அனைவருக்கும்
தித்திக்கும்
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்நன்னாளில்
மங்கிய இருளகற்றி
மங்கள ஜோதியாக
வாழ்வு சுடர்விட
வீடு வளம்பெற
வாழ்த்துக்கள்.
அன்பின் அஸ்திவாரத்தில் -அனைவரும்
ஆனந்தமாக
இனிப்புகள் உண்டு
இல்லாதோர்க்கும்
ஈந்து
உள்ளம் உவகையும்
ஊக்கமும் பெற்று
என்றென்றும் புன்னகையும்
ஏற்றமிகு வாழ்வும் பெற
ஐப்பசி நன்னாளாம் இன்று
ஒளி விளக்கேற்றி கொண்டாடுவோம்.
ஓயாமல் நிகழ்ச்சி வழங்கும்
தொலைக்காட்சியதனை இன்று
தொலைவில் வைத்து,
சுற்றமும் நட்பும் சூழ
உண்டு மகிழ்ந்து
மத்தாப்புச் சிரிப்பொலியும்
பட்டாசுப் பேச்சுகளும்
நிறையட்டும் இல்லத்தில்
என்றே வாழ்த்தும்
உங்கள் ச. வீரமணி
Friday, October 16, 2009
Tuesday, October 13, 2009
மக்கள் சீனத்தின் மணி விழா -பிரகாஷ் காரத்
அறுபதாண்டுகளுக்கு முன், 1949 அக்டோபர் 1 அன்று சீன மக்கள் குடியரசு பிரகட னம் செய்யப்பட்டது. தோழர் மாசே துங் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அறி விப்பைத் தெரிவிக்கையில், ‘‘சீனமக்கள் எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றார். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது கடந்த அறுபதாண்டு காலத் தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் எண் ணிலடங்காதவையாகும்.
சீனப் புரட்சி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்த நிகழ்வாகும். அந்த சம யத்தில் சீனம், 47.5 கோடி மக்கள் தொகை யுடன் உலகிலேயே மாபெரும் நாடாக விளங்கியது. ஆசியக் கண்டத்தின் ஜாம்ப வனான சீனம், 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகின் மிகப்பெரிய பொரு ளாதார நாடாக விளங்கிய சீனம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற் கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானின் கொத் தடிமை நாடாக மாறியது. முதல் உலகப் போர் முடிந்த பின்னர், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அங்கிருந்த நிலப்பிரபுத்துவ யுத்த பிரபுக் களுடன் கைகோர்த்துக்கொண்டு, சீனா வைப் பங்குபோட்டு ஆட்சி செய்தன. சீன மக்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் அரைக் காலனியாதிக்கத்தின் சங்கிலி களால் பிணைக்கப்பட்டு அவற்றை உடைத்தெறிய வழிதெரியாது விழிபிதுங்கி, புலம்பிக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் 1921ஆம் ஆண்டு உருவான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுத்துவத்தையும், காலனி யாதிக்கத்தையும் வெறுத்து எதிர்த்து வந்த சக்திகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ யுத்த பிர புக்கள் மற்றும் காலனியாதிக்கத் திற்கு எதிராக, சீன மக்கள் தங்கள் விடுதலைக் காக முப்பதாண்டு காலம் மிகக்கடின மான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜப் பான் ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் ஊழலில் திளைத்த வலது சாரி கோமிங்டாங்கைப் புறந்தள்ளி விட்டு, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி தேசிய எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவனாக உயர்ந்தது. ஜப்பான் சரணடைந்தபின், இறுதிப் போர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கோமிங்டாங் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றது. இந்த உள்நாட்டுப் போரில், மக்கள் விடுதலை ராணுவம் மகத்தான வெற்றிபெற்றதையடுத்து சீனப்புரட்சி அங்கே வெற்றி வாகை சூடியது.
ரஷ்யப் புரட்சி உலகத்தின் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியி ருந்தது. அதன்பின் முப்பதாண்டு காலம் கழித்து, சீனப்புரட்சி வெற்றி பெற்றது.
இன்றைய சீனம், மக்களின் ‘வாங்கும் சக்தி சமநிலை’ (யீரசஉாயளiபே யீடிறநச யீயசவைல) அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளா தார நாடாக விளங்குகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பரிவர்த்தனை விகிதத்தில் அளந்தோமானால் பொருளா தார ரீதியாக உலகின் மூன்றாவது பொரு ளாதார நாடாக சீனம் விளங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்கா வையும் முந்திக்கொண்டு சீனம் விஞ்சி முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில் புரட்சி ஏற்பட்ட சம யத்தில் அது இந்தியாவைவிட தொழில் துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளி லும் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் ஏற் பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும்.
இத்தகைய மகத்தான வளர்ச்சிக் கான அடித்தளங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டவையாகும். சீனப்புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, அங்கு புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங் கள் மூலமாக நிலப்பிரபுத்துவம் முற்றிலு மாக ஒழித்துக்கட்டப்பட்டது. கனரகத் தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. மக்களுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதா ரம், சமூக நலத்திட்டங்களை அளிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. விவசாயிகளை நிலப்பிரபுத்துவத் தின் நுகத்தடியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, சுயசார்பு முறைகளில் பொரு ளாதாரத்தைக் கட்டி வளர்த்திட்ட ஜன நாயகப் புரட்சியின் சீனப் பாதையானது, காலனியாதிக்கத்திடமிருந்து சமகாலத் தில் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்தது.
சீனாவின் இன்றைய முன்னேற்றத் திற்கு முதலாளித்துவம்தான் உந்து சக்தி யாக இருந் தது என்று பேசக்கூடிய பேர் வழிகள், மக்கள் சீனத்தில் எத்தகைய அடித்தளங்களின்கீழ் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி மேற் கொள்ளப்பட் டது என்பதைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். மக்கள் சீனம், நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக நிலப்பிர புத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட் டியது. பின்னர் அரசுத்துறைகள் மூலமாக தொழில்மயத்தை ஏற்படுத்தியது. கல்வி மற்றும் சமூக நலத்துறைகளில் சீர்திருத் தங்களைக் கொண்டு வந்தது. அரசுத் துறைகள் மற்றும் தனி யார் துறையுடன் இணைந்து கூட்டுத் துறைகளின் மூல மாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் சீனத்தில் வியத்தகு வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
புதிய சீனத்தின் கடந்த அறுபதாண்டு கால வரலாறு என்பது முன்னேற்றத்தை நோக்கி நடைபெற்ற மலர்ப்பாதை அல்ல; ‘கலாச்சாரப் புரட்சி’ என்றும், அதற்கும் முன்னதான ‘பாய்ச்சல் வேக முன்னேற் றம்’ என்றும் தவ றான நடைமுறைகளும் கருத்தோட்டங் களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தான் செய்த தவறு களையும், தவறான கண்ணோட்டங் களையும் சரியான முறையில் அங்கீக ரித்து, அவற்றைச் சரிசெய்திட நடவடிக் கைகள் மேற்கொண்டது. கடந்த இருப தாண்டுகளில் அங்கு ஏற்பட்ட அபரி மித மான முன்னேற்றம் நாட்டில் புதிய பிரச் சனைகளையும் கொண்டுவந்திருக் கிறது. வருமான ரீதியாகவும், பிராந்திய ரீதி யாகவும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் இடையில் அதிகரித்து வந்துள்ள சமத்துவமின்மையால் ஏற்பட் டுள்ள பிரச்சனைகளை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் 17வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை யும் அது பரிந்துரைத்துள்ளது.
