தமிழக அரசு பள்ளியின் இன்றைய அவல நிலை" -அரங்கையே அதிர வைக்கும் சிறுமியின் அதிரடி பேச்சு..!அரசு பள்ளிகளின் அவலத்தை சுட்ட...
Posted by Joy Music HD on Wednesday, November 5, 2014
Sunday, March 29, 2015
அரசுப்பள்ளி சிறுமியின் சீர்மிகு பேச்சு
Monday, March 23, 2015
மதவெறி நஞ்சு பரப்பப்படுகிறது
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் பரப்பப் படும்
மதவெறி நஞ்சு காரணமாக நாட்டின் பலபகுதிகளிலும் மதச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்
தலங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய
மதவெறி சகிப்பின்மை கிளப்பி விடப்படுவதென்பது நாட்டில் சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோருக்கு
எதிராக மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப் படுவதற்கான ஒரு சூழலையும்
அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
இது, மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசாகிய
நம்நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியஅரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப் படை
உரிமைகளுக்கு முரணானதும், நேரடி யாகவே எதிரானதுமாகும். இந்தியாவின் முதல் துணைப் பிரதம
ராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி படுகொலை
செய்யப்பட்ட பின்னர் உடனடியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்துஅறிவித்த அதிகாரப்பூர்வமான
அறிவிப் பை நினைவுகூர்க. அதில் அவர், “சங் (ஆர்எஸ் எஸ்) பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய
மற்றும் ஊறு விளைவிக்கக்கூடிய நடவடிக்கை கள் முழுவீச்சுடன் தொடர்கின்றன.
சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம்
பல உயிர்களைப் பலிகொண்டுவிட்டது. இதற்குப் பலி யான மிகவும் சமீபத்திய, மிகவும் விலைமதிக்க
முடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’ மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் இதனைச் செய்தது
என்பது பல்வேறு சூழ் நிலைச் சாட்சியங்களாலும், பின்னர் நாதுராம் கோட்சேயின் சகோதரர்
ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் மூலமாகவும் மெய்ப்பிக்கப் பட்ட போதிலும்கூட இவற்றை
மறுதலிக்கும் விதத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ததில்
தங்களுக்கு “சம்பந்தம் இல்லை’’ என்று கடைசி வரை சொல்லி வந்தது.
1948 பிப்ரவரி 4 அன்று சர்தார் பட்டேல்
வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணப்படும் முக்கிய அம்சம் என்னவெனில்,
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் நடவடிக்கைகளும் “வன்முறைக் கலாச்சாரத்தைத்’’ தொடங்கி வைத்திருப்பதன்மூலம்
காந்திஜி உட்பட எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது என்பதாகும். நம் குடியரசின்
மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை உளமாற நேசிக்கும், நாட்டுப்பற்று கொண்ட அனைத்துத்
தரப்பினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக நின்று இவர்களின் இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளைத்
தடுத்துநிறுத்தாவிட்டால், நாட்டில் இன்றுள்ள நிலைமை மேலும் வேகமானமுறையில் சீர்கேடு
அடைவதற்கே இட்டுச் செல்லும். சமீபத்தில் இத்தகைய மிகவும் வெறுக்கத்தக்க இழிவான நிகழ்வு,
மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில்
ராணாகாட் என்னுமிடத்தில் உள்ள ஜீசஸ் செயின்ட் மேரிஸ் கான்வென்டில் 72 வயது கன்னியாஸ்திரி
வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவமாகும். வேறொரு இளம்பெண்ணும் இதேபோன்ற கொடுமைக்கு
ஆளாகி, தன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய
கொடுமைகளுக்கு எதிராக இந்தப் பகுதியில் மக்களின்கோபாவேசமும், எதிர்ப்பும் மேற்கு வங்கமுதல்வரை
இப்பள்ளிக்குள் விடாமல்தடுத்துள்ள போதிலும், இக்கொடுமைகளைப் புரிந்திட்ட கயவர்களுக்கு
எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இதுவரை எவரும் கைது செய்யப்படவும் இல்லை.
மதச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்த
நிகழ்வானது மக்களின் ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எந்த அளவிற்குப் பெரிய
அளவில் ஆபத்துக்கள் வந்துள்ளன என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்
முடிவுகள் எடுக்கும் உயர் மட்ட அமைப்பாக விளங்கும் அகில பாரதிய பிரதிநிதி சபை சமீபத்தில்
2015 மார்ச் 14-16 தேதிகளில் நாக்பூரில் கூடியது. அதில் மதவெறி நிகழ்ச்சிநிரலை பல முனைகளில்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய பிரச்சாரத்திற்காக,
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேலைகள் தற்சமயம் 54 ஆயிரம் கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதிலிருந்து
நாட்டில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த
வகையில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை விரிவாக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்களில்
அமித் ஷாவும், விசுவ இந்து பரிசத்தலைவர் பிரவீண் தொகாடியாவும் அடங்குவர். இந்தக் கூட்டத்தில்
ஆர்எஸ்எஸ் மீண்டும் ஒருமுறை, நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்று வெளிப்படையாகவே
எவ்வித கூச்சமுமின்றி அறிவித்திருக்கிறது. அதன் கூற்றின்படி, இந்தியாவில் உள்ள அனைவரும்
“கலாச்சார ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், மரபு ரீதியாகவும் இந்துக்களாவர்.’’ தேசிய
நாளேடுகள், ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்றைக்குத் தலையிட்டுள்ள பகுதி, “கர் வாப்சி’’ என்னும்
“வீட்டிற்குத் திரும்பும்’’ இயக்கமாகும் என்று வெளியிட்டுள்ளன. ஊடகங்களில் வந்துள்ள
தகவல்களின்படி, ஆர்எஸ்எஸ் தலைவர், நாட்டை ஆண்ட பிரிட்டிஷார் 14ஆம் நூற்றாண்டில்
(?)இருந்தே நாட்டு மக்களை மதம் மாற்றும் வேலைகளில் இறங்கினார்கள், இப்போது மக்கள் மீண்
டும் இந்து மதத்திற்கு திரும்ப விரும்புகிறார்கள், அதற்கு சுயம்சேவக்குகள் உதவ வேண்
டியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினாராம்.
(தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மார்ச் 17,
2015,பக். 1).மற்றொரு தேசிய நாளேடு (தி இந்து, மார்ச் 16, 2015), “அயோத்தியில் ராமர்
கோவில் கட்டும் பிரச்சனை தங்கள் நிகழ்ச்சிநிரலில் தொடர்கிறது,’’ என்று மீண்டும் ஆர்எஸ்எஸ்
பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அது
மேலும், “அந்தப் பிரச்சனையை நாங்கள் கைவிட்டுவிடவில்லை. அது எங்கள் நிகழ்ச்சி நிரலில்
இருப்பது தொடர்கிறது.’’ என்று கூறி யிருக்கிறார். மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர், “கடந்த
ஒன்பது மாத கால மோடியின் ஆட்சி ஒட்டுமொத்தத்தில் “திருப்திகரமாகவே’’ இருந்திருக்கிறது’’
என்றும் கூறியதாகவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மோடி அரசாங்கமானது, ஆர்எஸ்எஸ்-சிடமிருந்து
இத்தகைய பாராட்டுக்களை வாங்குவதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருப்பது போலவே தோன்றுகிறது.
இப்போது மோடி அரசாங்கம், அனைத்து மாநிலங்களும் பசுவதைத் தடைச்சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்த
இருப்பதாகவும், குறிப்பாக தங்கள்கட்சி ஆளும் மாநில அரசாங்கங்கள் அனைத் தும் இதனை உடனடியாக
நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (தி
இந்து, மார்ச்16, 2015). ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங் களைத் தொடர்ந்து, இப்போது தேர்தல்
நடை பெறவிருக்கும் பீகார் மாநிலத்தில் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இதனைச்
சேர்த்திட முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கம்
இத்தகைய தடையை முன்மொழிந்திருப்ப தோடு, மாட்டுக் கறியை சாப்பிடுவோருக்கு எதிராக தண்டைக்குள்ளாக்கும்
சட்டப்பிரிவு களையும் பரிந்துரைத்திருக்கிறது.
இதே தொனி யில், இந்த அரசாங்கம் மராத்தியர்களுக்கு
இடஒதுக்கீட்டை தொடர்கின்ற அதே சமயத்தில், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு இருந்து வந்த
இடஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் கூட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில்
கூட்டணி அரசாங்கத்தில் பாஜகசேர்ந்திருக்கும் மிதமிஞ்சிய சந்தர்ப்பவாத நிலையை நியாயப்படுத்தி
இருக்கிறது. ஆயினும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவதுபிரிவு தொடர்வதை எதிர்ப்பதை தொடர்வதுடன்,
அது நடைபெறுவதற்கான காலத்திற்காகக் காத்துக் கொண்டிருப்ப தாகவும் கூறுகிறது. இக்கூட்டம்
முடிந்தபின், ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர், “அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவுதொடர்பான
ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடு மாறவில்லை. நாங்கள் அதனுடன் எக்காலத் திலும் சமரசம் செய்து
கொள்ள மாட்டோம்.
நிலைமைகள் மேம்பட வேண்டும் என்று நாங்கள்
விரும்புகிறோம். இல்லையென்றால் அதன்பின்னர் நாங்கள் என்ன செய்வதென்று தீர்மானிப்போம்,’’
என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிக்கையில் உள்ள ஆபத்து மிகவும் தெளிவானது.சமீபத்தில்
மக்களவையில் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள மிகவும்மோசமான, நிலம் கையகப்படுத்தல்
சட்டமுன்வடிவிற்கு ஆர்எஸ்எஸ் முழு ஆதரவினை அளித்துள்ளது. அதன்கீழ் இயங்கும் துணை அமைப்புகளான
பிஎம்எஸ் (பாரதிய மஸ்தூர் சங்கம்), பிகேஎஸ் (பாரதிய கிசான் சங்கம்) ஆகிய அமைப்புகள்
`பெயரளவில்’ எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், ஆர்எஸ்எஸ்-இன் இணைப் பொதுச் செயலாளர்
இது தொடர்பாகக் கூறுகையில், “இந்தச் சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கு விரோதமானது என்று
நான்நினைக்கவில்லை. ஏனெனில், விவசாயி களுக்கு ஆதரவான திருத்தங்களை அரசாங் கம் கொண்டு
வந்திருக்கிறது,’’ என்று அறிவித்திருக்கிறார்.
