Sunday, September 30, 2012

‘‘சீர்திருத்தங்கள்’’ மீதான விவாதம்



இந்தியா, 1991இல் நவீன தாராளமய ‘‘சீர்திருத்தங்களை’’த் தழுவிக் கொண்ட சமயத்தில், பொருள்கள் (goods), சேவைகள் மற்றும் மூலதனம் நம் நாட்டிற்குள் தாராளமாகப் பாய்வதற்கு வழிகாணப்பட்டிருப்பதானது, நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழைப் பாளி மக்களின் வாழ்வாதாரங்கள் மீது, சர்வதேச ஊகவர்த்தகர்களின் நடவடிக் கைகளுக்கு இணங்க, கடும் பாதிப்பு களை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். ஊக வர்த்தகர்கள் நம் பொருளாதாரத்தின் மீது ‘‘நம்பிக்கை’’ இழந்து, அவர்கள் நம் நாட்டில் போட் டுள்ள முதலீடுகளைத் திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார்களானால், பின் இவர்களின் ‘‘நம்பிக்கை’’யைப் புதுப்பித் திட தவிர்க்கவியலாத வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக் கும். இவ்வாறு மேற்கொள்ளும் நட வடிக்கைகள் நிச்சயமாக மக்களுக்கு ஊறு விளைவித்திடும். ஏனெனில் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு எதி ராக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத் தால் நிச்சயமாக அது பொருளாதாரத் தில் எதிர்மறை விளைவையே அளித் திடும். இவ்வாறு, மிகச் சிறிய அளவி லான சர்வதேச ஊகவர்த்தகர்கள் நம் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ் வைத் தீர்மானித்திட அனுமதிப்பது என் பதன் பொருள், நாம் ஜனநாயகத்தை, சமத்துவத்தை, இறையாண்மையையே மறுதலிக்கிறோம் என்பதாகும் என்று அவர்கள் வாதிட்டனர்.

அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவர் களும் விமர்சகர்களின் இவ்வாதத்தை எள்ளிநகையாடினர். பத்தாம்பசலிகள் என்று பரிகசித்தார்கள். பொருளாதா ரத்தை இவ்வாறு தாராளமாகத் திறந்து விடுவது நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும், ‘‘திறமைமிகுந்த தாக’’ மாற்றும், சர்வதேச அளவில் போட்டிபோட்டு முன்னேறச் செய்து, ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக நம் நாட்டை உருவாக்கிடும், சர்வதேச மூல தனத்திற்கு ஒரு சாதகமான இடமாக நம் நாடு மாறும் என்றெல்லாம் கதை அளந் தார்கள். பணம் சமநிலை நெருக்கடி Balance of Payments crisis) 1991இல் நாட் டைத் தாக்கியபோது, அதற்குக் காரணம் நாம் தாராளமய சீர்திருத்தங்களைக் கடைப்பிடிக்காததே என்றும், மாறாகப் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றி யதுதான் என்றும் கூறினார்கள். ‘‘சீர் திருத்தங்கள்’’ மூலம் இத்தகைய பிற் போக்குத்தனங்களிலிருந்து நாம் மீண்டு விட்டால், இத்தகைய பணம் சமநிலை நெருக்கடிகள் என்பது வராது என்றும், அவை கடந்தகாலங்களில் நடைபெற்ற விஷயங்களாக மாறிப்போகும் என்றும் தம்பட்டம் அடித்தார்கள்.

