Tuesday, January 17, 2012

குழந்தைகளின் பரிதாப நிலை

சில அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் பசி, பட்டினி, ஊட்டச்சத் துக் குறைவு தொடர்பாக நடத்திய ஆய்வு களின் மீதான அறிக்கை ஒன்றை பிரதமர் வெளியிடுகையில், ‘‘ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சனை ஒரு தேசிய அவமானம்’’ என்று புலம்பியிருக்கிறார். இது ஒரு தேசிய அவ மானம் என்பது உண்மையேயாகும். ஆயினும், இதற்கு முன் பிரதமர் அவர்கள், இந்தியா ‘‘வலு வான பொருளாதார நிலையை’’ எய்தி விட்டது என்று படாடோபமாக அறிவித்தது குறித்தோ, இருபதாண்டுகளுக்கு முன் தன் னால் தொடக்கி வைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக்கொண்டது குறித்தோ எதுவும் கூறாமல் தற்போது மவுனம் சாதிக் கிறார்.

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை, நம் நாட்டில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந் தைகளில் 42 விழுக்காடு, குறைந்த எடை யுடன் காணப்படுவதாகவும், 59 விழுக்காடு தங்கள் வயதுக்குரிய வளர்ச்சியுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய் வானது நாட்டில் 2011ஆம் ஆண்டில் கிராமப் புறங்கள் நிறைந்த, நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளில் சுமார் 20 விழுக்காட்டினரை உள்ளடக்கியுள்ள 112 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

பிரதமர் இவ்வாறு அதிர்ச்சிதரத்தக்க செய் திகளை வெளிப்படுத்திப் பேசியுள்ள போதி லும், இம்முடிவுகள் புதியவை அல்ல. இருப தாண்டுகளுக்கு முன் இன்றைய பிரதமரும் அன்றைய நிதி அமைச்சருமாகிய மன் மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட நவீன தாராளமயப் பொருளாதார ‘சீர்திருத் தங்கள்’ நாட்டு மக்கள் மத்தியில் சமச்சீரின் மையை, ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, இருவித இந்தியாவை உருவாக்கவே இட்டுச் சென்றுள்ளன என்று அரசாங்கத்தின் ஆய்வு கள் பல ஏற்கனவே கண்டறிந்துள்ளன. அவ் வாறு வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஆய்வுகள் சிலவற்றை இப்போது நாம் ஆராய் வோம்.

நாட்டின் வறுமைநிலை குறித்து பல்வேறு புள்ளிவிவரங்களுக்கிடையே பல்வேறுவித மான விவரங்கள் இருந்தபோதிலும், சமீபத் தில் திட்டக் கமிஷன் சார்பில் வெளியிடப் பட்டுள்ள மனிதகுல வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடியீஅநவே சுநயீடிசவ)யில், நம் மக்களில் சுமார் 31 கோடி பேர் அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ் கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. 1973-74க்குப் பின், வறுமைக்கோட்டுக்குக் கீழா னோர் எண்ணிக்கை வெறும் 1 கோடியே 90 லட்சம் மட்டுமே குறைந்திருக்கிறது. வறுமை குறித்து சரியான அளவில் விவரங்கள் சேக ரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக் கட்டும், அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கைகளின்படியே, ஒருவர் உட் கொள்ள வேண்டிய உணவின் அளவு (அதா வது குறைந்தபட்ச கலோரிகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல் என் பது) 1983க்கும் 2005க்கும் இடையே கிராமப் புறங்களில் 8 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பசி-பட்டினியில்லாத மாநிலம் என்று எது வுமே இல்லை என்று இது தொடர்பான அறிக் கைகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளா கும். இது ஆப்ரிக்க நாட்டின் நிலைமையை விட மோசமானதாகும். நாட்டின் குழந்தை களில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்படுவ தில்லை. இதன் விளைவாக இவை, முற்றிலு மாக தடுக்கப்படக்கூடிய வியாதிகளைக் கூட இவற்றால் தடுக்க முடியாமல், நோய்க்கு இரையாகி இறக்கும் அவல நிலை இன்னமும் இருந்து வருகிறது. நாட்டில் சுகாதாரத் திற்காக அரசு செலவிடும் மொத்த செல வினம் என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் விழுக்காட்டின் அடிப்படையில் பார்த் தோமானால், ஒட்டுமொத்த ஆப்ரிக்க நாடு களில் மேற்கொள்ளப்படும் செலவினத்தை விடக் குறைவானதாகும். நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தபின்னரும் நம் நாட்டின் துப்புரவு நிலைமைகள் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே இருக்கின்றன. நாட்டில் உள்ள குடும்பங் களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட் டவை, கழிப்பறை வசதிகளின்றியே இருக் கின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-2 நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 நடத்தப்பட்டிருக்கிறது. ஆய்வு-2இன் போது இருந்த நிலைமை களைவிட தற்போது ஆய்வு-3இன் போது உள்ள நிலைமைகள் மிகவும் வேதனை யளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக் கின்றன. 6 மாதங்களுக்கும் 35 மாதங்களுக் கும் இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தை களில் ரத்தசோகை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 74.2 விழுக்காட்டிலிருந்து 79.2 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடையே மண மாகியுள்ள பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 51.2 விழுக் காட்டிலிருந்து 56.2 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. இதே வயதில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 49.7 விழுக்காட்டிலிருந்து 57.9 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 மேற் கொண்ட ஆய்வின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 38.4 விழுக் காட்டுக் குழந்தைகள், தாங்கள் இருக்க வேண்டிய வளர்ச்சியைவிட குறைவாகவே இருக்கின்றனர் என்றும். 46 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப் படுகின்றனர் என்றும், 79.2 விழுக்காட்டுக் குழந்தைகள் ரத்த சோகையுடன் காணப் படுகின்றனர் என்றும் கூறியிருக்கிறது. இதுதான் நம் தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் இன்றைய நிலையாகும்.