தன்னுடைய முன்னணி அமைப்புகளுக்கு, பிரச்சனைகளை
“சுமுகமாக பேசித்தீர்த்துக்கொள்ளுமாறும், மோதலைத் தவிர்க்குமாறும் அது அறிவுறுத்தி
இருக்கிறது. நாட்டிலுள்ளவிவசாயிகளில் 70 சதவீதத்தினர் வேளாண்பணிகளைவிட்டு வெளியேற விரும்புவதாக
வும், எனவே மோடி அரசாங்கத்தின் திருத்தங் கள் `வரவேற்கத்தக்கவை’ என்றும் பாஜக செய்தித்
தொடர்பாளர், நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை,
ஊடகங்கள் வாயிலாக, நியாயப்படுத்தி இருப்பதை இங்கே நினைவு கூர்க. இவ்வாறு, ஆர்எஸ்எஸ்
இயக்கம், மோடி அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சிநிரலைத் தயார் செய்து தந்திருக்கிறது.
மோடி அரசாங்கம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் “ஓர் அரசி யல் அங்கமே தவிர வேறல்ல’’ என்பது
இதன் மூலம் தெள்ளத்தெளிவாகும். ஒருபக்கத்தில் இவ்வாறு, நம் நவீன இந்தியக் குடியரசின்
மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை, தங் களது வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற `இந்து
ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காக மதவெறித் தீயைவிசிறிவிட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத் தில்,
மறுபக்கத்தில் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டு வதற்காக,
நாட்டில் பெரும்பான்மை மக்களுக் கான நலத் திட்டங்களைக் காவு கொடுக்கும் விதத்திலும்,
நாட்டின் வளங்களை கூச்ச நாச்சமின்றி சூறையாடுவதற்கு அனுமதிக்கும் விதத்திலும் பொருளாதாரக்
கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு
வதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முன், நாட்டை நாசகரமானப் பாதையில்
செலுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப் பட்டு, முறியடிக்கப்பட்டாக
வேண்டும்.
(மார்ச் 18,
2015)
தமிழில்: ச.வீரமணி
Monday, February 2, 2015
ஒபாமாவின் இந்தியப் பயணம்: `அமெரிக்காவில் உற்பத்தி செய்தவற்றை’ இந்தியாவிற்குள் விற்பதில் வெற்றி
இந்தியாவின் 66ஆவது குடியரசு தின
அணிவகுப்பில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இப்போதைய மோடி அரசாங்கத்தின்
அடிமை புத்தியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகவும் தள்ளாடித் தடுமாறிக் கொண்டி ருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை
நிலைநிறுத்திட, இந்தியாவிலிருந்து
என்னவெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பினாரோ அவை அனைத்தையுமே பெற்றுவிட்டார். 2008ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட்
நிலைகுலைந்ததைத் தொடர்ந்து,
உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து
அமெரிக்கா இன்னமும் முழுமையாக மீளவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் இந்நெருக்கடியிலிருந்து
மீள்வதற்கு உதவும் விதத்தில்,
இந்தியாவின் சந்தை களையும்,
அதன் வளங்களையும் தங்கள் கொள்ளை லாப வேட்டைக்கு அமெரிக்கா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, மோடி அரசாங்கம் ஒப்புக்
கொண்டிருக்கிறது.
ஒபாமா மேலும், உலக மேலாதிக்கத் திற்காக, தங்களுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, இந்தியாவைத் தங்கள்
கட்டளை களுக்கு அடிபணிந்து நடந்திடும் ஒரு கூட்டாளியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
குறிப்பாக, சீனாவின் வளர்ச்சியைக்
கட்டுப்படுத்த, தெற் காசிய பிராந்தியத்திலும், பசிபிக் கடல் மார்க்கத்திலும்
தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கக்கூடிய விதத்தில் முயற்சி களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த அடிப்படையில்,
ஒபாமா, தன்னு டைய நீண்டநாள்
கூட்டாளியாக இருந்து மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணத்திற்கு துக்கம்
விசாரிப்பதற்காக தில்லியிலிருந்து,
சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு, அமெரிக்கா மட்டுமே இந்தியாவின் “மிகச்சிறந்த பங்காளியாக’’ இருக்க முடியும் என்று கூறிச் சென்றிருக்கிறார்.
ஆயினும், ஒபாமா இந்தியாவைவிட்டுப்
புறப்படுவதற்குமுன்,
பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்திற்கு மிகவும் வலுவான முறையில் ஒரு குட்டு குட்டிவிட்டுச்
சென்றிருக்கிறார். தில்லி யில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் அமெரிக்க நிர்வாகம் ஏற்பாடு
செய்திருந்த “அரங்கக் கூட்டத்தில்”, ஒபாமா பேசுகையில், “மத அடிப்படையில் பிளவுபடாது
இருக்கும்வரைதான் இந்தியா வெற்றிபெறும்,’’ என்று குறிப்பிட்டார்.
