Monday, March 23, 2009

இளம் அரசியல் ஊழியர்களுக்கு - பகத்சிங்

(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவிதமான சமரசம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காற்று வாக்கில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த ஆவணத்தின் மூலம், பகத்சிங், எந்த சமயத்தில் சமரசத்தை அனுமதிக்கலாம், எப்போது அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினார். அவர் மேலும், காங்கிரஸ் இயக்கத்தை நடத்திய விதம், அப்படிப்பட்டதோர் சமரசத்தில் முடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதினார். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிடும்படியும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திடும்படியும் அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.


பெறுநர் - இளம் அரசியல் ஊழியர்கள்


அன்புத் தோழர்களே, நமது இயக்கம், தற்சமயம் மிக முக்கியமானதொரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு கால கடும் போராட்டத்திற்குப் பின்னர், வட்ட மேசை மாநாட்டின் மூலம் அரசியலமைப்புச் சட்டத் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில தெளிவான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் இந்த .....* கொடுப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.தற்போதைய சூழ்நிலையில் தங்கள் இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்கு ஆதரவாக முடிவெடுக்கிறார்களா அல்லது எதிராக முடிவெடுக்கிறார்களா என்பது நமக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒரு வழியில் சமரசத்தில் தான்முடியும். கட்டாயம் ஏதாவது ஒரு சமயத்தில் சமரசம் செய்து கொள்ளப்படலாம்.சமரசம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் பழிப்பிற்கும் பரிதாபத்திற்கும் உரியது அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால், அரசியல் போர்த்தந்திர நடவடிக்கைகளில் சமரசம் என்பது தவிர்க்க முடியாத காரணியாகும். எந்தத் தேசத்திலும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இயக்கங்கள் ஆரம்பத்தில் தோல்வியுறும், மத்திய காலங்களில் சமரசங்களின் மூலம் சிறிதளவு சீர்திருத்தங்களைப் பெறும். இறுதிக் கட்டத்திலேயே - நாட்டின் அனைத்து சக்திகளையும் வாய்ப்பு வளங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து - அரசாங்க எந்திரத்தைத் தகர்த்தெறிவதில் வெற்றி அடையக்கூடிய கடைசி அடியை அதனால் கொடுக்க முடியும். அப்போதும் கூட அது தோல்வியடையலாம். அதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகலாம். இதனை ரஷ்ய உதாரணத்தின் மூலம் சிறப்பாக விளக்க முடியும்.ரஷ்யாவில் 1905ம் ஆண்டில் புரட்சி இயக்கம் வெடித்தது. எல்லாத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாய் இருந்த லெனின் நாடு திரும்பினார். அவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மக்கள் அவரிடம் வந்து, பன்னிரண்டு நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்த அவர்களது மாளிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் லெனின் அப்போது அவர்களிடம், ‘திரும்பிச் செல்லுங்கள், 1200 நிலப்பிரபுக்களைக் கொல்லுங்கள், அவர்களது அரண்மனைகளையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொளுத்துங்கள்’ என்றார்.அவரது மதிப்பீட்டில், ஒரு வேளை புரட்சி தோல்வியடைந்தாலும் அது ஏதோனுமொரு விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாகும்.ரஷ்ய பாராளுமன்றமான டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நின்றார். 1907ல் இது நடந்தது. ஆனால் 1906ல் அவர் முதல் டூமாவில் பங்கெடுப்பதை எதிர்த்தார். காரணம், அப்போது அப்போது அதன் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தன. 1907இல் சூழ்நிலைகள் மாறியிருந்தன. அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. எனவே. லெனின் டூமாவைப் பயன்படுத்தி. சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக மாற்றத் திட்டமிட்டிருந்தார். மீண்டும் 1917 புரட்சியின்போது, பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு போல்ஷ்விக்குகள் நிர்பந்திக்கப்பட்டபோது, லெனினைத் தவிர மற்ற அனைவருமே அதனை எதிர்த்தனர். ஆனால் லெனின், “ ‘சமாதானம்’, ‘சமாதானம்’, மீண்டும் ‘சமாதானம்’ வேண்டும். என்ன விலைகொடுத்தேனும் சமாதானம் வேண்டும். ரஷ்யாவின் பல மாகாணங்களை ஜெர்மன் யுத்தப் பிரபுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தாலும், சமாதானம் வேண்டும்’’ என்றார். அப்போது சில போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் இந்த உடன்படிக்கைக்காக லெனினைத் தூற்றியபோது, லெனின், “ஜெர்மனியின் கடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் போல்ஷ்விக்குகள் இல்லை. எனவே, அவர்கள் போல்ஷ்விக் அரசாங்கம் முற்றாக அழித்தொழிக்கப் படுவதற்குப் பதிலாக, உடன்படிக்கையை தேர்ந்தெடுத்தனர்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், சமரசம் என்பது, போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் இடையிடையே பிரயோகிக்கப்படவேண்டிய இன்றியமையாத ஆயுதமேயாகும். ஆனால், எதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதன் லட்சியம் குறித்தும், அதில் நாம் எய்தியுள்ள சாதனைகளின் அளவு குறித்தும் சரியாகக் கணித்திட வேண்டும். இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே, நமது இயக்கத்தின் வெற்றி, தோல்வியை சரிபார்ப்பதற்கு நமக்கு உதவும். நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நம்மால் எளிதாக வகுக்க முடியும். திலகருடைய கொள்கை- அவரது குறிக்கோள் நீங்கலாக அவரது கொள்கை, அதாவது அவரது போர்த் தந்திரம் சிறப்பானது. உன்னுடைய எதிரியிடமிருந்து பதினாறு அணாக்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறாய். ஒரேயரு அணா மட்டுமே உனக்குக் கிடைக்கிறது. முதலில் அதை வாங்கிக் கொள், மீதமுள்ளவற்றிற்காகப் போராடு.