ஆனால், செப்டம்பர் 21 அன்று மன் மோகன் சிங் நாட்டிற்கு அளித்த தொலைக்காட்சி உரையில், விமர்சகர் கள் முன்வைத்த வாதங்கள் மிகச்சரி யானவை என்பதையும், நவீன தாராள மயத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் கூறிய அனைத்தும் தவறாகிப் போன தையும் தெள்ளத்தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அவ்வாறு அவர் ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், நாட்டின் ‘‘ஏற்றுமதி-வெற்றி’’ குறித்தும், இந்தியா ‘‘பொருளா தார வல்லமைமிக்க நாடாக’’ உருவாகியிருப்பதாக அளந்து கொண்டிருக்கும் அதே சம யத்தில், சர்வதேச ஊக வர்த்தகர்கள் திடீ ரென நம்பிக்கையிழந்துள்ள நிலையில், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் மக்களை மேலும் படுகுழி யில் தள்ளக்கூடிய விதத்தில், மிகமோச மான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சுருக்கமாகச் சொல்வதென்றால், பொரு ளாதாரத்தை அந்நிய நிதிமூலதனத்திற்கு சுதந்திரமாகத் திறந்துவிட்டதுதான், நிதி நெருக்கடிகளுக்கும் காரணமாகும். இத்தகைய தாராளமயப் பொருளாதாரத் தில் ‘‘ஊகவர்த்தகர்களின் நம்பிக்கை யைப்’’ பெற வேண்டியது மிகவும் முக் கியமாகையால், மக்களின் வாழ்நிலையை அதற்கேற்றவகையில் சரி செய்ய வேண் டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அறி வித்திருக்கிற பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், அதன் மூலம் மக்களின் சொத்தை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு மூலதனங்களிடம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகள் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி, ரூபாய் மதிப்பு குறைந்து வருவதையும் சரி செய்திடும் என்று வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். இதன் காரணமாக அயல்நாடுகளி லிருந்து மேலும் அதிக அளவில் நிதி கொட்டும் என்றும், அது ஒரு புதிய ‘‘நீர்க் குமிழி’’யை உருவாக்கி, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச் சியை புதுப்பித்திடும் என்றும் வைத்துக் கொள்வோம்.

சிறிது காலம் கழித்து, உலக அளவில் அல்லது நம் நாட்டின் வளர்ச்சிப்போக்கு கள் ஊகவர்த்தகர்களின் ‘‘நம்பிக் கையை’’ நிலைகுலையச் செய்தால், (அவ்வாறுதான் அவ்வப்போது நடைபெற் றுக் கொண்டிருக்கிறது) பின்னர் இவர் கள் கூறிடும் நீர்க்குமிழி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் மீண் டும் ஒருமுறை நிலைகுலைந்து வீழ்ச்சி யடைந்தால், இவர்களின் ‘‘நம்பிக் கை’’யை மீண்டும் புதுப்பிப்பதற்காக மக் களின் மேல், மேலும் கொடூரமான முறை யில் தாக்குதல்களை அறிவிப்பார்கள். இவ்வாறு ஆட்சியாளர்கள் ‘‘ஊகவர்த்த கர்களின்’’ நம்பிக்கையைப் பெறுவதற் காக மக்களை மேலும் மேலும் கசக்கிப் பிழியும் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இவ் வாறு நடவடிக்கைகள் எடுக்காது வேறு ‘‘மாற்று வழி’’ இல்லை என்றும், தனியார் மய,தாராளமய, உலகமயக் கொள்கைகள் தொடர வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக் கும் நல்லது என்றும் உரைப்பார்கள். ஆனால், இவை அனைத்தும் உண்மை யல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமைக ளையும் வாழ்வாதாரங்களையும் ஆட்சி யாளர்களின் உலகமய நிதிக் கொள்கை கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய கொள்கைகளைக் கடைப் பிடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என்று ஆட்சியாளர்கள் நம்புவார்களா னால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு எவ்விதத் தார்மீக உரிமை யும் கிடையாது.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, September 5, 2012

மதவெறி தீயை துவக்கத்திலேயே அணைத்திடுவோம்!



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு முக்கிய தீர்ப்புகளை நீதித்துறை சமீபத் தில் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றம், மிகவும் கொடூரமான 26/11 மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலைப் புரிந்திட்ட கயவர்களில் ஒருவரான முகமது அஜ்மல் அமீர் காசப்பின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, அவனுக்கு உயர்நீதிமன்றம் விதித் திருந்த மரணதண்டனையை உறுதி செய் திருக்கிறது. இக்கோரத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் கொடுங் காயங்கள் அடைந்தனர். தீர்ப்பை அளித்திட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, நாட் டிற்கு எதிராக யுத்தம் புரிந்துள்ள காசப் குற்றவாளிதான் என்று முடிவு செய் திருக்கிறது.