மோடி அரசாங்கத்தின் கீழ் மத சகிப்பின்மையும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளதை ஒபாமா மிகவும் தெளிவாகக்
குறிப்பிட்டதுடன், தன்னுடைய தாயகத்திற்குத்
திரும்புவதற்கு முன்,
சுவாமி விவேகானந்தர்,
மகாத்மா காந்தி,
மார்ட்டின்லூதர் கிங் ஜூனியர் ஆகியோரையும் குறிப்பிட்டு, இந்தியாவின் பலம், அமெரிக்காவைப் போலவே, பல்வேறு வேற்றுமைகளையும் கொண்டாடுவதில்
தான் இருக்கிறதேயொழிய,
பரஸ்பரம் சகிப் பின்மையை ஊட்டி வளர்ப்பதில் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்திய அரசமைப் புச்
சட்டத்தின் 25ஆவது பிரிவையும் நினைவுகூர்ந்து, இந்தியர்கள் அனைவருக்கும்
தங்கள் மதம் குறித்து உரிமை கொண்டாடவோ, நடைமுறைப்படுத் தவோ, பிரச்சாரம் செய்திடவோ உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தினார்.
அவர் மேலும், நம் இரு நாடுகளிலுமே
“மத சுதந்திரத்தை உயர்த்திப்
பிடிப்பதுதான் அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு, ஒவ்வொரு நபரின் பொறுப்புமாகும்“ என்றும் கூறினார்.
கூட்டத்தினரிடையே அவர் அமெரிக்காவில் அனைத்து இனத்தினருக்கும் இடையே சமத்துவம் மலர்ந்திட
நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்களை நினைவுபடுத்திய தோடு, அமெரிக்காவில் அனைத்து
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் வாக்குரிமை மற்றும் தேர்தலில் பங்குபெறும் உரிமையையும்
தான் பிறந்ததற்குப் பிறகு ஓராண்டு கழித்துப் பெற்றதை யும் நினைவு படுத்தினார். “அவ்வாறு உரிமையை நாங்கள்
பெற்றிருக்காவிட்டால்,
அமெரிக்க ஜனாதிபதியாக நான் இன்றைய தினம் இருக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.
ஆயினும், அவர் தங்கள் ராணுவத்
தலையீடுகளின் மூலமாக பல நாடுகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடாவடித்தனமாக
மீறியதையோ, உலகம் முழுதும் பல
நாடுகளில் அடிப்படை மனித உரிமைகளை மீறி எப்படி “அரச பயங்கரவாதத்தை” திட்டமிட்ட முறையில் ஊட்டி வளர்த்தோம் என்பது குறித்தோ எதுவும்
கூறாது மவுனமாக இருந்துவிட்டார். அமெரிக்காவின் அரச பயங்கரவாதம்தான் `தனிநபர் பயங்கர வாதத்தை’ மிகவும் அரக்கத்தனமான
முறையில் ஊட்டி வளர்த்து செயல்பட வைத்தது,
அமெரிக்க ஜனாதிபதி
இந்த மோடி அரசாங்கத்திடமிருந்து இந்தியச் சந்தைகளில் அமெரிக்க அணு உலைகளை விற்பதற்கும், அமெரிக்க ராணுவத் தளவாடங்களை
மிகப் பெரிய அளவில் வாங்குவதற்கும்,
புதிய பசுமைப் பருவநிலைத் தொழில் நுட்பங்களை
விற்பதற்கும் பல்வேறு ஒப்பந்தங்களை பலவந்தமாய்ப் பறித்தெடுத்துக் கொண்டுவிட்டார்.
மேலும் கூடுதலாக, பிரதமர் மோடி, அறிவுச் சொத்துரிமை
தொடர்பான இந்திய - அமெரிக்க குழுவினரின் அனைத்து
பரிந்துரை களையும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார். இதன் பொருள், நாட்டில் பல அத்தியாவசியப்
பொருள்கள், அதிலும் குறிப்பாக
பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் அவசியமான மருந்துகள், இனி அநியாய விலையுள்ளதாக
மாறிவிடும் என்பதும்,
அதன் மூலம் நாட்டு மக்களில் பெரும்பான்மை யோருக்கு அடிப்படை சுகாதார உரிமை மறுக்கப்படும்
என்பதுமேயாகும்.
அதுமட்டுமல்ல, ஒபாமா-மோடி இடையே இந்திய
அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம்
ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளன. ஒபாமாவும் பிரதமர் மோடியும்
கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, ராணுவம் சாரா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் நிலவிவந்த முட்டுக்கட்டை
நீங்கி விட்டதாகத் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய - அமெரிக்க
அணுசக்தி ஒப்பந் தத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட
நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவினை இடதுசாரிக் கட்சிகள்
விலக்கிக் கொண்டதும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் ஆழமான பாதிப்புகளை அடிப்படையாக
வைத்துத்தான், இவை இந்தியாவின் சுயேட்சையான
அயல்துறைக் கொள்கை நிலைப்பாடுகளை அமெரிக்காவின் அனைத்து கட்டளைகளுக்கும் அடிபணிந்து
வளைந்து கொடுத்துப் போகக்கூடிய இளைய பங்காளியாக மாற்றுவ தற்கு இட்டுச் செல்லக்கூடிய
அளவிற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கக்கூடியவைகளாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க
நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்குத் திறந்து விடக்கூடிய விதத்தில் இந்தியாவை நிர்ப்பந்திக்கக்கூடியதாகும், மேலும் இந்தியாவை அமெரிக்காவின்
ராணுவ மற்றும் கேந்திர வலைப்பின்னலுக்குள் ஈர்த்து, அதன் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் கூட்டாளி யாக மாற்றுவதற்கும்
இட்டுச் செல்லக்கூடியதாகும். தற்போது ஒபாமா விஜயத் தின்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள்
இவ்வாறு நாம் ஊகித்த அனைத்து ஆழமான எதிர்மறை விளைவுகளையும் உறுதி
செய்திருக் கின்றன. இவை, நாட்டின் பொருளாதார சுயச்சார்பை எய்திட
நாம் மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளுக்கும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுடனும் நாம் இதுநாள்வரை பின்பற்றி
வந்த பரஸ்பர அன்பு மற்றும் மரியாதைக்கும் எதிரானவைகளாகும். ஐமுகூ-1 மற்றும் 2 அரசாங்கங்கள் ஆட்சி
புரிந்த சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்திட்ட
பாஜக இப்போது மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்தபின் முன்னிலும் பன்மடங்கு வேகமாக நிறைவேற்றிட
நடவடிக்கை எடுத்திருப்பது துரதிர்ஷ்ட வசமானதாகும்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்
படுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவில் இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையே மூன்று முக்கியமான அம்சங்கள் குறித்து சச்சரவுகள் இருந்தன. முதலாவது பிரச்சனை, அணு உலைகளில் துரதிர்ஷ்டவசமாக
விபத்து ஏற்பட்டால்,
அதற்கான பொறுப்புகளில் அணு உலைகளை விநியோகம் செய்த அமெரிக்க நிறுவனத்தையும் இணைப்பதாகும்.