மிதவாதிகளின் போராட்டம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? அவர்கள் ஒரு அணா அடைவதை இலக்காகக் கொண்டு போராட்டத்தைத் துவங்குகின்றனர். அதையும் கூட அவர்களால் பெற முடிவதில்லை. புரட்சியாளர்கள் முழுமையான புரட்சி ஒன்றுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். முழுமையான ஆட்சியதிகாரம் தங்கள் கைகளுக்கு வரும் வரையில் அவர்களுக்கு ஓய்வில்லை. சமரசங்கள் அவர்களுக்குப் பேரச்சம் தருகின்றன. ஏனென்றால், பழமைவாதிகள், சமரசத்தைப் பயன்படுத்தி, புரட்சிகர சக்திகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆயினும், திறமையும் துணிவும் மிக்க புரட்சித் தலைவர்களால் அத்தகைய படுகுழிகளில் இருந்து இயக்கத்தை காப்பாற்ற முடியும். அத்தகைய சூழ்நிலைகளில் - குறிப்பாக நம் லட்சியம் குறித்து - எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் மிகுந்த விழிப்புடன் இருந்திட வேண்டும். பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து, கபடவேடமிடும் ஏகாதிபத்தியவாதிகளாக சுருங்கிவிட்டனர். என்னைப் பொறுத்தவரை, இத்தகைய ஏகாதிபத்திய ஆதரவு தொழிலாளர் தலைவர்களுக்கு, கடும் பிற்போக்காளர்கள் எவ்வளவோ மேலானவர்களேயாவர். இயக்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் அதன் உத்திகள் (stக்ஷீணீtமீரீஹ் ணீஸீபீ tணீநீtவீநீs) குறித்து அறிந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் லெனினின் வாழ்வையும் பணியையும் கற்க ஆழ்ந்த வேண்டும். சமரசம் குறித்து அவரது தீர்மானகரமான கருத்துக்களை, ‘’இடதுசாரி கம்யூனிசம்’’ என்னும் நூலில் காணலாம். இப்போது நடந்துகொண்டிருக்கும் இயக்கம் - அதாவது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் - தவிர்க்கமுடியாத வகையில் ஏதேனும் சில சமரசத்துடன்தான் முடிவடைய இருக்கிறது, இல்லையெனில் அது முழுமையாகத் தோல்வியுறும் என்றே நான் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு நான் ஏன் கூறுகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, இம்முறை உண்மையான புரட்சிகர சக்திகள் இயக்கத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மத்தியதர வணிகர்கள் மற்றும் ஒருசில முதலாளிகளைச் சார்ந்து இப்போராட்டம் தொடங்கியது. இந்த இரண்டு வர்க்கங்களுமே, அதிலும் குறிப்பாக முதலாளி வர்க்கம் எந்தவொரு போராட்டத்திலும் தனது சொத்துக்களுக்கோ உடைமைகளுக்கோ ஆபத்து நேர்வதற்கு ஒருபோதும் துணியாது. உண்மையான புரட்சிகர ராணுவம் கிராமங்களிலும் தொழிற் சாலைகளிலும் இருக்கிறது. விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள். ஆனால், நமது முதலாளித்துவ தலைவர்களுக்கோ, அவர்களைக் கையாளுவதற்கான சாமர்த்தியமோ துணிச்சலோ கிடையாது. உறங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை அதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பிவிட்டால், நமது தலைவர்கள் அடையக் கருதிய இலக்கை அடைந்த பின்னரும்கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.1920இல் அகமதாபாத் தொழிலாளர்களுடன் தனக்கு ஏற¢பட்ட முதல் அனுபவத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி, “நாம் தொழிலாளர்களை இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்று பிரகடனம் செய்தார். (தி டைம்ஸ், மே,1921). அதிலிருந்தே அவர்களுக்குத் தொழிலாளர்களை இயக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான துணிச்சல் கிடையாது. எஞ்சியிருப்பது விவசாயிகள். அந்நிய நாட்டின் மேலாதிக்கத்தை மட்டுமல்லாது, நிலப்பிரபுக்களின் நுகத்தடியையும் உதறித் தள்ளுவதற்காய் எழுந்த மாபெரும் விவசாய வர்க்க எழுச்சியைக் கண்டபோது இத்தலைவர்கள் அடைந்த பீதியை 1922ம் ஆண்டு பரதோலி தீர்மானம் தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறது. அங்குதான், நமது தலைவர்கள், விவசாயிகளிடம் சரணடைவதை விட பிரிட்டிஷாரிடம் சரணடைவதே மேல் என முடிவு செய்தனர். பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட்டு விடுங்கள். விவசாயிகளையோ அல்லது தொழிலாளர்களையோ அணிதிரட்டுவதற்கு ஏதேனும் முயற்சி செய்த தலைவர்கள் உங்களால் வேறு யாரையாவது காட்ட முடியுமா? முடியாது. அவர்கள், வருமிடர் துணிந்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கத் தயாராயில்லை. அங்குதான் அவர்களின் குறைபாடே உள்ளது. அதனால்தான் ‘அவர்கள் ஒருபோதும் முழுமையான புரட்சியை மனதிற் கொண்டிருக்கவில்லை’ என்று நான் கூறுகிறேன். பொருளாதார மற்றும் நிர்வாக நிர்ப்பந்தங்களின் மூலமாக, இந்திய முதலாளிகளுக்கு ஆதரவாக, ஒரு சில சீர்திருத்தங்களை, ஒருசில சலுகைகளைப் பெற முடியும் என்றே அவர்கள் நம்புகின்றனர். அதனால்தான் ஏதேனும் ஒருவகை சமரசத்திற்குப் பின்னரோ அல்லது அதுவடு இல்லாமலோ இந்தப் போராட்டத்தின் முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று நான் கூறுகிறேன்.இளம் தொழிலாளர்கள், “இன்குலாம் ஜிந்தாபாத்” (புரட்சி நீடூழி வாழ்க) என்று மிகவும் நேர்மையுடன் உரத்து முழக்கமிட்டபோதிலும், இயக்கத்தைத் தாங்களே முன்னெடுத்துச் செல்லுமளவிற்கு, ஸ்தாபனத்தப்பட்டவர்களாகவோ வலுவானவர்களாகவோ இல்லை. உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய மாபெரும் தலைவர்களுக்கும்கூட, (ஒருக்கால் பண்டிட் மோதிலால் நேரு விதிவிலக்காக இருக்கலாம்) தங்கள் தோள்மீத ஏதேனும் பொறுப்புக்களைச் சுமந்து கொள்வதற்கான துணிவு இல்லை. அதனாலேயே நம் தலைவர்கள் அடிக்கடி காந்திக்கு முன்னால் நிபந்தனையற்ற முறையில் சரணடைகின்றனர். தங்களுக்குள் எவ்வளவு கருத்துவேற்றுமைகள் இருந்தாலும், அவரது கருத்துக்களுக்கு எதிராக ஆழமாக அவர்கள் எதுவும் தெரிவிப்பதில்லை, மகாத்மா கொண்டுவரும் தீர்மானத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, முன்னெடுத்துச் செல்கிறார்கள். இத்தகு சூழ்நிலைகளில்தான், ஒரு புரட்சிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருக்கும், நேர்மையான இளம் அரசியல் ஊழியர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். மேலும் கடினமான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் சரியாக எதிர்நோக்கவில்லை என்றால், மிகவும் குழம்பிப்போய், மனதைத் தளர விட்டுவிடுவோம். மாபெரும் தலைவர் காந்தி அறிவித்த இரு போராட்டங்களின் பெற்ற அனுபவத்திலிருந்து, இன்றைய நம் நிலை குறித்தும், எதிர்காலத் திசைவழி குறித்தும் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.இப்போது, நிகழ்வுகளை எளிமையான முறையில் எடுத்துச் சொல்ல என்னை அனுமதியுங்கள். “இன்குலாப் ஜிந்தாபாத்’’ என்று நீங்கள் முழக்கமிடுகிறீர்கள். அதன் உண்மையான பொருளை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நான் ஊகித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற வெடிகுண்டு வழக்கில் எங்களது பதிலறிக்கையில் கூறியதைப்போல, “புரட்சி என்பது, தற்போது நடப்பிலுள்ள சமூக அமைப்பை முற்றாகத் தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதையே” குறிக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே நமது உடனடியான குறிக்கோள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக உள்ளது. உண்மையில், அரசு என்பதும், அரசு எந்திரம் என்பதும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் தங்கள் நலன்களைப் பாதுகாத்து மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ள ஆயுதமேயாகும். நாம் அதனை பறிப்பதற்கும், நமது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கும் - அதாவது மார்க்சிய அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்குப் பயன்படும் வகையில் அதனைக் கையாள்வதற்கும் - விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகவே, அரசாங்க