நம் குழந்தைகளின் சுகாதாரம் என்பது நம் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்துடன் நேர டியாக சம்பந்தப்பட்டவை என்று அனைத்து ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ள உண்மை யாகும். ஆட்சியாளர்கள், நாட்டின் பொருளா தார வளர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே இருப்பதாக பீற்றிக்கொண்டிருந்தாலும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 2007ஆம் ஆண்டில் 2.8 விழுக்காடாக இருந்தது, 2009-10ஆம் ஆண்டில் 9.4 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது. வேலையில் உள்ளவர் களில் கூட, 16 விழுக்காட்டினர்தான் முறை யான ஊதியத்துடன் வேலையில் உள்ளவர் கள். மற்றவர்களில் 49 விழுக்காட்டினர் சுய வேலை பார்ப்பவர்கள் (அதாவது வீதிகளில் சுற்றி பொருள்களை விற்போர். சாலையோரங் களில் பொருள்களை விற்போர் போன்று சமூ கத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள்) மற்றும் 39 விழுக்காட்டினர் அத்துக்கூலி கேசுவல் தொழிலாளர்களாவார்கள்.

ஊட்டச்சத்துக் குறைவுடன் எடை குறைந்து காணப்படும் குழந்தைகள் 2004ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந் தது, 2011இல்42ஆகக் குறைந்துவிட்டது என்பது உண்மையானாலும், இவ்வாறு 42 விழுக்காட்டுக் குழந்தைகள் எடை குறை வுடன் இருப்பது குறித்து, பொறுப்புள்ள பிரஜைகளைக் கவலைக்குள்ளாக்கி இருக் கிறது என்றும், இதனை எவரும் ஏற்க முடி யாது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