மற்றொரு தீர்ப்பினை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. 2002இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதி ரான இனப்படுகொலை சம்பவங்களில் நரோடா பாட்டியா என்னும் இடத்தில் நடை பெற்ற படுகொலை சம்பவத்தில் 97 முஸ்லிம் இனத்தினர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 32 பேருக்கு தண்டனை வழங்கி யுள்ளது. சதி மற்றும் கொலைக் குற்றங்களுக் காகத் தண்டிக்கப்பட்டுள்ள நபர்களில் நரேந் திர மோடி அரசாங்கத்தின் முன்னாள் அமைச் சர்களில் ஒருவரும், நரோடா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பின ரும் அடங்குவர். பாஜகவின் பிரபலத் தலைவர் களில் ஒருவரான இவர் டெகல்கா தொலைக் காட்சி மறைமுகமாக எடுத்த பேட்டியில் தன் னைத்தானே மகாரானா பிரதாப் என்பவருடன் ஒப்பிட்டுக்கொண்டு, இவ்வாறு முஸ்லிம் மக் களை படுகொலை செய்ததற்குப் பெருமை கொள்வதாகக் பீற்றிக் கொண்டவர் ஆவார்.

இந்த தீர்ப்பானது படுகொலைகள் நடை பெற்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் வந் திருந்தபோதிலும், இவ்விரு தீர்ப்புகளையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போது, சமீப காலத்தில் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக அரிக் கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, நீதித்துறை மீதான நம் பிக்கையை மீளவும் மக்களுக்கு அளித்திருக் கிறது.

நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாறு நம் பிக்கை அளிக்கும் நிலையில் இருக்கக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் நடைபெற்றுள்ள மற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள் மிகவும் கவலை அளிப்பவனவாக உள்ளன. அசாம் மாநிலத்தில் போடோலாண்ட் பகுதிகளில் அரசு அளித்துள்ள அதிகாரபூர்வமான தகவல் களின் அடிப்படையில் சுமார் நூறு பேர் கொல் லப்பட்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறி, தற்சமயம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள 224 நிவாரண முகாம் களில் அடைக்கப் பட்டுள்ளார்கள். சமூக ஆர் வலர்கள் இந்த எண்ணிக்கையை மிகவும் குறைவானவை என்று கருதுகிறார்கள். கடந்த சில வாரங்களில் இப்பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நடாளுமன்ற உறுப் பினர்கள் கலவரம் நடந்த பகுதிகளுக்குச் சென்று வந்ததையும் நம் ஏடுகளில் வெளி யிட்டிருக்கிறோம்.

2003இல் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் (க்ஷகூஹனு-க்ஷடினடிடயனே கூநசசவைடிசயைட ஹரவடிnடிஅடிரள னுளைவசiஉவள) உருவான பின்னர், பதற்ற நிலைமை அதிகரித்துவிட்டது. (2003இல் அசாமிலிருந்த எட்டு மாவட்டங் களில்) நான்கு மாவட்டங்கள் போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்களாக உருவாக்கப் பட்டன. இவற்றின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் போடோ இனத்தவ ராவார்கள். முன்னதாக 1993இல் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் போடோக்களுக்குத் தனி மாநில உரிமை அளிக்க மறுத்து வந்தது. அம்மாநிலத்தில் அவர்கள் சிறுபான்மையின ராக இருந்ததால் அவ்வாறு அரசாங்கம் மறுத்து வந்தது. அம்மாநில மக்களில் போடோக்கள் தவிர முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் கணிசமாக இருக்கின்றனர். போடோலாண்ட் எல்லை சுயாட்சி மாவட்டங்கள் அமைக்கப் பட்ட பிறகு, அம்மாவட்டங்களில் போடோக் கள் ஆதிக்க இனத்தினராக மாறிவிட்டதால், முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகவும், பழங் குடியினருக்கு எதிரானவர்களாகவும் மாறத் தொடங்கி விட்டார்கள்.

இதன்காரணமாக பதற்றநிலைமை அதி கரிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படியே 1996க்கும் 1998க் கும் இடைப்பட்ட காலத்தில் போடோ - பழங் குடியினர் இடையிலான மோதல்களில் மட்டும் 1,213 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல லட்சம் பேர் இன்றும்கூட நிவாரண முகாம் களில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இந்த வன்முறைச் சம்பவங்களும் அவற் றின் காரணமாக மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும் மிக வும் விரிவான முறையில் கண்டிக்கப்பட் டிருக்கின்றன. ஆயினும், இந்த நிலைமையை மதவெறி சக்திகள் நாடு முழுவதும் மதவெறித் தீயை விசிறி விடப் பயன்படுத்திக் கொண் டிருக்கின்றன.

நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிப்பதிலும், அமைதியை நிலைநாட்டக் கோரியதிலும், அபூர்வமான முறையில் கட்சி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களிடையே கருத் தொற்றுமை ஏற்பட்ட அதே சமயத்தில், பாஜக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து, ‘வங்க தேசத்திலிருந்து வந்துள்ள அகதிகள்’ என்ற பூச்சாண்டியை எழுப்பி, இதுதான் அங்கே பதற்றத்திற்கான பிரதான காரணம் என்று கூறி னார்கள். மற்றொரு பக்கத்தில், மும்பையில் ராசா அகாதமி (சுயணய ஹஉயனநஅல) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்று ஒரு பிரச்சனையை எழுப்பி, கிளர்ச்சியில் ஈடு பட்டு காவல்துறையினருடன் வன்முறை மோதல் வரை சென்றுள்ளார்கள். நாடு முழு வதும் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்ற வடகிழக்கு மாநிலத்தவர் மத்தியில் அச்ச உணர்வு காட்டுத் தீ போல பரவியது. கர் நாடகாவில் அம்மக்கள் அச்சுறுத்தப்பட்டதன் காரணமாக மாநிலத்தை விட்டே பயந்து அவர்களை ஓட வைத்தது. மிகவும் விசித்திர மான முறையில், இவ்வாறு பயந்து ஓடுபவர் களை சுமந்து செல்வதற்காக சிறப்பு ரயில் களே விடப்பட்டன. இதன் பின்னணியில் கர் நாடக மாநில பாஜக அரசாங்கம் கள்ளத்தன மாக உடந்தையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் உள் ளூர் மக்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரி வாரங்களும் அதன் மதவெறித் துணை அமைப்புகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாகக் குடியேறுவது தடுக்கப் பட வேண்டியது அவசியமே. இதற்காக இரு நாடுகளின் எல்லையில் வேலியிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகு காலமாகவே கோரி வருகிறது. ஆயினும் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டை ஆராய்ந்தோமானால், வன் முறைச் சம்பவங்கள் நடைபெறும் கோஹ்ரஜ் கர் பகுதியில் முஸ்லிம் மக்கள் தொகை 2001இல் 14.49 விழுக்காடாக இருந்தது, 2011இல் 5.19 விழுக்காடாகக் குறைந்திருக் கிறது என்பதைக் காண முடியும். எனவே ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கட்டவிழ்த்துவிடும் மதவெறிப் பிரச்சாரம் கட்டுக்கதையே தவிர வேறல்ல.

மற்றொரு கோணத்திலும் இப் பிரச்ச னையை ஆராயும்போது, அசாம் மாநிலத்தில் அசாம் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்வது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஹஐருனுகு-ஹடட ஐனேயை ருnவைநன னுநஅடிஉசயவiஉ கசடிவே) என்னும் கட்சி யாகும். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உள்ள முஸ்லிம்கள் கட்சி என்று வெளிப்படை யாக இது தன்னைக் கூறிக் கொள்கிறது. 2006 தேர்தலுக்குப்பின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சட்டமன்றத்தில் போடோ சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் இருக்கிறார்கள், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கு 10 பேர் இருக்கிறார்கள். எனவே காங் கிரஸ், போடோ இனத்தவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் மாநிலத் தில் வகுப்புத் துவேஷத்தை அதிகரிக்க இட் டுச் சென்றுள்ளது. மாநில அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்ற உணர்வை முஸ்லிம்கள் மத்தியில் உரு வாக்கியுள்ளது. மேலும், மாநில அரசாங்க மானது வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களுக்கு அகதிகள் அந் தஸ்து அளிக்கத் தயாராக உள்ள அதே சமயத் தில், அவ்வாறு வந்துள்ள முஸ்லிம்களுக்கு அளிக்கத் தயாராக இல்லை. காங்கிரசின் இத்தகைய வகுப்புவாத அணுகுமுறைதான் அதற்கு 128 இடங்கள் கொண்ட சட்டமன்றத் தில் 78 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிட வழிவகுத்துத்தந்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங் களிலிருந்து 18 இடங்களைப் பெற்று இரண் டாவது பெரிய கட்சியாக வந்திருக்கிறது.

அசாம் நிலைமை மிகவும் ஆழமான முறை யில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தால் தீர்வுகாணப்பட வேண்டிய அதே சமயத்தில், தற்போது நம்மை மிகவும் சங்கடத்திற்குள் ளாக்கி இருக்கும் விஷயம் என்னவெனில், அசாம் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு நாடு முழுதும் மதவெறித் தீ விசிறி விடப்படுவதுதான்.