எந்திரத்தைக் கைப்பற்றுவதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தத் திசைவழியில், நாம் நம் மக்களைப் பயிற்றுவித்து, நமது சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடியவிதத்தில் சாதகமானதொரு சூழலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களினூடே அவர்களை நாம் நன்கு பயிற்சியளித்து, பயிற்றுவிக்க முடியும். இவ்வாறு நம்முன் உள்ள பணிகள் நமக்குத் தெளிவாகிவிட்டன. அதாவது உடனடிக் கடமைகள் மற்றும் இறுதி இலக்கு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுவிட்டது. இன்றைய நிலைமைகளைப் பரிசீலனை செய்வதுடன் நாம் முன்னேறுவோம். நாம் எந்தவொரு நிலைமையைப் பகுப்பாய்வு செய்யும்போதும், மிகவும் தெளிவாகவும், காரியவாதிகள் போலவும் இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்கேற்பது குறித்தும் அதன் பொறுப்புக்களை இந்தியர்கள் பகிர்ந்து கொள்வது குறித்தும் குய்யோ முறையோ என்று கூக்குரல் எழுப்பப்பட்டதால், மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அவை கலந்தாலோசிக்கும் உரிமைகளுடன் வைஸ்ராய் கவுன்சிலை அமைத்ததும் நமக்குத் தெரியும். உலகப் போரின்போது, இந்தியர்களின் உதவி மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டபோது, தன்னாட்சி குறித்த உறுதிமொழியும், இப்போது வந்திருக்கும் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டமன்றங்களுக்கு வைஸ்ராயின் நல்லெண்ணத்திற்குட்பட்டு மிகவும் குறைந்த அளவில் அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. இப்போது மூன்றாவது கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.இப்போது சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனிவருங்காலங்களில் அவை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குறித்து நம் இளைஞர்கள் எப்படி மதிப்பிட முடியும்? இது ஒரு கேள்வி. காங்கிரஸ் தலைவர்கள் அவற்றை எந்த அளவுகோலைக்கொண்டு, எப்படி மதிப்பிடப்போகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனாலும், புரட்சியாளர்களாகிய நம்மைப் பொறுத்தவரை, நாம் கீழ்க்கண்ட அளவுகோள்களை முன்வைத்திருக்கிறோம்:1. இந்தியர்களின் தோள்களுக்கு மாற்றப்படவிருக்கும் பொறுப்பின் அளவு.2.அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அரசாங்க நிறுவனங்களின் வடிவம் மற்றும் அதில் மக்கள் பங்குபெறுவதற்கான உரிமையின் எல்லை.3. எதிர்கால வாய்ப்புகளும், காப்புக்கூறுகளும்.இவற்றிற்கு மேலும் சிறிது விளக்கம் தேவைப்படலாம். முதலில், நிர்வாகத்தில் நம்மவர்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் எல்லையைக் கொண்டு இதனை நாம் எளிதாக மதிப்பிட முடியும். இன்றைய நிலை வரைக்கும், நிர்வாகத்தரப்பினர் சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரும் எந்த ஒரு தீர்மானத்தையும் குப்பைத்தொட்டியில் எறியும் ரத்து அதிகாரம் (ஸ்மீtஷீ ஜீஷீஷ்மீக்ஷீ) வைஸ்ராய்க்கு உண்டு. இந்த அசாதாரணமான அதிகாரத்தை, தேசியப் பிரதிநிதிகளின் மதிப்புமிக்க தீர்மானங்களை வெட்கமின்றி, காலில் போட்டு மிதிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு வைஸ்ராயை உள்ளாக்கிய சுயராஜ்யக் கட்சியினரின் முயற்சிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். இது குறித்து அனைவருக்கும் நன்கு தெரியுமாதலால், இதற்குமேல் இது குறித்து விவாதம் தேவை இல்லை. இப்போது, நிர்வாக அமைப்பு முறை எப்படி வர இருக்கிறது என்று பார்ப்போம். நிர்வாக அலுவலர்கள், அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்களா? அல்லது இப்போது இருப்பதுபோல் மேலே இருந்து திணிக்கப்படுவார்களா? மேலும், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இருப்பார்களா அல்லது கடந்த காலங்களில் இருந்தது போல் அவற்றைத் துச்சமெனக் கருதி அவமதிப்பார்களா? இரண்டாவது இனத்தைப் பொறுத்தவரை, வாக்குரிமையின் தன்மை மூலம்தான் அதனை மதிப்பிடலாம். வாக்குரிமைக்குத் தகுதி பெற ஒருவருக்கு சொத்து இருக்க வேண்டும் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். வயது வந்த ஆண் - பெண் அனைவரும் வாக்களிப்பதற்கான உரிமை பெற வேண்டும். தற்சமயம், இந்தத் திசைவழியில் எவ்வளவு தூரம் செல்லப்போகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.வடிவம் சம்பந்தப்பட்டவரை, நாம் இரண்டு அவைகளைக் கொண்ட அரசாங்கத்தை வைத்துள்ளோம். எனது கருத்துப்படி மேலவை என்பது முதலாளிகள் - பழம்பஞ்சாங்கங்கள் நிறைந்த ஓர் ஆடம்பர அவையே. என்னைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரேயரு அவையைக் கொண்ட அரசாங்கம் மட்டுமே மிகச் சிறந்தது என்று நாம் எதிர்பார்க்கலாம் என்பதேயாகும்.ஆளுநரின் அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி பற்றி இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் நான் கேள்விப்பட்டதிலிருந்து, சட்டமன்றத்திற்கும் மேலான நிலையில், உயர்ந்த அசாதாரண அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் என்பவர், ஒரு கொடுங்கோலன் என்ற நிலைக்குச் சற்றும் குறைந்தவர் அல்ல என்று மட்டுமே என்னால் கூறமுடியும். நாம் இதனை ஆளுநரின் கீழான மாகாண சுயாட்சி என்று அழைப்பதை விட ‘மாகாண கொடுங்கோலாட்சி’ என்று அழைப்பதே சிறந்தது. அரசு நிறுவனங்களை ஜனநாயகமயப்படுத்துவதில் இது ஒரு விசித்திரமான வகையாகும்.மூன்றாவது இனம் முற்றிலும் தெளிவானது. பிரிட்டிஷாரின் கஜானா காலியாகும் வரைக்கும் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இன்னொரு பகுதி சீர்திருத்தங்கள் வழங்கப்படும் என்ற மாண்டேகுவின் வாக்குறுதியை குலைப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.வருங்காலம் குறித்து அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.சாதனைகளைக் கண்டுபூரித்துப் போவதற்காக நாம் இந்த விஷயங்களை ஆராயவில்லை. மாறாக, மக்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதற்காகவும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவதற்காகவும் நமது இன்றைய நிலையில் தெளிவான கொள்கையை வகுப்பதற்கே இந்த விஷயங்களை ஆராய்கிறேன் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். நமக்கு சமரசம் என்பது ஓரடி முன்னேற்றத்தையும் சிறிது ஓய்வையும் குறிக்குமேயழிய, அது ஒருபோதும் சரணாகதியைக் குறிக்காது. அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.*** *** ***இன்றைய நிலை குறித்து விவாதித்துவிட்டோம். இனி நமது எதிர்கால செயல் திட்டத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டிய செயல் வழியையும் விவாதிக்கத் துவங்குவோம்.நான் ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு புரட்சிகரக் கட்சிக்கும் ஒரு தீர்மானகரமான நடைமுறை செயல் திட்டம் மிகவும் இன்றியமையாததாகும். புரட்சி என்றால் செயல் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஸ்தாபனரீதியான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைகளின் மூலமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பதாகும். அது, திடீரென்ற - ஸ்தாபனப்படுத்தப்படாத அல்லது தன்னெழுச்சியான மாற்றம் அல்லது சீர்குலைவிற்கு எதிரானது. ஒரு கட்சித் திட்டத்தை வகுப்பதற்கு ஒருவர் கண்டிப்பாக ஆய்ந்து அறிய வேண்டியவைகள் கீழ்வருமாறு:.1. இலக்கு,2. எங்கிருந்து தொடங்குவது. அதாவது தற்போதைய நிலைமைகள். 3. செயல் திட்டங்கள், அதாவது வழிகளும் முறைகளும்.இந்த மூன்று காரணிகளைப் பற்றிய தெளிவானதொரு கோட்பாட்டை ஒருவர் கொண்டிருக்காவிடில் கட்சித்திட்டம் பற்றி எதையுமே அவரால் விவாதிக்க முடியாது.