ஒரு பிற்பட்ட நாட்டில் சோசலிசத் தைக் கட்டும் பணி என்பது ஒரு நீண்ட நெடிய பாதை என்பதை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும், 1980களின் பிந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், சோசலிச அமைப்பு முறைக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்ட சூழ்நிலையில், சர்வதேச நிலைமைகளிலேயே மிக வேக மாக மாற்றங்கள் ஏற்பட்ட பின்னணியில் சீனாவின் வளர்ச்சித்திட்டங்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. சோசலிசத் தின் உயர்ந்த கட்டத்தை எய்துவதற்கு முன்னதாக அரசியல் ரீதியாகவும், தத்து வார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
சென்ற ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றிருந்த வளர்ச்சியை, உலகமே கண்டு வியந்தது. சீனம், தன்னுடைய பொருளாதாரத்திற் காக அரசின் கருவூலத்திற்கு 585 பில்லி யன் டாலர்கள் ஊக்குவிப்புத் தொகை யாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத் துச் செல்ல இது பெரிதும் உதவியது. 2009இல் உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர் மறையில் -3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சீனாவின் வளர்ச்சியோ 7.7 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு ஆசிய ஜாம்பவான்களாகத் திக ழும் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வல்லமையில் உயர்ந்து வருவது இதுநாள் வரை உலகப் பொருளாதாரத்தை இயக்கி வந்தவர்களால் விரும்பப்படாமல் போவ தில் வியப்பதற்கேதுமில்லை. எனவே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிண்டுமுடிந்து விட அவை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் ஊடகங்கள் வாயிலாக ஏகாதிபத்திய ஆதரவு வல்லுநர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து என்கிற பூச்சாண்டியைக் கிளப்பி விட்டி ருக்கிறார்கள். சீனா இந்தியாவுக்கு எதி ராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பட்டியலிடுகிறார் கள். எல்லைப் பகுதியில் சீனத் துருப்புக் கள் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்கள் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற் கொண்டன. எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடை பெற்றதாகவும், இதில் இருவர் காயமடைந் ததாகவும் கூட அறிக்கை வெளியிடப்பட் டது. இவை அனைத்திற்கும் எந்த அடிப் படையும் இல்லை அல்லது கடுகு போன்ற விஷயங்கள் மலைபோல் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. இந்திய அரசும், இந்திய ராணுவத்தின் தலை வரும் இந்த அறிக்கைகளை தவறென மறுத்திருக்கிறார்கள், துப்பாக்கிச் சண் டை எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளுமே எல்லைப் பகுதியில் எவ்விதப் பதட்ட நிலைமையும் கிடையாது என்று கூறி யிருக்கின்றன.
நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகள் சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கியிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர், விஜயதசமி நாளன்று ஆற்றிய உரையின்போது, ‘சீனாவிடமிருந்து அச் சுறுத்தல்’ என்று பேசியிருக்கிறார். இவ் வாறு இந்த சக்திகள் டமாரமடிப்பதற்குக் காரணம், சீனாவிற்கு எதிராக இந்தியா ராணுவரீதியாக மிகவும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்பதும், அதற் காக அமெரிக்காவிடம் மேலும் ஆழமான முறையில் ராணுவ உறவுகளை ஏற்படுத் திக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும்.
அமெரிக்காவிடமிருந்து ஆயுதங் களை வாங்கிட வேண்டும் என்று பிரச் சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அதற் கான முயற்சிகளையும் அமெரிக்க ராணு வத்திலிருந்து ஓய்வுபெற்ற ராணுவ அதி காரிகள் புதுடில்லியில் தங்கி செய்து வரு கிறார்கள்.‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு சமீ பத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “அநேகமாக ஒவ்வொரு வார இறுதி நாட் களிலும், புதுடில்லியில் உள்ள ஐந்து நட் சத்திர ஓட்டல்களில் காக்டெயில் பார்ட் டிகளும், திரை மறைவு கலந்துரையாடல் களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அட் மிரல்களும், ஜெனரல்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நபர்கள் அமெரிக்காவின் ராய்தியான் (சுயலவாநடிn), நார்த்ராப் கிரம்மான் (சூடிசவாசடியீ ழுசரஅஅயn) போன்ற இராணுவ யுத்தத் தளவாடங் களை உற்பத்தி செய்திடும் நிறு வனங்க ளுக்காக இவ்வேலைகளில் ஈடுபட்டுள் ளனர்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதி காரிகள் இந்தியாவிற்குத் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இந்தியாவுக்கு சீனாவால் இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, இவர்கள் சொல்லத் தவறுவதில்லை.
இந்தப் பின்னணியில்தான் சமீபத் தில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே மோதலை உருவாக்குவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்த் திட வேண்டும். நம் நாட்டிற்குள்ளும் இந் திய-சீன ஒத்துழைப்பைக் குலைத்திட விரும்பும் சக்திகள் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.
ராஜீவ் காந்தி 1988இல் சீனத்திற்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகள் உறுதி யாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் சீனாவுடனான உறவு களை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கின்றன. வெகு ஆண்டு களாக இரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் எல்லை தாவாவை பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையி லான ஒத்துழைப்பு என்பது இரு நாட்டின் நலன்களுக்கும் தேவை. அந்த அடிப் படையில் அது இயற்கையாகவே அமைந் திருக்கிறது. இதனை இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவுகள் மிகவும் வேகமாக வளர்ந்திருப்பதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். 2008இல் வர்த் தகத்தின் அளவு (எடிடரஅந டிக வசயனந) 52 பில்லியன் டாலர்களை எய்தியிருக்கிறது. உண்மையில் 2010ஆம் ஆண்டிற்குள் 40 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் புரிந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கு 2008ஆம் ஆண்டிலேயே பூர்த்தி செய்யப் பட்டு, அதனையும் விஞ்சி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு வித மான உராய்வுகள் இருந்தபோதிலும், இந்த வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சீன மக்கள் குடியரசு புதிய முன்னேற் றப்பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், 21ஆம் நூற்றாண்டில் உலக விவகாரங்களில் கேந்திரமான பங் களிப்பினைச் செலுத்தக்கூடிய சூழலில், சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டுக்கொண் டிருக்கிறது. சீன மக்கள் கடந்த அறுப தாண்டு காலத்தில் தாங்கள் நடந்து வந்த பாதை குறித்து பெருமிதம் கொள்ளலாம், அதேபோன்று எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம்.
தமிழில்: ச.வீரமணி
சீனப் புரட்சி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்த நிகழ்வாகும். அந்த சம யத்தில் சீனம், 47.5 கோடி மக்கள் தொகை யுடன் உலகிலேயே மாபெரும் நாடாக விளங்கியது. ஆசியக் கண்டத்தின் ஜாம்ப வனான சீனம், 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகின் மிகப்பெரிய பொரு ளாதார நாடாக விளங்கிய சீனம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற் கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானின் கொத் தடிமை நாடாக மாறியது. முதல் உலகப் போர் முடிந்த பின்னர், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அங்கிருந்த நிலப்பிரபுத்துவ யுத்த பிரபுக் களுடன் கைகோர்த்துக்கொண்டு, சீனா வைப் பங்குபோட்டு ஆட்சி செய்தன. சீன மக்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் அரைக் காலனியாதிக்கத்தின் சங்கிலி களால் பிணைக்கப்பட்டு அவற்றை உடைத்தெறிய வழிதெரியாது விழிபிதுங்கி, புலம்பிக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் 1921ஆம் ஆண்டு உருவான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுத்துவத்தையும், காலனி யாதிக்கத்தையும் வெறுத்து எதிர்த்து வந்த சக்திகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ யுத்த பிர புக்கள் மற்றும் காலனியாதிக்கத் திற்கு எதிராக, சீன மக்கள் தங்கள் விடுதலைக் காக முப்பதாண்டு காலம் மிகக்கடின மான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜப் பான் ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் ஊழலில் திளைத்த வலது சாரி கோமிங்டாங்கைப் புறந்தள்ளி விட்டு, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி தேசிய எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவனாக உயர்ந்தது. ஜப்பான் சரணடைந்தபின், இறுதிப் போர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கோமிங்டாங் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றது. இந்த உள்நாட்டுப் போரில், மக்கள் விடுதலை ராணுவம் மகத்தான வெற்றிபெற்றதையடுத்து சீனப்புரட்சி அங்கே வெற்றி வாகை சூடியது.