இந்தப் பிரச்சனையில்,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத் தில், இடதுசாரிக் கட்சிகளுடன் பாஜகவும் இணைந்து நின்றது. இப்போராட்டத்தின்
விளைவாக மன்மோகன் சிங் அரசாங்கம் மேற்படி சட்டமுன்வடிவில் 17(பி) என்னும் பிரிவினை
இணைத்தது. இதன் மூலம் அவ்வாறு துரதிர்ஷ்டவசமாக அணு உலை விபத்து ஏற்படின் அதனை விநியோகித் தவர்களுக்கும் பொறுப்பு
நிச்சயிக்கப்பட்டது. இதனை பெரிய அளவில் இயங்கும்
அமெரிக்க நிறுவ னங்கள் ஏற்க மறுத்தன. உற்பத்தி
செய்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும்கூட, ஏற்க முடியாது என்றும், இவற்றை இயக்குபவர்தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும்
வலியுறுத்தி வந்தன. இயக்குபவர் என்பதன் பொருள் இந்தியாவின் தரப்பில் மத்திய அரசுதான், அதன்கீழ் இயங்கும்
அணுஎரிசக்தித் துறைதான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பதேயாகும். இது குறித்து
மேற்படி சட்டத்தின் 6ஆவது பிரிவில் விவரமாகக்
குறிப்பிட்டிருப்பதுடன், உச்சபட்ச வரம்பு 1500 கோடி ரூபாய் என்றும் நிர்ணயம் செய்திருக்கிறது.
இரண்டாவது பிரச்சனை, இந்தியாவிற்கு அளித்திடும்
அணுசக்தி உபகர ணங்கள் அனைத்தையும் நம் நாட்டிற்குள் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்காக
துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதம் செய்வதற்காக கண்காணிக்கும்
வேலையையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி, வலியு றுத்தி வந்தது.
இப்போது, அமெரிக்க சர்வதேச அணுசக்தி
ஏஜென்சி ஆய்வுகள் போதுமானவை என்று ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
மூன்றாவது பிரச்சனை, 46ஆவது பிரிவு சம்பந்தப்பட்டதாகும்.
இச்சட்டப் பிரிவு, அணு விபத்து ஏற்படின், அதனால் பாதிக்கப்பட்டவர்கள்
சட்டரீதியாக வழக்கு தொடுப்பதற்கான உரிமையை அளிக்கிறது. அணு விபத்தில் பாதிக்கப்படு பவர்கள், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு
எதிராக சட்டநடவடிக்கைகள் எதையும் எடுக்கமாட்டார்கள் என்று இந்தியா வின் அட்டர்னி ஜெனரல்
ஓர் உறுதி மொழியை அளிப்பார் என்று இந்தியாவின் சார்பாக அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத்
தகவல்கள் வெளியாகி யுள்ளன. சட்டத்தின்கீழ் நிச்சயமாக இது நிலைக்கத்தக்கதல்ல. இந்த உறுதிமொழி
எப்படி காரிய சாத்தியமாகும் என்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.
தற்போது இரு அரசுகளுக்கும்
இடை யேயான நன்னிலை உணர்வு எப்படி இருந்தபோதிலும், ஒபாமா - மோடி கூட்டு அறிக்கையில், “பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள்; அனைவ ருக்கும் முன்னேற்றமே’’ என்று தெரிவித்திருப்பதுடன், ராணுவம் சாரா அணுசக்தி
ஒப்பந்தம் குறித்து,
அறிக்கையின் இறுதியில் ஒரு சிறிய பத்தி மட்டுமே (பத்தி 43) காணப்படுகிறது. அதில், “இருநாடுகளின் ராணுவம்
சாரா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, 2014 செப்டம்பரில் அமைக்கப்பட்ட
இரு நாடுகளின் தொடர்புக்குழு டிசம்பரிலும், ஜனவரியிலும் மூன்று முறை கூடின. ராணுவம்சாரா அணுசக்தி ஒத்துழைப்பு
தொடர்பாக, ராணுவம் சாரா அணுசக்தி
பொறுப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்த பிரச்சனைகள் மீது தொடர்புக் குழுவினரின்
புரிந்துணர்வுகளை தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள்.