தற்போதை சூழ்நிலையை ஓரளவிற்கு நாம் விவாதித்து விட்டோம். இலக்கு பற்றியும் லேசாகத் தொட்டுள்ளோம். நாம் ஒரு சோசலிசப் புரட்சியை வேண்டுகிறோம். இதற்கு அரசியல் புரட்சி தவிர்க்கமுடியாத அடிப்படையாகும். இதுவே நமக்கு வேண்டியது. அரசியல் புரட்சி என்றால், அரசு அதிகாரத்தை பிரிட்டிஷாரின் கைகளிலிருந்து இந்தியர்களின் கைகளுக்கு மாற்றுவது என்று பொருள் அல்ல, மாறாக பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அதிகாரம் புரட்சிக் கட்சியின் கைகளுக்கு மாறுவதேயாகும். அதன்பிறகு. சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை முழுமையாக புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைகளில் முழுமூச்சுடன் இறங்குவதாக இருக்கும். இத்தகைய புரட்சியை நீங்கள் பொருள்கொள்ளவில்லை என்றால், பின்னர் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என்று முழங்குவதை நிறுத்திவிடுங்கள். புரட்சி என்கிற சொல் மிகவும் புனிதமானது. குறைந்தபட்சம் நமக்கு அது புனிதமானது. அதனை மேலெழுந்தவாரியாகவோ அல்லது துஷ்பிரயோகமோ செய்யாதீர்கள். ஆனால், நீங்கள் தேசியப் புரட்சிக்காகவே இருப்பதாகவும், உங்களுடைய போராட்டத்திற்கான இலக்கு அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் போன்ற இந்தியக் குடியரசுதான் என்றும் சொல்வீர்களானால், பின் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைவதற்காக நீங்கள் விரும்பும் புரட்சியை கொண்டுவர உதவிடும். நீங்கள் சார்ந்திருக்கும் சக்திகள் எவை என்று எனக்குக் கூறுங்கள். எந்தவொரு புரட்சியை சாதிக்க வேண்டுமானாலும் - அது தேசியப் புரட்சியோ சோசலிசப் புரட்சியோ எதுவானாலும்- நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுதியான சக்திகள் விவசாயிகளும் தொழிலாளர்களும் மட்டுமே. அந்த சக்திகளைத் திரட்டும் துணிவு காங்கிரஸ் தலைவர்களுக்குக் கிடையாது. இந்த இயக்கத்தில் அதை நீங்களே பார்த்தீர்கள். இந்த சக்திகள் உடனில்லாவிட்டால் அவர்கள் முழுமையான நிராதரவானவர்கள் என்பது மற்ற எவரையும் விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானத்தை - அது உண்மையில் ஒரு புரட்சியையே அர்த்தப்படுத்துகிறது - அவர்கள் நிறைவேற்றும் போது உண்மையில் அவர்கள் அதை மனதிற் கொண்டிருக்கவில்லை. இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அத்தீர்மானத்தை அவர்கள் கொண்டுவரவேண்டியிருந்தது. அதன் பின்னர் அவர்களது மனதிற்குள்ளிருந்த ஆசையாகிய டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஓர் அச்சுறுத்தலாக அத்தீர்மானத்தைப் பயன்படுத்த விரும்பினர். காங்கிரஸ் கட்சியின் கடைசி மூன்று அமர்வுகளில் (அதாவது சென்னை, கல்கத்தா, லாகூர் ஆகிய அமர்வுகளில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆய்வு செய்தீர்களானால், அதனை நீங்கள் மிக எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். கல்கத்தாவில், டொமினியன் அந்தஸ்து பன்னிரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் ‘பூரண ஸ்வராஜ்யம்’ என்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதேபோன்று 1929 டிசம்பர் 31 நள்ளிரவு வரை அத்தகையதொரு வரத்திற்காக முழுமையான பயபக்தியுடன் காத்துக்கொண்டும் இருந்தார்கள். அதன் பின் தங்களது “நேர்மையை முன்னிட்டு” சுயராஜ்யத் தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். இல்லாவிட்டால் அவர்கள் அதனை எண்ணியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அப்போதும் கூட (சமரத்திற்கான) கதவுகள் திறந்திருப்பதை மகாத்மாஜி ஒளிவுமறைவாக வைத்திருக்கவில்லை. அதுவே அவர்களது உண்மையான மனப்பாங்காகும். தங்களது இயக்கம் ஏதோவொரு சமரசத்தில் தான் போய் முடியும் என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெரியும். போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனைச் செய்து கொள்வதை நாங்கள் வெறுக்கவில்லை, மாறாக இத்தகைய அரைமனதுடனான செய்கையினையே நாங்கள் வெறுக்கிறோம். எப்படியிருந்தாலும், ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவை திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். “எதற்காக எங்களை உங்கள் போராட்டத்தில் இணைந்து தியாகம் செய்யச் சொல்கிறீர்கள்? அப்புரட்சியின் விளைவாக நாங்கள் அடையப்போகும் பலன்தான் என்ன? இந்திய அரசாங்கத்தின் சார்பாக லார்ட் ரீடிங்கிற்குப் பதிலாக அந்த இடத்தில் சர் புருஷோத்தமதாஸ் தாகூர்தாஸ் அவர்களை உட்கார வைப்பதால் என்ன வித்தியாசம் எங்களுக்கு ஏற்பட்டுவிடப் போகிறது? லார்ட் இர்வின் இடத்தில் சர் தேஜ் பகதூர் சப்ரூ அமர்வதால் எங்கள் விவசாயிகளுக்கு என்ன வந்துவிடப் போகிறது?” என்று அப்பழுக்கற்ற நேர்மையோடு அவர்கள் உங்களைக் கேட்பார்கள். இவ்வாறு அவர்களது தேசிய உணர்வுகளைத் தூண்டிவிடுவதால் எந்தப் பயனுமில்லை. உங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களைப் “பயன்படுத்த” முடியாது. உண்மையிலேயே நீங்கள் அவர்களுக்காகவும் போராட வேண்டும், நடைபெறவிருக்கும் புரட்சி என்பது அவர்களின் நலன்களைப் பாதுகாத்திடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். புரட்சி என்பது தொழிலாளர்களின் தொழிலாளர்களுக்கான புரட்சியாகும். உங்களது இலக்குகள் பற்றிய இந்த தெளிவான கொள்கையை நீங்கள் உருவாக்கிக் கொண்டதையடுத்து, உடனடியாக அத்தகையதொரு நடவடிக்கைக்காக உங்களது சக்திகளை முழுமனதோடு ஒன்று திரட்டத் தொடங்கலாம். இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது தயாரிப்புப் பணிகள், இரண்டாவது நேரடி நடவடிக்கை. தற்போதைய போராட்டம் முடிந்தபின்னர், உண்மையாகச் செயல்பட்ட புரட்சியாளர்கள் மத்தியில் வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சிவயப்படுதலை ஒதுக்கி வையுங்கள். யதார்த்த நிலைமைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மலர்ப்பாதை அல்ல, அது மிகவும் கடினமான பணியாகும். புரட்சியை ஏற்படுத்துவது என்பது எந்த ஒரு தனிநபரின் சக்திக்கும் அப்பாற்பட்டதாகும். அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. சமூகப் பொருளாதார மற்றும் பிரத்யேகச் சூழ்நிலைகளினால் அது கொண்டுவரப்படும். அத்தகைய சூழ்நிலைகள் தரும் வாய்ப்புகளை ஸ்தாபனம் வலுவாக உள்ள ஒரு கட்சியின் செயல்பாடுகள் பயன்படுத்திக்கொள்கிறது. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான பணியாகும். அதற்கு புரட்சிகர ஊழியர்களின் மத்தியிலிருந்து மாபெரும் தியாகம் தேவைப்படுகிறது. நான் வெளிப்படையாகவே கூறிவிடுகிறேன், நீங்கள் ஒரு வணிகராகவோ அல்லது இவ்வுலக சுகங்களை அனுபவிப்பவராகவோ அல்லது குடும்பஸ்தராகவோ இருந்தால், தயவுசெய்து நெருப்புடன் விளையாடாதீர்கள். ஒரு தலைவர் என்ற முறையில் உங்களால் கட்சிக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மாலை நேரத்தில் சிலமணி நேரம் மேடை அலங்காரப் பேச்சுகளுக்காக ஒதுக்கிடும் அத்தகைய தலைவர்களை முன்னமேயே நாங்கள் ஏராளமாகப் பெற்றுவிட்டோம். அவர்களால் எந்தப் பிரயோசனமும் இல்லை. தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் “புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே” நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு, உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். அதேபோன்று தாமாகச் சிறைக்குச் செல்லவேண்டும் என்கிற கொள்கையும் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். அத்தகைய கொள்கைதான் எண்ணற்ற ஊழியர்களை தலைமறைவு வாழ்க்கை நிலைக்கு நிர்ப்பந்திக்கிறது. அவர்கள் அதே ஆர்வத்துடன் வேலைதிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய ஊழியர் பட்டாளம்தான், தலைசிறந்த தலைவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும்.கட்சிக்குத் தேவைப்பகின்ற ஊழியர்களை வாலிபர் சங்கத்தின் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆகவே வாலிபர் சங்கத்தையே நமது கட்சித் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம். வாலிபர் சங்கமானது, கல்விக் குழுக்கள் (stuபீஹ் நீவீக்ஷீநீறீமீs)/ அரசியல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தல் (நீறீணீss றீமீநீtuக்ஷீமீs), துண்டறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் வெளியிட வேண்டும். இதுவே அரசியல் ஊழியர்களை உருவாக்குவதற்கான சிறந்த தேர்வு முறை மற்றும் பயிற்சிக்கான களமாகும்.