ரஷ்யப் புரட்சி உலகத்தின் மத்தியில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியி ருந்தது. அதன்பின் முப்பதாண்டு காலம் கழித்து, சீனப்புரட்சி வெற்றி பெற்றது.
இன்றைய சீனம், மக்களின் ‘வாங்கும் சக்தி சமநிலை’ (யீரசஉாயளiபே யீடிறநச யீயசவைல) அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளா தார நாடாக விளங்குகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பரிவர்த்தனை விகிதத்தில் அளந்தோமானால் பொருளா தார ரீதியாக உலகின் மூன்றாவது பொரு ளாதார நாடாக சீனம் விளங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்கா வையும் முந்திக்கொண்டு சீனம் விஞ்சி முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில் புரட்சி ஏற்பட்ட சம யத்தில் அது இந்தியாவைவிட தொழில் துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளி லும் மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் ஏற் பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும்.
இத்தகைய மகத்தான வளர்ச்சிக் கான அடித்தளங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டவையாகும். சீனப்புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, அங்கு புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங் கள் மூலமாக நிலப்பிரபுத்துவம் முற்றிலு மாக ஒழித்துக்கட்டப்பட்டது. கனரகத் தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. மக்களுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதா ரம், சமூக நலத்திட்டங்களை அளிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. விவசாயிகளை நிலப்பிரபுத்துவத் தின் நுகத்தடியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, சுயசார்பு முறைகளில் பொரு ளாதாரத்தைக் கட்டி வளர்த்திட்ட ஜன நாயகப் புரட்சியின் சீனப் பாதையானது, காலனியாதிக்கத்திடமிருந்து சமகாலத் தில் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்தது.
சீனாவின் இன்றைய முன்னேற்றத் திற்கு முதலாளித்துவம்தான் உந்து சக்தி யாக இருந் தது என்று பேசக்கூடிய பேர் வழிகள், மக்கள் சீனத்தில் எத்தகைய அடித்தளங்களின்கீழ் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி மேற் கொள்ளப்பட் டது என்பதைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். மக்கள் சீனம், நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக நிலப்பிர புத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட் டியது. பின்னர் அரசுத்துறைகள் மூலமாக தொழில்மயத்தை ஏற்படுத்தியது. கல்வி மற்றும் சமூக நலத்துறைகளில் சீர்திருத் தங்களைக் கொண்டு வந்தது. அரசுத் துறைகள் மற்றும் தனி யார் துறையுடன் இணைந்து கூட்டுத் துறைகளின் மூல மாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் சீனத்தில் வியத்தகு வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.
புதிய சீனத்தின் கடந்த அறுபதாண்டு கால வரலாறு என்பது முன்னேற்றத்தை நோக்கி நடைபெற்ற மலர்ப்பாதை அல்ல; ‘கலாச்சாரப் புரட்சி’ என்றும், அதற்கும் முன்னதான ‘பாய்ச்சல் வேக முன்னேற் றம்’ என்றும் தவ றான நடைமுறைகளும் கருத்தோட்டங் களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தான் செய்த தவறு களையும், தவறான கண்ணோட்டங் களையும் சரியான முறையில் அங்கீக ரித்து, அவற்றைச் சரிசெய்திட நடவடிக் கைகள் மேற்கொண்டது. கடந்த இருப தாண்டுகளில் அங்கு ஏற்பட்ட அபரி மித மான முன்னேற்றம் நாட்டில் புதிய பிரச் சனைகளையும் கொண்டுவந்திருக் கிறது. வருமான ரீதியாகவும், பிராந்திய ரீதி யாகவும், நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் இடையில் அதிகரித்து வந்துள்ள சமத்துவமின்மையால் ஏற்பட் டுள்ள பிரச்சனைகளை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் 17வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை யும் அது பரிந்துரைத்துள்ளது.
ஒரு பிற்பட்ட நாட்டில் சோசலிசத் தைக் கட்டும் பணி என்பது ஒரு நீண்ட நெடிய பாதை என்பதை சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும், 1980களின் பிந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், சோசலிச அமைப்பு முறைக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்ட சூழ்நிலையில், சர்வதேச நிலைமைகளிலேயே மிக வேக மாக மாற்றங்கள் ஏற்பட்ட பின்னணியில் சீனாவின் வளர்ச்சித்திட்டங்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. சோசலிசத் தின் உயர்ந்த கட்டத்தை எய்துவதற்கு முன்னதாக அரசியல் ரீதியாகவும், தத்து வார்த்த ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
சென்ற ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றிருந்த வளர்ச்சியை, உலகமே கண்டு வியந்தது. சீனம், தன்னுடைய பொருளாதாரத்திற் காக அரசின் கருவூலத்திற்கு 585 பில்லி யன் டாலர்கள் ஊக்குவிப்புத் தொகை யாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத் துச் செல்ல இது பெரிதும் உதவியது. 2009இல் உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர் மறையில் -3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சீனாவின் வளர்ச்சியோ 7.7 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு ஆசிய ஜாம்பவான்களாகத் திக ழும் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வல்லமையில் உயர்ந்து வருவது இதுநாள் வரை உலகப் பொருளாதாரத்தை இயக்கி வந்தவர்களால் விரும்பப்படாமல் போவ தில் வியப்பதற்கேதுமில்லை. எனவே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிண்டுமுடிந்து விட அவை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் ஊடகங்கள் வாயிலாக ஏகாதிபத்திய ஆதரவு வல்லுநர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து என்கிற பூச்சாண்டியைக் கிளப்பி விட்டி ருக்கிறார்கள். சீனா இந்தியாவுக்கு எதி ராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பட்டியலிடுகிறார் கள். எல்லைப் பகுதியில் சீனத் துருப்புக் கள் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்கள் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற் கொண்டன. எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடை பெற்றதாகவும், இதில் இருவர் காயமடைந் ததாகவும் கூட அறிக்கை வெளியிடப்பட் டது. இவை அனைத்திற்கும் எந்த அடிப் படையும் இல்லை அல்லது கடுகு போன்ற விஷயங்கள் மலைபோல் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. இந்திய அரசும், இந்திய ராணுவத்தின் தலை வரும் இந்த அறிக்கைகளை தவறென மறுத்திருக்கிறார்கள், துப்பாக்கிச் சண் டை எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளுமே எல்லைப் பகுதியில் எவ்விதப் பதட்ட நிலைமையும் கிடையாது என்று கூறி யிருக்கின்றன.
நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகள் சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கியிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர், விஜயதசமி நாளன்று ஆற்றிய உரையின்போது, ‘சீனாவிடமிருந்து அச் சுறுத்தல்’ என்று பேசியிருக்கிறார். இவ் வாறு இந்த சக்திகள் டமாரமடிப்பதற்குக் காரணம், சீனாவிற்கு எதிராக இந்தியா ராணுவரீதியாக மிகவும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்பதும், அதற் காக அமெரிக்காவிடம் மேலும் ஆழமான முறையில் ராணுவ உறவுகளை ஏற்படுத் திக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும்.
அமெரிக்காவிடமிருந்து ஆயுதங் களை வாங்கிட வேண்டும் என்று பிரச் சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அதற் கான முயற்சிகளையும் அமெரிக்க ராணு வத்திலிருந்து ஓய்வுபெற்ற ராணுவ அதி காரிகள் புதுடில்லியில் தங்கி செய்து வரு கிறார்கள்.‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு சமீ பத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “அநேகமாக ஒவ்வொரு வார இறுதி நாட் களிலும், புதுடில்லியில் உள்ள ஐந்து நட் சத்திர ஓட்டல்களில் காக்டெயில் பார்ட் டிகளும், திரை மறைவு கலந்துரையாடல் களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அட் மிரல்களும், ஜெனரல்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நபர்கள் அமெரிக்காவின் ராய்தியான் (சுயலவாநடிn), நார்த்ராப் கிரம்மான் (சூடிசவாசடியீ ழுசரஅஅயn) போன்ற இராணுவ யுத்தத் தளவாடங் களை உற்பத்தி செய்திடும் நிறு வனங்க ளுக்காக இவ்வேலைகளில் ஈடுபட்டுள் ளனர்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதி காரிகள் இந்தியாவிற்குத் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இந்தியாவுக்கு சீனாவால் இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, இவர்கள் சொல்லத் தவறுவதில்லை.
