரித்தும், பொய்களை உண்மைகளைப்போல் மாற்றியும் வெளியிட்டன. உண்மைகளைக் கண்ட றிந்து, அவற்றைச் சரிபார்த்து, அவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து சரியான முடிவு களுக்கு வர வேண்டும் என்கிற ஊடகவிய லின் அடிப்படைக் கொள்கையைக்கூட, மாநாடு குறித்து செய்திகள் அனுப்பிவந்த செய்தியாளர்களில் சிலர் கண்டுகொள்ளா ததையும் காண முடிந்தது. இவை தொடர்பாக சில உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும். ஆனந்த பசார் குழு விலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘தி டெலிகிராப்’ பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதில் அனைத்துப் பத்திரி கைகளையும் விஞ்சி நின்றது. மாநாடு குறித்து ஏப்ரல் 9 அன்று ஒரே நாளில் இரு கதைகளை முதல் பக்கத்திலேயே அது கட்டவிழ்த்து விட்டது. முதலாவது கதை, மாநாட்டில் தத்து வார்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான வாக்களிப்பு குறித்தாகும். தத்து வார்த்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் தவிர்த்திட்டார்கள் என்று இரு பிரதிநிதி களின் பெயர்களை அது குறிப்பிட்டிருந்தது. அது குறிப்பிட்ட அவர்களின் பெயர்கள் தவ றானவை. எந்தவிதத்தில் பார்த்தாலும், அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மொத்தம் உள்ள 727 பிரதிநிதிகளில் ஒரு பிரதிநிதி தீர்மானத்திற்கு எதிராக வாக் களித்தார் என்றும், மூன்று பிரதிநிதிகள் தீர் மானத்தின் மீது வாக்களிப்பதிலிருந்து, தங் களைத் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் முன்னதாகவே கூறப்பட்டுவிட்டது. இவ் வாறு பிரதிநிதிகள் வாக்களிப்பு எதிர்பாராத ஒன்று அல்ல, அல்லது, இயல்புமீறிய ஒன்று மல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பிரதிநிதிகள் தங் கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப் பது என்பது இயல்பான ஒன்று. அதேபோன்று கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் முடிவுகள் எதன் மீதும் தாங்கள் விரும்பிய வண்ணம் வாக்களிப் பதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு. அரசியல் தீர்மானத்திலும் கூட, தீர்மானத் திற்கு எதிராக இரு பிரதிநிதிகள் வாக்களித் துள்ளார்கள், இரு பிரதிநிதிகள் வாக்களிக் காமல் தங்களைத் தவிர்த்துக்கொண்டுள் ளார்கள். ஆனால், ‘தி டெலிகிராப்’ மற்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகள் இவற் றைக் கட்சியில் இரு தலைவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் வெளிப்பாடு போலச் சித்தரிக்கும் இழிசெயல்களில் ஈடு பட்டன. அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப் படும் ஒரு தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட தலைவரின் கருத்துக்களையும் பிரதிபலிக் காது, மாறாக அது மத்தியக் குழுவின் கருத் தாகும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நடை முறையை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். அது, வரைவு அரசியல் தீர்மானமாக இருந்தாலும் சரி, அல்லது வரைவு தத்து வார்த்தத் தீர்மானமாக இருந்தாலும் சரி - அவை மத்தியக்குழுவில் விவாதிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் ஒரு பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் உருவான வைகளாகும். அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதிகள் மத்தியில் வேறுபாடுகளுக்கான எந்த அடிப் படையையும் காண முடியாததால், சில ஊட கங்கள் இத்தகைய வேறுபாடுகளை உற் பத்தி செய்ய முனைந்தன. ‘தி டெலிகிராப்’ வெளியிட்ட மற்றொரு முதல்பக்க செய்தியின் தலைப்பு, ‘‘பொரு ளாதார மேதை வெளியேறினார்’’ என்பதாகும். பிரபாத் பட்நாயக், ‘‘அகில இந்திய மாநாட்டில் ஆறு நாட்களும் கலந்துகொண்டு அதன் பின் னரே தில்லி செல்வதற்குத் திட்டமிட்டிரு ந்தும்’’ மாநாட்டின் நான்காவது நாளே ‘‘வெறுப்புற்று’’ வெளியேறினார் என்று அந் நாளேடு அதில் குறிப்பிட்டிருந்தது. ஒரு பிரதி நிதி அவரை விமர்சித்ததாகவும் மற்றும் தலை மையின் அணுகுமுறையால் அவர் மனம் நொந்துபோய் விட்டதாகவும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டிருந்தது. முன்பு குறிப்பிட்ட தலைப்புச் செய்தியை எழுதிய அதே செய்தி யாளர்தான் இக்கதையையும் முழுமையாகப் புனைந்திருந்தார். தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் நலிவுற்றிருந்ததால் அவரைப் பார்ப் பதற்காக மாநாடு முடிவதற்கு முன்பே செல் வதற்கு, மாநாடு தொடங்குவதற்கு முன்பே, பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருந்த தாக, பிரபாத் பட்நாயக் அப்பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் விளக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவதில் தானும் எவ்விதத்திலும் சளைத்த தல்ல என்று காட்டக்கூடிய விதத்தில் கேர ளாவிலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்தி ரிகைகளில் ஒன்றான மலையாள மனோர மாவும் நடந்து கொண்டது. மாநாடு முடிவுற்ற பின்னர் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு அறி விக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பட்டியலில் அரசியல் தலைமைக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் எப்படியெல் லாம் கீழிறக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறு பத்தி (column) தலைப்புச் செய்தி ஒன்றை அது வெளியிட்டிருந்தது. அவரது பெயர் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த தாக அது குறிப்பிட்டிருந்தது. அறிவிக்கப் பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் பட்டியல், அவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகச் சேரும் காலத்தை வைத் தும், அவர் கட்சியில் சேர்ந்த காலத்தை வைத் தும் கணக்கிடப்படுகிறது. சென்ற அகில இந்திய மாநாட்டில் எந்தவிதத்தில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவோ அதே வரிசை யில்தான் இந்த மாநாட்டிலும் குறிப்பிடப் பட்டது. ஆனால் மலையாள மனோரமா பத்தி ரிகை கட்சியில் கூர்மையான கருத்து வேறு பாடுகள் இருப்பதுபோல் காட்டுவதற்காக இவ்வாறு இழிநடவடிக்கையில் இறங்கி யிருக்கிறது.ஒரு பொதுவான தத்துவார்த்தப் புரிந்து ணர்விற்கு வருவதற்கும், கட்சியின் எதிர் காலத் திசைவழியை அளிப்பதற்கும் அடிப் படையாக விளங்கக்கூடிய, கட்சியின் அர சியல் - நடைமுறை உத்திகளை நிறை வேற்றுவதில் ஓர் உயர்ந்த அளவிலான ஒற்று மையையும், உறுதிப்பாட்டையும் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வெளிப் படுத்தியது.மாநாட்டின் இத்தகைய வெற்றிகரமான வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள சில கார்ப் பரேட் ஊடகங்களால் முடியவில்லை போலி ருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக எவருக்கும் எவ்விதமான கருத் துக்கள் இருந்தாலும், ஒருவர், மாநாட்டின் நிகழ்வுகளை அளிக்கும்போது, நடந்துள்ள வைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பாரபட்சமின்றி அளித்திட வேண்டும் என் பதை ஊடகவியலின் அடிப்படை அம்ச மாகக் கொள்ள வேண்டும். (தமிழில்: ச.வீரமணி)