சிந்தனை முதிர்ச்சி கொண்ட வாலிபர்களை தங்கள் வாழ்க்கையை மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் வாலிபர்களை கட்சிக்குக் கொண்டுவரலாம். கட்சி ஊழியர்களும் எப்போதும் வாலிபர் சங்கத்திற்கு வழிகாட்டி, அவர்கள் பணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். கட்சி, வெகுஜனப் பிரச்சாரத்தின் மூலம் பணியைத் தொடங்க வேண்டும். இது மிகவும் அவசியம். 1914-15களில் செயல்பட்ட கதார் கட்சியின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள்திரள் பற்றிய அறியாமையும் அக்கறையின்மையும் சில சமயங்களில் அவர்களுக்கு எதிராக இருந்த எதிர்நிலையுமேயாகும். அதுவன்னியில், விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை அல்லது ................. * ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று .....’*மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும். இது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சிகளை, தொழிலாளர் சங்கங்களை அமைத்திட வேண்டும். இது, காங்கிரஸ் கட்சியையும் அதன் சகோதர அமைப்புகளையும் கைப்பற்றுவதற்கும் கூட துணிந்து முயற்சிக்க வேண்டும். தேசிய அரசியல் மட்டுமல்ல வர்க்க அரசியலையும் சேர்த்து அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு கட்சி, ஒரு பெரும் பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். சோசலிசக் கொள்கை பற்றிய அறிவை பொதுமக்களிடத்தில் எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துத் துறைகள் குறித்தும் கொண்டு வரப்பட வேண்டும். அவை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.தொழிலாளர் இயக்கத்தில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசியல் சுதந்திரம் தேவை இல்லை என்றும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் மட்டும் இருந்தால் போதும் என்றும் அபத்தமான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட்டுக் குளிர்காய்பவர்கள் அல்லது குழப்பவாதிகள் என்று கூறலாம். அத்தகைய சிந்தனைகள் கற்பனை செய்ய முடியாததும் பகுத்தறிவுக்குப் புறம்பானதுமாகும். மக்களின் பொருளாதார விடுதலையை நாமும் மனதிற் கொண்டுள்ளோம். அந்நோக்கத்தை அடைவதற்காகவே அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில், தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கை களுக்காகவும் மற்றும் சில சலுகைகளுக்காகவும் போராட வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இப்போராட்டங்கள் தான் அரசியல் அதிகாரத்தைப் பறிப்பதற்கான இறுதிப் போராட்டத்திற்கு அவர்களைப் பயிற்றுவிப்பதற்குரிய சிறந்த வழிமுறையாகும். இவை நீங்கலாக, ராணுவத் துறை ஒன்றையும் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். பல சமயங்களில் இதன் தேவை மிக அவசியமாக உணரப்படுகிறது. ஆனால் திடீரென்று அத்தகையதொரு அமைப்பை போதுமான வசதிகளுடன் உருவாக்கி செயல்படுத்திட முடியாது. இது மிகவும் எச்சரிக்கைத்தன்மையுடன் விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பொருள் குறித்து தவறாகப் புரிந்துகொள்வதற்குரி வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. வெளிப்பார்வைக்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன். இங்கே இப்போது நாம் விவாதித்ததுபோல, தீர்மானகரமானமுறையில் வரையறுக்கப்பட்ட ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு புரட்சியாளன். ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற என்னுடன் “ஆயுதம் ஏந்திய தோழர்கள்”, தூக்குமேடைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவில் ஏதோ ஒருவிதமான பிற்போக்குத்தன்மையுடன் (அது உண்மையல்ல) நடந்துகொண்டதாக என்னைக் குறை கூறலாம். வெளியில் இருந்தபோது என்னவிதமான கொள்கையை, உறுதியை, உணர்வைக் கொண்டிருந்தேனோ அதே கொள்கையைத்தான், உறுதியைத்தான், உணர்வைத்தான் இப்போதும் நான் கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அப்போதிருந்ததைவிட மேலும் சிறப்பாகக் கொண்டிருக்கிறேன். எனவே என் வார்த்தைகளை வாசிக்கும் வாசகர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எனது எழுத்துக்களுக்குப் பின்னணியில் வேறேதும் இருப்பதாக ஊகித்தறிய முயற்சி செய்ய வேண்டாம். எனது சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் ஒரு பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாத நடைமுறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் உறுதியுடன் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக மதிப்பிடலாம். எங்கள் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு இலட்சியத்தை நோக்கி செலுத்தப்பட்டன. அதாவது, ஒரு மாபெரும் இயக்கத்துடன் எங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அதன் படைப்பிரிவாக, செயல்பட்டோம். எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அவர் தனது கருத்தைத் திருத்திக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் உபயோகமற்றவை என்று நான் பொருள்கொள்ளவில்லை. ஆனால், நான் கூறவிரும்புவது, வெறுமனே குண்டுகளை எறிவதென்பது பயன்விளைவிக்காது என்பது மட்டுமல்ல, சிலசமயங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் மாறிவிடும். கட்சியின் படைப் பிரிவு, எந்த அவசர காலத் தேவையின்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் எப்போதும் தன் போர் ஆயுதங்களைத் தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் பணிகளுக்குப் பின்னணியாக இருக்க வேண்டும். அது எப்போதும் சுயேச்சையாக செயல்பட முடியாது, செயல்படக் கூடாது. மேலே சுட்டிக்காட்டிய திசைவழியில், கட்சி தன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி தன்னுடைய தொழிலாளர்களை அனைத்துத் துறைகளிலும் பயிற்றுவித்து, பிரகாசிக்கச் செய்திட வேண்டும். இந்தத் திசைவழியில் நீங்கள் செயல்படத் தொடங்கினால், ஆரவார உணர்ச்சிக்கு இடங்கொடுக்காது மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கவேண்டியிருக்கும். கட்சித் திட்டம் முழுமையாக நிறைவேற குறைந்தது இருபது ஆண்டுகளாவது தேவைப்படும். ஒராண்டுக்குள் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் புரட்சி என்ற உங்களின் இளமை கால கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை, மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தனித்துவத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். பின்னர், செயல்படத் தொடங்குங்கள். அங்குலம் அங்குலமாக முன்னேறுங்கள். இதற்குத் தைர்யம், விடாமுயற்சி, மிகவும் வலுவான மனவுறுதி வேண்டும். எவ்விதமான சிரமங்களும் துன்ப துயரங்களும் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்திடக்கூடாது. எந்தத் தோல்வியும் அல்லது துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்திடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர உணர்வைக் கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமாக மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.



இன்குலாப் ஜிந்தாபாத்புரட்சி நீடூழி வாழ்க!



பகத்சிங் 2 பிப்ரவரி 1931.

மதவெறி அரசியலை வீழ்த்துவோம்!



பாஜகவினருக்கு ஒரு சிறு துளியாவது அரசியல் நாகரிகம் இருக்குமானால், உடனடியாக வருண்காந்தியை, தேர்தல் கூட்டங் களில் மதவெறி நஞ்சைக் கக்கிய குற்றத்திற் காக, மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகு தியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ள உடனடியாக முன்வரவேண்டும். தேர்தல் ஆணையம் மிகவும் சுறுசுறுப் புடன் வருண்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திட உள்ளூர் காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள் ளது. இந்தியத் தண்டனைச் சட்டமும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிதுவச் சட்ட மும் ‘‘மதவெறித் துவேஷத்தை ஏற்படுத்து பவர்கள்’’ அல்லது ‘‘வேட்பாளரின் மதத்தின் அடிப்படயில் வாக்குகளைக் கோருவது’’ ஆகிய இரண்டையுமே இழிந்த, ஊழல் அரசி யல் நடைமுறைகள் என்று தெள்ளத்தெளி வாக வரையறுத் திருக்கின்றன. தேர்தல் நடைபெறும் சமயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டத் தைப் பொறுத்தவரை, அதன் 153ஏ பிரிவின்படி, ‘‘பல்வேறு குழுக்களுக்கி டையே மதத்தில் பெயராலோ, இனத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் பெயராலோ அல்லது இருப்பிடத்தின் பெயராலோ, அல் லது மொழியின் பெயராலோ, அல்லது வேறேதேனும் ஒருவிதத்திலோ பகைமை யை ஏற்படுத்தும் விதத்தில் பேசினாலோ, நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ, மூன்றாண் டுகள் வரை சிறைத் தண்டனையும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை யும், அல்லது இரண்டும் சேர்த்தே தண் டனை விதிக்கக்கூடிய’’ கைது செய்தற் குரியதோர் குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், 125ஆவது பிரிவின்படி, ‘‘தேர்தலையொட்டி வகுப்பினருக்கிடையே பகைமையை ஏற் படுத்துவோருக்கு’’ இதேபோன்றதோர் தண்டனையை விவரித்திருக்கிறது. இந்தப் பிரிவின்கீழ், மதத்தின் அடிப்படையில் பகை மையை அல்லது வெறுப்பை ஏற்படுத்து வோர் இதேபோன்று தண்டிக்கப் படுவார்கள் என்று குறிப்பிட்டே விவரித்திருக்கிறது. வருண்காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாஜக இப் போது, ‘‘சட்டம் அதன் கடமையைச் செய்யட் டும்’’ என்று கூறியிருக்கிறது. ஆனால் அது போதாது. சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே வழக்கில், அவரது வாக்குரிமை ஆறாண்டு காலத்திற்குப் பறிக்கப்பட்டது மற்றும் அந்தக் காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட போதி லும், இவ்வாறு ஆணை வருவதற்கு வெகு நீண்ட காலமானது. பால் தாக்கரே, 1987இல் வெலிபார்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலின்போது, இதே போன்று அவதூறு பொழிந்து, மதவெறி நஞ் சைப் பரப்பினார் என்பதற்காக குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவ்வாறான மதவெறித்தீயை உருவாக்கிய அவரது பேச்சுக்கு எதிராக, உயர் நீதிமன்றம் அளித்த மேற்படி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம், 1999இல் இறுதியாக உறுதிசெய்த போதுதான், அமலுக்கு வந்தது. சட்டவிதி முறைகளின்படி, அப்போது குடியரசுத் தலை வராக இருந்த மறைந்த கே.ஆர்.நாராயணன், உச்சநீதிமன்றத்தின் ஆணையை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, தண்டனையின் அளவு குறித்து தீர்மானிப்பதற்காக அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையமானது, அதன் மீது, பால்தாக்கரேயை ஆறாண்டு காலத் திற்கு வாக்குரிமையைப் பறித்து ஆணை பிறப்பித்தது.இப்போது, வருண்காந்தி வழக்கில், இவ் வாறு சட்டம் தம் கடமையைச் செய்திட நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கக் கூடாது. வருண்காந்தியால் காக்கப் பட்ட மதவெறி நஞ்சு தொடர்பான வீடியோக் கள் ‘‘போலியானவை’’ என்று கூறப்படுபவை எல்லாம் ‘‘யு ட்யூப்’’ (லடிர வரநெ) போன்ற இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல்வேறு ஒளிபரப் புகளின் மூலம் தூள் தூளாக்கப்பட்டு விட் டன. வருண்காந்தி, தான் பேசியதன் காரண மாக எங்கும் எவ்வித வன்முறைச் செயலும் நடைபெறவில்லை என்பதால், தான் குற்ற வாளி அல்ல என்று விசித்திரமானதோர் விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கக்கிய நஞ்சுப் பேச்சுக்களை மீண்டும் ஒருமுறை நம் இதழில் வெளியிட்டு அருவருப்புகொள்ள நாம் தயாரில்லை. எந்த ஒரு நாகரிகமுடைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்வாதி யாலும் அவரது பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய நடவடிக்கையைத் தொடரும் அதே சமயத் தில், பாஜகவானது வாக்காளர்கள் மத்தி யில், தங்களுடைய நிலைபாட்டைத் தெளிவு படுத்தக்கூடிய விதத்தில், வருண்காந்தியை, தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இதுபோன்றெல்லாம் பாஜக போன்ற ஒரு கட்சியிடம் எதிர்பார்ப்பது, அதீத மான ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் அமைப்பா னது, “அயோத்தியில் தாவாவுக்குரிய இடத் தில் ராமர் கோவிலைக் கட்ட யார் உறுதி மொழி அளிக்கிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்போம்” என்று கூறியுள்ள நிலை யில், பாஜக, 2009 பொதுத் தேர்தலுக்கு தன்னுடைய வெறித்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய் துள்ளது. சமீபத்தில், கர்நாடகாவில், இருப தாம் நூற்றாண்டின் இணையற்ற கலைஞ ரான சார்லி சாப்ளின் சிலையை வைத்திட அனுமதிக்காமல் இழுத்தடித்திருப்பதி லிருந்து, தேர்தல் ஆதாயங்களுக்காக பாஜக, மதவெறித் தீயை விசிறிவிட முன்வந்திருப்ப தைத் தெளிவாகக் காண முடிகிறது. இவ் வாறாக, ஒரு சமயத்தில் பாஜக-வின் கூட் டணிக்கட்சிகளாக இருந்தவை - குறிப்பாக கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் அதன் அணியில் இருந்த கட்சிகள் - அதனை அநாதையாகக் கைவிட்டுவிட்டு, விலகிக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகதூரம் போக வேண்டிய தில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடிப்படை முரண்பாடு என்பது - பாஜக எந்த அளவிற்குத் தன்னுடைய வெறித்தன மான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் செயல்படுத்திட முயற்சிக்கிறதோ அந்த அளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் அதனைக் கைவிட்டுவிட்டு விலகி ஓடு வதும் தவிர்க்கமுடியாதது.இத்தகைய சூழ்நிலைமைகளில், வாக்கா ளர்கள், வரவிருக்கும் தேர்தலில் இத்தகைய மதவெறி நஞ்சைக் கக்கும் கிரிமினல் அரசி யல்வாதிகளை மறுதலித்திடக் கூடிய வகை யில் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி

Wednesday, December 31, 2008

2009: மாற்றுக்கொள்கைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்





வாசகர்கள் அனைவருக்கும் 2009ஆம் ஆண்டு புதிய புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள் கிறோம்.