இந்தப் பின்னணியில்தான் சமீபத் தில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே மோதலை உருவாக்குவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்த் திட வேண்டும். நம் நாட்டிற்குள்ளும் இந் திய-சீன ஒத்துழைப்பைக் குலைத்திட விரும்பும் சக்திகள் அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.
ராஜீவ் காந்தி 1988இல் சீனத்திற்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகள் உறுதி யாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் சீனாவுடனான உறவு களை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கின்றன. வெகு ஆண்டு களாக இரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் எல்லை தாவாவை பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையி லான ஒத்துழைப்பு என்பது இரு நாட்டின் நலன்களுக்கும் தேவை. அந்த அடிப் படையில் அது இயற்கையாகவே அமைந் திருக்கிறது. இதனை இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவுகள் மிகவும் வேகமாக வளர்ந்திருப்பதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். 2008இல் வர்த் தகத்தின் அளவு (எடிடரஅந டிக வசயனந) 52 பில்லியன் டாலர்களை எய்தியிருக்கிறது. உண்மையில் 2010ஆம் ஆண்டிற்குள் 40 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் புரிந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கு 2008ஆம் ஆண்டிலேயே பூர்த்தி செய்யப் பட்டு, அதனையும் விஞ்சி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு வித மான உராய்வுகள் இருந்தபோதிலும், இந்த வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சீன மக்கள் குடியரசு புதிய முன்னேற் றப்பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், 21ஆம் நூற்றாண்டில் உலக விவகாரங்களில் கேந்திரமான பங் களிப்பினைச் செலுத்தக்கூடிய சூழலில், சீனப்புரட்சியின் அறுபதாம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டுக்கொண் டிருக்கிறது. சீன மக்கள் கடந்த அறுப தாண்டு காலத்தில் தாங்கள் நடந்து வந்த பாதை குறித்து பெருமிதம் கொள்ளலாம், அதேபோன்று எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம்.
தமிழில்: ச.வீரமணி
Thursday, October 1, 2009
மக்கள் சீனத்தின் மகத்தான மணிவிழா - -சீத்தாராம் யெச்சூரி
இந்த அக்டோபர் 1, மகத்தான சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு நிறைவு நாள். இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல நாகரிக வரலாற்றில் நடைபெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது கருதப்படு கிறது. 1917இல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் பாசிசம் அடைந்த படுதோல்வியும் அதனைத் தொடர்ந்து உலகில் பல நாடுகள் காலனி யாதிக்கத்திலிருந்து விடுபட்டமை, சீனப் புரட்சி ஆகிய மூன்றும் மனிதகுல நாகரிக வரலாற்றில் என்றென்றும் அழிக்கமுடி யாத வகையில் முத்திரையைப் பதித் துள்ளன.
கடந்த அறுபதாண்டுகளில், சீனா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மகத்தான சாதனைகளை எய்தியிருக் கிறது. சம கால வரலாற்றில் வேறெந்த நாடும் இந்த அளவிற்கு சாதனைகளைப் படைத்திடவில்லை. சராசரியாக ஒவ் வோராண்டும் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சி விகிதமானது சோசலிஸ்ட் சீனா வை உலகின் வல்லமை வாய்ந்த பொரு ளாதார நாடாக மாற்றி இருக்கிறது. சீனா, 1978இல் தன்னுடைய சீர்திருத்த நட வடிக்கைகளைத் தொடங்கிய சமயத்தில், ‘சோசலிச சீனா தன்னுடைய வளர்ச் சிக்கு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாக’ப் பலர் கிண்டல டித்தார்கள். ஆனால், இன்று முதலாளித் துவ உலகம் கடும் பொருளாதார மந்தத் தால் நிலைகுலைந்து போயிருக்கக் கூடிய சூழ்நிலையில், முதலாளித்துவ உலகமே தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீள சீனா உதவ வேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய மகத்தான சாதனை எவ்வாறு சாத்தியமானது? குறிப்பாக, இருபதாண்டுகளுக்கு முன்பு மகத்தான சோசலிஸ்ட் சோவியத் யூனியன் தகர்ந்து விட்ட நிலையில் இது எப்படி முடிந்தது? ‘சோசலிசத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது, இனி முதலாளித் துவமே சாசுவதமானது’ என்றெல்லாம் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் அலறிக் கொண்டிருக்க, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் சட்டை செய் யாமல் சோசலிஸ்ட் சீனம் தன் பொரு ளாதார வெற்றிகளைத் தொடர்ந்து ஏற்ப டுத்தி வந்தது. ‘சோசலிச சித்தாந்தத் திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது’ என்று கூறி வந்த வலதுசாரி அறிவுஜீவிகள் இத னால் உண்மையில் அதிர்ச்சியடைந்து, இப்போது சீனாவின் வெற்றிகளுக்கும் மார்க்சியம் அல்லது சோசலிசத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வரு கிறார்கள். இடதுசாரி அறிவுஜீவிகளில் சிலர் கூட, சீனாவின் வெற்றி, முதலாளித் துவத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டதால் தான் என்கிற முறையில் கருதுகிறார்கள். “மாவோவின் சீனம் கைகழுவப்பட்டு விட்டதா?, ‘முதலாளித்துவப் பாதையில் செல்வோர்’ சீனத்தை மீண்டும் ஆளத் தொடங்கிவிட்டார்களா? சீனாவில் சோச லிசத்தின் எதிர்காலம் என்னவாகும்?” என்று சிலர் கேட்கிறார்கள்
சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாக் கொண்டாடப்படக்கூடிய இத்தரு ணத்தில் இக்கேள்விகளில் சிலவற்றை ஆராய்வது அவசியமாகும்.
எந்த ஒரு நாட்டிலும் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்ற உடனேயே அந்நாட் டின் பொருளாதாரப் பிற்போக்கு நிலை மையும், உற்பத்தி சக்திகளின் கீழ்மட்ட நிலைகளும் மாறிவிடும் என்பதோ, முதலாளித்துவத்தை விடவும் உயர்வான நிலைக்கு உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி உயர்ந்துவிடும் என்பதோ சாத்தி யம் அல்ல என்பதை மாமேதை லெனின், ரஷ்ய சூழல்களின் பின்னணியில் சுட்டிக் காட்டினார்.
மக்கள் சீனத்திலும், உற்பத்தி சக்திக ளின் கீழ்மட்ட நிலைக்கும், சோஷலிசத் தின் கீழான உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவ தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கலாச்சாரப் புரட்சிக் காலத்தில், மக்கள் சீனத்தில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டது. பின்னர், அங்கு ‘நால்வர் கும் பல்’ தூக்கி எறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளா தாரப் பிரச்சனைகள் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஓர் ஆழமான சுய பரிசோதனையை மேற்கொண்டது. அதன் விளைவாக ஒரு விரிவான தத்து வார்த்த நிலைபாடு உருவாக்கப்பட்டது.
ஒரு மையமான கடமை, இரண்டு அடிப்படை அம்சங்கள்,(டீநே ஊநவேசயட கூயளம. வாந யௌiஉ ஞடிiவேள) என்ற பெயரில், பொருளா தார வளர்ச்சியை ஒரு மையமான கட மையாகவும், மார்க்சிய-லெனினியம் மற் றும் திறந்த கதவுக்கொள்கை (டீயீநn னடிடிச ஞடிடiஉல) என்பவை இரண்டு அடிப்படை அம்சங்களாகவும் வரையறுக்கப்பட்டன.
மக்கள் சீனத்தில் மார்க்சிய-லெனி னியம் என்பது, மா சே துங் சிந்தனைகள், சோஷலிசப்பாதை, மக்கள் ஜனநாயகம் என்னும் வர்க்க சர்வாதிகாரம், கம்யூ னிசக் கட்சியின் தலைமை என்ற நான்கு முக்கிய கோட்பாடுகளை முதன்மை யாகக் கொண்டிருந்தது. திறந்த கதவுக் கொள்கை பொருளாதார சீர்திருத்தத் தைக் குறித்தது.
இந்த சீர்திருத்தங்கள் 1982இல் தொடங்கி மேற்கொள்ளப்பட்டன. இது குறித்த டெங் சியோ பிங் கூறியதாவது :
“ஒரு பிற்பட்ட நாடு சோசலிசத்தைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஆரம்பகாலத்தில் அந்நாட்டின் உற்பத்திச் சக்திகள், முன்னேறிய முத லாளித்துவ நாடுகளில் உள்ள உற்பத்திச் சக்திகளுக்கு இணையாக இருக்க முடி யாது என்பதும், முழுமையாக வறுமை யை ஒழிக்கக்கூடிய அளவிற்கு இருக் காது என்பதும் இயற்கையே. எனவே தான், சோசலிசத்தைக் கட்டும் முயற்சி களை மேற்கொள்ளும்போது நாங்கள், எங் கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக் கவும், வறுமையைப் படிப்படியாக ஒழித் துக்கட்டவும், அதனைத் தொடர்ந்து மக்க ளின் வாழ்க்கைத்தரத்தைப் படிப்படியாக உயர்த்திடவும், எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இவ்வாறு செய்யாவிடில், எங்ஙனம் முத லாளித்துவத்தை, சோசலிசம் வெற்றி கொள்ளும்?
எனவேதான், எங்களுடைய பணி யின் குவிமையம், பொருளாதார வளர்ச் சியை நோக்கித் திரும்பிட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. அம் முடிவு ஒரு திருப்புமுனையாகும். அதன் பின் நடைபெற்ற நடைமுறைகள், நாம் மேற்கொண்ட நிலைப்பாடு மிகச் சரி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தன. ஒட்டுமொத்த நாட்டின் முகத்தோற்றமே மாறிவிட்டது.’’ (டெங் சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 21-22).
இதுதான், சோசலிசத்தின் ஆரம்பக் கட்டம் தொடர்பான புரிந்துணர்வாகும்.
இதோடு சோஷலிச சந்தைப் பொரு ளாதாரத்தைக் கட்டுதல் என்ற நிலை பாட்டையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வடித்தெடுத்தது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடுவது, சந்தை சக்திகளையும் - கருவிகளையும் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை வலிமை வாய்ந்ததாக வளர்த் தெடுப்பது, அதன்மூலம் மக்கள் நலன் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதே இந்த நிலைபாடாகும்.
மக்கள் சீனம், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இத்தகைய மிகப்பெரிய நாட்டின் நவீன சோஷலிசப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதென்பது, பிரமிக்கத்தக்க பணியா கும். சீனத்தின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டுதல் என்று இந்த நடைமுறையை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சீன சோசலிச அரசின் கட்டுப்பாட் டின் கீழ் உருவாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்திச் சாதனங் கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். மூலதனத்தில் பெரும் பங்கு அரசுக்கே சொந்தம். அரசுப் பொருளாதாரமே பொரு ளாதாரத்தின் ஜீவநாடியைக் கட்டுப்படுத் திடும், தேசியப் பொருளாதாரத்தில் ஆதிக் கம் செலுத்திடும். இவற்றின் மூலமாக சீன அரசு, தனியார் சந்தைப் பொருளா தாரத்தால் ஏற்படுத்தப்படும் சமத்துவ மின்மையைக் குறைத்திடவும், தொழிலா ளர் வர்க்கத்திற்கு செல்வம் சென்ற டைவதையும் உத்தரவாதப்படுத்தியது.
இத்தகைய சீர்திருத்தங்களின் விளை வாக, 1978க்குப்பின் சீனம் மகத்தான வெற்றிகளைக் குவித்தது. சீன மக்களின் வாழ்க்கைத்தரம், பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. வறுமை மட்டம் மிகக் கூர்மையான முறையில் குறைந்தது. சுகா தாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் சீனம் மிகவும் பிரமிக் கத் தக்க விதத்தில் முன்னேறியுள்ளது. 1978இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 364.5 பில்லியன் யுவான்களா கும். ஆனால் 2007இல் அது 68 மடங்கு உயர்ந்து, 25.1 டிரில்லியன் யுவான்களாக வளர்ந்திருக்கிறது. 1978இல் நகர்ப்புற மக்களின் ஆண்டு சராசரி வருமானம் 343.4 யுவான். 2007இல் அது 13,786 யுவான்களாக 40 மடங்கு அதிகரித்திருக் கிறது. கிராமப்புற மக்களின் வருமானமும் 133.6 யுவான்களிலிருந்து 31 மடங்கு உயர்ந்து 4,140 யுவான்களாக அதிகரித் திருக்கிறது. நாட்டின் ஏழைகளின் எண் ணிக்கை 1978இல் 250 மில்லியன்களாக இருந்தது. 2007இல் 14.79 மில்லியன் களாகக் குறைந்துள்ளது.
2008ஆம் ஆண்டில், மொத்த உள் நாட்டு உற்பத்தி, சென்ற ஆண்டை விட 9 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஐந் தாண்டுகளாக தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்க ளின் தனிநபர் ஆண்டு வருமானம் 8 சத விகிதம் உயர்ந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், நகர்ப்புற மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் 8.4 சதவிகிதம் அதி கரித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு சீனா வில் மிகவும் வெற்றிகரமாக நடந்துமுடிந்த கண்கவர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் களில் தங்கப்பதக்கங்கள் பெற்றதில், அமெரிக்காவை முந்திக்கொண்டு வந்து, முதல் நாடாக உயர்ந்து நின்றது. உலகத் திலேயே மிக அதிக அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரும் சீனத்தில் தான் இருக்கிறார்கள். 300 மில்லியனுக் கும் அதிகமான அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரில் 270 மில் லியன் பேர் பிராட்பேண்ட் வசதியைப் பெற்றிருக்கிறார்கள். சீனா, அறிவியல் தொழில்நுட்பத்திலும் சாதனைகள் படைத்து வருகிறது. சீன விண்வெளி விஞ்ஞானிகள், தங்களுடைய சென்சௌ 7 விண்தளத்திலிருந்து ஏவப்பட்ட விண் கலத்தின் மூலமாக விண்ணில் நடந்து சாதனை படைத்திருக்கிறார்கள். சமீபத் தில் சீனாவின் வென்சுவான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோ ருக்கு நிவாரணப் பணிகளை விரைந்து அவர்கள் மேற்கொண்டதைப் பார்க்கை யில் சீனம் பல துறைகளிலும் முன் னேறியிருப்பதோடு மட்டுமல்லாமல், எந்த அளவிற்கு மக்களின் சமூகப் பொறுப்புகளிலும் அக்கறை கொண்டிருக் கிறது என்பதை உலகுக்கு மெய்ப்பித்தது. இவை அனைத்தும் எப்படிச் சாத்தியமா னது? இவை அனைத்திற்கும் காரணம் நிச்சயமாக சீனம் ‘மாவோயிஸ்ட் பாதை’ யிலிருந்து விலகிச் சென்றதால் அல்ல, மாறாக சீன மக்கள் குடியரசு கடந்த முப் பதாண்டு காலமாக மத்தியத்துவப்படுத் தப்பட்ட திட்டத்தின் மூலம் உருவாக்கி யுள்ள உறுதியான அடித்தளங்களை வளர்த்தெடுத்ததன் காரணமாகவே இவ்வளவும் சாத்தியமாகியது.
ஆயினும், மக்கள் சீனம் மகத்தான சாதனைகளைப் படைத்திட்ட போதி லும், வளர்ச்சியின் காரணமாக புதிய பிரச் சனைகளும் எழுந்துள்ளன. பிரதானமாக அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் லஞ்ச ஊழல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நன்கு உணர்ந்துள்ள சீனக் கம் யூனிஸ்ட் கட்சி இவற்றைச் சமாளித்திட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வேலை முறையினை நவீனப் படுத்தி வருவதால் நிறைய ஊழியர்கள் வேலையிழக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்க் கை ஊதியம் அளிப்பதுடன், மாற்று வேலைக்கான திறமைகளை வளர்க்க மறு கல்வியும் அளித்த போதிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அரசின் முன் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சனை யேயாகும்.
வளர்ந்துவரும் சமத்துவமின்மை கார ணமாக புதிய முதலாளித்துவ வர்க்கம் சீனத்தில் உருவாகி வருகிறதா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுகிறது.
டெங்சியோபிங், தெற்கு சீனத்திற்கு விஜயம் செய்தபோது பேசியதாவது: “இன்று நாம் பரிசீலிக்க வேண்டிய முக் கிய அம்சம் என்ன? நாம் செல்லும் பாதை முதலாளித்துவப் பாதையா, சோச லிசப் பாதையா என்பதேயாகும். நாம் மேற்கொள்ளும்பாதை சரியானதா என் பதை சோசலிஸ்ட் சமூகத்தின் உற் பத்திச் சக்திகளை வளர்த்து மேம்படுத் திட அது உதவுகிறதா, சோசலிஸ்ட் அர சினை ஒட்டுமொத்தமாக அது வலுப் படுத்துகிறதா மற்றும் மக்களின் வாழ்க் கைத்தரத்தை உயர்த்திட அது உதவு கிறதா என்பனவற்றைக் கொண்டே கணித்திட முடியும்.” (சீனாவில் சமூக அறிவியல்கள், தொகுதி 20, எண் 2, பக். 29)
மேலும், 1985இல் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்து எழுந்த ஐயங்கள் தொடர்பாக டெங்சியோ பிங் கூறியதாவது: ‘‘வளர்ந்து வரும் பொரு ளாதார சமத்துவமின்மை தொடர்பாக நாம் ஆழ்ந்து பரிசீலித்திருக்கிறோம். நம்மை மீறி இன்னொரு வேறுபட்ட கோட்பாடு கொண்ட வர்க்கம் உருவாகுமானால், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தோல்விய டைந்துவிட்டதென்றே பொருள். ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவா வது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒருசில முதலாளிகள் உருவாகிடலாம். ஆனால் அவர்கள் ஒரு வர்க்கமாக உருவாக மாட்டார்கள்.
“சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது, நம் பொதுத்துறை நிறுவனங்களின் உடைமையுரிமைதான் ஆதிக்கம் செலுத்தி, முதலாளிகள் ஒரு வர்க்கமாக உருவாவதற்கு எதிராகக் காத்து நிற்கும். கடந்த நான்காண்டுகளில், இந்த நிலைப் பாட்டின் அடிப்படையிலேயே நாம் பய ணித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, சோசலிசத்தை எப்போதும் நாம் உயர்த் திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.’’ (டெங்சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 142-143)
சீனாவின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டும் ஆழமான முயற்சியில் சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஈடுபட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவானதாகும். சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி, உற்பத்திச் சக்திகளை வேகமாக விரிவாக்கிடவும், இத்தகைய சீர்திருத்தங்கள் மூலமாக சீனாவில் சோசலிசத்தை வலுப்படுத்திடவும் ஒருமுகப்படுத்திடவும் பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறது.
அவ்வாறு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் அதே சமயத்தில், இத்தகைய முயற்சிகளின் விளைவாக சோசலி சத்தையே வலுவிழக்கச்செய்து அழித் திடக்கூடிய விதத்தில், சில போக்குகள் தோன்றியிருப்பதும் உண்மை. அதன் காரணமாக சோசலிசத்திற்கு எதிரான சிந்தனைகளும் மேலோங்கி வருவதைக் காண்கிறோம். சீனத்தில் உள்ள ஏகாதி பத்தியவாதிகளின் நிதி மூலதனம் சோசலிசத்தை வலுப்படுத்திட விரும் பாது, மாறாக தன் லாபத்தை அதிகப்படுத் திடவும், சோசலிசத்திற்கு எதிரான அம் சங்களை உருவாக்குவதற்கான வேலை களைச் செய்திடவுமே முயலும். சோசலி சத்தை பலவீனப்படுத்திட நிச்சயமாக அவை முயலும். தாங்கள் கொள்ளை லாபம் அடையக்கூடிய விதத்தில், சோச லிசத்தைத் தகர்த்திடவும் முயற்சிக்கும். மக்கள் சீனத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே நடைபெற்று வரும் இன்றைய போராட்டம் இதுதான். சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத் தில், சோசலிசத்தை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு, இந்தியாவில் உள்ள நாமும், உலகம் முழுவதும் உள்ள கம்யூ னிஸ்ட்டுகளும் என்றென்றும் ஆதரவாக நிற்போம்.
(ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்ச்சுருக்கம் : வீரமணி
கடந்த அறுபதாண்டுகளில், சீனா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மகத்தான சாதனைகளை எய்தியிருக் கிறது. சம கால வரலாற்றில் வேறெந்த நாடும் இந்த அளவிற்கு சாதனைகளைப் படைத்திடவில்லை. சராசரியாக ஒவ் வோராண்டும் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சி விகிதமானது சோசலிஸ்ட் சீனா வை உலகின் வல்லமை வாய்ந்த பொரு ளாதார நாடாக மாற்றி இருக்கிறது. சீனா, 1978இல் தன்னுடைய சீர்திருத்த நட வடிக்கைகளைத் தொடங்கிய சமயத்தில், ‘சோசலிச சீனா தன்னுடைய வளர்ச் சிக்கு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாக’ப் பலர் கிண்டல டித்தார்கள். ஆனால், இன்று முதலாளித் துவ உலகம் கடும் பொருளாதார மந்தத் தால் நிலைகுலைந்து போயிருக்கக் கூடிய சூழ்நிலையில், முதலாளித்துவ உலகமே தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீள சீனா உதவ வேண்டும் என்று எதிர் பார்க்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய மகத்தான சாதனை எவ்வாறு சாத்தியமானது? குறிப்பாக, இருபதாண்டுகளுக்கு முன்பு மகத்தான சோசலிஸ்ட் சோவியத் யூனியன் தகர்ந்து விட்ட நிலையில் இது எப்படி முடிந்தது? ‘சோசலிசத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது, இனி முதலாளித் துவமே சாசுவதமானது’ என்றெல்லாம் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் அலறிக் கொண்டிருக்க, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் சட்டை செய் யாமல் சோசலிஸ்ட் சீனம் தன் பொரு ளாதார வெற்றிகளைத் தொடர்ந்து ஏற்ப டுத்தி வந்தது. ‘சோசலிச சித்தாந்தத் திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது’ என்று கூறி வந்த வலதுசாரி அறிவுஜீவிகள் இத னால் உண்மையில் அதிர்ச்சியடைந்து, இப்போது சீனாவின் வெற்றிகளுக்கும் மார்க்சியம் அல்லது சோசலிசத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வரு கிறார்கள். இடதுசாரி அறிவுஜீவிகளில் சிலர் கூட, சீனாவின் வெற்றி, முதலாளித் துவத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டதால் தான் என்கிற முறையில் கருதுகிறார்கள். “மாவோவின் சீனம் கைகழுவப்பட்டு விட்டதா?, ‘முதலாளித்துவப் பாதையில் செல்வோர்’ சீனத்தை மீண்டும் ஆளத் தொடங்கிவிட்டார்களா? சீனாவில் சோச லிசத்தின் எதிர்காலம் என்னவாகும்?” என்று சிலர் கேட்கிறார்கள்
சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாக் கொண்டாடப்படக்கூடிய இத்தரு ணத்தில் இக்கேள்விகளில் சிலவற்றை ஆராய்வது அவசியமாகும்.
எந்த ஒரு நாட்டிலும் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்ற உடனேயே அந்நாட் டின் பொருளாதாரப் பிற்போக்கு நிலை மையும், உற்பத்தி சக்திகளின் கீழ்மட்ட நிலைகளும் மாறிவிடும் என்பதோ, முதலாளித்துவத்தை விடவும் உயர்வான நிலைக்கு உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி உயர்ந்துவிடும் என்பதோ சாத்தி யம் அல்ல என்பதை மாமேதை லெனின், ரஷ்ய சூழல்களின் பின்னணியில் சுட்டிக் காட்டினார்.
மக்கள் சீனத்திலும், உற்பத்தி சக்திக ளின் கீழ்மட்ட நிலைக்கும், சோஷலிசத் தின் கீழான உற்பத்தி உறவுகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவ தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கலாச்சாரப் புரட்சிக் காலத்தில், மக்கள் சீனத்தில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டது. பின்னர், அங்கு ‘நால்வர் கும் பல்’ தூக்கி எறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளா தாரப் பிரச்சனைகள் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஓர் ஆழமான சுய பரிசோதனையை மேற்கொண்டது. அதன் விளைவாக ஒரு விரிவான தத்து வார்த்த நிலைபாடு உருவாக்கப்பட்டது.
ஒரு மையமான கடமை, இரண்டு அடிப்படை அம்சங்கள்,(டீநே ஊநவேசயட கூயளம. வாந யௌiஉ ஞடிiவேள) என்ற பெயரில், பொருளா தார வளர்ச்சியை ஒரு மையமான கட மையாகவும், மார்க்சிய-லெனினியம் மற் றும் திறந்த கதவுக்கொள்கை (டீயீநn னடிடிச ஞடிடiஉல) என்பவை இரண்டு அடிப்படை அம்சங்களாகவும் வரையறுக்கப்பட்டன.
மக்கள் சீனத்தில் மார்க்சிய-லெனி னியம் என்பது, மா சே துங் சிந்தனைகள், சோஷலிசப்பாதை, மக்கள் ஜனநாயகம் என்னும் வர்க்க சர்வாதிகாரம், கம்யூ னிசக் கட்சியின் தலைமை என்ற நான்கு முக்கிய கோட்பாடுகளை முதன்மை யாகக் கொண்டிருந்தது. திறந்த கதவுக் கொள்கை பொருளாதார சீர்திருத்தத் தைக் குறித்தது.
இந்த சீர்திருத்தங்கள் 1982இல் தொடங்கி மேற்கொள்ளப்பட்டன. இது குறித்த டெங் சியோ பிங் கூறியதாவது :
“ஒரு பிற்பட்ட நாடு சோசலிசத்தைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஆரம்பகாலத்தில் அந்நாட்டின் உற்பத்திச் சக்திகள், முன்னேறிய முத லாளித்துவ நாடுகளில் உள்ள உற்பத்திச் சக்திகளுக்கு இணையாக இருக்க முடி யாது என்பதும், முழுமையாக வறுமை யை ஒழிக்கக்கூடிய அளவிற்கு இருக் காது என்பதும் இயற்கையே. எனவே தான், சோசலிசத்தைக் கட்டும் முயற்சி களை மேற்கொள்ளும்போது நாங்கள், எங் கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக் கவும், வறுமையைப் படிப்படியாக ஒழித் துக்கட்டவும், அதனைத் தொடர்ந்து மக்க ளின் வாழ்க்கைத்தரத்தைப் படிப்படியாக உயர்த்திடவும், எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இவ்வாறு செய்யாவிடில், எங்ஙனம் முத லாளித்துவத்தை, சோசலிசம் வெற்றி கொள்ளும்?
எனவேதான், எங்களுடைய பணி யின் குவிமையம், பொருளாதார வளர்ச் சியை நோக்கித் திரும்பிட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. அம் முடிவு ஒரு திருப்புமுனையாகும். அதன் பின் நடைபெற்ற நடைமுறைகள், நாம் மேற்கொண்ட நிலைப்பாடு மிகச் சரி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தன. ஒட்டுமொத்த நாட்டின் முகத்தோற்றமே மாறிவிட்டது.’’ (டெங் சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 21-22).
இதுதான், சோசலிசத்தின் ஆரம்பக் கட்டம் தொடர்பான புரிந்துணர்வாகும்.
இதோடு சோஷலிச சந்தைப் பொரு ளாதாரத்தைக் கட்டுதல் என்ற நிலை பாட்டையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வடித்தெடுத்தது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடுவது, சந்தை சக்திகளையும் - கருவிகளையும் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை வலிமை வாய்ந்ததாக வளர்த் தெடுப்பது, அதன்மூலம் மக்கள் நலன் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதே இந்த நிலைபாடாகும்.
மக்கள் சீனம், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இத்தகைய மிகப்பெரிய நாட்டின் நவீன சோஷலிசப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதென்பது, பிரமிக்கத்தக்க பணியா கும். சீனத்தின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டுதல் என்று இந்த நடைமுறையை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சீன சோசலிச அரசின் கட்டுப்பாட் டின் கீழ் உருவாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்திச் சாதனங் கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். மூலதனத்தில் பெரும் பங்கு அரசுக்கே சொந்தம். அரசுப் பொருளாதாரமே பொரு ளாதாரத்தின் ஜீவநாடியைக் கட்டுப்படுத் திடும், தேசியப் பொருளாதாரத்தில் ஆதிக் கம் செலுத்திடும். இவற்றின் மூலமாக சீன அரசு, தனியார் சந்தைப் பொருளா தாரத்தால் ஏற்படுத்தப்படும் சமத்துவ மின்மையைக் குறைத்திடவும், தொழிலா ளர் வர்க்கத்திற்கு செல்வம் சென்ற டைவதையும் உத்தரவாதப்படுத்தியது.
இத்தகைய சீர்திருத்தங்களின் விளை வாக, 1978க்குப்பின் சீனம் மகத்தான வெற்றிகளைக் குவித்தது. சீன மக்களின் வாழ்க்கைத்தரம், பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. வறுமை மட்டம் மிகக் கூர்மையான முறையில் குறைந்தது. சுகா தாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் சீனம் மிகவும் பிரமிக் கத் தக்க விதத்தில் முன்னேறியுள்ளது. 1978இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 364.5 பில்லியன் யுவான்களா கும். ஆனால் 2007இல் அது 68 மடங்கு உயர்ந்து, 25.1 டிரில்லியன் யுவான்களாக வளர்ந்திருக்கிறது. 1978இல் நகர்ப்புற மக்களின் ஆண்டு சராசரி வருமானம் 343.4 யுவான். 2007இல் அது 13,786 யுவான்களாக 40 மடங்கு அதிகரித்திருக் கிறது. கிராமப்புற மக்களின் வருமானமும் 133.6 யுவான்களிலிருந்து 31 மடங்கு உயர்ந்து 4,140 யுவான்களாக அதிகரித் திருக்கிறது. நாட்டின் ஏழைகளின் எண் ணிக்கை 1978இல் 250 மில்லியன்களாக இருந்தது. 2007இல் 14.79 மில்லியன் களாகக் குறைந்துள்ளது.
2008ஆம் ஆண்டில், மொத்த உள் நாட்டு உற்பத்தி, சென்ற ஆண்டை விட 9 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஐந் தாண்டுகளாக தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்க ளின் தனிநபர் ஆண்டு வருமானம் 8 சத விகிதம் உயர்ந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், நகர்ப்புற மக்களின் தனிநபர் ஆண்டு வருமானம் 8.4 சதவிகிதம் அதி கரித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு சீனா வில் மிகவும் வெற்றிகரமாக நடந்துமுடிந்த கண்கவர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் களில் தங்கப்பதக்கங்கள் பெற்றதில், அமெரிக்காவை முந்திக்கொண்டு வந்து, முதல் நாடாக உயர்ந்து நின்றது. உலகத் திலேயே மிக அதிக அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரும் சீனத்தில் தான் இருக்கிறார்கள். 300 மில்லியனுக் கும் அதிகமான அளவில் இணையத் தைப் பயன்படுத்துவோரில் 270 மில் லியன் பேர் பிராட்பேண்ட் வசதியைப் பெற்றிருக்கிறார்கள். சீனா, அறிவியல் தொழில்நுட்பத்திலும் சாதனைகள் படைத்து வருகிறது. சீன விண்வெளி விஞ்ஞானிகள், தங்களுடைய சென்சௌ 7 விண்தளத்திலிருந்து ஏவப்பட்ட விண் கலத்தின் மூலமாக விண்ணில் நடந்து சாதனை படைத்திருக்கிறார்கள். சமீபத் தில் சீனாவின் வென்சுவான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோ ருக்கு நிவாரணப் பணிகளை விரைந்து அவர்கள் மேற்கொண்டதைப் பார்க்கை யில் சீனம் பல துறைகளிலும் முன் னேறியிருப்பதோடு மட்டுமல்லாமல், எந்த அளவிற்கு மக்களின் சமூகப் பொறுப்புகளிலும் அக்கறை கொண்டிருக் கிறது என்பதை உலகுக்கு மெய்ப்பித்தது. இவை அனைத்தும் எப்படிச் சாத்தியமா னது? இவை அனைத்திற்கும் காரணம் நிச்சயமாக சீனம் ‘மாவோயிஸ்ட் பாதை’ யிலிருந்து விலகிச் சென்றதால் அல்ல, மாறாக சீன மக்கள் குடியரசு கடந்த முப் பதாண்டு காலமாக மத்தியத்துவப்படுத் தப்பட்ட திட்டத்தின் மூலம் உருவாக்கி யுள்ள உறுதியான அடித்தளங்களை வளர்த்தெடுத்ததன் காரணமாகவே இவ்வளவும் சாத்தியமாகியது.
ஆயினும், மக்கள் சீனம் மகத்தான சாதனைகளைப் படைத்திட்ட போதி லும், வளர்ச்சியின் காரணமாக புதிய பிரச் சனைகளும் எழுந்துள்ளன. பிரதானமாக அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் லஞ்ச ஊழல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நன்கு உணர்ந்துள்ள சீனக் கம் யூனிஸ்ட் கட்சி இவற்றைச் சமாளித்திட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வேலை முறையினை நவீனப் படுத்தி வருவதால் நிறைய ஊழியர்கள் வேலையிழக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்க் கை ஊதியம் அளிப்பதுடன், மாற்று வேலைக்கான திறமைகளை வளர்க்க மறு கல்வியும் அளித்த போதிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அரசின் முன் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சனை யேயாகும்.
வளர்ந்துவரும் சமத்துவமின்மை கார ணமாக புதிய முதலாளித்துவ வர்க்கம் சீனத்தில் உருவாகி வருகிறதா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுகிறது.
டெங்சியோபிங், தெற்கு சீனத்திற்கு விஜயம் செய்தபோது பேசியதாவது: “இன்று நாம் பரிசீலிக்க வேண்டிய முக் கிய அம்சம் என்ன? நாம் செல்லும் பாதை முதலாளித்துவப் பாதையா, சோச லிசப் பாதையா என்பதேயாகும். நாம் மேற்கொள்ளும்பாதை சரியானதா என் பதை சோசலிஸ்ட் சமூகத்தின் உற் பத்திச் சக்திகளை வளர்த்து மேம்படுத் திட அது உதவுகிறதா, சோசலிஸ்ட் அர சினை ஒட்டுமொத்தமாக அது வலுப் படுத்துகிறதா மற்றும் மக்களின் வாழ்க் கைத்தரத்தை உயர்த்திட அது உதவு கிறதா என்பனவற்றைக் கொண்டே கணித்திட முடியும்.” (சீனாவில் சமூக அறிவியல்கள், தொகுதி 20, எண் 2, பக். 29)
மேலும், 1985இல் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்து எழுந்த ஐயங்கள் தொடர்பாக டெங்சியோ பிங் கூறியதாவது: ‘‘வளர்ந்து வரும் பொரு ளாதார சமத்துவமின்மை தொடர்பாக நாம் ஆழ்ந்து பரிசீலித்திருக்கிறோம். நம்மை மீறி இன்னொரு வேறுபட்ட கோட்பாடு கொண்ட வர்க்கம் உருவாகுமானால், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தோல்விய டைந்துவிட்டதென்றே பொருள். ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவா வது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒருசில முதலாளிகள் உருவாகிடலாம். ஆனால் அவர்கள் ஒரு வர்க்கமாக உருவாக மாட்டார்கள்.
“சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது, நம் பொதுத்துறை நிறுவனங்களின் உடைமையுரிமைதான் ஆதிக்கம் செலுத்தி, முதலாளிகள் ஒரு வர்க்கமாக உருவாவதற்கு எதிராகக் காத்து நிற்கும். கடந்த நான்காண்டுகளில், இந்த நிலைப் பாட்டின் அடிப்படையிலேயே நாம் பய ணித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, சோசலிசத்தை எப்போதும் நாம் உயர்த் திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.’’ (டெங்சியோ பிங்கின் தேர்வு நூல்கள், தொகுதி 3, பக். 142-143)
சீனாவின் தனித்துவ அடையாளங் களுக்கேற்ப சோசலிசத்தைக் கட்டும் ஆழமான முயற்சியில் சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி ஈடுபட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவானதாகும். சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி, உற்பத்திச் சக்திகளை வேகமாக விரிவாக்கிடவும், இத்தகைய சீர்திருத்தங்கள் மூலமாக சீனாவில் சோசலிசத்தை வலுப்படுத்திடவும் ஒருமுகப்படுத்திடவும் பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறது.
அவ்வாறு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் அதே சமயத்தில், இத்தகைய முயற்சிகளின் விளைவாக சோசலி சத்தையே வலுவிழக்கச்செய்து அழித் திடக்கூடிய விதத்தில், சில போக்குகள் தோன்றியிருப்பதும் உண்மை. அதன் காரணமாக சோசலிசத்திற்கு எதிரான சிந்தனைகளும் மேலோங்கி வருவதைக் காண்கிறோம். சீனத்தில் உள்ள ஏகாதி பத்தியவாதிகளின் நிதி மூலதனம் சோசலிசத்தை வலுப்படுத்திட விரும் பாது, மாறாக தன் லாபத்தை அதிகப்படுத் திடவும், சோசலிசத்திற்கு எதிரான அம் சங்களை உருவாக்குவதற்கான வேலை களைச் செய்திடவுமே முயலும். சோசலி சத்தை பலவீனப்படுத்திட நிச்சயமாக அவை முயலும். தாங்கள் கொள்ளை லாபம் அடையக்கூடிய விதத்தில், சோச லிசத்தைத் தகர்த்திடவும் முயற்சிக்கும். மக்கள் சீனத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே நடைபெற்று வரும் இன்றைய போராட்டம் இதுதான். சீனப் புரட்சியின் அறுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத் தில், சோசலிசத்தை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்காக சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு, இந்தியாவில் உள்ள நாமும், உலகம் முழுவதும் உள்ள கம்யூ னிஸ்ட்டுகளும் என்றென்றும் ஆதரவாக நிற்போம்.
(ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்ச்சுருக்கம் : வீரமணி
Subscribe to:
Posts (Atom)