இந்தியாவில் அணுஎரிசக்தி பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் உருவாக் கப்பட்ட அணு
உலைகளின் பங்களிப்பு மிகவிரைவில் மிகவும் மகிழ்வுடன் எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குமேல் எவ்வித விவரங்களும் இல்லை.
ராணுவம்சாரா அணுசக்தி
ஒத்துழைப்பு தொடர்பான சட்டமுன்வடிவு 2010இல் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் அமெரிக்காவின் பொறுப்பு குறித்து சேர்க்க வேண்டும் என்று
இடதுசாரிகள் முன்மொழிந்த திருத்தத்தை அப்போதைய பாஜக முழுமையாக ஆதரித்தது. மக்களவையில், அப்போது எதிர்க்கட்சித்
தலைவராக இருந்த, இன்றைய அயல்துறை விவகாரங்களுக்கான
அமைச்சர், இப்பிரச்சனை மீது மன்மோகன்சிங்
அரசாங்கத்தைக் கடுமையாகக் குறை கூறினார். “பிரதமர் தன் சொந்த கவுரவத்திற்காக நாட்டின் இறையாண்மைக்கு இரண்டகம்
செய்துவிட்டார்,’’ என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று, அப்போது மாநிலங்களவையில்
பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், இன்றைய நிதியமைச்சரும், (அவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது) “இந்தச் சட்டமுன்வடிவின்
46ஆவது பிரிவு விபத்தில்
பாதிக்கப்படும் நபர் பெரிய அளவில் இழப்பீடு கோரி நீதிமன்றங்களை அணுகுவதற்கு வகை செய்கிறது’’ என்று அழுத்தமாகக்
கூறினார். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் இதனை எவரும் மறுக்க
முடியாது என்றும் அவர் கூறினார். மோடி அரசாங்கம்
அமைக்கப்பட்ட பின்னர்,
2014 செப்டம்பர் 8 அன்று அயல்துறை விவகாரங்களுக்கான
அமைச்சர், “போபால் துயரம் போன்று
அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால்தான் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில்
அவற்றை விநியோகிப்பவர்களுக்குப் பொறுப்பு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத்
திருத்தி சட்டமுன்வடிவு எதனையும் நாங்கள் நிறைவேற்ற மாட்டோம். ... அதிபர் ஒபாமா முன்னிலையில் எங்கள் நிலையை நாங்கள்
மீளவும் வலியுறுத்துவோம் என்றே நான் நினைக்கிறேன். இந்தத் தடவை ஒரு வலுவான அரசாங்கம்
ஒபாமாவிடம் பேசிக்கொண்டு இருக்கும். அது அனைத்து வித்தியாசங்களையும் சரிசெய்திடும்,’’ என்றார். இவர் கூறிய இந்த “வலுவான அரசாங்கம்’’தான் இப்போது அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு முழுமையாக சரணாகதி
அடைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
மோடி அரசாங்கம், அமெரிக்கா உற்பத்தி
செய்த அணுஉலைகளின் காரணமாக விபத்த ஏற்பட்டால், அதன் பொறுப்புகளிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்வதற்குத்
தேவையான சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துவிட்டதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏதேனும் விபத்து ஏற்படின் அதற்கான பொறுப்புகளை இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 750 கோடி ரூபாய் அளவிற்கு
ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும்,
அரசாங்கத்தின் பொறுப்புகள் 1500 கோடி ரூபாய் வரைக்கும்
நீட்டிக்கக்கூடிய விதத்திலும் சட்டத்தின் 17(பி) பிரிவு மாற்றியமைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி
இருக்கின்றன. இதற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகைகளைக்கூட
இந்தியாவே அளித்திட இருக்கிறது. இதன் பொருள் என்ன? ஏற்கனவே இச்சட்டத்தின்படி இழப்பீட்டிற்கான உச்சவரம்புத் தொகை
1500 கோடி ரூபாய் என்றும்
அதனை அணுஉலைகளை இயக்குபவர் - அதாவது இந்திய
அரசு - ஏற்க வேண்டும் என்றும் இருந்தது, அமெரிக்கா அளித்திட்ட
உபகரணங்கள்தான் விபத்திற்குக் காரணம் எனில், பின் இந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கான உச்சவரம்பை மேலும் 1500 கோடி ரூபாய்க்கு உயர்த்துவதற்கு வகைசெய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு
இழப்பீடு வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களின் வரிப்பணத்தால்
இயங்கி வருகின்ற இந்தியாவில் உள்ள பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குமே
பொறுப்பு என்கிற முறையில் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. அமெரிக்க கார்ப்பரேட்டுகள் அனைத்துவிதமான பொறுப்பு
களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.
விபத்து, அமெரிக்கா அளித்த குறைபாடுகளுடன்
கூடியதான அணுஉலைகளால்தான் ஏற்பட்டது என்றாலும்கூட இனி அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தக்
கவலையும் கிடையாது.