2008ஆம் ஆண்டு, உலகிற்கும் நம் நாட்டிற்கும் மிகவும் சிரமமான ஓர் ஆண்டாக இருந்திருக்கிறது. 1930களில் ஏற்பட்ட மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலைமைக்கு அடுத்து இந்த ஆண்டு மிகவும் மோசமான நெருக்க டியை உலக முதலாளித்துவம் சந்தித்தது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட் டிருக்கிறது. ‘மனிதர்களைச் சுரண்டு வதை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் என்னும் அமைப் பானது, எந்தக்காலத்திலும் நெருக்கடிக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்துவிட முடியாது’ என்கிற உண்மையை இந்த நெருக்கடியானது மீண்டும் ஒருமுறை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது முதலாளித்துவம் குறித்த மார்க்சிய ஆய்வுமூலம் மெய்ப்பித்துக்காட்டப்பட்ட ஒன்று மட்டுமல்ல, முதலாளித்துவ அமைப்பு முறையானது சோசலிச அமைப்பு முறையாக மாற்றி யமைக்கப்பட வேண்டிய மார்க்சிய வழிகாட்டுதலையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிக் கட்சிகள் எழுச்சி பெற்று வருவதும் மற்றும் பல நாடுகளில் ஏகாதிபத்தியத் தின் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட் டங்கள் நடைபெற்று வருவதும், இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. நாம் 2008ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து அனுப்பும் அதே சமயத்தில், சோசலிசத்திற்கு ஆதரவாக - உலக அளவிலும் சரி; நம் நாட்டிலும் சரி - வர்க்கச் சேர்மானங் களை வலுப்படுத்திட நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிப்பாட்டை இரட்டிப் பாக்கிடுவோம். பல முக்கியமான குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிப் போக்குகள் 2008ஆம் ஆண்டில் நம் நாட்டில் நடைபெற்றிருக் கின்றன. அவற்றுள், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பல்கிப் பெருகியிருப்பது ஆழ்ந்த கவலையளிக்கக்கூடியதாகும்.
அரசின் அதிகாரபூர்வ பட்டியல்களின் படியே மும்பை தாக்குதல் மற்றும் காபூ லில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள ஏழு தாக்கு தல்களில் மொத்தம் 377 பேர் பலியாகி யுள்ளனர். இத்தாக்குதல்களில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந் துள்ளனர். மேலும் 2008ஆம் ஆண்டானது, இதற்குமுன் இருந்திடாத அளவிலான இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண் டது. இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், சமீப காலத்தில் ஏற்பட்ட வெள்ளக் கொடுமைகளில் மிகவும் மோசமானது, நேபாளத்திலிருந்து வரும் கோசி ஆற்றில் ஏற்பட்ட திசைமாற்றமானது பீகார் மற்றும் வட இந்தியமாநிலங்களில் பல பகுதி களில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலி கொண்டு பேரழிவினை ஏற்படுத் தியுள்ளது. 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக மாறிப் போயுள்ளார்கள். வெள்ளப் பெருக்கானது அஸ்ஸாம், ஒரிசா போன்ற வேறு பல மாநிலங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டில் இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளதையும் பார்த்தோம். இந்திய - அமெரிக்க போர்த்தந்திரக் கூட்டணியை வலுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய பாது காப்பு மற்றும் போர்த்தந்திர நடவடிக்கை களின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டார்கள். இது நம் நாட்டின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை இரண்டின் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தவே இட்டுச் செல்லும். மேலும் நாட்டில் நம் பாரம்பரிய முறைகளின் மூலமாகவே நம் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றபோதிலும், அதனை விடுத்து, அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதானது, நம் நாட்டின் மிக அரிதான நம் வள ஆதா ரங்களை வற்றச் செய்திடவே வழி வகுக் கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம் படப்போவதைவிட, அணு உலைகளை அளித்திட இருக்கும் அமெரிக்கக் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்து கொழுப்பதற்கே உதவிடும். 2008ஆம் ஆண்டில் ஏழை - பணக் காரர் இடையேயான இடைவெளி மேலும் விரிவடைந்ததையும் பார்த்தோம். ‘ஒளிர் கின்ற’ இந்தியனுக்கும், ‘உழல்கின்ற’ இந்தியனுக்கும் இடைவெளி மேலும் ஆழமானதையும், அதன்மூலம் ஒரு பக் கத்தில் உலக அளவிலான பில்லிய னர்கள் இந்தியாவில் அதிகரிப்பதற்கும், அதே சமயத்தில் மறு பக்கத்தில் நம் மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் நான்கு பங்கினர் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட வருமானமின்றி வாடுவதற்கும் இட் டுச் சென்றது. விவசாயிகள் தற்கொலை செய்வது கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றபோதிலும், 2007ஆம் ஆண்டில் இது 16,632 ஆக இருந்திருக் கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள், ஒவ்வொரு நாளிலும் 46 பேர், அல்லது ஒவ் வொரு மணி நேரத்திலும் 4 பேர் என்கிற ரீதியில் தற்கொலை செய்து கொள்கி றார்கள் என்பது இதன் பொருள். ஐந்து வய துக்குக் குறைவான நம் குழந்தைகளில் 58 சதவீதத்தினர் போதிய ஊட்டச்சத்து உணவின்றி வாடுவதாக ‘யுனெஸ்கோ’ கூறுகிறது. ஊட்டச்சத்தின்மையாலும் அதன்மூலம் தாக்கக்கூடிய வியாதிக ளுக்குக்கூட மருந்து உட்கொள்ள முடி யாமலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக, இத்தகைய நிலைமை களைத் தொடர்ந்திட அனுமதிக்கக் கூடாது. ஆயினும், இதற்கு முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யகக் கூட்டணி அரசோ அல்லது தற் போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசோ பின்பற்றும் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான மாற்றுக் கொள்கை களைப் பின்பற்றுவது தேவை. இந்த நிலையில் மக்களின் எண்ணத் தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்ற மானது, ஆளும் வர்க்கத்தினரால் வேண் டுமென்றே முழுமையாகச் செயல்பட விடாமல் மிகவும் துயரார்ந்த முறையில் அதன் நாட்கள் வெட்டிச் சுருக்கப்பட் டன. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசானது நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை மெய்ப்பிக்க மிகவும் கேவலமான முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது. நாட்டில் அரசியல் அறநெறி இந்த அளவிற்குக் கீழ்த்தரமாக இதற்கு முன் சென்றதில்லை. சுதந்திரத்திற்குப் பின், 2008ஆம் ஆண்டில்தான் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு நூறு நாட்க ளாவது நாடாளுமன்றத்தின் அமர்வு நடந் திட வேண்டும் என்று கோரிய போதிலும், 2008இல் வெறும் 46 நாட்கள் மட்டுமே கூடியிருக்கிறது. அதேபோன்று 2008 மற்றோர் விதத்திலும் ‘பெயர்’ வாங்கி யிருக்கிறது. நாடாளுமன்ற வரலாற்றி லேயே மிக நீண்ட அமர்வு நடைபெற்றி ருப்பதும் 2008இல்தான். மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜூலை 21 அன்று கூட்டப்பட்ட அமர்வு, டிசம்பர் 23 வரைக் கும் தொடர்ந்தது. ஆயினும் இடையில் 18 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திபோடப்பட்டிருக்கிறது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரோ அல்லது குளிர்காலக் கூட்டத்தொடரோ இல்லாமல் இருந்ததும் 2008ஆம் ஆண்டுதான்.நம்முடைய அரசியலமைப்புச் சட்டத் தின்படி, நாடாளுமன்றம் என்பது சட்டங் களை இயற்றும் ஓர் அங்கமாக மட்டும் இருந்திடவில்லை, அது மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்து, மக்களின் சார்பில் கேள்வி கேட்கும் ஓர் அமைப்பாகவும் செயல்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை இவ்வாறு வேண்டுமென்றே வெட்டிச் சுருக்கியதன் மூலம், அரசு தன்னுடைய செயல்பாடின்மை குறித்து மக்களுக்குப் பதில் சொல்லாமல் சாதுரியமாகத் தப்பித்துக் கொண்டுவிட்டது.
உண்மையில் ஐமுகூ அரசாங்கம் இதற்காகத்தான் நாடாளுமன்றத்தின் நாட் களை வெட்டிச் சுருக்கியுள்ளது. ஆயினும், எந்த ஒரு அரசு இருந்தாலும் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டேயாக வேண்டும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் பல சட்டங்களை நிறைவேற் றியுள்ளது.
நாடாளுமன்றம் நடைபெற்ற கடைசி நாளன்று என்ன நடந்தது? நாடாளுமன்றத்தில் முழுமையாக அமளி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பதினோரு சட்டமுன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு, பத்தே நிமிடங்களில் அனைத்தும் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டன. இதுபோன்றதொரு நிலை, இதற்கு முன் கேட்டிராத ஒன்று.
இத்தகைய சூழ்நிலையில்தான் இன்சூரன்ஸ் துறையை அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்ப தற்கான முக்கிய திருத்தங்கள் முன்மொழி யப் பட்டிருக்கின்றன. உலகப் பொரு ளாதார நெருக்கடியிலிருந்து பாடங்கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, உலக ஊக வர்த்தகச் சூதாடிகளிடமிருந்து இந்திய நிதிச் சந்தையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஐமுகூ அரசானது இன்சூரன்ஸ் துறையில் தற்போதுள்ள 26 சதவீதத் திலிருந்து 49 சதவீதமாக அந்நிய முதலீட் டை அதிகரிப்பதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. இன்றைய தினம் ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். இந்தியப் பொருளாதாரத்தில் அதன் முதலீடு என்பதும் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாயா கும். அவற்றால் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யத்தக்க உபரியை அதிகரித்திட முடியும். 2007-08ஆம் ஆண்டில் அவற்றின் லாபம் சுமார் 2,800 கோடி ரூபாய். அவை சுமார் 450 கோடி ரூபாயை அரசுக்கு ஆதாயப் பங்காக (டிவிடண்ட்) அளித்திருக்கிறது. இந்தத் தொகை என்பது அரசாங்கத்தின் பங்குத் தொகைக்கு (equity) சமமாகும்.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சேமிப்புக் களஞ்சியமாகத் திகழும் இன் சூரன்ஸ் துறையானது, இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நாட் டின் பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதானமான மூலா தாரமாக இருந்து வருகிறது. இவற்றின் மீது அந்நிய மூலதனத்தை கொள்ளை யடித்துச் செல்வதற்காக அனுமதிப்பது என்பது, அடிப்படையில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மறுதலிப்பது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உலக அளவில் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், சர்வதேச நிதி மூலதனத்திற்கு நம்நாட்டின் வளங் களைக் கொள்ளையடித்துச் செல்வதற் காக, நம் நாட்டின் மக்களால் உருவாக் கப்பட்ட நம் நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுப்பது என்பதே இதற்குப் பொருளாகும். அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்துவதன் மூலம் நம் நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங் களை அதிகரித்திட முடியும் என்று அர சுத்தரப்பில் கூறப்படுவது யதார்த் தத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றா கும். இன்சூரன்ஸ் துறை 1999இல் அன் றைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது. அதன்பின் 21 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டைத் துவக்கின. அவர்கள் முதலீடு செய்துள்ள மூலதனப் பங்கிற்கு மேல், ஒரு ரூபாய் அளவிற்குக் கூட இந்தியாவிற்குள் அவை இதுவரை கொண்டுவரவில்லை. தற்போதைய உலக முதலாளித்துவ நெருக்கடியானது, நவீன தாராளமய சித்தாந்தம் திவாலாகிப்போன ஒன்று என்று மெய்ப்பித்தப்பின்னரும்கூட, ஐமுகூ அரசானது மேற்படி நவீன தாராளமயப் பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட, இத னை எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எனவேதான், வரவிருக்கும் 2009ஆம் ஆண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடுவதற்கான, வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து வதற்கான போராட்டங்களைத் தீவிரப் படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கும். இந்தப் போராட்டங்களின் குறிக்கோள் கள் இயற்கையாகவே ஆளும் வர்க்கங் களை மாற்றுக் கொள்கைகளைப் பின் பற்ற வளைந்து கொடுக்க நிர்ப்பந்திக்கும். ஆயினும், அத்தகைய வளைவானது, ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒரு மாற்று அரசியல் சேர்மா னத்தைக் கொண்டு வர முடியும். 2009இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், இந்திய அரசியலில் அத்தகையதோர் தீர்மானகரமான மாற்றத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையைக் கொண்டுவரக் கூடிய வகையில் 2009ஆம் ஆண்டை செம்மையாக அமைத்திடுவோம்.2009ஆம் ஆண்டின் வெற்றியை உத்தரவாதப்படுத்த நாம் அனைவரும் உறுதியேற்போம்.தமிழில்: ச. வீரமணி