Showing posts with label SFI. Show all posts
Showing posts with label SFI. Show all posts

Saturday, March 4, 2017

இந்தியாவின் கல்விக் கொள்கையை ஆர்எஸ்எஸ் வகுத்திட அனுமதியோம்





இந்தியாவின் கல்விக் கொள்கையை
ஆர்எஸ்எஸ் வகுத்திட அனுமதியோம்
தில்லியில் மாணவர்கள் எழுச்சிப் பேரணி
புதுதில்லி, மார்ச் 4-
கல்வி, ஜனநாயகம், சமூக நீதி மீதான மத்திய அரசின் தாக்குதலுக்கு எதிராக இந்திய மாணவர்சங்கம் சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி வெள்ளிக் கிழமை புதுதில்லியில் நடைபெற்றது.மத்தியில் ஆட்சியில் உள்ளஆர்எஸ்எஸ்-பாஜக அரசாங்கம்தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கல்வி வளாகங்களில் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கியுள்ளது. மேலும் மாணவர் களிடம் பொருளாதாரத் தாக்குதல் களிலும் இறங்கியுள்ளது.
சீரழிக்கப்படும் கல்வி
கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகடுமையாக வெட்டிச் சுருக்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும்எழுத்தறிவுத்துறைக்கு 2014-15ல் மோடி அரசாங்கம் 45,722 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இது முந்தைய ஐமுகூ அரசாங்கம் செலவு செய்ததைவிட 1,134 கோடிரூபாய் குறைவாகும். பிறகு, 2015-16இல் திருத்திய மதிப் பீட்டின்படி 42,187 கோடி ரூபாய்செலவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் மேலும் 3,535 கோடி ரூபாய் வெட்டப்பட்டது. இந்த அரசு கடந்த மூன்று ஆண்டுகளிலும் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்பையும் வணிக மயம், மதவெறிமயம் மற்றும் மத்திய அரசின் கீழ் முழுமையாக எடுத்துக்கொள்ளும்போக்கு (Commercialisation, communalisation and centralisation) என்பதை நோக்கி உந்தித்தள்ளிக் கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
புறக்கணிக்கப்படும் தலித்-பழங்குடி மாணவர்கள்
இந்த ஆண்டு தலித்-பழங்குடி யினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் அவர்களின் மக்கள்தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப ஒதுக்கப் படவில்லை. “என்னுடைய கல்வி உதவித்தொகை ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாய் கடந்த ஏழு மாதங்களாக வரவில்லைஎன்று ரோஹித் வெமுலா தன் தற்கொலைக் குறிப்பில் எழுதி யிருந்தார். இந்த அரசாங்கம் மாணவர்களின் கல்வி உதவித்தொகை குறித்து எந்த அளவிற்குஇழிவான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் தலித்/பழங்குடி இன மாணவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித் திருக்கின்றன.இந்நிலையில், நாட்டின் கல்விக்கொள்கை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின்பங்கேற்புடன் வகுக்கப்பட வேண்டுமேயொழிய ஆர்எஸ்எஸ்தலைமையகத்தால் மேற்கொள்ளப் படக் கூடாது என்றும், மாணவர்க்கு எதிரான கல்விக் கொள்கையை எதிர்த்தும் இப்பேரணி நடை பெற்றது. பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, எம்.பி., அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பலர் உரை யாற்றினார்கள்.
(.நி.)

Thursday, April 4, 2013

அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம்-ஜனநாயக முறையில் முளையிலேயே கிள்ளி எறிவோம்-அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சூளுரை












புதுதில்லி, ஏப்ரல் 4-
மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார் என்று சடலக்கூராய்வு சான்றிதழ் முலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.   இக்கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். 1975இல் இருந்ததைப்போன்று அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம். இதனை முளையிலேயே ஜனநாயக முறையில் கிள்ளி எறிவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையினரின் அனுமதி பெற்று பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையை ஏவினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர்  சுதிப்தே குப்தா கொல்லப்பட்டார். இது விபத்துதான் என்றும் அடித்துக் கொல்லப்படவில்லை என்றும் மாநில அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இல்லை இது கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக்கூராய்வு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டது. 
சுதிப்தே குப்தா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுதும் அனைத்திந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள வங்கபவன் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லிப் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியில் வந்த மாணவர்களை வங்கபவனுக்குள் செல்ல காவலதுறையினர் அனுமதிக்கவில்லை.  வாயில் கதவை அடைத்து வைத்தனர். ஆயினும் மாணவர்கள் முழக்கமிட்டவாறே வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.
பின்னர் வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் 1975இல் மேற்கு வங்கத்தில் நடைபெற்றதைப்போன்ற அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர இப்போதைய திரிணாமல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதியோம்.  சுதிப்தா குப்தா கொலை செய்யப்படவில்லை, அது விபத்துதான் என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இல்லை, இ து கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக் கூராய்வு சான்றிதழ் (போஸ்ட்மார்ட்டம் சர்ட்டிபிகேட்) மூலம் தெளிவாகிவிட்டது. எனவே நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலைக்குக் காரணமானவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 1975இல் நடந்ததுபோல் அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். இதனை ஒருபோதும் அனுமதியோம். ஜனநாயக ரீதியாக இதனை முளையிலேயேக் கிள்ளி எறிவோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
பேரணி/ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேஎன் பாலகோபால், எம்பி ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர சர்மா, தில்லி மாநில செயலாளர் புஷ்பிந்தர் கிரேவால் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
---