நிலக்கரிச் சுரங்கங்கள் ஊழல் பிரச்சனை யில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, நாடாளுமன்றத்தை நடத்த விடாது பாஜக நாடாளுமன்றக்குழு சீர் குலைத்துவரும் உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

ஆயினும் பாஜகவின் உத்திகளை, நாட் டின் பல பகுதிகளிலும் நடைபெறும் மதக் கல வரங்களுடன் இணைத்துப் பார்க்கையில், நாட்டில் விரைவில் பொதுத் தேர்தலை நடத் திட அது திட்டமிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. மதவெறித் தீயை விசிறிவிட்டு அதன்மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்துவிட லாம் என்று அது பார்க்கிறது. இவ்வழியில் சில மாநிலங்களில் புதிய மாநிலக் கட்சிகள் கூட அதனுடன் சேர்ந்துகொள்ளக்கூடும்.

இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜன நாயக மாண்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விதத்தில் நாட்டில் மதவெறித் தீ விசிறி விடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே அணைக்க வேண்டியது அவசியமாகும்.

மதவெறித்தீயை விசிறிவிட்டு அதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று எண் ணக்கூடிய மதவெறியர்கள் வெற்றி பெற அனு மதித்திடக் கூடாது. இதனைத் தீர்மானகர மான முறையில் மக்கள் நிராகரித்திட வேண் டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக் கப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் வள மான சமூகப் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க முயலும் சக்திகள் தோற்கடிக்கப் பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, September 4, 2012

2013 பிப்ரவரி 20 -21 இரு நாட்கள் வேலை நிறுத்தம்-தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்





புதுதில்லி, செப். 4-
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2013 பிப்ரவரி 20 - 21 ஆகியஇரு நாட்கள் 48 மணிநேரம் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர் - ஊழியர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
அகில இந்தியஅளவில் இயங்கிடும் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள்மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற மாபெரும் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசின் ஐஎன்டியுசி, எதிர்க்கட்சியான பாஜகவின் பிஎம்எஸ உட்பட சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, ஏஐசிசிடியு முதலிய மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியரகளின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில  அரசு ஊழியர சங்கத்தின் பதாகையில் அனைத்து மாநில அரசு ஊழியரகள், பல்வேறு ஆசிரியர்களின் சங்கங்கள், இன்சூரன்ஸ ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.
தேசிய சிறப்பு மாநாட்டை சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களைக் கொண்ட தலைமைக்குழு நடத்தியது. மாநாட்டில் ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் சஞ்சீவரெட்டி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதா ஸ்தா ஸ்குப்தா,  சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.
மாநாட்டில் நிரந்தரத் தொழிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணி நியமனம் செய்வது ஒழிக்கப்பட வேண்டும், தற்போது ஒப்பந்த ஊழியர்களாக உள்ள அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அது விலைவாசிப் புள்ளி அட்டவணையோடு இணைக்கப்பட வேண்டும். போனஸ, வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றிற்குள்ள உச்சவரம்புகள் நீக்கப்பட வேண்டும், அனைவரும் ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும், சர்வதேச தொழிலாளர் ஸதாபனத்தின் 87 மற்றும் 98 ஆகிய கன்வென்ஷன்கள் சரி என்று ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சிறப்பு மாநாடு முன்வைத்தது. 
இவற்றினை எய்திட 2012 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் துறைவாரி அலுவலகங்கள், மாவட்ட, மாநில அளவில்  கூட்டு இயக்கங்கள் நடத்துவது என்றும், டிசம்பர் 18, 19 தேதிகளில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சத்தியாக்கிரகம், சிறை நிரப்பும் போர் முதலான போராட்டங்களை மேற்கொள்வது என்றும்,
டிசம்பர் 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவது என்றும், பின்னர் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக 2013 பிப்ரவரி 20, 11 தேதிகளில் 48 மணிநேரம் தொடர் வேலைநிறுத்தத் மேற்கொள்வது என்றும் சிறப்பு மாநாடு தீர்மானித்தது.
இச்சிறப்பு மாநாட்டிற்குத் தமிழகத்திலிருந்து சிஐடியு சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் சிங்காரவேலு, அ. சவுந்தரராசன், கருமலையான், சந்திரன், டிஆர்இயு இளங்கோவன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் உட்பட சிஐடியு, அரசு ஊழியர் சங்க மாநில / மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள்.
(ச.வீரமணி)