இவ்வாறு, இந்திய - அமெரிக்க
அணு ஒப்பந்தம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் “தகர்க்கப்பட்டு முன்னேற்றம்
காணப்பட்டிருக்கிறது’’
என்பதன் பொருள் இந்தியா,
அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டது என்பதேயாகும். 1979இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு விபத்து (three-mile island accident)க்குப் பின்னர் அமெரிக்கா, அணு உலைகள் எதற்கும் ஆர்டர்கள் தராததன் காரணமாக தவித்துக் கொண்டிருந்த
ஜிஇ-ஹிடாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் (GE-Hitachi, Westinghouse) போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகள்
இப்போதைய “ஏற்பாட்டை’’ நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்வதன் மத்தியில், இந்திய அரசு மற்றும்
இந்திய மக்களின் வரிப் பணத்தின் மூலமாக, அமெரிக்கா தன் பொருளாதாரத்தை
மீட்டுக் கொள்வதற்கும் இது உதவும்.
இந்தியா, “தூய்மையான எரிசக்தி’’ நோக்கி முன்னேறிக்
கொண்டிருக்கிறது என்ற பெயரில் இத்தகைய மோசமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான சாக்குப்
போக்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கூட்டு ஊடகவியலாளர் கூட்டத்தின்போது ஒரு செய்தியாளர், “பருவநிலை மாற்றம்
(climate change) குறித்து அமெரிக்கா-சீனா ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், அதேபோன்றதொரு ஒப்பந்தத்தை
இந்தியாவும் மேற்கொள்ளவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா,’’ என்று கேட்டபோது, பிரதமர் மோடி, அமெரிக்காவிடமிருந்தோ
அல்லது சீனாவிடமிருந்தோ எவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லை என்றும், மாறாக தூய்மையான எரிசக்தியை
நோக்கி முன்னேற வேண்டும் என்று இந்தியாவின் எதிர்கால சந்ததியினரிடமிருந்துதான் நிர்ப்பந்தம்
வந்திருக்கிறது என்றும் பதிலளித்திருக்கிறார்.
அமெரிக்கா-சீனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா 2030ஆம் ஆண்டு வாக்கில்
தலைக்கு 12 டன்கள் கார்பன் உமிழப்படுவதை
(carbon emission) குறைத்துக்கொள்வதாக (தற்போது அது தலைக்கு 16.4 டன்கள் என்ற அளவில்
இருந்துவருகிறது) ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், சீனா தற்போதுள்ள தலைக்கு 7.1 என்றிருப்பதை 12க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதுபோன்று எந்தவொரு உறுதிமொழியையும் அமெரிக்காவிடமிருந்து பெறாமல், கார்பன் உமிழ்தலைக்
குறைப்பது தொடர்பாக அமெரிக்கா பிறப்பித்துள்ள கட்டளையை இந்தியா அடிபணிந்து ஏற்றுக்
கொண்டிருக்கிறது. உண்மையில் உலக அளவில் மொத்தம் உமிழப்படும் கார்பனில் நம் நாட்டில்
உமிழப்படுவது வெறும் 2.2 சதவீதம்தான். ஆனால்
அதேசமயத்தில் அமெரிக்காவில் இது 29.3 சதவீதமாகும். இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பதற்காக, இந்தியா அமெரிக்க நிறுவனங்
களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து `பசுமைத் தொழில்நுட்பங்களை’யும் (`green technologies’) வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்
பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வதன்மூலமும் அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி பெற இந்தியா
உதவி இருக்கிறது.
கார்பன் உமிழ்தல் தொடர்பாக
ஒருதலைப்பட்சமாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளபோதிலும், அணுசக்தியைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்கப் பன்னாட்டு
நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கும் அணு உலைகள்
இன்றையதினம் உலகில் எந்த நாட்டிலும் உபயோகப் படுத்தப்படவில்லை. எனவே, அவற்றின் நம்பகத்தன்மை
குறித்தும், அவற்றினால் இழப்பு
ஏற்படக்கூடிய நிலை குறித்தும் மதிப்பீடு செய்திட சாத்தியக்கூறுகளே இல்லை.
மேலும் அமெரிக்க அணுஉலைகளால் ஒரு மெகாவாட்
உற்பத்தி செய்வதற்கான செலவுத்தொகை சுமார் 20 முதல் 25 கோடி ரூபாய்கள் வரை
இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய கார்பன் உமிழ்தல் வரையறைத்
தொழில்நுட்பங்களுடன் கூடிய அனல் மின் திட்டங்கள் (thermal power projects with the latest
carbon emission limiting technologies)மூலம் இதற்கான செலவுத் தொகை வெறும் 5 முதல் 7 கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும். நம்முடைய வாய்ப்பு வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினோமானால்
அனல் மின்திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை மேலும் குறைந்தசெலவில் நம்மால் செய்திட
முடியும். “தூய்மையான எரிசக்தி’’க்காக கூடுதல் செலவு
செய்ய மோடி அரசாங்கம் விரும்பியபோதிலும், அந்நிய அணு உலைகளை நாம் வாங்க வேண்டியது தேவையா?
அணு சக்தி முறைப்படுத்தல்
வாரியத்தின் (Atomic
Energy Regulation Board) முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன், 700 மெகா வாட் அழுத்தம்
அளிக்கப்பட்ட கனநீர் உலைகள் (700 ஆறு pressurised heavy water reactors) நாம் உருவாக்கி இருக்கிறோம் என்றும், அவற்றை 900 முதல் 1000 மெகா வாட் அளவிற்கு
விரிவாக்கிட முடியும் என்றும் இவற்றின் செலவு இறக்குமதி செய்யப்படும் உலைகளை விட 30 - 50 சதவீதம் வரைக்கும்
குறையும் என்றும் வாதிடுகிறார். “இந்தியாவில் உற்பத்தி
செய்யப்பட்ட,’’ (“Made in India”) பொருள்களை வாங்கி ஊக்குவிப்பதற்குப்
பதிலாக, மோடி அரசாங்கம் அமெரிக்காவின்
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இதனை நம் செலவில், நம் வரிப்பணத்தின்
மூலம்நம் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை
மீட்பதற்காக, செய்து கொண்டிருக்கிறது.
மேலும், நம் நாட்டிலேயே அணுசக்தி
தொழில்நுட்பங்களை மிகப் பெரிய அளவிற்கு வளர்த்து முன்னெடுத்துச் செல்ல முடியும், மிக அதிக விலை கொடுத்து
தோரியம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, நம் நாட்டில் கிடைக்கக்கூடிய
இயற்கையான யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலமும், செலவிடப்பட்ட எரிபொருள்களிலிருந்து
புளுடோனியம் வடித்தெடுத்தல் மூலமும் மீளவும் பயன்படுத்தி, இதனைச் செய்திட முடியும். இ.என்.ஆர். (ENR) என்று அழைக்கப்படும்
இத்தகைய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் பயன்படுத்துவது சாத்தியமே. அணு ஒப்பந்தம் ஏற்பட்டதைத்
தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்திருந்ததிலிருந்து
ஒரு முறிவினை ஏற்படுத்திக் கொண்டு நாம் இதில் முன்னேற முடியும். (2008 செப்டம்பரில்) நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் தொழில்நுட்பங்கள்
இப்போது நமக்குக் கிடைப்பதற்கான உறுதிமொழியை அளித்தார். ஆயினும், அதனைத்தொடர்ந்து இரு
மாதத்திற்குள், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின்
காரணமாக, அணு விநியோகக் குழு
(Nuclear Suppliers Group) இ.என்.ஆர். தொழில்நுட்பங்கள்
இந்தியாவுக்குக் கிடைக்கமுடியாதபடி தங்களுடைய விதிகளை மாற்றியமைத்துக்கொண்டு விட்டது.
இதுதான் அமெரிக்காவின் இழி நடைமுறையாகும்.
அதிபர் ஒபாமா இந்தியாவிற்குக்
கடன்கள் மற்றும் முதலீடுகள் என்ற பெயரில் 4 பில்லியன் அமெரிக்க
டாலர்கள் கடனாகத்தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும்
அவரைப் பாராட்டி, பாராட்டுப்பத்திரங்கள்
வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே “இதுவரை கவனத்திற்கொள்ளாத
பல துறைகளிலும்’’ வர்த்தகத்தைப் பெருக்கிட
முடியும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த 4 பில்லியன் அமெரிக்க
டாலர்கள் எதற்காக அவர் கொடுக்கிறார் என்பதைச் சற்றே நுணுகி ஆராய்வோம். அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி
வங்கி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள
அமெரிக்க உற்பத்திப்பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிதி உதவி அளித்திடும்.
அமெரிக்க ஓவர்சீஸ்
பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியக் கிராமப்புறங்களில் உள்ள சிறிய
மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 1 பில்லியன் டாலர்கள்
கடன் வழங்கும். அமெரிக்க வர்த்தக மற்றும் வளர்ச்சி
ஏஜன்சி (US
Trade and Development Agency) மரபுசாரா எரிசக்தித்துறையில்
இந்தியா புதிய அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 2 பில்லியன் டாலர்கள்
அளித்திடும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், இந்த 4 பில்லியன் அமெரிக்க
டாலர்களும் இந்தியாவிற்குள் அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஓர் ஏற்பாடுதான்.
இவ்வாறு, அணுசக்தி, பருவநிலை தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவம் சம்பந்தமான உற்பத்தி
(இதற்காக அடுத்து பத்தாண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கிறது)
ஆகியவற்றில் இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் நுழைவதற்கு பிரதமர் மோடி மிக
விரிவான அளவில் வசதி செய்து கொடுத்திருக்கிறார். இதன் மூலமாக நலிவடைந்துள்ள அமெரிக்கப்
பொருளாதாரம் அதிலிருந்து மீள்வதற்குப் பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.
மேலும் கூடுதலாக, தெற்காசியா மற்றும்
பசிபிக் பெருங்கடல் பிராந்தியங்களில் அமெரிக்கா
மேற்கொள்ளும் அனைத்து ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின் கட்டளைகள் அனைத்தையும் தலையாட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய இளைய பங்காளியாகவும் இந்தியாவை மாற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடியின் “இந்தியாவில் உற்பத்தி
(செய்தது) செய்க’’ என்னும் கோஷம் இவ்வாறு
நாட்டு மக்களைத் திசைதிருப்பும் வேலையேயாகும். எதார்த்தத்தில், இது “அமெரிக்காவில் உற்பத்தி
செய்த’’ பொருள்களை விற்பதற்கான
ஒன்றேயாகும். இத்தகைய பிரச்சாரங்கள் இந்த மோடி அரசாங்கத்தின் அபிலாசைகளை மூடிமறைத்து, இந்தியாவை அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அடிமைக்கூட்டாளியாக மாற்றுவதற்கான முகமூடியே யாகும்.
(ஜனவரி 28, 2015)
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Posts (Atom)