இதில் வேடிக்கை விநோதம் என்ன வெனில், பிரதமர்தான் இந்தியாவின் ஊட்டச் சத்து சவால்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவராவார். நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவுடன் காணப்படும் குழந்தைகள் பிரச் சனையை சமாளிப்பதற்காக ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் என்னும் அமைப்பினை நாடு முழுதுக்கும் அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இது வும் கூட அரசாங்கம் தானாக முன்வந்து விரும்பி, செய்திடவில்லை. மாறாக, உச்ச நீதிமன்றத்தின் கட்டளையின்படி அரசால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருந்த போதிலும்கூட, பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மேற் பார்வையாளர்கள் (ஐஊனுளு ளரயீநசஎளைடிசள) பணி யிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நாடு முழுதும் இன்னமும் நிரப்பப்படாமல் இருக் கின்றன. இத்திட்டத்தை அமல்படுத்து வதற்கு மிகவும் முக்கியமானது அங்கன்வாடி மையங்களாகும். நாடு முழுதும் அமைக்கப்பட வேண்டிய 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 1 லட்சத்து 10 ஆயிரம் மையங் கள் இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகின்றன. செயல்படும் அங்கன் வாடி மையங்களிலும் மிகப் பெரும்பாலான வற்றின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் கட்டிட வசதி எதுவுமின்றி திறந்த வெளியில் இயங்கி வருகின்றன. பாதிக்கும் மேற்பட்ட மையங்களில் கழிவறை வசதி களோ, குடிநீர் வசதிகளோ கிடையாது. அர சாங்கத்தின் தாரக மந்திரமான பொது-தனி யார்-ஒத்துழைப்பு திட்டப்படி, இம்மையங்களுக்கான உணவு விநியோகம் தனியாரால் மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. இது எவ்வித ஒழுங்கு முறையுமின்றியும், தரப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து எவ்வித சரிபார்த் தலுமின்றி பெயரளவிலும் மிகவும் மோசமான முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி மையங்களின் பரிதாபகர மான நிலைமைகளுக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் கிளர்ச்சிகள் நடை பெற்றுள்ளபோதிலும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதங்கள் நடைபெற்றுள்ள போதிலும், அங்கன்வாடி ஊழியர்களின் நிலைமைகளும் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே உள்ளன. அவர்களின் பணி நிலைமைகள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையிலேயே இன்றளவும் இருந்து வருகின்றன. மாத ஊதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு 1500 ரூபாயும், அங்கன்வாடி உதவியாளர் களுக்கு 750 ரூபாயும் அளிக்கப்படுகிறது. நாட்டின் எதிர்காலமாக விளங்குகின்ற குழந்தைகளில், ஊட்டச்சத்துக் குறைவாக உள்ளவற்றைக் கண்டறிந்து, அவர்களைப் பேணி வளர்த்திடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலை இவ் வாறுள்ளது.

ஆயினும், அரசாங்கம் இத்துறையை உதா சீனப்படுத்துவது இன்னமும் தொடர்கிறது. நாடு முழுதும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சிப் பணிகள் திட்டத்தை விரிவாக் கிடத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அர சாங்கம் இன்னமும் செய்திடவில்லை. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே பொது சுகாதாரத்திற்காக ஆட்சியாளர்கள் செலவு செய்கிறார்கள். உண்மையில், பொது சுகா தாரத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள அற் பத்தொகையான 22 ஆயிரத்து 300 கோடி ரூபாயைவிட, நாட்டில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தொகையானது எட்டு மடங்கிற்கும் அதிக மாகும்.

நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகளின் நிலைமையை மாற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் உண் மையிலேயே அக்கறையுள்ளவராக இருந் தால், பின் அவர் அடிப்படை சுகாதார நலன் களை அனைவருக்குமானதாக மாற்றிட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 3 விழுக்காடு சுகாதார நலனுக்கான திட்டங்களுக்காக ஒதுக்கிட வேண்டும். நம் அரசாங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய வரி வருவாய்களில் இதைவிட அதிகமான அளவுத் தொகை தற் போது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் தள் ளுபடி செய்திருக்கிற தொகை, கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 28 ஆயி ரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் 3 லட் சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அள விற்கு கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர் களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக வளப்படுத்திடும், ஏழை களை மேலும் ஓட்டாண்டிகளாக மாற்றிடும், ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய ‘சீர்திருத்தங்களை’ குழிதோண்டிப் புதைத்திடாமல், நாட்டின் நலனிலும், நாட்டு மக்களின் நலவாழ்விலும் முன்னேற்றம் எதனையும் உருப்படியாகச் செய்திட முடியாது. நாட்டிலுள்ள ஏழை - பணக்காரர்கள் மத்தியில் இடைவெளியை அதிகப்படுத்திடும் ஆட்சியாளர்களின் கொள்கை கைவிடப்பட வேண்டியதாகும். பணக்காரர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டு வது கைவிடப்பட்டு, நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகின்ற கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கும், அதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பைப் பெருக்கு வதற்கும் வழிசெய்யக்கூடிய விதத்தில் அத் தொகைகளை பொது முதலீடுகளில் உப யோகப்படுத்திட வேண்டும். நாட்டு மக் களின் வாழ்க்கைத்தரத்தையும், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான விதத்தில் அவர்களது நல வாழ் வையும் மேம்படுத்துவதற்கான ஒரே வழி இதுவேயாகும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: